என் மலர்
இஸ்லாம்
பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இறைவனை அஞ்சுகின்ற, ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்குவதே நோன்பின் நோக்கம். நோன்பு எப்படி ஒழுக்கமுள்ள மனிதனாக ஒருவரை உருவாக்கும் என்ற கேள்வி எழுகின்றது.
“பசித்திரு, தனித்திரு, விழித்திரு” இது ஆன்மிகத்திற்கான பயிற்சிகளாகக் கருதப்படுகின்றது. ரமலானின் இம்மூன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
‘‘ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்” என்பார்கள். ரமலானின் பகலில் உணவு, நீர், இச்சை ஆகியவற்றை துறப்பதால் ஆன்மிக உணர்வு கூர்மை பெறுகின்றன. பார்வை தெரியாதவர்களுக்கு தொடு உணர்ச்சியும், கேட்கும் திறனும் அதிகப்படுவதுபோல் உணவு, இச்சைகளைத் துறப்பவர்களுக்கு இறை சிந்தனை, பக்தி, உளத்தூய்மை ஏற்படுகின்றது.
நோன்பின்போது தீமைகளைச் செய்வதை நோன்பாளிகள் தவிர்க்கின்றனர். நோன்பின்போது பயிற்சியாகப் பெற்றதை பின்னர் அவர்களின் பழக்கமான, இயல்பாக மாறிவிடுகிறது.
நோன்பு எவருக்கும் வெளிப்படையாகவே தெரியாமல் செய்யும் வணக்கமாகும். தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை பிறர் அறியும் வாய்ப்பு உண்டு. ஆனால் நோன்பின்போது இறைவன் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வே மறைவிடத்திலும் உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் அவனை தடுக்கிறது. எனவே இம்மாதத்தில் இறை உணர்வு இன்னும் வலுப்பெறுகிறது. பகட்டுக்காக அன்றி படைத்தவனின் திருப்திக்காகவே ஒரு செயலை செய்ய பயிற்சி அளிக்கின்றது. உளத்தூய்மை தருகின்றது.
நோன்பு பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. பசி, தாகத்தை அடக்குதல், சினத்தை கட்டுப்படுத்துதல், நாவை பேணுதல், உணர்ச்சிவசப்படாதிருத்தல் ஆகியவை நோன்பின் மூலம் கிட்டுகின்றன.
இவ்வாறு பயிற்சி பெற்றவர் வாழ்க்கையில் நெருக்கடிகளையும், சிரமங்களையும் எளிதாகத் தாங்கிக் கொள்ளும் பண்பைப் பெறுகிறார். ஒரு மாதத்திற்கு பிறகும் இப்பண்புகள் தொடருமானால் முழுமையான மனிதராக அவர் மாறி விடுவார். எனவே நோன்பு என்பது வெறும் பட்டினியும், தாகமும் அல்ல. ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சித் திட்டம். இத்தகைய பயிற்சியைப் பெறாதவர் நோன்பின் முழுப்பலனையும், நிறைவான கூலியையும் பெறமாட்டார். பயிற்சி பெறாத நோன்பாளிகளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்
“எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை. (நோன்பிற்கான கூலி கிட்டுவதில்லை.)” (தாரமி). எனவே நோன்பாளிகள் ஒழுக்கப் பயிற்சி பெறுவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
“பசித்திரு, தனித்திரு, விழித்திரு” இது ஆன்மிகத்திற்கான பயிற்சிகளாகக் கருதப்படுகின்றது. ரமலானின் இம்மூன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
‘‘ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்” என்பார்கள். ரமலானின் பகலில் உணவு, நீர், இச்சை ஆகியவற்றை துறப்பதால் ஆன்மிக உணர்வு கூர்மை பெறுகின்றன. பார்வை தெரியாதவர்களுக்கு தொடு உணர்ச்சியும், கேட்கும் திறனும் அதிகப்படுவதுபோல் உணவு, இச்சைகளைத் துறப்பவர்களுக்கு இறை சிந்தனை, பக்தி, உளத்தூய்மை ஏற்படுகின்றது.
நோன்பின்போது தீமைகளைச் செய்வதை நோன்பாளிகள் தவிர்க்கின்றனர். நோன்பின்போது பயிற்சியாகப் பெற்றதை பின்னர் அவர்களின் பழக்கமான, இயல்பாக மாறிவிடுகிறது.
நோன்பு எவருக்கும் வெளிப்படையாகவே தெரியாமல் செய்யும் வணக்கமாகும். தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை பிறர் அறியும் வாய்ப்பு உண்டு. ஆனால் நோன்பின்போது இறைவன் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வே மறைவிடத்திலும் உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் அவனை தடுக்கிறது. எனவே இம்மாதத்தில் இறை உணர்வு இன்னும் வலுப்பெறுகிறது. பகட்டுக்காக அன்றி படைத்தவனின் திருப்திக்காகவே ஒரு செயலை செய்ய பயிற்சி அளிக்கின்றது. உளத்தூய்மை தருகின்றது.
நோன்பு பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. பசி, தாகத்தை அடக்குதல், சினத்தை கட்டுப்படுத்துதல், நாவை பேணுதல், உணர்ச்சிவசப்படாதிருத்தல் ஆகியவை நோன்பின் மூலம் கிட்டுகின்றன.
இவ்வாறு பயிற்சி பெற்றவர் வாழ்க்கையில் நெருக்கடிகளையும், சிரமங்களையும் எளிதாகத் தாங்கிக் கொள்ளும் பண்பைப் பெறுகிறார். ஒரு மாதத்திற்கு பிறகும் இப்பண்புகள் தொடருமானால் முழுமையான மனிதராக அவர் மாறி விடுவார். எனவே நோன்பு என்பது வெறும் பட்டினியும், தாகமும் அல்ல. ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சித் திட்டம். இத்தகைய பயிற்சியைப் பெறாதவர் நோன்பின் முழுப்பலனையும், நிறைவான கூலியையும் பெறமாட்டார். பயிற்சி பெறாத நோன்பாளிகளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்
“எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை. (நோன்பிற்கான கூலி கிட்டுவதில்லை.)” (தாரமி). எனவே நோன்பாளிகள் ஒழுக்கப் பயிற்சி பெறுவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
நோன்பு ஒரு பட்டினியா? தன்னைத் தானே வருத்தும் செயலா? நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை? அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.
நோன்பு ஒரு பட்டினியா? தன்னைத் தானே வருத்தும் செயலா? நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை? அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.
தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அதே வேளையில் எந்தத் துறையிலும் ஒரு சில பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும்போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் அந்தச் சிரமங்கள் மனிதனை துன்புறுத்துவதாகவோ, இயற் கைக்கு எதிரானதாகவோ, அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவோ இருக்கக் கூடாது.
நோன்பின் நோக்கம் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தயாள சிந்தனை, சமூக உணர்வுடைய மனிதனை உருவாக்குவதே ஆகும். நோன்பின் நோக்கம் ஒழுக்கமே என்கிறது திருக்குர்ஆன்.
நோன்பு மட்டுமல்ல. இஸ்லாம் கடமையாக்கியுள்ள அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இதுவேயாகும். திருக்குர்ஆன் ஒழுக்கத்திற்கு - இறையச்சம், இறை உணர்வு (தக்வா) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “இறையச்சம்” என்பது இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், அவன் பார்வையிலிருந்தும், பிடியிலிருந்தும் எவரும் தப்ப முடியாது. சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றலாம். இறைவனை ஏமாற்ற முடியாது என்பதே ஆகும்.
உலகில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவோர் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.
“எவர் (நோன்பு நோற்ற நிலையில்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையுமில்லை” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). (புகாரி) நோன்பாளிகள் பொய்யர்களாக இருக்கலாகாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
ரமலானில் பள்ளிவாசலில் இரு தோழர்கள் புறம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) “உங்கள் நோன்பு வீணாகிவிட்டது. அதற்கு பகரமாக புதிய நோன்பு ஒன்றை நோற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். புறம் பேசினால் நோன்பு முறியும் என்பது இங்கு புலப்படுகிறது.
“நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் நாவால் கெட்ட சொற்களை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். நோன்பாளியிடம் எவராவது வசை மொழி கூறினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர் நினைவில் கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இங்கு நாவை பேணும் பயிற்சி நோன்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நோன்பு ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி அளிக்கின்றது.
நோன்பு ஒரு சடங்கல்ல. ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சித் திட்டமாகும்.
தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அதே வேளையில் எந்தத் துறையிலும் ஒரு சில பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும்போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் அந்தச் சிரமங்கள் மனிதனை துன்புறுத்துவதாகவோ, இயற் கைக்கு எதிரானதாகவோ, அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவோ இருக்கக் கூடாது.
நோன்பின் நோக்கம் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தயாள சிந்தனை, சமூக உணர்வுடைய மனிதனை உருவாக்குவதே ஆகும். நோன்பின் நோக்கம் ஒழுக்கமே என்கிறது திருக்குர்ஆன்.
நோன்பு மட்டுமல்ல. இஸ்லாம் கடமையாக்கியுள்ள அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இதுவேயாகும். திருக்குர்ஆன் ஒழுக்கத்திற்கு - இறையச்சம், இறை உணர்வு (தக்வா) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “இறையச்சம்” என்பது இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், அவன் பார்வையிலிருந்தும், பிடியிலிருந்தும் எவரும் தப்ப முடியாது. சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றலாம். இறைவனை ஏமாற்ற முடியாது என்பதே ஆகும்.
உலகில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவோர் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.
“எவர் (நோன்பு நோற்ற நிலையில்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையுமில்லை” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). (புகாரி) நோன்பாளிகள் பொய்யர்களாக இருக்கலாகாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
ரமலானில் பள்ளிவாசலில் இரு தோழர்கள் புறம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) “உங்கள் நோன்பு வீணாகிவிட்டது. அதற்கு பகரமாக புதிய நோன்பு ஒன்றை நோற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். புறம் பேசினால் நோன்பு முறியும் என்பது இங்கு புலப்படுகிறது.
“நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் நாவால் கெட்ட சொற்களை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். நோன்பாளியிடம் எவராவது வசை மொழி கூறினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர் நினைவில் கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இங்கு நாவை பேணும் பயிற்சி நோன்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நோன்பு ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி அளிக்கின்றது.
நோன்பு ஒரு சடங்கல்ல. ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சித் திட்டமாகும்.
நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமலான் வாழ்த்துகள்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் இசுலாமியர்கள் புனித ரமதான் மாதம் வந்து விட்டால் சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை தங்களைப் படைத்த ஏக இறைவனுக்காக பசி, தாகம் மறந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதே நோன்பாகும்.
"நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" என்கிறது திருக்குர்ஆன் (2:183-185).
இறைநம்பிக்கையுடையவர்கள் இறைவனுக்காகத் தமது பசியையும் தாகத்தையும் மறந்தால் மட்டும் போதுமா என்றால் இல்லை. அவர்கள் தம் உணர்வுகளையும் இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்வதே நோன்பின் சிறப்பு.
கட்டுப்பாடு என்பது என்ன? வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமதான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுயக் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்தப் பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகக் கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.
ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதைப் பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.
‘நோன்பைப் பாவங்களின் கேடயம்’ என்றும் ‘யாருடனும் சண்டை போடக் கூடாது. ‘யாரேனும் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்தாலும் “நான் நோன்பாளி” என்று சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்’ என்றும், ‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ என்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) சொல்லியதிலிருந்து சாப்பிடாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பல்ல என்பது திண்ணம்.
'நோன்பு இருப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறீர்கள்' என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ரமதான் உணவிற்கான மாதமல்ல. காலையில் தூக்கத்தைவிட்டு எழுந்து நான்கு மணிக்கு முன்பாக ஏதாவது சாப்பிடுவது பருகுவது மிகவும் கடினமான காரியம் என்று நோன்பிருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதே போல் மாலையில் நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்பதே உண்மை.
திருக்குர்ஆன் அருளப்பட்டது புனித ரமதான் மாதத்தில்தான். இப்புனித மாதத்தில் இறைவனை அதிகம் நினைத்து தியானிக்க வேண்டும். நமக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட திருக்குர்ஆனை ஓத வேண்டும். பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
இந்த மாதத்தில் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும். அதனாலேயே நோன்பு நாட்கள் முடிந்து வரும் பெருநாளை 'ஈத் ஃபித்ர்' என்கிறோம் அதாவது ஈகைத்திருநாள். பெருநாள் அன்று பள்ளிக்குத் தொழுகைக்கு முன்பாகக் கட்டாயத் தர்மத்தை நிறைவேற்றிய பிறகே ஈத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளில் நோன்பிருக்கக் கூடாது. காலையில் பசியாறியப் பிறகே பள்ளிக்குத் தொழச் செல்ல வேண்டும்.
நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமதான் வாழ்த்துகள்.
- ஜெஸிலா பானு.
"நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" என்கிறது திருக்குர்ஆன் (2:183-185).
இறைநம்பிக்கையுடையவர்கள் இறைவனுக்காகத் தமது பசியையும் தாகத்தையும் மறந்தால் மட்டும் போதுமா என்றால் இல்லை. அவர்கள் தம் உணர்வுகளையும் இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்வதே நோன்பின் சிறப்பு.
கட்டுப்பாடு என்பது என்ன? வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமதான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுயக் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்தப் பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகக் கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.
ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதைப் பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.
‘நோன்பைப் பாவங்களின் கேடயம்’ என்றும் ‘யாருடனும் சண்டை போடக் கூடாது. ‘யாரேனும் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்தாலும் “நான் நோன்பாளி” என்று சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்’ என்றும், ‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ என்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) சொல்லியதிலிருந்து சாப்பிடாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பல்ல என்பது திண்ணம்.
'நோன்பு இருப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறீர்கள்' என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ரமதான் உணவிற்கான மாதமல்ல. காலையில் தூக்கத்தைவிட்டு எழுந்து நான்கு மணிக்கு முன்பாக ஏதாவது சாப்பிடுவது பருகுவது மிகவும் கடினமான காரியம் என்று நோன்பிருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதே போல் மாலையில் நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்பதே உண்மை.
