என் மலர்
இஸ்லாம்
மண்ணுக்கும், ஆணிவேருக்கும் மத்தியில் இருக்கும் இறுக்கமான பிணைப்பு போன்று மக்களோடு மக்களாகப் பின்னப்பட்ட தலைமையைக் காணத் துடிக்கிறது இன்றைய சமூகம்.
மண்ணுக்கும், ஆணிவேருக்கும் மத்தியில் இருக்கும் இறுக்கமான பிணைப்பு போன்று மக்களோடு மக்களாகப் பின்னப்பட்ட தலைமையைக் காணத் துடிக்கிறது இன்றைய சமூகம்.
மக்களோடு மக்களாகக் கலந்து நிற்கக்கூடிய தலைமையைக் காணக் கிடைப்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட தலைமையால் மட்டுமே சமூகத்திற்கு நேர்த்தியான பாதை அமைக்க முடியும் என்பதை, காலங்கள் விட்டு சென்ற சுவடுகள் பயிற்றுவிக்கின்றன.
ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட நபி (ஸல்) அவர்கள், தன்னை எப்போதும் அரசனாக மக்களிடம் வெளிப்படுத்தியது கிடையாது. பொதுமக்கள் எப்போதும் சந்தித்து அவர்களின் புகார்களை தெரிவிக்கும் வண்ணம் அவர்களின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டிருந்தது. அறிமுகமில்லாத நபர் கூட இலகுவாகச் சந்திக்கும் அரசனாகத்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள். இதற்கு உதாரணமாகப் பல நிகழ்ச்சிகள் உள்ளது. அதில் ஒன்றை காண்போம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசல் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர் களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பின் கழுத்து சிவந்து விட்டது.
‘முஹம்மதே எனது இரு ஓட்டங்கள் நிறையப் பொருட்களை தருவீராக. உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ, உமது செல்வத்தில் இருந்தோ நீர் கொடுக்கப் போவதில்லை’ என்று அந்த மனிதர் கூறினார்.
‘இழுத்துக்கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைக் கொடுக்க மாட்டேன்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
‘நான் விட மாட்டேன்’ என்று அவர் கூறினார்.
இவ்வாறு மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோதும், மூன்று முறையும் அவர் விடமாட்டேன் என்றார்.
அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம்.
‘நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவரை நோக்கி ‘இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீர்களாக’ என்றார்கள்.
பின்னர் மக்களை நோக்கி ‘நீங்கள் புறப்படுங்கள்’ என்றார்கள்.
நபித்தோழர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் இந்த செய்தியை நமக்கு கூறுகின்றார்கள் (அபூதாவூத் 4694)
சாதாரண சிறு பதவியில் இருப்பவரைக்கூட முன் அனுமதி இல்லாமல் பார்க்க இயலாது. ஆனால் ஒரு நாட்டின் அரசரின் அவைக்கு சென்று அவரது கழுத்தில் துணியைப் போட்டு தனது தேவையை ஒருவர் கேட்கிறார் என்பது நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள் என்பதை நமக்குத் தெளிவு செய்கிறது.
நபி (ஸல்) அவர்கள், தன்னை எப்போதும் அரசனாகப் பாவித்து மக்களை விட்டு தனக்கு தடுப்பணை போடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த இன்னொரு நிகழ்ச்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதை நாம் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்மாயிலின் வழித்தோன்றல்களே அம்பெய்யுங்கள், உங்கள் தந்தை அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்’ என்று கூறினார்கள்.
மற்றொரு அணியினர் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
‘ஏன் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று அவர்களிடம் நபி (ஸல்) கேட்டார்கள்.
‘நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’ என்று அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்’ என்றார்கள். (புகாரி 2899).
எல்லோரும் எண்ணுவது போன்று எளிமையாய் வாழ்வது எளிதானதல்ல. “எளிமை என்பது இயல்பால் பெறப்பட்ட குழந்தை”. அந்தக்குழந்தையை, காலம் முழுக்க நபி (ஸல்) அவர்கள் தன் மடியில் பாதுகாத்து வந்தார்கள்.
எளிமையானவர்களுக்கு ஆடம்பரமாக வாழ்வது எப்படி சிரமமான காரியமோ, அதைவிட சிரமமானது எளிமையற்றவர்கள் தங்களை எளிமையானவர்களென்று காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள். அந்த முயற்சி என்ற சீப்பில்தான் ஒவ்வொரு நாளும் தங்களை அலங்காரம் செய்து கொள்கிறார்கள் இன்றைய தலைவர்கள்.
மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க, தலைமைத்துவத்தின் மீது தீரா ஆசை கொண்டுள்ளவர்களும், தற்போது தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், நபி (ஸல்) அவர்களின் அரசியல் வாழ்வை முழுமையாகப் பயில வேண்டும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
மக்களோடு மக்களாகக் கலந்து நிற்கக்கூடிய தலைமையைக் காணக் கிடைப்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட தலைமையால் மட்டுமே சமூகத்திற்கு நேர்த்தியான பாதை அமைக்க முடியும் என்பதை, காலங்கள் விட்டு சென்ற சுவடுகள் பயிற்றுவிக்கின்றன.
ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட நபி (ஸல்) அவர்கள், தன்னை எப்போதும் அரசனாக மக்களிடம் வெளிப்படுத்தியது கிடையாது. பொதுமக்கள் எப்போதும் சந்தித்து அவர்களின் புகார்களை தெரிவிக்கும் வண்ணம் அவர்களின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டிருந்தது. அறிமுகமில்லாத நபர் கூட இலகுவாகச் சந்திக்கும் அரசனாகத்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள். இதற்கு உதாரணமாகப் பல நிகழ்ச்சிகள் உள்ளது. அதில் ஒன்றை காண்போம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசல் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர் களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பின் கழுத்து சிவந்து விட்டது.
‘முஹம்மதே எனது இரு ஓட்டங்கள் நிறையப் பொருட்களை தருவீராக. உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ, உமது செல்வத்தில் இருந்தோ நீர் கொடுக்கப் போவதில்லை’ என்று அந்த மனிதர் கூறினார்.
‘இழுத்துக்கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைக் கொடுக்க மாட்டேன்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
‘நான் விட மாட்டேன்’ என்று அவர் கூறினார்.
இவ்வாறு மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோதும், மூன்று முறையும் அவர் விடமாட்டேன் என்றார்.
அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம்.
‘நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவரை நோக்கி ‘இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீர்களாக’ என்றார்கள்.
பின்னர் மக்களை நோக்கி ‘நீங்கள் புறப்படுங்கள்’ என்றார்கள்.
நபித்தோழர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் இந்த செய்தியை நமக்கு கூறுகின்றார்கள் (அபூதாவூத் 4694)
சாதாரண சிறு பதவியில் இருப்பவரைக்கூட முன் அனுமதி இல்லாமல் பார்க்க இயலாது. ஆனால் ஒரு நாட்டின் அரசரின் அவைக்கு சென்று அவரது கழுத்தில் துணியைப் போட்டு தனது தேவையை ஒருவர் கேட்கிறார் என்பது நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள் என்பதை நமக்குத் தெளிவு செய்கிறது.
நபி (ஸல்) அவர்கள், தன்னை எப்போதும் அரசனாகப் பாவித்து மக்களை விட்டு தனக்கு தடுப்பணை போடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த இன்னொரு நிகழ்ச்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதை நாம் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஸ்மாயிலின் வழித்தோன்றல்களே அம்பெய்யுங்கள், உங்கள் தந்தை அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்’ என்று கூறினார்கள்.
மற்றொரு அணியினர் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
‘ஏன் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று அவர்களிடம் நபி (ஸல்) கேட்டார்கள்.
‘நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’ என்று அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்’ என்றார்கள். (புகாரி 2899).
எல்லோரும் எண்ணுவது போன்று எளிமையாய் வாழ்வது எளிதானதல்ல. “எளிமை என்பது இயல்பால் பெறப்பட்ட குழந்தை”. அந்தக்குழந்தையை, காலம் முழுக்க நபி (ஸல்) அவர்கள் தன் மடியில் பாதுகாத்து வந்தார்கள்.
எளிமையானவர்களுக்கு ஆடம்பரமாக வாழ்வது எப்படி சிரமமான காரியமோ, அதைவிட சிரமமானது எளிமையற்றவர்கள் தங்களை எளிமையானவர்களென்று காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள். அந்த முயற்சி என்ற சீப்பில்தான் ஒவ்வொரு நாளும் தங்களை அலங்காரம் செய்து கொள்கிறார்கள் இன்றைய தலைவர்கள்.
மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க, தலைமைத்துவத்தின் மீது தீரா ஆசை கொண்டுள்ளவர்களும், தற்போது தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், நபி (ஸல்) அவர்களின் அரசியல் வாழ்வை முழுமையாகப் பயில வேண்டும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
அநியாயம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? என்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டிய நிகழ்வு ஒன்று நூஹ் நபிகள் காலத்தில் நடந்தது.
அநியாயம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? என்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டிய நிகழ்வு ஒன்று நூஹ் நபிகள் காலத்தில் நடந்தது. மக்களுக்கு படிப்பினை தரும் இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“பின்னர், ’பூமியே நீ உன் தண்ணீரை விழுங்கி விடு. வானமே! மழை பொழிவதை நிறுத்திக்கொள்’ என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்து விட்டது. அக்கப்பலும் ஜூதி என்னும் மலையில் தங்கியது. ‘அநியாயம் செய்த மக்களுக்கு இத்தகைய அழிவு தான்’ என்று உலகமெங்கும் பறை சாட்டப்பட்டது”. (திருக்குர்ஆன் 11:44)
“எனினும் அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்து கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்”. (திருக்குர்ஆன் 29:15)
நூஹ் நபிகளை தன் தூதராக அல்லாஹ் அங்கீகரித்தான். அவருக்கு நபி பட்டம் கொடுத்து, ‘மக்களிடம் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனை மட்டுமே வணங்க வேண்டும்’ என்று எடுத்துக்கூறச்செய்தான்.
இதன்படி அவரும் தன் மக்களை அழைத்து, “மக்களே நீங்கள் சிலை வணக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக்கொண்டு வணங்குங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அந்த மக்களோ, ‘நீங்கள் எங்களைவிட உயர்ந்தவர் கிடையாது. உங்களுக்கு எந்த சிறப்புத்தன்மையும் இல்லை. அப்படிப்பட்ட நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்க முடியாது’, என்றார்கள்.
கிட்டதட்ட 990 ஆண்டுகள் நூஹ் நபியின் பிரச்சாரம் தொடர்ந்தும் கூட ஒரு சிலரைத் தவிர மற்றவர் எவரும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவில்லை. அவரது சொந்த மகனே இதை ஏற்கவில்லை.
நூஹ் நபியவர்கள் இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா, நல்ல முறையில் உன்னைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லியும் இம்மக்கள் அதனை புரிந்து கொள்ளும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு ஒரு நல்ல முடிவை நீ ஏற்படுத்துவாயாக’.
இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், நூஹ் நபி அவர்களுக்கு கீழ்க்கண்ட இறைச்செய்தியை அறிவித்தான்:
“முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.”
“நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது). (திருக்குர்ஆன் 11:36,37)
அல்லாஹ்வின் கட்டளைப்படி நூஹ் நபியவர்களும் கப்பலைச் செய்தார்கள். அப்போது அங்கு வந்த அந்த மக்களின் தலைவர்கள் அவரை எள்ளி நகையாடினார்கள். “வான் மழை பார்த்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்ட நிலையில் இவர் எந்த வெள்ளத்துக்குப் பயந்து இந்த கப்பலை செய்கிறார்” என்று அவரை கேலி செய்தார்கள்.
கப்பல் செய்து முடிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரான அந்த தருணத்தில் அல்லாஹ் விதித்திருந்த அந்த வேதனையும் இறங்க ஆரம்பித்தது. மீண்டும் நூஹ் நபியவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) வந்திறங்கியது.
“ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி “ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்ளுங்கள்” என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை”. (திருக்குர்ஆன் 11:40)
இதையடுத்து, நூஹ் நபிகளும் தன்னைச் சார்ந்த நல்லடியார்களை நோக்கி, “இதைச் செலுத்தவும், நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிக கருணையுடையவன் ஆவான்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 11:41)
அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி எல்லாம் சரிவர நிறைவேறியதும் அவனது கட்டளை பிறந்தது. வானம் பொழிந்து தீர்த்தது. நிற்காமல் பெய்த மழையினால் பூமி முழுவதும் வெள்ளக் காடாயிற்று. அதிலிருந்து எவரும் தப்ப முடியாத அளவில் பூமியில் உள்ள அத்தனையும் அழிந்து போயின. கப்பலில் காப்பாற்றப்பட்ட நூஹ் நபியும் அவர்களைச் சார்ந்த நல்லடியார்களையும் தவிர.
ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும் என்ற படிப்பினையை இதன் மூலம் இறைவன் நிகழ்த்திக்காட்டினான்.
உலகில் எல்லாம் அழிவுற்ற நிலையில் அல்லாஹ்வின் கருணை (ரஹ்மத்) இறங்கத் தொடங்கியது. உலகில் உயரமான மலைகளுக்கும் மேலாக மிதந்து சென்ற அந்த கப்பல் வெள்ளம் முழுவதும் வடிந்த நிலையில் ஜுதி என்ற மலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையே திருக்குர்ஆன் (11:48) இவ்வாறு குறிப்பிடுகிறது:
“(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி’ என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) “நூஹே! நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங்களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக”.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த உலக நிகழ்வு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தியாக அல்லாஹ்வால் அருளப்பட்டது.
அந்த செய்தியும் உண்மை என்பதும் உறுதியாகி இருக்கிறது. மலை ஏறும் குழுவினர் சிலர் ஜுதி மலையில் ஏறியபோது, அதன் உச்சியில் பனிப்பாறைகளுக்கு இடையே பெரிய மரத்துண்டுகள் இருந்ததை கண்டறிந்தார்கள். இது நூஹ் நபியவர்கள் பயன்படுத்திய கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கிறார்கள்.
திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இந்த உண்மை உறுதியாகிறது.
- முஹம்மது யூசுப்
உடன்குடி
“பின்னர், ’பூமியே நீ உன் தண்ணீரை விழுங்கி விடு. வானமே! மழை பொழிவதை நிறுத்திக்கொள்’ என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்து விட்டது. அக்கப்பலும் ஜூதி என்னும் மலையில் தங்கியது. ‘அநியாயம் செய்த மக்களுக்கு இத்தகைய அழிவு தான்’ என்று உலகமெங்கும் பறை சாட்டப்பட்டது”. (திருக்குர்ஆன் 11:44)
“எனினும் அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்து கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்”. (திருக்குர்ஆன் 29:15)
நூஹ் நபிகளை தன் தூதராக அல்லாஹ் அங்கீகரித்தான். அவருக்கு நபி பட்டம் கொடுத்து, ‘மக்களிடம் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனை மட்டுமே வணங்க வேண்டும்’ என்று எடுத்துக்கூறச்செய்தான்.
இதன்படி அவரும் தன் மக்களை அழைத்து, “மக்களே நீங்கள் சிலை வணக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக்கொண்டு வணங்குங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அந்த மக்களோ, ‘நீங்கள் எங்களைவிட உயர்ந்தவர் கிடையாது. உங்களுக்கு எந்த சிறப்புத்தன்மையும் இல்லை. அப்படிப்பட்ட நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்க முடியாது’, என்றார்கள்.
கிட்டதட்ட 990 ஆண்டுகள் நூஹ் நபியின் பிரச்சாரம் தொடர்ந்தும் கூட ஒரு சிலரைத் தவிர மற்றவர் எவரும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவில்லை. அவரது சொந்த மகனே இதை ஏற்கவில்லை.
நூஹ் நபியவர்கள் இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா, நல்ல முறையில் உன்னைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லியும் இம்மக்கள் அதனை புரிந்து கொள்ளும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு ஒரு நல்ல முடிவை நீ ஏற்படுத்துவாயாக’.
இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், நூஹ் நபி அவர்களுக்கு கீழ்க்கண்ட இறைச்செய்தியை அறிவித்தான்:
“முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.”
“நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது). (திருக்குர்ஆன் 11:36,37)
அல்லாஹ்வின் கட்டளைப்படி நூஹ் நபியவர்களும் கப்பலைச் செய்தார்கள். அப்போது அங்கு வந்த அந்த மக்களின் தலைவர்கள் அவரை எள்ளி நகையாடினார்கள். “வான் மழை பார்த்து வருடங்கள் எத்தனையோ உருண்டோடி விட்ட நிலையில் இவர் எந்த வெள்ளத்துக்குப் பயந்து இந்த கப்பலை செய்கிறார்” என்று அவரை கேலி செய்தார்கள்.
