என் மலர்
இஸ்லாம்
ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
புனிதமான ரமலான் காலத்தில், பாவங்களைப் போக்குவதற்கும், நல்ல அமல்களைச் செய்து நன்மைகளை அள்ளிக்கொள்வதற்கும் வாய்ப்பளித்த அந்த வல்லோன் இறைவனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்.
நம்மில் பலர் நோன்பின் பொருட்டு கூடுமானவரை உள்ளச்சத்தோடு நம்முடைய செயல்பாடுகளைத் திருத்துவதற்கு முயற்சி செய்தோம். பசி, தாகம் மட்டுமின்றி, கோபம், பொறாமை, புறம், கோள், அவதூறு பரப்புதல் போன்ற மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து நம்மைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்தோம்.
கடமையான தொழுகைகளைத் தவிர, உபரியான தொழுகைகள், தர்மம், ஜகாத் என்று எல்லா விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருந்தோம். திருக்குர்ஆனை ஒரு முறையாவது முழுவதுமாக ஓதி முடித்தோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கும், பாவங்களில் இருந்து மீட்சி பெறவும் இவை அனைத்தும் செய்தோம்.
ஒரு மாத நோன்பு முடிவடையும் வேளையில், ‘நாம் நல்லபடியாக நம் கடமையை நிறைவேற்றினோம்’ என்று திருப்தி கொள்ளும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த நோன்புக் காலங்களில் இன்னும் சிறப்பாக அமல்கள் செய்வதற்கும், இறையச்சம் இன்னும் அதிகரிக்கவும் இறைவனிடம் உதவி தேட வேண்டும்.
நோன்பு காலத்தில் எப்படி இருந்தோமோ அப்படியே மற்ற மாதங்களிலும் நாம் இருக்க வேண்டும். தூக்கம், சாப்பாடு, பேச்சு ஆகியவை அளவாகவே இருக்க வேண்டும். அலைபேசி, தொலைகாட்சி போன்றவற்றுக்கு செலவழிக்கும் நேரத்தை தொழுகை, குர் ஆன் ஓதுதல், நல்ல புத்தகங்கள் வாசித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தினால் நம்முடைய மனம் பக்குவப்படும்.
இதனால் ரமலான் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் இறைவனுக்கு உவப்பு தரும் விஷயங்களைப் பின்பற்றுவது நமக்கு எளிதாகி விடும். ரமலான் முடிந்த பிறகும் நம் மனதோடு இறையச்சம் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும்.
இறையச்சம் என்பது ரமலானுக்கு மட்டும் உரித்தானது அன்று. அது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் அடிப்படைக் குணமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் நற்குணம் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். ‘உங்களில் சிறந்தவர்கள் நற்குணம் நிரம்பியவர்களே’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அத்தகைய நற்குணம் நிரம்பியவர்களாக நாம் மாறுவதற்கான ஒரு வாய்ப்பை அல்லாஹ் நமக்கு ரமலான் மூலமாக அருளியுள்ளான் என்பதை நாம் உணர்வதோடு நற் குணம் உள்ளவர்களாக நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
ரமலான் முழுவதும் இறைச்சிந்தனையின் மூலமாக நம்மை அண்ட முடியாமல் இருந்த சைத்தான், ரமலானுக்கு அடுத்த நாளே நம்முடைய முதல் தொழுகையான பஜர் தொழுகையில் சோம்பலைத் தந்து நம்மை தொழுகையை விட்டும் தடுக்கப் பார்க்கலாம். ஆனாலும் நாம் சைத்தானை வென்று ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சுவனம் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும், சுவனம் செல்வது எளிதான காரியமல்ல, அதற்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திக்காத சோதனைகளா? இன்னும் நபிமார்களும், நபித்தோழர்களும், எண்ணற்ற இறைநேசர்கள், நல்லடியார்கள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை திருமறையின் இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும், அவர்களுடைய தூதரையும் வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)’ என்று கேட்டதற்கு ‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது’ என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்”. (திருக்குர்ஆன் 2:214)
புனித ரமலான் நமக்குத் தந்த பக்குவமும், பயிற்சியும் வருடம் முழுவதும் வாடாமல் இருக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும், அதற்கான வழிகாட்டுதலையும், உதவியையும் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-7
நம்மில் பலர் நோன்பின் பொருட்டு கூடுமானவரை உள்ளச்சத்தோடு நம்முடைய செயல்பாடுகளைத் திருத்துவதற்கு முயற்சி செய்தோம். பசி, தாகம் மட்டுமின்றி, கோபம், பொறாமை, புறம், கோள், அவதூறு பரப்புதல் போன்ற மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகளின் தாக்கத்திலிருந்து நம்மைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்தோம்.