திருக்குர்ஆன் அருளப்பட்டது புனித ரமதான் மாதத்தில்தான். இப்புனித மாதத்தில் இறைவனை அதிகம் நினைத்து தியானிக்க வேண்டும். நமக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட திருக்குர்ஆனை ஓத வேண்டும். பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
இந்த மாதத்தில் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும். அதனாலேயே நோன்பு நாட்கள் முடிந்து வரும் பெருநாளை 'ஈத் ஃபித்ர்' என்கிறோம் அதாவது ஈகைத்திருநாள். பெருநாள் அன்று பள்ளிக்குத் தொழுகைக்கு முன்பாகக் கட்டாயத் தர்மத்தை நிறைவேற்றிய பிறகே ஈத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளில் நோன்பிருக்கக் கூடாது. காலையில் பசியாறியப் பிறகே பள்ளிக்குத் தொழச் செல்ல வேண்டும்.
நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமதான் வாழ்த்துகள்.
- ஜெஸிலா பானு.
ரமலானில் இதுவும், இன்னும் பல நன்மைகளும், ஆன்மிக, ஒழுக்கப் பயிற்சிகளும் நிரம்பி இருப்பதாலும் இறைவனின் அருள் பொழியப்படுவதாலும் மக்கள் ரமலானை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.02 மணி
இப்தார்: மாலை 6.33 மணி
ரமலானின் வருகைக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரமலானுக்கான ஏற்பாடுகளையும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடுவார்கள். சிறப்பு தொழுகைக்காகவும் நோன்பு திறப்பதற்காகவும் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ரமலானில் முழுக்கவனத்தையும், வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்புக் கோருதல், தானதர்மம் வழங்குதல் ஆகியவற்றில் செலுத்த வேண்டியதிருப்பதால் ரமலானுக்கு முன்னரே முக்கிய வேலைகளை முடித்து வைப்பார்கள்.
ரமலானை எவரும் சுமையாக, கடினமாகக் கருதுவதில்லை. ஆழ்ந்து உறங்கும் இரவின் பின்பகுதியில் நோன்பு வைப்பதற்காக எழுந்து உணவருந்துதல், பகல் முழுவதும் உண்ணாதிருத்தல், இரவில் நீண்ட வழிபாடுகள், இவற்றுக்கிடையே அன்றாட அலுவல்கள் என்றிருந்தாலும் எல்லோரும் ரமலானை விருப்பமுடன் செய்வர்.
நோன்பு வைக்காதிருப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். குழந்தைகள், சிறார்கள், முதியோர், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் நோன்பு வைப்பதிலிருந்து ரமலானின் மீது மக்கள் காட்டும் ஆர்வம் தெளிவாகிறது.
ரமலானின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். பிற மாதங்களைவிட ரமலானுக்கு ஏன் இப்படி மரியாதை, சிறப்பு? இதற்கான விடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள்.
‘மக்களே! மகத்துவமும் அருள்வளமும் மிக்க மாதம் உங்களை நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு (குர்ஆன் அருளப்படத் தொடங்கிய இரவு) ஆயிரம் மாதங்களைவிட சிறந்தவையாகும். இம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி உள்ளான். இம்மாதத்தில் இரவுகளில் தொழுவது உபரிக் கடமையாக ஆக்கியுள்ளான். எவர் இந்த மாதத்தில் ஒரு உபரியான (கட்டாயமாக்கப்படாத) ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் ஒரு கட்டாயக் கடமையைச் செய்த நன்மையைப் பெறுவார். எவர் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்ட ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் எழுபது நற்செயலை நிறைவேற்றியவர் போல் ஆவார்’.
‘இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சுவனமாகும். மேலும் இம்மாதம் சமூகத்திலுள்ள ஏழைகள், தேவையுடையோர் மீது அனுதாபப்பட்டு பரிவுடன் நடத்த வேண்டிய மாதமாகும். ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையில் நற்கூலியை பெறும் எண்ணத்துடனும் நோன்பு நோற்பாராயின் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவான்’. (நூல் : புகாரி, முஸ்லிம்)
ரமலானில் இதுவும், இன்னும் பல நன்மைகளும், ஆன்மிக, ஒழுக்கப் பயிற்சிகளும் நிரம்பி இருப்பதாலும் இறைவனின் அருள் பொழியப்படுவதாலும் மக்கள் ரமலானை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
இப்தார்: மாலை 6.33 மணி
ரமலானின் வருகைக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரமலானுக்கான ஏற்பாடுகளையும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடுவார்கள். சிறப்பு தொழுகைக்காகவும் நோன்பு திறப்பதற்காகவும் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ரமலானில் முழுக்கவனத்தையும், வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்புக் கோருதல், தானதர்மம் வழங்குதல் ஆகியவற்றில் செலுத்த வேண்டியதிருப்பதால் ரமலானுக்கு முன்னரே முக்கிய வேலைகளை முடித்து வைப்பார்கள்.
ரமலானை எவரும் சுமையாக, கடினமாகக் கருதுவதில்லை. ஆழ்ந்து உறங்கும் இரவின் பின்பகுதியில் நோன்பு வைப்பதற்காக எழுந்து உணவருந்துதல், பகல் முழுவதும் உண்ணாதிருத்தல், இரவில் நீண்ட வழிபாடுகள், இவற்றுக்கிடையே அன்றாட அலுவல்கள் என்றிருந்தாலும் எல்லோரும் ரமலானை விருப்பமுடன் செய்வர்.
நோன்பு வைக்காதிருப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். குழந்தைகள், சிறார்கள், முதியோர், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் நோன்பு வைப்பதிலிருந்து ரமலானின் மீது மக்கள் காட்டும் ஆர்வம் தெளிவாகிறது.
ரமலானின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். பிற மாதங்களைவிட ரமலானுக்கு ஏன் இப்படி மரியாதை, சிறப்பு? இதற்கான விடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள்.
‘மக்களே! மகத்துவமும் அருள்வளமும் மிக்க மாதம் உங்களை நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு (குர்ஆன் அருளப்படத் தொடங்கிய இரவு) ஆயிரம் மாதங்களைவிட சிறந்தவையாகும். இம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி உள்ளான். இம்மாதத்தில் இரவுகளில் தொழுவது உபரிக் கடமையாக ஆக்கியுள்ளான். எவர் இந்த மாதத்தில் ஒரு உபரியான (கட்டாயமாக்கப்படாத) ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் ஒரு கட்டாயக் கடமையைச் செய்த நன்மையைப் பெறுவார். எவர் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்ட ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் எழுபது நற்செயலை நிறைவேற்றியவர் போல் ஆவார்’.
‘இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சுவனமாகும். மேலும் இம்மாதம் சமூகத்திலுள்ள ஏழைகள், தேவையுடையோர் மீது அனுதாபப்பட்டு பரிவுடன் நடத்த வேண்டிய மாதமாகும். ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையில் நற்கூலியை பெறும் எண்ணத்துடனும் நோன்பு நோற்பாராயின் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவான்’. (நூல் : புகாரி, முஸ்லிம்)
ரமலானில் இதுவும், இன்னும் பல நன்மைகளும், ஆன்மிக, ஒழுக்கப் பயிற்சிகளும் நிரம்பி இருப்பதாலும் இறைவனின் அருள் பொழியப்படுவதாலும் மக்கள் ரமலானை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
ஏக இறைவன் அல்லாஹ், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை தனது திருத்தூதராக தேர்வு செய்த பின்னர், இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்தில் பிரகாசிக்கத் தொடங்கியது.
ஏக இறைவன் அல்லாஹ், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை தனது திருத்தூதராக தேர்வு செய்த பின்னர், இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்தில் பிரகாசிக்கத் தொடங்கியது.
எந்த ஒரு நற்செயலுக்கும் எதிர்ப்பு இருப்பது போல, நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை தெய்வங்களாக வழிபட்டு வந்த மக்கள், ஏக இறைவனாக அல்லாஹ்வை ஏற்க தயங்கினார்கள். அப்போது சிலர் நபிகளாரை கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.
எனவே இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பகிரங்கமாக அதை வெளிப் படுத்த இயலாமல் இருந்தனர். இரவு நேரத்தில் நபிகளார் தனது தோழர்களை சந்தித்து இறைவனிடம் இருந்து ‘வஹி’ (இறைச்செய்தி) யாக வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி அதற்கான விளக்கங்களை அளித்துவந்தார்கள்.
எத்தனை நாள் தான் பயந்து பயந்து ஏக இறைக்கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்று நபிகள் பெருமானார் ஏங்கினார்கள். வீரமும், பலமும் மிக்க வீரர் ஒருவர் இருந்தால் தைரியமாக தங்கள் கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யமுடியும் என்று நினைத்தார்கள்.
இதுகுறித்து இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனையும் செய்தார்கள்:
‘இறைவா, எதிர்ப்பு அலைகள் சூழ்ந்துள்ளன. உனது கொள்கைகளை எடுத்துரைப்பதில் பலவீனம் தென்படுகிறது. இந்த இஸ்லாமிய கொள்கையை பலம் பொருந்தியதாக மாற்றி அமைப்பாயாக. உனக்கு பிரியமானவர்களில் அபூஜஹில் அல்லது உமர் இப்னு கத்தாப் ஆகிய இரு வீரர்களில் ஒருவரைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக’ என்று மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
அதே நேரத்தில் எதிரிகள் கூடாரத்தில் நபிகளாரைக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. சிறந்த வீரரான உமர் இப்னு கத்தாப் அப்போது எதிர் அணியில் இருந்தார். அவரை சதிகாரர்கள் தூண்டிவிட்டனர்.
அப்போது வெள்ளை நிற ஒட்டகங்கள் மிகவும் உயர்ந்த பொருளாக கருதப்பட்டது. எனவே அதுபோன்ற 7 வெள்ளை நிற ஒட்டகங்கள் பரிசாக தருகிறோம், முகம்மதுவை கொல்லவேண்டும் என்று உமரிடம் எதிரிகள் பேரம் பேசினார்கள்.
‘அமைதியின் உருவமான, சாந்தமான ஒருவரை கொல்வதற்கு இத்தனை உயர்ந்த பரிசா?’ என்றவராக உமர், ‘இதோ! இந்த நொடியில் அவர் தலையை கொய்து வருகிறேன்’ என்று உருவிய வாளுடன் புறப்பட்டுச்சென்றார்.
செல்லும் வழியில் அவரை தடுத்த ஒருவர் ‘உங்கள் தங்கை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்’ என்று கூறினார். இதையடுத்து தனது தங்கை வீடு நோக்கிச்சென்றார் உமர்.
வீட்டுக்குள் அவரது தங்கை திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் உமரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் கோபத்துடன் சென்ற அவர் தங்கையை கண்டித்தார்.
‘நீயும் அந்த முஹம்மதுவின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டாயா?’ என்று கோபத்துடன் கேட்டார்.
தங்கையோ அந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சவே இல்லை. ‘எங்கள் நாயகம் எங்களுக்கு நல்லவைகளை எடுத்துச் சொல்கிறார். நன்னடத்தையின் பக்கமும், நற்குணத்தின் பக்கமும் எங்களை வழிநடத்திச் செல்கிறார். எனவே அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை உமக்கு பயந்து விடுவதாயில்லை’ என்று தைரியமாக எதிர்க்குரல் எழுப்பினார்கள்.
‘அப்படி உங்கள் முஹம்மது என்ன சொல்கிறார்?’ என்று உமர் வினவினார்கள்.
தங்கை பாத்திமா கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
‘(நபியே!) நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உங்கள் மீது இறக்கவில்லை’.
‘ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதனை இறக்கி வைத்தோம்)’.
‘உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது’.
‘(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்’.
‘வானங்களிலும், பூமியிலும், இவைகளுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே சொந்தமானவை’ (திருக்குர்ஆன் 20:2-6).
ஆழ்ந்த தத்துவம் நிறைந்த இந்த வசனங்கள் உமரின் மனதில் மாற்றத்தை தந்தது. அல்லாஹ் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.
‘இது நிச்சயமாக இறைவனிடம் இருந்து வந்தவைகளேயன்றி பிரிதொன்றாக இருக்க முற்றிலும் வாய்ப்பில்லை’ என்று சொல்லிய உமர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.
‘இப்போதே பெருமானாரிடம் சென்று என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்’ என்றவர் மீண்டும் வீதியில் இறங்கி நபிகளார் இல்லத்தை நோக்கி நடக்கஆரம்பித்தார்.
உமர், உருவிய வாளுடன் நபிகளார் வீட்டுக்கு வருவதை அறிந்த ஒருவர் ஓடோடிச் சென்று “எம் பெருமானே, உமர் அவர்கள் குரைஷித் தலைவர்களின் தூண்டுதலினால் உங்களை கொல்வதற்காக உருவிய வாளுடன் வந்து கொண்டிருக்கிறார்’ என்று எச்சரித்தார்.
உருவிய வாளுடன் வந்த உமர், அண்ணல் நபிநாதரின் அருகாமையை நெருங்கியதும் தன் கையில் இருந்த வாளை அவர்கள் முன் அர்ப்பணித்தார்.
“அண்ணலே! இதுவரை எனக்கு உங்களைப் பற்றிய தவறான தகவல்களே தரப்பட்டது. ஆனால் என் தங்கையோ என் கண் களைத் திறந்து விட்டாள். அவள் ஓதிக்காட்டிய அந்த இறை வசனத்தின் உண்மைகள் என் இதயத்தில் நம்பிக்கையை ஊட்டியது. நிச்சயமாக அவைகள் இறைவன் வாக்காகவே இருக்க முடியும். அதை எந்த ஒரு மனிதரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனவே என்னை உங்களை பின்பற்றியவர்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
நபியவர்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. நான் கையேந்திகேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் இவ்வளவு விரைவில் நிறைவேற்றித் தந்து விட்டானே என்று.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மறு கணமே, “இத்தனை சத்திய மார்க்கம் இன்னும் ஏன் இருட்டிலே உலா வந்துகொண்டிருக்க வேண்டும். வாருங்கள் தோழர்களே, உண்மையை பகிரங்கமாக மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்” என்று வீரத்துடன் முழங்கினார் உமர் (ரலி) அவர்கள்.
‘உமர் மதம் மாறி விட்டார்’ என்ற செய்தி பரவிய போது, உமர் (ரலி) கூறினார்: “இந்த உமர் மதம் மாறவில்லை. இத்தனை காலமும் அறியாமையில் உழன்று கொண்டிருந்த உமர் இப்போது அறிவு ஞானத்தை தெரிந்து கொண்டார். ஓரிறையை ஏற்றுக் கொண்ட உமர் இறைத் தூதரையும் உண்மைப் படுத்தினார்” என்றார்.
