என் மலர்
பெண்கள் மருத்துவம்
உரிய வயதில் திருமணம் செய்யாமல் பெண்கள் காலங்கடந்து 27 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் போது குழந்தைபேறையும் சில ஆண்டுகள் தள்ளி போடும் போது கர்ப்பப்பை கருமுட்டை வளர்ச்சி குறைகிறது.
உரிய வயதில் திருமணம் செய்யாமல் பெண்கள் காலங்கடந்து 27 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் போது குழந்தைபேறையும் சில ஆண்டுகள் தள்ளி போடும் போது கர்ப்பப்பை கருமுட்டை வளர்ச்சி குறைகிறது. இதற்கேற்ப ஆண் துணையின் வயதும் அதிகரிக்கும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் பலமிழந்தும் காணப்படுகிறது. இதனால் குழந்தை பேறு சிக்கலாகிறது. அப்படியே கருத்தரித்தாலும் பிரசவக்காலத்தை பலவித சிக்கல்களில் விடுகிறது. 30 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தில் கவனமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
கருச்சிதைவு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பலவீனப்படுத்தகூடியவை. கருச்சிதைவு உண்டாகும் பெண்களில் 18% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் என்கிறது ஆய்வுகள். கருத்தரித்த பிறகு கருவை காப்பாற்ற நீங்கள் அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
கர்ப்பக்காலத்தில் ஹார்ம்மோன் மாறுபாடுகள் மாற்றம் உண்டாகும் என்றாலும் இந்த வயதில் கருத்தரிக்கும் போது அவை கருச்சிதைவை ஊக்குவிக்கவும் வாய்ப்புண்டு. கருத்தரித்தவும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் உடலில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். கருவின் வளர்ச்சி இருக்கும் வகையில் மருத்துவரின் கவனிப்பு தேவை. அதோடு கருவுற்ற பெண்களும் சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு எடுப்பதை கட்டாயமாக்கி கொள்வதன் மூலம் கருச்சிதைவு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
கர்ப்பக்கால நீரிழிவு நோய் தற்காலிகமானது. ஆனால் இவை பிரசவத்தில் சிக்கல் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடியது. 24 வாரங்களில் உண்டாகக்கூடிய நீரிழிவு முன்கூட்டியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.
33 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்ற வயது குறைந்த கர்ப்பிணிகளை காட்டிலும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் செய்யலாம். நீரிழிவு இருப்பவர்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்த பெண்கள் நீரிழிவு வந்தால் அதை எதிர்கொள்வதோடு உடல் சோர்வடையாமல் கருவுக்கு சத்து குறையாமல் ஆகாரம் எடுத்துகொள்வதையும் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க கூடியதுதான். ஆனால் இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள் இரண்டு மடங்கு உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக வாய்ப்புண்டு. 10 முதல் 20% வரை இந்த பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த ரத்த அழுத்த பிரச்சனையால் வயிற்றில் கருவின் மீது அழுத்தம் அதிகமாகி பிரசவக்காலத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.
சில நேரங்களில் குறைபிரசவம் ஏற்படவும் காரணமாகிறது. அதோடு சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை செய்வது அதிகமாகிறது. மனதை இலேசாக வைத்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டிருப்பதும் அவசியம்.
கருத்தரிப்பதில் பிரச்சனை என்று சொல்லும் வயதில் கருத்தரித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இரட்டை குழந்தைகள், சிலருக்கு மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கருக்கள் வளர வாய்ப்புண்டு. ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் இரட்டை குழந்தை என்பது உறுதியாகிவிட்டால் கர்ப்பக்காலம் முழுவதும் 3 மடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்.
தாய், சேய் இருவருக்குமே சத்து குறைபாடு இல்லாமல் கவனித்துகொள்ள வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். நிற்கும் போது, நடக்கும் போது, அமரும் போது, படுக்கும் போது என்று ஒவ்வொரு முறையும் கூடுதல் கவனத்தோடு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் குழந்தையின் ஆரோக்கியம் தாயின் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும்.
பெண்கள் உரிய வயதில் கருத்தரித்து பிரசவக்காலத்தை எதிர்நோக்கும் போது ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழும். 21 வயது முதல் 27 வயதுக்குள் பிரசவம் என்பது உடலும் ஒத்துழைக்ககூடியதே. இதிலிருந்து இரண்டு வருடங்கள் முன் பின் ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் 33 வயதுக்கு பிறகு கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை வெளியேற்ற போதுமான பலத்தை கருப்பை கொண்டிருக்காது.
கர்ப்பப்பை வாய் திறப்பதிலும், குழந்தையின் அசைவிலும் மாற்றங்கள் உண்டாகும். உடல் பலம் இழந்து கர்ப்பப்பை பலம் குறைந்த நிலையில் சுகப்பிரசவம் நிச்சயம் பாதுகாப்பானதாகவோ, இயல்பாகவொ இருக்காது என்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடக்கவே அதிக வாய்ப்புண்டு.
தாமதமான கருத்தரிப்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குழந்தையின் வளர்ச்சியையும் மனதில் கொள்வது அவசியம். பிறக்கும்1000 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு நோயை கொண்டிருக்கிறது. உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடை கொண்டிருக்ககூடிய இந்த நோய் உங்கள் குழந்தையை தாக்கும் வாய்ப்பு உண்டு. அதே போன்று முதுகெலும்பு குறைபாடு உருவாக்கவும் வாய்ப்புண்டு என்றாலும் இதை தவிர்க்க குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேன் செய்வதும், உரிய சிகிச்சை மேற்கொள்வதும் அதை குணப்படுத்தவும் சிகிச்சை மேற்கொள்வதும் சாத்தியமாகும். மிக குறைந்த சதவீதமாக குழந்தை அதிக பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவர் கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
இந்த குறைபாடுகள் எல்லாமே பிரசவக்காலத்தில் தாய் சேய் இருவரையும் பாதிப்புக்குள்ளாக்குபவை. தாமதமான கருத்தரிப்பு உண்டாக்கும் அவஸ்தைகளை யோசித்து உங்கள் குழந்தைபேறை தள்ளிபோடாதீர்கள்.குறிப்பாக 30 வயதை கடந்த பிறகு என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையும் கூட.
கருச்சிதைவு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பலவீனப்படுத்தகூடியவை. கருச்சிதைவு உண்டாகும் பெண்களில் 18% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் என்கிறது ஆய்வுகள். கருத்தரித்த பிறகு கருவை காப்பாற்ற நீங்கள் அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
கர்ப்பக்காலத்தில் ஹார்ம்மோன் மாறுபாடுகள் மாற்றம் உண்டாகும் என்றாலும் இந்த வயதில் கருத்தரிக்கும் போது அவை கருச்சிதைவை ஊக்குவிக்கவும் வாய்ப்புண்டு. கருத்தரித்தவும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் உடலில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். கருவின் வளர்ச்சி இருக்கும் வகையில் மருத்துவரின் கவனிப்பு தேவை. அதோடு கருவுற்ற பெண்களும் சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு எடுப்பதை கட்டாயமாக்கி கொள்வதன் மூலம் கருச்சிதைவு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
கர்ப்பக்கால நீரிழிவு நோய் தற்காலிகமானது. ஆனால் இவை பிரசவத்தில் சிக்கல் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடியது. 24 வாரங்களில் உண்டாகக்கூடிய நீரிழிவு முன்கூட்டியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.
33 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்ற வயது குறைந்த கர்ப்பிணிகளை காட்டிலும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் செய்யலாம். நீரிழிவு இருப்பவர்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்த பெண்கள் நீரிழிவு வந்தால் அதை எதிர்கொள்வதோடு உடல் சோர்வடையாமல் கருவுக்கு சத்து குறையாமல் ஆகாரம் எடுத்துகொள்வதையும் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க கூடியதுதான். ஆனால் இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள் இரண்டு மடங்கு உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக வாய்ப்புண்டு. 10 முதல் 20% வரை இந்த பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த ரத்த அழுத்த பிரச்சனையால் வயிற்றில் கருவின் மீது அழுத்தம் அதிகமாகி பிரசவக்காலத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.
சில நேரங்களில் குறைபிரசவம் ஏற்படவும் காரணமாகிறது. அதோடு சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை செய்வது அதிகமாகிறது. மனதை இலேசாக வைத்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டிருப்பதும் அவசியம்.
