என் மலர்
செய்திகள்

பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசிய காட்சி.
தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறிவிட்டது: அன்புமணி ராமதாஸ்
தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பெருந்துறை:
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ம.க. சார்பில் வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாகன பேரணி கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து நேற்று தொடங்கியது.
ஊர்வலத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். ஊர்வலம் அங்கிருந்து அன்னூர், அவினாசி வழியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம் பெருந்துறையில் நடந்தது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது கடந்த 1962-ம் ஆண்டு காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். அப்போது இந்த திட்டத்துக்கு மேல் பவானி திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது உபரிநீரை சேமிக்கும் திட்டம் ஆகும்.
தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் 33 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டினாலே தமிழக தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.40 ஆயிரம் கோடி போதும். விவசாயிகள் வாழ்வு மலர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நம்பியூரிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொங்கு மண்டல மக்களின் முக்கியமான வாழ்வாதார திட்டம் ஆகும். கடந்த 50 வருடமாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 10 முறை வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 20 நீர் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழக அரசு டெங்குவால் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கிறது. கணக்கில் வந்தது இதுவென்றால் கணக்கில் வராதது எவ்வளவு என்று தெரியவில்லை. அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
இளைஞர்கள் நடிகைக்காக ஒட்டு போடாமல் நாட்டின் நலனுக்காக வெளியே வந்து அவரவர் கருத்தை தெரியபடுத்தி அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியும் கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் வடிவேல், மாவட்ட செயலாளர்கள் அருள்மொழி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ம.க. சார்பில் வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாகன பேரணி கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து நேற்று தொடங்கியது.
ஊர்வலத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். ஊர்வலம் அங்கிருந்து அன்னூர், அவினாசி வழியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம் பெருந்துறையில் நடந்தது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது கடந்த 1962-ம் ஆண்டு காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். அப்போது இந்த திட்டத்துக்கு மேல் பவானி திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது உபரிநீரை சேமிக்கும் திட்டம் ஆகும்.
தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் 33 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டினாலே தமிழக தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.40 ஆயிரம் கோடி போதும். விவசாயிகள் வாழ்வு மலர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நம்பியூரிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொங்கு மண்டல மக்களின் முக்கியமான வாழ்வாதார திட்டம் ஆகும். கடந்த 50 வருடமாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 10 முறை வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 20 நீர் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழக அரசு டெங்குவால் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கிறது. கணக்கில் வந்தது இதுவென்றால் கணக்கில் வராதது எவ்வளவு என்று தெரியவில்லை. அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
இளைஞர்கள் நடிகைக்காக ஒட்டு போடாமல் நாட்டின் நலனுக்காக வெளியே வந்து அவரவர் கருத்தை தெரியபடுத்தி அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியும் கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் வடிவேல், மாவட்ட செயலாளர்கள் அருள்மொழி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






