என் மலர்
பெண்கள் மருத்துவம்
மனநல பிரச்சனைக்கு ஆலோசனை கேட்கும் போது மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல் நலப்பிரச்சனைகளை தெளிவாக கூறுவது மிகவும் அவசியம்.
பெண்கள் ஒரே நேரத்தில் பலவற்றை பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் இந்த சிந்தனையே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இதன் காரணமாக பெண்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இது குறித்து உளவியல் ரீதியாக தெரிந்து கொள்ளலாம்.
கவலை என்பது மன அழுத்தத்தின் முதல் படி. அதை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போது எதிர்மறையான பல சிக்கல்களை உருவாக்குகிறது. அடிக்கடி கவலைப்படும் பிரச்சனை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப்பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்றி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களில் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. கர்ப்பக்காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை பெண்களிடையே கவலையையும் மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன.
இதை தவிர அதீத சிந்தனை என்பது சில குடும்பங்களில் மரபியல் வழியாகவும் ஏற்பட கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமையை அனுபவிப்பது போன்ற செயல்களால் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
கவலையை தொடர்ந்து மன அழுத்தம் மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநலப்பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகளின் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் தேவையில்லாத கவலை இருந்தால் அதை ஆரம்பத்திலேயே சரி செய்வதற்கான வழிகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
மனநல பிரச்சனைக்கு ஆலோசனை கேட்கும் போது மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல் நலப்பிரச்சனைகளை தெளிவாக கூறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுவது மனச்சோர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும்.
கவலை என்பது மன அழுத்தத்தின் முதல் படி. அதை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போது எதிர்மறையான பல சிக்கல்களை உருவாக்குகிறது. அடிக்கடி கவலைப்படும் பிரச்சனை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப்பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்றி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களில் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. கர்ப்பக்காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை பெண்களிடையே கவலையையும் மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன.
இதை தவிர அதீத சிந்தனை என்பது சில குடும்பங்களில் மரபியல் வழியாகவும் ஏற்பட கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமையை அனுபவிப்பது போன்ற செயல்களால் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
கவலையை தொடர்ந்து மன அழுத்தம் மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநலப்பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகளின் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் தேவையில்லாத கவலை இருந்தால் அதை ஆரம்பத்திலேயே சரி செய்வதற்கான வழிகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
மனநல பிரச்சனைக்கு ஆலோசனை கேட்கும் போது மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல் நலப்பிரச்சனைகளை தெளிவாக கூறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுவது மனச்சோர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும்.
மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு பிரச்சினை, கருப்பைக் கட்டி, குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்சினைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
முள் முருக்கை, கல்யாண முருக்கன், முள் முருக்கு என பல பெயர்களில் அழைக்கப்படும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு. இதன் இலை, விதை, பூ, பட்டை போன்ற அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.
இது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் உடையது. அகலமான, பச்சை நிற இலைகளையும், வெளிர் சிவப்பு நிறப் பூக்களையும் கொண்டது. சுமார் அறுபது அடியில் இருந்து எண்பது அடி வரை வளரும். ஜூலை முதல் நவம்பர் மாதத்திற்குள் பூக்கள் பூக்கும்.
இலைகளை அரைத்து கிடைக்கும் சாற்றை, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு பருகி வந்தால் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் அனைத்து கோளாறுகளுக்கும் கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
எனவே தான் இதை ‘பெண்களுக்கான மரம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில், கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் கல்யாண முருங்கை மரத்தை வளர்ப்பது வழக்கமாகவே இருந்திருக்கிறது. இதை உணவாகவும், சிற்றுண்டியாகவும் தயார் செய்து சாப்பிடலாம்.
கல்யாண முருங்கை இலையை வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இலையை அரைத்து உடலில் பூசி, உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும நோய்கள் நீங்கும்.
உடல் பருமன் குறைவதற்கு இதன் இலைச்சாறு உதவும். மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு பிரச்சினை, கருப்பைக் கட்டி, குழந்தைப் பேறின்மை போன்ற பிரச்சினைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றுவதற்கு கல்யாண முருங்கை இலையை அரைத்து, மாதம் ஒரு முறை மருந்தாகச் சிறுவர்களுக்கு கொடுக்கலாம். அடையாகவும், சூப் தயார் செய்தும் மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடலாம். கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து தயாரிக்கலாம்.
பிரசவத்திற்குப் பின்பு கருப்பையை தூய்மைப்படுத்தவும், வலுப்படுத்தவும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தொடர்ந்து முப்பது நாட்கள் பருகி வரலாம்.
இந்த மரத்தை வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். விதைகளைப் பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறை. கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடும். எல்லா மண்ணிலும் சுலபமாக வளரும்.
இது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் உடையது. அகலமான, பச்சை நிற இலைகளையும், வெளிர் சிவப்பு நிறப் பூக்களையும் கொண்டது. சுமார் அறுபது அடியில் இருந்து எண்பது அடி வரை வளரும். ஜூலை முதல் நவம்பர் மாதத்திற்குள் பூக்கள் பூக்கும்.
