என் மலர்
இஸ்லாம்
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது மனிதர்களை அசைவ உணவே உண்ண வேண்டும் என்று வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ இல்லை.
உலகில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மாமிசம் உண்ணும் வகையைச் சார்ந்தது. இவை ‘மாமிச உண்ணிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் தாவர வகைகளை உண்ணக்கூடியவை. இவை ‘தாவர உண்ணிகள்’ எனப்படும். மாமிச உண்ணிகள் தாவரத்தை உண்பதில்லை. தாவர உண்ணிகள், மாமிசத்தை சாப்பிடுவதில்லை. ஆனால் இருவகை உணவுகளையும் உண்ணும் வகையில் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால், அவை அத்தகைய உணவை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களைப் பெற்றுள்ளன.
மனிதர்களைப் பொறுத்தவரையில் மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களும், தாவர வகை உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களும் அமைந்துள்ளன.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு, தாவர வகை உணவுகளை மட்டுமே செரி மானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு, மாமிச வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஆனால் மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச வகை உணவுகளையும், தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
மனிதன் தாவர உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணி இருந்தால், மனிதனுக்குத் தட்டையான பற்களை மட்டுமே கொடுத்திருப்பான். கூரிய பற்களைக் கொடுத்திருக்கமாட்டான். மேலும் இருவகை உணவுகளும் ஜீரணமாகும் வகையில், செரிமான அமைப்புகளை அமைத் திருக்க மாட்டான்.
“அவன் கால்நடைகளையும் படைத்தான். அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது. உணவும் இருக்கிறது. இன்னும் பல பயன் களும் இருக்கின்றன” (16:5) என்றும்,
“நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளில் உள்ளவற்றில் இருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக் கிறீர்கள்” (23:21) என்றும்,

“(பின்னால்) உங்களுக்குக் கூறப்படுபவை தவிர (மற்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன” (5:1) என்றும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
மிருகங்கள் மற்றும் பறவைகளின் இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்து இருந்தாலும், அதற்கு பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. மிருகங்களில் அசை போட்டு மெல்லுகின்ற தன்மையுடைய மிருகங்களைத் தவிர, இதர மிருகங்களின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை அசைபோடும் பழக்கமுடையவை. இந்த மிருகங்களை மட்டுமே அதுவும் முறைப்படி அறுக்கப்பட்ட நிலையில் உணவுக்காகப் பயன்படுத்தலாம் என்பதே இஸ்லாமிய வழிமுறையாகும்.
இதன்படி சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், குள்ளநரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, இரையைத் தன் காலில் மிதித்துக் கொண்டு, அதை இழுத்துத் தின்கின்ற பறவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. சான்றாக, கழுகு, பருந்து, வல்லூறு போன்றவை அத்தகைய ரகத்தைச் சார்ந்தவை. அவற்றின் இறைச்சியை உண்ண இஸ்லாம் தடை விதித்துள்ளது. கோழி, புறா, காடை, கவுதாரி போன்ற பறவைகள், இரையை அலகினால் கொத்தித் தின்பவை. இவற்றை சாப்பிட அனுமதி உண்டு.
அசை போடும் மிருகங்கள் மற்றும் அலகினால் கொத்தித் தின்னும் பறவைகளின் இறைச்சியை உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதி அளித்திருப்பதற்குக் காரணம், அவற்றின் இறைச்சி தீங்கற்றவை. மேலும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு நாளைக்கு உலகில் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் அறுக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் அந்த இனங்கள் குறைவு படவில்லை. மாறாகப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை உண்பதில்லை என்ற முடிவுக்கு மனிதன் வந்து விட்டால் என்ன நிகழும் என்பதை எண்ணிப் பாருங்கள். நாடு முழுவதும், ஊர் முழுவதும் ஆடு, மாடுகளின் நடமாட்டத்தையே அதிக அளவில் காண முடியும். அதற்காகத்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.
‘புரோட்டீன்’ என்ற சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்று அர்த்தம். புரோட்டீன் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது; முதன்மையானது. உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, சில நோய்கள் வராமல் புரோட்டீன் தடுக்கிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். ஆதலால் உணவில் புரோட்டீன் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே புரோட்டீன் சத்து என்பது உடம்புக்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. புரோட்டீனை ‘புரதம்’ என்று கூறுவர். நமது உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை மாமிசத்தில் உள்ள புரோட்டீன்களில் இருந்து நாம் தயாரித்துக் கொள்கிறோம். மாமிச உணவு நமது உட லுக்குத் தேவையான அத்தனை புரோட்டீன் களையும் தருகிறது. சைவ உணவில் சோயா பீன்சில் மட்டுமே புரோட்டீன் உள்ளது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது மனிதர்களை அசைவ உணவே உண்ண வேண்டும் என்று வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ இல்லை. எத்தகைய உணவுப் பழக்கத்தை ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கிறான் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அது அவன் சார்ந்துள்ள மதம்-மார்க்கம் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது அவனது வாழ்விடம் சார்ந்ததாக அமையலாம். அல்லது அவனது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.
- பாத்திமா மைந்தன்.
தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால், அவை அத்தகைய உணவை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களைப் பெற்றுள்ளன.
மனிதர்களைப் பொறுத்தவரையில் மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களும், தாவர வகை உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களும் அமைந்துள்ளன.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு, தாவர வகை உணவுகளை மட்டுமே செரி மானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு, மாமிச வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஆனால் மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச வகை உணவுகளையும், தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
மனிதன் தாவர உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணி இருந்தால், மனிதனுக்குத் தட்டையான பற்களை மட்டுமே கொடுத்திருப்பான். கூரிய பற்களைக் கொடுத்திருக்கமாட்டான். மேலும் இருவகை உணவுகளும் ஜீரணமாகும் வகையில், செரிமான அமைப்புகளை அமைத் திருக்க மாட்டான்.
“அவன் கால்நடைகளையும் படைத்தான். அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது. உணவும் இருக்கிறது. இன்னும் பல பயன் களும் இருக்கின்றன” (16:5) என்றும்,
“நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளில் உள்ளவற்றில் இருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக் கிறீர்கள்” (23:21) என்றும்,

“(பின்னால்) உங்களுக்குக் கூறப்படுபவை தவிர (மற்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன” (5:1) என்றும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
மிருகங்கள் மற்றும் பறவைகளின் இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்து இருந்தாலும், அதற்கு பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. மிருகங்களில் அசை போட்டு மெல்லுகின்ற தன்மையுடைய மிருகங்களைத் தவிர, இதர மிருகங்களின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை அசைபோடும் பழக்கமுடையவை. இந்த மிருகங்களை மட்டுமே அதுவும் முறைப்படி அறுக்கப்பட்ட நிலையில் உணவுக்காகப் பயன்படுத்தலாம் என்பதே இஸ்லாமிய வழிமுறையாகும்.
இதன்படி சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், குள்ளநரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, இரையைத் தன் காலில் மிதித்துக் கொண்டு, அதை இழுத்துத் தின்கின்ற பறவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. சான்றாக, கழுகு, பருந்து, வல்லூறு போன்றவை அத்தகைய ரகத்தைச் சார்ந்தவை. அவற்றின் இறைச்சியை உண்ண இஸ்லாம் தடை விதித்துள்ளது. கோழி, புறா, காடை, கவுதாரி போன்ற பறவைகள், இரையை அலகினால் கொத்தித் தின்பவை. இவற்றை சாப்பிட அனுமதி உண்டு.
அசை போடும் மிருகங்கள் மற்றும் அலகினால் கொத்தித் தின்னும் பறவைகளின் இறைச்சியை உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதி அளித்திருப்பதற்குக் காரணம், அவற்றின் இறைச்சி தீங்கற்றவை. மேலும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு நாளைக்கு உலகில் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் அறுக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் அந்த இனங்கள் குறைவு படவில்லை. மாறாகப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை உண்பதில்லை என்ற முடிவுக்கு மனிதன் வந்து விட்டால் என்ன நிகழும் என்பதை எண்ணிப் பாருங்கள். நாடு முழுவதும், ஊர் முழுவதும் ஆடு, மாடுகளின் நடமாட்டத்தையே அதிக அளவில் காண முடியும். அதற்காகத்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.
‘புரோட்டீன்’ என்ற சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்று அர்த்தம். புரோட்டீன் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது; முதன்மையானது. உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, சில நோய்கள் வராமல் புரோட்டீன் தடுக்கிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். ஆதலால் உணவில் புரோட்டீன் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே புரோட்டீன் சத்து என்பது உடம்புக்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. புரோட்டீனை ‘புரதம்’ என்று கூறுவர். நமது உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை மாமிசத்தில் உள்ள புரோட்டீன்களில் இருந்து நாம் தயாரித்துக் கொள்கிறோம். மாமிச உணவு நமது உட லுக்குத் தேவையான அத்தனை புரோட்டீன் களையும் தருகிறது. சைவ உணவில் சோயா பீன்சில் மட்டுமே புரோட்டீன் உள்ளது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது மனிதர்களை அசைவ உணவே உண்ண வேண்டும் என்று வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ இல்லை. எத்தகைய உணவுப் பழக்கத்தை ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கிறான் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அது அவன் சார்ந்துள்ள மதம்-மார்க்கம் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது அவனது வாழ்விடம் சார்ந்ததாக அமையலாம். அல்லது அவனது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.
- பாத்திமா மைந்தன்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அருள் மழை பொழியும் ரமலானில், இத்தகைய சிறப்பு மிக்க, வல்லமை மிக்க இறைவனை, நாம் அனைவரும் வணங்கி வழிபடுவோம்.
இந்த உலகின் மீதும், உலகில் உள்ள உயிரினங்கள், அசையும் மற்றும் அசையாப்பொருட்கள் என அனைத்தின் மீதும் சர்வ வல்லமை கொண்டவன் அல்லாஹ் ஒருவனே. அந்த ஏக இறைவன் எதையும் உருவாக்க நினைத்தால் ’ஆகுக‘ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது உண்டாகிவிடும்.
அதுபோல சோதனையை, அழிவை ஏற்படுத்த நினைத்தாலும், அவன் நினைத்த உடனே அது நிறைவேறிவிடும். அந்த அளவுக்கு ஈடு இணை இல்லாத சக்தி படைத்தவன் இறைவன்.
இதை விளக்கும் திருக்குர்ஆன் வசனங்கள் இவை:
இறைவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் ’ஆகுக‘ என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸ¨ர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன் (6:73).
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: ’ஆகுக‘ என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது (40:68).