கப்பல் செய்து முடிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரான அந்த தருணத்தில் அல்லாஹ் விதித்திருந்த அந்த வேதனையும் இறங்க ஆரம்பித்தது. மீண்டும் நூஹ் நபியவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) வந்திறங்கியது.
“ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி “ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்ளுங்கள்” என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை”. (திருக்குர்ஆன் 11:40)
இதையடுத்து, நூஹ் நபிகளும் தன்னைச் சார்ந்த நல்லடியார்களை நோக்கி, “இதைச் செலுத்தவும், நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிக கருணையுடையவன் ஆவான்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 11:41)
அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி எல்லாம் சரிவர நிறைவேறியதும் அவனது கட்டளை பிறந்தது. வானம் பொழிந்து தீர்த்தது. நிற்காமல் பெய்த மழையினால் பூமி முழுவதும் வெள்ளக் காடாயிற்று. அதிலிருந்து எவரும் தப்ப முடியாத அளவில் பூமியில் உள்ள அத்தனையும் அழிந்து போயின. கப்பலில் காப்பாற்றப்பட்ட நூஹ் நபியும் அவர்களைச் சார்ந்த நல்லடியார்களையும் தவிர.
ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும் என்ற படிப்பினையை இதன் மூலம் இறைவன் நிகழ்த்திக்காட்டினான்.
உலகில் எல்லாம் அழிவுற்ற நிலையில் அல்லாஹ்வின் கருணை (ரஹ்மத்) இறங்கத் தொடங்கியது. உலகில் உயரமான மலைகளுக்கும் மேலாக மிதந்து சென்ற அந்த கப்பல் வெள்ளம் முழுவதும் வடிந்த நிலையில் ஜுதி என்ற மலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையே திருக்குர்ஆன் (11:48) இவ்வாறு குறிப்பிடுகிறது:
“(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி’ என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) “நூஹே! நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங்களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக”.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த உலக நிகழ்வு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தியாக அல்லாஹ்வால் அருளப்பட்டது.
அந்த செய்தியும் உண்மை என்பதும் உறுதியாகி இருக்கிறது. மலை ஏறும் குழுவினர் சிலர் ஜுதி மலையில் ஏறியபோது, அதன் உச்சியில் பனிப்பாறைகளுக்கு இடையே பெரிய மரத்துண்டுகள் இருந்ததை கண்டறிந்தார்கள். இது நூஹ் நபியவர்கள் பயன்படுத்திய கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கிறார்கள்.
திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இந்த உண்மை உறுதியாகிறது.
- முஹம்மது யூசுப்
உடன்குடி
பயபக்தியான காரியங்களிலும் உதவ முன்வரவேண்டும். பாவம் மற்றும் பகைமை, வரம்பு மீறுதல், உரிமை மீறல் போன்றவற்றில் யாரும் யாருக்கும் உதவ முன்வரக்கூடாது.
நியாயமான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து, துணை நிற்க வேண்டும். அநியாயமான காரியங்களில் யாரும் யாருக்கும் உதவி செய்வதின் வழியாக பாவத்திற்கு துணை போகக்கூடாது.
இதுதான் இஸ்லாத்தின் உயர்வான கூற்றாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்:
‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. (5:2)
நன்மையான காரியங்கள் என்றால், எவற்றை செய்யும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்துவிதமான நற்செயல்களுக்கும் உதவி செய்வது ஆகும். பாவமான காரியங்கள் என்றால், எவற்றை முற்றிலும் விட்டுவிடும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்து விதமான கெட்ட செயல்களையும் விட்டுவிடுவது ஆகும்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும் சரி, அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே, அவனுக்கு நீ உதவி செய்’.
உடனே நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது சரி. அது எப்படி அநியாயக்காரனுக்கு நான் உதவி செய்வது?’ என ஒரு நபித்தோழர் கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ‘அநீதி செய்வதில் இருந்து அவனை தடுத்து நிறுத்துவதே நீ அவனுக்கு செய்யும் உதவியாகும்’ எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).
‘அநியாயக்காரனுக்கும் உதவி செய்’ என்று இஸ்லாம் கூறுகிறது. இது அவன் செய்யும் அநியாயத்திற்காக அல்ல. அநியாயத்தை அவன் விடுவதற்காக. அநியாயத்திலிருந்து அவன் விடுதலை பெற்று, நியாயவாதியாக மாறுவதற்காக.
‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய மாட்டார். அவர் மற்றவருக்கு உதவி செய்வதையும் கைவிடமாட்டார். யார் தமது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ, அவரின் தேவையை இறைவன் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவாரோ, அவரின் மறுமைநாளின் கஷ்டங்களை இறைவன் நீக்கிவிடுகின்றான். யார் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக் கிறாரோ, அவரின் குறைகளை இறைவன் மறுமைநாளில் மறைத்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்)
‘ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுக்கோ அல்லது பிற மனிதருக்கோ அவர் செய்யும் உதவி என்பது மற்றவருக்கு அவர் அநியாயம் செய்யக்கூடாது. மூன்றாம் நபர் கெடுதியிலிருந்து இவரை பாதுகாக்க வேண்டும். பிறரின் தேவைகள் எதுவாயினும் அது நன்மையான காரியமாக இருந்தால், அவரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவருக்கு ஏற்படும் கஷ்டங்களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். அவரிடம் குறைகள் ஏதேனும் தென்பட்டால் அதை பெரிதுபடுத்தாமல் அவற்றை மறைத்துவிட வேண்டும். இவ்வாறு பிறருக்கு பயன்தரும் மனிதரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவராக இருக்கிறார் என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘மக்களுக்கு மிகவும் பயன்தரும் நபரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்’ எனக்கூறினார்கள்.
பிறருக்கு உதவி செய்வதற்கு எந்த வகையில் வாய்ப்பு கிடைத்தாலும் அதை வீணடித்து விடக்கூடாது. நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பிறருக்கு உதவிட வாய்ப்பு அமைந்த சமயங்களில், உதவிகள் பல புரிந்த நிகழ்வு வரலாற்று நெடுகிலும் காணமுடிகிறது.
‘உஹத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் எஞ்சி இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)
உஹத் மலை அளவு தங்கம் என்னிடம் இருப்பினும் அதை மூன்று தினங்களுக்கு மேல் வைத்திருக்கமாட்டேன் என்ற நபியின் கூற்று அவர்களிடம் எந்தளவுக்கு உதவும் மனப்பான்மை இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.
‘அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு இருப்பு குறைந்து போய்விட்டால், தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)
இது ஒரு அபூர்வ நிகழ்வு. இது ஒரு உணவுப் புரட்சி. கையிருப்பில் உள்ள உணவை பரவலாக்கும் ஒரு உயர்தரமான திட்டம். இது வறுமையையும், பசிக்கொடுமையையும் இல்லாமல் ஆக்கும் கனவு திட்டம். இது உணவு மற்றும் தானிய இருப்பு குறைந்தவர்களுக்கு உதவிட ஏற்படுத்தப்பட்ட ஒரு உயர்வான திட்டம். அந்த குலத்தினர் இந்தத் திட்டத்தை முன்மாதிரியாக செயல்படுத்தியதால்தான் ‘அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன்’ என நபி (ஸல்) அவர்கள் அந்தக்குலத்தினரை புகழ்ந்தார்கள்.
உதவி என்பது பலவகை. நிதி உதவி, உணவு மற்றும் தானிய உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி, பயண உதவி, கடன் உதவி, உடலுதவி, சேவை மனப்பான்மை, விபத்து உதவி, சிறுஉதவி, பேருதவி, இறைஇல்ல கட்டிட நிதி உதவி போன்ற உதவிகள் உண்டு. அனைத்துவிதமான உதவி களையும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டும் என இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. நன்மைதரும் விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும். பயபக்தியான காரியங்களிலும் உதவ முன்வரவேண்டும். பாவம் மற்றும் பகைமை, வரம்பு மீறுதல், உரிமை மீறல் போன்றவற்றில் யாரும் யாருக்கும் உதவ முன்வரக்கூடாது.
நியாயத்திற்கு துணை நிற்போம், அநியாயத்திற்கு துணை போகாதீர்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
இதுதான் இஸ்லாத்தின் உயர்வான கூற்றாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்:
‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. (5:2)
நன்மையான காரியங்கள் என்றால், எவற்றை செய்யும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்துவிதமான நற்செயல்களுக்கும் உதவி செய்வது ஆகும். பாவமான காரியங்கள் என்றால், எவற்றை முற்றிலும் விட்டுவிடும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்து விதமான கெட்ட செயல்களையும் விட்டுவிடுவது ஆகும்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும் சரி, அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே, அவனுக்கு நீ உதவி செய்’.
உடனே நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது சரி. அது எப்படி அநியாயக்காரனுக்கு நான் உதவி செய்வது?’ என ஒரு நபித்தோழர் கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ‘அநீதி செய்வதில் இருந்து அவனை தடுத்து நிறுத்துவதே நீ அவனுக்கு செய்யும் உதவியாகும்’ எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).
‘அநியாயக்காரனுக்கும் உதவி செய்’ என்று இஸ்லாம் கூறுகிறது. இது அவன் செய்யும் அநியாயத்திற்காக அல்ல. அநியாயத்தை அவன் விடுவதற்காக. அநியாயத்திலிருந்து அவன் விடுதலை பெற்று, நியாயவாதியாக மாறுவதற்காக.
‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய மாட்டார். அவர் மற்றவருக்கு உதவி செய்வதையும் கைவிடமாட்டார். யார் தமது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ, அவரின் தேவையை இறைவன் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவாரோ, அவரின் மறுமைநாளின் கஷ்டங்களை இறைவன் நீக்கிவிடுகின்றான். யார் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக் கிறாரோ, அவரின் குறைகளை இறைவன் மறுமைநாளில் மறைத்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்)
‘ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுக்கோ அல்லது பிற மனிதருக்கோ அவர் செய்யும் உதவி என்பது மற்றவருக்கு அவர் அநியாயம் செய்யக்கூடாது. மூன்றாம் நபர் கெடுதியிலிருந்து இவரை பாதுகாக்க வேண்டும். பிறரின் தேவைகள் எதுவாயினும் அது நன்மையான காரியமாக இருந்தால், அவரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவருக்கு ஏற்படும் கஷ்டங்களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். அவரிடம் குறைகள் ஏதேனும் தென்பட்டால் அதை பெரிதுபடுத்தாமல் அவற்றை மறைத்துவிட வேண்டும். இவ்வாறு பிறருக்கு பயன்தரும் மனிதரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவராக இருக்கிறார் என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘மக்களுக்கு மிகவும் பயன்தரும் நபரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்’ எனக்கூறினார்கள்.
பிறருக்கு உதவி செய்வதற்கு எந்த வகையில் வாய்ப்பு கிடைத்தாலும் அதை வீணடித்து விடக்கூடாது. நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பிறருக்கு உதவிட வாய்ப்பு அமைந்த சமயங்களில், உதவிகள் பல புரிந்த நிகழ்வு வரலாற்று நெடுகிலும் காணமுடிகிறது.
‘உஹத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் எஞ்சி இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)
உஹத் மலை அளவு தங்கம் என்னிடம் இருப்பினும் அதை மூன்று தினங்களுக்கு மேல் வைத்திருக்கமாட்டேன் என்ற நபியின் கூற்று அவர்களிடம் எந்தளவுக்கு உதவும் மனப்பான்மை இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.
‘அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு இருப்பு குறைந்து போய்விட்டால், தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)
இது ஒரு அபூர்வ நிகழ்வு. இது ஒரு உணவுப் புரட்சி. கையிருப்பில் உள்ள உணவை பரவலாக்கும் ஒரு உயர்தரமான திட்டம். இது வறுமையையும், பசிக்கொடுமையையும் இல்லாமல் ஆக்கும் கனவு திட்டம். இது உணவு மற்றும் தானிய இருப்பு குறைந்தவர்களுக்கு உதவிட ஏற்படுத்தப்பட்ட ஒரு உயர்வான திட்டம். அந்த குலத்தினர் இந்தத் திட்டத்தை முன்மாதிரியாக செயல்படுத்தியதால்தான் ‘அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன்’ என நபி (ஸல்) அவர்கள் அந்தக்குலத்தினரை புகழ்ந்தார்கள்.
உதவி என்பது பலவகை. நிதி உதவி, உணவு மற்றும் தானிய உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி, பயண உதவி, கடன் உதவி, உடலுதவி, சேவை மனப்பான்மை, விபத்து உதவி, சிறுஉதவி, பேருதவி, இறைஇல்ல கட்டிட நிதி உதவி போன்ற உதவிகள் உண்டு. அனைத்துவிதமான உதவி களையும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டும் என இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. நன்மைதரும் விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும். பயபக்தியான காரியங்களிலும் உதவ முன்வரவேண்டும். பாவம் மற்றும் பகைமை, வரம்பு மீறுதல், உரிமை மீறல் போன்றவற்றில் யாரும் யாருக்கும் உதவ முன்வரக்கூடாது.
நியாயத்திற்கு துணை நிற்போம், அநியாயத்திற்கு துணை போகாதீர்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
நபிகளாரின் பிரசாரம் மூலம் விழிப்படைந்த மக்கள் திருந்தினார்கள். இதனால் தங்கள் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் நபிகளாரை எதிர்த்தனர் குறைஷிகள்.
‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்’. (திருக்குர்ஆன் 20:14)
முகம்மது நபிகள் (ஸல்) அவர் களின் ஏகத்துவப்பிரசாரம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. நபிகளார் கூறிய ஏகத்துவத்தின் சிறப்புகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். மேலும் அதை பின்பற்றவும் தொடங்கினார்கள்.
அது குறைஷி குலத்தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சிலை வழிபாட்டிற்கு எதிரான அவரது பிரசாரம் குறைஷியரை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது. காரணம், ‘கஅபா’வில் உள்ள எண்ணற்ற சிலைகளை வணங்குவதற்காக வெளியூர்களில் இருந்து வரும் மக்களால் வியாபாரங்கள் செழித்தன.
நபிகளாரின் பிரசாரம் மூலம் விழிப்படைந்த மக்கள் திருந்தினார்கள். இதனால் தங்கள் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் நபிகளாரை எதிர்த்தனர் குறைஷிகள்.
எம்பெருமானார் முகம்மது நபிகள் (ஸல்) சிறப்பு மிகுந்த அரபு குலத்தில் தோன்றியவர்கள். அந்தகுலப்பெருமையை கருத்தில் கொண்டு குறைஷி தலைவர்கள் நபிகளாரின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களைச் சந்தித்து இவ்வாறு குற்றம் சுமத்தினார்கள்:
உங்களின் அண்ணன் மகன் முகம்மது நமது கடவுள்களை அவமதிக்கிறார். சிலை வணக்கங்களை சாடுகிறார். நமது முன்னோர்களை வழி தவறியவர் களாக சொல்லி நிந்திக்கின்றார். நாம் அடிமையாய் வைத்திருப்பவர்களை தூண்டிவிட்டு அவர்களை சரிசமமாய் மதிக்கச் சொல்கிறார்.
பெண்களைப் போகப் பொருளாக கருதாமல் அவர்களுக்குரிய அந்தஸ்த்தை, உரிமையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பெண்களிடம் அன்போடும், மென்மையோடும் நடந்து கொள்ளுங்கள் என்கின்றார்.
இவை எல்லாம் நம் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமான நடவடிக்கை. இதனை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் புத்திமதி சொல்லி அவரை நம் வழிக்கு வரச்செய்யுங்கள். இல்லை என்றால் நீங்களும் அவரோடு சேர்ந்துகொண்டு எங்களுடன் போர் செய்ய தயாராகுங்கள்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.
தன் அண்ணன் மகனுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை உணர்ந்த அபூதாலிப், நபிகளாரை அழைத்து நடந்த எல்லாவற்றையும் கூறி, குறைஷிகளை அனுசரித்து செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.
