என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவை நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும்
    • 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன

    உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பும் சர்க்கரையும் அத்தியாவசிய சமையல் பொருட்களில் பிரதானமானது. இந்தியாவில் விற்பனையாகும் அத்தகு உப்பிலும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு நடந்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்டு சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

     

    தூள் உப்பு, கல் உப்பு என இரண்டிலும் இந்த துகள்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும், கடைகளிலும் வாங்கிய சர்க்கரை உப்பு வகைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

    ஒரு கிலோ தூள் உப்பான அடியோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. மேலும் ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன.  இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 0.1 mm முதல் 5 mm அளவில் காணப்படுகின்றன. 

    • வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    • பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.

    * தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

    * பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

    * தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

    * சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

     

    * பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

    * ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

    * இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

    * ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
    • எரிவாயுவை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

    இன்று பெரும்பாலானோர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றனர். இந்தநிலையில் சில விஷயங்களைப் பின்பற்றினால், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த முடியும்..

    * சமையல் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை எரிவாயு அடுப்பின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு சமையல் பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    * சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ஒரே சமயத்தில் பருப்பையும், அரிசியையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.

    * சமையல் பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் தீப்பிழம்பை குறைத்து வைத்தால் எரிவாயு குறைவாக காலியாகும்.

    * உணவுப்பொருட்கள் வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால், எரிவாயு அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்தினால் எரிவாயு அதிகம் காலியாகாது.

    அடுப்பு சரியாக எரியவில்லை என்று எரிவாயு வரும் பர்னரை குத்தி குத்தி பெரிது செய்தால், பிழம்பு சிவப்பாக எரியும், எரிவாயுவும் வீனனாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி.
    • தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள்.

    இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. ஆனால் பிரியாணி பிரியர்கள் எல்லோரும் தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள். நீங்கள் பிரமாதமான பிரியாணியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த குறிப்பை பின்பற்றுங்கள்...

    * எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்தால் பிரியாணி திகட்டாது. நெய் மட்டுமே சேர்த்தால் திகட்டும். எண்ணெய் மட்டுமே சேர்த்தால் பிரியாணி கமகமக்காது.

    * பிரியாணி செய்யும் போது, ஈரல் இல்லாமல் இறைச்சி மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஈரல் இருந்தால் பிரியாணி ருசிக்காது.

    * சிக்கன் பிரியாணிக்கு ஏலம், கிராம்பு தாளிக்க வேண்டாம். திகட்டும்.

    * சிக்கன் பிரியாணியில் தயிர்தான் சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால், மட்டன் பிரியாணியில் சேர்க்க வேண்டும்.

    * இறால் பிரியாணிக்கு கொத்தமல்லி, புதினா சேர்க்கக்கூடாது. கறிவேப்பிலை மட்டும்தான்.

    * குக்கரில் பிரியாணி செய்யும்போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி மூடினால் பிரியாணி உதிரியாக வரும். குழைந்துபோகாது.

    * புதிதாக பிரியாணி செய்பவர்கள் பிரியாணி உதிரி உதிராக வர வேண்டுமென்றால் சாதத்தை தனியாக வடித்து 'கிரேவி'யுடன் கலக்க வேண்டும்.

    * பாசுமதி அரிசியை தனியாக வேகவைத்து வடிக்கும்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    * 'தம்' போடுவது பிரியாணியின் ருசியை அதிகரிக்கும். அடுப்பின் மேல் தோசைக்கல்லை வைத்து, அதன் மேலே இறுக மூடிய பிரியாணி பாத்திரத்தை வைத்து 'தம்' போடலாம்.

    * புலாவ் செய்வதற்கு அரிசி அரைவேக்காடும். பிரியாணி செய்வதற்கு அரசி முக்கால்வேக்காடும் வெந்திருக்க வேண்டும்.

    * இறைச்சியை போட்டபிறகுதான் இஞ்சி- பூண்டு விழுதை போட்டு வதக்க வேண்டும். முன்னாடியே போட்டால் விழுது, பாத்திரத்திலேயே ஒட்டிக் கொள்ளும்.

    * பிரைடு ரைஸ் செய்யும்போது ஒரு 'கப்' அரிசிக்கு அரை 'கப்' தண்ணீரும், பிரியாணிக்கு 2 'கப்' தண்ணீரும் அவசியம்.

    * பாசுமதி அரிசியை பிசைந்து கழுவாதீர்கள். அரிசி உடைந்துவிடும். அரிசியின் வாசமும் போய்விடும்.

    * பிரியாணி கமகமவென்று இருக்க வேண்டும் என்பவர்கள் பிரியாணி எசன்ஸ்' தெளித்துக் கொள்ளலாம்.

    • தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    • நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்க வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    அவல் - 2 கப்

    நாட்டு சர்க்கரை - 1 கப்

    பால் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1/4 கப்

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    பாதாம் - 10

    முந்திரி, திராட்சை - 10

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். நெய்யில் அவலை சேர்த்து கலர் மாறாமல் வறுத்து எடுக்க வேண்டும். அவல் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பொடித்த அவல் பொடியுடன், வறுத்த தேங்காயை சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்க வேண்டும்.

    அத்துடன் பொடித்த அவல், தேங்காய் பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் லேசாக வறுக்க வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு நெய், பால் சேர்த்து நன்கு பிசைந்து விருப்பப்படி உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

    சுவையான சிகப்பு அவல் லட்டு தயார்.

    • ப்ரோக்கோலியைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.
    • பால் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    ப்ரோக்கோலி - 2 கப் பூக்களாக வெட்டப்பட்டது

    ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1 சிறியதாக நறுக்கியது

    பூண்டு - 2 பல் பொடியாக நறுக்கியது

    தண்ணீர் - 2 கப்

    பால் - ½ கப்

    கார்ன்ஃப்ளார் / சோள மாவு - 1 டீஸ்பூன்

    சுவைக்கு உப்பு

    ருசிக்க மிளகு

    செய்முறை:

    * ப்ரோக்கோலியை சிறிய துருவங்களாக நறுக்கி நன்கு கழுவவும்.

    * ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளாரை எடுத்து அதனுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

    * இப்போது அதில் ப்ரோக்கோலியைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.

    * இப்போது 2 கப் தண்ணீர் சேர்த்து, ப்ரோக்கோலி சமைத்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்.

    * இப்போது இதை ஒரு பிளெண்டரில் எடுத்து மென்மையான வரை ப்யூரி செய்யவும்.

    * இதை மீண்டும் அதே கடாயில் ஊற்றவும், தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    * பால் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * இப்போது சுவைக்க உப்பு மற்றும் மிளகு சேர்த்து சூடாக பரிமாறவும்.

    • அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
    • சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவை – 1 கப்

    நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

    பால் – 1 1/4 கப்

    சர்க்கரை – 1 1/2 கப்

    தண்ணீர் – 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் – 1 1/4 டீஸ்பூன்

    கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை :

    • முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். அதில் 1 கப் ரவையை சேர்த்து 4-5 நிமிடத்திற்கு அதில் உள்ள பச்சை வாசம் போகின்ற அளவுக்கு மட்டும் வறுத்துக் கொள்ளவும்.

    • இதனுடன் 1 கப் அளவுக்கு பாலை ஊற்றி நன்கு வேகவிடவும். பின்னர் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். சூடு ஆறியவுடன் அதனுடன் மீதமுள்ள 1/2 கப் பால், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து இதனை நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    • பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 1/2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

    • ஓரளவு கொதித்து ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாக சர்க்கரை பாகுபோலவும் இல்லாமல் குலாப்ஜாமுனின் மேலே ஊற்றக்கூடிய ஜீரா போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    • பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் குலாப்ஜாமூன் உருண்டைகளை பொரிக்கின்ற அளவுக்கு எண்ணெயை ஊற்றி அதில் நாம் முன்பு உருட்டி வைத்திருந்த உருண்டைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

    • பொரித்து எடுத்த அனைத்து உருண்டைகளையும் செய்து வைத்துள்ள சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

    இப்பொழுது நமது மிகவும் சுவையான மற்றும் மிருதுவான ரவை குலாப்ஜாமூன் ரெடி..!

    • கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
    • பின்பு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    தட்டைப்பயிறு - 150 கிராம்

    கத்திரிக்காய் - 2

    சின்ன வெங்காயம் - 15

    பூண்டு - 10 பல்

    குழம்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்

    புளி - நெல்லிக்காய் அளவு

    நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்

    கருவேப்பிலை - சிறிதளவு

    தாளிப்பதற்கு - கடுகு வெந்தயம் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

    மிளகு - 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 2

    தேங்காய் நறுக்கியது - ஒரு கைப்பிடி அளவு

    செய்முறை:

    * தட்டப்பயிறு எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    * 15 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * ஊறவைத்த தட்டப்பயிறு அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    * கடாய் அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு இரண்டு சின்ன தக்காளி சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு இதனுடன் தேங்காயும் சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.

    * இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    * கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காய்த்தூள் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

    * இதனுடன் கத்தரிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கி விட்டு அதனுடன் புளித்தண்ணீர் தட்டைப்பயிறு வேகவைத்த தண்ணீர் சேர்த்து கத்தரிக்காயை வேக வைக்கவும்.

    * அரைத்த மசாலா விழுது சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு 2 டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட்டு அதனுடன் தட்டைப்பயிறு சேர்த்து அதையும் கொதிக்கவிட்டு இறக்கினால் மிகவும் சுவையான தட்டைப்பயிறு குழம்பு ரெடி.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.
    • முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது, 1 குழி கரண்டி இட்லி மாவு சேர்த்து கலந்து பஜ்ஜி சுட்டு பாருங்க, சுவையா இருக்கும்.