கருத்தரிப்பதில் பிரச்சனை என்று சொல்லும் வயதில் கருத்தரித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இரட்டை குழந்தைகள், சிலருக்கு மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கருக்கள் வளர வாய்ப்புண்டு. ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் இரட்டை குழந்தை என்பது உறுதியாகிவிட்டால் கர்ப்பக்காலம் முழுவதும் 3 மடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்.
தாய், சேய் இருவருக்குமே சத்து குறைபாடு இல்லாமல் கவனித்துகொள்ள வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். நிற்கும் போது, நடக்கும் போது, அமரும் போது, படுக்கும் போது என்று ஒவ்வொரு முறையும் கூடுதல் கவனத்தோடு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் குழந்தையின் ஆரோக்கியம் தாயின் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும்.
பெண்கள் உரிய வயதில் கருத்தரித்து பிரசவக்காலத்தை எதிர்நோக்கும் போது ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழும். 21 வயது முதல் 27 வயதுக்குள் பிரசவம் என்பது உடலும் ஒத்துழைக்ககூடியதே. இதிலிருந்து இரண்டு வருடங்கள் முன் பின் ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் 33 வயதுக்கு பிறகு கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை வெளியேற்ற போதுமான பலத்தை கருப்பை கொண்டிருக்காது.
கர்ப்பப்பை வாய் திறப்பதிலும், குழந்தையின் அசைவிலும் மாற்றங்கள் உண்டாகும். உடல் பலம் இழந்து கர்ப்பப்பை பலம் குறைந்த நிலையில் சுகப்பிரசவம் நிச்சயம் பாதுகாப்பானதாகவோ, இயல்பாகவொ இருக்காது என்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடக்கவே அதிக வாய்ப்புண்டு.
தாமதமான கருத்தரிப்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குழந்தையின் வளர்ச்சியையும் மனதில் கொள்வது அவசியம். பிறக்கும்1000 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு நோயை கொண்டிருக்கிறது. உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடை கொண்டிருக்ககூடிய இந்த நோய் உங்கள் குழந்தையை தாக்கும் வாய்ப்பு உண்டு. அதே போன்று முதுகெலும்பு குறைபாடு உருவாக்கவும் வாய்ப்புண்டு என்றாலும் இதை தவிர்க்க குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேன் செய்வதும், உரிய சிகிச்சை மேற்கொள்வதும் அதை குணப்படுத்தவும் சிகிச்சை மேற்கொள்வதும் சாத்தியமாகும். மிக குறைந்த சதவீதமாக குழந்தை அதிக பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவர் கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
இந்த குறைபாடுகள் எல்லாமே பிரசவக்காலத்தில் தாய் சேய் இருவரையும் பாதிப்புக்குள்ளாக்குபவை. தாமதமான கருத்தரிப்பு உண்டாக்கும் அவஸ்தைகளை யோசித்து உங்கள் குழந்தைபேறை தள்ளிபோடாதீர்கள்.குறிப்பாக 30 வயதை கடந்த பிறகு என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையும் கூட.
சில பெண்களுக்கு பேறுகாலம் முழுவதும் கூட அஜீரணக்கோளாறு ஆட்டிபடைக்கிறது. இதை பக்குவமாக கையாண்டால் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபட முடியும்.
கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். ஆனால் உணவு உடலுக்குள் சென்று செரிமானம் ஆவதற்கு முன்பே ஒவ்வாமையால் வாந்தியாக வெளியேறிவிடுகிறது. சில பெண்களுக்கு பேறுகாலம் முழுவதும் கூட அஜீரணக்கோளாறு ஆட்டிபடைக்கிறது. இதை பக்குவமாக கையாண்டால் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபட முடியும். அன்றாட வாழ்க்கை முறை, உணவு முறை, உடலை பழக்கும் முறை என்று ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினாலே எளிதாக அதை தவிர்க்க முடியும். அப்படி செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் எப்போதும் திரவ ஆகாரத்தை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். திரவ ஆகாரம் என்பதால் தண்ணீர் மட்டும் தான் அருந்த வேண்டும் என்பதில்லை. நீர் மோர், எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இளநீர் என்று மாறி மாறி எடுத்துகொள்வதன் மூலம் அஜீரணத்தை தவிர்க்க முடியும்.
அதே நேரம் திரவ ஆகாரம் என்று அதிக அளவு காஃபி, டீ, கார்பனேட் பானங்கள், செயற்கை பானங்கள் போன்றவை எல்லாம் உடலுக்கு கேடு தருபவை என்பதோடு அஜீரணக்கோளாறுகளை அதிகமாக்கவே செய்திடும் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள், கர்ப்பக்காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமே என்று அதிக உணவை ஒரே நேரத்தில் திணிப்பது உண்டு. ஆனால் அப்படி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் தாமதம் உண்டாகவே செய்யும். அதற்கு பதிலாக உணவை பிரித்து பல முறை சாப்பிட வேண்டும். மூன்று வேளைக்கு மாற்றாக ஆறு அல்லது ஏழுமுறை உரிய இடைவெளியில் உணவு, பழத்துண்டுகள், காய்கறி சாலட், சுண்டல்வகைகள், சிற்றுண்டி என்று பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் உண்டாகாமால் தவிர்க்க முடியும்.
கர்ப்பகாலத்தில் பிடித்த உணவுகள் பிடிக்காமல் போகலாம். பிடிக்காத உணவுகளை தேடி சாப்பிட தூண்டும். ஆனால் சத்தான உணவுகள் கூட சமயங்களில் ஒவ்வாமையை உண்டு செய்யும்.
அப்படியான உணவு பொருள்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலருக்கு எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள், சில கீரை வகைகள், சில உணவுகள் கூட ஒவ்வாமையை உண்டாக்காலாம். செரிமானக்கோளாறை ஏற்படுத்தலாம். அதனால் செரிமானக்கோளாறு அதிகமாகும் போது நீங்கள் எடுத்துகொண்ட உணவு பொருள்களை யோசியுங்கள். மீண்டும் இது தொடர்ந்தால் அந்த பொருளை பேறுகாலம் முழுவதும் தவிர்ப்பது தான் சிறந்தது.
பழங்கள் செரிமானத்தை எளிதாக்குபவை. அதிகரிக்ககூடியவை. அதனால் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் தினம் ஒன்று எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் போன்று மாதுளை, நெல்லிக்காய் என்று மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். இவை செரிமானத்தை எளிதாக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் வரமால் தடுக்கலாம்.கர்ப்பக்காலம் முழுமையும் தினம் ஒரு பழம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணக்கோளாறையும் தடுக்க முடியும்.
அஜீரணத்தோடு நெஞ்செரிச்சல் என்பதும் வரக்கூடியது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்படியான நெஞ்செரிச்சல் அவஸ்தை உண்டாகும். அதனால் மதிய வேளையில் படுக்கும் போதும் இரவு நேரங்களில் படுக்கும் போதும் ஒருமணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உணவு செரிமானமாகும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலமும் உணவு செரிமானம் எளிதாகும்.
பொதுவாக சாப்பிட்டபிறகு மிதமான நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகும் செரிமானம் ஆகும் வரை கீழே குனிவதையும், கால்களை நீட்டி உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே உணவு சிறுகுடலுக்கு சீராக செல்லும். இரவு நேரங்களில் தலைக்கு சற்று உயரமான தலையணை வைத்து படுப்பதன் மூலம் நெஞ்செரிச்சல், அஜீரனக்கோளாறு தவிர்க்கலாம்.
கர்ப்பிணிகள் எப்போதும் திரவ ஆகாரத்தை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். திரவ ஆகாரம் என்பதால் தண்ணீர் மட்டும் தான் அருந்த வேண்டும் என்பதில்லை. நீர் மோர், எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இளநீர் என்று மாறி மாறி எடுத்துகொள்வதன் மூலம் அஜீரணத்தை தவிர்க்க முடியும்.
அதே நேரம் திரவ ஆகாரம் என்று அதிக அளவு காஃபி, டீ, கார்பனேட் பானங்கள், செயற்கை பானங்கள் போன்றவை எல்லாம் உடலுக்கு கேடு தருபவை என்பதோடு அஜீரணக்கோளாறுகளை அதிகமாக்கவே செய்திடும் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள், கர்ப்பக்காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமே என்று அதிக உணவை ஒரே நேரத்தில் திணிப்பது உண்டு. ஆனால் அப்படி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் தாமதம் உண்டாகவே செய்யும். அதற்கு பதிலாக உணவை பிரித்து பல முறை சாப்பிட வேண்டும். மூன்று வேளைக்கு மாற்றாக ஆறு அல்லது ஏழுமுறை உரிய இடைவெளியில் உணவு, பழத்துண்டுகள், காய்கறி சாலட், சுண்டல்வகைகள், சிற்றுண்டி என்று பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் உண்டாகாமால் தவிர்க்க முடியும்.