அதற்கு நபிகளார், “என் அருமை சிறிய தந்தையே! இது நானாக ஏற்படுத்திக்கொண்டது அல்ல. ஏக இறைவனாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட இறைத்தூது. அதனை நான் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அல்லாஹ் மீது ஆணையாக இந்த குறைஷி தலைவர்கள் எனது ஒரு கையில் சூரியனையும், மறுகையில் சந்திரனையும் வைத்தாலும் நான் ஏகத்துவத்தை பிரசாரம் செய்வதை நிறுத்தி விட முடியாது. அல்லாஹ்வின் இந்த மார்க்கம் செழிக்கச் செய்வதே என் பணி. அதிலிருந்து நான் சிறிதும் விலகுவதற்கில்லை. இந்தப்பணியில் நான் அழிந்து போனாலும், கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன்”, என்று தன் தீர்க்கமான பதிலை சொன்னார்கள்.
இவ்வாறு உறுதிபட சொன்ன அண்ணலாரின் பதில் அபூதாலிபை சற்று சிந்திக்கவைத்தது. “எது எவ்வாறு நடந்தாலும் நான் உங்களை எதிரிகளின் கையில் ஒப்படைக்க மாட்டேன்” என்றார்கள்.
இருப்பினும் நாளுக்கு நாள் எதிரி களின் தொல்லைகள் கடுமையானது. மென்மை உள்ளம் கொண்ட மக்களால் இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை.
ஒரு நாள் இரவில் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனிடம் “இறைவா, எங்களுக்கு சரியான ஆதரவு தரக் கூடிய ஒருவரைக்கொண்டு எங்களின் கரங்களை உறுதிப்படுத்து. அபூஜஹில் அல்லது உமர் கத்தாப் ஆகிய இரு வீரர்களில் ஒருவரை எங்களுக்கு ஆதரவாக திருப்பி விடு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அதே சமயம் குறைஷிகளின் தூண்டு தலின் பேரில் உமர் கத்தாப் நபிகளார் மீது கோபம் கொண்டார். “இந்த பிரச்சினைக்கு காரணம் முகம்மது என்றால் நான் அவரது தலையை கொய்து வருகிறேன். அதன் மூலம் நம் மூதாதையர் கண்ணியத்தை காப்பாற்றுகிறேன்” என்று கூறியவராக வாளுடன் வீதியில் நடக்கத் தொடங்கினார்.
உமரை தெருவில் சந்தித்த நயீம் இப்னு அப்துல்லா என்பவர், “உமரே உருவிய வாளுடன் எங்கே செல்கிறீர்கள்?” என்றார்.
“முகம்மதுவின் நடவடிக்கைக்கு முடிவு காணவே சென்று கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னார் உமர்.
“அப்படியானால் நீங்கள் முதலில் செல்ல வேண்டியது உங்கள் தங்கையின் வீட்டிற்கே. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பல நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே செல்லுங்கள்” என்றார்.
“அப்படியா சொல்கிறீர்கள்” என்று கோபத்தோடு தங்கை பாத்திமாவின் வீட்டை நோக்கி நடந்தார் உமர். வீட்டைஅடைந்த போது, வீட்டின் உள்ளிருந்து ஒரு அழகான கவிதைபோன்ற வசனங்கள் யாரோ ஓதுவது போல் கேட்டது. அதனைகூர்ந்து கேட்டு விட்டு கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தங்கையை கோபாவேசமாய் தள்ளி விட்டார்கள் உமர் அவர்கள்.
‘நீயுமா அந்த முகம்மதுவின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாய்’ என்று ஆவேசமாக கூறினார்.
வீரரின் தங்கை அல்லவா அவர்களும் விட்டுக்கொடுக்கவில்லை. ‘நீங்கள் என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளுங்கள். ஏக இறைக்கொள்கையை நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை’ என்றார்கள்.
தங்கையின் உறுதியான வார்த்தைகளால் அதிர்ந்து போன உமரின் கண்களில் அருகில் கிடந்த தோலில் எழுதப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் பட்டன. அதனை கையில் எடுத்து ஓதத்தொடங்கினார்கள். “நிச்சயமாக நான் தான் அல்லாஹ், என்னையே வணங்குங்கள்” என்ற திருக்குர் ஆனின் தாஹா சூராவின் 14-ம் வசனம் உமர் அவர்களின் மனதில் மாற்றத்தைத் தோற்றுவித்தது.
நபிகளாரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு விட்ட நிகழ்வு அங்கே நிறைவேறியது.
உமர் அவர்கள் பதைபதைத்தவர்களாக “நான் திருக்குர் ஆனின் மற்ற வசனங்களையும் ஓதி உணர வேண்டும். இறைத்தூதர் அவர்களைச்சந்தித்து ஏக இறைக்கொள்கையை ஏற்க வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் தங்கையே” என்றார்கள்.
அதன்பின் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் உமர். மாவீரர் உமரின் மனதை மாற்றிய வசனங்கள் தான் மேலே சொல்லப்பட்டுள்ளது.
குர்ஆனின் வசனங்களை நம்பிக்கையோடு ஓதுவோம், நன்மைகளைப்பெற்றுக் கொள்வோம்.
- மு. முஹம்மது யூசுப், உடன்குடி
முகம்மது நபிகள் (ஸல்) அவர் களின் ஏகத்துவப்பிரசாரம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. நபிகளார் கூறிய ஏகத்துவத்தின் சிறப்புகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். மேலும் அதை பின்பற்றவும் தொடங்கினார்கள்.
அது குறைஷி குலத்தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சிலை வழிபாட்டிற்கு எதிரான அவரது பிரசாரம் குறைஷியரை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது. காரணம், ‘கஅபா’வில் உள்ள எண்ணற்ற சிலைகளை வணங்குவதற்காக வெளியூர்களில் இருந்து வரும் மக்களால் வியாபாரங்கள் செழித்தன.
நபிகளாரின் பிரசாரம் மூலம் விழிப்படைந்த மக்கள் திருந்தினார்கள். இதனால் தங்கள் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் நபிகளாரை எதிர்த்தனர் குறைஷிகள்.
எம்பெருமானார் முகம்மது நபிகள் (ஸல்) சிறப்பு மிகுந்த அரபு குலத்தில் தோன்றியவர்கள். அந்தகுலப்பெருமையை கருத்தில் கொண்டு குறைஷி தலைவர்கள் நபிகளாரின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களைச் சந்தித்து இவ்வாறு குற்றம் சுமத்தினார்கள்:
உங்களின் அண்ணன் மகன் முகம்மது நமது கடவுள்களை அவமதிக்கிறார். சிலை வணக்கங்களை சாடுகிறார். நமது முன்னோர்களை வழி தவறியவர் களாக சொல்லி நிந்திக்கின்றார். நாம் அடிமையாய் வைத்திருப்பவர்களை தூண்டிவிட்டு அவர்களை சரிசமமாய் மதிக்கச் சொல்கிறார்.
பெண்களைப் போகப் பொருளாக கருதாமல் அவர்களுக்குரிய அந்தஸ்த்தை, உரிமையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பெண்களிடம் அன்போடும், மென்மையோடும் நடந்து கொள்ளுங்கள் என்கின்றார்.
இவை எல்லாம் நம் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமான நடவடிக்கை. இதனை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் புத்திமதி சொல்லி அவரை நம் வழிக்கு வரச்செய்யுங்கள். இல்லை என்றால் நீங்களும் அவரோடு சேர்ந்துகொண்டு எங்களுடன் போர் செய்ய தயாராகுங்கள்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.
தன் அண்ணன் மகனுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை உணர்ந்த அபூதாலிப், நபிகளாரை அழைத்து நடந்த எல்லாவற்றையும் கூறி, குறைஷிகளை அனுசரித்து செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.
அதற்கு நபிகளார், “என் அருமை சிறிய தந்தையே! இது நானாக ஏற்படுத்திக்கொண்டது அல்ல. ஏக இறைவனாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட இறைத்தூது. அதனை நான் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அல்லாஹ் மீது ஆணையாக இந்த குறைஷி தலைவர்கள் எனது ஒரு கையில் சூரியனையும், மறுகையில் சந்திரனையும் வைத்தாலும் நான் ஏகத்துவத்தை பிரசாரம் செய்வதை நிறுத்தி விட முடியாது. அல்லாஹ்வின் இந்த மார்க்கம் செழிக்கச் செய்வதே என் பணி. அதிலிருந்து நான் சிறிதும் விலகுவதற்கில்லை. இந்தப்பணியில் நான் அழிந்து போனாலும், கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன்”, என்று தன் தீர்க்கமான பதிலை சொன்னார்கள்.
இவ்வாறு உறுதிபட சொன்ன அண்ணலாரின் பதில் அபூதாலிபை சற்று சிந்திக்கவைத்தது. “எது எவ்வாறு நடந்தாலும் நான் உங்களை எதிரிகளின் கையில் ஒப்படைக்க மாட்டேன்” என்றார்கள்.
இருப்பினும் நாளுக்கு நாள் எதிரி களின் தொல்லைகள் கடுமையானது. மென்மை உள்ளம் கொண்ட மக்களால் இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை.
ஒரு நாள் இரவில் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனிடம் “இறைவா, எங்களுக்கு சரியான ஆதரவு தரக் கூடிய ஒருவரைக்கொண்டு எங்களின் கரங்களை உறுதிப்படுத்து. அபூஜஹில் அல்லது உமர் கத்தாப் ஆகிய இரு வீரர்களில் ஒருவரை எங்களுக்கு ஆதரவாக திருப்பி விடு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அதே சமயம் குறைஷிகளின் தூண்டு தலின் பேரில் உமர் கத்தாப் நபிகளார் மீது கோபம் கொண்டார். “இந்த பிரச்சினைக்கு காரணம் முகம்மது என்றால் நான் அவரது தலையை கொய்து வருகிறேன். அதன் மூலம் நம் மூதாதையர் கண்ணியத்தை காப்பாற்றுகிறேன்” என்று கூறியவராக வாளுடன் வீதியில் நடக்கத் தொடங்கினார்.
உமரை தெருவில் சந்தித்த நயீம் இப்னு அப்துல்லா என்பவர், “உமரே உருவிய வாளுடன் எங்கே செல்கிறீர்கள்?” என்றார்.
“முகம்மதுவின் நடவடிக்கைக்கு முடிவு காணவே சென்று கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னார் உமர்.
“அப்படியானால் நீங்கள் முதலில் செல்ல வேண்டியது உங்கள் தங்கையின் வீட்டிற்கே. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பல நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே செல்லுங்கள்” என்றார்.
“அப்படியா சொல்கிறீர்கள்” என்று கோபத்தோடு தங்கை பாத்திமாவின் வீட்டை நோக்கி நடந்தார் உமர். வீட்டைஅடைந்த போது, வீட்டின் உள்ளிருந்து ஒரு அழகான கவிதைபோன்ற வசனங்கள் யாரோ ஓதுவது போல் கேட்டது. அதனைகூர்ந்து கேட்டு விட்டு கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தங்கையை கோபாவேசமாய் தள்ளி விட்டார்கள் உமர் அவர்கள்.
‘நீயுமா அந்த முகம்மதுவின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாய்’ என்று ஆவேசமாக கூறினார்.
வீரரின் தங்கை அல்லவா அவர்களும் விட்டுக்கொடுக்கவில்லை. ‘நீங்கள் என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளுங்கள். ஏக இறைக்கொள்கையை நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை’ என்றார்கள்.
தங்கையின் உறுதியான வார்த்தைகளால் அதிர்ந்து போன உமரின் கண்களில் அருகில் கிடந்த தோலில் எழுதப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் பட்டன. அதனை கையில் எடுத்து ஓதத்தொடங்கினார்கள். “நிச்சயமாக நான் தான் அல்லாஹ், என்னையே வணங்குங்கள்” என்ற திருக்குர் ஆனின் தாஹா சூராவின் 14-ம் வசனம் உமர் அவர்களின் மனதில் மாற்றத்தைத் தோற்றுவித்தது.
நபிகளாரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு விட்ட நிகழ்வு அங்கே நிறைவேறியது.
உமர் அவர்கள் பதைபதைத்தவர்களாக “நான் திருக்குர் ஆனின் மற்ற வசனங்களையும் ஓதி உணர வேண்டும். இறைத்தூதர் அவர்களைச்சந்தித்து ஏக இறைக்கொள்கையை ஏற்க வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் தங்கையே” என்றார்கள்.
அதன்பின் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் உமர். மாவீரர் உமரின் மனதை மாற்றிய வசனங்கள் தான் மேலே சொல்லப்பட்டுள்ளது.
குர்ஆனின் வசனங்களை நம்பிக்கையோடு ஓதுவோம், நன்மைகளைப்பெற்றுக் கொள்வோம்.
- மு. முஹம்மது யூசுப், உடன்குடி
சீர்திருத்தம் என்று சொல்லி எதாவது ஒரு பணியில் ஈடுபட்டால் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டி வருமே; நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பது ஒருவகையில் பலவீனமே.
நல்லவராக இருப்பதற்கும் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.
நல்லவராக இருத்தல் என்பது நல்ல காரியம்தான். ஆனால் அதில் ஒருவகை பகட்டும், பலவீனமும் உள்ளடங்கி இருக்கும். ஆம், ‘நான் நல்லவன் என்று காட்டுவதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கி இருத்தல் ஒருவகை பகட்டுதான்’.
சீர்திருத்தம் என்று சொல்லி எதாவது ஒரு பணியில் ஈடுபட்டால் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டி வருமே; நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பது ஒருவகையில் பலவீனமே.
பொதுவாக மக்கள் நல்லவர்களையே விரும்புவார்கள். சீர்திருத்தவாதிகளை வெறுப்பார்கள். ஏனெனில், மனம்போன போக்கில் வாழ்பவர்களை சீர்திருத்தம் செய்து நல்வழிப் படுத்துபவர்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. மனித மனோபாவம் இது.
ஆகவேதான் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர் முஹம்மத் (ஸல்) என்ற தனி நபரை மக்கத்துக் குறைஷிகள் நேசித்தனர். அதிகம் விரும்பினர். ‘நம்பிக்கையாளர்’, ‘உண்மையாளர்’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர்.
அதேசமயம், இறைத்தூதராக அனுப்பப்பட்ட பின்னர் பொய்யர், மந்திரவாதி, குறிசொல்பவர், பைத்தியக்காரர் என்று ஏசிப்பேசி தூற்றினர். காரணம், முஹம்மத் (ஸல்) என்ற மனிதர் இப்போது சீர்திருத்தவாதியாக மாறிவிட்டார்.
முஹம்மத் (ஸல்) என்ற தனிநபர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியில் ஓர் அடிமையை விடுதலை செய்தான் அபூலஹப். அதேசமயம் அதே முஹம்மத் (ஸல்) அவர்கள் சீர்திருத்தவாதியாக மாறியபோது அவருடைய முகத்தில் மண்ணை அள்ளி வீசினான் அதே அபூலஹப்.
‘அபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்ற ஒரு நல்ல மனிதர் நம்மிடையே வாழ்வது நமக்குப் பெருமை என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர் குறைஷிகள். அதே அபூபக்கர் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க நாடியபோது கண் எது மூக்கு எது என்று அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்து, போர்வையில் சுற்றி சுமந்து சென்று, ‘உயிர் இருந்தால் தண்ணீர் கொடுங்கள் பிழைத்துக்கொள்வார்’ என்று கூறி வீட்டிற்குள் வீசி எறிந்தனர் அதே குறைஷிக் குலத்தினர்.
உமைய்யா குலத்தாரிலேயே மிகவும் நல்லவர் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்). அப்போது அவர் தனிமனிதர். அதேசமயம் கலீபா எனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு வருட காலத்தில் பெரும் புரட்சிகளையும் சீர்திருத்தங்களையும் செய்தபோது அதே நல்ல மனிதரை விஷம் கொடுத்துக் கொலை செய்தனர். காரணம் முந்தைய ஆட்சியாளர்களால் செய்ய முடியாத பெரும் பெரும் சீர்திருத்தங்களை இரண்டு வருட ஆட்சியில் இவர் செய்தமைதான்.
தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் உப தேசங்கள் மக்கள் மனங்களை மயக்கின. மக்களும் அவரை நேசித்தனர் என்பதெல்லாம் உண்மைதான். அதேநேரம் மக்களிடையே நிலவி வந்த இனவெறியையும், மாச்சரியங்களையும் வேரறுக்க நாடியபோது, ‘பிதா’ என்றும் பாராமல் சுட்டுக்கொன்றதும் இதே தேசம்தான். காரணம் பேச்சில் இருந்து இடம்பெயர்ந்து சீர்திருத்தப் பணிகளில் அவர் ஈடுபட்டமையே.