இலைகளை அரைத்து கிடைக்கும் சாற்றை, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு பருகி வந்தால் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் அனைத்து கோளாறுகளுக்கும் கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
எனவே தான் இதை ‘பெண்களுக்கான மரம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில், கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் கல்யாண முருங்கை மரத்தை வளர்ப்பது வழக்கமாகவே இருந்திருக்கிறது. இதை உணவாகவும், சிற்றுண்டியாகவும் தயார் செய்து சாப்பிடலாம்.
கல்யாண முருங்கை இலையை வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இலையை அரைத்து உடலில் பூசி, உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும நோய்கள் நீங்கும்.
உடல் பருமன் குறைவதற்கு இதன் இலைச்சாறு உதவும். மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு பிரச்சினை, கருப்பைக் கட்டி, குழந்தைப் பேறின்மை போன்ற பிரச்சினைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றுவதற்கு கல்யாண முருங்கை இலையை அரைத்து, மாதம் ஒரு முறை மருந்தாகச் சிறுவர்களுக்கு கொடுக்கலாம். அடையாகவும், சூப் தயார் செய்தும் மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடலாம். கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து தயாரிக்கலாம்.
பிரசவத்திற்குப் பின்பு கருப்பையை தூய்மைப்படுத்தவும், வலுப்படுத்தவும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தொடர்ந்து முப்பது நாட்கள் பருகி வரலாம்.
இந்த மரத்தை வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். விதைகளைப் பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறை. கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடும். எல்லா மண்ணிலும் சுலபமாக வளரும்.
நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்.
நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins) என்கிறோம்.
இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்.
பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும்.
பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது.
குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது.
தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்.
இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள், தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது.
காரணங்கள்: அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை.
ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்.
அறிகுறி: இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது.
நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்.
கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்
பிரச்னைகள்: தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும்.
டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும். இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும் மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.
சிகிச்சை: ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது.
ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும் அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும் சிகிச்சை மூலம் பலன்பெறலாம்.
ஆயுர்வேத சிகிச்சை: தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம், புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி, மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு போன்றவை நல்ல பயன்களை தருகிறது. ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது.
தவிர்ப்பு முறை: அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும். இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம். தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.
வீட்டு வைத்தியம்: வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும்.
புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்.
பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும்.
பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது.
குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது.
தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்.
இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள், தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது.
காரணங்கள்: அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை.
ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்.
அறிகுறி: இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது.
நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்.
கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்
பிரச்னைகள்: தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும்.
டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும். இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும் மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.
சிகிச்சை: ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது.
ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும் அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும் சிகிச்சை மூலம் பலன்பெறலாம்.
ஆயுர்வேத சிகிச்சை: தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம், புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி, மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு போன்றவை நல்ல பயன்களை தருகிறது. ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது.
தவிர்ப்பு முறை: அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும். இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம். தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.
வீட்டு வைத்தியம்: வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும்.
புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை.
பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.
நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.
எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.
இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?
வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கியிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.
தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல்ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.
எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.
இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?
வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கியிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.
தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல்ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும்.
குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால், 10-14 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யப்படும். அதற்கு முன்பாக வலி அல்லது உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரால் ஆறு அல்லது ஏழு வாரங்களிலேயே ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படும்.
கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம். ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.
28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும்.
சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம்.
சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.
ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால், 10-14 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யப்படும். அதற்கு முன்பாக வலி அல்லது உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரால் ஆறு அல்லது ஏழு வாரங்களிலேயே ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படும்.
கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம். ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.
28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும்.
சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம்.
சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.
சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய தற்போதையச் சூழலில் விடுபட்ட மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. கொரோனாவால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட தாக்கம் என தற்போது இதனை கூற இயலாது எனினும், பல காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை பெரும்பங்கு வகித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
தற்போது செய்ய வேண்டிய வழிமுறைகள், தற்போது தவறாக நடந்தது என்ன? நாம் செய்த குறைகள் என்னென்ன? அவற்றை சரிசெய்வதற்கான வழிகளை அறிதல் மிக அவசியமாகும். முதன்மையாக டாக்டரைச் சந்தித்து இந்த நிலைக்கான காரணம் மற்றும் நோயறிதல் அவசியமாகும்.
ஒருவேளை ஏதேனும் நோய் அல்லது குறைபாடு கண்டறியப்பட்டால் அதனைச் சரிசெய்யவும், மீண்டும் பழைய உடல் இயக்க நிலைக்கு கொண்டுவர உடலில் நச்சுநீக்கம் செய்ய ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா (உடல்நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள்) சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் சீரான மாதவிடாய் சுழற்சியினை ஏற்படுத்த இயலும். முறையான வழிமுறைகள், மருத்துவ வழிகாட்டுதலுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி. யோகாபயிற்சிகள் முதலானவை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும். மாதவிடாய்க் கோளாறுகளுடன் அவதிப்படும் பெண்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று உடல் நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள் குறித்து அறிந்து ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய தற்போதையச் சூழலில் விடுபட்ட மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. கொரோனாவால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட தாக்கம் என தற்போது இதனை கூற இயலாது எனினும், பல காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை பெரும்பங்கு வகித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
தற்போது செய்ய வேண்டிய வழிமுறைகள், தற்போது தவறாக நடந்தது என்ன? நாம் செய்த குறைகள் என்னென்ன? அவற்றை சரிசெய்வதற்கான வழிகளை அறிதல் மிக அவசியமாகும். முதன்மையாக டாக்டரைச் சந்தித்து இந்த நிலைக்கான காரணம் மற்றும் நோயறிதல் அவசியமாகும்.