இப்படி சர்வ வல்லமை மிக்க இறைவன், தான் நாடியவர்களுக்கு நன்மைகளை அளிக்கின்றான். அவன் யாரையாவது சோதிக்க நினைத்தால் அவர்களை சோதனைக்கும் ஆளாக்குகின்றான். இருப்பினும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை முழுமையாக சரண் அடைந்து அவனை வணங்கி, அவன் காட்டிய வழியில்
வாழ்ந்தால் நிச்சயம் நாம் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையலாம். இதையே கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு கூறுகிறது:
’இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக்கருணை உள்ளவனாகவும் இருக்கின்றான்‘ (16:18).
’உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக் கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும். அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்‘ (57:21).
பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அருள் மழை பொழியும் ரமலானில், இத்தகைய சிறப்பு மிக்க, வல்லமை மிக்க இறைவனை, நாம் அனைவரும் வணங்கி வழிபடுவோம். அசைக்க முடியாத இறையச்சத்துடன் நடந்து கொண்டு இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே அனைத்துக்காரியங்களையும் செய்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம், ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
அதுபோல சோதனையை, அழிவை ஏற்படுத்த நினைத்தாலும், அவன் நினைத்த உடனே அது நிறைவேறிவிடும். அந்த அளவுக்கு ஈடு இணை இல்லாத சக்தி படைத்தவன் இறைவன்.
இதை விளக்கும் திருக்குர்ஆன் வசனங்கள் இவை:
இறைவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் ’ஆகுக‘ என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸ¨ர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன் (6:73).
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: ’ஆகுக‘ என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது (40:68).

இப்படி சர்வ வல்லமை மிக்க இறைவன், தான் நாடியவர்களுக்கு நன்மைகளை அளிக்கின்றான். அவன் யாரையாவது சோதிக்க நினைத்தால் அவர்களை சோதனைக்கும் ஆளாக்குகின்றான். இருப்பினும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை முழுமையாக சரண் அடைந்து அவனை வணங்கி, அவன் காட்டிய வழியில்
வாழ்ந்தால் நிச்சயம் நாம் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையலாம். இதையே கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு கூறுகிறது:
’இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக்கருணை உள்ளவனாகவும் இருக்கின்றான்‘ (16:18).
’உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக் கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும். அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்‘ (57:21).
பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அருள் மழை பொழியும் ரமலானில், இத்தகைய சிறப்பு மிக்க, வல்லமை மிக்க இறைவனை, நாம் அனைவரும் வணங்கி வழிபடுவோம். அசைக்க முடியாத இறையச்சத்துடன் நடந்து கொண்டு இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே அனைத்துக்காரியங்களையும் செய்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம், ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
துபாயில் நடைபெற்று வரும் 21ஆம் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) நிகழ்ச்சியில், இவ்வருடத்தின் சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் 21ஆம் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) நிகழ்ச்சியில், இவ்வருடத்தின் சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
துபாய் தொழில் வர்த்தக சபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், துபாய் கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா இத்தகவலைத் தெரிவித்தார்.
“இந்த விருதுக் குழு உலக அளவில் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும், புனித குர்ஆனுக்கும், புகழ்மிக்கச் சேவைகளைச் செய்துவரும் சிறந்த இஸ்லாமியப் பிரமுகர்களையும், நிறுவனங்களையும் கடந்த 21 ஆண்டுகளாகச் சிறப்பித்து வருகிறது” என்று பூமெல்ஹா குறிப்பிட்டார்.

மதீனாவில் அரபு மொழிச் செல்வங்களையும் இஸ்லாமிய பாரம்பரிய அம்சங்களையும் கட்டிக் காக்கும் வகையில், வக்ஃப் நூலகங்களுக்காக மாமன்னர் அப்துல் அஜீஸ் பெயரில் ஒரு மையத்தை அமைத்தது மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அவர்களின் சிறந்த சாதனைகளில் குறிப்பிடத்தக்கது என்றும், அரேபியர்களையும் முஸ்லிம்களையும் இணைப்பதற்காக அவர் இடைவிடாது மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை என்றும் பூமெல்ஹா சிலாகித்தார்.
நடைபெற்று வரும் 21 ஆவது ஆண்டு துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) போட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கின. அதில் புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து ஓதும் போட்டியின் முதல் நாளில் கேமரூனைச் சேர்ந்த ஹாரூன் அஹ்மத், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வஸீம் அப்த், மலேசியாவைச் சேர்ந்த முஹம்மத் அப்துல்லாஹ், ஓமானைச் சேர்ந்த ராஷித் யூசுப், பெல்ஜியத்தைச் சேர்ந்த உபேதா தாகிர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த அப்தல்ஹாதீ ஹுஸைன் மற்றும் கானாவைச் சேர்ந்த இஸ்மாயில் இப்ராஹிம் என்று 7 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் அல்ஜீரியா, கஸகிஸ்தான், தன்ஸீனியா, ஜோர்டான், நேபாள், காம்பிய மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மூன்றாம் நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஈரான், இத்தாலி, லெப்னான், சாட், கென்யா, டென்மார்க், போஸ்னியா மற்றும் புருன்டி நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
நான்காம் நாள் போட்டி திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஈராக், பெனின், நெதர்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, சீபூத்தீ மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
முதல் போட்டியாளரான கேமரூன் தேசத்தைச் சேர்ந்த ஹாரூன் அஹ்மத்திடம் இவ்விருது நிகழ்ச்சி குறித்துக் கேட்டபோது, “இந்தத் தனித்துவமான போட்டியில் பங்கேற்பது என்பது எனக்குக் கனவாக திகழ்ந்தது. இப்போது அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

அல்ஜீரியா நாட்டிலிருந்து வந்த போட்டியாளர் யூசுப் ஹமாம் திருக்குர்ஆனை துல்லியமாக மனப்பாடம் செய்து அழகாக ஓதினார். அது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேசுகையில், “அல்ஜீரிய நாட்டின் சார்பில் இங்கு வந்து பங்கேற்பதைக் கௌரவமாகக் கருதுகிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அருளியபடி புனித குர்ஆனை மற்றவர்களுக்குப் போதிப்பது மட்டுமின்றி, சிறந்த அறிஞராகவும், சர்வதேச அளவில் சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் இருக்க விரும்புகிறேன்” என்றார்.
மேலும் மக்களை ஈர்ப்பதற்காக விருதுப் போட்டிக்கான அமைப்புக் குழு ஷேக்கா ஃபாத்திமா சர்வதேச திருக்குர்ஆன் விருதுப் போட்டியைப் பெண்களுக்காகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி 14 வகையான போட்டிகள் தினந்தோறும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை துபாய் தொழில் வர்த்தக சபை செய்து வருகிறது.
பல்வேறு நாடுகளிலிருந்து துபாய் தொழில் வர்த்தக சபையின் அரங்கிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் இப்போட்டிகளில் திருக்குர்ஆனைத் துல்லியமாக நினைவுகூர்ந்து, சரியான வகையில் ஓதிய போட்டியாளர்களின் திறமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இப்போட்டிகள் ரமதான் மாதத்தின் 20ஆம் நாள் வரையில் தினந்தோறும் இரவு 10 மணிக்கு நடைபெறுகின்றன.
- ஜெஸிலா பானு.
துபாய் தொழில் வர்த்தக சபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், துபாய் கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா இத்தகவலைத் தெரிவித்தார்.
“இந்த விருதுக் குழு உலக அளவில் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும், புனித குர்ஆனுக்கும், புகழ்மிக்கச் சேவைகளைச் செய்துவரும் சிறந்த இஸ்லாமியப் பிரமுகர்களையும், நிறுவனங்களையும் கடந்த 21 ஆண்டுகளாகச் சிறப்பித்து வருகிறது” என்று பூமெல்ஹா குறிப்பிட்டார்.

