என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தினை அரிசி காய்கறி கிச்சடி
Byமாலை மலர்26 Sep 2020 4:29 AM GMT (Updated: 26 Sep 2020 4:29 AM GMT)
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறி சேர்த்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி),
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1 ,
கறிவேப்பிலை - 1 இனுக்கு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ப.மிளகாய், வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும்போது தினை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
தினை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி),
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1 ,
கறிவேப்பிலை - 1 இனுக்கு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ப.மிளகாய், வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும்போது தினை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான தினை அரிசி காய்கறி கிச்சடி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X