ஒருவேளை ஏதேனும் நோய் அல்லது குறைபாடு கண்டறியப்பட்டால் அதனைச் சரிசெய்யவும், மீண்டும் பழைய உடல் இயக்க நிலைக்கு கொண்டுவர உடலில் நச்சுநீக்கம் செய்ய ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா (உடல்நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள்) சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் சீரான மாதவிடாய் சுழற்சியினை ஏற்படுத்த இயலும். முறையான வழிமுறைகள், மருத்துவ வழிகாட்டுதலுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி. யோகாபயிற்சிகள் முதலானவை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும். மாதவிடாய்க் கோளாறுகளுடன் அவதிப்படும் பெண்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று உடல் நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள் குறித்து அறிந்து ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.
படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து, ஓரளவு செட்டிலான பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.
வயது அதிகரிப்பு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?
20 வயதுகளின் ஆரம்ப காலகட்டம் குழந்தை பேறுக்கு ஏற்றது. அந்த சமயத்தில் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் 30 வயதை நெருங்கும்போது கர்ப்பம் தரிக்கும் திறன் குறைய தொடங்கிவிடும். 35 வயதை கடக்கும்போது கருவுறுதல் திறன் வேகமாக குறைய தொடங்கும். 45 வயதுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் திறன் சாத்தியமில்லை.
கரு முட்டைகள் எத்தகைய பாதிப்புகளை அடையும்?
பெண்கள் பருவமடையும்போது கருப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகள் நிறைந்திருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். மேலும் பெண்களுக்கு வயதாகும்போது, கருப்பை கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியசிஸ் போன்ற கருவுறுதலை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் உண்டாகக் கூடும்.
வயதாகும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்ன?
20 முதல் 30 வயதுடைய தம்பதியரில் மாதவிடாய் சுழற்சியின்போது 4-ல் 1 பெண் கர்ப்ப மடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 40 வயதை நெருங்கும்போது மாதவிடாய் சுழற்சியில் 10 பெண்களில் ஒருவர் தான் கர்ப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் திறன் குறைந்துவிடுகிறது.
தாமதமாக கர்ப்பமடைவதால் பாதிப்பு நேருமா?
குறிப்பிட்ட வயதை கடந்து தாமதமாக கர்ப்பமாகும்போது ஒருசில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக 40 வயதை கடக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரீக்ளாம்ப்சியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகக்கூடும். இளம் பெண்களை விட வயதான பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதானவர் களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பிரச் சினைதான் பாதிப்பை அதிகப்படுத்தக்கூடும்.
வயது அதிகரிப்பு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?
20 வயதுகளின் ஆரம்ப காலகட்டம் குழந்தை பேறுக்கு ஏற்றது. அந்த சமயத்தில் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் 30 வயதை நெருங்கும்போது கர்ப்பம் தரிக்கும் திறன் குறைய தொடங்கிவிடும். 35 வயதை கடக்கும்போது கருவுறுதல் திறன் வேகமாக குறைய தொடங்கும். 45 வயதுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் திறன் சாத்தியமில்லை.
கரு முட்டைகள் எத்தகைய பாதிப்புகளை அடையும்?
பெண்கள் பருவமடையும்போது கருப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகள் நிறைந்திருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். மேலும் பெண்களுக்கு வயதாகும்போது, கருப்பை கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியசிஸ் போன்ற கருவுறுதலை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் உண்டாகக் கூடும்.
வயதாகும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்ன?
20 முதல் 30 வயதுடைய தம்பதியரில் மாதவிடாய் சுழற்சியின்போது 4-ல் 1 பெண் கர்ப்ப மடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 40 வயதை நெருங்கும்போது மாதவிடாய் சுழற்சியில் 10 பெண்களில் ஒருவர் தான் கர்ப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் திறன் குறைந்துவிடுகிறது.
தாமதமாக கர்ப்பமடைவதால் பாதிப்பு நேருமா?
குறிப்பிட்ட வயதை கடந்து தாமதமாக கர்ப்பமாகும்போது ஒருசில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக 40 வயதை கடக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரீக்ளாம்ப்சியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகக்கூடும். இளம் பெண்களை விட வயதான பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதானவர் களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பிரச் சினைதான் பாதிப்பை அதிகப்படுத்தக்கூடும்.
ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம்.