கடமையான தொழுகைகளைத் தவிர, உபரியான தொழுகைகள், தர்மம், ஜகாத் என்று எல்லா விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருந்தோம். திருக்குர்ஆனை ஒரு முறையாவது முழுவதுமாக ஓதி முடித்தோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கும், பாவங்களில் இருந்து மீட்சி பெறவும் இவை அனைத்தும் செய்தோம்.
ஒரு மாத நோன்பு முடிவடையும் வேளையில், ‘நாம் நல்லபடியாக நம் கடமையை நிறைவேற்றினோம்’ என்று திருப்தி கொள்ளும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த நோன்புக் காலங்களில் இன்னும் சிறப்பாக அமல்கள் செய்வதற்கும், இறையச்சம் இன்னும் அதிகரிக்கவும் இறைவனிடம் உதவி தேட வேண்டும்.
நோன்பு காலத்தில் எப்படி இருந்தோமோ அப்படியே மற்ற மாதங்களிலும் நாம் இருக்க வேண்டும். தூக்கம், சாப்பாடு, பேச்சு ஆகியவை அளவாகவே இருக்க வேண்டும். அலைபேசி, தொலைகாட்சி போன்றவற்றுக்கு செலவழிக்கும் நேரத்தை தொழுகை, குர் ஆன் ஓதுதல், நல்ல புத்தகங்கள் வாசித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தினால் நம்முடைய மனம் பக்குவப்படும்.
இதனால் ரமலான் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் இறைவனுக்கு உவப்பு தரும் விஷயங்களைப் பின்பற்றுவது நமக்கு எளிதாகி விடும். ரமலான் முடிந்த பிறகும் நம் மனதோடு இறையச்சம் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும்.
இறையச்சம் என்பது ரமலானுக்கு மட்டும் உரித்தானது அன்று. அது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் அடிப்படைக் குணமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் நற்குணம் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். ‘உங்களில் சிறந்தவர்கள் நற்குணம் நிரம்பியவர்களே’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அத்தகைய நற்குணம் நிரம்பியவர்களாக நாம் மாறுவதற்கான ஒரு வாய்ப்பை அல்லாஹ் நமக்கு ரமலான் மூலமாக அருளியுள்ளான் என்பதை நாம் உணர்வதோடு நற் குணம் உள்ளவர்களாக நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
ரமலான் முழுவதும் இறைச்சிந்தனையின் மூலமாக நம்மை அண்ட முடியாமல் இருந்த சைத்தான், ரமலானுக்கு அடுத்த நாளே நம்முடைய முதல் தொழுகையான பஜர் தொழுகையில் சோம்பலைத் தந்து நம்மை தொழுகையை விட்டும் தடுக்கப் பார்க்கலாம். ஆனாலும் நாம் சைத்தானை வென்று ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சுவனம் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும், சுவனம் செல்வது எளிதான காரியமல்ல, அதற்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திக்காத சோதனைகளா? இன்னும் நபிமார்களும், நபித்தோழர்களும், எண்ணற்ற இறைநேசர்கள், நல்லடியார்கள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை திருமறையின் இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும், அவர்களுடைய தூதரையும் வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)’ என்று கேட்டதற்கு ‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது’ என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்”. (திருக்குர்ஆன் 2:214)
புனித ரமலான் நமக்குத் தந்த பக்குவமும், பயிற்சியும் வருடம் முழுவதும் வாடாமல் இருக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும், அதற்கான வழிகாட்டுதலையும், உதவியையும் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-7
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான பிறரிடம் “இரக்கம் காட்டுவது” குறித்த தகவல்களை காண்போம்.
இரக்கம் காட்டுவது இறைநம்பிக்கையின் ஒரு நிலை. இறைநம்பிக்கையாளர்களின் இயற்கையான மனநிலை.
இரக்க சிந்தனை இறைவனிடம் நிறைவாக அமைந்திருப்பதை படைப்பினங்களின் மூலமாக நேரடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. தன்னிடமுள்ள இரக்க சிந்தனையை படைப்பினங்களிடம் இறக்கி வைத்தவனும் அவனே.
