என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இந்த முத்திரை செய்யும் போது மனம் ஒருமுகப்பட்டு செய்தால்தான் பலன் அதிகமாக இருக்கும். இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் முத்திரைச் செய்ய வேண்டும்.
    செய்முறை

    கைவிரல்களை மடக்கி முஷ்டியை உருவாக்குங்கள். பெருவிரலால் மோதிர விரலின் மேல் பதிந்து இருக்கட்டும். நடு விரலை நிமிர்த்தி வளைவின்றி நேராக வைத்துக் கொள்ளுங்கள். சுண்டு விரலை ஆள்காட்டி விரலால் நிமிர்ந்து அதன் பக்கவாட்டு பகுதி நடுவிரலின் நடுக்கோடு இருக்குமிடத்தில் பக்கவாட்டில் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ளவும். சுட்டுவிரலின் மேல் பகுதியை மட்டும் சற்றே வளைத்து அங்குசம் போல் வைத்துக் கொள்ளுங்கள் கைகள் மார்புக்கு அருகில் இருக்கட்டும். இதுவே அங்குச முத்திரை.

    மனம் ஒருமுகப்பட்டு செய்தால்தான் பலன் அதிகமாக இருக்கும். இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் முத்திரைச் செய்ய வேண்டும். சுவாசம் இயல்பான நடையில் இருந்தால் போதும். ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும். மூச்சை அடக்குதல் கூடாது.

    பலன்கள்

    தடைகள், சோதனைகள் அகலும்; வாழ்க்கை இன்பமாகும்.

    நீண்ட காலமாக நோயின் கொடுமைகளை அனுபவித்தவர்கள் கூட இந்த முத்திரை செய்தால் நோய் படிப்படியாகக் குறையும்.

    அங்குச முத்திரையை தொடர்ந்து செய்து வர பருவுடலின் இச்சைகள் படிப்படியாக அடங்கும்.

    ஆன்மீகத்தில் மேல் நிலையை அடைய விரும்புவோர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரே முத்திரை இது.
    நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.
    செய்முறை :

    வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைக்கவும். மார்பு பகுதிக்கு நேராக வரும்படி வைத்துக்கொள்ளவும்.

    தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ இநத் முத்திரையை செய்யலாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    பயன்கள் :

    நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.

    மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும். கற்பனைத் திறன் வளரும். தினமும் 10 முதல் 15 நிமிடம் பழகினால் போதும். மாற்றங்களை உடனடியாகக் காணலாம்.
    வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம்.
    செய்முறை

    தரையில் அமர்ந்து வலது காலைத் தூக்கி இடது தொடை மீது வைத்து, வலது குதிங்கால் இடதுபுற அடிவயிற்றைத் தொடும்படி வைத்து கொள்ளவும். பின்னர் இடது காலை மடித்து வலது பக்க தொடை அருகே கொண்டு செல்ல வேண்டும்.

    இரு கைகளும் இரு முழங்கால்கள் மீது இருக்க வேண்டும். இதேபோல், கால்மாற்றி இடது காலையும் வலது கால் மேல் வைத்து ஆசனத்தை தொடரலாம்..

    சுவாசம் சீராகவும், முதுகு நேராகவும் இருக்க வேண்டும். இந்த ஆசனம் மிகவும் சுலபமானது.

    வீராசனத்தின் பயன்கள்

    நுரையீரல் நோய்கள் அணுகாது.
    அனைத்து நாடிகளும் ஆற்றல் பெரும்.
    முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கும்.
    யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. உபநிஷத்தும் பத்மாசனத்தை மிகவும் உயர்வாகக் கூறுகிறது.
    செய்முறை

    தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.

    இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும். முதுகை நிமிர்த்தி மலர்ந்த கால்களின்மேல் இரு கைகளும் சின்முத்திரை நிலையில் இருக்க வேண்டும்.

    நேர் முகமாக நோக்குதல் வேண்டும், இடை, வயிறு, கண்டம், தலை ஆகியவைகள் சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்த்திருக்க வேண்டும். இதுவே பத்மாசனம் ஆகும்.

    பத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும்.

    சுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.

    யோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும்.

    ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

    பத்மாசனத்தின் பயன்கள்

    சுவாச சம்பந்தமான நோய்கள் வராது
    முதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும்
    நுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும்
    வாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.
    பத்மாசனம் முறையில் அமர்ந்து இந்த பங்கஜ முத்திரை செய்யும் போது உடனடி பலன் கொடுக்கும். இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.
    படத்தில் உள்ளபடி இரண்டு கைகளையும் கும்பிடுவது போல் இணைத்து விரல்களை விரித்து கொள்ள வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் இரண்டு கை விரல்களும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும்.