கர்ப்பமாக இருக்கும் முதல் 10-12 வாரங்களில் முடிந்தளவு டாப்ளர் ஸ்கேனை தவிர்க்கலாம். பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவும். அதுவும் மருத்துவரின் பரிந்துரைப்பு மிக மிக அவசியம்
முடிந்தவரையில் 3D மற்றும் 4D ஸ்கேன் வகைகளைத் தவிர்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் எந்த வித கருவியையும் தெரியாமல் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் அனைத்துக் குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம்.
ஏனெனில், குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. இந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம் என்பதால் இப்படிச் சந்தேகம் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனலாம்.
கர்ப்பப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மீண்டும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்து இருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகப் பார்க்க முடியும்.
ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம். அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவது இயல்பான விஷயம்தான்.
முடிந்தவரையில் 3D மற்றும் 4D ஸ்கேன் வகைகளைத் தவிர்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் எந்த வித கருவியையும் தெரியாமல் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் அனைத்துக் குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம்.
ஏனெனில், குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. இந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம் என்பதால் இப்படிச் சந்தேகம் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனலாம்.
கர்ப்பப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மீண்டும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்து இருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகப் பார்க்க முடியும்.
ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம். அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவது இயல்பான விஷயம்தான்.
பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது.
உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாகதயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.
‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது.
உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாகதயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.
20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.
இரவு நேர வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்கூட்டியே வந்து விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள், நினைவாற்றல் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவானது 20 மாதங்கள் தொடர்ந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுழற்சி முறையில் இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
‘‘45 வயதுக்கு முன்பாகவே மெனோபாஸ் அடைந்த பெண்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் இரவு ஷிப்டில் வேலைபார்ப்பவர்களாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்’’ என்கிறார், ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக்.
இந்த ஆய்வு முடிவானது 20 மாதங்கள் தொடர்ந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுழற்சி முறையில் இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
‘‘45 வயதுக்கு முன்பாகவே மெனோபாஸ் அடைந்த பெண்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் இரவு ஷிப்டில் வேலைபார்ப்பவர்களாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்’’ என்கிறார், ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக்.
இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் ஏற்படுகிறது. அது முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது. மேலும் கரு முட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக பகல் நேர பணியுடன் இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாம்..மாதவிடாய் கால பராமரிப்பில் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் தவறு செய்கிறார்கள்?
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது
குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் - முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் - இடை வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் - பின் வளரிளம் பருவம் என்பதாகும்.
பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டால், இருபாலருக்கும் உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கியமான கவனிக்கத்தக்க உடலளவிலான மாற்றங்கள் பெண் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி விகிதமும் பருவப் பெண்களுக்கு வேகமாக நிகழ்கிறது. இந்த வயதில்தான் பெண்குழந்தைகள் பருவமடைகிறார்கள்.
பெண்குழந்தைகளின் பருவமடையும் வயது 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர், 14 முதல் 16 வயதாகத்தான் இருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் 12 மற்றும் 13 வயதில் பருவடைதல் ஏற்பட்டு, தற்போது 9 மற்றும் பத்து வயதாக மாறி இருப்பது கவலையளிக்கிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும், இன்றளவிலும் கிராமப்புறங்களிலுள்ள பெண்குழந்தைகள் 14 முதல் 16 வயதில்தான் பருவமடைகிறார்கள் என்பது சற்றே நிம்மதியளிக்கும் செய்திதான். இதற்கு மிக முக்கியக் காரணம், வாழ்க்கை முறையும் உணவும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு பெண்குழந்தையின் தாய் எந்த வயதில் பருவமடைந்தாரோ, அதே வயதில்தான் அவர்களுடைய பெண்ணும் பருவமடைவாள் என்பது வாய்மொழியாகக் கூறக்கேட்டதெல்லாம் இப்போது மாறிவிட்டது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், வளரிளம் பருவவயதுப் பெண்ணின் பாட்டியும், அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடைந்து இருந்தாலும், மகளும் அதே வயதில் பருவமடைவாள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது அப்பெண்ணின் உடல் வளர்ச்சி, சமூகப் பொருளாதார நிலை, பரம்பரையாக இருக்கும் உடல் ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது என்ற முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான புரத உணவு, தொடர்ச்சியான துரித உணவு என்று உணவுமுறை மாற்றமடைந்து இருப்பதும் ஒரு காரணம் என்று குழந்தைகள்நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கைக் கொடுக்கின்றனர். ஒருபுறம், சிறுவயதில் பூப்படைதலே தவிர்க்க முடியாத நிலையாக இருக்க, மறுபுறம் அப்பெண் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற அதிக அக்கறையில், அக்குழந்தையின் வயதுக்கேற்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான உணவும் ஊட்டமும் கொடுக்கப்படுகிறது என்ற நிலையும் இருக்கிறது. இதனால், அக்குழந்தை, 7 ஆம் வகுப்புப் படிக்கும்போதே, 13 அல்லது 14 வயதில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
சிறுவயதிலேயே பருவமடைதல் என்பது, அப்பெண்குழந்தையை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட உடல்நல சிக்கலல்ல. அவளுடைய பெற்றோர், பள்ளிச் சூழல், உறவினர்கள், சமூகம் என்று அனைத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு சிக்கலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையையும், உலகத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு நுழைவாயிலாகவே வளரிளம்பருவம் பார்க்கப்படுவதால், வளரிளம் பருவம் என்பது பெரும்பாலும் “வாய்ப்புகளின் வயது” என்று அழகாகக் கூறப்படுகிறது. உடலியங்கியல் மாற்றங்களுடன் சேர்ந்து சம அளவில் உளரீதியான மாற்றங்களும் ஏற்படும் மிக முக்கியமான மனிதவளர்ச்சி நிலைதான் இந்த வளரிளம்பருவம். உடல், மன, சமூக ரீதியான பல விஷயங்களுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் பல்வேறு நிலைகளில் தெளிவு கொடுக்கப்பட்டு, பக்குவப்படவேண்டிய வயதாகவும் இருக்கிறது.
