என் மலர்
நீங்கள் தேடியது "வெந்தயக்கீரை ரெசிப்பி"
- வயிற்று கோளாறுகளை சரிசெய்து மலச்சிக்கலையும் போக்கும்.
- உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது.
வெந்தய கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது. வெந்தய கீரையில் சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் ஏ.பி.சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வயிற்று கோளாறுகளை சரிசெய்து மலச்சிக்கலையும் போக்கும்.

கசப்பான ருசியை தந்தாலும், உணவு பதார்த்தங்களில் கலக்கும் போது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சிறந்த ருசியையும், மணத்தையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை-1 கட்டு
பட்டாணி- 50 கிராம் (ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளுங்கள்)
வெண்ணெய்- 3 ஸ்பூன்
பால்- 100 மி.லி
கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
சர்க்கரை- 1 ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம் 1
முந்திரி பருப்பு 5
பச்சைமிளகாய் 4
இஞ்சி சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு- 2

செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு காய்ந்ததும் வெங்காயத்தை நறுக்கிப்போடுங்கள். முந்திரி பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்றவைகளையும் கலந்து நன்றாக வதக்க வேண்டும். ஆறிய பின்னர் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தை தாளித்து, வெந்தய கீரை மற்றும் வேக வைத்த பட்டாணியையும் அதில் சேர்க்க வேண்டும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். சிறு தீயில் வேகவைத்து இறுதியாக பாலையும் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்த பின்பு உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
இந்த பட்டாணி பால் கூட்டு சப்பாத்திக்கு அதிக சுவை தரும்.
- உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கும் குணம் உண்டு.
- சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
வெந்தய கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது. வெந்தய கீரையில் சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் ஏ.பி.சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் இந்த கீரை மலச்சிக்கலையும் போக்கும்.

உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. ஜீரணத்தை சரிசெய்யவும், உடலில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தவும் இதனால் முடியும்.
இளம் பெண்களுக்கு உடல்சூடு காரணமாக தலையில் பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும். இதற்கு உணவில் வெந்தய கீரையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெந்தய கீரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். தாதுகளுக்கு பலத்தை கொடுக்கும். இந்த கீரை சற்று கசப்பான ருசியை தந்தாலும், உணவு பதார்த்தங்களில் கலக்கும் போது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சிறந்த ருசியையும், மணத் தையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
வெந்தயகீரை- 1 கட்டு (சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்)
கோதுமை மாவு- 100 கிராம்
கடலை மாவு- 100 கிராம்
பச்சைமிளகாய் 2
இஞ்சி- சிறுதுண்டு
மஞ்சள்தூள்- 1/ 2 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 1/ 2 தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு
சர்க்கரை- 1 தேக்கரண்டி
தயிர்- 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு-1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி

செய்முறை:
பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தய கீரை, தயிர், உப்பு, எண்ணெய், எலுமிச்சை சாறு, சர்க்கரை போன்ற கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து இந்த கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது நீர்விட்டு நன்கு பிசைந்து, நீன்கள் விரும்பும் கட்லெட் வடிவத்தில் தயார் செய்யலாம். அதனை இட்டிலிதட்டில் வைத்து வேக வைக்க வேண்டும்.
அதன்பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து கலக்க வேண்டும். வேகவைத்து எடுத்துள்ள கட்லெட்களை அதில் போட்டு சிறு தீயில் லேசாக கிளறி எடுக்கலாம்.
மேலும் இதனை குழந்தைகளுக்கு பிடித்தமான மாலை நேர உணவாக கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.