இறைவன் தன்னை பற்றி சுயஅறிமுகம் செய்யும் போது, தனது குணங்களில் இரக்க சிந்தனையைத்தான் முன்னிலைப்படுத்துவான். அந்தளவுக்கு அவனது இரக்க சிந்தனை விசாலமான இடத்தை பெறுகிறது. அது அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறது.
“அனைத்து புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் இறைவனுக்கே. அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற கருணையாளன்”. (திருக்குர்ஆன் 1:1,2)
“நிச்சயமாக இறைவன் மனிதர்கள் மீது இரக்கமும், அன்பும் உள்ளவன்”. (திருக்குர்ஆன் 22:65)
‘இறைவன் கருணையை நூறு பாகமாக அமைத்துள்ளான். அவற்றில் தொண்ணூற்றி ஒன்பது பாகத்தை தன் வசம் வைத்துக் கொண்டு, ஒரு பாகத்தை மட்டும் பூமியில் இறக்கி வைத்தான். இந்த ஒரு பாகத்திலிருந்து தான் படைப்பினம் தங்களுக்கிடையில் இரக்கம் காட்டி வருகிறது. குதிரை தமது குட்டியை மிதித்து விடலாம் என அஞ்சி தமது கால் குளம்புகளை, அதனை விட்டும் உயர்த்துவதும் அந்த ஒரு பாகத்தில் கட்டுப்பட்டதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
இறைவனின் இரக்க சிந்தனையை வெளிப்படுத்தவும், செயல்படுத்தவும் வேண்டிதான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்.
‘(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடை யாகவே அனுப்பியுள்ளோம்’. (திருக்குர்ஆன் 21:107)
‘(இறைவிசுவாசிகளே) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கிறது. உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்’. (திருக்குர்ஆன் 9:128)
‘(முஹம்மதே) இறைவனது கருணையின் காரணமாகவே நீர் அவர்களிடம் நளினமாக நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் ஓடியிருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 3:159)
நபி (ஸல்) அவர்களிடம் இரக்க சிந்தனை இயற்கையாகவே இருந்து வந்தது. அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் வெளிப்பட்டே வந்தது. தன்னையே கொல்ல வந்தவரை காருண்ய நபி (ஸல்) அவர்கள் கருணையுடன் மன்னித்த வரலாறும் உண்டு.
‘இறைவனின் சிங்கம்’ என்று அழைக்கப்படக்கூடிய நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை நோக்கி வஹ்ஷி என்பவர் உஹதுப் போரில் ஒரு ஈட்டியால் அவரை நோக்கி எறிந்தார். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து, அவரது மறைவிட உறுப்பின் பக்கமாக வெளியாகியது. இது நபியவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட வஹ்ஷியை, நபி (ஸல்) அவர்கள் இரக்கப்பட்டு மன்னித்துவிட்டார்கள்.
அதே உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களுடைய பல் உடைக்கப்பட்டது. மேலும், அவர்களின் முகமும் காயப்படுத்தப்பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்தோடியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபித்தோழர்கள் ‘இறைத்தூதரே! அவர்களுக்கெதிராக நீங்கள் பிரார்த்தனை செய்வீராக’ என வேண்டியபோது ‘இறைவா, அவர்கள் அறியாத சமுதாயம். அவர்களை நீ மன்னித்து விடு’ என இரக்கத்துடன் இறைவனை வேண்டினார்கள்.
பத்ர் போரில் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட 70 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை இருந்தும், நபி (ஸல்) அவர்கள், அந்த கைதிகள் மீது இரக்கப்பட்டு, பிணைத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தார்கள். இவை யாவும் நபிகளாரின் இரக்க சிந்தனையின் ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
இறைவனிடமிருக்கும் இரக்க சிந்தனையும், இறைத்தூதரிடம் வெளிப்பட்ட கருணையும் முஸ்லிம்களிடமும் பிரதிபலிக்க வேண்டும். இரக்க சிந்தனை வருவது இறை நம்பிக்கையின் ஈடில்லாத ஒரு நிலை. இன்றியமையாத ஒரு கலை.
நாம் பிறர் மீது, பிற உயிரினங்கள் மீது இரக்கம் காட்டினால், இறைவன் நம் மீது இரக்கம் காட்டுவான். வானவர்களின் கருணையும், நம் மீது படும்.