அன்று முதல் இஸ்லாம் பகிரங்கமாக பரவத்தொடங்கியது. அனைத்து மக்களும் இஸ்லாமிய நெறிகளை தைரியத்துடன் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். சுபீட்சம் என்னும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை விரிக்கத் தொடங்கினான். இருண்ட அரபு கண்டத்தில் நபிகளார் மூலம் இஸ்லாம் என்ற ஒளி வெள்ளம் பாய்ந்தது.
எந்த ஒரு நற்செயலுக்கும் எதிர்ப்பு இருப்பது போல, நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை தெய்வங்களாக வழிபட்டு வந்த மக்கள், ஏக இறைவனாக அல்லாஹ்வை ஏற்க தயங்கினார்கள். அப்போது சிலர் நபிகளாரை கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.
எனவே இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பகிரங்கமாக அதை வெளிப் படுத்த இயலாமல் இருந்தனர். இரவு நேரத்தில் நபிகளார் தனது தோழர்களை சந்தித்து இறைவனிடம் இருந்து ‘வஹி’ (இறைச்செய்தி) யாக வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி அதற்கான விளக்கங்களை அளித்துவந்தார்கள்.
எத்தனை நாள் தான் பயந்து பயந்து ஏக இறைக்கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்று நபிகள் பெருமானார் ஏங்கினார்கள். வீரமும், பலமும் மிக்க வீரர் ஒருவர் இருந்தால் தைரியமாக தங்கள் கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யமுடியும் என்று நினைத்தார்கள்.
இதுகுறித்து இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனையும் செய்தார்கள்:
‘இறைவா, எதிர்ப்பு அலைகள் சூழ்ந்துள்ளன. உனது கொள்கைகளை எடுத்துரைப்பதில் பலவீனம் தென்படுகிறது. இந்த இஸ்லாமிய கொள்கையை பலம் பொருந்தியதாக மாற்றி அமைப்பாயாக. உனக்கு பிரியமானவர்களில் அபூஜஹில் அல்லது உமர் இப்னு கத்தாப் ஆகிய இரு வீரர்களில் ஒருவரைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக’ என்று மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
அதே நேரத்தில் எதிரிகள் கூடாரத்தில் நபிகளாரைக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. சிறந்த வீரரான உமர் இப்னு கத்தாப் அப்போது எதிர் அணியில் இருந்தார். அவரை சதிகாரர்கள் தூண்டிவிட்டனர்.
அப்போது வெள்ளை நிற ஒட்டகங்கள் மிகவும் உயர்ந்த பொருளாக கருதப்பட்டது. எனவே அதுபோன்ற 7 வெள்ளை நிற ஒட்டகங்கள் பரிசாக தருகிறோம், முகம்மதுவை கொல்லவேண்டும் என்று உமரிடம் எதிரிகள் பேரம் பேசினார்கள்.
‘அமைதியின் உருவமான, சாந்தமான ஒருவரை கொல்வதற்கு இத்தனை உயர்ந்த பரிசா?’ என்றவராக உமர், ‘இதோ! இந்த நொடியில் அவர் தலையை கொய்து வருகிறேன்’ என்று உருவிய வாளுடன் புறப்பட்டுச்சென்றார்.
செல்லும் வழியில் அவரை தடுத்த ஒருவர் ‘உங்கள் தங்கை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்’ என்று கூறினார். இதையடுத்து தனது தங்கை வீடு நோக்கிச்சென்றார் உமர்.
வீட்டுக்குள் அவரது தங்கை திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டிருந்தார். இந்த வசனங்கள் உமரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் கோபத்துடன் சென்ற அவர் தங்கையை கண்டித்தார்.
‘நீயும் அந்த முஹம்மதுவின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டாயா?’ என்று கோபத்துடன் கேட்டார்.
தங்கையோ அந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சவே இல்லை. ‘எங்கள் நாயகம் எங்களுக்கு நல்லவைகளை எடுத்துச் சொல்கிறார். நன்னடத்தையின் பக்கமும், நற்குணத்தின் பக்கமும் எங்களை வழிநடத்திச் செல்கிறார். எனவே அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை உமக்கு பயந்து விடுவதாயில்லை’ என்று தைரியமாக எதிர்க்குரல் எழுப்பினார்கள்.
‘அப்படி உங்கள் முஹம்மது என்ன சொல்கிறார்?’ என்று உமர் வினவினார்கள்.
தங்கை பாத்திமா கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
‘(நபியே!) நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உங்கள் மீது இறக்கவில்லை’.
‘ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதனை இறக்கி வைத்தோம்)’.
‘உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது’.
‘(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்’.
‘வானங்களிலும், பூமியிலும், இவைகளுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே சொந்தமானவை’ (திருக்குர்ஆன் 20:2-6).
ஆழ்ந்த தத்துவம் நிறைந்த இந்த வசனங்கள் உமரின் மனதில் மாற்றத்தை தந்தது. அல்லாஹ் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.
‘இது நிச்சயமாக இறைவனிடம் இருந்து வந்தவைகளேயன்றி பிரிதொன்றாக இருக்க முற்றிலும் வாய்ப்பில்லை’ என்று சொல்லிய உமர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.
‘இப்போதே பெருமானாரிடம் சென்று என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்’ என்றவர் மீண்டும் வீதியில் இறங்கி நபிகளார் இல்லத்தை நோக்கி நடக்கஆரம்பித்தார்.
உமர், உருவிய வாளுடன் நபிகளார் வீட்டுக்கு வருவதை அறிந்த ஒருவர் ஓடோடிச் சென்று “எம் பெருமானே, உமர் அவர்கள் குரைஷித் தலைவர்களின் தூண்டுதலினால் உங்களை கொல்வதற்காக உருவிய வாளுடன் வந்து கொண்டிருக்கிறார்’ என்று எச்சரித்தார்.
உருவிய வாளுடன் வந்த உமர், அண்ணல் நபிநாதரின் அருகாமையை நெருங்கியதும் தன் கையில் இருந்த வாளை அவர்கள் முன் அர்ப்பணித்தார்.
“அண்ணலே! இதுவரை எனக்கு உங்களைப் பற்றிய தவறான தகவல்களே தரப்பட்டது. ஆனால் என் தங்கையோ என் கண் களைத் திறந்து விட்டாள். அவள் ஓதிக்காட்டிய அந்த இறை வசனத்தின் உண்மைகள் என் இதயத்தில் நம்பிக்கையை ஊட்டியது. நிச்சயமாக அவைகள் இறைவன் வாக்காகவே இருக்க முடியும். அதை எந்த ஒரு மனிதரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனவே என்னை உங்களை பின்பற்றியவர்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
நபியவர்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. நான் கையேந்திகேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் இவ்வளவு விரைவில் நிறைவேற்றித் தந்து விட்டானே என்று.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மறு கணமே, “இத்தனை சத்திய மார்க்கம் இன்னும் ஏன் இருட்டிலே உலா வந்துகொண்டிருக்க வேண்டும். வாருங்கள் தோழர்களே, உண்மையை பகிரங்கமாக மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்” என்று வீரத்துடன் முழங்கினார் உமர் (ரலி) அவர்கள்.
‘உமர் மதம் மாறி விட்டார்’ என்ற செய்தி பரவிய போது, உமர் (ரலி) கூறினார்: “இந்த உமர் மதம் மாறவில்லை. இத்தனை காலமும் அறியாமையில் உழன்று கொண்டிருந்த உமர் இப்போது அறிவு ஞானத்தை தெரிந்து கொண்டார். ஓரிறையை ஏற்றுக் கொண்ட உமர் இறைத் தூதரையும் உண்மைப் படுத்தினார்” என்றார்.
அன்று முதல் இஸ்லாம் பகிரங்கமாக பரவத்தொடங்கியது. அனைத்து மக்களும் இஸ்லாமிய நெறிகளை தைரியத்துடன் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். சுபீட்சம் என்னும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை விரிக்கத் தொடங்கினான். இருண்ட அரபு கண்டத்தில் நபிகளார் மூலம் இஸ்லாம் என்ற ஒளி வெள்ளம் பாய்ந்தது.
‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’. (2:183)
ரமலான் நோன்பு புனிதம் மிக்கது; மனிதம் மிக்கது. பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைப்பது; சுய கட்டுப்பாட்டுடன் நாம் வாழக்கற்றுக் கொள்வது... என பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தருவது தான் இப்புனித நோன்பு.
‘ரமலான்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘எரித்தல்’, ‘பொசுக்குதல்’ என பல பொருள்கள் உண்டு. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி, அஸ்தமனம் வரை உண்ணாமல், பருகாமல் இருந்து, முறையாக பிரார்த்தனைகள் செய்து, ஏழைகளுக்கு வாரிவழங்கி, இறைவன் வகுத்த கடமைகளை செய்வதன் மூலம் நமது பாவக்கறைகளை போக்கிவிடலாம்.
இந்த மாதத்தில் தான் சர்வதேசத்திற்கும் வழிகாட்டியான சங்கைமிகு திருக்குர்ஆன் இறங்கப்பெற்றது என்பதால், இந்த ரமலான் மாதம் எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப் போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும்.
அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை (கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒருமாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்’. (திருக்குர்ஆன் 2:185)
நோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல. மனிதர்கள் அனைவரும் ஈருலகிலும் சிரமம் இல்லாமல் வாழ்வதற்காக அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் இந்த ரமலான் நோன்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருமாதத்திற்கு முன்பிருந்தே நோன்புக்கு தயாராகி விடுவார்கள் என்பது நபிமொழியாகும்.
மனிதர்களுக்கு கடமையான இந்த நோன்பு குறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:
‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’. (2:183)
நோன்பு நமக்கு மட்டும் கடமையாக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் மீதும் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் அறியலாம். மேலும், இந்த நோன்பின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதையும் இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
அதாவது, இந்த நோன்பின் மூலம் நாம் இறையச்சம் உடையோராக ஆகலாம். ரமலான் மாதத்தில் நாம் கடைப்பிடிக்கும் இந்த நோன்பு நம்மை இறையச்சம் மிக்கவர்களாக மாற்றும் சிறப்பு மிக்கது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
மனித வாழ்வு சிறக்க இறையச்சம் மிக அவசியம். அந்த அற்புதமான இறையச்சத்தை இந்த நோன்பு நமக்கு வாரிவாரி வழங்குகிறது. ரமலான் நோன்பின் மூலம் அந்த இறையச்சத்தை நாம் பெறலாம் என்றால், அதை பயன் படுத்திக்கொள்வது தானே புத்திசாலித்தனம்.
இறையச்சம் இல்லாமல் செய்யப்படும் எந்த பிரார்த்தனைகளும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை. மேலும் இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் நேர்வழியில் வாழும் வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் இறையச்சமற்ற எந்த ஒரு செயலும் வீண் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இறையச்சம் என்பது அல்லாஹ்வை அஞ்சுவது மட்டுமல்ல. அவன் விதித்தவைகளை ஏற்று நடக்க வேண்டும், அவன் விலக்கியவைகளை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.
அப்படி நடக்கும் போது தான் கட்டுப்பாடு என்பது நமக்குள் உருவாகும். ஒருவனுக்கு சுயக்கட்டுப்பாடு வந்து விட்டால் அவனை எந்த துன்பமும் அணுக யோசிக்கும். அந்தக் கட்டுப்பாடு நமக்கு வர உதவுகிறது இந்த புனித ரமலான் நோன்பு.
உடலின் ஆசைகளையும், உயிரின் ஆசைகளையும் நோன்பு நிச்சயம் தடுத்து நிறுத்தும். அதற்கு முதலில் நாம் நமது நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடிக்க வேண்டும். சும்மா பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்ல நோன்பு. இறைவன் காட்டிய வழியில் நோன்பை கடைப்பிடிப்பது தான் சிறப்பு மிக்கது.
இதனால்தான், ‘நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுப்பேன்’ என்கிறான் அல்லாஹ்.
இந்த பாக்கியம் நோன்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தகைய சிறப்பு மிக்க ரமலானைப் போற்றுவோம், இறைவன் காட்டிய வழியில் நோன்பிருந்து இறையச்சத்தைப் பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
‘ரமலான்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘எரித்தல்’, ‘பொசுக்குதல்’ என பல பொருள்கள் உண்டு. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி, அஸ்தமனம் வரை உண்ணாமல், பருகாமல் இருந்து, முறையாக பிரார்த்தனைகள் செய்து, ஏழைகளுக்கு வாரிவழங்கி, இறைவன் வகுத்த கடமைகளை செய்வதன் மூலம் நமது பாவக்கறைகளை போக்கிவிடலாம்.
இந்த மாதத்தில் தான் சர்வதேசத்திற்கும் வழிகாட்டியான சங்கைமிகு திருக்குர்ஆன் இறங்கப்பெற்றது என்பதால், இந்த ரமலான் மாதம் எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப் போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும்.
அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை (கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒருமாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்’. (திருக்குர்ஆன் 2:185)
நோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல. மனிதர்கள் அனைவரும் ஈருலகிலும் சிரமம் இல்லாமல் வாழ்வதற்காக அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் இந்த ரமலான் நோன்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருமாதத்திற்கு முன்பிருந்தே நோன்புக்கு தயாராகி விடுவார்கள் என்பது நபிமொழியாகும்.
மனிதர்களுக்கு கடமையான இந்த நோன்பு குறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:
‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’. (2:183)
நோன்பு நமக்கு மட்டும் கடமையாக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் மீதும் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் அறியலாம். மேலும், இந்த நோன்பின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதையும் இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
அதாவது, இந்த நோன்பின் மூலம் நாம் இறையச்சம் உடையோராக ஆகலாம். ரமலான் மாதத்தில் நாம் கடைப்பிடிக்கும் இந்த நோன்பு நம்மை இறையச்சம் மிக்கவர்களாக மாற்றும் சிறப்பு மிக்கது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
மனித வாழ்வு சிறக்க இறையச்சம் மிக அவசியம். அந்த அற்புதமான இறையச்சத்தை இந்த நோன்பு நமக்கு வாரிவாரி வழங்குகிறது. ரமலான் நோன்பின் மூலம் அந்த இறையச்சத்தை நாம் பெறலாம் என்றால், அதை பயன் படுத்திக்கொள்வது தானே புத்திசாலித்தனம்.
இறையச்சம் இல்லாமல் செய்யப்படும் எந்த பிரார்த்தனைகளும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை. மேலும் இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் நேர்வழியில் வாழும் வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் இறையச்சமற்ற எந்த ஒரு செயலும் வீண் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இறையச்சம் என்பது அல்லாஹ்வை அஞ்சுவது மட்டுமல்ல. அவன் விதித்தவைகளை ஏற்று நடக்க வேண்டும், அவன் விலக்கியவைகளை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.