மதீனாவில் அரபு மொழிச் செல்வங்களையும் இஸ்லாமிய பாரம்பரிய அம்சங்களையும் கட்டிக் காக்கும் வகையில், வக்ஃப் நூலகங்களுக்காக மாமன்னர் அப்துல் அஜீஸ் பெயரில் ஒரு மையத்தை அமைத்தது மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அவர்களின் சிறந்த சாதனைகளில் குறிப்பிடத்தக்கது என்றும், அரேபியர்களையும் முஸ்லிம்களையும் இணைப்பதற்காக அவர் இடைவிடாது மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை என்றும் பூமெல்ஹா சிலாகித்தார்.
நடைபெற்று வரும் 21 ஆவது ஆண்டு துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) போட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கின. அதில் புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து ஓதும் போட்டியின் முதல் நாளில் கேமரூனைச் சேர்ந்த ஹாரூன் அஹ்மத், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வஸீம் அப்த், மலேசியாவைச் சேர்ந்த முஹம்மத் அப்துல்லாஹ், ஓமானைச் சேர்ந்த ராஷித் யூசுப், பெல்ஜியத்தைச் சேர்ந்த உபேதா தாகிர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த அப்தல்ஹாதீ ஹுஸைன் மற்றும் கானாவைச் சேர்ந்த இஸ்மாயில் இப்ராஹிம் என்று 7 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் அல்ஜீரியா, கஸகிஸ்தான், தன்ஸீனியா, ஜோர்டான், நேபாள், காம்பிய மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மூன்றாம் நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஈரான், இத்தாலி, லெப்னான், சாட், கென்யா, டென்மார்க், போஸ்னியா மற்றும் புருன்டி நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
நான்காம் நாள் போட்டி திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஈராக், பெனின், நெதர்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, சீபூத்தீ மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
முதல் போட்டியாளரான கேமரூன் தேசத்தைச் சேர்ந்த ஹாரூன் அஹ்மத்திடம் இவ்விருது நிகழ்ச்சி குறித்துக் கேட்டபோது, “இந்தத் தனித்துவமான போட்டியில் பங்கேற்பது என்பது எனக்குக் கனவாக திகழ்ந்தது. இப்போது அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

அல்ஜீரியா நாட்டிலிருந்து வந்த போட்டியாளர் யூசுப் ஹமாம் திருக்குர்ஆனை துல்லியமாக மனப்பாடம் செய்து அழகாக ஓதினார். அது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேசுகையில், “அல்ஜீரிய நாட்டின் சார்பில் இங்கு வந்து பங்கேற்பதைக் கௌரவமாகக் கருதுகிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அருளியபடி புனித குர்ஆனை மற்றவர்களுக்குப் போதிப்பது மட்டுமின்றி, சிறந்த அறிஞராகவும், சர்வதேச அளவில் சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் இருக்க விரும்புகிறேன்” என்றார்.
மேலும் மக்களை ஈர்ப்பதற்காக விருதுப் போட்டிக்கான அமைப்புக் குழு ஷேக்கா ஃபாத்திமா சர்வதேச திருக்குர்ஆன் விருதுப் போட்டியைப் பெண்களுக்காகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி 14 வகையான போட்டிகள் தினந்தோறும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை துபாய் தொழில் வர்த்தக சபை செய்து வருகிறது.
பல்வேறு நாடுகளிலிருந்து துபாய் தொழில் வர்த்தக சபையின் அரங்கிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் இப்போட்டிகளில் திருக்குர்ஆனைத் துல்லியமாக நினைவுகூர்ந்து, சரியான வகையில் ஓதிய போட்டியாளர்களின் திறமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இப்போட்டிகள் ரமதான் மாதத்தின் 20ஆம் நாள் வரையில் தினந்தோறும் இரவு 10 மணிக்கு நடைபெறுகின்றன.
- ஜெஸிலா பானு.
எத்தனை துன்பங்களும், நெருக்கடிகளும் வந்தாலும் அதை இறைவனின் திருப்பொருத்தத்திற்காக அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
புனித ரமலான் மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கது 'ரமலான், பொறுமையின் மாதமாகும்’. மனிதன் தன் வாழ்க்கையில் பொறுமையுடன் நடந்துகொண்டால் அதற்கு அவனுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கமாகும்.
மற்ற காலங்களைவிட இந்த ரமலான் மாதத்தில் ஏழைகள் மீதும், தேவையுள்ளவர்கள் மீதும் அதிகமாக பரிவு காட்டி உதவி செய்யவேண்டும். திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பொறுமையுடன் நடந்துகொள்வதன் அவசியம் குறித்து இறைவன் விளக்குகிறான். மேலும் அவ்வாறு பொறுமையுடன் நடந்துகொள்பவர்களுக்கு கிடைக்கும் கூலி குறித்தும் விளக்கி இருக்கிறான்.
இதுதொடர்பான திருக்குர்ஆன்வசனங்கள் வருமாறு:-
'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’ (2:153).
'பொறுமையுடன் இருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப்படுவார்கள்’ (25:75).

'இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்’ (28:54).
'(நபியே!) நீர் கூறும்: ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்’ (39:10).
'மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)’. (103:2,3).
பொறுமையைக்கொண்டு நன்மைகளைத் தேடும் காலம் இது. இதை நாம் பயன்படுத்திக் கொண்டு பொறுமையுடன் செயல்பட்டு இறைவனிடத்தில் அதற்குரிய நற்கூலியான சொர்க்கத்தை பெற பாடுபடவேண்டும். எந்த நிலையிலும் நோன்பு காலத்தில் பொறுமையை விட்டுவிடக்கூடாது. எத்தனை துன்பங்களும், நெருக்கடிகளும் வந்தாலும் அதை இறைவனின் திருப்பொருத்தத்திற்காக அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான மன உறுதியை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்புரிவானாக, ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
மற்ற காலங்களைவிட இந்த ரமலான் மாதத்தில் ஏழைகள் மீதும், தேவையுள்ளவர்கள் மீதும் அதிகமாக பரிவு காட்டி உதவி செய்யவேண்டும். திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பொறுமையுடன் நடந்துகொள்வதன் அவசியம் குறித்து இறைவன் விளக்குகிறான். மேலும் அவ்வாறு பொறுமையுடன் நடந்துகொள்பவர்களுக்கு கிடைக்கும் கூலி குறித்தும் விளக்கி இருக்கிறான்.
இதுதொடர்பான திருக்குர்ஆன்வசனங்கள் வருமாறு:-
'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’ (2:153).
'பொறுமையுடன் இருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப்படுவார்கள்’ (25:75).

'இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்’ (28:54).
'(நபியே!) நீர் கூறும்: ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்’ (39:10).
'மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)’. (103:2,3).
பொறுமையைக்கொண்டு நன்மைகளைத் தேடும் காலம் இது. இதை நாம் பயன்படுத்திக் கொண்டு பொறுமையுடன் செயல்பட்டு இறைவனிடத்தில் அதற்குரிய நற்கூலியான சொர்க்கத்தை பெற பாடுபடவேண்டும். எந்த நிலையிலும் நோன்பு காலத்தில் பொறுமையை விட்டுவிடக்கூடாது. எத்தனை துன்பங்களும், நெருக்கடிகளும் வந்தாலும் அதை இறைவனின் திருப்பொருத்தத்திற்காக அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான மன உறுதியை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்புரிவானாக, ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
அகழை நெருங்கவும் முடியாமல், அதில் இறங்கவும் இயலாமல், மண்ணால் மூடி பாதை அமைக்கவும் முடியாமல் நிராகரிப்பாளர்கள் திண்டாடினர்.
முஸ்லிம்களுக்கு எதிராக குறைஷிகளும், யூதர்களும் மற்ற குலத்தவர்களும் ஒன்று திரண்டு வருவதை அறிந்து, அவர்களிடமிருந்து மதீனாவையும் முஸ்லிம்களையும் தற்காத்துக் கொள்ள, அப்பெரும்படை மதீனாவை வந்தடையாதவாறு மதீனாவின் வடக்குப் பகுதியில் முஸ்லிம்கள் நாற்பது முழம் அகழ் தோண்டினர்.
இறைநம்பிக்கையாளர்கள் பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புபவர்களாக இருந்தனர். அவர்கள் மும்முரமாகத் தோண்டியதால் அப்பணி எதிரிகள் வந்தடையும் முன்பே முடிவடைந்தது.
நபி முஹம்மது (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்திக்களானார்கள், “இறைவா, நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம், தர்மமும் செய்திருக்க மாட்டோம், தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக!” என்று நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்தித்த நபிகளார் இணை வைப்பவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
“இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே, விரைவாகக் கணக்கு வழங்குபவனே. இறைவா! சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக் கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று மனமுருகிப் பிரார்த்தித்தார்கள். குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு நபிகளாருடன் முஸ்லிம்கள் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டனர்.

பாய்ந்து வந்த எதிரிகள் அகழைக் கண்டவுடன் பதுங்கினர். அகழைப் பார்த்தவர்கள் அதனை மாபெரும் சூழ்ச்சியாகக் கருதினர். அரபியல்லாதவரே இதைச் செய்திருக்க வேண்டுமென்று சரியாகக் கணித்தனர். பாரசீக நபித்தோழரான ஸல்மான் பார்ஸியின் யோசனையின்படி தான் அகழ் தோண்டும் திட்டத்தை நபிகளார் செயல்படுத்தியிருந்தார்கள்.
முஸ்லிம்களை முற்றுகையிடுவதற்காக நிராகரிப்பாளர்கள் அகழைச் சூழ்ந்து கொண்டனர். அகழைச் சுற்றி வந்தவர்கள் ஏதேனும் ஒரு வழியிருந்தால் உள்நுழைந்துவிடலாமென்று எண்ணி சுற்றி வந்தனர். ஆனால் எதிரிகளை நெருங்கவிடாமல் முஸ்லிம்கள் அம்பால் தாக்கினர். அகழை நெருங்கவும் முடியாமல், அதில் இறங்கவும் இயலாமல், மண்ணால் மூடி பாதை அமைக்கவும் முடியாமல் நிராகரிப்பாளர்கள் திண்டாடினர்.
“அன்றியும், முஸ்லிம்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய இறைநம்பிக்கையையும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தியது” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:56:2837, 2933, திருக்குர்ஆன் 33:22, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
இறைநம்பிக்கையாளர்கள் பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புபவர்களாக இருந்தனர். அவர்கள் மும்முரமாகத் தோண்டியதால் அப்பணி எதிரிகள் வந்தடையும் முன்பே முடிவடைந்தது.
நபி முஹம்மது (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்திக்களானார்கள், “இறைவா, நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம், தர்மமும் செய்திருக்க மாட்டோம், தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக!” என்று நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்தித்த நபிகளார் இணை வைப்பவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
“இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே, விரைவாகக் கணக்கு வழங்குபவனே. இறைவா! சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக் கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று மனமுருகிப் பிரார்த்தித்தார்கள். குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு நபிகளாருடன் முஸ்லிம்கள் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டனர்.

பாய்ந்து வந்த எதிரிகள் அகழைக் கண்டவுடன் பதுங்கினர். அகழைப் பார்த்தவர்கள் அதனை மாபெரும் சூழ்ச்சியாகக் கருதினர். அரபியல்லாதவரே இதைச் செய்திருக்க வேண்டுமென்று சரியாகக் கணித்தனர். பாரசீக நபித்தோழரான ஸல்மான் பார்ஸியின் யோசனையின்படி தான் அகழ் தோண்டும் திட்டத்தை நபிகளார் செயல்படுத்தியிருந்தார்கள்.
முஸ்லிம்களை முற்றுகையிடுவதற்காக நிராகரிப்பாளர்கள் அகழைச் சூழ்ந்து கொண்டனர். அகழைச் சுற்றி வந்தவர்கள் ஏதேனும் ஒரு வழியிருந்தால் உள்நுழைந்துவிடலாமென்று எண்ணி சுற்றி வந்தனர். ஆனால் எதிரிகளை நெருங்கவிடாமல் முஸ்லிம்கள் அம்பால் தாக்கினர். அகழை நெருங்கவும் முடியாமல், அதில் இறங்கவும் இயலாமல், மண்ணால் மூடி பாதை அமைக்கவும் முடியாமல் நிராகரிப்பாளர்கள் திண்டாடினர்.
“அன்றியும், முஸ்லிம்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய இறைநம்பிக்கையையும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தியது” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:56:2837, 2933, திருக்குர்ஆன் 33:22, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
இந்த புனித ரமலானில் இறைமறையின் கருத்துப்படி நாம் அனைவரும் தொழுகை, நோன்பு, ஜகாத் உள்பட அனைத்து கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றி இறைஅருளைப் பெறுவோம், ஆமீன்.
எல்லாம் வல்ல இறைவன் மனிதன் உள்பட இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தான். இறைவனின் படைப்பில் மிகவும் அழகிய படைப்பு, புத்திசாலித்தனமான படைப்பு மனித இனம் மட்டுமே. வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத வகையில் ஆறறிவுடன் மொழிகளை கற்றுக்கொண்டு பேசும் திறன், எழுதும் திறன் உள்பட பல்வேறு திறன்களை மனித இனத்திற்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.
இதுகுறித்து திருக்குர்ஆனில் (95:4) குறிப்பிடும்போது, ’நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ என்று தெரிவிக்கின்றான்.
ஒரு முறை நபிகள் (ஸல்) நாயகம் அவர்களை தோழர்கள் சிலர் சந்தித்து, ’அல்லாஹ்வின் தூதரே, இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை கேட்பதற்காக வந்திருக்கிறோம்’ என்றனர்.
அதற்கு நபிகள் பதில் கூறுகையில், ’ஆதியில் அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத்தவிர வேறு எந்தப்பொருளும் இல்லை. பிறகு அவனது சிம்மாசனம் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு லவ்ஹூல் மஹ்ஃபூலில் (பாதுகாக்கப்பட்ட பலகையில்) அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்களையும், பூமியையும் படைத்தான்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹூசைன் (ரலி), நூல்: புகாரி).
இறைவன் இந்த உலகத்தை எப்படிப் படைத்தான் என்பதை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் இது:

’நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்.அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு, ஆட்சிக்குக் கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)
தான் படைத்த மனிதன் தன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கட்டளையிடுகிறான்:
’(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை’ (7:55).
மனிதனை, இறைவன் படைத்தது எதற்காக?, அந்த ஏக இறைவனை வணங்கி அவன் அருள்பெறுவதற்காகவே. இந்த புனித ரமலானில் இறைமறையின் கருத்துப்படி நாம் அனைவரும் தொழுகை, நோன்பு, ஜகாத் உள்பட அனைத்து கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றி இறைஅருளைப் பெறுவோம், ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
இதுகுறித்து திருக்குர்ஆனில் (95:4) குறிப்பிடும்போது, ’நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ என்று தெரிவிக்கின்றான்.
ஒரு முறை நபிகள் (ஸல்) நாயகம் அவர்களை தோழர்கள் சிலர் சந்தித்து, ’அல்லாஹ்வின் தூதரே, இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை கேட்பதற்காக வந்திருக்கிறோம்’ என்றனர்.
அதற்கு நபிகள் பதில் கூறுகையில், ’ஆதியில் அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத்தவிர வேறு எந்தப்பொருளும் இல்லை. பிறகு அவனது சிம்மாசனம் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு லவ்ஹூல் மஹ்ஃபூலில் (பாதுகாக்கப்பட்ட பலகையில்) அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்களையும், பூமியையும் படைத்தான்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹூசைன் (ரலி), நூல்: புகாரி).
இறைவன் இந்த உலகத்தை எப்படிப் படைத்தான் என்பதை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் இது:

’நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்.அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு, ஆட்சிக்குக் கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)
தான் படைத்த மனிதன் தன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கட்டளையிடுகிறான்:
’(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை’ (7:55).
மனிதனை, இறைவன் படைத்தது எதற்காக?, அந்த ஏக இறைவனை வணங்கி அவன் அருள்பெறுவதற்காகவே. இந்த புனித ரமலானில் இறைமறையின் கருத்துப்படி நாம் அனைவரும் தொழுகை, நோன்பு, ஜகாத் உள்பட அனைத்து கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றி இறைஅருளைப் பெறுவோம், ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப்போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப்போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். அன்ஸாரி என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். மக்களோடு சேர்ந்து நபிகளாரும் அகழ் தோண்டலானார்கள்.
அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. அதை யாராலும் உடைக்க முடியவில்லை. அது பற்றி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்' என்று கூறிவிட்டு எழுந்தார்கள். மூன்று நாள்கள் எதையும் அவர்கள் உண்ணாமலிருந்ததால், ஒட்டிய வயிற்றில் நபிகளார் ஒரு கல்லைக் கட்டியிருந்தார்கள். அப்படியே வந்து நபி(ஸல்) அவர்கள் குந்தாலி ஒன்றை எடுத்துப் பாறை மீது ‘அல்லாஹ் மிகப்பெரியவன்! பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லியவாறே அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது.
இதைக் கண்ட ஜாபிர்(ரலி), நபிகளாரிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நான் வீடு வரை செல்ல அனுமதியுங்கள்' என்று கேட்டுச் சென்றார். ஜாபிர்(ரலி) தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவி சுஹைலா பின்த் மஸ்ஊத்திடம், 'நபி(ஸல்) அவர்கள் பசியோடிருப்பதைப் பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் உணவு இருக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு அவர், 'என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது' என்று கூறினார்.
உடனே ஜாபிர்(ரலி) அந்த ஆட்டுக் குட்டியை அறுத்து, தன் மனைவியைக் கோதுமையை அரைக்கப் பணித்து, மூன்று கற்களாலான அடுப்புக்கு மேல் சட்டியை வைத்து, பிறகு இறைச்சியைச் சட்டியிலிட்டு, குழைத்த மாவு இளம் பக்குவ நிலைக்கு வந்ததும், அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருக்கும்போது, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, 'என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது.

இறைத்தூதர் அவர்களே! நீங்களும் உங்களுடன் இன்னும் ஒருவர்... அல்லது இருவர் வாருங்கள்' என்று ஜாபிர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னிடம் எவ்வளவு உணவு இருக்கிறது?' என்று கேட்டார்கள். ஜாபிரும் அதன் அளவைக் கூறினார். 'இதுவே அதிகம், சிறந்ததும் கூட' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள், 'நான் வரும் வரையில் அடுப்பிலிருந்து சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல்' என்று கூறினார்கள். அங்கிருந்த தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்து சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்' என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.
ஜாபிர் தன் மனைவியிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு அவரது மனைவி “இறைவன் பார்த்துக் கொள்வான்” என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் வந்து சேர்ந்து, 'வீட்டிற்குள் முண்டியடிக்காமல் நுழையுங்கள்' என்று கூறினார்கள். அந்த உணவில் பரக்கத் - பெருக்கம் ஏற்பட நபிகளார் பிரார்த்தித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ஜாபிரின் மனைவியிடம், 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை உதவிக்கு அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்துத் தம் தோழர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து ரொட்டியின் மீது வைத்துக் கொடுத்தபடியும் இருந்தார்கள்.
வந்தவர்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி(ஸல்) அவர்கள் ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி, 'இதை நீயும் சாப்பிடு; அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர்' என்று கூறினார்கள்.
நபித்துவத்தின் பல அத்தாட்சிகள் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன.
ஸஹீஹ் புகாரி 3:56:2834, 3070, 4:64:4101
- ஜெஸிலா பானு.
அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. அதை யாராலும் உடைக்க முடியவில்லை. அது பற்றி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்' என்று கூறிவிட்டு எழுந்தார்கள். மூன்று நாள்கள் எதையும் அவர்கள் உண்ணாமலிருந்ததால், ஒட்டிய வயிற்றில் நபிகளார் ஒரு கல்லைக் கட்டியிருந்தார்கள். அப்படியே வந்து நபி(ஸல்) அவர்கள் குந்தாலி ஒன்றை எடுத்துப் பாறை மீது ‘அல்லாஹ் மிகப்பெரியவன்! பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லியவாறே அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது.
இதைக் கண்ட ஜாபிர்(ரலி), நபிகளாரிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நான் வீடு வரை செல்ல அனுமதியுங்கள்' என்று கேட்டுச் சென்றார். ஜாபிர்(ரலி) தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவி சுஹைலா பின்த் மஸ்ஊத்திடம், 'நபி(ஸல்) அவர்கள் பசியோடிருப்பதைப் பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் உணவு இருக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு அவர், 'என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது' என்று கூறினார்.
உடனே ஜாபிர்(ரலி) அந்த ஆட்டுக் குட்டியை அறுத்து, தன் மனைவியைக் கோதுமையை அரைக்கப் பணித்து, மூன்று கற்களாலான அடுப்புக்கு மேல் சட்டியை வைத்து, பிறகு இறைச்சியைச் சட்டியிலிட்டு, குழைத்த மாவு இளம் பக்குவ நிலைக்கு வந்ததும், அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருக்கும்போது, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, 'என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது.

இறைத்தூதர் அவர்களே! நீங்களும் உங்களுடன் இன்னும் ஒருவர்... அல்லது இருவர் வாருங்கள்' என்று ஜாபிர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னிடம் எவ்வளவு உணவு இருக்கிறது?' என்று கேட்டார்கள். ஜாபிரும் அதன் அளவைக் கூறினார். 'இதுவே அதிகம், சிறந்ததும் கூட' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள், 'நான் வரும் வரையில் அடுப்பிலிருந்து சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல்' என்று கூறினார்கள். அங்கிருந்த தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்து சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்' என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.
ஜாபிர் தன் மனைவியிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு அவரது மனைவி “இறைவன் பார்த்துக் கொள்வான்” என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் வந்து சேர்ந்து, 'வீட்டிற்குள் முண்டியடிக்காமல் நுழையுங்கள்' என்று கூறினார்கள். அந்த உணவில் பரக்கத் - பெருக்கம் ஏற்பட நபிகளார் பிரார்த்தித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ஜாபிரின் மனைவியிடம், 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை உதவிக்கு அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்துத் தம் தோழர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து ரொட்டியின் மீது வைத்துக் கொடுத்தபடியும் இருந்தார்கள்.
வந்தவர்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி(ஸல்) அவர்கள் ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி, 'இதை நீயும் சாப்பிடு; அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர்' என்று கூறினார்கள்.
நபித்துவத்தின் பல அத்தாட்சிகள் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன.
ஸஹீஹ் புகாரி 3:56:2834, 3070, 4:64:4101
- ஜெஸிலா பானு.
ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். எனவே இந்த ரமலான் மாதத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி ஜகாத்தை வழங்குவோம்.
இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் ஒரு மதம் அல்ல. ஒட்டுமொத்த வாழ்வியலைச் சொல்லித்தரும் ஒரு மார்க்கம்.
வாழ்வியலின் பல பகுதிகளையும் எடுத்துச்சொன்ன இஸ்லாம், பொருளாதாரத்தைப் பற்றிய மிக தெளிவான பார்வையையும் முன் வைக்கிறது.
‘பொருளாதார பின்னடைவு’, ‘வறுமைக்கோட்டிற்கு கீழ்’ என்பது போன்ற வார்த்தை ஜாலங்கள் இஸ்லாமிய பொருளாதாரத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை.
‘ஏழ்மையில்லாத பொருளாதாரம் ஏற்புடையது அல்ல’ என்று சொன்னவர்கள் மத்தியில், ‘அது தவறான அணுகுமுறை’ என்பதை நிரூபித்து காட்டியது இஸ்லாமிய பொருளாதாரம்.
பணத்தை மூலதனமாக்கி, ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் வட்டியை ‘கூடாது’ என்று தடுத்தது இஸ்லாம். வட்டியைத் தடுக்கச் சொல்லும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய மாற்றுமுறையைச் சொன்னால் தானே அது சாத்தியமாகும்.
திருக்குர்ஆன் தனது தெளிவான வசனத்தால் அதனையும் சொல்லித்தருகிறது:
“(மற்ற) மனிதர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்” (30:39).
உழைப்பின்றி பெறும் எந்த பயனையும் அனுபவிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. உழைப்பின்றி கிடைப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அவர்களின் வாழ்வை சீரழிப்பதும் வட்டி தான்.
உழைத்து சம்பாதித்ததில் 97½ சதவீதம் தான் பயன்படுத்தும் உரிமை மனிதனுக்கு உண்டு. மீதி 2½ சதவீதம் ‘ஜகாத்’ என்ற பெயரில் வறியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது இஸ்லாம்.
உழைப்பின் உண்மையான நோக்கம் என்ன?. நாம் மட்டும் இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது அல்ல. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து அனைவரும் இன்புற்று வாழ பாடுபடவேண்டும். இதை ‘ஜகாத்’ மற்றும் ‘ஸதகா’ ஆகிய தர்மங்கள் மூலம் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எல்லா மதங்களும் ‘தர்மம் செய்யுங்கள்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இஸ்லாம் கூறும் தர்மங்களின் மூலம் ஒரு பொருளாதார வழிகாட்டலைச் சொல்லித்தருகின்றது.
குறிப்பிட்டவர்களுக்குத் தான் ‘ஜகாத்’ கொடுக்கப்பட வேண்டும் என்று வரையறுத்து சொல்கிறது திருக்குர்ஆன். அதை தவிர்த்தால் அது ஜகாத்தைச் சேராது. ஸதகாவைச் சார்ந்து விடும்.
‘ஸதகா’ என்பது மனம்விரும்பி நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதாகும். இது கட்டாயம் இல்லை. இதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ‘ஸதகா’ செய்யவில்லை என்றால் குற்றம் இல்லை. ஆனால் ஜகாத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்டாயம் ஆகும். ஜகாத் கொடுக்காதவர்கள் சொர்க்கத்தின் வாசனையைக் கூட உணர முடியாது.

“மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத் (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்!” (2:177) என்று கூறுகிறது திருக்குர்ஆன்.
அதனால் தான் அல்லாஹ், எங்கெல்லாம் தன்னை வணங்குங்கள் என்று சொல்கிறானோ அங்கெல்லாம் ‘ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்று சேர்த்தே சொல்கிறான். அதுமட்டுமல்ல, ‘மறுமையில் நன்மையை நாடுபவர்கள் ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்றும் வலியுறுத்துகிறான்.
“நீங்கள் தொழுகையை கடைப்பிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் மரணத்திற்கு முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டியே அனுப்பி வைப்பீர்களோ அதையே மறுமையில் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்” என்கிறது திருக்குர்ஆன் (2:110).
ஜகாத் கொடுக்காதவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, “அவர்கள் ஜகாத் கொடுப்பதில்லை, அவர்கள் தான் மறுமையை நிராகரிப்பவர்கள்” (திருக்குர்ஆன் 41:7) என்கின்றான் இறைவன்.
“இவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நபியே கூறுவீராக” என்று திருக்குர்ஆன் (9:34) மூலம் எச்சரிக்கிறான் ஏக இறைவன்.
ஜகாத் என்ற இஸ்லாமிய பொருளாதாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டால், இந்த உலகில் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். அதோடு ஜகாத் கொடுத்தவர்கள் இம்மையிலும், மறுமையிலும் இரட்டிப்பு நன்மையை பெற்றுக்கொள்ளலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். அந்த கால இடைவெளி ரமலான் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ரமலானில் செய்யப்படும் தர்மம் ஒன்றிக்கு எழுபது மடங்கு நன்மை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த ரமலான் மாதத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி ஜகாத்தை வழங்குவோம், இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வோம்.
-எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
வாழ்வியலின் பல பகுதிகளையும் எடுத்துச்சொன்ன இஸ்லாம், பொருளாதாரத்தைப் பற்றிய மிக தெளிவான பார்வையையும் முன் வைக்கிறது.
‘பொருளாதார பின்னடைவு’, ‘வறுமைக்கோட்டிற்கு கீழ்’ என்பது போன்ற வார்த்தை ஜாலங்கள் இஸ்லாமிய பொருளாதாரத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை.
‘ஏழ்மையில்லாத பொருளாதாரம் ஏற்புடையது அல்ல’ என்று சொன்னவர்கள் மத்தியில், ‘அது தவறான அணுகுமுறை’ என்பதை நிரூபித்து காட்டியது இஸ்லாமிய பொருளாதாரம்.
பணத்தை மூலதனமாக்கி, ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் வட்டியை ‘கூடாது’ என்று தடுத்தது இஸ்லாம். வட்டியைத் தடுக்கச் சொல்லும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய மாற்றுமுறையைச் சொன்னால் தானே அது சாத்தியமாகும்.
திருக்குர்ஆன் தனது தெளிவான வசனத்தால் அதனையும் சொல்லித்தருகிறது:
“(மற்ற) மனிதர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்” (30:39).
உழைப்பின்றி பெறும் எந்த பயனையும் அனுபவிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. உழைப்பின்றி கிடைப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அவர்களின் வாழ்வை சீரழிப்பதும் வட்டி தான்.
உழைத்து சம்பாதித்ததில் 97½ சதவீதம் தான் பயன்படுத்தும் உரிமை மனிதனுக்கு உண்டு. மீதி 2½ சதவீதம் ‘ஜகாத்’ என்ற பெயரில் வறியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது இஸ்லாம்.
உழைப்பின் உண்மையான நோக்கம் என்ன?. நாம் மட்டும் இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது அல்ல. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து அனைவரும் இன்புற்று வாழ பாடுபடவேண்டும். இதை ‘ஜகாத்’ மற்றும் ‘ஸதகா’ ஆகிய தர்மங்கள் மூலம் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எல்லா மதங்களும் ‘தர்மம் செய்யுங்கள்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இஸ்லாம் கூறும் தர்மங்களின் மூலம் ஒரு பொருளாதார வழிகாட்டலைச் சொல்லித்தருகின்றது.
குறிப்பிட்டவர்களுக்குத் தான் ‘ஜகாத்’ கொடுக்கப்பட வேண்டும் என்று வரையறுத்து சொல்கிறது திருக்குர்ஆன். அதை தவிர்த்தால் அது ஜகாத்தைச் சேராது. ஸதகாவைச் சார்ந்து விடும்.
‘ஸதகா’ என்பது மனம்விரும்பி நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதாகும். இது கட்டாயம் இல்லை. இதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ‘ஸதகா’ செய்யவில்லை என்றால் குற்றம் இல்லை. ஆனால் ஜகாத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்டாயம் ஆகும். ஜகாத் கொடுக்காதவர்கள் சொர்க்கத்தின் வாசனையைக் கூட உணர முடியாது.

“மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத் (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்!” (2:177) என்று கூறுகிறது திருக்குர்ஆன்.
அதனால் தான் அல்லாஹ், எங்கெல்லாம் தன்னை வணங்குங்கள் என்று சொல்கிறானோ அங்கெல்லாம் ‘ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்று சேர்த்தே சொல்கிறான். அதுமட்டுமல்ல, ‘மறுமையில் நன்மையை நாடுபவர்கள் ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்றும் வலியுறுத்துகிறான்.
“நீங்கள் தொழுகையை கடைப்பிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் மரணத்திற்கு முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டியே அனுப்பி வைப்பீர்களோ அதையே மறுமையில் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்” என்கிறது திருக்குர்ஆன் (2:110).
ஜகாத் கொடுக்காதவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, “அவர்கள் ஜகாத் கொடுப்பதில்லை, அவர்கள் தான் மறுமையை நிராகரிப்பவர்கள்” (திருக்குர்ஆன் 41:7) என்கின்றான் இறைவன்.
“இவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நபியே கூறுவீராக” என்று திருக்குர்ஆன் (9:34) மூலம் எச்சரிக்கிறான் ஏக இறைவன்.
ஜகாத் என்ற இஸ்லாமிய பொருளாதாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டால், இந்த உலகில் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். அதோடு ஜகாத் கொடுத்தவர்கள் இம்மையிலும், மறுமையிலும் இரட்டிப்பு நன்மையை பெற்றுக்கொள்ளலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். அந்த கால இடைவெளி ரமலான் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ரமலானில் செய்யப்படும் தர்மம் ஒன்றிக்கு எழுபது மடங்கு நன்மை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த ரமலான் மாதத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி ஜகாத்தை வழங்குவோம், இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வோம்.
-எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
எந்த ஒரு செயலையும் இறைவனுக்காக, தூய்மையான எண்ணத்துடன் செய்தால் மட்டுமே அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். இறைவன் நம்மிடம் இருந்து அதை மட்டுமே எதிர்பார்க்கிறான்.
நமது எண்ணங்களும் செயல்களும் இறைவனின் திருப்பொருத்தத்தை நோக்கியே இருக்கவேண்டும். எந்த ஒரு செயலையும் இறைவனுக்காக, தூய்மையான எண்ணத்துடன் செய்தால் மட்டுமே அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். இறைவன் நம்மிடம் இருந்து அதை மட்டுமே எதிர்பார்க்கிறான்.
இதையே இந்த திருக்குர்ஆன் வசனம் (98:5) இவ்வாறு வலியுறுத்துகிறது:
’(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்
களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்‘.
இஸ்லாத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லி இருக்கும் எந்த ஒரு வணக்கமானாலும் அவற்றை எல்லாம் இணையாக் காமலும் (ஷிர்க்), முகஸ்துதியின்றி (ரியா), முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே செய்ய வேண்டும். அப்போது தான் அந்தக் காரியங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்த நபிமொழி ஒன்றை அபூ உமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள்:

