என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
X
கோடை காலத்திற்கு ஏற்ற ஆடைகள்..
Byமாலை மலர்19 May 2022 3:35 AM GMT (Updated: 19 May 2022 3:35 AM GMT)
வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். இப்படியான சூழலில், நாம் அணியும் ஆடைகள் மூலம் சிறிதளவு குளிர்ச்சியை உணர முடியும்.
அக்கினி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில், பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். இப்படியான சூழலில், நாம் அணியும் ஆடைகள் மூலம் சிறிதளவு குளிர்ச்சியை உணர முடியும். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தை காப்பதில், ஆடைகளின் வகை மற்றும் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
கோடையில் வெளிர் நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது உடலின் வெப்பத்தை எளிதில் வெளியேற்றும். வெளிப்புற வெப்பத்தை, உடல் அதிகமாக உட்கிரகிக்காமல் தடுக்கும். இதனால் உடலின் இயல்பான குளுமையை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும். வெளிர் நிற ஆடைகள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலை நீக்கும்.
வெளிர் நிற சருமம் கொண்டவர்கள், பேஸ்டல் நிறங்களின் கலவையான டார்க்காய்ஸ், கேண்டி பிங்க், லெமன் யெல்லோ மற்றும் பெய்ஜ் போன்ற வண்ணங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது.
அடர் நிற சருமத்தினர், வெளிர் நிறங்களான இளஞ்சிவப்பு, லாவண்டர் புளூ, காட்டன் கேண்டி பேபி புளூ, இளந்தளிர் பச்சை, கிரீம் யெல்லோ, லிப்லாஸ் பிங்க், இளநீர் வெள்ளை மற்றும் டால்பின் கிரே போன்ற நிறங்களில் ஆடைகள் அணியலாம். தவிர, பருத்தி, லினன், ராயன், டிமின் போன்ற ஆடை வகைகளை கோடையில் பயன்படுத்தலாம்.
கோடையில் வெளிர் நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது உடலின் வெப்பத்தை எளிதில் வெளியேற்றும். வெளிப்புற வெப்பத்தை, உடல் அதிகமாக உட்கிரகிக்காமல் தடுக்கும். இதனால் உடலின் இயல்பான குளுமையை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும். வெளிர் நிற ஆடைகள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலை நீக்கும்.
வெளிர் நிற சருமம் கொண்டவர்கள், பேஸ்டல் நிறங்களின் கலவையான டார்க்காய்ஸ், கேண்டி பிங்க், லெமன் யெல்லோ மற்றும் பெய்ஜ் போன்ற வண்ணங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது.
அடர் நிற சருமத்தினர், வெளிர் நிறங்களான இளஞ்சிவப்பு, லாவண்டர் புளூ, காட்டன் கேண்டி பேபி புளூ, இளந்தளிர் பச்சை, கிரீம் யெல்லோ, லிப்லாஸ் பிங்க், இளநீர் வெள்ளை மற்றும் டால்பின் கிரே போன்ற நிறங்களில் ஆடைகள் அணியலாம். தவிர, பருத்தி, லினன், ராயன், டிமின் போன்ற ஆடை வகைகளை கோடையில் பயன்படுத்தலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X