அப்படி நடக்கும் போது தான் கட்டுப்பாடு என்பது நமக்குள் உருவாகும். ஒருவனுக்கு சுயக்கட்டுப்பாடு வந்து விட்டால் அவனை எந்த துன்பமும் அணுக யோசிக்கும். அந்தக் கட்டுப்பாடு நமக்கு வர உதவுகிறது இந்த புனித ரமலான் நோன்பு.
உடலின் ஆசைகளையும், உயிரின் ஆசைகளையும் நோன்பு நிச்சயம் தடுத்து நிறுத்தும். அதற்கு முதலில் நாம் நமது நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடிக்க வேண்டும். சும்மா பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்ல நோன்பு. இறைவன் காட்டிய வழியில் நோன்பை கடைப்பிடிப்பது தான் சிறப்பு மிக்கது.
இதனால்தான், ‘நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுப்பேன்’ என்கிறான் அல்லாஹ்.
இந்த பாக்கியம் நோன்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தகைய சிறப்பு மிக்க ரமலானைப் போற்றுவோம், இறைவன் காட்டிய வழியில் நோன்பிருந்து இறையச்சத்தைப் பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
இறைஅருளால் நடந்த அந்த ஹூதைய்பிய்யா உடன்படிக்கையும், நபிகளாரின் முன்யோசனையும் தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.
இஸ்லாம்,
அண்ணல் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினா வந்த பின்னர், ஏகத்துவ பிரச்சாரம் உலகெங்கும் வேகமாக பரவியது. ஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபிகளாருக்கு, இறையில்லமான கஅபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். அவர்களுடன் தோழர்களும் இணைந்துகொண்டார்கள்.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் மக்கா நோக்கி வருகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் இறைமறுப்பாளர்களான குறைஷியர்கள் கலங்கினர். ஏற்கனவே பலவீனமாய் இருந்த அவர்கள் மீண்டும் போர் செய்ய திராணியின்றி சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பினர்.
இந்த நிலையில் நபிகளாரின் குழு மக்காவின் எல்லையை வந்தடைந்தது. உஸ்மான் (ரலி) அவர்களை சமாதான தூதுவராக மக்காவிற்கு அனுப்பினார்கள் நபி (ஸல்) அவர்கள்.
குறைஷியர்கள் தங்கள் தூதுவராக உருவாஸ் இப்னு மசூது என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர், நபிகளாரிடம், “நீங்கள் இந்த ஆண்டு கஅபாவில் பிரார்த்தனை (உம்ரா) செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது. எங்களது கொள்கைகளுக்கு மாறுபட்ட கருத்துள்ள உங்களுக்கு எங்கள் ஆலயத்தை உரிமை கொண்டாட அனுமதியில்லை. ஆனால் குறைஷியர்களின் ஆலோசனைப்படி இதற்காக நாம் போர் செய்ய வேண்டாம். வேண்டுமென்றால் ஓர் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம்” என்றார்.
இந்த நிலையில் மக்காவுக்கு நபிகளார் சார்பில் தூதுவராய் சென்ற உஸ்மான் (ரலி) அவர்களை குறைஷியர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று ஓர் வதந்தி பரவியது. இதை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் கொதித்து எழுந்தார்கள்.
உமர் கத்தாப் (ரலி) அவர்கள், “அண்ணலே எனக்கு அனுமதி வழங்குங்கள். நான் எதிரிகள் அனைவரையும் அழித்து விடுகிறேன்” என்று வாளை உயர்த்தினார்கள். அப்போது வீரம் நிறைந்த சஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானாரின் கைகள் மீது தங்கள் கைகளை இணைத்து வாக்குறுதி அளித்தனர்.
அந்த காட்சியைக் கண்டு மகிழ்வுற்றவனாக அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான்:
“இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்”. (திருக்குர்ஆன் 48:18)
அந்த வசனங்களை வஹியாய்ப் பெற்ற நபிகள் நாயகம் அவர்கள், அதன் அர்த்தங்களை உடன் இருந்தவர்களிடம் விளக்கி கொண்டிருந்தார்கள். அப்போது, மக்காவிலிருந்து செய்தி வந்தது. ‘உஸ்மான் (ரலி) நலமாக இருக்கிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று தகவல் கிடைத்தது.
வாக்குறுதி அளித்த அத்தனை சஹாபா பெருமக்களின் வீரம் மிக்க உறுதியை அறிந்திருந்த அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒரு கண் ஜாடை காட்டியிருந்தால் போதும்; அத்தனை எதிரிகளும் பதர்களாய் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால் கருணையின் பிறப்பிடமான நபியவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் போரை விரும்பவில்லை. எதிரிகளின் பிணங்களைத் தாண்டி மக்கா நகர் நுழைய அவர்கள் விரும்பவில்லை.
மாறாக அமைதியான முறையில் எதிரிகள் அனைவரும் அன்போடு அவர்களை வரவேற்க, ஆனந்தமாய் உள் நுழையவே விரும்பினார்கள். அதனால் எதிரிகளின் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
ஹூதைய்பிய்யா என்ற இடத்தில் அந்த உடன்படிக்கை நிறைவேறியதால் அதற்கு ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ என்ற பெயர் அமைந்தது. அன்று தொட்டு இன்று வரை இது போன்ற ஒரு சிறந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படவில்லை என்று சரித்திர ஆசிரியர்கள், வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்ணலாரின் தெளிவான சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும், எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ராஜதந்திரமும் நிறைந்த ஒரு ஆச்சரியமான உடன்படிக்கை என்று இன்றளவும் ஹூதைய்பிய்யா உடன்படிக்கை போற்றப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையின் விதிகள் இருசாராரின் அனுமதியோடு எழுதப்பட்டன. ஆனால் எல்லா நிபந்தனைகளும், எதிரிகளுக்கே சாதகமாக அமையக்கூடிய வகையில் தான் உடன்படிக்கை விதிகள் இருந்தன. ஆனாலும் அண்ணலார் கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஞானத்தின் வெளிப்பாடாய் அது அமைந்தது என்பது பின்னர் நிரூபணம் ஆனது.
புஜபலம் அதிகம் பெற்றிருந்தும், எதிரிகளை எளிதாக வெல்லக் கூடிய வலிமை பெற்றிருந்தும், உமர், அலி, முவாயிய்யா போன்ற வீரர்கள் உடன்படிக்கையின் விதிகள் அனைத்தையும் எதிர்த்த போதும், உற்றத் தோழர்கள் அதனை விரும்பாத போதும், அதன் விதிகள் கடுமையாக தங்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற நிலையிலும் அண்ணல் நபிநாதர் (ஸல்) அந்த உடன்படிக்கையில் தன் முத்திரையைப் பதித்தார்கள்.
காரணம்- அவர்களின் நோக்கம், மக்காவை வெற்றி கொள்வது மாத்திரம் அல்ல. மக்காவில் உள்ள எதிரிகள் மத்தியில் இஸ்லாத்தின் தத்துவங்களை நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதே. அதோடு, மக்காவில் உள்ளத்தளவில் அல்லாஹ் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் வெளிப்படையாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தி தரும் என்றும் கருதினார்கள்.
அவர்கள் எண்ணம் உண்மை என்பது விரைவில் நிரூபணமானது. ஹிஜ்ரி 9-ம் ஆண்டு அண்ணலார் மீண்டும் மக்கா நோக்கி பயணமாகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான சஹாபாக்களோடு அவர்கள் சென்றபோது, மக்காவின் வழிகள் திறந்தே கிடந்தன. எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. எதிரிகளாக இருந்தவர்களும் மனம்மாறி நல்வாழ்த்துச்சொல்லி அண்ணலாரை வரவேற்றார்கள்.
“கஸ்பா” என்ற ஒட்டகையின் மீது அமர்ந்தவர்களாக, ஆஷா கோலுடன், கருப்பு தலைப்பாகை அணிந்தவர்களாக கம்பீரத்துடன் மக்காவில் நுழைந்தார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்.
கத்தியின்றி, ரத்தமின்றி, எதிரிகளும் இன்றி, எதிர்ப்பும் இன்றி, அங்கிருந்த மக்கள் எல்லாம் இஸ்லாத்தைத் தழுவிய நல்லடியார்களாய் மாறிய நிலையில் நபிகளார் மக்காவில் நுழைந்தது மாபெரும் நிகழ்வல்லவா!
இறைஅருளால் நடந்த அந்த ஹூதைய்பிய்யா உடன்படிக்கையும், நபிகளாரின் முன்யோசனையும் தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது. இது தொடர்பாக இறங்கிய திருக்குர்ஆன் வசனம் இது:
‘அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது)! அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம். (திருக்குர்ஆன் 48:25).
மு.முஹம்மது யூசுப், உடன்குடி
அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம்.
பன்மைச் சமூகத்தில் வாழும் ஒரு முஸ்லிம் அனைத்து சமுதாயத்தினரையும் அர வணைத்துச் செல்லக்கூடியவனாகவே வாழவேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
அரவணைத்தல் என்றால் இஸ்லாத்தின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு சரணாகதி அடைவதல்ல. கொள்கையில் விட்டுக்கொடுக்காமல் வாழும் அதேவேளை, அடுத்தவருடைய பிரச்சினையில் நாமும் பங்குபெற்று உதவி ஒத்தாசைகள் செய்ய வேண்டும்.
அப்போதுதான் நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வும், நமது பிரச்சினைகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆவலும் அனைவருக்கும் ஏற்படும்.
பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் நமக்கான பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்போது, நமக்காக நாம் மட்டுமே தனித்து நின்று போராட வேண்டிய நிர்பந்தச் சூழல் ஏற்பட்டுவிடும்.
கவுரவக் கொலைகள், சாதிப்பிரச்சினை, வறுமை, வேலையின்மை, வட்டி, மது, காவிரி நீர் பங்கீடு, விலைவாசி உயர்வு, பொதுச் சொத்துகள் கொள்ளை போகுதல், கிரானைட் கொள்ளை போன்ற ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சினைகளின்போது முஸ்லிம்களாகிய நாம் ஒதுங்கி வாழ்ந்தால் நமக்கான பிரச்சினைகளில் நாம் ஒதுக்கப்படுவோம் என்பதே நிதர்சனம்.
அடுத்தவர் பிரச்சினைகளை அடுத்தவர் பிரச்சினைகளாக மட்டுமே பார்க்கும் காலம் வரை இதில் ஈடுபாடு ஏற்படாது. மாறாக அவற்றையும் நமது பிரச்சினையாகக் காணும் கண் வேண்டும்.
நபிகளாரின் வாழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்கும், குறுகிய காலத்தில் பெரும் புரட்சிகளை செய்து முடித்தமைக்கும் காரணம், அனைத்து மக்களையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் அரவணைத்துச் சென்றமையே.
இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னரே ‘ஹில்புல் புளூல்’ என்ற சங்கத்தின் அங்கத்தவராக நபிகளார் இருந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக மக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் இது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக ஏனையோருடன் சேர்ந்து முஹம்மத் (ஸல்) அவர்களும் போராடியுள்ளார்கள்.
இறைத்தூதராக அனுப்பப்பட்டு நீண்ட காலத்திற்குப் பின்னர் மதீனாவில் வைத்து நபிகளார் (ஸல்) இது குறித்து இவ்வாறு நினைவு கூர்ந்தார்கள்: ‘ஹில்புல் புளூல் சங்கத்து மக்கள் இப்போது என்னை அழைத்தாலும் கட்டாயம் நான் செல்வேன்’.
அடுத்தவர் பிரச்சினைகளின்போது, ‘நமக்கெதற்கு வம்பு, நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒதுங்கி இருந்தால், ஒருநாள் நிச்சயம் நாமும் ஒதுக்கப்படுவோம்.
அடுத்தவர்களுக்கு உதவியதால்தான் நபி களாரின் வாழ்வு முழுக்க, சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உதவி கிட்டியிருந்ததைப்பார்க்க முடிகிறது. பிற மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு உதவிகள் செய்யாமலோ, அவர்களின் ஒத்தாசையை ஏற்காமலோ நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை.
பன்மைச் சமுதாயத்தில் அடுத்தவர்களுடன் கலந்து வாழ்வது குறித்த பெருமானாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் வரலாற்று ஏடு களையும் புரட்டிப் பார்த்தால்.. வந்து குவியும் குறிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. படிக்கப் படிக்க விழிகள் விரிகின்றன.
பெருமானாரின் வாழ்வு முழுவதும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். உதவி தேவைப்படும் கட்டத்தில் ஓடோடி வந்து ஒருவர் உதவுகிறார். அவரோ முஸ்லிம் அல்ல. அடைக்கலம் தேவைப்படும்போது அவசரமாக ஒருவர் அடைக்கலம் கொடுக்கின்றார். அவரும் முஸ்லிம் அல்ல. பயணத்தில் ஒருவர்.. பாதுகாப்பில் ஒருவர்.. என பெருமானாரின் வரலாறு நெடுக முஸ்லிம் அல்லாதவர்களைக் காண முடிகிறது. அருகாமையிலும் அருமை.
மக்காவின் ஆரம்ப நாட்களில் நபிகளாருக்கு நிழலாகவும் அரணாகவும் இருந்த பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள், ஒரு முஸ்லிம் அல்ல.
மதீனத்து மக்களோடு செய்துகொண்ட அகபா எனும் பெரும் உடன்படிக்கையின்போது முஸ்லிம்களின் சார்பாக நபி (ஸல்) அவர்களோடு உறுதுணையாக நின்றவர் அப்பாஸ் (ரலி). அன்றைய தினம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
மக்காவில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு பெரும் துன்பமும் துயரமும் ஏற்பட்டபோது எத்தியோப்பியாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு தோழர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். அப்போது எத்தியோப்பியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நஜ்ஜாஷி அரசர் முஸ்லிம் அல்ல.
நபிகளாரும் குடும்பமும் ஊர்விலக்குச் செய்யப்பட்டு அபூதாலிப் எனும் பள்ளத்தாக்கில் சிறை வைக்கப்பட்டபோது, அந்தத் தடையை உடைக்க முழு முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றவர்கள் முஸ்லிம் அல்லாத ஒருசில இளைஞர்களே.