‘இரக்க சிந்தனையாளர்கள் மீது இறைவனும் இரக்கம் காட்டுகின்றான். நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது இரக்கம் காட்டுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), திர்மிதி).
‘சிறியவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவரும் நம்மைச் சார்ந்தோர் அல்ல, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), திர்மிதி).
சிறிய குழந்தைகளை வாரி அணைத்து முத்தம் கொடுப்பது இரக்க சிந்தனையின் பிரதிபலிப்பு. இதையே நபி (ஸல்) அவர்களும் செய்து வந்தார்கள்.
‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரன் ஆன) ஹஸன் (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருந்த அக்ர பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார்கள். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இரக்கம் காட்டாதவர் இரக்கம் காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
இரக்கம் காட்டுவது இறை நம்பிக்கையாளரின் அடையாளம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), புகாரி).
உயிரினங்களின் மீது கருணை காட்டுவதும் நன்மையே
‘ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு தாகம் ஏற்பட்டது. வழியில் அவர் ஒரு கிணற்றைக் கண்டு, அதில் இறங்கி, நீர் குடித்தார். வெளியே வந்தபோது தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தனக்கு ஏற்பட்டது போல் நாய்க்கும் தாகம் ஏற்பட்டுள்ளது போலும் என மனதில் நினைத்தார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி மேலே கொண்டு வந்து அந்த நாய்க்கு புகட்டினார். அவரின் இந்த இரக்க செயலை இறைவன் அங்கீகரித்து, அவருக்கு மன்னிப்பளித்தான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற மக்கள் ‘இறைத்தூதரே, கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகளார் ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்குக் கருணை காட்டினால் உங்களுக்குப் பிரதிபலன் உண்டு’ என பதில் அளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி).
கருணை காட்டிய பெண்ணுக்கு இறைமன்னிப்பு
‘(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூஇஸ்ராயீல் சமுதாயத்தின் விலைமாதர்களில் ஒருத்தி அதைப் பார்த்தார். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி, அதில் தண்ணீரை நிரப்பி அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி).
கருணை என்பது விசாலமானது. அதன் வட்டத்தை குறுகிய எல்லைக்குள் சுருக்கிவிடக் கூடாது. கருணைக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பண்பு, படிப்பு, பதவி எதுவுமே தடையாக நிற்கக்கூடாது. மனிதனையும் தாண்டி பிற உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டும்.
‘மக்களிடம் இரக்கம் காட்டாதவரிடம் இறைவனும் ஒரு போதும் இரக்கம் காட்டமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), புகாரி).
எவரிடமும் இரக்கம் காட்டாதவன் மனிதன் அல்ல. அவன் நல்லவனும் அல்ல. அவன் ஒரு பாவி ஆவான். பாவி எவரிடமும் இரக்கம் காட்டுவதில்லை. அவன் உள்ளத்தில் ஒருபோதும் ஈரமும், இரக்கமும் இருக்காது. இரக்கம் இல்லாத உள்ளம் பாழடைந்த இல்லம். இரக்கம் உள்ள உள்ளம் இறைவன் வாழும் இல்லம். கல்லுக்குள் ஈரம் உண்டு. கடுமையான உள்ளம் உள்ளவனிடம் அது இல்லை. இதற்கு அவனே பொறுப்பு.
‘பாவியிடமிருந்தே தவிர இரக்கம் பிடுங்கப்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), அஹ்மது).
என்றும் கருணையுடன் வாழ்ந்தால் என்னாளும் பொன்னாளே.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
இரக்க சிந்தனை இறைவனிடம் நிறைவாக அமைந்திருப்பதை படைப்பினங்களின் மூலமாக நேரடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. தன்னிடமுள்ள இரக்க சிந்தனையை படைப்பினங்களிடம் இறக்கி வைத்தவனும் அவனே.
இறைவன் தன்னை பற்றி சுயஅறிமுகம் செய்யும் போது, தனது குணங்களில் இரக்க சிந்தனையைத்தான் முன்னிலைப்படுத்துவான். அந்தளவுக்கு அவனது இரக்க சிந்தனை விசாலமான இடத்தை பெறுகிறது. அது அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறது.