    பத்மாசனம் முறையில் அமர்ந்து இந்த பங்கஜ முத்திரை செய்யும் போது உடனடி பலன் கொடுக்கும். இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.

    ஆரம்பத்தில் இதனை 16 நிமிடங்கள் செய்ய வேண்டும். நன்கு பழகிய பிறகு 48 நிமிடங்கள் வரை செய்யலாம். பங்கஜ முத்திரை நீண்ட நேரம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் உடலில் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

    பலன்கள்

    * உடல் அழகை அதிகரிக்கும்
    * நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ரத்தம் தொடர்பான கோளாறுகளை சரிசெய்யும்.
    * முதுகெலும்பு ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
    * வயிற்றில் உள்ள கட்டிகளை கரைக்கும்.
    * மன அமைதி தரும்.
    * நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும்.
    பரிபூரண நவாசனம் செய்தால் உடலும் மனதும் உற்சாகமடையும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம். இதனால் இந்த ஆசனம் பரிபூரண நவாசனம் என்று அழைக்கப்படுகிறது.
    விரிப்பில் நேராக படுத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக்கொண்டே கைகளையும் கால்களையும் உயர்த்த வேண்டும். கைகளை கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும். பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.

    இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெதுவாக சாதாரண நிலைக்கு வரவேண்டும். இதே போல் மூன்று முறைகள் செய்யவும். ஒவொரு முறை செய்யும் போது ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

    பலன்கள்

    இந்த ஆசனம் செய்வதால் முகத்திலுள்ள எல்லா தசைகளும் சிறப்பாக செயல்பட்டு முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளும்.

    சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேறி குடல் சுத்தமாகும். மேலும் இந்த ஆசனம் செய்தால் குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது.

    கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி நீங்கி முதுகெலும்பு பலம் பெறும். சிறுநீரக உறுப்பை வலுவாக்கும்.

    இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

    உடல் நடுக்கம், கைகால் நடுக்கத்தை சரி செய்யும்.

    பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனை, ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு பிரச்சனை ஆகியவை சரியாகும்.
    பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
    பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

    மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.

    ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.

    சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.

    நபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்… நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.

    பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

    முதலில் செய்யும்போது, உடலை - மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுவதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.

    அவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.

    மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.

    பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

    ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சுகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம். 
    உங்கள் எண்ண ஓட்டத்தைத் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் உங்கள் எண்ணத்திலிருந்து வேறுபட்டவர், அதை கவனிப்பவர்.
    1. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய அமர்வது நல்லது. அதிகாலை அல்லது மாலையில் இரவும் பகலும் இணைந்திருக்கும் (சந்தியாகாலம் என்று சொல்வர்) நேரம் மிக நல்லது.

    2. சத்தமில்லாத, சுற்றிலும் அதிகமான பொருட்கள் இல்லாத, சுத்தமான இடமாய் இருந்தால் நலம். சுற்றிலும் பொருட்கள் நிறைந்திருக்கும் இடத்தில் எண்ண ஓட்டம் குவிவது கடினம். அதே போலத்தான் இரைச்சலான இடங்களும்.

    3. உங்கள் விருப்பம் போல வேண்டுமானால் ஒரு வாசனை தரும் ஊதுபத்தியை ஏற்றிக் கொள்ளலாம், ஆனால் கட்டாயமில்லை.

    சிம்பிளாக இவை போதும். தியானம் என்பது மூச்சு, எண்ணம், காற்று என்பது போல் யாவருக்கும் பொது, யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    இனி தியானம் செய்யும் முறை:

    * மேற்கூறிய ஒழுங்குமுறைகள் கொண்ட இடத்தில் ஒரு விரிப்பை விரித்து முதுகுத்தண்டை முடிந்த வரை நேராக வைத்திருந்து கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

    * கண்களை மூடிக் கொண்டிருக்கலாம்.

    * உங்கள் மூச்சு வெளிவந்து உட்போவதை கவனித்திருங்கள்.

    * உங்கள் எண்ண ஓட்டத்தைத் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் உங்கள் எண்ணத்திலிருந்து வேறுபட்டவர், அதை கவனிப்பவர். இதைத் தொடருங்கள் சில நேரம்.

    * உங்கள் மூச்சு மிக மெல்லியதாக இருப்பதை உணர்வீர்கள். தூக்கம் வந்தாலும் வரலாம்.