நபிகளிடம் (ஸல்) ஒரு மனிதர் வந்து, ’அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடியும், தன்னைப்பற்றி பிறர் நினைவு கூரப்படுவதையும் நாடியவராக ஒருவர் போரில் கலந்து கொண்டார் என்றால் இறைவனின் முன்பு அவரது நிலை என்ன?‘ என்று கேட்டார்.
இதற்கு நபிகளார் பதில் அளிக்கையில் ’அவருக்கு எதுவும் இல்லை‘ என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவர்கள் கூறும்போது, ’நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் நற்காரியங்களைத்தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்வதில்லை‘ என்று தெரிவித்தார்கள். (நூல்: நஸயி)
மற்றொரு நபிமொழியில், ’நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்)தோற்றங் களையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கின்றான்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அறிவிப்பாளர்: அபூ ஹரைரா (ரலி), நூல்:முஸ்லிம்).
இந்த புனிதமான ரமலானில் நாம் உள்ளத்தூய்மையுடன், எண்ணங்களிலும் தூய்மையுடன் இறைவனிடம் இவ்வாறு வேண்டுவோம்:
’இறைவா, உனக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல்களைவிட்டு எங்களை பாதுகாத்து அருள்புரிவாயாக. உன் திருப்பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக எங்கள் எண்ணங்களையும், செயல்களையும் ஆக்கி வைப்பாயாக ரஹ்மானே‘, ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
இதையே இந்த திருக்குர்ஆன் வசனம் (98:5) இவ்வாறு வலியுறுத்துகிறது:
’(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்
களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்‘.
இஸ்லாத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லி இருக்கும் எந்த ஒரு வணக்கமானாலும் அவற்றை எல்லாம் இணையாக் காமலும் (ஷிர்க்), முகஸ்துதியின்றி (ரியா), முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே செய்ய வேண்டும். அப்போது தான் அந்தக் காரியங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்த நபிமொழி ஒன்றை அபூ உமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள்:

நபிகளிடம் (ஸல்) ஒரு மனிதர் வந்து, ’அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடியும், தன்னைப்பற்றி பிறர் நினைவு கூரப்படுவதையும் நாடியவராக ஒருவர் போரில் கலந்து கொண்டார் என்றால் இறைவனின் முன்பு அவரது நிலை என்ன?‘ என்று கேட்டார்.
இதற்கு நபிகளார் பதில் அளிக்கையில் ’அவருக்கு எதுவும் இல்லை‘ என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவர்கள் கூறும்போது, ’நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் நற்காரியங்களைத்தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்வதில்லை‘ என்று தெரிவித்தார்கள். (நூல்: நஸயி)
மற்றொரு நபிமொழியில், ’நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்)தோற்றங் களையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கின்றான்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அறிவிப்பாளர்: அபூ ஹரைரா (ரலி), நூல்:முஸ்லிம்).
இந்த புனிதமான ரமலானில் நாம் உள்ளத்தூய்மையுடன், எண்ணங்களிலும் தூய்மையுடன் இறைவனிடம் இவ்வாறு வேண்டுவோம்:
’இறைவா, உனக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல்களைவிட்டு எங்களை பாதுகாத்து அருள்புரிவாயாக. உன் திருப்பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக எங்கள் எண்ணங்களையும், செயல்களையும் ஆக்கி வைப்பாயாக ரஹ்மானே‘, ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதின் 21-ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று (2-ம் தேதி) மாலை தொடங்குகிறது.
துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதின் 21-ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று (2-ம்தேதி) வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது. ரமதான் மாதத்தின் ஏழாம் நாளில் தொடங்கி இருபதாம் நாள் வரை நடைபெறும் இந்தப் போட்டியில் சுமார் 103 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழா ரமதான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நிகழ்கின்றது. கடந்த ஒரு வாரமாக, துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ கட்டிடத்தில் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் நடைபெற்றன. பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர். ஒமர் அப்துல் காஃபி, ‘இறைவனின் அருள்’ என்ற தலைப்பில் ரமதான் முதல் நாள் உரை நிகழ்த்தினார்.

அரபி ஆங்கிலம் தவிர, தமிழ், மலையாளம், வங்காள மொழிகளிலும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்காக மட்டும் எட்டு நாட்களுக்கு விரிவுரைகளும் துபாய் மகளிர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் டாக்டர் முகம்மது இமாம், 'மிகுந்த கலக்கமடைந்த உலகில் மனிதனுக்கு இறுதி பாதுகாப்பான புகலிடம்’ என்ற தலைப்பில் விரிவுரையைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறுகிறது. கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா ஒழுங்கமைப்புக் குழு அமைத்து இந்நிகழ்ச்சிகளைச் சாத்தியப்படுத்துகிறார்.
ஒழுங்குபடுத்தும் குழுவின் உறுப்பினர் மற்றும் ஊடகப் பிரிவின் தலைவர் அஹ்மத் அல் ஜஹித், அனைத்து விருது நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறினார். "டு (Du) சந்தாதாரர்கள் இணைய நெறிமுறை (IPTV 20 மற்றும் 653) அல்லது du view இலவச பயன்பாட்டின், சேனல் 1 வழியாக எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, இப்போட்டிக் குழுவினர் பல வகையான கேள்விகள் கேட்டு அதில் தேர்வாகி ஆரம்பச் சுற்றில் தகுதி பெற்றவர்களை மட்டுமே மேடையேற்றுவார்கள். குர்ஆன் மனனப் போட்டியின் முதல் பரிசு திர்ஹம் 200,000/- (இந்திய ரூபாய் முப்பத்தைந்து லட்சம்), இரண்டாம் பரிசு திர்ஹம் 150,000/- (இந்திய ரூபாய் இருபத்தி ஆறு லட்சம்) மற்றும் மூன்றாம் பரிசும் திர்ஹம் 150,000/-. இது தவிர நல்ல உச்சரிப்புடன் அழகான குரல்வளத்துக்கான பரிசுகளும் தனியாக வழங்கப்பட உள்ளன.
உலகத்திலேயே குர்ஆனுக்காக நடத்தப்படும் போட்டிகளில் துபாயில் நடத்தப்படும் இந்தச் சர்வதேசப் போட்டியே மிகப் பெரிய அளவில் நடைபெறும் போட்டி. இதில் வழங்கப்படும் பரிசு மிகவும் மேன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெஸிலா பானு.
இவ்விழா ரமதான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நிகழ்கின்றது. கடந்த ஒரு வாரமாக, துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ கட்டிடத்தில் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் நடைபெற்றன. பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர். ஒமர் அப்துல் காஃபி, ‘இறைவனின் அருள்’ என்ற தலைப்பில் ரமதான் முதல் நாள் உரை நிகழ்த்தினார்.