சீர்திருத்தவாதிகளுக்கு பேராபத்து காத்திருக்கும் என்பதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கியும் விலகியும் வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இந்த சமூகத்தில்தான் நாம் பிறந்துள்ளோம். எனவே இந்த சமூகத்தின் அவலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியதும் நமது கடமையே அன்றி வேறெவர் மீதும் இல்லை. இதற்காக இறைவன் இன்னொரு படைப்பினத்தை அனுப்பமாட்டான்.
ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(தான் உண்டு தன் வேலையுண்டு என்று) ஒதுங்கி வாழ்பவனைவிட, சமூகப் பிரச்சினைகளில் பங்கு கொண்டு மக்களின் ஏச்சுப் பேச்சுகளையும் ஏற்று வாழ்பவனையே அல்லாஹ் விரும்புகின்றான்’.
பனீ இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த மூன்று பிரிவினரைக் குறித்து திருக்குர்ஆன் பேசுகின்றது. ‘இறைக் கட்டளையை மீறியவர்கள் முதல் பிரிவினர். அவர்களைத் தடுத்தவர்கள் இரண்டாவது பிரிவினர். அவ்வாறு தடுக்க முற்பட்டவர்களை, ‘இதெல்லாம் வீண்வேலை’ என்று கூறி விலக்க முறப்பட்ட நல்லவர்கள் மூன்றாவது பிரிவினர்’.
சீர்திருத்தம் செய்த பிரிவினரைத் தவிர ஏனையோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் வேதனையும் சாபமும் ஒருசேர இறங்கியதாகவும், அப்போது மூன்றாவது பிரிவினரையும் சேர்த்தே அழித்துவிட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகின்றது. காரணம், நல்லவர்கள் வெறுமனே நல்லவர்களாக மட்டுமே வாழ முற்பட்டமைதான்.
“மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழுவினரிடம்) ‘எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்’ என்று பதில் கூறினார்கள். இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்”. (7:164,165)
‘ஆயிரம் நல்லவர்களைவிட ஒரு சீர்திருத்தவாதியையே அல்லாஹ் விரும்புகின்றான்’ என்று அரபியில் ஒரு முதுமொழி உள்ளது. மிகப்பெரும் நிதர்சன உண்மை இது. ஏனெனில், ஒரு சீர் திருத்தவாதி மூலம் ஒரு சமூகத்தையே அல்லாஹ் பாதுக்காக்கின்றான். அதேநேரம் ஒரு நல்லவர் நல்லவராக வாழ்வதன் மூலம் தன்னை மட்டுமே பாதுகாக்கின்றார்.
ஆகவேதான் அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்”. (11:117)
இந்த இறைவசனத்தை சற்று கவனித்துப் படித்துப் பாருங்கள். ஓர் உண்மை புலப்படும். நல்லவர்களாக இருந்தால் என்று கூறவில்லை. மாறாக, சீர்திருத்தம் செய்பவர்களாக இருந்தால் என்றுதான் கூறுகின்றான்.
அநியாயங்களும் அக்கிரமங்களும் பல்கிப் பெருகும்போது சீர்திருத்தவாதிகளைத் தேடி இந்த உலகம் தவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், நல்லவர்கள் வெறுமனே நல்லவர்களாகவே வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். அவர்களால் சமுதாயத்திற்கு எப்பயனும் இல்லை.
நல்லவராக இருந்தது போதும்!
சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்!!
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
நல்லவராக இருத்தல் என்பது நல்ல காரியம்தான். ஆனால் அதில் ஒருவகை பகட்டும், பலவீனமும் உள்ளடங்கி இருக்கும். ஆம், ‘நான் நல்லவன் என்று காட்டுவதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கி இருத்தல் ஒருவகை பகட்டுதான்’.
சீர்திருத்தம் என்று சொல்லி எதாவது ஒரு பணியில் ஈடுபட்டால் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டி வருமே; நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பது ஒருவகையில் பலவீனமே.
பொதுவாக மக்கள் நல்லவர்களையே விரும்புவார்கள். சீர்திருத்தவாதிகளை வெறுப்பார்கள். ஏனெனில், மனம்போன போக்கில் வாழ்பவர்களை சீர்திருத்தம் செய்து நல்வழிப் படுத்துபவர்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. மனித மனோபாவம் இது.
ஆகவேதான் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர் முஹம்மத் (ஸல்) என்ற தனி நபரை மக்கத்துக் குறைஷிகள் நேசித்தனர். அதிகம் விரும்பினர். ‘நம்பிக்கையாளர்’, ‘உண்மையாளர்’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர்.
அதேசமயம், இறைத்தூதராக அனுப்பப்பட்ட பின்னர் பொய்யர், மந்திரவாதி, குறிசொல்பவர், பைத்தியக்காரர் என்று ஏசிப்பேசி தூற்றினர். காரணம், முஹம்மத் (ஸல்) என்ற மனிதர் இப்போது சீர்திருத்தவாதியாக மாறிவிட்டார்.
முஹம்மத் (ஸல்) என்ற தனிநபர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியில் ஓர் அடிமையை விடுதலை செய்தான் அபூலஹப். அதேசமயம் அதே முஹம்மத் (ஸல்) அவர்கள் சீர்திருத்தவாதியாக மாறியபோது அவருடைய முகத்தில் மண்ணை அள்ளி வீசினான் அதே அபூலஹப்.
‘அபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்ற ஒரு நல்ல மனிதர் நம்மிடையே வாழ்வது நமக்குப் பெருமை என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர் குறைஷிகள். அதே அபூபக்கர் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க நாடியபோது கண் எது மூக்கு எது என்று அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்து, போர்வையில் சுற்றி சுமந்து சென்று, ‘உயிர் இருந்தால் தண்ணீர் கொடுங்கள் பிழைத்துக்கொள்வார்’ என்று கூறி வீட்டிற்குள் வீசி எறிந்தனர் அதே குறைஷிக் குலத்தினர்.
உமைய்யா குலத்தாரிலேயே மிகவும் நல்லவர் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்). அப்போது அவர் தனிமனிதர். அதேசமயம் கலீபா எனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு வருட காலத்தில் பெரும் புரட்சிகளையும் சீர்திருத்தங்களையும் செய்தபோது அதே நல்ல மனிதரை விஷம் கொடுத்துக் கொலை செய்தனர். காரணம் முந்தைய ஆட்சியாளர்களால் செய்ய முடியாத பெரும் பெரும் சீர்திருத்தங்களை இரண்டு வருட ஆட்சியில் இவர் செய்தமைதான்.
தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் உப தேசங்கள் மக்கள் மனங்களை மயக்கின. மக்களும் அவரை நேசித்தனர் என்பதெல்லாம் உண்மைதான். அதேநேரம் மக்களிடையே நிலவி வந்த இனவெறியையும், மாச்சரியங்களையும் வேரறுக்க நாடியபோது, ‘பிதா’ என்றும் பாராமல் சுட்டுக்கொன்றதும் இதே தேசம்தான். காரணம் பேச்சில் இருந்து இடம்பெயர்ந்து சீர்திருத்தப் பணிகளில் அவர் ஈடுபட்டமையே.
சீர்திருத்தவாதிகளுக்கு பேராபத்து காத்திருக்கும் என்பதற்காக சமூகத்தைவிட்டு ஒதுங்கியும் விலகியும் வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இந்த சமூகத்தில்தான் நாம் பிறந்துள்ளோம். எனவே இந்த சமூகத்தின் அவலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியதும் நமது கடமையே அன்றி வேறெவர் மீதும் இல்லை. இதற்காக இறைவன் இன்னொரு படைப்பினத்தை அனுப்பமாட்டான்.
ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(தான் உண்டு தன் வேலையுண்டு என்று) ஒதுங்கி வாழ்பவனைவிட, சமூகப் பிரச்சினைகளில் பங்கு கொண்டு மக்களின் ஏச்சுப் பேச்சுகளையும் ஏற்று வாழ்பவனையே அல்லாஹ் விரும்புகின்றான்’.
பனீ இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த மூன்று பிரிவினரைக் குறித்து திருக்குர்ஆன் பேசுகின்றது. ‘இறைக் கட்டளையை மீறியவர்கள் முதல் பிரிவினர். அவர்களைத் தடுத்தவர்கள் இரண்டாவது பிரிவினர். அவ்வாறு தடுக்க முற்பட்டவர்களை, ‘இதெல்லாம் வீண்வேலை’ என்று கூறி விலக்க முறப்பட்ட நல்லவர்கள் மூன்றாவது பிரிவினர்’.
சீர்திருத்தம் செய்த பிரிவினரைத் தவிர ஏனையோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் வேதனையும் சாபமும் ஒருசேர இறங்கியதாகவும், அப்போது மூன்றாவது பிரிவினரையும் சேர்த்தே அழித்துவிட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகின்றது. காரணம், நல்லவர்கள் வெறுமனே நல்லவர்களாக மட்டுமே வாழ முற்பட்டமைதான்.
“மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழுவினரிடம்) ‘எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்’ என்று பதில் கூறினார்கள். இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்”. (7:164,165)
‘ஆயிரம் நல்லவர்களைவிட ஒரு சீர்திருத்தவாதியையே அல்லாஹ் விரும்புகின்றான்’ என்று அரபியில் ஒரு முதுமொழி உள்ளது. மிகப்பெரும் நிதர்சன உண்மை இது. ஏனெனில், ஒரு சீர் திருத்தவாதி மூலம் ஒரு சமூகத்தையே அல்லாஹ் பாதுக்காக்கின்றான். அதேநேரம் ஒரு நல்லவர் நல்லவராக வாழ்வதன் மூலம் தன்னை மட்டுமே பாதுகாக்கின்றார்.
ஆகவேதான் அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்”. (11:117)
இந்த இறைவசனத்தை சற்று கவனித்துப் படித்துப் பாருங்கள். ஓர் உண்மை புலப்படும். நல்லவர்களாக இருந்தால் என்று கூறவில்லை. மாறாக, சீர்திருத்தம் செய்பவர்களாக இருந்தால் என்றுதான் கூறுகின்றான்.
அநியாயங்களும் அக்கிரமங்களும் பல்கிப் பெருகும்போது சீர்திருத்தவாதிகளைத் தேடி இந்த உலகம் தவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், நல்லவர்கள் வெறுமனே நல்லவர்களாகவே வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். அவர்களால் சமுதாயத்திற்கு எப்பயனும் இல்லை.
நல்லவராக இருந்தது போதும்!
சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்!!
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் தர்கா கந்தூரி பெருவிழா நாளை(வியாழக்கிமை) தொடங்குகிறது.
பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் தர்கா கந்தூரி பெருவிழா நாளை(வியாழக்கிமை) தொடங்குகிறது. விழா 17-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நடக்கிறது.
13-ந் தேதி இரவு 7 மணிக்கு எஸ்.எம்.அபுல்பரகாத் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி மதியம் 1 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேரூரை நடக்கிறது. இதற்கு மைதீன் பிள்ளை தலைமை தாங்குகிறார். சென்னை அக்பர் அலி சமதானி சிறப்புரையாற்றுகிறார்.
15-ந் தேதி காலை 10 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
17-ந் தேதி காலை 10 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் நிர்வாகத்தினர் மற்றும் தர்கா ஆண்டுவிழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
13-ந் தேதி இரவு 7 மணிக்கு எஸ்.எம்.அபுல்பரகாத் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி மதியம் 1 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேரூரை நடக்கிறது. இதற்கு மைதீன் பிள்ளை தலைமை தாங்குகிறார். சென்னை அக்பர் அலி சமதானி சிறப்புரையாற்றுகிறார்.
15-ந் தேதி காலை 10 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
17-ந் தேதி காலை 10 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் நிர்வாகத்தினர் மற்றும் தர்கா ஆண்டுவிழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
கஅபாவின் நிர்வாக பொறுப்பில் நபிகள் நாயகம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப் இருந்தார். அவர், மக்கா எல்லையில் முகாமிட்டிருந்த படையினரை நோக்கி தன்னந்தனியாக சென்றார்.
“நபியே யானைப்படையினரை உமது இறைவன் எவ்வாறு அழியச்செய்தான் என்பதை நீர் கவனித்துப் பார்க்கவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா?
அவர்கள் மீது பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான்.
கெட்டியாக சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
அதனால் அவன், அவர்களைப் பறவைகளால் கொத்தி தின்னப்பட்ட கதிர்கள் போல் ஆக்கி அழித்து விட்டான்”. (திருக்குர்ஆன் 105:1-5)
இப்ராகிம் நபிகள் காலத்திற்கு பின்பு, இறையில்லமான ‘கஅபா’ மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு மக்கள் வரத்து அதிகமானது. வெளியூர் மக்கள் வரவால் அங்கு வியாபாரம் தழைத்தோங்கியது. மக்காவில் வளம் அதிகரித்தது.
வணிகத்திற்காக நெடுந்தொலைவில் இருந்து வந்தவர்கள் பல நாட்கள் மக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வியாபாரம் முடிந்த பின்னர் வியாபாரிகள் பொழுது போக்குகளில் ஈடுபட்டனர். விளையாட்டுகள், பந்தயங்கள் மூலமாகவும் மக்களிடம் பணம் குவிய ஆரம்பித்தது. அதுவும் வியாபாரத்தில் ஒரு பிரிவாக மாறிப்போனது.
மக்களின் அதிகமான வருகையால் பணபுழக்கம், பண்டமாற்று முறைகள், அரேபிய குதிரை வர்த்தகம் என்று மக்கா நகரம் வளர்ந்து பெருநகரமாக உருவெடுத்தது. ‘ஜம்ஜம்’ தண்ணீரின் வற்றாத வளம் அதற்கு மேலும் உறுதியையும் வலுவையும் சேர்த்ததால் பாலைவனம் சோலைவனமாக மாறியது.
இதனை அறிந்த பக்கத்து நாட்டு மன்னர் நஜ்ஜாஷி மனதில் புதிய திட்டம் உருவானது. ‘தனது நாட்டிலும் ‘கஅபா’ போன்ற கட்டிடத்தை சிறப்பாக கட்ட வேண்டும், அதன் முலம் அங்கே வியாபாரமும், மக்கள் வரத்தும் அதிகரிக்க வேண்டும்’ என்று திட்டமிட்டான். உடனே அதற்கான பணியிலும் ஈடுபட்டான்.
மன்னர் நஜ்ஜாஷியால் ஏமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ என்பவரின் ஆலோசனையின் பேரில் ‘ஸன்ஆ’ என்ற நகரத்தில் அக்கால தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் பிரமாண்டமான ஒரு ஆலயம் உருவாக்கப்பட்டது. தம் நாட்டு தூதுவர்கள், ஒற்றர்கள் ஆகியோரை பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி, தன் நாட்டில் உள்ள ஆலயத்திற்கு வருமாறு அழைத்தார் மன்னர் நஜ்ஜாஷி.
இந்த நிலையில் இதை விரும்பாத ஒருவர், இரவு நேரத்தில் அந்த ஆலயத்திற்குள் சென்று அசுத்தம் செய்துவிட்டார். இதன் மூலம் அந்த ஆலயத்தின் கண்ணியம் குறைந்துவிட்டதாக செய்தி பரவியது.
இதையடுத்து அங்கு வந்த மக்கள் கூட்டம் குறையத்தொடங்கியது. இதனால் மன்னரின் திட்டம் தோல்வி அடைந்தது.
இதற்கெல்லாம் மக்காவாசிகளில் யாராவது ஒருவர் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்ரஹா கடும் கோபம் கொண்டான். உடனே மக்கா நோக்கி பெரும் யானைப்படையுடன் புறப்பட்டான். கஅபாவை எப்படியாவது இடித்து விட வேண்டும் என்பதே அவன் எண்ணமாயிருந்தது.
மக்காவின் எல்லையை அடைந்த யானைப்படைகள் தொடர்ந்து முன்னேறிச்செல்ல மறுத்தன. போர் செய்வதற்காக எவ்வளவு தான் ஏவினாலும் யானைப்படைகள் தாங்கள் நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை. அதற்கு மேல் செல்லாமல் பின்னோக்கி செல்ல எத்தனித்தன.
சிப்பாய்களும், யானைப்பாகன்களும் எவ்வளவோ முயன்றும் யானைகளை எந்த வகையிலும் மக்காவை நோக்கி செலுத்த முடியவில்லை. எனவே அங்கேயே முகாமிட்டு தங்கி இருந்தனர்.
அப்போது கஅபாவின் நிர்வாக பொறுப்பில் நபிகள் நாயகம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப் இருந்தார். அவர், மக்கா எல்லையில் முகாமிட்டிருந்த படையினரை நோக்கி தன்னந்தனியாக சென்றார். இந்த தகவல் அப்ரஹாவை எட்டியது.