“பருவ வயதில் தங்களுடைய உண்மையான, நம்பகத்தன்மையுள்ள, தீர்க்கமான நிலையை ஒரு பக்கம் ஒதுக்கி வைப்பதற்காக பல்வேறு சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் வரமாகவும் பரிசாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர் மேரி பைபர் கூறுகிறார்.
ஆனால், இதே வயதில்தான், உடலளவில் ஏற்படும் மாற்றமான பருவமடைதல் நிகழ்வதால், அனைத்து விதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சராசரி வயதான 13 அல்லது 14 வயதில் பெண்குழந்தைகள் பருவமடைந்தாலே அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பக்குவமடைதலுக்கு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆகிவிடும். இந்நிலையில், எப்போதும் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் பருவமடைந்து விடுவதால், அப்பருவத்திற்கே உரிய இயற்கையான குணநலன்களையும், துறுதுறுவென்ற குழந்தைத் தன்மையையும் அவர்களும் அவர்களின் பெற்றேர்களும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.
மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தப் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய அன்றாட செயல்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற மனிதர்களிடம் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது.
மனநலம் தொடர்பான சிறுசிறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும் சிறுவயதில் பருவமடைந்த பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிலுள்ள குழந்தை 9 அல்லது 10 வயதில் பூப்படைந்து விட்டால், தனது குழந்தையும் அதே போல் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுவாளோ என்று பயந்து, அவர்களுக்குள்ளாகவே குழப்பிக்கொண்டு பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பருவமடைந்த பெண்களுக்கான முதல் உடலியங்கியல் பிரச்சினை என்பது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும், அதனால் ஏற்படும் வயிற்றுவலி, மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறுசிறு உடல் உபாதைகளும்தான். இவை, சரிவர கவனிக்கப்படாதபோது, உடலளவிலும் மனதளவிலும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
தற்போதைய காலத்தில், திருமணமான பெண்களே, மாதவிடாய் தொடர்பான நெருக்கடிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதுகுறித்து ஏதும் தெரியாத வெகுளித் தன்மையுடன் மேலும் இரண்டு, மூன்று வருடங்கள் கடக்க நேரிடுகிறது. சிறுவயதில் பருவமடைந்த பெண்குழந்தைகள் ஒவ்வொரு மாதவிடாயின்போதும், உடலளவில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பள்ளியிலும், மருத்துவமனையிலும் கண்கூடாகக் காணமுடிகிறது.
மாதவிடாயின்போது, சாதாரண அளவிற்கும் அதிகமான இரத்தப்போக்கு அல்லது மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது அல்லது அசாதாரண மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகள் இவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தியப் பெண்களில் 71 சதவிகிதத்தினருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை, அதுபற்றிய சரியான விழிப்புணர்வு கிடையாது என்ற கவலையளிக்கும் நிலையில், இச்சிறு குழந்தைகளுக்கு மாதவிடாய் மேம்பாடு பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும்? சிறு வயதிலேயே மாதவிடாய் வயிற்றுவலி, கர்ப்பப்பை சுவர் தடித்து விடுதல், சிறு சிறு நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களுக்காக மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது ஹார்மோன்களைத் தூண்டும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதுவும் பிற்காலத்தில், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடுகிறது.
இவ்வாறான அசாதாரண மாதவிடாய் இருக்கும் நிலையில், பதறிக்கொண்டு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், உணவுமுறை மாற்றத்தைக் கடைபிடிப்பதாலும், உடல் உறுப்புகள் நன்றாக இயங்கி, உடல் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அனைத்து நொதிகளும் ஹார்மோன்களும் கிடைக்குமாறு செய்வதும் பெற்றோர்களின் கடமையென உணரவேண்டும்.
ஒரு பெண் குழந்தைக்கு, பிறக்கும் போதே, 1 முதல் 2 மில்லியன் சினைமுட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும் நிலையில், பருவமடையும் வயதில், தோராயமாக 3 லட்சம் சினைமுட்டைகளே இருக்கின்றன. அப்பெண்ணின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளான மாதவிடாய், கர்ப்பகாலம் என்று கணக்கிடும்போது, அடுத்த 30 முதல் 40 வயது வரையில், இந்த சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, பின்னர் முழுவதும் தீர்ந்துவிடும் நிலையில்தான் மாதவிடாய் சுழற்சி நிற்கும்காலம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.
இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரியாக 45 முதல் 55 வயதாக முன்பு இருந்தது. பின்னர் 41 முதல் 49 வயதாகக் குறைந்தது. ஆனால், சமீபத்தில், பேராசிரியர் வி.கே.வி.ஆர். ராவ் அவர்களின் சமூக மற்றும் பொருளாராதார மாற்றத்திற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த மாதவிடாய் நிற்கும் காலம் 35 வயது முதல் 39 வயதாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையில், மாதவிடாய் நிற்கும் காலமும் 28 முதல் 35 வயதிற்குள் ஏற்பட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைப்பேறு ஏற்படும் வயதிலேயே சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, அப்பெண்ணின் இனப்பெருக்கத்திறனை பாதித்து, தாய்மையடைவதில் தாமதமோ அல்லது குழந்தைப்பேறு என்பதே இல்லாத நிலையோ உருவாகலாம் என்று மகப்பேறு இயல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறைந்துகொண்டு வரும் உடற்பயிற்சி, தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேரம் செலவழித்தல், அதிகரித்துவரும் மிதவாழ்க்கை முறை போன்றவை உடற்பருமனை அதிகரித்து வருகின்றன என்ற எச்சரிக்கைமணி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பதினோறு வயதில் 40 முதல் 45 கிலோ உடல் எடை இருக்க வேண்டிய பெண்குழந்தைகள் 50 கிலோவும் அதற்கு மேலும் இருப்பது தற்போது அதிகரித்துள்ளது. இடைப்பட்ட வளரிளம்பருவ வயதை அடையும்போதே, அதாவது 15 வயதில் 50 முதல் 52 கிலோ உடல் எடையும், 18 வயதில் 54 முதல் 56 கிலோ உடல் எடையும் இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் முறையே, 60 கிலோ மற்றும் 70 கிலோவிற்கும் கூடுதலாக இருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால், கர்ப்பப்பையில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான follicle stimulation hormone மற்றும் luteinizing hormone என்ற இரண்டையும் பாதிக்கிறது. இதுவும், சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளுக்கு சினைப்பை நோய்க்குறி றிசிளிஷி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.
சிறுவயதில் பருவமடைதலால் ஏற்படும் உடற்பருமன் ஒருபுறமிருக்க, அதிக உடற்பருமனாலும், சிறுவயதில் பருவமடைதல் நிகழ்கிறது என்ற இரண்டு வகையான நெருக்கடிகளையும் 9 முதல் 12 வயதுவரையுள்ள பெண்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சந்திக்கும் சூழல் உருவாகி இருப்பது வருதத்திற்குரியதே. என்றாலும், முறையான உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றால், குழந்தைப்பருவ வயதிற்குரிய சரியான உயரம், உடல் எடையைப் பராமரிக்கலாம். பெண் குழந்தைகளை நன்றாக விளையாட விடுவதால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகள் பலப்படுவதுடன், எண்ணங்கள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டு, மனநலனும் காக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் காய்கள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்தும் நுண்சத்துகளும் நிறைந்த உணவுகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே சரியான அளவில் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
வளரிளம்பருவப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக நலவழித்துறை, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுத்துவரும் செயல்பாடுகளை, 8 முதல் 12 வயது வரையிலுள்ள பெண்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் சமூகம் இருப்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால், பலவிதங்களில் நன்மை கிடைக்கும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக, சிறுவயது பூப்படைதல் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டு சரியான வயதில் பெண் குழந்தைகள் பருவமடைதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்.
தொடர்புக்கு: kuzhaliartcles2021@gmail.com
பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டால், இருபாலருக்கும் உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கியமான கவனிக்கத்தக்க உடலளவிலான மாற்றங்கள் பெண் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி விகிதமும் பருவப் பெண்களுக்கு வேகமாக நிகழ்கிறது. இந்த வயதில்தான் பெண்குழந்தைகள் பருவமடைகிறார்கள்.