அரபி ஆங்கிலம் தவிர, தமிழ், மலையாளம், வங்காள மொழிகளிலும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்காக மட்டும் எட்டு நாட்களுக்கு விரிவுரைகளும் துபாய் மகளிர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் டாக்டர் முகம்மது இமாம், 'மிகுந்த கலக்கமடைந்த உலகில் மனிதனுக்கு இறுதி பாதுகாப்பான புகலிடம்’ என்ற தலைப்பில் விரிவுரையைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறுகிறது. கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா ஒழுங்கமைப்புக் குழு அமைத்து இந்நிகழ்ச்சிகளைச் சாத்தியப்படுத்துகிறார்.
ஒழுங்குபடுத்தும் குழுவின் உறுப்பினர் மற்றும் ஊடகப் பிரிவின் தலைவர் அஹ்மத் அல் ஜஹித், அனைத்து விருது நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறினார். "டு (Du) சந்தாதாரர்கள் இணைய நெறிமுறை (IPTV 20 மற்றும் 653) அல்லது du view இலவச பயன்பாட்டின், சேனல் 1 வழியாக எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, இப்போட்டிக் குழுவினர் பல வகையான கேள்விகள் கேட்டு அதில் தேர்வாகி ஆரம்பச் சுற்றில் தகுதி பெற்றவர்களை மட்டுமே மேடையேற்றுவார்கள். குர்ஆன் மனனப் போட்டியின் முதல் பரிசு திர்ஹம் 200,000/- (இந்திய ரூபாய் முப்பத்தைந்து லட்சம்), இரண்டாம் பரிசு திர்ஹம் 150,000/- (இந்திய ரூபாய் இருபத்தி ஆறு லட்சம்) மற்றும் மூன்றாம் பரிசும் திர்ஹம் 150,000/-. இது தவிர நல்ல உச்சரிப்புடன் அழகான குரல்வளத்துக்கான பரிசுகளும் தனியாக வழங்கப்பட உள்ளன.
உலகத்திலேயே குர்ஆனுக்காக நடத்தப்படும் போட்டிகளில் துபாயில் நடத்தப்படும் இந்தச் சர்வதேசப் போட்டியே மிகப் பெரிய அளவில் நடைபெறும் போட்டி. இதில் வழங்கப்படும் பரிசு மிகவும் மேன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெஸிலா பானு.
‘பொறுமையைக்கொண்டும், தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு பெரும் பாரமாகவே இருக்கும்’. (2:45)
புனிதமான இந்த ரமலான் நாட்களில் இறையச்சத்துடன் நாம் நல்ல அமல்களைச் செய்தால், அதற்கான கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்ளலாம். இறையச்சம் இன்றி நம்முடைய மனம் விரும்பியபடி செயல்பட்டு பாவம் செய்தால் மறுமையில் மிகப்பெரிய நஷ்டத்தைத்தான் சந்திக்க நேரிடும்.
ஐம்பது நேரத்தொழுகை, 6 மாதகாலம் நோன்பு என முந்தைய சமுதாயத்திற்கு இறைவன் கட்டளையிட்டிருந்தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றலாகிய நமக்கு இறைவன் மிக எளிதான நற்செயல்களையே தந்துள்ளான். இதன்படி நமக்கு தினமும் ஐந்து நேரத்தொழுகையும், ஒரு ஆண்டில் ரமலானில் மட்டும் ஒரு மாத நோன்பும் கடமையாக்கி இருக்கிறான்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘பொறுமையைக்கொண்டும், தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு பெரும் பாரமாகவே இருக்கும்’. (2:45)
‘நிச்சயமாக யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ, அவர்களின் நற்கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (2:62)

இறைவன் மனித சமுதாயத்திற்கு இலகுவான விஷயங்களையே விரும்புகின்றான். இதையே திருக்குர்ஆன் (2:185), ‘இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான், சிரமத்தை விரும்பவில்லை’ என்று குறிப்பிடுகிறது.
ஐந்து நேரத்தொழுகையின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
‘(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்து கொள்ளும் தொழுகையாகும். (17:78)
‘தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்’ என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம். (17:79)
குறைந்த அளவு அமல்கள் (நற்செயல்கள்) செய்தாலும், நிறைவான பலன்களை இறைவன் நமக்குத்தருகிறான். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அமல்களைச் செய்து அதிக நன்மைகளைப் பெற இந்த ரமலானில் நாம் முயற்சி செய்வோமாக, ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
ஐம்பது நேரத்தொழுகை, 6 மாதகாலம் நோன்பு என முந்தைய சமுதாயத்திற்கு இறைவன் கட்டளையிட்டிருந்தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றலாகிய நமக்கு இறைவன் மிக எளிதான நற்செயல்களையே தந்துள்ளான். இதன்படி நமக்கு தினமும் ஐந்து நேரத்தொழுகையும், ஒரு ஆண்டில் ரமலானில் மட்டும் ஒரு மாத நோன்பும் கடமையாக்கி இருக்கிறான்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘பொறுமையைக்கொண்டும், தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு பெரும் பாரமாகவே இருக்கும்’. (2:45)
‘நிச்சயமாக யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ, அவர்களின் நற்கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (2:62)

இறைவன் மனித சமுதாயத்திற்கு இலகுவான விஷயங்களையே விரும்புகின்றான். இதையே திருக்குர்ஆன் (2:185), ‘இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான், சிரமத்தை விரும்பவில்லை’ என்று குறிப்பிடுகிறது.
ஐந்து நேரத்தொழுகையின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
‘(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்து கொள்ளும் தொழுகையாகும். (17:78)
‘தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்’ என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம். (17:79)
குறைந்த அளவு அமல்கள் (நற்செயல்கள்) செய்தாலும், நிறைவான பலன்களை இறைவன் நமக்குத்தருகிறான். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அமல்களைச் செய்து அதிக நன்மைகளைப் பெற இந்த ரமலானில் நாம் முயற்சி செய்வோமாக, ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மதிநுட்பத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருந்ததோடு நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியை யூதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேரடியாக முஸ்லிம்களை எதிர்க்க முடியாதவர்கள் சூழ்ச்சியாலும் சதித்திட்டத்தாலும் முஸ்லிம்களுக்குப் பலவகையான இடையூறுகளை தந்தனர்.
அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் முஸ்லிம் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மதிநுட்பத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருந்ததோடு நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மதீனாவில் இருந்து கொண்டே முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நழீர் குலத்தவர்களை முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து முற்றிலுமாக நாடு கடத்தினர்.
முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளும், யூதர்களும் மற்ற குலத்தவர்களும் ஒன்று திரண்டனர். கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் திரண்டனர். இது பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த உடன், ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டி மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதைப் பற்றி நபிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
பெரும்படையாகத் திரண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மிகவும் மதிநுட்ப மிக்கதாகவும், அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) முன் வைத்த கருத்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீச்சை மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. ஆகையால் அப்பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டுமே வழியாக அமைய முடியும். அந்த வழியில் அவர்கள் வர இயலாதபடி செய்வதற்கான திட்டத்தையே ஆமோதித்தனர்.
அப்பெரும்படை மதீனாவை வந்தடையாதவாறு அகழை வடக்குப் பகுதியில் தோண்ட வேண்டும். நாற்பது முழம் அகழ் தோண்ட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வத்தோடு பத்து நபர்கள் கொண்ட குழுக்களை அமைத்தார்கள். ஒவ்வொரு குழுவினரும் நாற்பது முழம் அகழ் தோண்ட வேண்டுமென்று பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபி(ஸல்) முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.
பணி ஆரம்பித்தது. மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே! அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்" என்று பிரார்த்தித்தபடி பணியைத் தொடங்கினார்கள். அதற்குப் பதில் தரும் வண்ணமாக நபித்தோழர்கள் “நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்” என்றனர்.
ஸஹீஹ் புகாரி 3:56:2834, 2836
- ஜெஸிலா பானு
அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் முஸ்லிம் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மதிநுட்பத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருந்ததோடு நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மதீனாவில் இருந்து கொண்டே முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நழீர் குலத்தவர்களை முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து முற்றிலுமாக நாடு கடத்தினர்.
முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளும், யூதர்களும் மற்ற குலத்தவர்களும் ஒன்று திரண்டனர். கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் திரண்டனர். இது பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த உடன், ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டி மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதைப் பற்றி நபிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
பெரும்படையாகத் திரண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மிகவும் மதிநுட்ப மிக்கதாகவும், அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) முன் வைத்த கருத்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீச்சை மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. ஆகையால் அப்பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டுமே வழியாக அமைய முடியும். அந்த வழியில் அவர்கள் வர இயலாதபடி செய்வதற்கான திட்டத்தையே ஆமோதித்தனர்.
அப்பெரும்படை மதீனாவை வந்தடையாதவாறு அகழை வடக்குப் பகுதியில் தோண்ட வேண்டும். நாற்பது முழம் அகழ் தோண்ட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வத்தோடு பத்து நபர்கள் கொண்ட குழுக்களை அமைத்தார்கள். ஒவ்வொரு குழுவினரும் நாற்பது முழம் அகழ் தோண்ட வேண்டுமென்று பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபி(ஸல்) முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.
பணி ஆரம்பித்தது. மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே! அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்" என்று பிரார்த்தித்தபடி பணியைத் தொடங்கினார்கள். அதற்குப் பதில் தரும் வண்ணமாக நபித்தோழர்கள் “நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்” என்றனர்.
ஸஹீஹ் புகாரி 3:56:2834, 2836
- ஜெஸிலா பானு