தாயிப் நகரிலிருந்து சொல்லடியும், கல்லடியும் பட்டு, ரத்தம் வழிந்தோட மக்காவுக்குத் திரும்பி வரும்போது, மக்கத்து மக்கள் என்ன செய்வார்களோ.. என்ன நடக்குமோ.. என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அஞ்சியபோது, நபிகளாருக்கு அடைக்கலமும் அபயமும் கொடுத்த முத்யிம் பின் அதி என்பவர் முஸ்லிம் அல்ல.
சரித்திரத்தை மாற்றியமைத்த ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்வின் போது நபிகளாருக்கு வழிகாட்டியாக இருந்த அப்துல்லாஹ்பின் உரைக்கத் என்பவர் முஸ்லிம் அல்ல.
நபிகளாருக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் ஒரு சிறுவர். அவர் முஸ்லிம் அல்ல. மாறாக யூத குலத்தைச் சார்ந்தவர்.
நபிகளார் (ஸல்) நோயுற்றபோதெல்லாம் சிகிச்சை செய்த ஹாரிஸ் பின் கல்தா என்ற மருத்துவர் முஸ்லிம் அல்ல.
கைபர் போரின்போது நபிகளாருக்கு உதவிகள் செய்வதற்காக இணைவைப்பாளர்கள் முன்வந்தபோது அந்த உதவிகளை நபி (ஸல்) அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.
வாழ்நாள் எல்லாம் தமக்குத் துரோகமும் அநீதியும் செய்த மக்கத்து மக்கள் பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது, ஹாதிப் இன் அபீ பல்தஉ என்பவர் மூலம் 500 தங்க தீனார்களை மக்காவுக்குக் கொடுத்தனுப்பி, கோதுமை வாங்கி மக்கத்து மக்களுக்கு வினியோகிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெறுப்பை அறுவடை செய்யவில்லை.
ஏன் இறுதி காலத்தில் வறுமை வாட்டியபோது தமது கவச உடையை அடமானம் வைத்திருந்தது ஒரு யூதரிடம்தான் என்பது இன்னும் ஆச்சரியம். இத்தனைக்கும் உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) போன்ற பெரும் செல்வந்தர்கள் முஸ்லிம்களிடையே இருக்கத்தான் செய்தார்கள்.
வரலாறு முடியவில்லை. இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. சுருக்கமாகக் கூறுவதெனில்... ஓர் இறைநம்பிக்கையாளர் பன்மைச் சமூகத்தில் எவ்வாறு அனுசரித்து வாழவேண்டும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது நபிகளாரின் வாழ்வு.
அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம். நபிகளாரின் வாழ்வை விட சிறந்த முன்மாதிரி இருக்க முடியுமா என்ன?
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
அரவணைத்தல் என்றால் இஸ்லாத்தின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு சரணாகதி அடைவதல்ல. கொள்கையில் விட்டுக்கொடுக்காமல் வாழும் அதேவேளை, அடுத்தவருடைய பிரச்சினையில் நாமும் பங்குபெற்று உதவி ஒத்தாசைகள் செய்ய வேண்டும்.
அப்போதுதான் நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வும், நமது பிரச்சினைகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆவலும் அனைவருக்கும் ஏற்படும்.
பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் நமக்கான பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்போது, நமக்காக நாம் மட்டுமே தனித்து நின்று போராட வேண்டிய நிர்பந்தச் சூழல் ஏற்பட்டுவிடும்.
கவுரவக் கொலைகள், சாதிப்பிரச்சினை, வறுமை, வேலையின்மை, வட்டி, மது, காவிரி நீர் பங்கீடு, விலைவாசி உயர்வு, பொதுச் சொத்துகள் கொள்ளை போகுதல், கிரானைட் கொள்ளை போன்ற ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சினைகளின்போது முஸ்லிம்களாகிய நாம் ஒதுங்கி வாழ்ந்தால் நமக்கான பிரச்சினைகளில் நாம் ஒதுக்கப்படுவோம் என்பதே நிதர்சனம்.
அடுத்தவர் பிரச்சினைகளை அடுத்தவர் பிரச்சினைகளாக மட்டுமே பார்க்கும் காலம் வரை இதில் ஈடுபாடு ஏற்படாது. மாறாக அவற்றையும் நமது பிரச்சினையாகக் காணும் கண் வேண்டும்.
நபிகளாரின் வாழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்கும், குறுகிய காலத்தில் பெரும் புரட்சிகளை செய்து முடித்தமைக்கும் காரணம், அனைத்து மக்களையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் அரவணைத்துச் சென்றமையே.
இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னரே ‘ஹில்புல் புளூல்’ என்ற சங்கத்தின் அங்கத்தவராக நபிகளார் இருந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக மக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் இது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக ஏனையோருடன் சேர்ந்து முஹம்மத் (ஸல்) அவர்களும் போராடியுள்ளார்கள்.
இறைத்தூதராக அனுப்பப்பட்டு நீண்ட காலத்திற்குப் பின்னர் மதீனாவில் வைத்து நபிகளார் (ஸல்) இது குறித்து இவ்வாறு நினைவு கூர்ந்தார்கள்: ‘ஹில்புல் புளூல் சங்கத்து மக்கள் இப்போது என்னை அழைத்தாலும் கட்டாயம் நான் செல்வேன்’.
அடுத்தவர் பிரச்சினைகளின்போது, ‘நமக்கெதற்கு வம்பு, நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒதுங்கி இருந்தால், ஒருநாள் நிச்சயம் நாமும் ஒதுக்கப்படுவோம்.
அடுத்தவர்களுக்கு உதவியதால்தான் நபி களாரின் வாழ்வு முழுக்க, சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உதவி கிட்டியிருந்ததைப்பார்க்க முடிகிறது. பிற மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு உதவிகள் செய்யாமலோ, அவர்களின் ஒத்தாசையை ஏற்காமலோ நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை.
பன்மைச் சமுதாயத்தில் அடுத்தவர்களுடன் கலந்து வாழ்வது குறித்த பெருமானாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் வரலாற்று ஏடு களையும் புரட்டிப் பார்த்தால்.. வந்து குவியும் குறிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. படிக்கப் படிக்க விழிகள் விரிகின்றன.
பெருமானாரின் வாழ்வு முழுவதும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். உதவி தேவைப்படும் கட்டத்தில் ஓடோடி வந்து ஒருவர் உதவுகிறார். அவரோ முஸ்லிம் அல்ல. அடைக்கலம் தேவைப்படும்போது அவசரமாக ஒருவர் அடைக்கலம் கொடுக்கின்றார். அவரும் முஸ்லிம் அல்ல. பயணத்தில் ஒருவர்.. பாதுகாப்பில் ஒருவர்.. என பெருமானாரின் வரலாறு நெடுக முஸ்லிம் அல்லாதவர்களைக் காண முடிகிறது. அருகாமையிலும் அருமை.
மக்காவின் ஆரம்ப நாட்களில் நபிகளாருக்கு நிழலாகவும் அரணாகவும் இருந்த பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள், ஒரு முஸ்லிம் அல்ல.
மதீனத்து மக்களோடு செய்துகொண்ட அகபா எனும் பெரும் உடன்படிக்கையின்போது முஸ்லிம்களின் சார்பாக நபி (ஸல்) அவர்களோடு உறுதுணையாக நின்றவர் அப்பாஸ் (ரலி). அன்றைய தினம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
மக்காவில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு பெரும் துன்பமும் துயரமும் ஏற்பட்டபோது எத்தியோப்பியாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு தோழர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். அப்போது எத்தியோப்பியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நஜ்ஜாஷி அரசர் முஸ்லிம் அல்ல.
நபிகளாரும் குடும்பமும் ஊர்விலக்குச் செய்யப்பட்டு அபூதாலிப் எனும் பள்ளத்தாக்கில் சிறை வைக்கப்பட்டபோது, அந்தத் தடையை உடைக்க முழு முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றவர்கள் முஸ்லிம் அல்லாத ஒருசில இளைஞர்களே.
தாயிப் நகரிலிருந்து சொல்லடியும், கல்லடியும் பட்டு, ரத்தம் வழிந்தோட மக்காவுக்குத் திரும்பி வரும்போது, மக்கத்து மக்கள் என்ன செய்வார்களோ.. என்ன நடக்குமோ.. என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அஞ்சியபோது, நபிகளாருக்கு அடைக்கலமும் அபயமும் கொடுத்த முத்யிம் பின் அதி என்பவர் முஸ்லிம் அல்ல.
சரித்திரத்தை மாற்றியமைத்த ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்வின் போது நபிகளாருக்கு வழிகாட்டியாக இருந்த அப்துல்லாஹ்பின் உரைக்கத் என்பவர் முஸ்லிம் அல்ல.
நபிகளாருக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் ஒரு சிறுவர். அவர் முஸ்லிம் அல்ல. மாறாக யூத குலத்தைச் சார்ந்தவர்.
நபிகளார் (ஸல்) நோயுற்றபோதெல்லாம் சிகிச்சை செய்த ஹாரிஸ் பின் கல்தா என்ற மருத்துவர் முஸ்லிம் அல்ல.
கைபர் போரின்போது நபிகளாருக்கு உதவிகள் செய்வதற்காக இணைவைப்பாளர்கள் முன்வந்தபோது அந்த உதவிகளை நபி (ஸல்) அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.
வாழ்நாள் எல்லாம் தமக்குத் துரோகமும் அநீதியும் செய்த மக்கத்து மக்கள் பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது, ஹாதிப் இன் அபீ பல்தஉ என்பவர் மூலம் 500 தங்க தீனார்களை மக்காவுக்குக் கொடுத்தனுப்பி, கோதுமை வாங்கி மக்கத்து மக்களுக்கு வினியோகிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெறுப்பை அறுவடை செய்யவில்லை.
ஏன் இறுதி காலத்தில் வறுமை வாட்டியபோது தமது கவச உடையை அடமானம் வைத்திருந்தது ஒரு யூதரிடம்தான் என்பது இன்னும் ஆச்சரியம். இத்தனைக்கும் உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) போன்ற பெரும் செல்வந்தர்கள் முஸ்லிம்களிடையே இருக்கத்தான் செய்தார்கள்.
வரலாறு முடியவில்லை. இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. சுருக்கமாகக் கூறுவதெனில்... ஓர் இறைநம்பிக்கையாளர் பன்மைச் சமூகத்தில் எவ்வாறு அனுசரித்து வாழவேண்டும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது நபிகளாரின் வாழ்வு.
அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம். நபிகளாரின் வாழ்வை விட சிறந்த முன்மாதிரி இருக்க முடியுமா என்ன?
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
“மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்...” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.
இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார் (மத்தேயு 27:45)
இயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை இது.
வலியின் வார்த்தை, நிராகரிப்பின் வார்த்தை. வலிகளிலேயே மிகப்பெரிய வலி நிராகரிக்கப்படும் வலி தான். இயேசு இப்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.
மக்களின் பாவங்களைப் போக்கவேண்டுமெனும் மாபெரும் லட்சியத்தின் வருகை அவர். விண்ணின் மகிமையைத் துறந்து, மண்ணின் புழுதியில் புரண்டு, வியர்வைக் கரையில் நடந்து, இறையரசை அறிவித்துத் திரிந்தவர் இயேசு.
கடைசியில் மதவாதிகளாலும், அதிகாரி களாலும், ஆளும் வர்க்கத்தாலும், ஏன் கூட இருந்த நண்பராலுமே நிராகரிக்கப்பட்டார்.
நிராகரிப்பின் வலி அவருக்குப் புதியதல்ல. இப்போதைய இயேசுவின் கதறல் மக்கள் அவரை நிராகரித்ததால் வந்ததல்ல. அவரது தந்தையாம் கடவுள் அவரை நிராகரித்ததால்.
நாம் நினைப்பது போல ஆணியின் கூர்மை களைத் துளைத்ததாலோ, சாட்டையின் நுனி முதுகைக் கிழித்ததாலோ எழுந்த வலியல்ல இது. அத்தகைய உடல்வலியை இயேசுவின் மன வலிமை தாங்கி விடும். ஆனால் இப்போதைய கதறல் ஒலி உடல் வலி அல்ல, இதயத்தின் வலி.
உலகின் பாவங்களைப் போக்கவேண்டும் எனில் மானிடரின் பாவங்களை எல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு.
“அவரோ நம் குற்றங்களுக்காகக் காய மடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா 53:5 அதை தீர்க்க தரிசனமாய் சொன்னது.
இருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாது. பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இயேசு புனிதத்தின் வடிவமாய் இருந்தபோது எப்போதும் தந்தையின் அருகாமையில் இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபத்தில் தந்தையோடு தனித்திருந்தார்.
இப்போதோ அவர் புனிதத்தின் நிலையை இழந்து பாவத்தின் சுமையை ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்திலிருந்து அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. புனிதம் எனும் தந்தையும், பாவம் எனும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப்போகின்றனர்.
பாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) எனும் வசனம் விளக்குகிறது.
இந்த வலியை முன்கூட்டியே உணர்ந்த இயேசு, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” (மத் 26:39) என தந்தையிடம் வேண்டினார்.
எப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது.
உலகம் தொடங்கும் முன்னமே தந்தையோடு இணைந்திருந்தவர் இயேசு. விண்ணின் மகிமை எப்படிப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் சோதனைகளை அவர் எளிதாய்த் தாண்டினார். எந்த சோதனை தரும் மகிழ்ச்சியையும் விடப்பெரியது விண்ணக வாழ்க்கை என்பது அவருக்கு மிகத்தெளிவாய் தெரியும்.
“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” (சங் 22) என்பது அந்தக்கால பிரபலமான ஒரு பாடலின் தொடக்கம். இயேசு அந்தப் பாடலின் வரியைத் தொடங்கிவைத்தார். அதைக் கேட்டவர்களின் மனதில் அந்தப் பாடல் முழுமையாய் ஒலிபரப்பாகியிருக்க வேண்டும். “உண்மையாகவே இவர் கடவுளுடைய மகன்” என சிலர் நம்பிக்கை கொள்ள அதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.
அந்தப் பாடல் இயேசுவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவீது மன்னனால் எழுதப்பட்டது. மெசியா பற்றிய பாடல். இயேசுவைப் பற்றிய பாடல்.
“மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்...” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.
சிலுவை மரணம் வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலேயே, ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என இந்த சங்கீதம் தீர்க்கதரிசனமாய் பேசுகிறது. “என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்” என்றெல்லாம் சிலுவைக் காட்சியை பதிவு செய்திருக்கிறது.