    • பூரிக்கு மாவு பிசையும் போது 1/2 ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து பிசைந்தால், நீண்ட நேரம் பூரி உப்பலாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.

    • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் முகத்துக்கு போடும் பவுடரை போட்டு, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் சமையலறையில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.

    • அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரை கீழே கொட்டாதிங்க. நீங்கள் வைக்கும் புளிக்குழம்பில், இந்த அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டால் குழம்பு திக்காகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் கிடைக்கும்.

    • உதிர்த்து வைத்திருக்கும் பூண்டுடன் உருளைக்கிழங்கை வைத்தால், சீக்கிரம் முளைத்து வராமல் இருக்கும்.

    • குழம்பு கொதிக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுடுதண்ணீரை மட்டுமே ஊற்றவும். அப்போதுதான் குழம்பின் சுவை மாறாது.


    • முட்டைகோஸ் பொரியல் தாளிக்கும் போது கடுகு, வரமிளகாயோடு சேர்த்து, கொஞ்சம் துருவிய இஞ்சி, 2 கிராம்பு சேர்த்துக்கோங்க. முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் கோலி குண்டு சைஸ் புளி சேர்த்து அரைத்தால், சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.

    • கடாயில் இருந்து அந்த பொரியலை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதன் மேலே 1 பிரட்டை வைத்து, மூடி போட்டு 1/2 மணி நேரம் கழித்து, அந்த பிரட் துண்டை எடுத்து விட்டால், பொரியலில் தீய்ந்த வாடை வீசாது.


    • 1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் 10 மணி நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்.

    • பூண்டை குக்கரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 5 - 6 விசில் விட்டு வேக வைத்து கடைந்து, பூண்டு குழம்பு வைத்தால், ஒரு பூண்டு கூட ஒதுக்கி வைக்க மாட்டாங்க.

    • புளித்த தோசை மாவின் மேலே பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் தூவி, இட்லி பொடியையும் தூவி, நெய்விட்டு மிதமான தீயில் ஓரம் எல்லாம் முறுகலாக வரும்படி சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்
    • ஆடி மாதம் என்பதால் இந்த பொங்கலை அம்மனுக்கும் படைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஜவ்வரிசி - 1 கப்

    ரவை - 1 கப்

    பால் - 2 கப்

    வெல்லம் - 2 கப்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி - 10

    திராட்சை - 15

    செய்முறை:

    * ஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    * பின்னர் ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊறி அதனுடன் வெல்லத்தை சேர்ந்து பாகு எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * நன்கு கொத்தித்த பாலில் வறுத்து வைத்துள்ள ரவை, ஜவ்வரிசியை சேர்க்கவும்.

    * அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்

    * ரவை மற்றும் ஜவ்வரிசி கெட்டியான பதம் வந்தவுடன் எடுத்து வைத்த வெல்லப்பாகை அதில் ஊற்றி நன்கு கிளறவும்.

    * பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.

    * ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொறியவிடவும்.

    * பொறிந்த முந்திரி திராட்சையை தயாரித்து வைத்துள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும்.

    * இதோ சுவையான ஜவ்வரிசி பொங்கல் ரெடி.

    * ஆடி மாதம் என்பதால் இந்த பொங்கலை அம்மனுக்கும் படைக்கலாம்.

    • புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    • நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் – ½ கிலோ

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

    வெந்தயம் – ½ ஸ்பூன்

    பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்

    புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு

    நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

    கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    உப்பு – தேவையான அளவு

    மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

    மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்

    பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    • சின்ன வெங்காயத்தை நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

    • பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ½ டீஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


    • புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    • பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடுபடுத்தவும்.

    • எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    • வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    • பிறகு 1½ டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

    • தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

    • இரண்டு நிமிடம் கழித்து ஓரு ஸ்பூன் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் வேகவைத்தால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.

    குறிப்பு: இந்த வெங்காயம் தொக்கு செய்ய சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். மேலும் புளி ஊறவைக்கும் போது தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி ஊறவைக்கவும். நிறைய ஊற்றிவிட வேண்டாம்.

    • ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
    • தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கத்தரிக்காய்– 1/4 கிலோ

    எண்ணெய்- 2 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    பட்ட மிளகாய்- 2

    சீரகம்- 1 ஸ்பூன்

    பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    புளி கரைசல்- 1/2 கப்

    வெங்காயம்- 1

    பச்சை மிளகாய்- 2

    வெல்லம்- 2 ஸ்பூன்

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    செய்முறை:

    * முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.

    * பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

    * இப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.

    * நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    * பிறகு, இதனுடன் நச்சு எடுத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

    * இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.

    * இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

    * இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.

    ×