யானைப்படையைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்வதற்காக அவர் வருகிறார் என்று எண்ணினான் அப்ரஹா.
அப்போது அப்ரஹாவிடம், ‘நீங்கள் வரும் வழியில் ஏதாவது ஒட்டக மந்தையை பார்த்தீர்களா?, என்னுடைய ஒட்டக மந்தை காணாமல் போய் இரண்டு நாட்களாகின்றன’ என்றார் அப்துல் முத்தலீப்.
கோபத்தின் எல்லையைத் தாண்டிய அப்ரஹா, ‘அப்துல் முத்தலீபே, நீர் பொறுப்பாளராய் இருக்கும் கஅபாவை இடிப்பதற்காக இத்தனை பெரும் படையுடன் வந்து முற்றுகை இட்டிருக்கிறேன். அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒன்றுக்கும் உதவாத ஒட்டக கூட்டத்தைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு’ என்றான்.
இதைக்கேட்டு அப்துல் முத்தலீப் கொஞ்சம் கூட அதிர்ச்சியோ, பயமோ அடையவில்லை.
‘அப்ரஹாவே, கஅபா அல்லாஹ்வின் ஆலயம். அதற்கு அவன் சொந்தக்காரன். அதற்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால் அதனை அவன் பாதுகாத்துக் கொள்வான். அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்?. இது எனக்கு சொந்தமான ஒட்டக கூட்டம். இதனை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு. அதனால் இதனைப் பற்றி மட்டும் தான் நான் கவலைப்பட முடியும்?’
இவ்வாறு சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பிச் சென்றார் அப்துல் முத்தலீப். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அப்ரஹா.
மறுநாள் அதிகாலை பொழுது புலர்ந்தது. கஅபாவை பாதுகாக்க அல்லாஹ் நாடினான். திடீரென்று அவ்வாபீன் என்ற சின்னஞ்சிறு பறவைகள் கூட்டம் கூட்டமாக அப்ரஹா படைகளை நோக்கி பறந்து வந்தன. அவற்றின் அலகுகளில் சிறிய கற்கள் இருந்தன. அவற்றின் கால்களிலும் சிறிய கற்கள் இருந்தன.
அவ்வாபீன் பறவைகள் பெருங்கூட்டமாக பறந்து வந்து அந்தக்கற்களை படைகள் மீது வீசின. சிறிய அந்த சுட்ட கற்கள் ஒவ்வொன்றும் நெருப்பு கங்குகள் போல படைகள் மீது விழுந்தன. பலம் பொருந்திய அத்தனை பெரும் யானைப்படை மற்றும் பிற படை வீரர்கள் இந்த தாக்குதலை எதிர்க்க முடியாமல் அழிந்தார்கள்.
அந்த நிகழ்வை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் தான் மேலே இடம்பெற்றுள்ளது. நபிகள் நாயகத்திடம் இந்த நிகழ்வை விளக்கும் வகையில் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
இப்போது கூட அந்த அவ்வாபீன் பறவைகளை மக்கா செல்பவர்களால் காணமுடியும்.
முகம்மது நபிகள் காலத்தில் குறைஷியர்கள் கஅபாவை புதுப்பித்து கட்டினார்கள். இந்த கட்டிடப் பணியில் அண்ணலாரும் கலந்து கொண்டார்கள். அப்போது மக்காவில் பிரசித்தி பெற்ற நான்கு கோத்திரங்களில் யார் சொர்க்கத்தின் கல்லாம் ‘அஜ்ருல் அஸ்வத்’தை கஅபாவில் பதிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு சரியான முடிவு எடுக்கும் உரிமை நபிகளாரிடம் விடப்பட்டது.
நபிகளார் தன் தோளில் கிடந்த துண்டை கீழே விரித்து, அஜ்ருல் அஸ்வத் கல்லை அதன் மையப்பகுதியில் வைத்தார்கள். பின்னர் அந்த துண்டின் நான்கு மூலைகளையும் நான்கு கோத்திரர்கள் கைகளில் கொடுத்து, அதை அனைவரும் ஒன்றாய் எடுத்து வரச் செய்தார்கள். கஅபாவின் அருகில் வந்ததும் தன் கைகளாய் அந்த சொர்க்க கல்லை இப்போது கஅபாவில் இருக்கும் இடத்தில் வைத்தார்கள். அது இன்றும் அப்படியே அங்கு நிலைத்து நிற்கிறது.
மு.முஹம்மது யூசுப்,
உடன்குடி.
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா?
அவர்கள் மீது பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான்.
கெட்டியாக சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
அதனால் அவன், அவர்களைப் பறவைகளால் கொத்தி தின்னப்பட்ட கதிர்கள் போல் ஆக்கி அழித்து விட்டான்”. (திருக்குர்ஆன் 105:1-5)
இப்ராகிம் நபிகள் காலத்திற்கு பின்பு, இறையில்லமான ‘கஅபா’ மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு மக்கள் வரத்து அதிகமானது. வெளியூர் மக்கள் வரவால் அங்கு வியாபாரம் தழைத்தோங்கியது. மக்காவில் வளம் அதிகரித்தது.
வணிகத்திற்காக நெடுந்தொலைவில் இருந்து வந்தவர்கள் பல நாட்கள் மக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வியாபாரம் முடிந்த பின்னர் வியாபாரிகள் பொழுது போக்குகளில் ஈடுபட்டனர். விளையாட்டுகள், பந்தயங்கள் மூலமாகவும் மக்களிடம் பணம் குவிய ஆரம்பித்தது. அதுவும் வியாபாரத்தில் ஒரு பிரிவாக மாறிப்போனது.
மக்களின் அதிகமான வருகையால் பணபுழக்கம், பண்டமாற்று முறைகள், அரேபிய குதிரை வர்த்தகம் என்று மக்கா நகரம் வளர்ந்து பெருநகரமாக உருவெடுத்தது. ‘ஜம்ஜம்’ தண்ணீரின் வற்றாத வளம் அதற்கு மேலும் உறுதியையும் வலுவையும் சேர்த்ததால் பாலைவனம் சோலைவனமாக மாறியது.
இதனை அறிந்த பக்கத்து நாட்டு மன்னர் நஜ்ஜாஷி மனதில் புதிய திட்டம் உருவானது. ‘தனது நாட்டிலும் ‘கஅபா’ போன்ற கட்டிடத்தை சிறப்பாக கட்ட வேண்டும், அதன் முலம் அங்கே வியாபாரமும், மக்கள் வரத்தும் அதிகரிக்க வேண்டும்’ என்று திட்டமிட்டான். உடனே அதற்கான பணியிலும் ஈடுபட்டான்.
மன்னர் நஜ்ஜாஷியால் ஏமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ என்பவரின் ஆலோசனையின் பேரில் ‘ஸன்ஆ’ என்ற நகரத்தில் அக்கால தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் பிரமாண்டமான ஒரு ஆலயம் உருவாக்கப்பட்டது. தம் நாட்டு தூதுவர்கள், ஒற்றர்கள் ஆகியோரை பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி, தன் நாட்டில் உள்ள ஆலயத்திற்கு வருமாறு அழைத்தார் மன்னர் நஜ்ஜாஷி.
இந்த நிலையில் இதை விரும்பாத ஒருவர், இரவு நேரத்தில் அந்த ஆலயத்திற்குள் சென்று அசுத்தம் செய்துவிட்டார். இதன் மூலம் அந்த ஆலயத்தின் கண்ணியம் குறைந்துவிட்டதாக செய்தி பரவியது.
இதையடுத்து அங்கு வந்த மக்கள் கூட்டம் குறையத்தொடங்கியது. இதனால் மன்னரின் திட்டம் தோல்வி அடைந்தது.
இதற்கெல்லாம் மக்காவாசிகளில் யாராவது ஒருவர் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்ரஹா கடும் கோபம் கொண்டான். உடனே மக்கா நோக்கி பெரும் யானைப்படையுடன் புறப்பட்டான். கஅபாவை எப்படியாவது இடித்து விட வேண்டும் என்பதே அவன் எண்ணமாயிருந்தது.
மக்காவின் எல்லையை அடைந்த யானைப்படைகள் தொடர்ந்து முன்னேறிச்செல்ல மறுத்தன. போர் செய்வதற்காக எவ்வளவு தான் ஏவினாலும் யானைப்படைகள் தாங்கள் நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை. அதற்கு மேல் செல்லாமல் பின்னோக்கி செல்ல எத்தனித்தன.
சிப்பாய்களும், யானைப்பாகன்களும் எவ்வளவோ முயன்றும் யானைகளை எந்த வகையிலும் மக்காவை நோக்கி செலுத்த முடியவில்லை. எனவே அங்கேயே முகாமிட்டு தங்கி இருந்தனர்.
அப்போது கஅபாவின் நிர்வாக பொறுப்பில் நபிகள் நாயகம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப் இருந்தார். அவர், மக்கா எல்லையில் முகாமிட்டிருந்த படையினரை நோக்கி தன்னந்தனியாக சென்றார். இந்த தகவல் அப்ரஹாவை எட்டியது.
யானைப்படையைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்வதற்காக அவர் வருகிறார் என்று எண்ணினான் அப்ரஹா.
அப்போது அப்ரஹாவிடம், ‘நீங்கள் வரும் வழியில் ஏதாவது ஒட்டக மந்தையை பார்த்தீர்களா?, என்னுடைய ஒட்டக மந்தை காணாமல் போய் இரண்டு நாட்களாகின்றன’ என்றார் அப்துல் முத்தலீப்.
கோபத்தின் எல்லையைத் தாண்டிய அப்ரஹா, ‘அப்துல் முத்தலீபே, நீர் பொறுப்பாளராய் இருக்கும் கஅபாவை இடிப்பதற்காக இத்தனை பெரும் படையுடன் வந்து முற்றுகை இட்டிருக்கிறேன். அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒன்றுக்கும் உதவாத ஒட்டக கூட்டத்தைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு’ என்றான்.
இதைக்கேட்டு அப்துல் முத்தலீப் கொஞ்சம் கூட அதிர்ச்சியோ, பயமோ அடையவில்லை.
‘அப்ரஹாவே, கஅபா அல்லாஹ்வின் ஆலயம். அதற்கு அவன் சொந்தக்காரன். அதற்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால் அதனை அவன் பாதுகாத்துக் கொள்வான். அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்?. இது எனக்கு சொந்தமான ஒட்டக கூட்டம். இதனை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு. அதனால் இதனைப் பற்றி மட்டும் தான் நான் கவலைப்பட முடியும்?’
இவ்வாறு சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பிச் சென்றார் அப்துல் முத்தலீப். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அப்ரஹா.
மறுநாள் அதிகாலை பொழுது புலர்ந்தது. கஅபாவை பாதுகாக்க அல்லாஹ் நாடினான். திடீரென்று அவ்வாபீன் என்ற சின்னஞ்சிறு பறவைகள் கூட்டம் கூட்டமாக அப்ரஹா படைகளை நோக்கி பறந்து வந்தன. அவற்றின் அலகுகளில் சிறிய கற்கள் இருந்தன. அவற்றின் கால்களிலும் சிறிய கற்கள் இருந்தன.
அவ்வாபீன் பறவைகள் பெருங்கூட்டமாக பறந்து வந்து அந்தக்கற்களை படைகள் மீது வீசின. சிறிய அந்த சுட்ட கற்கள் ஒவ்வொன்றும் நெருப்பு கங்குகள் போல படைகள் மீது விழுந்தன. பலம் பொருந்திய அத்தனை பெரும் யானைப்படை மற்றும் பிற படை வீரர்கள் இந்த தாக்குதலை எதிர்க்க முடியாமல் அழிந்தார்கள்.
அந்த நிகழ்வை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் தான் மேலே இடம்பெற்றுள்ளது. நபிகள் நாயகத்திடம் இந்த நிகழ்வை விளக்கும் வகையில் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
இப்போது கூட அந்த அவ்வாபீன் பறவைகளை மக்கா செல்பவர்களால் காணமுடியும்.
முகம்மது நபிகள் காலத்தில் குறைஷியர்கள் கஅபாவை புதுப்பித்து கட்டினார்கள். இந்த கட்டிடப் பணியில் அண்ணலாரும் கலந்து கொண்டார்கள். அப்போது மக்காவில் பிரசித்தி பெற்ற நான்கு கோத்திரங்களில் யார் சொர்க்கத்தின் கல்லாம் ‘அஜ்ருல் அஸ்வத்’தை கஅபாவில் பதிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு சரியான முடிவு எடுக்கும் உரிமை நபிகளாரிடம் விடப்பட்டது.
நபிகளார் தன் தோளில் கிடந்த துண்டை கீழே விரித்து, அஜ்ருல் அஸ்வத் கல்லை அதன் மையப்பகுதியில் வைத்தார்கள். பின்னர் அந்த துண்டின் நான்கு மூலைகளையும் நான்கு கோத்திரர்கள் கைகளில் கொடுத்து, அதை அனைவரும் ஒன்றாய் எடுத்து வரச் செய்தார்கள். கஅபாவின் அருகில் வந்ததும் தன் கைகளாய் அந்த சொர்க்க கல்லை இப்போது கஅபாவில் இருக்கும் இடத்தில் வைத்தார்கள். அது இன்றும் அப்படியே அங்கு நிலைத்து நிற்கிறது.
மு.முஹம்மது யூசுப்,
உடன்குடி.
தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவில் ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி இரவில் நடைபெற்றது. இதில் குமரி, கேரளாவை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம் தக்கலையில் மெஞ்ஞான மாமேதை ஷேக் பீர்முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. இது சிறப்பு வாய்ந்த தர்காக்களில் ஒன்றாகும்.
ஷேக் பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா இந்த தர்காவில் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று இரவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி தொடங்கி அதிகாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. ஏராளமானோர் ஒன்றாக சேர்ந்து பாடினர். தர்கா பெருவிழாவில் குமரி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்த திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
தர்காவுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து தக்கலைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா இந்த தர்காவில் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று இரவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி தொடங்கி அதிகாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. ஏராளமானோர் ஒன்றாக சேர்ந்து பாடினர். தர்கா பெருவிழாவில் குமரி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்த திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
தர்காவுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து தக்கலைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நம்மிடமுள்ள நற்குணங்களால் தான் எதையுமே என்றைக்கும் சாதிக்க முடியும் என்பதை மட்டுமாவது நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
மனித வாழ்க்கை பல அடிப்படைகளின் கீழ் அமைந்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது நம்பிக்கை. மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்புவது தானே வாழ்க்கை. அந்த நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கைப்பயணம் அமைதியாக இருக்காது.
இதைத்தான் இஸ்லாம் ‘அமானிதம் காக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. ‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு அமானிதம், நம்பிக்கை, உண்மைத்தன்மை என பொருள்கள் பல உண்டு. இன்றைக்கு மனித சமூகம் வளர்ச்சியடைவதும், வீழ்ச்சியடைவதும் இந்த ஒற்றைப் பண்புக்குள் தான் அமைகிறது.
மனித வாழ்க்கை ஊக்கம் பெறுவதற்கு இந்த அமானித நம்பிக்கை தான் மிக உந்து சக்தியாகவும், பக்கபலமாகவும் இருந்து வருகிறது.
நாம் நினைப்பது போல் அமானிதம் என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. அது அதீத கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒரு பண்பு. இதனால் தான் குர்ஆன் இதுகுறித்து இவ்வளவு தூரம் எச்சரிக்கிறது.
ஒருமுறை நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘மறுமைநாள் நெருங்குகிறபோது மக்களிடமிருந்து அமானிதத் தன்மை குறைய ஆரம்பித்துவிடும்’.
அதனால் தான் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ‘அமானிதத்தை நிறைவேற்றுங்கள்’, ‘மோசடி செய்யாதீர்கள்’, ‘கொடுத்தவாக்கைக் காப்பாற்றுங்கள்’, ‘உண்மையே உரையுங்கள்’, ‘ஒப்பந்தங்களை பூர்த்திசெய்யுங்கள்’ என்று கூறினார்கள்.
இதை பின் வரும் இறைவசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:
‘உங்களில் ஒருவர் ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அமானிதத்தை (சரியாக) நிறைவேற்றி விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அமானிதத்தில் எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிவான்’. (திருக்குர்ஆன் 2:283)
நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர் அல்லது அறிமுகம் இல்லாத ஒருவர் நம்மிடம் ஒரு பொருளை கொடுத்து வைக்கிறார். பிறகு அவர் அதை எப்போது நம்மிடம் கேட்கிறாரோ அப்போது அதை நாம் அவரிடம் அவர் கொடுத்தபடியே கொடுத்து விட வேண்டும். அதற்குத்தான் அமானிதம் என்று பெயர். அதில் எந்தவொரு சிறுமாற்றத்திற்கும் வழிவகை என்று எதுவுமேயில்லை.
