search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை அழகு"

    • பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது.
    • சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.

    பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது. பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம். 10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும். இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. இந்த மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.

    கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
    குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு அடியெடுத்து வைக்கும்போது சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கதகதப்பான கம்பளி போர்வை, துணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மென்மையான பருத்தி ஆடைகளை தழுவ வேண்டி யிருக்கும். கோடை காலமும்.. சரும அழகும்..!

    சூப்கள் போன்ற சூடான பானங்களுக்கு மாற்றாக பழச்சாறுகள், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டியிருக்கும். ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவத்திற்கு மாறும்போது சரும பராமரிப்பு முறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரிய ஒளி பல மடங்கு அதிகரித்து, வெப்பநிலை மாறுவது சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    குளிர்காலத்தில், கிரீம் கலந்த பேஸ் வாஷ்களை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்திருக்கலாம். ஆனால் கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளிப்படும். அது சருமத்தில் சுரந்து கொண்டே இருக்கும். அதனை போக்குவதற்கு ஜெல் அடிப்படையிலான கிளின்சர்களை தேர்வு செய்யலாம். எனினும் தோல் வகைக்கு ஏற்ப சரும பராமரிப்பு பொருளை தேர்வு செய்ய வேண்டும்.

    தோல் வகை மற்றும் தேவையை பொறுத்தே உபயோகிக்க வேண்டும். கோடைகாலத்தில் கடைப்பிடிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான விஷயம் முகம் கழுவுவது. சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை அகற்றுவதற்கு முகத்தை இரண்டு முறை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும்.

    குளிர்காலத்தில், ஈரப்பதத்தை சீராக பராமரிக்க கனமான மாய்ஸ்சுரைசர்களை தேர்வு செய்திருப்போம். ஆனால் கோடையில் அது ஒத்துக்கொள்ளாது. ஏனெனில் இந்த சீசனில் அதிகமாக வியர்க்கும். அதனை கவனத்தில் கொள்ளாமல் கிரீம்களை பயன்படுத்தினால் முகப்பருக்கள் ஏற்படலாம். எனவே, கோடை காலத்தில் இலகுவான லோஷன்களுக்கு மாற வேண்டும். இந்த கோடையில் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மற்றொரு தோல் பராமரிப்பு பொருள், சீரம் ஆகும். இவை நீர் தன்மை கொண்டவை. சருமத்தில் எண்ணெய் பசை தன்மையையும் உணராதவை. சருமத்துக்குள் நன்றாக ஊடுருவி, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதற்கு உதவும். மீண்டும், உங்கள் தோல் வகை மற்றும் தேவைக்கு ஏற்ப சீரம்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கோடை காலம், குளிர் காலம் மட்டுமின்றி அனைத்து பருவங்களிலும் தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். அதிலும் கோடையில் சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப நல்ல சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

    மேலும் கோடை காலத்தில், மாய்ஸ்சுரைசிங் செய்வதை விட ஜெல் அடிப் படையிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கோடையில் அதிகமாக வியர்க்கும்போது, சருமத்தில் இருந்து சன்ஸ்கிரீன் அப்புறப்படுத்தப்படலாம். எனவே அதனை அடிக்கடி உபயோகிப்பது நல்லது. அதிலும் வெளி இடங்களுக்கு சென்றால் வழக்கத்தை விட இரண்டு, மூன்று முறை கூடுதலாக தடவலாம்.

    இவை தவிர, உடலில் நீர்ச்சத்தின் அளவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றுள் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முக்கியமானது. எனவே, சரிவிகித உணவைப் பின்பற்றுங்கள். வானிலைக்கு ஏற்ற லேசான பருத்தி ஆடைகளை அணியுங்கள். மேக்கப்பை பொறுத்தவரை, இந்த பருவத்திற்கு ஏற்ற ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்யுங்கள்.
    ×