search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    வலிகளை புறக்கணிக்காதீர்கள்  இது பெரிய நோயின் அறிகுறிகள்
    X

    வலிகளை புறக்கணிக்காதீர்கள் இது பெரிய நோயின் அறிகுறிகள்

    • தொடர் வலிகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது.
    • தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது.

    உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.

    ஃபைப்ரோமியால்ஜியா என்பது சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை பிரச்சினைகள் ஆகியவற்றுடன் பரவலான தசைக்கூட்டு வலியால் வகைப்படுத்தப்படும் ஒரு கோளாறு ஆகும். பரவலான வலி, சோர்வு, அறிவாற்றல் சிரமங்கள், ஒற்றைத்தலைவலி மற்றும் பிறவகையான தலைவலி போன்றவையாக இருக்கலாம்.

    சிலருக்கும் உடல் ரீதியான காயம், தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும்.

    இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

    தொடர் வலிகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது. சில நேரங்களில் அவை பெரிய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடக்கு வாதம், கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா, வயிற்றுப் புண்கள், புற்றுநோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், எய்ட்ஸ் மற்றும் பித்தப்பை நோய் போன்ற நோய்களுக்கான வலி சாதாரண வலி போன்றுதான் இருக்கும், ஆனால் சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கலாம்.

    நெஞ்சு வலி: உயிருக்கு ஆபத்தான அறிகுறியாகும். இதனை எளிதாக எடுத்துக்கொண்டு கண்டிப்பாக புறக்கணிக்கக்கூடாது. மூட்டு வலி: இது காயம், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். வலியின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறியவும்.

    தசை வலி: இது முக்கியமாக வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படுகிறது, மேலும் நகர்ப்புறங்களில், இது உடலின் பல்வேறு பகுதிகளில் தசை வலிகளை ஏற்படுத்தும். வைட்டமின் டி போதுமான உடலுக்கு கிடைத்தால் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும்.

    தலைவலி: அடிப்படையில் தலைவலியின் வகைகள் மற்றும் தீவிரத்தன்மை அடிப்படைக் காரணங்களைத் தீர்மானிக்கிறது. அடிக்கடி ஏற்படும் தலைவலி ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம், அதே நேரத்தில் தூக்கமின்மை, மன அழுத்தம், ஆகியவையும் தலைவலிக்கு வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கும், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் தலைவலி வரலாம்.

    வயிற்று வலி: இது இரைப்பை குடல் கோளாறுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது இனப்பெருக்க அமைப்பு பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் ஏற்படலாம். வயிற்று வலி அஜீரணம் முதல் அல்சர் வரை எதனாலும் ஏற்படலாம், மேலும் நெஞ்சு வலி மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    முதுகு வலி: 5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மரப்புத்தன்மையை ஏற்படுத்தலாம். பல மணிநேரம் உட்கார வேண்டிய வேலையில் இருந்தால், உங்கள் தோள்பட்டை பகுதியும் பாதிக்கப்படலாம். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்தது. இந்த வலி தொடர்ந்தால் கீல்வாதம் மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    கால் வலி: தசை இறுக்கம் அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவு போன்ற பல காரணங்களால் கால் வலி ஏற்படலாம். இருப்பினும், கால் வலி கடுமையாக இருந்தால், திடீரென்று வந்தால், அல்லது வீக்கம் அல்லது சிவத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருந்தால், இரத்த உறைவு அல்லது நரம்பு சேதம் போன்ற மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

    தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது. மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை என்று என்ன காரணம் கூறினாலும், பிற்காலத்தில் அது ஒரு ஆபத்தான பிரச்சனையாக மாறும்போது வருந்தப்போவது நாம்தான். தலைவலி தொடர்ச்சியாக இருந்தால் மூளை கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது, நெஞ்சுவலி தொடர்ந்து இருந்தால் இதய நோய்க்கு வாய்ப்புள்ளது, வயிற்று வலி இரைப்பை குடல் கோளாறுகளாக இருக்கலாம். எனவே எதையும் மருத்துவரிடம் ஆலோசித்துவிடுவது நல்லது. அன்றாட வாழ்வில் பொதுவாக வரும் வலிகளையும், அதன்பின் இருக்கும் தீவிரத்தன்மையையும் தெரிந்துகொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

    Next Story
    ×