நபிகளார் அமானிதப்பொருட்கள் விஷயத்தில் உண்மையுடனும், நேர்மையுடனும் நடந்துகொண்டார்கள். புனித மக்காவிலிருந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ சென்றபோது தம்மிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த யூதர்களின் அமானிதப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் வரவேண்டும் என்று அலி (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் கட்டளையிட்டார்கள். உயிருக்கு ஆபத்தான அந்த இக்கட்டான நேரத்திலும் தன்னிடம் உள்ள அமானிதங்களை மறக்காமல், அதற்கென்று ஒருவரை பொறுப்புடன் நியமித்து விட்டுத்தான் புறப்பட்டுச் சென்றார்கள் என்றால் அமானிதம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.
அமானிதத்தின் முக்கியம் குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்’. (8:27)
‘இன்னும் எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி நடந்து கொள்கின்றார்களோ அவர்களும், (தான் சுவனவாசிகள்)’. (70:32)
‘(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும் படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்ச மின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்’. (4:58)
இந்த இறைவசனங்கள் மூலம் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கை தரும் வகையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அறியலாம்.
இன்றைக்கு மோசமான குணங்களின் பெருக்கத்தால் பண மோசடிகள், ஏமாற்றுகள், தகவல் திருட்டுகள் என பலவும் பெருகிப் போய்விட்டன. பணத்தால் எதையும் நாம் சாதித்து விடமுடியாது. நம்மிடமுள்ள நற்குணங்களால் தான் எதையுமே என்றைக்கும் சாதிக்க முடியும் என்பதை மட்டுமாவது நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
காரிருள் சூழ்ந்த ஓரிடத்தில் ஒரு சிறு விளக்கின் ஒளித்துளி ஒன்று ஒளிரத் தொடங்கியதும் தான் இருக்கும் இடம் தெரியாமல் இருள் விலகி ஓடிவிடுவது போல நம்மிடம் அந்த அமானிதம் மிளிரும் காலமெல்லாம் மோசடிகள் யாவும் நிச்சயம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
இதைத்தான் இஸ்லாம் ‘அமானிதம் காக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. ‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு அமானிதம், நம்பிக்கை, உண்மைத்தன்மை என பொருள்கள் பல உண்டு. இன்றைக்கு மனித சமூகம் வளர்ச்சியடைவதும், வீழ்ச்சியடைவதும் இந்த ஒற்றைப் பண்புக்குள் தான் அமைகிறது.
மனித வாழ்க்கை ஊக்கம் பெறுவதற்கு இந்த அமானித நம்பிக்கை தான் மிக உந்து சக்தியாகவும், பக்கபலமாகவும் இருந்து வருகிறது.
நாம் நினைப்பது போல் அமானிதம் என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. அது அதீத கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒரு பண்பு. இதனால் தான் குர்ஆன் இதுகுறித்து இவ்வளவு தூரம் எச்சரிக்கிறது.
ஒருமுறை நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘மறுமைநாள் நெருங்குகிறபோது மக்களிடமிருந்து அமானிதத் தன்மை குறைய ஆரம்பித்துவிடும்’.
அதனால் தான் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ‘அமானிதத்தை நிறைவேற்றுங்கள்’, ‘மோசடி செய்யாதீர்கள்’, ‘கொடுத்தவாக்கைக் காப்பாற்றுங்கள்’, ‘உண்மையே உரையுங்கள்’, ‘ஒப்பந்தங்களை பூர்த்திசெய்யுங்கள்’ என்று கூறினார்கள்.
இதை பின் வரும் இறைவசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:
‘உங்களில் ஒருவர் ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அமானிதத்தை (சரியாக) நிறைவேற்றி விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அமானிதத்தில் எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிவான்’. (திருக்குர்ஆன் 2:283)
நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர் அல்லது அறிமுகம் இல்லாத ஒருவர் நம்மிடம் ஒரு பொருளை கொடுத்து வைக்கிறார். பிறகு அவர் அதை எப்போது நம்மிடம் கேட்கிறாரோ அப்போது அதை நாம் அவரிடம் அவர் கொடுத்தபடியே கொடுத்து விட வேண்டும். அதற்குத்தான் அமானிதம் என்று பெயர். அதில் எந்தவொரு சிறுமாற்றத்திற்கும் வழிவகை என்று எதுவுமேயில்லை.
நபிகளார் அமானிதப்பொருட்கள் விஷயத்தில் உண்மையுடனும், நேர்மையுடனும் நடந்துகொண்டார்கள். புனித மக்காவிலிருந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ சென்றபோது தம்மிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த யூதர்களின் அமானிதப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் வரவேண்டும் என்று அலி (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் கட்டளையிட்டார்கள். உயிருக்கு ஆபத்தான அந்த இக்கட்டான நேரத்திலும் தன்னிடம் உள்ள அமானிதங்களை மறக்காமல், அதற்கென்று ஒருவரை பொறுப்புடன் நியமித்து விட்டுத்தான் புறப்பட்டுச் சென்றார்கள் என்றால் அமானிதம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.
அமானிதத்தின் முக்கியம் குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்’. (8:27)
‘இன்னும் எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி நடந்து கொள்கின்றார்களோ அவர்களும், (தான் சுவனவாசிகள்)’. (70:32)
‘(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும் படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்ச மின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்’. (4:58)
இந்த இறைவசனங்கள் மூலம் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கை தரும் வகையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அறியலாம்.
இன்றைக்கு மோசமான குணங்களின் பெருக்கத்தால் பண மோசடிகள், ஏமாற்றுகள், தகவல் திருட்டுகள் என பலவும் பெருகிப் போய்விட்டன. பணத்தால் எதையும் நாம் சாதித்து விடமுடியாது. நம்மிடமுள்ள நற்குணங்களால் தான் எதையுமே என்றைக்கும் சாதிக்க முடியும் என்பதை மட்டுமாவது நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
காரிருள் சூழ்ந்த ஓரிடத்தில் ஒரு சிறு விளக்கின் ஒளித்துளி ஒன்று ஒளிரத் தொடங்கியதும் தான் இருக்கும் இடம் தெரியாமல் இருள் விலகி ஓடிவிடுவது போல நம்மிடம் அந்த அமானிதம் மிளிரும் காலமெல்லாம் மோசடிகள் யாவும் நிச்சயம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
உலகில் எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ், ‘மனிதனை மட்டும் தன்னை வணங்குவதற்காக படைத்தேன்’ என்று சொல்கிறான்.
“இப்ராகிமும் இஸ்மாயிலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்திய பொழுது, ‘எங்கள் இறைவனே உனக்காக நாங்கள் செய்த இப்பணியை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீதான் எங்கள் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் நன்கு அறிந்தவன்’ என்று கூறினார்கள்”. (திருக்குர்ஆன் 2:127)
“இப்ராகிம் இறைவனிடம் ‘என் இறைவனே மக்காவாகிய இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு உணவாக பலவகை கனிவர்க்கங்களையும் அளித்து வருவாயாக’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 2:126)
உலகில் எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ், ‘மனிதனை மட்டும் தன்னை வணங்குவதற்காக படைத்தேன்’ என்று சொல்கிறான்.
வணங்குவது என்றால் எப்படி வணங்குவது, எங்கிருந்து வணங்குவது? என்ற கேள்விகள் மனதில் எழுவது இயற்கை தானே. அதுவும் எந்தவித முன் உதாரணமும் இல்லாத அந்த காலகட்டத்தில் இந்த வினா இயல்பானது தானே.
எத்தனையோ கோள்களைப் படைத்த அல்லாஹ், மனிதன் வாழ்வதற்காக அத்தனை அனுகூலங்களும் உள்ள ‘பூமி’ என்ற கோளைப் படைத்தான்.
ஆதிபிதா ஆதம் நபி படைக்கப்பட்டு, தனது துணையுடன் இன்பமாக சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, சைத்தானின் ஆளுமைக்கு கட்டுப்பட்டதால் தவறு செய்தார்கள். இறைவன் தடுத்த பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தின் எல்லைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். அப்போது அவர்கள் வாழ இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த இடம் இந்த பூமி.
பூமியில் வந்து சேர்ந்தவர்களுக்கு எப்படி பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தான் இறைவன். மனித இனம் பெருக ஆரம்பித்த உடன் அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக, கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒரு வழிபாட்டு தலத்தை கட்டிக்கொடுக்க எண்ணினான்.
பாலைவனம் பகுதியில் சற்று மேடாய் அமைந்த பகுதியை சுட்டிக்காட்டி, ‘ஆதமே, மக்கள் என்னை வணங்குவதற்காக ஓர் இறை இல்லத்தை இங்கே என்னுடைய உத்தரவின்படி கட்டுங்கள்’ என்று கட்டளையிட்டான்.
உலகம் தோன்றிய உடனேயே ‘கஅபா’ என்ற இறைஇல்லம் கட்டப்பட்டது. ஆதம் நபியவர்கள் உலகில் வந்தடைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘கஅபா’ கட்டப்பட்டது. இதை வானவர்கள் மூலம் இறைவன் கட்டினான்.
காலப்போக்கில் இயற்கை மாற்றங்களால் அந்த இடம் சேதம் அடைந்து மணல் மேடாய் உருமாறியது. அந்த இடம் தான் பின்னர் ஆதம் நபிகளுக்கு அடையாளம் காட்டப்பட்டு அங்கு இறை இல்லம் தோன்றியதாகவும் வரலாறு உண்டு.
அதன்பின் சில கால இடைவெளியில் நூஹ் நபிகள் வாழ்ந்த பொழுதில் மனித இனம் ஓரிறைக்கொள்கையை முற்றிலும் மறுத்து விட்டது. இதனால், நூஹ் நபிகள் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதால், உலகம் வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
மரம், செடி, கொடிகள், புல், பூண்டுகள் என்று எவையும் அற்ற வெற்றிடமாய் பூமிப்பந்து மாற்றப்பட்டது. அந்த நிலையில் கஅபாவும் சேதம் அடைந்தது. ஆனால் அதன் அடிப்படை அஸ்திவாரம் அமைந்திருந்த அடையாள எல்லைக்கோடுகள் அப்படியே நிலைத்திருந்தன.
காலங்கள் மாறின. மக்களை நேர்வழிப்படுத்த நாடிய இறைவன் நபிகளை அனுப்பினான். அந்த வரிசையில் இப்ராகிம் நபியவர்கள் தோன்றி இறைகட்டளையை நிறைவேற்றினார்கள். அவரது இறைப் பணியில் ஈர்க்கப்பட்டு மக்கள் சாரைசாரையாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். மிகப்பெரிய அந்த மக்கள் கூட்டத்திற்கு வழிபாட்டு தலத்தை ஏற்படுத்திக் கொடுக்க எண்ணிய அல்லாஹ் மீண்டும் கஅபாவை புதுப்பிக்க நாடினான்.
இப்ராகிம் நபிகளை அழைத்து, அவர்களுக்கு அந்த புராதான இடத்தை அடையாளம் காட்டி, அங்கே மீண்டும் கஅபாவை கட்ட கட்டளையிட்டான். இப்ராகிம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயில் நபிகளும் ஒருசேர முயற்சி செய்து கஅபாவை கட்ட ஆரம்பித்தார்கள்.
கஅபாவை கட்டி முடித்த நிலையில் தான் இப்ராகிம் நபிகள் மேலே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனையை ஓதினார்கள். அன்று முதல் இன்று வரை கஅபா புனிதமிகு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் காலம் மட்டும் அது பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.
அதிலும் மாபெரும் ஆச்சரியம், எந்த கனிவர்க்கமும் விளைய முடியாத அந்த பாலைவனத்தில் வருடம் முழுவதும் எல்லாவிதமான கனி வகைகளும் கிடைத்து வருவது என்பது அவர்கள் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக உள்ளது.
அதன் பின் கஅபா தன்னுடைய நிலைத்த தன்மையை இன்று வரை இழக்கவே இல்லை. முகம்மது நபி அவர்களின் காலத்திற்கு பிறகு மக்கா வெற்றியைத் தொடர்ந்து கஅபாவின் புனித தன்மை முழுமையாக பாதுகாக்கப்பட்டுவிட்டது.
கருங்கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடி. ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யாமானி, ருக்னுல் ஷாமி, ருக்னுல் ஹிந்த் என்ற நான்கு மூலைகள் கொண்ட கட்டிடமாக கஅபா உள்ளது.
இன்றளவும் கஅபாவின் மேன்மையும், கண்ணியமும் பாதுகாக்கப்பட்டு வருவதுபோல் உலகம் அழியும் காலம் வரை பாதுகாக்கப்படும். காரணம் இறைவன் அருள் பொழியும் அபூர்வமான இடங்களில் இதுவும் ஒன்று என்று திருக்குர்ஆன் அன்றே கூறிஉள்ளது.
மக்காமா இப்ராகிம்
இப்ராகிம் நபிகள் கஅபாவை கட்ட ஆரம்பித்த போது அதன் உயரம் அதிகரித்ததால் ஒரு கல்லின் மீது நின்று அதனை கட்ட ஆரம்பித் தார்கள். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல்லும் தன் உயரத்தை அதிகரித்துக் கொண்ட வந்தது. இவ்வாறு கஅபா கட்ட அந்தக் கல்லும் இப்ராகிம் நபிகளுக்கு உதவி புரிந்ததாக வரலாற்று குறிப்பு உள்ளது.
இப்ராகிம் நபிகள் நின்ற அந்த கல்லில் அவ ரது பாதம் பதிந்த சுவடு அப்படியே நிலைத்து விட்டது. அந்த கல்லோடு அவர்களின் பாத சுவடு களும் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை ‘மக்காமா இப்ராகிம்’ என்று கொண்டாடப்படுகின்றது.
“இப்ராகிம் இறைவனிடம் ‘என் இறைவனே மக்காவாகிய இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு உணவாக பலவகை கனிவர்க்கங்களையும் அளித்து வருவாயாக’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 2:126)
உலகில் எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ், ‘மனிதனை மட்டும் தன்னை வணங்குவதற்காக படைத்தேன்’ என்று சொல்கிறான்.
வணங்குவது என்றால் எப்படி வணங்குவது, எங்கிருந்து வணங்குவது? என்ற கேள்விகள் மனதில் எழுவது இயற்கை தானே. அதுவும் எந்தவித முன் உதாரணமும் இல்லாத அந்த காலகட்டத்தில் இந்த வினா இயல்பானது தானே.
எத்தனையோ கோள்களைப் படைத்த அல்லாஹ், மனிதன் வாழ்வதற்காக அத்தனை அனுகூலங்களும் உள்ள ‘பூமி’ என்ற கோளைப் படைத்தான்.
ஆதிபிதா ஆதம் நபி படைக்கப்பட்டு, தனது துணையுடன் இன்பமாக சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, சைத்தானின் ஆளுமைக்கு கட்டுப்பட்டதால் தவறு செய்தார்கள். இறைவன் தடுத்த பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தின் எல்லைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். அப்போது அவர்கள் வாழ இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த இடம் இந்த பூமி.
பூமியில் வந்து சேர்ந்தவர்களுக்கு எப்படி பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தான் இறைவன். மனித இனம் பெருக ஆரம்பித்த உடன் அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக, கூட்டுத்தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒரு வழிபாட்டு தலத்தை கட்டிக்கொடுக்க எண்ணினான்.
பாலைவனம் பகுதியில் சற்று மேடாய் அமைந்த பகுதியை சுட்டிக்காட்டி, ‘ஆதமே, மக்கள் என்னை வணங்குவதற்காக ஓர் இறை இல்லத்தை இங்கே என்னுடைய உத்தரவின்படி கட்டுங்கள்’ என்று கட்டளையிட்டான்.
உலகம் தோன்றிய உடனேயே ‘கஅபா’ என்ற இறைஇல்லம் கட்டப்பட்டது. ஆதம் நபியவர்கள் உலகில் வந்தடைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘கஅபா’ கட்டப்பட்டது. இதை வானவர்கள் மூலம் இறைவன் கட்டினான்.
காலப்போக்கில் இயற்கை மாற்றங்களால் அந்த இடம் சேதம் அடைந்து மணல் மேடாய் உருமாறியது. அந்த இடம் தான் பின்னர் ஆதம் நபிகளுக்கு அடையாளம் காட்டப்பட்டு அங்கு இறை இல்லம் தோன்றியதாகவும் வரலாறு உண்டு.