இயேசு அந்த பாடலின் முதல் வரியை வலியின் ஒலியாய் ஒலிக்கச் செய்து, தான் ‘மெசியா’ என்பதை குறிப்பால் உணர்த்தினார். நமது பாவங்களை அவர் சுமந்து தீர்த்தார்.
உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு அவரோடு சரணடைவோருக்கு, அவரது அரசில் நிச்சயம் இடம் உண்டு.
சேவியர்
இயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை இது.
வலியின் வார்த்தை, நிராகரிப்பின் வார்த்தை. வலிகளிலேயே மிகப்பெரிய வலி நிராகரிக்கப்படும் வலி தான். இயேசு இப்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.
மக்களின் பாவங்களைப் போக்கவேண்டுமெனும் மாபெரும் லட்சியத்தின் வருகை அவர். விண்ணின் மகிமையைத் துறந்து, மண்ணின் புழுதியில் புரண்டு, வியர்வைக் கரையில் நடந்து, இறையரசை அறிவித்துத் திரிந்தவர் இயேசு.
கடைசியில் மதவாதிகளாலும், அதிகாரி களாலும், ஆளும் வர்க்கத்தாலும், ஏன் கூட இருந்த நண்பராலுமே நிராகரிக்கப்பட்டார்.
நிராகரிப்பின் வலி அவருக்குப் புதியதல்ல. இப்போதைய இயேசுவின் கதறல் மக்கள் அவரை நிராகரித்ததால் வந்ததல்ல. அவரது தந்தையாம் கடவுள் அவரை நிராகரித்ததால்.
நாம் நினைப்பது போல ஆணியின் கூர்மை களைத் துளைத்ததாலோ, சாட்டையின் நுனி முதுகைக் கிழித்ததாலோ எழுந்த வலியல்ல இது. அத்தகைய உடல்வலியை இயேசுவின் மன வலிமை தாங்கி விடும். ஆனால் இப்போதைய கதறல் ஒலி உடல் வலி அல்ல, இதயத்தின் வலி.
உலகின் பாவங்களைப் போக்கவேண்டும் எனில் மானிடரின் பாவங்களை எல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு.
“அவரோ நம் குற்றங்களுக்காகக் காய மடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா 53:5 அதை தீர்க்க தரிசனமாய் சொன்னது.
இருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாது. பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இயேசு புனிதத்தின் வடிவமாய் இருந்தபோது எப்போதும் தந்தையின் அருகாமையில் இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபத்தில் தந்தையோடு தனித்திருந்தார்.
இப்போதோ அவர் புனிதத்தின் நிலையை இழந்து பாவத்தின் சுமையை ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்திலிருந்து அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. புனிதம் எனும் தந்தையும், பாவம் எனும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப்போகின்றனர்.
பாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) எனும் வசனம் விளக்குகிறது.
இந்த வலியை முன்கூட்டியே உணர்ந்த இயேசு, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” (மத் 26:39) என தந்தையிடம் வேண்டினார்.
எப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது.
உலகம் தொடங்கும் முன்னமே தந்தையோடு இணைந்திருந்தவர் இயேசு. விண்ணின் மகிமை எப்படிப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் சோதனைகளை அவர் எளிதாய்த் தாண்டினார். எந்த சோதனை தரும் மகிழ்ச்சியையும் விடப்பெரியது விண்ணக வாழ்க்கை என்பது அவருக்கு மிகத்தெளிவாய் தெரியும்.
“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” (சங் 22) என்பது அந்தக்கால பிரபலமான ஒரு பாடலின் தொடக்கம். இயேசு அந்தப் பாடலின் வரியைத் தொடங்கிவைத்தார். அதைக் கேட்டவர்களின் மனதில் அந்தப் பாடல் முழுமையாய் ஒலிபரப்பாகியிருக்க வேண்டும். “உண்மையாகவே இவர் கடவுளுடைய மகன்” என சிலர் நம்பிக்கை கொள்ள அதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.
அந்தப் பாடல் இயேசுவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவீது மன்னனால் எழுதப்பட்டது. மெசியா பற்றிய பாடல். இயேசுவைப் பற்றிய பாடல்.
“மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்...” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.
சிலுவை மரணம் வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலேயே, ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என இந்த சங்கீதம் தீர்க்கதரிசனமாய் பேசுகிறது. “என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்” என்றெல்லாம் சிலுவைக் காட்சியை பதிவு செய்திருக்கிறது.
இயேசு அந்த பாடலின் முதல் வரியை வலியின் ஒலியாய் ஒலிக்கச் செய்து, தான் ‘மெசியா’ என்பதை குறிப்பால் உணர்த்தினார். நமது பாவங்களை அவர் சுமந்து தீர்த்தார்.
உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு அவரோடு சரணடைவோருக்கு, அவரது அரசில் நிச்சயம் இடம் உண்டு.
சேவியர்
கஅபத்துல்லா, அல்லாஹ்வால் உருவாக்கப்படும் காலகட்டத்திலேயே இத்தகைய சிறப்பம்சத்தோடு தான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் முஸ்லிம்களின் தொழுகையின் முகப்பு கஅபத்துல்லாவாக இருக்கிறது.
“கிழக்கு திசையும், மேற்கு திசையும் அல்லாஹ்விற்கே உரியன. ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். மிக அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:115)
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதராய் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். அல்லாஹ்விடம் இருந்து ‘வஹி’ எனப்படும் இறைச்செய்திகள் அவ்வப்போது நபிகளுக்கு வந்தது. அந்த இறைவசனங்களை மக்களிடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்.
அந்த இறைவசனங்களில் இருந்த உண்மை மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நபிகளாரின் போதனைகளை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் கூட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள், ஏக இறைவனான தன்னை வணங்குவதற்கான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தித் தர அல்லாஹ் விரும்பினான்.
இதையடுத்து நபிகளாரை “மிக்ராஜ்” என்ற விண்வெளிப் பயணத்தின் மூலம் தன்னிடத்திற்கு அழைத்தான். அப்போது, தன் அடியார்களுக்கு தினமும் ஐந்து வேளைத் தொழுகையை கடமையாக்கினான்.
அதன் அடிப்படையில் பலருக்கு தொழுகை முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் கண்மணி நாயகம். அதில் ஒரு வரைமுறையாக, தொழுகைக்காக எழுந்து நிற்பவர் பாலஸ்தீனில் உள்ள “பைத்துல் முகத்தஸ்” என்ற இறை இல்லத்தை நோக்கி தொழ வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
அண்ணலார் மக்காவில் வாழ்ந்த காலத்தில் “பைத்துல் முகத்தஸ்” என்ற பள்ளிவாசல் இருந்த திசையை நோக்கியே அனைவரும் தொழுது வந்தனர். நபிபெருமான் (ஸல்) மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து மதினாவை வந்தடைந்த பிறகு ‘கஅபா’ ஆலயத்தின் மீதான அன்பு அவர் களுக்கு மனதில் அதிகரிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதை அறிந்த அல்லாஹ் நபிகளாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட இந்த வசனத்தை இறக்கினான்:
“நபியே உமது முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாக திருப்புகிறோம். எனவே நீர் தொழும் போது மக்காவிலுள்ள கஅபத்துல்லாவின் பக்கமே உமது முகத்தை திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே! நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழுகையில் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (திருக்குர்ஆன் 2:144).
ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ஷபான் மாதம் அத்தீக் என்ற இடத்தில் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) லுஹர் (நண்பகல் நேர) தொழுகை தொழுது கொண்டிருந்த போது இந்த வசனம் இறங்கியது.
மாநபி அவர்கள் மனம் மகிழ்ந்தவர்களாக தான் தொழுது கொண்டிருந்த இரண்டாவது ரக்காத்திலேயே அப்படியே நேர் எதிர் திசையான கஅபத்துல்லாவை நோக்கி திரும்பினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து தொழுது கொண்டிருந்த சஹாபா பெருமக்களும் அப்படியே நபிகளைப் பின்பற்றி தங்கள் திசையை மாற்றிக் கொண்டார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் கஅபத்துல்லாவை முன்னோக்கியே தொழுது வருகிறார்கள்.
எந்த மஸ்ஜித்தில் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தொழுதார்களோ அந்த பள்ளிவாசல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு இமாம் நின்று தொழும் இடம் (மிக்ராப்) எதிரும் புதிருமாக இரண்டு இருப்பதை இன்று கூட அங்கு செல்லும் அனைவராலும் காணமுடியும். அந்த பள்ளிவாசல் ‘மஸ்ஜித் கிப்லதைன்’ (இரண்டு மிக்ராப்கள் கொண்ட மஸ்ஜித்) என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டு வருகிறது.
“இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென மனிதர் களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது மக்கா வில் இருப்பது தான்” என்பது திருக்குர்ஆன் (3:96) வசனமாகும்.
அல்லாஹ்வால் கட்டி அமைக்கப்பட்ட இல்லம் கஅபத்துல்லா. உலகம் தோன்றிய அன்றே அல்லாஹ்வால் நிர்மாணிக்கப்பட்ட இறைஇல்லம் `கஅபா' உலகின் முதல் ஆலயமும், ஆதிபிதா ஆதம் நபியவர்கள் தொழுத ஆலயமும் இதுவே. பின்னாளில் நூஹ் நபி காலத்தில் வெள்ளப் பிரளயத்தால் உலகம் அழிக்கப் பட்ட போது கஅபத்துல்லாவும் சிதலம் அடைந்து மண்ணில் புதைந்திருந்தது.
இப்ராகிம் நபியவர்களின் காலத்தில் அல்லாஹ் அந்த கஅபத்துல்லாவை மீண்டும் புதுப்பித்து மக்களுக்காக வணக்கஸ்தலமாக உருவாக்க எண்ணினான்.
பாரசீகத்தில் வாழ்ந்து வந்த இப்ராகிம் நபியவர்களை அரபு பாலைவனத்திற்கு வரச் செய்து, அந்த இடத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டி மீண்டும் அதனை கட்டி முடிக்க கட்டளையிட்டான். இப்ராகிம் நபியும், அவரது மகன் இஸ்மாயில் நபியும் சேர்ந்து கஅபாவை கட்டி முடித்து விட்டு இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
“எங்கள் இறைவனே! உனக்காக நாங்கள் செய்த இந்த பணியை எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ தான் எங்களது பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:127)
அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், “மக்காவில் இப்ராகிம் நபியவர்கள் கட்டிய கஅபா என்னும் வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம்” (2:125) என்ற வசனத்தை திருக்குர்ஆனில் இறக்கி வைத்தான்.
இந்தியாவில் வாழும் பிற மதத்தினர் முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு திசையை நோக்கித் தொழுகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அல்லாஹ்வின் கட்டளை கஅபத்துல்லாவை நோக்கி தொழ வேண்டும் என்பதே.
கஅபத்துல்லா, அல்லாஹ்வால் உருவாக்கப்படும் காலகட்டத்திலேயே இத்தகைய சிறப்பம்சத்தோடு தான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் முஸ்லிம்களின் தொழுகையின் முகப்பு கஅபத்துல்லாவாக இருக்கிறது.
“நீங்கள் எங்கிருந்த போதிலும் மஸ்ஜித் கஅபாவின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம் என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். அதனால் நீங்கள் நிச்சயமாக நேரான வழியை அடைவீர்கள்” என்பது திருக்குர்ஆன் (2:150) வசனம் ஆகும்.
நாம் எங்கிருந்த போதிலும் நம் முகத்தை காஅபா நோக்கியே திருப்புவோம், தொழுவோம், நன்மை அனைத்தையும் பெற்று கொள்வோம்.
மு.முஹம்மது யூசுப்
உடன்குடி.
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதராய் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். அல்லாஹ்விடம் இருந்து ‘வஹி’ எனப்படும் இறைச்செய்திகள் அவ்வப்போது நபிகளுக்கு வந்தது. அந்த இறைவசனங்களை மக்களிடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்.
அந்த இறைவசனங்களில் இருந்த உண்மை மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நபிகளாரின் போதனைகளை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் கூட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள், ஏக இறைவனான தன்னை வணங்குவதற்கான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தித் தர அல்லாஹ் விரும்பினான்.
இதையடுத்து நபிகளாரை “மிக்ராஜ்” என்ற விண்வெளிப் பயணத்தின் மூலம் தன்னிடத்திற்கு அழைத்தான். அப்போது, தன் அடியார்களுக்கு தினமும் ஐந்து வேளைத் தொழுகையை கடமையாக்கினான்.
அதன் அடிப்படையில் பலருக்கு தொழுகை முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் கண்மணி நாயகம். அதில் ஒரு வரைமுறையாக, தொழுகைக்காக எழுந்து நிற்பவர் பாலஸ்தீனில் உள்ள “பைத்துல் முகத்தஸ்” என்ற இறை இல்லத்தை நோக்கி தொழ வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
அண்ணலார் மக்காவில் வாழ்ந்த காலத்தில் “பைத்துல் முகத்தஸ்” என்ற பள்ளிவாசல் இருந்த திசையை நோக்கியே அனைவரும் தொழுது வந்தனர். நபிபெருமான் (ஸல்) மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து மதினாவை வந்தடைந்த பிறகு ‘கஅபா’ ஆலயத்தின் மீதான அன்பு அவர் களுக்கு மனதில் அதிகரிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதை அறிந்த அல்லாஹ் நபிகளாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட இந்த வசனத்தை இறக்கினான்:
“நபியே உமது முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாக திருப்புகிறோம். எனவே நீர் தொழும் போது மக்காவிலுள்ள கஅபத்துல்லாவின் பக்கமே உமது முகத்தை திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே! நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழுகையில் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (திருக்குர்ஆன் 2:144).
ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ஷபான் மாதம் அத்தீக் என்ற இடத்தில் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) லுஹர் (நண்பகல் நேர) தொழுகை தொழுது கொண்டிருந்த போது இந்த வசனம் இறங்கியது.
மாநபி அவர்கள் மனம் மகிழ்ந்தவர்களாக தான் தொழுது கொண்டிருந்த இரண்டாவது ரக்காத்திலேயே அப்படியே நேர் எதிர் திசையான கஅபத்துல்லாவை நோக்கி திரும்பினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து தொழுது கொண்டிருந்த சஹாபா பெருமக்களும் அப்படியே நபிகளைப் பின்பற்றி தங்கள் திசையை மாற்றிக் கொண்டார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் கஅபத்துல்லாவை முன்னோக்கியே தொழுது வருகிறார்கள்.
