
சேமியா - 1 கப்
நெய் - 25 கிராம்
லிட்டர் பால் - 400 மில்லி
சர்க்கரை - 5டி கிராம்
ஏலக்காய் - 3
கிராம்பு - 2
பாதாம் - 20 கிராம்
உலர் திராட்சை - தேவையான அளவு

செய்முறை
சேமியாவை கைகளால் உடைத்துக் கொள்ளவும்.
பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.
சூடான தண்ணீரில் உலர் திராட்சையை ஊற வைக்கவும்.
நெய்யில் கிராம்பு, ஏலக்காய் வறுக்கவும்.
அடுத்து அதில் சேமியாவை சேர்த்து வறுக்கவும். பிரவுன் நிறத்தில் வறுக்க வேண்டியது அவசியம்.
அடுத்து அதில் பாலை ஊற்றி கொதிக்கவைக்கவும்..
கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து வேகவைக்கவும். பால் திக்காக்கும் வரை வேக வைக்க வேண்டியது அவசியம்
சர்க்கரை மற்றும் உலர் திராட்சையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கவும்.
சூடு ஆறிய பின் பரிமாறவும்.