அதன்பின் சில கால இடைவெளியில் நூஹ் நபிகள் வாழ்ந்த பொழுதில் மனித இனம் ஓரிறைக்கொள்கையை முற்றிலும் மறுத்து விட்டது. இதனால், நூஹ் நபிகள் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதால், உலகம் வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
மரம், செடி, கொடிகள், புல், பூண்டுகள் என்று எவையும் அற்ற வெற்றிடமாய் பூமிப்பந்து மாற்றப்பட்டது. அந்த நிலையில் கஅபாவும் சேதம் அடைந்தது. ஆனால் அதன் அடிப்படை அஸ்திவாரம் அமைந்திருந்த அடையாள எல்லைக்கோடுகள் அப்படியே நிலைத்திருந்தன.
காலங்கள் மாறின. மக்களை நேர்வழிப்படுத்த நாடிய இறைவன் நபிகளை அனுப்பினான். அந்த வரிசையில் இப்ராகிம் நபியவர்கள் தோன்றி இறைகட்டளையை நிறைவேற்றினார்கள். அவரது இறைப் பணியில் ஈர்க்கப்பட்டு மக்கள் சாரைசாரையாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். மிகப்பெரிய அந்த மக்கள் கூட்டத்திற்கு வழிபாட்டு தலத்தை ஏற்படுத்திக் கொடுக்க எண்ணிய அல்லாஹ் மீண்டும் கஅபாவை புதுப்பிக்க நாடினான்.
இப்ராகிம் நபிகளை அழைத்து, அவர்களுக்கு அந்த புராதான இடத்தை அடையாளம் காட்டி, அங்கே மீண்டும் கஅபாவை கட்ட கட்டளையிட்டான். இப்ராகிம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயில் நபிகளும் ஒருசேர முயற்சி செய்து கஅபாவை கட்ட ஆரம்பித்தார்கள்.
கஅபாவை கட்டி முடித்த நிலையில் தான் இப்ராகிம் நபிகள் மேலே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனையை ஓதினார்கள். அன்று முதல் இன்று வரை கஅபா புனிதமிகு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் காலம் மட்டும் அது பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.
அதிலும் மாபெரும் ஆச்சரியம், எந்த கனிவர்க்கமும் விளைய முடியாத அந்த பாலைவனத்தில் வருடம் முழுவதும் எல்லாவிதமான கனி வகைகளும் கிடைத்து வருவது என்பது அவர்கள் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக உள்ளது.
அதன் பின் கஅபா தன்னுடைய நிலைத்த தன்மையை இன்று வரை இழக்கவே இல்லை. முகம்மது நபி அவர்களின் காலத்திற்கு பிறகு மக்கா வெற்றியைத் தொடர்ந்து கஅபாவின் புனித தன்மை முழுமையாக பாதுகாக்கப்பட்டுவிட்டது.
கருங்கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடி. ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யாமானி, ருக்னுல் ஷாமி, ருக்னுல் ஹிந்த் என்ற நான்கு மூலைகள் கொண்ட கட்டிடமாக கஅபா உள்ளது.
இன்றளவும் கஅபாவின் மேன்மையும், கண்ணியமும் பாதுகாக்கப்பட்டு வருவதுபோல் உலகம் அழியும் காலம் வரை பாதுகாக்கப்படும். காரணம் இறைவன் அருள் பொழியும் அபூர்வமான இடங்களில் இதுவும் ஒன்று என்று திருக்குர்ஆன் அன்றே கூறிஉள்ளது.
மக்காமா இப்ராகிம்
இப்ராகிம் நபிகள் கஅபாவை கட்ட ஆரம்பித்த போது அதன் உயரம் அதிகரித்ததால் ஒரு கல்லின் மீது நின்று அதனை கட்ட ஆரம்பித் தார்கள். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல்லும் தன் உயரத்தை அதிகரித்துக் கொண்ட வந்தது. இவ்வாறு கஅபா கட்ட அந்தக் கல்லும் இப்ராகிம் நபிகளுக்கு உதவி புரிந்ததாக வரலாற்று குறிப்பு உள்ளது.
இப்ராகிம் நபிகள் நின்ற அந்த கல்லில் அவ ரது பாதம் பதிந்த சுவடு அப்படியே நிலைத்து விட்டது. அந்த கல்லோடு அவர்களின் பாத சுவடு களும் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை ‘மக்காமா இப்ராகிம்’ என்று கொண்டாடப்படுகின்றது.
தான், தன் குடும்பம், தன் இனம் என நீதியை ஒருதலைபட்சமாக வளைத்துக் கொள்ளக்கூடாது. எங்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் இருக்காது.
மனித நேயத்தை வலியுறுத்தும் மார்க்கங் களில் முன்னிலை வகிக்கிறது, இஸ்லாம். மக்களின் உரிமைகளைப் பறிப்பதையும், அவர்களின் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றை சேதப்படுத்துவதையும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதையும் இஸ்லாம் தடைசெய்கிறது. அதற்கான பாவத்தை குற்றவாளி மீதே சுமத்துகிறது.
பிறரை பாதிக்கும்படியான செயலை செய்துவிட்டு, அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் அந்த பாவம் மன்னிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘மன்னிக்க மாட்டான்’ என்ற பதிலே கிடைக்கிறது.
‘மனித நேயம்’ மட்டுமல்ல, அடுத்தவர் உரிமையை பறிக்கும்அதிகாரம் யாருக்கும் இல்லை என்று இஸ்லாம் ஆணித்தரமாக கூறுகிறது.
உலகத்தை படைத்து காத்துவரும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. தான் படைத்த உயிரினங்களின் மீது எல்லையில்லா அதிகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. இதுபற்றி திருக்குர்ஆனில் (40:2-3) இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
‘இவ்வேதம் அல்லாஹ்விடம் இருந்து இறக்கி அருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன். பாவத்தை மன்னிப்பவன். பாவமன்னிப்புக் கோரி மீள்வதை ஏற்றுக்கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன். அருட்பேறு உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாருமில்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது’.
பாவம் செய்தவர்களின் பாவமன்னிப்பை ஏற்று மன்னிப்பை அளிப்பவன் இறைவன். ஆனால், ஒரு மனிதன் பிறருக்கு தீங்கு செய்துவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டால், பாதிக்கப்பட்ட நபர் மன்னிக்காதவரையில், இறைவன் மன்னிப்பதில்லை.
தவறு செய்த மனிதன் அழுது புரண்டாலும், நோன்பு நோற்றாலும், தொழுது அழுது மன்னிப்புக் கேட்டாலும், தீங்கு இழைத்த நபரை அல்லாஹ் மன்னிப்பதில்லை. மன்னிக்கும் உரிமை தனக்கு இல்லை என்று இறைவன் கைவிரித்துவிடுகிறான்.
‘அநீதம் செய்யப்பட்ட மனிதன் மன்னித்தால் ஒழிய இறைவன் மன்னிப்பதில்லை’ என்பது நபிமொழி.
இது எத்தகைய உயரிய பண்பாடு. அகிலத்தை படைத்த இறைவன், அர்ப்பமான மனிதனுக்கு இந்த உரிமையை தருகிறான். காரணம், தன் படைப்பிற்கு அவன் அளித்துள்ள உரிமை.
‘அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த ஒரு தடையும் இல்லை’. (புகாரி)
அடுத்தவரின் உரிமை என்பது, பொருட் களை எடுப்பதோ, தாக்குவதோ, துன்புறுத்துவதோ மட்டுமல்ல. ஒருவரைப்பற்றி பிறரிடம் புறம்பேசுவது, அவதூறு பேசுவது என மன ரீதியாக துன்புறுத்துவது ஆகும். ஒரு மனிதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதும் துன் புறுத்தும் செயலாகும்.
இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘குறைசொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்’. (104:1)
புறம் பேசுவதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெறுத் திருக்கிறார்கள் என்பது நபி மொழியாகும்.
‘கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு தடவை நபிகள் பெருமான் (ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் வந்து மற்றொரு தோழரைப்பற்றி குறைகூற ஆரம்பித்தார்கள், அப்போது நபிகளார், அந்த தோழரைப் பார்த்து, ‘நான் அந்த தோழரை பார்க்கும் போது நல்ல எண்ணத்தோடு அவரைப் பார்க்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் அவரைப் பற்றி என்னிடம் குறை கூற வேண்டாம்’ என்றார்கள்.
மற்றொரு தடவை, தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, புறம்பேசுவது குறித்து பின்வருமாறு நபிகளார் விளக்கம் அளித்தார்கள்:
‘புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?’ என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அப்போது ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் பதில் கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள்”.
‘நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?’ என்று தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம்பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
இன்று வாட்ஸ்அப், சமூக வலைதளம் என பல்வேறு சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் அவதூறு கருத்துக்கள் சர்வ சாதாரணமாக பரப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. தனக்கு தெரியாத அல்லது உறுதிப்படுத்தாத செய்திகளை பரிமாறுவதும் நடைபெறுகிறது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
தனி மனித உரிமை என்பது, ‘அடுத்தவரின் மூக்கு நுனி வரையில்’ என்பது தான் இலக்கணம். என் கையை வீசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனில் அந்த உரிமை, பக்கத்தில் உள்ளவரை பாதிக்காத வரையில் பிரச்சினையில்லை. மாறாக, அடுத்தவரின் மூக்கு நுனியை இடித்துவிட்டால் அது மனித உரிமை மீறல் ஆகும்.
இன்றைய காலகட்டத்தில், அடுத்தவரின் உரிமைகள் தெரிந்தோ தெரியாமலோ இலகுவாக பறிக்கப்படுகிறது. நாடுகளுக்கு இடையே ஏற்படும் தாக்குதல் களும் உரிமை மீறல் பிரச்சினைதான். உரிமை என்பது, தனி மனிதனுக்கு ஏற் படுவது மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயும், வலியவன்-எளியவன் என்ற பாகுபாட்டில் ஏற்படும் நிலையும் காரணம்.
தான், தன் குடும்பம், தன் இனம் என நீதியை ஒருதலைபட்சமாக வளைத்துக் கொள்ளக்கூடாது. எங்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் இருக்காது.
திருக்குர்ஆன் கூறும் பல்வேறு வசனங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு உயிருக்கும் அது வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதை தடுப்பதற்கான உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை.
உலக அமைதி என்பது நீதியை நிலைநாட்டுவதிலும், உரிமையை அளிப்பதிலும்தான் உள்ளது.
நீதியோடு வாழ்வோம், நீதியைப் பெறுவோம்.
கமால்பாஷா, வி.களத்தூர்.
பிறரை பாதிக்கும்படியான செயலை செய்துவிட்டு, அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் அந்த பாவம் மன்னிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘மன்னிக்க மாட்டான்’ என்ற பதிலே கிடைக்கிறது.
‘மனித நேயம்’ மட்டுமல்ல, அடுத்தவர் உரிமையை பறிக்கும்அதிகாரம் யாருக்கும் இல்லை என்று இஸ்லாம் ஆணித்தரமாக கூறுகிறது.
உலகத்தை படைத்து காத்துவரும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. தான் படைத்த உயிரினங்களின் மீது எல்லையில்லா அதிகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. இதுபற்றி திருக்குர்ஆனில் (40:2-3) இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
‘இவ்வேதம் அல்லாஹ்விடம் இருந்து இறக்கி அருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன். பாவத்தை மன்னிப்பவன். பாவமன்னிப்புக் கோரி மீள்வதை ஏற்றுக்கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன். அருட்பேறு உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாருமில்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது’.
பாவம் செய்தவர்களின் பாவமன்னிப்பை ஏற்று மன்னிப்பை அளிப்பவன் இறைவன். ஆனால், ஒரு மனிதன் பிறருக்கு தீங்கு செய்துவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டால், பாதிக்கப்பட்ட நபர் மன்னிக்காதவரையில், இறைவன் மன்னிப்பதில்லை.
தவறு செய்த மனிதன் அழுது புரண்டாலும், நோன்பு நோற்றாலும், தொழுது அழுது மன்னிப்புக் கேட்டாலும், தீங்கு இழைத்த நபரை அல்லாஹ் மன்னிப்பதில்லை. மன்னிக்கும் உரிமை தனக்கு இல்லை என்று இறைவன் கைவிரித்துவிடுகிறான்.
‘அநீதம் செய்யப்பட்ட மனிதன் மன்னித்தால் ஒழிய இறைவன் மன்னிப்பதில்லை’ என்பது நபிமொழி.
இது எத்தகைய உயரிய பண்பாடு. அகிலத்தை படைத்த இறைவன், அர்ப்பமான மனிதனுக்கு இந்த உரிமையை தருகிறான். காரணம், தன் படைப்பிற்கு அவன் அளித்துள்ள உரிமை.
‘அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த ஒரு தடையும் இல்லை’. (புகாரி)
அடுத்தவரின் உரிமை என்பது, பொருட் களை எடுப்பதோ, தாக்குவதோ, துன்புறுத்துவதோ மட்டுமல்ல. ஒருவரைப்பற்றி பிறரிடம் புறம்பேசுவது, அவதூறு பேசுவது என மன ரீதியாக துன்புறுத்துவது ஆகும். ஒரு மனிதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதும் துன் புறுத்தும் செயலாகும்.
இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘குறைசொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்’. (104:1)
புறம் பேசுவதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெறுத் திருக்கிறார்கள் என்பது நபி மொழியாகும்.
‘கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு தடவை நபிகள் பெருமான் (ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் வந்து மற்றொரு தோழரைப்பற்றி குறைகூற ஆரம்பித்தார்கள், அப்போது நபிகளார், அந்த தோழரைப் பார்த்து, ‘நான் அந்த தோழரை பார்க்கும் போது நல்ல எண்ணத்தோடு அவரைப் பார்க்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் அவரைப் பற்றி என்னிடம் குறை கூற வேண்டாம்’ என்றார்கள்.
மற்றொரு தடவை, தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, புறம்பேசுவது குறித்து பின்வருமாறு நபிகளார் விளக்கம் அளித்தார்கள்:
‘புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?’ என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அப்போது ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் பதில் கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள்”.
‘நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?’ என்று தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம்பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
இன்று வாட்ஸ்அப், சமூக வலைதளம் என பல்வேறு சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் அவதூறு கருத்துக்கள் சர்வ சாதாரணமாக பரப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. தனக்கு தெரியாத அல்லது உறுதிப்படுத்தாத செய்திகளை பரிமாறுவதும் நடைபெறுகிறது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
தனி மனித உரிமை என்பது, ‘அடுத்தவரின் மூக்கு நுனி வரையில்’ என்பது தான் இலக்கணம். என் கையை வீசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனில் அந்த உரிமை, பக்கத்தில் உள்ளவரை பாதிக்காத வரையில் பிரச்சினையில்லை. மாறாக, அடுத்தவரின் மூக்கு நுனியை இடித்துவிட்டால் அது மனித உரிமை மீறல் ஆகும்.
இன்றைய காலகட்டத்தில், அடுத்தவரின் உரிமைகள் தெரிந்தோ தெரியாமலோ இலகுவாக பறிக்கப்படுகிறது. நாடுகளுக்கு இடையே ஏற்படும் தாக்குதல் களும் உரிமை மீறல் பிரச்சினைதான். உரிமை என்பது, தனி மனிதனுக்கு ஏற் படுவது மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயும், வலியவன்-எளியவன் என்ற பாகுபாட்டில் ஏற்படும் நிலையும் காரணம்.
தான், தன் குடும்பம், தன் இனம் என நீதியை ஒருதலைபட்சமாக வளைத்துக் கொள்ளக்கூடாது. எங்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் இருக்காது.
திருக்குர்ஆன் கூறும் பல்வேறு வசனங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு உயிருக்கும் அது வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதை தடுப்பதற்கான உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை.
உலக அமைதி என்பது நீதியை நிலைநாட்டுவதிலும், உரிமையை அளிப்பதிலும்தான் உள்ளது.
நீதியோடு வாழ்வோம், நீதியைப் பெறுவோம்.
கமால்பாஷா, வி.களத்தூர்.
அல்லாஹ் அள்ளிஅள்ளி கொடுத்தான். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளஅள்ளக் குறையாத நீர் ஊற்று இன்று வரை நிலைத்திருக்கிறது.