எந்த மஸ்ஜித்தில் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தொழுதார்களோ அந்த பள்ளிவாசல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு இமாம் நின்று தொழும் இடம் (மிக்ராப்) எதிரும் புதிருமாக இரண்டு இருப்பதை இன்று கூட அங்கு செல்லும் அனைவராலும் காணமுடியும். அந்த பள்ளிவாசல் ‘மஸ்ஜித் கிப்லதைன்’ (இரண்டு மிக்ராப்கள் கொண்ட மஸ்ஜித்) என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டு வருகிறது.
“இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென மனிதர் களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது மக்கா வில் இருப்பது தான்” என்பது திருக்குர்ஆன் (3:96) வசனமாகும்.
அல்லாஹ்வால் கட்டி அமைக்கப்பட்ட இல்லம் கஅபத்துல்லா. உலகம் தோன்றிய அன்றே அல்லாஹ்வால் நிர்மாணிக்கப்பட்ட இறைஇல்லம் `கஅபா' உலகின் முதல் ஆலயமும், ஆதிபிதா ஆதம் நபியவர்கள் தொழுத ஆலயமும் இதுவே. பின்னாளில் நூஹ் நபி காலத்தில் வெள்ளப் பிரளயத்தால் உலகம் அழிக்கப் பட்ட போது கஅபத்துல்லாவும் சிதலம் அடைந்து மண்ணில் புதைந்திருந்தது.
இப்ராகிம் நபியவர்களின் காலத்தில் அல்லாஹ் அந்த கஅபத்துல்லாவை மீண்டும் புதுப்பித்து மக்களுக்காக வணக்கஸ்தலமாக உருவாக்க எண்ணினான்.
பாரசீகத்தில் வாழ்ந்து வந்த இப்ராகிம் நபியவர்களை அரபு பாலைவனத்திற்கு வரச் செய்து, அந்த இடத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டி மீண்டும் அதனை கட்டி முடிக்க கட்டளையிட்டான். இப்ராகிம் நபியும், அவரது மகன் இஸ்மாயில் நபியும் சேர்ந்து கஅபாவை கட்டி முடித்து விட்டு இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
“எங்கள் இறைவனே! உனக்காக நாங்கள் செய்த இந்த பணியை எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ தான் எங்களது பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:127)
அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், “மக்காவில் இப்ராகிம் நபியவர்கள் கட்டிய கஅபா என்னும் வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம்” (2:125) என்ற வசனத்தை திருக்குர்ஆனில் இறக்கி வைத்தான்.
இந்தியாவில் வாழும் பிற மதத்தினர் முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு திசையை நோக்கித் தொழுகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அல்லாஹ்வின் கட்டளை கஅபத்துல்லாவை நோக்கி தொழ வேண்டும் என்பதே.
கஅபத்துல்லா, அல்லாஹ்வால் உருவாக்கப்படும் காலகட்டத்திலேயே இத்தகைய சிறப்பம்சத்தோடு தான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் முஸ்லிம்களின் தொழுகையின் முகப்பு கஅபத்துல்லாவாக இருக்கிறது.
“நீங்கள் எங்கிருந்த போதிலும் மஸ்ஜித் கஅபாவின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம் என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். அதனால் நீங்கள் நிச்சயமாக நேரான வழியை அடைவீர்கள்” என்பது திருக்குர்ஆன் (2:150) வசனம் ஆகும்.
நாம் எங்கிருந்த போதிலும் நம் முகத்தை காஅபா நோக்கியே திருப்புவோம், தொழுவோம், நன்மை அனைத்தையும் பெற்று கொள்வோம்.
மு.முஹம்மது யூசுப்
உடன்குடி.
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வந்துசேரும் அனேக தகவல்கள் ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. நாமும் அவற்றை அப்படியே நம்பி பரப்புகின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் நமக்கு வந்துசேரும் அனேக தகவல்கள் ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. நாமும் அவற்றை அப்படியே நம்பி பரப்புகின்றோம்.
அவை உண்மைதானா என உறுதி செய்வதற்கு எவரிடமும் நேரம் இல்லை. நேரம் இருந்தாலும் விருப்பம் இருப்பதில்லை.
‘வாட்ஸ்அப்’ மற்றும் முகநூலில் வந்து குவியும் செய்திகளை அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்ற ஒற்றைப் பின்குறிப்புடன் வருவனவற்றை அப்படியே பரப்புவதால், எத்தனை எத்தனை மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை யார் தான் எண்ணிப்பார்ப்பது?
அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’. (திருக்குர்ஆன் 49:6)
இன்று அனேக சமூக ஊடகங்கள், ஊகங்களால்தான் செய்தியை நிறைக்கின்றன. பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதால் அவசர கதியில் வெந்தது பாதி, வேகாதது மீதி என்ற ரீதியில் செயல்படுகின்றனர். செய்திகளை முந்தித் தருவதில் இருக்கும் அவசரம், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து அலசி ஆராய்வதில் இருப்பதில்லை.
உண்மையில் இதுஒருவகை சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடே. ‘சமூகத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எங்களுக்கு என்ன?.. எங்களுக்குத் தேவை சூடான செய்திகள் மட்டுமே’ என்பது ஒருவகை மோசடியே.
செய்தி சொல்வதில் ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை நம்மைவிட உயர்பண்புடன் விளங்கியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம், ஹுத் ஹுத் எனும் கெண்டலாத்திப் பறவைதான் அது.
ஸபா என்ற தேசத்தின் செய்தியை சுலைமான் (அலை) அவர்களிடம் அது கொண்டுவந்தபோது மனம்போன போக்கில் வாய்க்குவந்தபடி தட்டிவிடவில்லை. மாறாக அது இவ்வாறு கூறியது: ‘‘நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்’’. (திருக்குர்ஆன் 27:22)
அந்தப் பறவை பொய் சொல்லாது என்று சுலைமான் (அலை) அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால்.. ஆஹா.. ஓஹோ.. ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது என்று உடனே சுலைமான் (அலை) மகிழ்ச்சி அடையவில்லை. அதுகுறித்து உடனடியாக தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை.
மாறாக, ‘‘சுலைமான் கூறினார்: நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப்போதே நாம் பார்த்துவிடுகின்றோம்’’. (27:27)
சுலைமான் (அலை) விசாரித்தார்கள். உண்மையை அறிந்துகொண்டார்கள். பின்னரே நடவடிக்கையில் இறங்கினார்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடு.
எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ஒரு செய்தியை நம்புவதும்.. உடனே பரப்புவதும், உறுதியற்ற செய்தியை வைத்து ஊகத்தால் முடிவெடுப்பதும் பெரும் தவறு. மட்டுமல்ல அது பெரும்பாவமும், சமூகப் பொறுப்புணர்வற்ற தன்மையும் ஆகும்.
இறைவன் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக ஊகிப்பதை (சந்தேகம் கொள்வதை) தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’’. (திருக்குர்ஆன் 49:12)
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. ஊகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் துருவித்துருவி ஆராயச் சொல்லும். துருவித்துருவி ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம்பேச வழிவகுக்கும். புறம், பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை, கொலைக்கு வழிவகுக்கும்.
ஆக, பிறர் குறித்த தவறான ஓர் ஊகம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். நாம் நினைப்பது போன்று ஊகம் என்பது வெறுமனே ஒரு கெட்ட எண்ணம் மட்டுமல்ல. மாறாக, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். இம்மையிலும் மறுமையிலும் அதற்கு பெரும் தண்டனை உள்ளது.
‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மை யிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர்’’. (திருக்குர்ஆன் 24:19)
முஅத்தா போரில் நபிகள் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீரமரணம் அடைகின்றனர். இறுதியாக காலித் பின் வலீத் (ரலி) தளபதியாக பொறுப்பை ஏற்கிறார்.
போர்க்களம்... எதிரிகளின் எண்ணிக்கை முஸ்லிம்களைவிட மிகமிக அதிகம். காலித் (ரலி) அவர்களின் புத்திக்கூர்மையால் ஒரு கட்டத்தில் எதிரிகள் பின்வாங்கி ஓட, தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்க வேண்டாம் என்று காலித் (ரலி) உத்தரவு பிறப்பிக்கின்றார். அன்று மாலையே மதீனா திரும்புமாறும் மறு உத்தரவு வருகிறது. படை மதீனாவுக்குத் திரும்புகிறது.
ஆயினும் படை வந்தடையும் முன்னரே அவர்கள் குறித்த செய்தி காட்டுத் தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாகப் பரவுகிறது. ஆம், இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் பின்வாங்கி வருகிறது என்ற ஊகச்செய்தி பரவத்தொடங்கியது.
நகருக்குள் நுழைந்த இஸ்லாமியப் படையை வாழ்த்தி வரவேற்ப தற்குப் பதிலாக, ஒட்டுமொத்த படைமீதும் மண் வாரி வீசினர் மக்கள்.
செய்தி கேள்விப்பட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் நமக்கான பாடம்.
ஏனையவர்களைப் போன்று நபிகளாரும் அவசரப்பட்டார்களா..? வானுக்கும் பூமிக்கும் குதித்தார்களா? ஒருபோதும் இல்லை. காலித் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்.
‘‘இறைவனின் தூதரே! எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். முஸ்லிம்களோ வெறும் பத்தாயிரம். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென எதிரிகள் எதிர் தாக்குதல் நடத்திவிட்டால் நமக்குத்தான் பெரும் உயிர் சேதம் ஏற்படும். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடிவரவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்திற்காக திரும்பி வந்துள்ளோம்’’ என்று காலித் (ரலி) விளக்கினார்.
கூடிநின்ற மதீனத்து மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘இவர்கள் விரண்டோடி வந்தவர்கள் அல்லர். உறுதியுடன் நிற்பவர்கள், இன்ஷா அல்லாஹ்’’. (புகாரி)
இதுதான் பண்பாடு! இதுதான் நாகரிகம்!! இதுதான் இஸ்லாம்!!!
ஆனால் நாம்...?
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
அவை உண்மைதானா என உறுதி செய்வதற்கு எவரிடமும் நேரம் இல்லை. நேரம் இருந்தாலும் விருப்பம் இருப்பதில்லை.
‘வாட்ஸ்அப்’ மற்றும் முகநூலில் வந்து குவியும் செய்திகளை அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்ற ஒற்றைப் பின்குறிப்புடன் வருவனவற்றை அப்படியே பரப்புவதால், எத்தனை எத்தனை மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை யார் தான் எண்ணிப்பார்ப்பது?
அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’. (திருக்குர்ஆன் 49:6)
இன்று அனேக சமூக ஊடகங்கள், ஊகங்களால்தான் செய்தியை நிறைக்கின்றன. பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதால் அவசர கதியில் வெந்தது பாதி, வேகாதது மீதி என்ற ரீதியில் செயல்படுகின்றனர். செய்திகளை முந்தித் தருவதில் இருக்கும் அவசரம், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து அலசி ஆராய்வதில் இருப்பதில்லை.
உண்மையில் இதுஒருவகை சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடே. ‘சமூகத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எங்களுக்கு என்ன?.. எங்களுக்குத் தேவை சூடான செய்திகள் மட்டுமே’ என்பது ஒருவகை மோசடியே.
செய்தி சொல்வதில் ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை நம்மைவிட உயர்பண்புடன் விளங்கியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம், ஹுத் ஹுத் எனும் கெண்டலாத்திப் பறவைதான் அது.
ஸபா என்ற தேசத்தின் செய்தியை சுலைமான் (அலை) அவர்களிடம் அது கொண்டுவந்தபோது மனம்போன போக்கில் வாய்க்குவந்தபடி தட்டிவிடவில்லை. மாறாக அது இவ்வாறு கூறியது: ‘‘நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்’’. (திருக்குர்ஆன் 27:22)
அந்தப் பறவை பொய் சொல்லாது என்று சுலைமான் (அலை) அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால்.. ஆஹா.. ஓஹோ.. ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது என்று உடனே சுலைமான் (அலை) மகிழ்ச்சி அடையவில்லை. அதுகுறித்து உடனடியாக தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை.
மாறாக, ‘‘சுலைமான் கூறினார்: நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப்போதே நாம் பார்த்துவிடுகின்றோம்’’. (27:27)
சுலைமான் (அலை) விசாரித்தார்கள். உண்மையை அறிந்துகொண்டார்கள். பின்னரே நடவடிக்கையில் இறங்கினார்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடு.
எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ஒரு செய்தியை நம்புவதும்.. உடனே பரப்புவதும், உறுதியற்ற செய்தியை வைத்து ஊகத்தால் முடிவெடுப்பதும் பெரும் தவறு. மட்டுமல்ல அது பெரும்பாவமும், சமூகப் பொறுப்புணர்வற்ற தன்மையும் ஆகும்.
இறைவன் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக ஊகிப்பதை (சந்தேகம் கொள்வதை) தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’’. (திருக்குர்ஆன் 49:12)
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. ஊகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் துருவித்துருவி ஆராயச் சொல்லும். துருவித்துருவி ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம்பேச வழிவகுக்கும். புறம், பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை, கொலைக்கு வழிவகுக்கும்.
ஆக, பிறர் குறித்த தவறான ஓர் ஊகம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். நாம் நினைப்பது போன்று ஊகம் என்பது வெறுமனே ஒரு கெட்ட எண்ணம் மட்டுமல்ல. மாறாக, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். இம்மையிலும் மறுமையிலும் அதற்கு பெரும் தண்டனை உள்ளது.
‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மை யிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர்’’. (திருக்குர்ஆன் 24:19)
முஅத்தா போரில் நபிகள் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீரமரணம் அடைகின்றனர். இறுதியாக காலித் பின் வலீத் (ரலி) தளபதியாக பொறுப்பை ஏற்கிறார்.
போர்க்களம்... எதிரிகளின் எண்ணிக்கை முஸ்லிம்களைவிட மிகமிக அதிகம். காலித் (ரலி) அவர்களின் புத்திக்கூர்மையால் ஒரு கட்டத்தில் எதிரிகள் பின்வாங்கி ஓட, தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்க வேண்டாம் என்று காலித் (ரலி) உத்தரவு பிறப்பிக்கின்றார். அன்று மாலையே மதீனா திரும்புமாறும் மறு உத்தரவு வருகிறது. படை மதீனாவுக்குத் திரும்புகிறது.
ஆயினும் படை வந்தடையும் முன்னரே அவர்கள் குறித்த செய்தி காட்டுத் தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாகப் பரவுகிறது. ஆம், இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் பின்வாங்கி வருகிறது என்ற ஊகச்செய்தி பரவத்தொடங்கியது.