“அனைத்து புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் இறைவனுக்கே. அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற கருணையாளன்”. (திருக்குர்ஆன் 1:1,2)
“நிச்சயமாக இறைவன் மனிதர்கள் மீது இரக்கமும், அன்பும் உள்ளவன்”. (திருக்குர்ஆன் 22:65)
‘இறைவன் கருணையை நூறு பாகமாக அமைத்துள்ளான். அவற்றில் தொண்ணூற்றி ஒன்பது பாகத்தை தன் வசம் வைத்துக் கொண்டு, ஒரு பாகத்தை மட்டும் பூமியில் இறக்கி வைத்தான். இந்த ஒரு பாகத்திலிருந்து தான் படைப்பினம் தங்களுக்கிடையில் இரக்கம் காட்டி வருகிறது. குதிரை தமது குட்டியை மிதித்து விடலாம் என அஞ்சி தமது கால் குளம்புகளை, அதனை விட்டும் உயர்த்துவதும் அந்த ஒரு பாகத்தில் கட்டுப்பட்டதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
இறைவனின் இரக்க சிந்தனையை வெளிப்படுத்தவும், செயல்படுத்தவும் வேண்டிதான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்.
‘(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடை யாகவே அனுப்பியுள்ளோம்’. (திருக்குர்ஆன் 21:107)
‘(இறைவிசுவாசிகளே) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கிறது. உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்’. (திருக்குர்ஆன் 9:128)
‘(முஹம்மதே) இறைவனது கருணையின் காரணமாகவே நீர் அவர்களிடம் நளினமாக நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் ஓடியிருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 3:159)
நபி (ஸல்) அவர்களிடம் இரக்க சிந்தனை இயற்கையாகவே இருந்து வந்தது. அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் வெளிப்பட்டே வந்தது. தன்னையே கொல்ல வந்தவரை காருண்ய நபி (ஸல்) அவர்கள் கருணையுடன் மன்னித்த வரலாறும் உண்டு.
‘இறைவனின் சிங்கம்’ என்று அழைக்கப்படக்கூடிய நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை நோக்கி வஹ்ஷி என்பவர் உஹதுப் போரில் ஒரு ஈட்டியால் அவரை நோக்கி எறிந்தார். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து, அவரது மறைவிட உறுப்பின் பக்கமாக வெளியாகியது. இது நபியவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட வஹ்ஷியை, நபி (ஸல்) அவர்கள் இரக்கப்பட்டு மன்னித்துவிட்டார்கள்.
அதே உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களுடைய பல் உடைக்கப்பட்டது. மேலும், அவர்களின் முகமும் காயப்படுத்தப்பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்தோடியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபித்தோழர்கள் ‘இறைத்தூதரே! அவர்களுக்கெதிராக நீங்கள் பிரார்த்தனை செய்வீராக’ என வேண்டியபோது ‘இறைவா, அவர்கள் அறியாத சமுதாயம். அவர்களை நீ மன்னித்து விடு’ என இரக்கத்துடன் இறைவனை வேண்டினார்கள்.
பத்ர் போரில் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட 70 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை இருந்தும், நபி (ஸல்) அவர்கள், அந்த கைதிகள் மீது இரக்கப்பட்டு, பிணைத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தார்கள். இவை யாவும் நபிகளாரின் இரக்க சிந்தனையின் ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
இறைவனிடமிருக்கும் இரக்க சிந்தனையும், இறைத்தூதரிடம் வெளிப்பட்ட கருணையும் முஸ்லிம்களிடமும் பிரதிபலிக்க வேண்டும். இரக்க சிந்தனை வருவது இறை நம்பிக்கையின் ஈடில்லாத ஒரு நிலை. இன்றியமையாத ஒரு கலை.
நாம் பிறர் மீது, பிற உயிரினங்கள் மீது இரக்கம் காட்டினால், இறைவன் நம் மீது இரக்கம் காட்டுவான். வானவர்களின் கருணையும், நம் மீது படும்.
‘இரக்க சிந்தனையாளர்கள் மீது இறைவனும் இரக்கம் காட்டுகின்றான். நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது இரக்கம் காட்டுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), திர்மிதி).
‘சிறியவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவரும் நம்மைச் சார்ந்தோர் அல்ல, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), திர்மிதி).
சிறிய குழந்தைகளை வாரி அணைத்து முத்தம் கொடுப்பது இரக்க சிந்தனையின் பிரதிபலிப்பு. இதையே நபி (ஸல்) அவர்களும் செய்து வந்தார்கள்.
‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரன் ஆன) ஹஸன் (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருந்த அக்ர பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார்கள். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இரக்கம் காட்டாதவர் இரக்கம் காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
இரக்கம் காட்டுவது இறை நம்பிக்கையாளரின் அடையாளம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), புகாரி).
உயிரினங்களின் மீது கருணை காட்டுவதும் நன்மையே
‘ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு தாகம் ஏற்பட்டது. வழியில் அவர் ஒரு கிணற்றைக் கண்டு, அதில் இறங்கி, நீர் குடித்தார். வெளியே வந்தபோது தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தனக்கு ஏற்பட்டது போல் நாய்க்கும் தாகம் ஏற்பட்டுள்ளது போலும் என மனதில் நினைத்தார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி மேலே கொண்டு வந்து அந்த நாய்க்கு புகட்டினார். அவரின் இந்த இரக்க செயலை இறைவன் அங்கீகரித்து, அவருக்கு மன்னிப்பளித்தான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற மக்கள் ‘இறைத்தூதரே, கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகளார் ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்குக் கருணை காட்டினால் உங்களுக்குப் பிரதிபலன் உண்டு’ என பதில் அளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி).
கருணை காட்டிய பெண்ணுக்கு இறைமன்னிப்பு
‘(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூஇஸ்ராயீல் சமுதாயத்தின் விலைமாதர்களில் ஒருத்தி அதைப் பார்த்தார். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி, அதில் தண்ணீரை நிரப்பி அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி).
கருணை என்பது விசாலமானது. அதன் வட்டத்தை குறுகிய எல்லைக்குள் சுருக்கிவிடக் கூடாது. கருணைக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பண்பு, படிப்பு, பதவி எதுவுமே தடையாக நிற்கக்கூடாது. மனிதனையும் தாண்டி பிற உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டும்.
‘மக்களிடம் இரக்கம் காட்டாதவரிடம் இறைவனும் ஒரு போதும் இரக்கம் காட்டமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), புகாரி).
எவரிடமும் இரக்கம் காட்டாதவன் மனிதன் அல்ல. அவன் நல்லவனும் அல்ல. அவன் ஒரு பாவி ஆவான். பாவி எவரிடமும் இரக்கம் காட்டுவதில்லை. அவன் உள்ளத்தில் ஒருபோதும் ஈரமும், இரக்கமும் இருக்காது. இரக்கம் இல்லாத உள்ளம் பாழடைந்த இல்லம். இரக்கம் உள்ள உள்ளம் இறைவன் வாழும் இல்லம். கல்லுக்குள் ஈரம் உண்டு. கடுமையான உள்ளம் உள்ளவனிடம் அது இல்லை. இதற்கு அவனே பொறுப்பு.
‘பாவியிடமிருந்தே தவிர இரக்கம் பிடுங்கப்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), அஹ்மது).
என்றும் கருணையுடன் வாழ்ந்தால் என்னாளும் பொன்னாளே.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
இஸ்லாமிய மாதங்கள் வரிசையில் ஒன்பதாவதாக வருவது ரம்ஜான் மாதமாகும். ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது. சிறப்புமிக்கதாகும்.
இஸ்லாமிய மாதங்கள் வரிசையில் ஒன்பதாவதாக வருவது ரம்ஜான் மாதமாகும். ரம்ஜான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சூர்யோதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருக்கின்றனர், இம்மாதத்தின் இறுதியில் பத்தாவது மாதமான ஷவ்ராலின் முதல் நாள் அன்று ஈதுல் பிதர் என்னும் ஈகை திருநாளை பெருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். எதற்காக நோன்பிருக்க வேண்டும் என்பதை திருக்குரான் கூறுகிறது.
நோன்பு வைப்பவர் வெறும் பட்டினி கிடந்து நேரத்தை கடத்துவது சிறப்பு அல்ல. அப்படி பட்டினியாகும் சமயங்களில் மற்றவைகள் மீது கோபப்படுதல், பொறாமை படுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், வீண் விவாதங்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். நோன்பு வைப்பவர்களின் இறைஞ்சுதலை (துவா) அல்லா மறுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக செல்வ செழிப்பில் இருக்கும் பணக்காரர்களும் பசியின் கொடுமையை உணர்ந்து அப்பசியிலே தினம் வாடும் ஏழையை கண்டு இரங்கும் மனப்பக்குவத்தையும் ஏற்படுத்துகிறது. நோன்பு வயதுக்கு வந்த ஆண், பெண் இருவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
பசி, பட்டினி, துக்கம், கவலை, வறுமை என்று தவித்து கொண்டு இருக்கும் ஏழை, எளிய சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் ஆகியவை கொடுப்பதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். பிறகு அனாதைகள், விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் ஏழை மாணவர்கள் என மார்க்க அறிஞர்கள் வழிகாட்டுதல்படி வழங்க வேண்டும். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கோ பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கினால் ஜகாத் நிறைவேறாது.