கர்ப்பகாலத்தில் பிடித்த உணவுகள் பிடிக்காமல் போகலாம். பிடிக்காத உணவுகளை தேடி சாப்பிட தூண்டும். ஆனால் சத்தான உணவுகள் கூட சமயங்களில் ஒவ்வாமையை உண்டு செய்யும்.
அப்படியான உணவு பொருள்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலருக்கு எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள், சில கீரை வகைகள், சில உணவுகள் கூட ஒவ்வாமையை உண்டாக்காலாம். செரிமானக்கோளாறை ஏற்படுத்தலாம். அதனால் செரிமானக்கோளாறு அதிகமாகும் போது நீங்கள் எடுத்துகொண்ட உணவு பொருள்களை யோசியுங்கள். மீண்டும் இது தொடர்ந்தால் அந்த பொருளை பேறுகாலம் முழுவதும் தவிர்ப்பது தான் சிறந்தது.
பழங்கள் செரிமானத்தை எளிதாக்குபவை. அதிகரிக்ககூடியவை. அதனால் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் தினம் ஒன்று எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் போன்று மாதுளை, நெல்லிக்காய் என்று மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். இவை செரிமானத்தை எளிதாக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் வரமால் தடுக்கலாம்.கர்ப்பக்காலம் முழுமையும் தினம் ஒரு பழம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணக்கோளாறையும் தடுக்க முடியும்.
அஜீரணத்தோடு நெஞ்செரிச்சல் என்பதும் வரக்கூடியது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்படியான நெஞ்செரிச்சல் அவஸ்தை உண்டாகும். அதனால் மதிய வேளையில் படுக்கும் போதும் இரவு நேரங்களில் படுக்கும் போதும் ஒருமணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உணவு செரிமானமாகும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலமும் உணவு செரிமானம் எளிதாகும்.
பொதுவாக சாப்பிட்டபிறகு மிதமான நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகும் செரிமானம் ஆகும் வரை கீழே குனிவதையும், கால்களை நீட்டி உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே உணவு சிறுகுடலுக்கு சீராக செல்லும். இரவு நேரங்களில் தலைக்கு சற்று உயரமான தலையணை வைத்து படுப்பதன் மூலம் நெஞ்செரிச்சல், அஜீரனக்கோளாறு தவிர்க்கலாம்.
குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
கர்ப்பிணிகள், வயிற்றுக்குள் இருக்கும் தங்கள் குழந்தையை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் பார்க்கிற பரவசத்துக்கு இணையில்லை. கருவில் இருக்கும் குழந்தையின் அசைவுகளை சி.டி.யாக பதிவு செய்து ரசிக்கிறவர்களும் உண்டு. ஆனால் பார்வையற்ற பெண்கள் இந்த மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பார்கள்? அவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், அச்சிடப்பட்ட ‘3டி அல்ட்ரா சவுண்ட்’. தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்பம் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் அமைப்பை அப்படியே அச்சு அசலாக பிரதி எடுக்கலாம். பார்வையற்ற ஒரு பெண், கருவில் இருக்கும் தன் குழந்தையின் முகம், பிஞ்சு கைகள் மற்றும் கால்களை தொட்டுப் பார்க்கும் அற்புத தருணத்தை பதிவுசெய்து ஒரு வீடியோ பதிவு வெளியாகி இருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களால் அது பார்க்கப்பட்டு இருக்கிறது.
தொழில்நுட்பமும் தாய்மை உணர்வும் சங்கமிக்கும் இந்த 3டி அல்ட்ராசவுண்ட் தொழில் நுட்பத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் அமைப்பை அப்படியே அச்சு அசலாக பிரதி எடுக்கலாம். பார்வையற்ற ஒரு பெண், கருவில் இருக்கும் தன் குழந்தையின் முகம், பிஞ்சு கைகள் மற்றும் கால்களை தொட்டுப் பார்க்கும் அற்புத தருணத்தை பதிவுசெய்து ஒரு வீடியோ பதிவு வெளியாகி இருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களால் அது பார்க்கப்பட்டு இருக்கிறது.
தொழில்நுட்பமும் தாய்மை உணர்வும் சங்கமிக்கும் இந்த 3டி அல்ட்ராசவுண்ட் தொழில் நுட்பத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர பெண்கள் சற்று சிரமங்களை உணருவார்கள். பெண்கள் கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் எந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர பெண்கள் சற்று சிரமங்களை உணருவார்கள். உட்காரும் போதும், நிற்கும் போதும், படுக்கும் போதும் இதை எளிதாக உணர்வார்கள். இவை தொடரும் போது சோர்வும் அதிகரிக்கும். ஆனால் நடைபயிற்சியின் மூலம் தசைகள் இலகுவாகும் தன்மை பெறுவாதால் உடலில் இந்த மாற்றத்தை எளிதாக கையாள்வார்கள்.
உடலில் சிசு அசையும் போது ஆங்காங்கே உறுப்புகளில் வலியை உணர்வார்கள். கர்ப்பத்தின் இரண்டாவது காலகட்டத்தில் கருப்பை விரிவடைந்து குழந்தையின் எடை கூடியிருப்பதால் அதன் அழுத்தம் வலியாக முதுகிலும் பரவும். மேலும் அதிக எடை தாங்கும் கால்களிலும் வலியை உணர முடியும். இது அனைவருக்கும் உண்டாகும் என்பதால் இது குறித்து பயப்பட தேவையில்லை. ஆனால் இந்த வலிகளின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க நடைபயிற்சி உதவுகிறது.
கர்ப்பிணிகள் சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்றாலும் சிசுவின் வளர்ச்சியால் செரிமானப் பிரச்னைகள் அவ்வபோது உண்டாகும். இதனால் அதிக உணவு அல்லது வேளை தவறாமல் சாப்பிடுவது இயலாமல் போகலாம். ஆனால் நடைபயிற்சியை செய்யும் போது உடல் உறுப்புகள் இயங்கி செரிமானமும் எளிதாகும். இதனால் நெஞ்செரிச்சல் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
குழந்தையின் அசைவு மற்றும் பிரசவக்காலம் நெருங்க நெருங்க மனதில் ஒரு வித அச்சம் உண்டாவது இயற்கை. இந்த அச்சம் கர்ப்பிணிகளின் மனதில் பேறுகாலம் வரை நிரந்தரமாகும். அதனால் ஆழந்த தூக்கமும் கேள்விக்குறியாக இருக்கும். இதையும் சரிசெய்கிறது அன்றாட நடைபயிற்சி.
பேறுகாலத்தில் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வது உடலில் அதிக எடையை உண்டாக்கிவிடும். பேறுகாலத்தில் செய்யும் உடற்பயிற்சியால உடலில் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது இதனால் பிரசவத்துக்கு பிறகும் கச்சிதமான உடலை வைத்துகொள்ள முடிகிறது.
மனரீதியாக மட்டுமல்ல உடலும் இந்த பயிற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு வயிறு நிறைய இல்லாமல் கால் வயிறு உணவாவது எடுத்துக்கொள்ளுங்கள். இது சோர்வை அதிகரிக்காது. நடப்பதற்கு இலகுவான ஆடைகள், காலணிகளை அணிந்து பழகுங்கள். காற்றோட்டமான போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களை தேர்வு செய்வது மனதுக்கு இதமாக இருக்கும். அல்லது உங்கள் வீட்டு மொட்டைமாடியிலும் நடக்கலாம்.
மனதில் எவ்விதமான குழப்பங்களுக்கோ யோசனைகளுக்கோ இடம் கொடுக்காமல் அமைதியாக வைத்துகொள்வதன் மூலம் நடைபயிற்சியின் பலனை முழுமையாக பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்களும். பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருக்கும் பெண்கள் யோகா வல்லுநர்களின் உதவியோடு யோகா பயிற்சியும் செய்யலாம்.
ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவில் மட்டுமல்ல உடற்பயிற்சியிலும் உண்டு. அதை உணர்ந்து கடினமாக உடலை வருத்தி செய்யாவிட்டாலும் இலகுவான நடைபயிற்சியை மேற்கொள்வது பிரசவகாலத்தில் பதட்டமின்றி வைத்திருக்கும்.
