search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
    X
    வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்

    வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்

    நவராத்திரி பலகாரமாக இன்று வெள்ளை பட்டாணியில் மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று சுண்டலை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை பட்டாணி - ஒரு கப்
    உப்பு - தேவைகேற்ப
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
    தனியா - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கறிவேபில்லை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - ஒன்று

    செய்முறை

    வெள்ளை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்

    பிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.

    பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

    சுவையான வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×