நகருக்குள் நுழைந்த இஸ்லாமியப் படையை வாழ்த்தி வரவேற்ப தற்குப் பதிலாக, ஒட்டுமொத்த படைமீதும் மண் வாரி வீசினர் மக்கள்.
செய்தி கேள்விப்பட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் நமக்கான பாடம்.
ஏனையவர்களைப் போன்று நபிகளாரும் அவசரப்பட்டார்களா..? வானுக்கும் பூமிக்கும் குதித்தார்களா? ஒருபோதும் இல்லை. காலித் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்.
‘‘இறைவனின் தூதரே! எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். முஸ்லிம்களோ வெறும் பத்தாயிரம். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென எதிரிகள் எதிர் தாக்குதல் நடத்திவிட்டால் நமக்குத்தான் பெரும் உயிர் சேதம் ஏற்படும். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடிவரவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்திற்காக திரும்பி வந்துள்ளோம்’’ என்று காலித் (ரலி) விளக்கினார்.
கூடிநின்ற மதீனத்து மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘இவர்கள் விரண்டோடி வந்தவர்கள் அல்லர். உறுதியுடன் நிற்பவர்கள், இன்ஷா அல்லாஹ்’’. (புகாரி)
இதுதான் பண்பாடு! இதுதான் நாகரிகம்!! இதுதான் இஸ்லாம்!!!
ஆனால் நாம்...?
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
நபிகள் மீது தங்கள் உயிரை விட அதிக அன்பு கொள்ளாதவரை அவர்களின் ஈமான் பரி பூரணமாவதில்லை
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி நன்மை, தீமைகள் குறித்து தங்களது தோழர்களிடம் எடுத்துச் சொல்லுவதுண்டு. அப்போது, ‘ஒருவர் தனது செயல்கள் மூலம் மறுமையில் சொர்க்கம் அல்லது நரகத்தை பெற்றுக்கொள்வார்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
இதைக்கருத்தில் கொண்ட தோழர்கள், ‘நபிகளாருக்கு மறுமை குறித்த விளக்கங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்’ என்று கருதினார்கள். இதனால் நபிகளிடம் மறுமை குறித்த விவரங்களை அடிக்கடி கேட்டு வந்தார்கள்.
ஒரு முறை நபித்தோழர் ஒருவர் நபிகளாரை அணுகி இவ்வாறு கேட்டார்:
“இறைத்தூதரே, நான் உங்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன். என் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென உங்கள் நினைவு வந்தால், அதனை அப்படியே விட்டு விட்டு ஓடோடி வந்து உங்களை உள்ளங்குளிர பார்ப்பேன். அப்போது தான் என் மனம் சாந்தியடையும். ஆனால் இப்போது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நம் இருவரின் வாழ்க்கையும் இப்படியே எத்தனை காலம் சென்று கொண்டிருக்கும்? ‘எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுகித்தேயாக வேண்டும்’ (திருக்குர்ஆன் 3:185) என்பது இறைவனின் வாக்கு. அப்படியானால் நாம் அனைவருக்கும் மரணம் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் சொர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பீர்கள். அப்போது, என் நிலை என்னவாகுமோ நான் அறியேன். அந்த தருணத்தில் எனக்கு உங்களின் ஞாபகம் வருமானால், நான் உங்களை வந்து நேரில் சந்தித்து மனம் அமைதி பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?”
இவ்வாறு அந்த நபித்தோழர் கவலையுடன் கேட்டார்.
அண்ணல் நபிகள் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அமைதியாக இருந்தார்கள்.
இந்த நிகழ்வுகளை கண் காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ், அந்த நல்லடியாரின் கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக கீழ்க்கண்ட வசனங்களை இறைச்செய்தியாக இறக்கினான்:
“எவர்கள் அல்லாஹ்விற்கும்; அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ் அருள் செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்க போரில் உயிர் நீத்த தியாகிகள், நல்ஒழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் மறுமையில் வசிப்பார்கள். இவர்கள் தான் மிக அழகான தோழர்கள்” (திருக்குர்ஆன் 4:69)
இந்த வசனம் இறங்கியவுடன் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், அதனை தன் தோழருக்கு ஓதிக்காட்டி விவரம் சொன்னார்கள். தொடர்ந்து, “என் மீது அன்பு கொண்டவர்கள், இருவிரல்கள் இணைந்திருப்பது போல நாளை மறுமையிலும் என்னுடனேயே இருப்பார்கள்” என்று தன் இருவிரல்களையும் இணைத்து காட்டினார்கள்.
தன் பொருட்டால் ஓர் இறைவசனம் இறங்கியதை நினைத்த அந்த நபித்தோழர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமல் போயிற்று.
இன்னுமொரு முறை இன்னொரு நபித்தோழர், அண்ணல் நபியை அணுகி, “நபியே! நாயகமே, நீங்கள் அடிக்கடி சொல்லும் மறுமை என்பது எப்போது நிகழும்? எனக்கு கொஞ்சம் விவரித்து சொன்னால் நன்றாயிருக்குமே?” எனக்கேட்டார்.
அப்போதும் நபிகளார் மவுனம் சாதித்தார்கள். அந்த நேரத்தில் இறைவனின் இறைச்செய்தியாய் இந்த திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:
“நபியே! இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றியும், அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: ‘அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக்கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்று தான் உங்களை வந்தடையும்’. அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: ‘அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது’. ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்” (7:187).
இந்த இறை வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை அல்லாஹ் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றான். ‘மகஸர்’ என்ற மறுமை நாள் ஏற்பட்டே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம் அது எப்போது ஏற்படும்?, எப்படி ஏற்படும்? என்பதையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. எனவே தான் நபிகளாருக்கு கூட அது தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், மக்கள் ஆர்வம் மிகுதியால், நபிகளாருக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், மறுமைநாள் பற்றி கேட்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் இந்த வசனம் மூலம் தெளிவு படுத்துகிறான்.
இந்த இறை வசனத்தை ஓதிக்காட்டிய நபி பெருமானர் (ஸல்) அவர்கள், அந்த நபித்தோழரை அழைத்து, ‘மறுமையைப் பற்றி அறிவதற்கு இத்தனை ஆர்வம் காட்டுகிறீர்களே?, அதை எதிர்கொள்வதற்கு என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
நபித்தோழர் சற்றும் சிந்திக்கவில்லை, “அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன். நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்களே, ‘என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவன் நாளை மறுமையில் என்னோடு ஒன்றாய் இணைந்திருப்பான்’ என்று. எனவே நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன். அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வாக்கு சத்தியமானது” என்று மனம் மகிழ்ந்தவர்களாக தன் பதிலை பதிவு செய்தார்கள்.
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள், நபி பெருமானோடு பேசிக்கொண்டிருந்த போது, அண்ணலை நோக்கி, “எங்களின் நாயகமே! நான் இந்த உலகின் எல்லா பொருட்களையும் விட உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், என் உயிரைத் தவிர” என்று சொன்னார்கள்.
உடனே நபியவர்கள், “உமரே! நீங்கள் உங்கள் உயிரை விட என் மீது அதிக அன்பு கொள்ளாதவரை உங்கள் ஈமான் (இறையச்சம்) பரிபூரணமாவதில்லை?” என்றார்கள்.
பதறிப்போன உமர் (ரலி) அவர்கள் உடனே, “நபியே! நிச்சயமாகச் சொல்கிறேன். நான் என் உயிரை விட உங்களை அதிகமாய் நேசிக்கின்றேன்” என்றார்கள்.
அண்ணல் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.
ஈமானின் உறுதிப்பாட்டில் மிக அழுத்தமாய் நிலைத்திருந்த அருமை சஹாபா பெருமக்களையே, ‘நபிகள் மீது தங்கள் உயிரை விட அதிக அன்பு கொள்ளாதவரை அவர்களின் ஈமான் பரி பூரணமாவதில்லை’ என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள். அப்படி என்றால் ஈமானில் பலவீனமாய் அடித்தட்டில் உள்ள நம் போன்றவர்களின் நிலைமை என்னவாகும்?
அண்ணல் நபிகள் மீது அன்பை வளர்ப்போம், மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.
மு.முஹம்மது யூசுப்,
உடன்குடி.
இதைக்கருத்தில் கொண்ட தோழர்கள், ‘நபிகளாருக்கு மறுமை குறித்த விளக்கங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்’ என்று கருதினார்கள். இதனால் நபிகளிடம் மறுமை குறித்த விவரங்களை அடிக்கடி கேட்டு வந்தார்கள்.
ஒரு முறை நபித்தோழர் ஒருவர் நபிகளாரை அணுகி இவ்வாறு கேட்டார்:
“இறைத்தூதரே, நான் உங்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன். என் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென உங்கள் நினைவு வந்தால், அதனை அப்படியே விட்டு விட்டு ஓடோடி வந்து உங்களை உள்ளங்குளிர பார்ப்பேன். அப்போது தான் என் மனம் சாந்தியடையும். ஆனால் இப்போது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நம் இருவரின் வாழ்க்கையும் இப்படியே எத்தனை காலம் சென்று கொண்டிருக்கும்? ‘எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுகித்தேயாக வேண்டும்’ (திருக்குர்ஆன் 3:185) என்பது இறைவனின் வாக்கு. அப்படியானால் நாம் அனைவருக்கும் மரணம் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் சொர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பீர்கள். அப்போது, என் நிலை என்னவாகுமோ நான் அறியேன். அந்த தருணத்தில் எனக்கு உங்களின் ஞாபகம் வருமானால், நான் உங்களை வந்து நேரில் சந்தித்து மனம் அமைதி பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?”
இவ்வாறு அந்த நபித்தோழர் கவலையுடன் கேட்டார்.
அண்ணல் நபிகள் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அமைதியாக இருந்தார்கள்.
இந்த நிகழ்வுகளை கண் காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ், அந்த நல்லடியாரின் கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக கீழ்க்கண்ட வசனங்களை இறைச்செய்தியாக இறக்கினான்:
“எவர்கள் அல்லாஹ்விற்கும்; அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ் அருள் செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்க போரில் உயிர் நீத்த தியாகிகள், நல்ஒழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் மறுமையில் வசிப்பார்கள். இவர்கள் தான் மிக அழகான தோழர்கள்” (திருக்குர்ஆன் 4:69)
இந்த வசனம் இறங்கியவுடன் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், அதனை தன் தோழருக்கு ஓதிக்காட்டி விவரம் சொன்னார்கள். தொடர்ந்து, “என் மீது அன்பு கொண்டவர்கள், இருவிரல்கள் இணைந்திருப்பது போல நாளை மறுமையிலும் என்னுடனேயே இருப்பார்கள்” என்று தன் இருவிரல்களையும் இணைத்து காட்டினார்கள்.
தன் பொருட்டால் ஓர் இறைவசனம் இறங்கியதை நினைத்த அந்த நபித்தோழர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமல் போயிற்று.
இன்னுமொரு முறை இன்னொரு நபித்தோழர், அண்ணல் நபியை அணுகி, “நபியே! நாயகமே, நீங்கள் அடிக்கடி சொல்லும் மறுமை என்பது எப்போது நிகழும்? எனக்கு கொஞ்சம் விவரித்து சொன்னால் நன்றாயிருக்குமே?” எனக்கேட்டார்.
அப்போதும் நபிகளார் மவுனம் சாதித்தார்கள். அந்த நேரத்தில் இறைவனின் இறைச்செய்தியாய் இந்த திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:
“நபியே! இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றியும், அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: ‘அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக்கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்று தான் உங்களை வந்தடையும்’. அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: ‘அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது’. ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்” (7:187).
இந்த இறை வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை அல்லாஹ் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றான். ‘மகஸர்’ என்ற மறுமை நாள் ஏற்பட்டே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம் அது எப்போது ஏற்படும்?, எப்படி ஏற்படும்? என்பதையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. எனவே தான் நபிகளாருக்கு கூட அது தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், மக்கள் ஆர்வம் மிகுதியால், நபிகளாருக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், மறுமைநாள் பற்றி கேட்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் இந்த வசனம் மூலம் தெளிவு படுத்துகிறான்.
இந்த இறை வசனத்தை ஓதிக்காட்டிய நபி பெருமானர் (ஸல்) அவர்கள், அந்த நபித்தோழரை அழைத்து, ‘மறுமையைப் பற்றி அறிவதற்கு இத்தனை ஆர்வம் காட்டுகிறீர்களே?, அதை எதிர்கொள்வதற்கு என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
நபித்தோழர் சற்றும் சிந்திக்கவில்லை, “அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன். நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்களே, ‘என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவன் நாளை மறுமையில் என்னோடு ஒன்றாய் இணைந்திருப்பான்’ என்று. எனவே நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன். அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வாக்கு சத்தியமானது” என்று மனம் மகிழ்ந்தவர்களாக தன் பதிலை பதிவு செய்தார்கள்.
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள், நபி பெருமானோடு பேசிக்கொண்டிருந்த போது, அண்ணலை நோக்கி, “எங்களின் நாயகமே! நான் இந்த உலகின் எல்லா பொருட்களையும் விட உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், என் உயிரைத் தவிர” என்று சொன்னார்கள்.
உடனே நபியவர்கள், “உமரே! நீங்கள் உங்கள் உயிரை விட என் மீது அதிக அன்பு கொள்ளாதவரை உங்கள் ஈமான் (இறையச்சம்) பரிபூரணமாவதில்லை?” என்றார்கள்.
பதறிப்போன உமர் (ரலி) அவர்கள் உடனே, “நபியே! நிச்சயமாகச் சொல்கிறேன். நான் என் உயிரை விட உங்களை அதிகமாய் நேசிக்கின்றேன்” என்றார்கள்.
அண்ணல் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.
ஈமானின் உறுதிப்பாட்டில் மிக அழுத்தமாய் நிலைத்திருந்த அருமை சஹாபா பெருமக்களையே, ‘நபிகள் மீது தங்கள் உயிரை விட அதிக அன்பு கொள்ளாதவரை அவர்களின் ஈமான் பரி பூரணமாவதில்லை’ என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள். அப்படி என்றால் ஈமானில் பலவீனமாய் அடித்தட்டில் உள்ள நம் போன்றவர்களின் நிலைமை என்னவாகும்?
அண்ணல் நபிகள் மீது அன்பை வளர்ப்போம், மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.
மு.முஹம்மது யூசுப்,
உடன்குடி.