உடலில் சிசு அசையும் போது ஆங்காங்கே உறுப்புகளில் வலியை உணர்வார்கள். கர்ப்பத்தின் இரண்டாவது காலகட்டத்தில் கருப்பை விரிவடைந்து குழந்தையின் எடை கூடியிருப்பதால் அதன் அழுத்தம் வலியாக முதுகிலும் பரவும். மேலும் அதிக எடை தாங்கும் கால்களிலும் வலியை உணர முடியும். இது அனைவருக்கும் உண்டாகும் என்பதால் இது குறித்து பயப்பட தேவையில்லை. ஆனால் இந்த வலிகளின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க நடைபயிற்சி உதவுகிறது.
கர்ப்பிணிகள் சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்றாலும் சிசுவின் வளர்ச்சியால் செரிமானப் பிரச்னைகள் அவ்வபோது உண்டாகும். இதனால் அதிக உணவு அல்லது வேளை தவறாமல் சாப்பிடுவது இயலாமல் போகலாம். ஆனால் நடைபயிற்சியை செய்யும் போது உடல் உறுப்புகள் இயங்கி செரிமானமும் எளிதாகும். இதனால் நெஞ்செரிச்சல் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
குழந்தையின் அசைவு மற்றும் பிரசவக்காலம் நெருங்க நெருங்க மனதில் ஒரு வித அச்சம் உண்டாவது இயற்கை. இந்த அச்சம் கர்ப்பிணிகளின் மனதில் பேறுகாலம் வரை நிரந்தரமாகும். அதனால் ஆழந்த தூக்கமும் கேள்விக்குறியாக இருக்கும். இதையும் சரிசெய்கிறது அன்றாட நடைபயிற்சி.
பேறுகாலத்தில் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வது உடலில் அதிக எடையை உண்டாக்கிவிடும். பேறுகாலத்தில் செய்யும் உடற்பயிற்சியால உடலில் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது இதனால் பிரசவத்துக்கு பிறகும் கச்சிதமான உடலை வைத்துகொள்ள முடிகிறது.
மனரீதியாக மட்டுமல்ல உடலும் இந்த பயிற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு வயிறு நிறைய இல்லாமல் கால் வயிறு உணவாவது எடுத்துக்கொள்ளுங்கள். இது சோர்வை அதிகரிக்காது. நடப்பதற்கு இலகுவான ஆடைகள், காலணிகளை அணிந்து பழகுங்கள். காற்றோட்டமான போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களை தேர்வு செய்வது மனதுக்கு இதமாக இருக்கும். அல்லது உங்கள் வீட்டு மொட்டைமாடியிலும் நடக்கலாம்.
மனதில் எவ்விதமான குழப்பங்களுக்கோ யோசனைகளுக்கோ இடம் கொடுக்காமல் அமைதியாக வைத்துகொள்வதன் மூலம் நடைபயிற்சியின் பலனை முழுமையாக பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்களும். பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருக்கும் பெண்கள் யோகா வல்லுநர்களின் உதவியோடு யோகா பயிற்சியும் செய்யலாம்.
ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவில் மட்டுமல்ல உடற்பயிற்சியிலும் உண்டு. அதை உணர்ந்து கடினமாக உடலை வருத்தி செய்யாவிட்டாலும் இலகுவான நடைபயிற்சியை மேற்கொள்வது பிரசவகாலத்தில் பதட்டமின்றி வைத்திருக்கும்.
பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான்.
பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான். இருப்பினும் அது காண அத்தனை அழகாக இருக்காது. குறிப்பாக பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். இதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் கோடுகளை நீக்க சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம்.
* 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அதை சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.
* ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும். அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
* 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.
* முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.
* பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.
* கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.
* 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அதை சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.
* ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும். அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
* 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.
* முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.
* பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.
* கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.
மாதவிலக்கு நாட்களில் உண்டாகிற வலி, பெரும்பாலான பெண்களுக்கு மரண வேதனையானது. வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம், அதற்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
மாதவிலக்கின் போது உண்டாகிற அவதிகளை நினைத்தால் பெண் பிறவியே வேண்டாம் என நினைக்கத் தோன்றும் பல பெண்களுக்கு. மாதவிலக்கு நாட்களில் உண்டாகிற வலி, பெரும்பாலான பெண்களுக்கு மரண வேதனையானது. வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம், அதற்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
மாதவிலக்கு ஏற்படும்போது வருகிற வயிற்று வலியை டிஸ்மெனரியா (Dysmenorrhea) என்கிறோம். மாதவிலக்கு நாட்களுக்கு முன்போ, மாதவிலக்கின் இரண்டாவது நாளோ, மாதவிலக்கின் 5 நாட்களுக்குமோ இந்த வலி ஏற்படும். டிஸ்மெனரியாவில் பிரைமரி டிஸ்மெனரியா, செகண்டரி டிஸ் மெனரியா என இரு வகை உண்டு.
இது பருவமடைந்த புதிதில் இளம் பெண்களுக்கு ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் போது முதல் 2 நாட்களில் லேசான வலி ஏற்படுகிறது. 10 சதவிகிதப் பெண்களுக்கு அந்த வலி கடுமையாக இருக்கிறது.
இவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுவதால் மருத்துவம் தேவைப்படுகிறது. வலி ஏற்படும் போது வேறு பெண் நோயியல் பிரச்னை எதுவும் இல்லையென் றால், அதை முதல் நிலை வலியுள்ள மாதவிலக்கு (பிரைமரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது பிராஸ்டாகிளாண்டின் (Prostaglandin) எனப்படுகிற பொருள் உடலினுள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
இந்தப் பொருள் மிகுதியாகும் போது, கர்ப்பப்பையின் தசைகள் சுருங்கி, அதன் உட்சுவர் சேதாரமாகிறது. பொதுவாக இந்த முதல் நிலை வலியுற்ற மாதவிலக்கு தீங்கற்றது. இது 20 வயதுக்குப் பிறகு அல்லது குழந்தைப்பேற்றுக்குப் பிறகு மறைந்து விடுகிறது.
பெண் நோயியல் பிரச்னைகளுடன் இணைந்து மாதவிலக்குடன் கூடிய வலி ஏற்படுவதை இரண்டாம் நிலை வலியுள்ள மாதவிலக்கு (செகண்டரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது கர்ப்பப்பையின் சுவர்களில் ஃபைப்ராய்டு எனப்படும் நார்த்திசுக் கட்டிகள் ஏற்படுவதாலோ, பால்வினைத் தொற்றுகளினாலோ, கர்ப்பப்பையின் உட்படலம் வேறு இடங்களில் பரவிப் பெருத்ததாலோ, இடுப்புக்குழி நோய்களாலோ, கருப்பைக் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகளாலோ ஏற்படுகிறது.
சிலருக்கு இதுபோன்ற வயிற்றுவலியுடன் வாந்தி, மயக்கம் போன்றவையும் காணப்படும். இதனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படலாம்.சிலருக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லாமலேயே மாதவிடாயின் போது வயிற்றுவலி (Primary Dysmenorrhea)ஏற்படலாம். இதற்கு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொள்ளலாம்.
இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரைமரி டிஸ்மெனரியாவில் கர்ப்பப்பை உள் சுவரில் இருந்து வெளியேறும் ஹார்மோன் விடுவிக்கப்பட்டு வெளியே வரும்போது வலி உண்டாகும். இதை சரி செய்வதற்கு பிராஸ்டா கிளாண்டின் சின்தஸிஸ் இன்ஹிபிட்டார் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.
பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் உருவாகாமல் இருப்பது மாதிரியான வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் பெண்கள், பருவமடையும் போது கர்ப்பப்பையில் இருந்து வெளியே வரும் உதிரம் சரியாக வர முடியாமல் கர்ப்பப்பை உள்ளேயே தேங்கும் நிலை ஏற்படலாம். இதனால் ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அதிகமான வலி ஏற்படலாம்.
சில இளம்பெண்களுக்கு மாதவிலக்கு வலி வந்தும், உதிரம் வெளியே தெரியாமல் வெள்ளைப்படுதல் போன்ற நிகழ்வும் இருக்கலாம். அது அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைபாடு உள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலமும் ஹைமனக்டமி (Hymenectomy) என்ற அடிவழி சிகிச்சை மூலமும் தீர்வளிக்கலாம்.
டிஸ்மெனரியாவால் சிலருக்கு குழந்தையின்மை பிரச்னை கூட ஏற்படலாம். குழந்தை இருப்பவருக்குக்கூட திடீரென வயிற்றுவலி ஏற்படலாம். அது செகண்டரி டிஸ்மெனரியா வகையாகவும் இருக்கலாம்.இதனை கண்டறிய முக்கிய விஷயம் நோயாளியின் உடல்நலப் பின்னணியை ஆராய்தல், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. அல்லது சிடி ஸ்கேன், மருத்துவப் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.தற்காலிகத் தீர்வுக்கு...