பெண்குழந்தைகளின் பருவமடையும் வயது 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர், 14 முதல் 16 வயதாகத்தான் இருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் 12 மற்றும் 13 வயதில் பருவடைதல் ஏற்பட்டு, தற்போது 9 மற்றும் பத்து வயதாக மாறி இருப்பது கவலையளிக்கிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும், இன்றளவிலும் கிராமப்புறங்களிலுள்ள பெண்குழந்தைகள் 14 முதல் 16 வயதில்தான் பருவமடைகிறார்கள் என்பது சற்றே நிம்மதியளிக்கும் செய்திதான். இதற்கு மிக முக்கியக் காரணம், வாழ்க்கை முறையும் உணவும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு பெண்குழந்தையின் தாய் எந்த வயதில் பருவமடைந்தாரோ, அதே வயதில்தான் அவர்களுடைய பெண்ணும் பருவமடைவாள் என்பது வாய்மொழியாகக் கூறக்கேட்டதெல்லாம் இப்போது மாறிவிட்டது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், வளரிளம் பருவவயதுப் பெண்ணின் பாட்டியும், அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடைந்து இருந்தாலும், மகளும் அதே வயதில் பருவமடைவாள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது அப்பெண்ணின் உடல் வளர்ச்சி, சமூகப் பொருளாதார நிலை, பரம்பரையாக இருக்கும் உடல் ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது என்ற முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான புரத உணவு, தொடர்ச்சியான துரித உணவு என்று உணவுமுறை மாற்றமடைந்து இருப்பதும் ஒரு காரணம் என்று குழந்தைகள்நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கைக் கொடுக்கின்றனர். ஒருபுறம், சிறுவயதில் பூப்படைதலே தவிர்க்க முடியாத நிலையாக இருக்க, மறுபுறம் அப்பெண் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற அதிக அக்கறையில், அக்குழந்தையின் வயதுக்கேற்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான உணவும் ஊட்டமும் கொடுக்கப்படுகிறது என்ற நிலையும் இருக்கிறது. இதனால், அக்குழந்தை, 7 ஆம் வகுப்புப் படிக்கும்போதே, 13 அல்லது 14 வயதில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
சிறுவயதிலேயே பருவமடைதல் என்பது, அப்பெண்குழந்தையை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட உடல்நல சிக்கலல்ல. அவளுடைய பெற்றோர், பள்ளிச் சூழல், உறவினர்கள், சமூகம் என்று அனைத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு சிக்கலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையையும், உலகத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு நுழைவாயிலாகவே வளரிளம்பருவம் பார்க்கப்படுவதால், வளரிளம் பருவம் என்பது பெரும்பாலும் “வாய்ப்புகளின் வயது” என்று அழகாகக் கூறப்படுகிறது. உடலியங்கியல் மாற்றங்களுடன் சேர்ந்து சம அளவில் உளரீதியான மாற்றங்களும் ஏற்படும் மிக முக்கியமான மனிதவளர்ச்சி நிலைதான் இந்த வளரிளம்பருவம். உடல், மன, சமூக ரீதியான பல விஷயங்களுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் பல்வேறு நிலைகளில் தெளிவு கொடுக்கப்பட்டு, பக்குவப்படவேண்டிய வயதாகவும் இருக்கிறது.
“பருவ வயதில் தங்களுடைய உண்மையான, நம்பகத்தன்மையுள்ள, தீர்க்கமான நிலையை ஒரு பக்கம் ஒதுக்கி வைப்பதற்காக பல்வேறு சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் வரமாகவும் பரிசாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர் மேரி பைபர் கூறுகிறார்.
ஆனால், இதே வயதில்தான், உடலளவில் ஏற்படும் மாற்றமான பருவமடைதல் நிகழ்வதால், அனைத்து விதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சராசரி வயதான 13 அல்லது 14 வயதில் பெண்குழந்தைகள் பருவமடைந்தாலே அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பக்குவமடைதலுக்கு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆகிவிடும். இந்நிலையில், எப்போதும் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் பருவமடைந்து விடுவதால், அப்பருவத்திற்கே உரிய இயற்கையான குணநலன்களையும், துறுதுறுவென்ற குழந்தைத் தன்மையையும் அவர்களும் அவர்களின் பெற்றேர்களும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.
மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தப் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய அன்றாட செயல்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற மனிதர்களிடம் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது.
மனநலம் தொடர்பான சிறுசிறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும் சிறுவயதில் பருவமடைந்த பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிலுள்ள குழந்தை 9 அல்லது 10 வயதில் பூப்படைந்து விட்டால், தனது குழந்தையும் அதே போல் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுவாளோ என்று பயந்து, அவர்களுக்குள்ளாகவே குழப்பிக்கொண்டு பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பருவமடைந்த பெண்களுக்கான முதல் உடலியங்கியல் பிரச்சினை என்பது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும், அதனால் ஏற்படும் வயிற்றுவலி, மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறுசிறு உடல் உபாதைகளும்தான். இவை, சரிவர கவனிக்கப்படாதபோது, உடலளவிலும் மனதளவிலும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
தற்போதைய காலத்தில், திருமணமான பெண்களே, மாதவிடாய் தொடர்பான நெருக்கடிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதுகுறித்து ஏதும் தெரியாத வெகுளித் தன்மையுடன் மேலும் இரண்டு, மூன்று வருடங்கள் கடக்க நேரிடுகிறது. சிறுவயதில் பருவமடைந்த பெண்குழந்தைகள் ஒவ்வொரு மாதவிடாயின்போதும், உடலளவில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பள்ளியிலும், மருத்துவமனையிலும் கண்கூடாகக் காணமுடிகிறது.
மாதவிடாயின்போது, சாதாரண அளவிற்கும் அதிகமான இரத்தப்போக்கு அல்லது மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது அல்லது அசாதாரண மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகள் இவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தியப் பெண்களில் 71 சதவிகிதத்தினருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை, அதுபற்றிய சரியான விழிப்புணர்வு கிடையாது என்ற கவலையளிக்கும் நிலையில், இச்சிறு குழந்தைகளுக்கு மாதவிடாய் மேம்பாடு பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும்? சிறு வயதிலேயே மாதவிடாய் வயிற்றுவலி, கர்ப்பப்பை சுவர் தடித்து விடுதல், சிறு சிறு நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களுக்காக மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது ஹார்மோன்களைத் தூண்டும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதுவும் பிற்காலத்தில், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடுகிறது.