மனிதன் தனது பொருளில் தானே விரும்பி கொடுப்பது தர்மம். அதிலும் குறிப்பிட்ட அளவு நகை, பணம் இருந்தால் (ஒரு ஆண்டுக்கு கடன் இல்லாமல் இருந்தால்) அதில் இருந்து இரண்டரை சதவீதம் வரை கொடுப்பது ஜகாத் ஆகும். ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது. இந்தப் புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் புனித திருக்குரான் இறக்கப்பட்டது. இந்த மாதத்தில்தான் ஆயிரம் மாதத்திற்கு ஈடான லைத்துல்கதர் என்று 27-வது இரவு சிறப்புமிக்கதாகும்.
பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னாள் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) நிர்ணயிக்கப்படுகின்ற கோதுமை அல்லது அதற்குரிய பணம் அப்பகுதியில் வாழும் எழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
நோன்பு வைப்பவர் வெறும் பட்டினி கிடந்து நேரத்தை கடத்துவது சிறப்பு அல்ல. அப்படி பட்டினியாகும் சமயங்களில் மற்றவைகள் மீது கோபப்படுதல், பொறாமை படுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், வீண் விவாதங்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். நோன்பு வைப்பவர்களின் இறைஞ்சுதலை (துவா) அல்லா மறுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக செல்வ செழிப்பில் இருக்கும் பணக்காரர்களும் பசியின் கொடுமையை உணர்ந்து அப்பசியிலே தினம் வாடும் ஏழையை கண்டு இரங்கும் மனப்பக்குவத்தையும் ஏற்படுத்துகிறது. நோன்பு வயதுக்கு வந்த ஆண், பெண் இருவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
பசி, பட்டினி, துக்கம், கவலை, வறுமை என்று தவித்து கொண்டு இருக்கும் ஏழை, எளிய சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் ஆகியவை கொடுப்பதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். பிறகு அனாதைகள், விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் ஏழை மாணவர்கள் என மார்க்க அறிஞர்கள் வழிகாட்டுதல்படி வழங்க வேண்டும். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கோ பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கினால் ஜகாத் நிறைவேறாது.
மனிதன் தனது பொருளில் தானே விரும்பி கொடுப்பது தர்மம். அதிலும் குறிப்பிட்ட அளவு நகை, பணம் இருந்தால் (ஒரு ஆண்டுக்கு கடன் இல்லாமல் இருந்தால்) அதில் இருந்து இரண்டரை சதவீதம் வரை கொடுப்பது ஜகாத் ஆகும். ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது. இந்தப் புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் புனித திருக்குரான் இறக்கப்பட்டது. இந்த மாதத்தில்தான் ஆயிரம் மாதத்திற்கு ஈடான லைத்துல்கதர் என்று 27-வது இரவு சிறப்புமிக்கதாகும்.
பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னாள் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) நிர்ணயிக்கப்படுகின்ற கோதுமை அல்லது அதற்குரிய பணம் அப்பகுதியில் வாழும் எழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
ரமலான் மாதத்தில் மக்கள் இறைவனை வணங்குவதிலும், அவனுக்காக நோன்பு வைப்பதிலும் அதிகமாக ஈடுபடுவதால் அவனின் முன், பின் செய்த பாவங்கள் எரிந்து போய்விடுகின்றன. ஆகவே இப்பெயர்.
இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடும் நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது ரம்ஜான் மாதம். இந்த மாதம் இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதமாகும். ‘ரமல்’ என்ற அரபிச் சொல்லிலிருந்து பிறந்தது “ரமலான்”. ரமல் என்றால் எரிகிறது என்பதாகும். இம்மாதத்தில் மக்கள் இறைவனை வணங்குவதிலும், அவனுக்காக நோன்பு வைப்பதிலும் அதிகமாக ஈடுபடுவதால் அவனின் முன், பின் செய்த பாவங்கள் எரிந்து போய்விடுகின்றன. ஆகவே இப்பெயர்.