இபுபுரூஃபென் அல்லது டைகுளோஃபெனாக் சோடியம் அல்லது டைசைகுளோமைன் மாத்திரைகளை மருத்துவரிடம் கேட்டு உபயோகிக்கலாம். படுத்த நிலையில் வயிற்றுப் பகுதிக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அடிக்கடி நாப்கின்களை மாற்றியாக வேண்டும்.
வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்தாலே, இந்தப் பிரச்னை சரியாகும். இளம் சூடான தண்ணீரில் குளிப்பதும், மிதமான உடற்பயிற்சிகளும் கூட வலியைக் குறைக்கும். இவற்றையும் மீறி, மாதவிலக்கின் போதான வலி மிகக் கடுமையாகவும், வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை 3 நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது.
மாதவிலக்கு ஏற்படும்போது வருகிற வயிற்று வலியை டிஸ்மெனரியா (Dysmenorrhea) என்கிறோம். மாதவிலக்கு நாட்களுக்கு முன்போ, மாதவிலக்கின் இரண்டாவது நாளோ, மாதவிலக்கின் 5 நாட்களுக்குமோ இந்த வலி ஏற்படும். டிஸ்மெனரியாவில் பிரைமரி டிஸ்மெனரியா, செகண்டரி டிஸ் மெனரியா என இரு வகை உண்டு.
இது பருவமடைந்த புதிதில் இளம் பெண்களுக்கு ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் போது முதல் 2 நாட்களில் லேசான வலி ஏற்படுகிறது. 10 சதவிகிதப் பெண்களுக்கு அந்த வலி கடுமையாக இருக்கிறது.
இவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுவதால் மருத்துவம் தேவைப்படுகிறது. வலி ஏற்படும் போது வேறு பெண் நோயியல் பிரச்னை எதுவும் இல்லையென் றால், அதை முதல் நிலை வலியுள்ள மாதவிலக்கு (பிரைமரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது பிராஸ்டாகிளாண்டின் (Prostaglandin) எனப்படுகிற பொருள் உடலினுள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
இந்தப் பொருள் மிகுதியாகும் போது, கர்ப்பப்பையின் தசைகள் சுருங்கி, அதன் உட்சுவர் சேதாரமாகிறது. பொதுவாக இந்த முதல் நிலை வலியுற்ற மாதவிலக்கு தீங்கற்றது. இது 20 வயதுக்குப் பிறகு அல்லது குழந்தைப்பேற்றுக்குப் பிறகு மறைந்து விடுகிறது.
பெண் நோயியல் பிரச்னைகளுடன் இணைந்து மாதவிலக்குடன் கூடிய வலி ஏற்படுவதை இரண்டாம் நிலை வலியுள்ள மாதவிலக்கு (செகண்டரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது கர்ப்பப்பையின் சுவர்களில் ஃபைப்ராய்டு எனப்படும் நார்த்திசுக் கட்டிகள் ஏற்படுவதாலோ, பால்வினைத் தொற்றுகளினாலோ, கர்ப்பப்பையின் உட்படலம் வேறு இடங்களில் பரவிப் பெருத்ததாலோ, இடுப்புக்குழி நோய்களாலோ, கருப்பைக் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகளாலோ ஏற்படுகிறது.
சிலருக்கு இதுபோன்ற வயிற்றுவலியுடன் வாந்தி, மயக்கம் போன்றவையும் காணப்படும். இதனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படலாம்.சிலருக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லாமலேயே மாதவிடாயின் போது வயிற்றுவலி (Primary Dysmenorrhea)ஏற்படலாம். இதற்கு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொள்ளலாம்.
இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரைமரி டிஸ்மெனரியாவில் கர்ப்பப்பை உள் சுவரில் இருந்து வெளியேறும் ஹார்மோன் விடுவிக்கப்பட்டு வெளியே வரும்போது வலி உண்டாகும். இதை சரி செய்வதற்கு பிராஸ்டா கிளாண்டின் சின்தஸிஸ் இன்ஹிபிட்டார் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.
பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் உருவாகாமல் இருப்பது மாதிரியான வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் பெண்கள், பருவமடையும் போது கர்ப்பப்பையில் இருந்து வெளியே வரும் உதிரம் சரியாக வர முடியாமல் கர்ப்பப்பை உள்ளேயே தேங்கும் நிலை ஏற்படலாம். இதனால் ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அதிகமான வலி ஏற்படலாம்.
சில இளம்பெண்களுக்கு மாதவிலக்கு வலி வந்தும், உதிரம் வெளியே தெரியாமல் வெள்ளைப்படுதல் போன்ற நிகழ்வும் இருக்கலாம். அது அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைபாடு உள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலமும் ஹைமனக்டமி (Hymenectomy) என்ற அடிவழி சிகிச்சை மூலமும் தீர்வளிக்கலாம்.
டிஸ்மெனரியாவால் சிலருக்கு குழந்தையின்மை பிரச்னை கூட ஏற்படலாம். குழந்தை இருப்பவருக்குக்கூட திடீரென வயிற்றுவலி ஏற்படலாம். அது செகண்டரி டிஸ்மெனரியா வகையாகவும் இருக்கலாம்.இதனை கண்டறிய முக்கிய விஷயம் நோயாளியின் உடல்நலப் பின்னணியை ஆராய்தல், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. அல்லது சிடி ஸ்கேன், மருத்துவப் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.தற்காலிகத் தீர்வுக்கு...
இபுபுரூஃபென் அல்லது டைகுளோஃபெனாக் சோடியம் அல்லது டைசைகுளோமைன் மாத்திரைகளை மருத்துவரிடம் கேட்டு உபயோகிக்கலாம். படுத்த நிலையில் வயிற்றுப் பகுதிக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அடிக்கடி நாப்கின்களை மாற்றியாக வேண்டும்.
வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்தாலே, இந்தப் பிரச்னை சரியாகும். இளம் சூடான தண்ணீரில் குளிப்பதும், மிதமான உடற்பயிற்சிகளும் கூட வலியைக் குறைக்கும். இவற்றையும் மீறி, மாதவிலக்கின் போதான வலி மிகக் கடுமையாகவும், வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை 3 நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது.
மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா? என்று கேட்டால் அதற்கு தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தான் முழுமையான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம்.
புட்டிப் பாலை விடத் தாய்ப்பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் தாய்மாருக்கு எதுவும் விளங்குதில்லையே! தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப் போகும் என்ற பேச்சை ஏற்க முடியாது.
இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.
மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆய்வுகளின் படி புட்டிப்பாலூட்டி வளர்த்த குழந்தையை விடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.
புட்டிப் பாலை விடத் தாய்ப்பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் தாய்மாருக்கு எதுவும் விளங்குதில்லையே! தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப் போகும் என்ற பேச்சை ஏற்க முடியாது.
இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.
மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆய்வுகளின் படி புட்டிப்பாலூட்டி வளர்த்த குழந்தையை விடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.
வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகில் 26 நாடுகளில் வாடகைத்தாய் முறை தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன மருத்துவ சிகிச்சைகளும், திறன் வாய்ந்த மருத்துவர்களும் இங்கு அதிகம். வாடகை தாய்க்கான முறையான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்று கூறப்பட்டாலும், இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் அளித்த வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.
கர்ப்பத்தை 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் வாடகைத்தாய்க்கு கிடைக்க வேண்டிய பணம் சரியாக போய்ச்சேராமல் கேள்விக்குறியாகி விடக்கூடாது. பிரசவத்துக்கு பின்னும் வாடகைத்தாயின் பாதுகாப்பும் பராமரிப்பும் அதற்கான மருத்துவச் செலவுகளையும் ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விதி முக்கியமானது.
என்னதான் பணத்தை பெற்றுக்கொண்டு பிரசவித்தாலும் தொப்புள் கொடி உறவு சாதாரணமானதல்ல. பிரசவத்துக்குபின் மனதளவில் வாடகைத் தாய்மார்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியம். வாடகைத்தாயை இந்திய சமூகம் குழந்தை பேறின்மைக்கான தீர்வாக பார்க்காமல் பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு அடைபவர்களுக்கான சட்டம் இன்னும் முழுமையான வரையறைக்குள் வரவில்லை.
வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கர்ப்பத்தை 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் வாடகைத்தாய்க்கு கிடைக்க வேண்டிய பணம் சரியாக போய்ச்சேராமல் கேள்விக்குறியாகி விடக்கூடாது. பிரசவத்துக்கு பின்னும் வாடகைத்தாயின் பாதுகாப்பும் பராமரிப்பும் அதற்கான மருத்துவச் செலவுகளையும் ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விதி முக்கியமானது.
என்னதான் பணத்தை பெற்றுக்கொண்டு பிரசவித்தாலும் தொப்புள் கொடி உறவு சாதாரணமானதல்ல. பிரசவத்துக்குபின் மனதளவில் வாடகைத் தாய்மார்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியம். வாடகைத்தாயை இந்திய சமூகம் குழந்தை பேறின்மைக்கான தீர்வாக பார்க்காமல் பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு அடைபவர்களுக்கான சட்டம் இன்னும் முழுமையான வரையறைக்குள் வரவில்லை.
வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இளம்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களில் பெரும்பாலானவை அவர்களது தாம்பத்தியம் மற்றும் அழகு தொடர்புடையதாக இருக்கின்றன.
இளம்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களில் பெரும்பாலானவை அவர்களது தாம்பத்தியம் மற்றும் அழகு தொடர்புடையதாக இருக்கின்றன. அழகை பொறுத்தவரையில் சருமம், கூந்தல் பிரச்சினைகளே அதிகம். கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.
பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வித்தியாசம் ஏற்படும். அதனால் முகத்தில் அதிகமாக முடி வளர்தல், முகப்பரு தோன்றுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கர்ப்பிணிகள் கருவளையத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். தூங்கும்நேரம் குறைவதே இதற்கான காரணம். நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தால் கருவளையம் மறையும். குளிர்ந்த ஏதாவது ஒரு மோய்சரைசிங் கிரீமை பயன்படுத்தி கருவளையம் இருக்கும் பகுதிகளில் மென்மையாக வருடி மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினை என்னவென்றால், கருப்பு மற்றும் தவிட்டு நிறத்தில் படை போன்று தோன்றும். கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் சருமத்திற்கு நிறம் கொடுக்கும் மெலானின், மெலோனோசைட்டுகள் என்ற திசுக்களின் செயல்பாடு வேகமடையும். அதுவே சருமத்தில் படை தோன்றுவதற்கு காரணம். சூரிய ஒளி படக்கூடிய முகம், கழுத்து போன்ற பகுதிகளில் இந்த படை பொதுவாக தோன்றும். இதனால் தொந்தரவு இல்லை. பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன் சுரப்பு சீரானதும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் சரியாகிவிடும்.
‘ஸ்ட்ரச் மார்க்’ எனப்படும் அடிவயிற்று கோடுகள்தான் கர்ப்பகாலத்தில் பெண்களை அதிகம் வாட்டும். கர்ப்ப காலத்தில் சருமம் விரிவடைவதன் மூலம் இந்த கோடுகள் உருவாகின்றன. இது வயிற்றில் மட்டுமின்றி மார்பகங்கள், தொடைப்பகுதி, கைகளிலும் தோன்றும். இதற்காக இப்போதே கிரீம் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பலன் எதுவும் ஏற்படாது. அவரவர் சருமத் தன்மைக்கு ஏற்ப இந்த கோடுகள் உருவாகும். சிலருக்கு கோடுகள் உருவாகாமலும் இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் அழகுக்காக இயற்கையான மூலிகைப் பொருட்களை மட்டும் ஓரளவு பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த அழகுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்வது பெண்களை பயம்கொள்ளவைக்கும் விஷயமாக இருக்கிறது. சமூகத்தில் பரவி இருக்கும் தவறான எண்ணங்களே அதற்கு காரணம். கர்ப்பிணியின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினை எதுவும் இல்லை என்றால், ஆரோக்கியமான கர்ப்பிணியாக இருக்கிறார் என்றால், தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் இதில் முடிவெடுப்பது கணவன்-மனைவி இருவரது மனநிலை, உடல்நிலை, சூழ்நிலைகளை பொறுத்தது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு தாம்பத்தியத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களிடம் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களைப் பொறுத்து சில பெண்களுக்கு உறவில் ஆர்வம் இருக்காது. அதனால் உடலுறவு தற்போது தேவையில்லை என்று தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். சில பெண்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பயத்தோடு கணவரை அணுகவிட மாட்டார்கள். கர்ப்பிணிகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் கணவரது தொடுதல், வருடுதல், அணைத்தல் போன்றவைகளில் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனால் கர்ப்பகால தாம்பத்தியம் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபாடு கொண்டது.
சூழலுக்குதக்கபடி அந்தந்த தம்பதிகளே இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டும். பொதுவாக பார்த்தால் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களும், இறுதி மூன்று மாதங்களும் உறவு மீதான ஈர்ப்பு குறைவாக இருக்கும். அப்போது தவிர்க்கலாம். நிறைய பெண்கள் உறவின்போது வயிற்றுக்கு அழுத்தம் ஏற்பட்டு, சிசுவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுகிறார்கள். அதனால்தான் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கிறார்கள். மனதும், உடலும், ஆரோக்கிய சூழலும் இடம்கொடுத்தால் கர்ப்பகால தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம்.
பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வித்தியாசம் ஏற்படும். அதனால் முகத்தில் அதிகமாக முடி வளர்தல், முகப்பரு தோன்றுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கர்ப்பிணிகள் கருவளையத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். தூங்கும்நேரம் குறைவதே இதற்கான காரணம். நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தால் கருவளையம் மறையும். குளிர்ந்த ஏதாவது ஒரு மோய்சரைசிங் கிரீமை பயன்படுத்தி கருவளையம் இருக்கும் பகுதிகளில் மென்மையாக வருடி மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினை என்னவென்றால், கருப்பு மற்றும் தவிட்டு நிறத்தில் படை போன்று தோன்றும். கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் சருமத்திற்கு நிறம் கொடுக்கும் மெலானின், மெலோனோசைட்டுகள் என்ற திசுக்களின் செயல்பாடு வேகமடையும். அதுவே சருமத்தில் படை தோன்றுவதற்கு காரணம். சூரிய ஒளி படக்கூடிய முகம், கழுத்து போன்ற பகுதிகளில் இந்த படை பொதுவாக தோன்றும். இதனால் தொந்தரவு இல்லை. பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன் சுரப்பு சீரானதும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் சரியாகிவிடும்.
‘ஸ்ட்ரச் மார்க்’ எனப்படும் அடிவயிற்று கோடுகள்தான் கர்ப்பகாலத்தில் பெண்களை அதிகம் வாட்டும். கர்ப்ப காலத்தில் சருமம் விரிவடைவதன் மூலம் இந்த கோடுகள் உருவாகின்றன. இது வயிற்றில் மட்டுமின்றி மார்பகங்கள், தொடைப்பகுதி, கைகளிலும் தோன்றும். இதற்காக இப்போதே கிரீம் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பலன் எதுவும் ஏற்படாது. அவரவர் சருமத் தன்மைக்கு ஏற்ப இந்த கோடுகள் உருவாகும். சிலருக்கு கோடுகள் உருவாகாமலும் இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் அழகுக்காக இயற்கையான மூலிகைப் பொருட்களை மட்டும் ஓரளவு பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த அழகுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்வது பெண்களை பயம்கொள்ளவைக்கும் விஷயமாக இருக்கிறது. சமூகத்தில் பரவி இருக்கும் தவறான எண்ணங்களே அதற்கு காரணம். கர்ப்பிணியின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினை எதுவும் இல்லை என்றால், ஆரோக்கியமான கர்ப்பிணியாக இருக்கிறார் என்றால், தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் இதில் முடிவெடுப்பது கணவன்-மனைவி இருவரது மனநிலை, உடல்நிலை, சூழ்நிலைகளை பொறுத்தது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு தாம்பத்தியத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களிடம் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களைப் பொறுத்து சில பெண்களுக்கு உறவில் ஆர்வம் இருக்காது. அதனால் உடலுறவு தற்போது தேவையில்லை என்று தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். சில பெண்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பயத்தோடு கணவரை அணுகவிட மாட்டார்கள். கர்ப்பிணிகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் கணவரது தொடுதல், வருடுதல், அணைத்தல் போன்றவைகளில் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனால் கர்ப்பகால தாம்பத்தியம் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபாடு கொண்டது.