    * இந்நிலையில் தொடர்ந்து இருங்கள். எப்போது தோன்றுகிறதோ அப்போது கண் விழியுங்கள். விழித்த பின் சிறிது நேரம் அமர்ந்திருங்கள். பின் மெதுவாக எழுந்து கொள்ளலாம்.

    இதைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் நாளடைவில் அடுத்த கட்டத்திற்கு அதுவே இட்டுச் செல்லும்.

    தங்களுக்குப் பிடித்த தெய்வத்தை நினைத்திருப்பது ஒரு வகை, ஆனால் அதிலும் தாங்கள் உங்களுடைய எண்ணத்துடன் சேர்ந்து விடுவீர்கள், இது ஷார்ட் டெர்ம் முறை. அதை விட தங்கள் எண்ணத்தைக் கவனித்திருப்பது லாங் டெர்ம். நாளடைவில் உங்கள் மனமே 'என்ன, ஏதாவது எண்ண வேண்டுமா அல்லது பேசாமலிருப்போமா' என்று கேட்கும், நம்புங்கள்.

    மன அழுத்தத்தை நீக்கி மன அமைதி தருவதுதான் தியான முத்திரை. இந்த முத்திரை செய்வதால் டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு ஆகியவை நீங்குகிறது.
    மன அழுத்தம், மனக்கவலை போன்றவைதான் பல நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி சரியாக சுரக்காமல் பலவித நோய்கள் ஏற்படுகிறது.

    மன அழுத்தத்தை நீக்கி மன அமைதி தருவதுதான் தியான முத்திரை. இந்த முத்திரை செய்வதால் டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு ஆகியவை நீங்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக அமரவும். கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விட வேண்டும். இதனை பத்து முறை செய்ய வேண்டும். பிறகு படத்தில் காட்டியது போல் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைக்கவேண்டும். பிறகு இரண்டு கைகளின் கட்டை விரலின் நுனி பகுதி தொடுமாறு வேண்டும். பிறகு கண்களை மெதுவாக திறக்கவும்.

    நம் இரண்டு கைகளில் உள்ள கட்டைவிரல் நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. டென்ஷனால் ஏற்படும் மனக்கவலை, பதட்டம், உடல் உஷ்ணம் ஆகியவற்றை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது.

    இந்த முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    மன அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும், ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாதுகாக்கப்படும், இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது, சுறுசுறுப்புடன் திகழலாம், பய உணர்வு நீங்கும், தன்னம்பிக்கை பிறக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கும், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
    இந்த பயிற்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் நுரையீரலில் செயல்திறனை மேம்படுத்தும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும் இதை எல்லா வயதினரும் செய்யலாம்.
    பொதுவாக கோரானா தொற்று அதிகமாக நுரையீரலில் வரும் பொழுதுதான் மூச்சுத் திணறலை உண்டாக்கும் உயிர் இழப்பை உண்டாக்கிவிடும் என்றும் கூறப்படுகிறது

    எனவே நுரையீரலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் அனைவருமே உள்ளோம் உண்மையில் நம் முன்னோர்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் அர்த்தத்துடன் உருவாக்கியுள்ளனர் அதாவது உணவு முதல் உடற்பயிற்சி வரை ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளனர்

    அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது நுரையீரலைப் பலப்படுத்த நாடி சுத்தி பிராணயாமம் என்று யோக பயிற்சி பெற்ற பார்க்கப்போகிறோம் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது ஆஸ்துமா சைனஸ் முற்றிலும் நீங்கி நுரையீரல் பலப்படும்

    அதுமட்டுமல்ல இதயம் பாதுகாக்கப்படும் இதய வால்வுகள் நன்கு இயங்கும் ரத்த அழுத்தம் நீங்கும் இரத்தம் சுத்தமாகும் மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தூக்கம் வரும் ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்

    ஒற்றைத் தலைவலி நீங்கும் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும் அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும் ஞாபகசக்தி பெருகும் முடி கொட்டுதல் இளநரை குறைபாடுகள் நீங்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன இறுக்கம் நீங்கும்

    இப்பொழுது பயிற்சிக்கு செல்வம் இந்த மூச்சுப் பயிற்சிக்கு உகந்த நேரம் காலை அல்லது மாலை நேரம் சமமான தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகெலும்பு நேராக இருக்கும்படி அமர வேண்டும் வயதானவர்கள் என்றால் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம் புல்தரை திறந்தவெளி போன்றவை மூச்சுப் பயிற்சிக்கு ஏற்றதாகும்

    பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொருநாளும் வெவ்வேறு நேரங்களில் செய்தல் கூடாது ஒரே நேரத்தில் தான் செய்தல் வேண்டும் முதலில் உங்கள் மூச்சுக் காற்றை நன்றாக வெளியேற்றி விடுங்கள் இப்பொழுது உங்கள் நுரையீரலில் மூச்சுக் காற்று இல்லை இதன் பிறகு வலது கை ஆள்காட்டி விரல் நடுவிரல் இரண்டையும் மடக்கி வைத்து வலது நாசியில் கட்டை விரலும் இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும்

    இப்பொழுது இடது பக்க நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பக்க நாசி வழியாக மெதுவாக வெளியே விட வேண்டும் பிறகு வலது பக்க நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியே விடவேண்டும் பொதுவாக மூச்சை உள் இழுக்கும் போதும் வெளியே விடும் பொழுதும் மெதுவாக செய்யவேண்டும்.

    இதைப் போன்று பத்து முறை செய்யலாம். இந்த பயிற்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் நுரையீரலில் செயல்திறனை மேம்படுத்தும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும் இதை எல்லா வயதினரும் செய்யலாம்.
    சுக்கில தியானம் என்பது தூயதியானம். இத்தியானத்தில் மிகத் தூய எண்ணத்துடன் மனது இருக்கும். ஆசைகளை அறவே அகற்றி, இன்ப துன்பங்களை எண்ணாது தியானித்தல் ஆகும்.
    ஆர்த்த தியானம் என்பது தியானத்தில் உள்ள பொழுது மனம் தூய்மையாக இல்லாமல் துயரமான எண்ணவோட்டத்தில் இருத்தலாகும். ரௌத்திர தியானம் என்பது தியான நேரத்தில் தீய எண்ணங்களாலும் கோபம், ஆசை, காமம் போன்றவைகளாலும் சிந்தனை நிரம்பி இருத்தலாகும்.

    தர்ம தியானம் என்பது நல்லதியானமாகும். தியானத்தின்போது அருகன் அருளிய அறம், அகிம்சை, கொல்லாமை போன்ற அறநெறிகளையும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தரும் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றை மனதில் இருத்தியும் தியானம் செய்வதாகும்.

    சுக்கில தியானம் என்பது தூயதியானம். இத்தியானத்தில் மிகத் தூய எண்ணத்துடன் மனது இருக்கும். ஆசைகளை அறவே அகற்றி, இன்ப துன்பங்களை எண்ணாது தியானித்தல் ஆகும். கடினமான இத்தியானத்தைக் கைவரப் பெற்றவர்கள் எல்லா உலகங்களையும் உணரும் முழுதுணர் ஞானம் அதாவது கேவல ஞானம் பெறுவர்.

    தியானத்தில் ஆர்த்த, ரௌத்திர எண்ணங்கள் இல்லாது, தரும சிந்தனையோடு மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். அப்பொழுது சுவாசக்காற்றை சீராக உள்ளிழுத்தும், வெளியிட்டும் செய்தல் மிக அவசியம். அதனால் ஆழ்ந்த தியானம் அமையும்.

    தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக அருங்கலச் செப்பு, “ஒருசிறை இல்லம் பிறவுழியானும் மருவுக சாமாயிகம்” என்கிறது. வீட்டின் தனி அறை, ஆற்றங்கரை, மலை, குகை, காடு, கோயில் போன்ற தனியிடங்களில் தியானம் செய்யலாம். எனவேதான் பல மாமுனிகள் மலைகளின் மீது தியானித்து முக்தியடைந்துள்ளார்கள்.

    முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.
    பிராணாயாமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.

    உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை நமது உடலில் இருந்து கொண்டு இருக்கும். முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.
     
    மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். அதாவது மூச்சினை நன்றாக இழுத்து பின் மிகவும் மெதுவாக வெளியில் விட வேண்டும். இதனை படிப்படியாக குறைக்கும் போது உடல் இளமையாக இருக்கும்.

    * பிராணாயாமம் மருத்துவப் பயன்கள் (Medicinal Benefits)

    * பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று, குறைந்த அளவு நுரையீரலை அடைகிறது.

    * முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் முழுதும் பிராணவாயு கிடைக்கும்.

    * இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு ஞாபக சக்தி அதிகமாகும்.

    * குறிப்பாக படிக்கும் மாணவர்கள் இதனை செய்வதினால் படிப்பாற்றல், புத்தி கூர்மை கூடும்.

    * நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

    செய்யும் முறை (Methods)


    * மூச்சு பயிற்சிக்கு உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும்.

    * சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.

    * புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.

    * பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.

    * இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.

    * வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.

    * இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.

    * மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    * இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது நாடி சுத்தமடையும்.

    * சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும்.

    * துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
    ×