search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வருகிற 27-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி
    X

    சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வருகிற 27-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி

    • சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×