சூழலுக்குதக்கபடி அந்தந்த தம்பதிகளே இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டும். பொதுவாக பார்த்தால் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களும், இறுதி மூன்று மாதங்களும் உறவு மீதான ஈர்ப்பு குறைவாக இருக்கும். அப்போது தவிர்க்கலாம். நிறைய பெண்கள் உறவின்போது வயிற்றுக்கு அழுத்தம் ஏற்பட்டு, சிசுவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுகிறார்கள். அதனால்தான் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கிறார்கள். மனதும், உடலும், ஆரோக்கிய சூழலும் இடம்கொடுத்தால் கர்ப்பகால தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம்.
பெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
பெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்கவும், நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டு வரவும், புற்றுநோயை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வைட்டமின்-டி சத்து தேவைப்படுகிறது. வைட்டமின்-டி சத்து மனிதர்களுக்கு மிக அவசியம் என்பதால் இயற்கையே மனமுவந்து அதனை சூரிய கதிர்கள் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன்தான் வாழ் கிறார்கள். சூரிய ஒளி படாத வீடுகளில் வசிப்பது, உடலை முழுவதுமாக உடைகளால் மூடிக்கொள்வது, முரண்பாடான உணவு பழக்கம், வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவைகள் இந்த பற்றாக்குறை நீடிக்க காரணமாக இருக்கின்றன. இந்த பற்றாக்குறை தென்னிந்திய பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற பெண்களில் 90 சதவீதம் பேரும் நகரப்பகுதிகளில் உள்ள பெண்களில் 85 சதவீதம் பேரும் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன் இருக் கிறார்கள். இதை ஈடுகட்ட மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினாலும், மருந்தாக அதை பெறுவதைவிட, இயற்கையாக பெறுவதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.
தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உள்ள வெயில் உடலில் பட்டால் போதும். சூரியனில் இருக்கும் அல்ட்ரா வயலட்-பி கதிர்கள் உடலில் பட்டு வைட்டமின்-டி தயாரிப்பு பணிகளுக்கு உதவிபுரிகிறது. வெயில் மட்டுமின்றி பால் மற்றும் பால் வகை பொருட்கள், முட்டை, மீன், பிஷ்லிவர் ஆயில் போன்றவைகளிலும் வைட்டமின்-டி சத்து இருக்கிறது.
குழந்தைகளிடம் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அவர்களை தினமும் ஒருமணி நேரமாவது வெளியே சென்று விளையாட அனு மதிக்கவேண்டும். வயதானவர்கள் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வெயில் உடலில் படும்படி நிற்கவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்கள் தங்கள் வீட்டு பால்கனியை திறந்து வைத்து காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் வெயில் படும்படி உட்கார்ந்திருக்கவேண்டும்.
கர்ப்பிணிகள் பால், முட்டையை அன்றாட உணவில் சேர்க்கவேண்டும். உடல் குண்டாக இருந்தால் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படும். அதனால் எப்போதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடலை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறை இருக்கிறதா என்பதை பரிசோதித்து, அதற்கு தீர்வு காண்பது நல்லது.
ஆனாலும் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன்தான் வாழ் கிறார்கள். சூரிய ஒளி படாத வீடுகளில் வசிப்பது, உடலை முழுவதுமாக உடைகளால் மூடிக்கொள்வது, முரண்பாடான உணவு பழக்கம், வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவைகள் இந்த பற்றாக்குறை நீடிக்க காரணமாக இருக்கின்றன. இந்த பற்றாக்குறை தென்னிந்திய பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற பெண்களில் 90 சதவீதம் பேரும் நகரப்பகுதிகளில் உள்ள பெண்களில் 85 சதவீதம் பேரும் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன் இருக் கிறார்கள். இதை ஈடுகட்ட மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினாலும், மருந்தாக அதை பெறுவதைவிட, இயற்கையாக பெறுவதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.
தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உள்ள வெயில் உடலில் பட்டால் போதும். சூரியனில் இருக்கும் அல்ட்ரா வயலட்-பி கதிர்கள் உடலில் பட்டு வைட்டமின்-டி தயாரிப்பு பணிகளுக்கு உதவிபுரிகிறது. வெயில் மட்டுமின்றி பால் மற்றும் பால் வகை பொருட்கள், முட்டை, மீன், பிஷ்லிவர் ஆயில் போன்றவைகளிலும் வைட்டமின்-டி சத்து இருக்கிறது.
குழந்தைகளிடம் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அவர்களை தினமும் ஒருமணி நேரமாவது வெளியே சென்று விளையாட அனு மதிக்கவேண்டும். வயதானவர்கள் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வெயில் உடலில் படும்படி நிற்கவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்கள் தங்கள் வீட்டு பால்கனியை திறந்து வைத்து காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் வெயில் படும்படி உட்கார்ந்திருக்கவேண்டும்.
கர்ப்பிணிகள் பால், முட்டையை அன்றாட உணவில் சேர்க்கவேண்டும். உடல் குண்டாக இருந்தால் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படும். அதனால் எப்போதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடலை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறை இருக்கிறதா என்பதை பரிசோதித்து, அதற்கு தீர்வு காண்பது நல்லது.
நடக்கும் 2020-ம் ஆண்டில் உலகமே கொரோனா என்ற எதிரியுடன் போராடிக்கொண்டு இருக்கையில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சற்று எச்சரிக்கையுடனே நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் மற்றும் மகப்பேறு என்பது அவளுடைய வாழ்நாளில் மிகவும் இனிமையான வசந்த காலமாகும். ஆனால் நடக்கும் 2020-ம் ஆண்டில் உலகமே கொரோனா என்ற எதிரியுடன் போராடிக்கொண்டு இருக்கையில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சற்று எச்சரிக்கையுடனே நடந்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று சக மனிதர்களுக்கு வருவது போலவே இவர்களையும் தாக்கலாம். ஆனால் இந்த நோய் இவர்களை அதிகமாக தாக்கும் அல்லது தீவிரமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. எனவே அனைவரையும் போல சமூக விலகல் மற்றும் தனித்து இருப்பதை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தால் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்ப காலத்தின் எந்த மாதத்தில் இருந்தாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். வேலை பார்ப்பவர் என்றால் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பத்தார் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். வீட்டினுள்ளும் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள், மேஜையின் மேற்பரப்பு மற்றும் கதவின் கைப்பிடியினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அருகில் கைக்குட்டை இல்லையென்றால் முழங்கை கொண்டு முகத்தை மூட வேண்டும்.
மிக அவசியமான பயணம் என்றால் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். பொது வாகனத்தில் செல்லவேண்டி வந்தால் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி செல்ல வேண்டும்.
உங்களுடைய கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள மருத்துவரை 6, 12, 19 வாரங்களில் நேரில் அணுக வேண்டும். இதனை தவிர்த்து மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்றால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லவும். உங்களுடைய சந்தேகங்களை உங்கள் மகப்பேறு மருத்துவர் அல்லது கிராம சுகாதார செவிலியரிடம் அலைபேசியில் பேசி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அவசியமாக நேரில் பரிசோதனைக்கு வர வேண்டிய தேதிகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமந்தம்(வளைகாப்பு), வீட்டிலேயே நெருங்கிய சில உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரமாக நடைபெறுவதே தாய்க்கும், சிசுவிற்கும் நல்லது.
பிரசவ தேதி நெருங்கும் 1 வாரம் முன்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரசவ வலி ஏற்பட்டால் உங்கள் வருகையை மருத்துவமனைக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டு செல்லுங்கள். இது அவர்களை தயார் நிலையில் இருக்க உதவும்.
இவை அனைத்துமே முன்னெச்சரிக்கைகள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்ப காலத்தில் ஏற்பட்டால் பயமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அனைத்து வசதிகளும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
பிரசவ நேரத்தில் உங்களுடன் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்க படுவார். ஒரு பிரசவம் சுகப்பிரசவமா அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை கர்ப்பிணியின் பிரசவ நிலை மட்டும் சிக்கல்கள் அறிந்து மகப்பேறு மருத்துவர் முடிவு செய்வார். சாதாரணமாகவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து முறையே சாலச்சிறந்தது. கொரோனா தொற்று பரவுவதை குறைப்பதற்கும் இந்த முறையே சிறந்தது. எனவே முடிந்தவரை மருத்துவர் அதையே பின்பற்றுவார். கொரோனா தொப்புள் கொடி வழியாகவோ, பனிக்குட நீரிலோ பரவவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் கொரோனா நோய் உள்ள தாய், தாய்ப்பால் தரலாமா? என பலருக்கும் ஐயம் உண்டு.
