என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்

X
அல்வா ஸ்டஃப்டு பூரி
அல்வா ஸ்டஃப்டு பூரி
By
மாலை மலர்4 April 2022 9:26 AM GMT (Updated: 4 April 2022 9:26 AM GMT)

குழந்தைகளுக்கு அல்வா ஸ்டஃப்டு பூரி மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 250 கிராம்
பாதாம்(ஊற வைத்தது) - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
கோவா - 100 கிராம்
பால் - 3 கப்
நெய் - 1 கப்
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 350 கிராம்
மைதா - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கடலை பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்ற குழையும் வரை வேக வைக்கவும்.
ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு ஊறவைத்த பாதாமை விழுதாக தனியே அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உலர்ந்த திராட்சையை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற அதில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பின்பு அதில் துருவிய தேங்காய், பாதாம் விழுது, கோவா, பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலநது மிதமான தீயில் கிளறவும்.
பிறகு தீயை அணைத்து வறுத்து வைத்திருந்த திராட்சையை கலந்து ஆற விடவும்.
மைதாவை பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு 1 டேபிள் ஸ்பூன் நெய், அரை கப் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி அதற்குள் கடலை பருப்பு அல்வாவை வைத்து மூடவும்.
ஓரங்களில் தண்ணீர் தடவி சோமாஸ் போல் மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூடான சுவையான அல்வா பூரி ரெடி.
கடலை பருப்பு - 250 கிராம்
பாதாம்(ஊற வைத்தது) - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
கோவா - 100 கிராம்
பால் - 3 கப்
நெய் - 1 கப்
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 350 கிராம்
மைதா - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கடலை பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்ற குழையும் வரை வேக வைக்கவும்.
ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு ஊறவைத்த பாதாமை விழுதாக தனியே அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உலர்ந்த திராட்சையை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற அதில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பின்பு அதில் துருவிய தேங்காய், பாதாம் விழுது, கோவா, பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலநது மிதமான தீயில் கிளறவும்.
பிறகு தீயை அணைத்து வறுத்து வைத்திருந்த திராட்சையை கலந்து ஆற விடவும்.
மைதாவை பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு 1 டேபிள் ஸ்பூன் நெய், அரை கப் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி அதற்குள் கடலை பருப்பு அல்வாவை வைத்து மூடவும்.
ஓரங்களில் தண்ணீர் தடவி சோமாஸ் போல் மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூடான சுவையான அல்வா பூரி ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