‘எங்கள் இறைவனே. நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்துவிட்டேன். அது விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கு. எங்கள் இறைவனே, அவர்கள் உன்னைத் தொழுது கொண்டிருப்பதற்காக அங்கு வசிக்கச்செய்தேன். மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக, பற்பல கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக. அதற்கு அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்’. (திருக்குர்ஆன் 14:37)
‘என் இறைவனே என்னையும், என் சந்ததிகளையும் உன்னைத் தொழுது வருபவர்களாக ஆக்கி வை. எங்கள் இறைவனே, என் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வாயாக’. (திருக்குர்ஆன் 14:40)
நம் அறிவுக்கு எட்டாத பல அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்ததாக இந்த உலகை படைத்தான் இறைவன்.
நாம் வசிக்கும் இந்த பூமி மற்றும் பிற கோள்கள் சூரியனை மையமாகக்கொண்டு சுற்றி வருகின்றது. இறைவனின் கட்டளையை ஏற்று அனைத்து கோள்களும் இறைவன் வகுத்த பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல காற்று, மழை போன்ற இயற்கையையும் உருவாக்கினான் இறைவன்.
இவற்றை எல்லாம் இறைவன் படைத்தது மனிதனுக்காக. அந்த மனிதனைப் படைத்தது தன்னை வணங்க. தன்னை வணங்குவதற்கு மட்டுமே படைக்கப்பட்ட மனிதனுக்கு, வணக்கத்திற்கு வேண்டிய ஒரு முறையான இறை இல்லத்தை அடையாளம் காட்ட எண்ணிய இறைவன் அமைத்தது தான் ‘கஅபா’. ஆதம் நபி காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இப்ராகிம் நபிகள் காலத்தில் ‘கஅபா’ சீரமைக்கப்பட்டது.
இப்ராகிம் நபிகள் அறிவு ஜீவியாக விளங்கினார்கள். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களோடு விளங்கி கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அறிவில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, தியாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அவர் விளங்கினார்.
உலக விஷயங்களில் ஏன், எதற்கு என்று வினவியவர்கள் அல்லாஹ் கட்டளை என்று வந்த போது, அதை உண்மை என்று உணர்ந்து கொண்டதால் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே கட்டளைக்கு கட்டுப்பட்டார்கள்.
அல்லாஹ், இப்ராகிம் நபிகளுக்கு இட்ட கட்டளைகளில் பல மிகவும் கடினமானவை. மனிதர்களால் இது சாத்தியமா? என்ற கேள்வி எழும் வகையில் இந்த கட்டளைகள் இருந்தன.
ஆனால் இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை சோதிக்கும் ஒரு பாடமாகவே அமைந்திருந்தது.
அன்றொரு நாள்... பாரசீக நாட்டில் அமைதியாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த இப்ராகிம் நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தது.
‘தாங்களும் துணைவியார் ஹாஜரா அம்மையாரும் தள்ளாத வயதில் அருந்தவமாய் பெற்றெடுத்த அருமை மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு பொட்டல் பாலைவனத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட்டான்.
எந்தவித மறுப்பும் சொல்லவில்லை இப்ராகிம் நபிகள். உடனே பயணத்திற்கு தயாரானார்கள். அன்னை ஹாஜராவிடம் `பயணம் போகிறோம்' என்று மட்டும் சொன்னார்களே தவிர எங்கே போகிறோம்? எதற்கு போகிறோம்? என்று சொல்லவில்லை.
பச்சிளம் பாலகனைச் சுமந்து கொண்டு பாலைவனம் நோக்கி நடந்தார்கள். வெகுதூரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பு, தாகம், பசி என்று எந்த ஒரு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அவர்கள் பயணம் நீண்டு கொண்டிருந்தது.
பாலைவனத்தின் நடுப்பகுதியை அவர்கள் அடைந்தபோது இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார் இப்ராகிம் நபிகள். தனது அருமை மனைவி ஹாஜரா, அருமைப் பிள்ளை இஸ்மாயில் ஆகியோரை அப்படியே பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
எந்தவிதமான செய்தியையும் பரிமாறாமல் அப்படியே அந்த இடத்தில் இருவரையும் தன்னந்தனியாக விட்டுவிட்டு திரும்பிச் சென்றார்கள். புல்பூண்டுகள் கூட இல்லாத, நிழல் எதுவும் இல்லாத, தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாத, ஆள் நடமாட்டம் இல்லாத சுடுமணல் பிரதேசம் அது.
அன்னை ஹாஜரா பதைபதைக்கிறார்கள். ‘அன்புக்கணவரே, என்ன காரியம் செய்கிறீர்கள்?, எங்களை தன்னந்தனியாக தவிக்க விட்டு விட்டு எங்கே திரும்பிச் செல்கிறீர்கள்?’ என்று பதற்றத்தோடு வினவினார்கள்.
இப்ராகிம் நபிகளிடம் எந்தவித சலனமும் இல்லை. நபிகளின் சுபாவத்தை நன்கு அறிந்த அன்னை அவர்கள், ‘இது இறைவன் கட்டளையா?’ என்று வினவினார்கள்.
அதற்குகூட வாய்திறந்து ஆம் என்று பதில் சொல்லாமல், சற்று தன் தலையை மட்டும் ஆமோதிப்பது போல் அசைத்தார் இப்ராகிம் நபிகள்.
‘அப்படியானால் எங்களுக்கு அச்சமும் இல்லை, நாங்கள் துக்கப்படவும் மாட்டோம். அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் நாடியது நடைபெற்றே தீரும். நாங்கள் அவன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று மிக உறுதியாக நபிகளுக்கு பதிலுரைத்தார்கள் அன்னை ஹாஜரா.
சிறிது தூரம் சென்ற இப்ராகிம் நபியவர்கள், இறைவனிடம் கையேந்துகிறார்கள். ‘இறைவா, இதுவரை நீ சொன்னபடி நான் செய்து விட்டேன். என் மனைவியையும், மகனையும் அப்படியே விட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்து விட்டேன். இது வறண்ட பூமி. நீர்நிலைகள் இல்லாத பாலைவனம். பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வழிப்போக்கர்களால் மட்டுமே வளம்பெறும் வாய்ப்புள்ள பகுதி. எனவே மனிதர்களில் ஒரு பகுதியினரின் உள்ளங்களை இவர்கள் பக்கம் திருப்புவாயாக. பற்பல கனிவர்க்கங்களையும் உணவாக அளித்து இவர்களை ஆசீர்வதிப்பாயாக’ என்று மனம் உருகி பிரார்த்தித்தார்கள். அப்போது அவரது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
இந்த பிரார்த்தனையை எந்தவித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக்கொண்ட அல்லாஹ், அவர்கள் கேட்டபடியே அத்தனையையும் வழங்கி ஆசீர்வதித்தான்.
அதன் பின் அன்னை ஹாஜரா, ஸபா-மர்வா குன்றுகளுக்கு இடையே தொங்கோட்டம் ஓடிய நிகழ்ச்சி, இஸ்மாயில் நபியின் பாதங்களின் கீழே உதித்தோடிய ஜம் ஜம் நீர் ஊற்று பெருகி ஓடிய அதிசயங்கள் நடந்தன.
நீர்நிலை ஆதாரம் இருந்ததால் வழிப்போக்கர்களின் வருகை அதிகரித்து ஆங்காங்கே குடியிருப்புகள் தோன்றி, அந்தப்பகுதி செழிப்படைந்தது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, செய்கைகளில் நேர்மை, நம்பிக்கையில் உறுதியோடு கேட்கும் பிரார்த்தனைகள் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சான்றாக உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
பாலைவனப்பகுதியில் வற்றாத ஜீவனுள்ள நீரூற்றா?, பாலைவனத்தில் புல் பூண்டுகளுக்கே இடமில்லாத இடத்தில் உலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களுமா? இது எப்படி சாத்தியமாகும்?
ஆம், நபியவர்கள் நம்பிக்கையோடு கேட்டார்கள். அல்லாஹ் அள்ளிஅள்ளி கொடுத்தான். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளஅள்ளக் குறையாத நீர் ஊற்று இன்று வரை நிலைத்திருக்கிறது.
தண்ணீர் மட்டுமல்ல காய்ப்பு பருவங்கள் இருக்கிறதோ இல்லையோ, விளையும் இடத்தில் கூட விலைக்கு கிடைக்காத கனி வர்க்கங்கள் இன்றும் என்றும் மக்காவில் கிடைத்துக் கொண்டிருப்பது இறைவனின் அளவற்ற கருணையில் தானே.
- முஹம்மது யூசப், உடன்குடி.
‘என் இறைவனே என்னையும், என் சந்ததிகளையும் உன்னைத் தொழுது வருபவர்களாக ஆக்கி வை. எங்கள் இறைவனே, என் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வாயாக’. (திருக்குர்ஆன் 14:40)
நம் அறிவுக்கு எட்டாத பல அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்ததாக இந்த உலகை படைத்தான் இறைவன்.
நாம் வசிக்கும் இந்த பூமி மற்றும் பிற கோள்கள் சூரியனை மையமாகக்கொண்டு சுற்றி வருகின்றது. இறைவனின் கட்டளையை ஏற்று அனைத்து கோள்களும் இறைவன் வகுத்த பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல காற்று, மழை போன்ற இயற்கையையும் உருவாக்கினான் இறைவன்.
இவற்றை எல்லாம் இறைவன் படைத்தது மனிதனுக்காக. அந்த மனிதனைப் படைத்தது தன்னை வணங்க. தன்னை வணங்குவதற்கு மட்டுமே படைக்கப்பட்ட மனிதனுக்கு, வணக்கத்திற்கு வேண்டிய ஒரு முறையான இறை இல்லத்தை அடையாளம் காட்ட எண்ணிய இறைவன் அமைத்தது தான் ‘கஅபா’. ஆதம் நபி காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இப்ராகிம் நபிகள் காலத்தில் ‘கஅபா’ சீரமைக்கப்பட்டது.
இப்ராகிம் நபிகள் அறிவு ஜீவியாக விளங்கினார்கள். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களோடு விளங்கி கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அறிவில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, தியாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அவர் விளங்கினார்.
உலக விஷயங்களில் ஏன், எதற்கு என்று வினவியவர்கள் அல்லாஹ் கட்டளை என்று வந்த போது, அதை உண்மை என்று உணர்ந்து கொண்டதால் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே கட்டளைக்கு கட்டுப்பட்டார்கள்.
அல்லாஹ், இப்ராகிம் நபிகளுக்கு இட்ட கட்டளைகளில் பல மிகவும் கடினமானவை. மனிதர்களால் இது சாத்தியமா? என்ற கேள்வி எழும் வகையில் இந்த கட்டளைகள் இருந்தன.
ஆனால் இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை சோதிக்கும் ஒரு பாடமாகவே அமைந்திருந்தது.
அன்றொரு நாள்... பாரசீக நாட்டில் அமைதியாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த இப்ராகிம் நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தது.
‘தாங்களும் துணைவியார் ஹாஜரா அம்மையாரும் தள்ளாத வயதில் அருந்தவமாய் பெற்றெடுத்த அருமை மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு பொட்டல் பாலைவனத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட்டான்.
எந்தவித மறுப்பும் சொல்லவில்லை இப்ராகிம் நபிகள். உடனே பயணத்திற்கு தயாரானார்கள். அன்னை ஹாஜராவிடம் `பயணம் போகிறோம்' என்று மட்டும் சொன்னார்களே தவிர எங்கே போகிறோம்? எதற்கு போகிறோம்? என்று சொல்லவில்லை.
பச்சிளம் பாலகனைச் சுமந்து கொண்டு பாலைவனம் நோக்கி நடந்தார்கள். வெகுதூரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பு, தாகம், பசி என்று எந்த ஒரு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அவர்கள் பயணம் நீண்டு கொண்டிருந்தது.
பாலைவனத்தின் நடுப்பகுதியை அவர்கள் அடைந்தபோது இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார் இப்ராகிம் நபிகள். தனது அருமை மனைவி ஹாஜரா, அருமைப் பிள்ளை இஸ்மாயில் ஆகியோரை அப்படியே பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
எந்தவிதமான செய்தியையும் பரிமாறாமல் அப்படியே அந்த இடத்தில் இருவரையும் தன்னந்தனியாக விட்டுவிட்டு திரும்பிச் சென்றார்கள். புல்பூண்டுகள் கூட இல்லாத, நிழல் எதுவும் இல்லாத, தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாத, ஆள் நடமாட்டம் இல்லாத சுடுமணல் பிரதேசம் அது.
அன்னை ஹாஜரா பதைபதைக்கிறார்கள். ‘அன்புக்கணவரே, என்ன காரியம் செய்கிறீர்கள்?, எங்களை தன்னந்தனியாக தவிக்க விட்டு விட்டு எங்கே திரும்பிச் செல்கிறீர்கள்?’ என்று பதற்றத்தோடு வினவினார்கள்.
இப்ராகிம் நபிகளிடம் எந்தவித சலனமும் இல்லை. நபிகளின் சுபாவத்தை நன்கு அறிந்த அன்னை அவர்கள், ‘இது இறைவன் கட்டளையா?’ என்று வினவினார்கள்.
அதற்குகூட வாய்திறந்து ஆம் என்று பதில் சொல்லாமல், சற்று தன் தலையை மட்டும் ஆமோதிப்பது போல் அசைத்தார் இப்ராகிம் நபிகள்.
‘அப்படியானால் எங்களுக்கு அச்சமும் இல்லை, நாங்கள் துக்கப்படவும் மாட்டோம். அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் நாடியது நடைபெற்றே தீரும். நாங்கள் அவன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று மிக உறுதியாக நபிகளுக்கு பதிலுரைத்தார்கள் அன்னை ஹாஜரா.
சிறிது தூரம் சென்ற இப்ராகிம் நபியவர்கள், இறைவனிடம் கையேந்துகிறார்கள். ‘இறைவா, இதுவரை நீ சொன்னபடி நான் செய்து விட்டேன். என் மனைவியையும், மகனையும் அப்படியே விட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்து விட்டேன். இது வறண்ட பூமி. நீர்நிலைகள் இல்லாத பாலைவனம். பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வழிப்போக்கர்களால் மட்டுமே வளம்பெறும் வாய்ப்புள்ள பகுதி. எனவே மனிதர்களில் ஒரு பகுதியினரின் உள்ளங்களை இவர்கள் பக்கம் திருப்புவாயாக. பற்பல கனிவர்க்கங்களையும் உணவாக அளித்து இவர்களை ஆசீர்வதிப்பாயாக’ என்று மனம் உருகி பிரார்த்தித்தார்கள். அப்போது அவரது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
இந்த பிரார்த்தனையை எந்தவித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக்கொண்ட அல்லாஹ், அவர்கள் கேட்டபடியே அத்தனையையும் வழங்கி ஆசீர்வதித்தான்.
அதன் பின் அன்னை ஹாஜரா, ஸபா-மர்வா குன்றுகளுக்கு இடையே தொங்கோட்டம் ஓடிய நிகழ்ச்சி, இஸ்மாயில் நபியின் பாதங்களின் கீழே உதித்தோடிய ஜம் ஜம் நீர் ஊற்று பெருகி ஓடிய அதிசயங்கள் நடந்தன.
நீர்நிலை ஆதாரம் இருந்ததால் வழிப்போக்கர்களின் வருகை அதிகரித்து ஆங்காங்கே குடியிருப்புகள் தோன்றி, அந்தப்பகுதி செழிப்படைந்தது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, செய்கைகளில் நேர்மை, நம்பிக்கையில் உறுதியோடு கேட்கும் பிரார்த்தனைகள் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சான்றாக உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
பாலைவனப்பகுதியில் வற்றாத ஜீவனுள்ள நீரூற்றா?, பாலைவனத்தில் புல் பூண்டுகளுக்கே இடமில்லாத இடத்தில் உலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களுமா? இது எப்படி சாத்தியமாகும்?
ஆம், நபியவர்கள் நம்பிக்கையோடு கேட்டார்கள். அல்லாஹ் அள்ளிஅள்ளி கொடுத்தான். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளஅள்ளக் குறையாத நீர் ஊற்று இன்று வரை நிலைத்திருக்கிறது.
தண்ணீர் மட்டுமல்ல காய்ப்பு பருவங்கள் இருக்கிறதோ இல்லையோ, விளையும் இடத்தில் கூட விலைக்கு கிடைக்காத கனி வர்க்கங்கள் இன்றும் என்றும் மக்காவில் கிடைத்துக் கொண்டிருப்பது இறைவனின் அளவற்ற கருணையில் தானே.
- முஹம்மது யூசப், உடன்குடி.