இது தாய்ப்பால் மூலமாக பரவ வாய்ப்புகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே தாய்ப்பால் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. ஆனால் வைரஸ் பாதித்த தாயின் மிக அருகில் இருக்கும் போது காற்றின் மூலமாக தொற்று ஏற்படலாம். கொரோனா பாதித்த தாய் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாலுட்டலாம்.
தாய்-சேய் விலகல் கடைப்பிடிப்பது அவசியம். குழந்தை தனி அறையில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரு நபரின் கவனிப்பில் இருக்க வேண்டும். இவர் முக கவசம் அணிந்து, கை சுகாதாரம் பேண வேண்டும். தனித்து இருக்க முடியாவிடில் ஒரே அறையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். என்-95 முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் அருகில் இருமவோ, தும்மவோ கூடாது. தாய் மற்றும் சேய் உபயோகிக்கும் எந்த மேற்பரப்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பம்ப் மூலமாக தாய்ப்பால் வெளியிட்டு குழந்தைக்கு புட்டியில் தரலாம். பம்புகளை மிகவும் சுத்தமாக கையாள வேண்டும். சேயினை பிரிந்த தாய்க்கு மனச்சோர்வு வராமல் அவரை உளவியல் ரீதியாக ஊக்குவிக்க வேண்டும். தாயின் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் வீரியம் எப்போதும் கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தையை பார்க்கவோ அல்லது வாழ்த்துகள் சொல்லவோ உறவினர்களை அனுமதிக்க வேண்டாம். இந்த சமயங்களில் தாய் சேய் நலனை மேலும் கவனமாக, சுகாதாரமாக பேணுவது குடும்பத்தினரின் கடமையாகும்.
கொரோனா பாதித்த கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களின் உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பொதுவாக இவர்களுக்கு புரதச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவினை அளிக்க வேண்டும். தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். நமது பாரம்பரியமான இஞ்சி, பூண்டு, மஞ்சள், துளசி, மிளகு, நெல்லிக்காய், பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் கீரைகள் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் மூலம் கொரோனா பரவாது, எனவே அதனை உட்கொள்ளலாம்.
உலகமே கொரோனா நோய் குறித்து மிகுந்த பயம் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மேலே கூறியதை கவனித்து செயல்படுங்கள். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வர். நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
டாக்டர் த.ஸ்ரீகலா பிரசாத்,
துறை தலைவர்,
மகளிர் சிறப்பு சிறுநீரகவியல் துறை,
அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, சென்னை.
கொரோனா தொற்று சக மனிதர்களுக்கு வருவது போலவே இவர்களையும் தாக்கலாம். ஆனால் இந்த நோய் இவர்களை அதிகமாக தாக்கும் அல்லது தீவிரமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. எனவே அனைவரையும் போல சமூக விலகல் மற்றும் தனித்து இருப்பதை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தால் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்ப காலத்தின் எந்த மாதத்தில் இருந்தாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். வேலை பார்ப்பவர் என்றால் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பத்தார் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். வீட்டினுள்ளும் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள், மேஜையின் மேற்பரப்பு மற்றும் கதவின் கைப்பிடியினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அருகில் கைக்குட்டை இல்லையென்றால் முழங்கை கொண்டு முகத்தை மூட வேண்டும்.
மிக அவசியமான பயணம் என்றால் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். பொது வாகனத்தில் செல்லவேண்டி வந்தால் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி செல்ல வேண்டும்.
உங்களுடைய கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள மருத்துவரை 6, 12, 19 வாரங்களில் நேரில் அணுக வேண்டும். இதனை தவிர்த்து மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்றால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லவும். உங்களுடைய சந்தேகங்களை உங்கள் மகப்பேறு மருத்துவர் அல்லது கிராம சுகாதார செவிலியரிடம் அலைபேசியில் பேசி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அவசியமாக நேரில் பரிசோதனைக்கு வர வேண்டிய தேதிகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமந்தம்(வளைகாப்பு), வீட்டிலேயே நெருங்கிய சில உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரமாக நடைபெறுவதே தாய்க்கும், சிசுவிற்கும் நல்லது.
பிரசவ தேதி நெருங்கும் 1 வாரம் முன்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரசவ வலி ஏற்பட்டால் உங்கள் வருகையை மருத்துவமனைக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டு செல்லுங்கள். இது அவர்களை தயார் நிலையில் இருக்க உதவும்.
இவை அனைத்துமே முன்னெச்சரிக்கைகள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்ப காலத்தில் ஏற்பட்டால் பயமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அனைத்து வசதிகளும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
பிரசவ நேரத்தில் உங்களுடன் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்க படுவார். ஒரு பிரசவம் சுகப்பிரசவமா அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை கர்ப்பிணியின் பிரசவ நிலை மட்டும் சிக்கல்கள் அறிந்து மகப்பேறு மருத்துவர் முடிவு செய்வார். சாதாரணமாகவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து முறையே சாலச்சிறந்தது. கொரோனா தொற்று பரவுவதை குறைப்பதற்கும் இந்த முறையே சிறந்தது. எனவே முடிந்தவரை மருத்துவர் அதையே பின்பற்றுவார். கொரோனா தொப்புள் கொடி வழியாகவோ, பனிக்குட நீரிலோ பரவவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் கொரோனா நோய் உள்ள தாய், தாய்ப்பால் தரலாமா? என பலருக்கும் ஐயம் உண்டு.
இது தாய்ப்பால் மூலமாக பரவ வாய்ப்புகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே தாய்ப்பால் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. ஆனால் வைரஸ் பாதித்த தாயின் மிக அருகில் இருக்கும் போது காற்றின் மூலமாக தொற்று ஏற்படலாம். கொரோனா பாதித்த தாய் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாலுட்டலாம்.
தாய்-சேய் விலகல் கடைப்பிடிப்பது அவசியம். குழந்தை தனி அறையில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரு நபரின் கவனிப்பில் இருக்க வேண்டும். இவர் முக கவசம் அணிந்து, கை சுகாதாரம் பேண வேண்டும். தனித்து இருக்க முடியாவிடில் ஒரே அறையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். என்-95 முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் அருகில் இருமவோ, தும்மவோ கூடாது. தாய் மற்றும் சேய் உபயோகிக்கும் எந்த மேற்பரப்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பம்ப் மூலமாக தாய்ப்பால் வெளியிட்டு குழந்தைக்கு புட்டியில் தரலாம். பம்புகளை மிகவும் சுத்தமாக கையாள வேண்டும். சேயினை பிரிந்த தாய்க்கு மனச்சோர்வு வராமல் அவரை உளவியல் ரீதியாக ஊக்குவிக்க வேண்டும். தாயின் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் வீரியம் எப்போதும் கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தையை பார்க்கவோ அல்லது வாழ்த்துகள் சொல்லவோ உறவினர்களை அனுமதிக்க வேண்டாம். இந்த சமயங்களில் தாய் சேய் நலனை மேலும் கவனமாக, சுகாதாரமாக பேணுவது குடும்பத்தினரின் கடமையாகும்.
கொரோனா பாதித்த கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களின் உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பொதுவாக இவர்களுக்கு புரதச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவினை அளிக்க வேண்டும். தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். நமது பாரம்பரியமான இஞ்சி, பூண்டு, மஞ்சள், துளசி, மிளகு, நெல்லிக்காய், பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் கீரைகள் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் மூலம் கொரோனா பரவாது, எனவே அதனை உட்கொள்ளலாம்.
உலகமே கொரோனா நோய் குறித்து மிகுந்த பயம் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மேலே கூறியதை கவனித்து செயல்படுங்கள். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வர். நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
டாக்டர் த.ஸ்ரீகலா பிரசாத்,
துறை தலைவர்,
மகளிர் சிறப்பு சிறுநீரகவியல் துறை,
அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, சென்னை.
உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.
அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர், வயதான ஆண் மற்றும் பெண்களின் தாம்பத்திய உணர்வு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் இறுதி முடிவாக, பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களை விட தாம்பத்திய உணர்வு அதிகமாக உள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை தாம்பத்திய உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும், பெண்கள் 31 ஆண்டுகள் வரை தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த ஆய்வுக் கூறுகிறது.
ஆய்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும், உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.
இந்த ஆய்வின் இறுதி முடிவாக, பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களை விட தாம்பத்திய உணர்வு அதிகமாக உள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை தாம்பத்திய உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும், பெண்கள் 31 ஆண்டுகள் வரை தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த ஆய்வுக் கூறுகிறது.
ஆய்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும், உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.