இவ்வாறான அசாதாரண மாதவிடாய் இருக்கும் நிலையில், பதறிக்கொண்டு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், உணவுமுறை மாற்றத்தைக் கடைபிடிப்பதாலும், உடல் உறுப்புகள் நன்றாக இயங்கி, உடல் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அனைத்து நொதிகளும் ஹார்மோன்களும் கிடைக்குமாறு செய்வதும் பெற்றோர்களின் கடமையென உணரவேண்டும்.
ஒரு பெண் குழந்தைக்கு, பிறக்கும் போதே, 1 முதல் 2 மில்லியன் சினைமுட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும் நிலையில், பருவமடையும் வயதில், தோராயமாக 3 லட்சம் சினைமுட்டைகளே இருக்கின்றன. அப்பெண்ணின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளான மாதவிடாய், கர்ப்பகாலம் என்று கணக்கிடும்போது, அடுத்த 30 முதல் 40 வயது வரையில், இந்த சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, பின்னர் முழுவதும் தீர்ந்துவிடும் நிலையில்தான் மாதவிடாய் சுழற்சி நிற்கும்காலம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.
இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரியாக 45 முதல் 55 வயதாக முன்பு இருந்தது. பின்னர் 41 முதல் 49 வயதாகக் குறைந்தது. ஆனால், சமீபத்தில், பேராசிரியர் வி.கே.வி.ஆர். ராவ் அவர்களின் சமூக மற்றும் பொருளாராதார மாற்றத்திற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த மாதவிடாய் நிற்கும் காலம் 35 வயது முதல் 39 வயதாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையில், மாதவிடாய் நிற்கும் காலமும் 28 முதல் 35 வயதிற்குள் ஏற்பட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைப்பேறு ஏற்படும் வயதிலேயே சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, அப்பெண்ணின் இனப்பெருக்கத்திறனை பாதித்து, தாய்மையடைவதில் தாமதமோ அல்லது குழந்தைப்பேறு என்பதே இல்லாத நிலையோ உருவாகலாம் என்று மகப்பேறு இயல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறைந்துகொண்டு வரும் உடற்பயிற்சி, தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேரம் செலவழித்தல், அதிகரித்துவரும் மிதவாழ்க்கை முறை போன்றவை உடற்பருமனை அதிகரித்து வருகின்றன என்ற எச்சரிக்கைமணி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பதினோறு வயதில் 40 முதல் 45 கிலோ உடல் எடை இருக்க வேண்டிய பெண்குழந்தைகள் 50 கிலோவும் அதற்கு மேலும் இருப்பது தற்போது அதிகரித்துள்ளது. இடைப்பட்ட வளரிளம்பருவ வயதை அடையும்போதே, அதாவது 15 வயதில் 50 முதல் 52 கிலோ உடல் எடையும், 18 வயதில் 54 முதல் 56 கிலோ உடல் எடையும் இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் முறையே, 60 கிலோ மற்றும் 70 கிலோவிற்கும் கூடுதலாக இருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால், கர்ப்பப்பையில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான follicle stimulation hormone மற்றும் luteinizing hormone என்ற இரண்டையும் பாதிக்கிறது. இதுவும், சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளுக்கு சினைப்பை நோய்க்குறி றிசிளிஷி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.
சிறுவயதில் பருவமடைதலால் ஏற்படும் உடற்பருமன் ஒருபுறமிருக்க, அதிக உடற்பருமனாலும், சிறுவயதில் பருவமடைதல் நிகழ்கிறது என்ற இரண்டு வகையான நெருக்கடிகளையும் 9 முதல் 12 வயதுவரையுள்ள பெண்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சந்திக்கும் சூழல் உருவாகி இருப்பது வருதத்திற்குரியதே. என்றாலும், முறையான உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றால், குழந்தைப்பருவ வயதிற்குரிய சரியான உயரம், உடல் எடையைப் பராமரிக்கலாம். பெண் குழந்தைகளை நன்றாக விளையாட விடுவதால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகள் பலப்படுவதுடன், எண்ணங்கள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டு, மனநலனும் காக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் காய்கள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்தும் நுண்சத்துகளும் நிறைந்த உணவுகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே சரியான அளவில் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
வளரிளம்பருவப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக நலவழித்துறை, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுத்துவரும் செயல்பாடுகளை, 8 முதல் 12 வயது வரையிலுள்ள பெண்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் சமூகம் இருப்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால், பலவிதங்களில் நன்மை கிடைக்கும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக, சிறுவயது பூப்படைதல் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டு சரியான வயதில் பெண் குழந்தைகள் பருவமடைதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்.
தொடர்புக்கு: kuzhaliartcles2021@gmail.com
பெண்கள் இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம்
தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக தோல்நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொடர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல.
இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.
உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.
மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும்.
தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும். பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும்.
சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பலகாலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்றும் சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம். மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது.
இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.
உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.
மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும்.
தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும். பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும்.
சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பலகாலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்றும் சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம். மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது.
இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.






