என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அருமையான காளான் முட்டை மசாலா
Byமாலை மலர்11 Jan 2020 8:32 AM GMT (Updated: 11 Jan 2020 8:32 AM GMT)
தோசை, நாண், சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட காளான் முட்டை மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
பட்டை - ஒன்று
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 2
தக்காளி - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
காளான் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
பட்டை - ஒன்று
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 2
தக்காளி - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
இதை சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X