என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் சேமியா கொழுக்கட்டை
Byமாலை மலர்9 July 2021 9:39 AM GMT (Updated: 9 July 2021 9:39 AM GMT)
சேமியாவில் கிச்சடி, உப்புமா,பாயாசம் போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க.இன்று வித்தியாசமாக சேமியாவில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 200 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
காய்ச்சிய பால் - 2 கப்
அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
பெ.வெங்காயம் - 4 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை, கடுகு, எள் - சிறிதளவு
சீரகம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து அரை மணி நேரம் பாலில் ஊற வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் வாணலியை இறக்கிவிட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் பாலில் ஊறிய சேமியா, அரிசி மாவு, எள், சீரகம், உப்பு ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.
சேமியா - 200 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
காய்ச்சிய பால் - 2 கப்
அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
பெ.வெங்காயம் - 4 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை, கடுகு, எள் - சிறிதளவு
சீரகம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து அரை மணி நேரம் பாலில் ஊற வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் வாணலியை இறக்கிவிட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் பாலில் ஊறிய சேமியா, அரிசி மாவு, எள், சீரகம், உப்பு ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X