என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் டிலைட்
Byமாலை மலர்8 July 2021 9:36 AM GMT (Updated: 8 July 2021 9:36 AM GMT)
கேரட்டில் பாயாசம், அல்வா. ஜூஸ் போன்ற சத்தான உணவு வகைகளை சுவையாக தயார் செய்து அனைவரையும் கவர முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கேரட் டிலைட்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய கேரட் - அரை கிலோ
சர்க்கரை - அரை கப்
சோள மாவு - கால் கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க தேவையான பொருட்கள்
கொப்பரை தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
குக்கரில் நறுக்கிய கேரட்டை போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். கேரட் ஆறியவுடன் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, சோள மாவு கலந்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும். பின்பு அதை கேரட் விழுதுடன் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேரட் கலவையை அதில் கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
அவ்வப்போது சிறிது நெய் சேர்ப்பதுடன் பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாதவாறும் கிளறி விட வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை நன்றாக திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் பரவலாக கலவையை கொட்டவும். சிறிது நேரத்தில் சூடு ஆறியதும் தேவையான வடிவத்தில் அதை துண்டு போட்டு கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய் பொடி மற்றும் பொடித்த சர்க்கரையை ஒன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள துண்டுகளின் மீது அதை தூவினால் சுவையான கேரட் டிலைட் தயார்.
நறுக்கிய கேரட் - அரை கிலோ
சர்க்கரை - அரை கப்
சோள மாவு - கால் கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க தேவையான பொருட்கள்
கொப்பரை தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
குக்கரில் நறுக்கிய கேரட்டை போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். கேரட் ஆறியவுடன் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, சோள மாவு கலந்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும். பின்பு அதை கேரட் விழுதுடன் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேரட் கலவையை அதில் கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
அவ்வப்போது சிறிது நெய் சேர்ப்பதுடன் பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாதவாறும் கிளறி விட வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை நன்றாக திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் பரவலாக கலவையை கொட்டவும். சிறிது நேரத்தில் சூடு ஆறியதும் தேவையான வடிவத்தில் அதை துண்டு போட்டு கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய் பொடி மற்றும் பொடித்த சர்க்கரையை ஒன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள துண்டுகளின் மீது அதை தூவினால் சுவையான கேரட் டிலைட் தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X