search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    அல்வா ஸ்டஃப்டு பூரி
    X
    அல்வா ஸ்டஃப்டு பூரி

    அல்வா ஸ்டஃப்டு பூரி

    குழந்தைகளுக்கு அல்வா ஸ்டஃப்டு பூரி மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - 250 கிராம்
    பாதாம்(ஊற வைத்தது) - 50 கிராம்
    தேங்காய் - அரை மூடி (துருவியது)
    கோவா - 100 கிராம்
    பால் - 3 கப்
    நெய் - 1 கப்
    உலர்ந்த திராட்சை - 50 கிராம்
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    சர்க்கரை - 350 கிராம்
    மைதா - 250 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    கடலை பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்ற குழையும் வரை வேக வைக்கவும்.

    ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஊறவைத்த பாதாமை விழுதாக தனியே அரைத்து எடுத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உலர்ந்த திராட்சையை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற அதில் அரைத்து வைத்திருந்த கடலை பருப்பு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    பின்பு அதில் துருவிய தேங்காய், பாதாம் விழுது, கோவா, பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலநது மிதமான தீயில் கிளறவும்.

    பிறகு தீயை அணைத்து வறுத்து வைத்திருந்த திராட்சையை கலந்து ஆற விடவும்.

    மைதாவை பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு 1 டேபிள் ஸ்பூன் நெய், அரை கப் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி அதற்குள் கடலை பருப்பு அல்வாவை வைத்து மூடவும்.

    ஓரங்களில் தண்ணீர் தடவி சோமாஸ் போல் மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூடான சுவையான அல்வா பூரி ரெடி.
    Next Story
    ×