search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சந்திர கிரகணம்: 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து, பரிகாரம் செய்வது எப்படி?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சந்திர கிரகணம்: 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து, பரிகாரம் செய்வது எப்படி?

    • சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும்.
    • சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து.

    சந்திர கிரகணம் நாளை (28-ந்தேதி) இரவு நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும். இந்த சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து இருப்பதாக ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    சந்திர கிரகணம் நாளை (சனிக்கிழமை) இரவு 1.05 மணிக்கு தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் மத்திய காலம் இரவு 1.44 மணி ஆகும். இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 1 மணி 18 நிமிடங்கள் நீடிக்கிறது.

    இந்த சந்திர கிரகணத்துக்கான தோஷ கிழமை சனி ஆகும். எனவே சனிக்கிழமை பிறந்தவர்கள் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கிரகணத்தால் அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம் உள்ளது.

    மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவர்கள் தோஷ நிவர்த்திக்காக பரிகாரம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் நிகழும் போது இவர்கள் தோஷ நிவர்த்தி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

    `இந்த்ரோ அநலோ யமோ ரிக்ஷோ வருணோ

    வாயு ரேவச குபேர ஈசோக்நந்து இந்து

    உபராக உத்தவ்யதாம் மம றீறீ '

    கிரகணம் முடிந்த பிறகு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் மற்றும் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குளித்து அவரவர் சம்பிரதாயப்படி பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    வீட்டில் பரிகார பூஜை செய்பவர்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்திய பிறகு குளித்து விட்டு விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வங்களுக்கு வெல்லத்தால் செய்த பலகாரங்களை படைத்து பரிகார பூஜை செய்யலாம். அதாவது அதிரசம், இனிப்பு முருக்கு, எள் உருண்டை, கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்களும் பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் பூஜை செய்யும் முன்பு குளிக்கும் போது அதே மந்திரத்தை செப்பு தகடு அல்லது காகிதத்தில் எழுதி கையில் கட்டிக்கொண்டு குளிக்கலாம். குளித்ததும் அதை அப்படியே தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

    மேலும் இந்த சந்திர கிரகணத்தால் பல்வேறு பொதுவான பலன்களும் ஏற்படும். செல்வந்தர்களுக்கு மிகுந்த கெடுதல்கள் உண்டாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை, வடமாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகரிக்கும். குப்பைகள் மூலம் நோய் பரவும். விவசாயம் செழிப்பாக இருக்கும்.

    அதே நேரத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். விலைவாசி உயர்வு உச்சத்தை தொடும். கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.

    தமிழ்நாட்டில் சில இடங்களில் சுமாரான மழை பெய்யும். எதிர்காலத்தில் கடுமையான மழை பொழியும். புயல் சின்னம் உருவாகும். சூறாவளி காற்றும் வீசும். விவசாயம் 2 போகம் விளையும். தென் மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகரிக்கும். வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும்.

    பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். வெளி மாநில திருடர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள். சாதி பாகுபாடு முற்றிலும் அகலும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் விபத்துக்களும் அதிகரிக்கும்.

    சந்திர கிரகணம் நிகழும் அன்று இரவு 10 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். கர்ப்பிணிகள் இரவு 1 மணி முதல் 2.30 மணி வரை சந்திரனை பார்க்கக்கூடாது.

    Next Story
    ×