இம்மாதத்தில்தான் புனிதநூல் குர்ஆனும் அருளப்பெற்றது. மற்ற புனித வேதங்களான “ஸஹ்பு” இப்ராஹிம் (ஸல்) அவர்களுக்கும், மூஸா (ஸல்) அவர்களுக்கு “தெளராத்’.,’ தாவூத் (ஸல்) அவர்களுக்கு., “ஸபூர்” ஈஸா (ஸல்) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டன.
இம்மாத முதல் நாளிலிருந்து 29-ம் நாள் வரை நோன்பு திறக்கும் வேளையில், 10 லட்சம் பேர் நரகத்தில் இருந்து விடுதலை பெறுகின்றனர். ரமலான் மாத 27-வது இரவிற்கு “லைலத்துல் கதர் இரவு என்ற பெயர். இந்த இரவில்தான் புனித “திருக்குர்ஆனை” இறைவன் அருள தொடங்கினான். இந்த ரமலான் இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். அதில் ஜிப்ரீலாகிய மலக்கு, பரிசுத்த ஆவியும், இறைவனின் கட்டளையின் பேரில் மக்களுக்கு வயது, உணவு, வசதி, மழை முதலியவைகளை அளிக்க சகல காரியங்களுடன் இறங்கி கேட்டவைகளை அளிக்கின்றனர்.
இது வசதியற்றவர்களுக்கு பொருள்களை வாரி வழங்கும் மாதம். ஏழைகளுக்கு உபகாரம், உணவில் அபிவிருத்தியை உண்டாக்கும் மாதம். இம்மாதத்தில் ஒரு இறைவனின் கடமையை செய்தால் எழுபது கடமைக்குரிய நன்மைகளை அல்லாஹ் அளிப்பான். கண்ணியமும், சிறப்பும் நிறைந்த புனித மாதம். “தராவீஹ்” என்னும் தொழுகையை உடையதும், பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு பலன் அளிக்கும் மாதம்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ரமலான் மாதத்தில் 30 நோன்புகள் வைத்து இறைவனை தொழுது இன்று “ஈதுல் பிதர்” என்னும் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
இம்மாதத்தில்தான் புனிதநூல் குர்ஆனும் அருளப்பெற்றது. மற்ற புனித வேதங்களான “ஸஹ்பு” இப்ராஹிம் (ஸல்) அவர்களுக்கும், மூஸா (ஸல்) அவர்களுக்கு “தெளராத்’.,’ தாவூத் (ஸல்) அவர்களுக்கு., “ஸபூர்” ஈஸா (ஸல்) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டன.
இம்மாத முதல் நாளிலிருந்து 29-ம் நாள் வரை நோன்பு திறக்கும் வேளையில், 10 லட்சம் பேர் நரகத்தில் இருந்து விடுதலை பெறுகின்றனர். ரமலான் மாத 27-வது இரவிற்கு “லைலத்துல் கதர் இரவு என்ற பெயர். இந்த இரவில்தான் புனித “திருக்குர்ஆனை” இறைவன் அருள தொடங்கினான். இந்த ரமலான் இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். அதில் ஜிப்ரீலாகிய மலக்கு, பரிசுத்த ஆவியும், இறைவனின் கட்டளையின் பேரில் மக்களுக்கு வயது, உணவு, வசதி, மழை முதலியவைகளை அளிக்க சகல காரியங்களுடன் இறங்கி கேட்டவைகளை அளிக்கின்றனர்.
இது வசதியற்றவர்களுக்கு பொருள்களை வாரி வழங்கும் மாதம். ஏழைகளுக்கு உபகாரம், உணவில் அபிவிருத்தியை உண்டாக்கும் மாதம். இம்மாதத்தில் ஒரு இறைவனின் கடமையை செய்தால் எழுபது கடமைக்குரிய நன்மைகளை அல்லாஹ் அளிப்பான். கண்ணியமும், சிறப்பும் நிறைந்த புனித மாதம். “தராவீஹ்” என்னும் தொழுகையை உடையதும், பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு பலன் அளிக்கும் மாதம்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ரமலான் மாதத்தில் 30 நோன்புகள் வைத்து இறைவனை தொழுது இன்று “ஈதுல் பிதர்” என்னும் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
உலக முஸ்லிம்கள் ஆண்டுக்கு இரு நாட்களை பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஒன்று ஈகை திருநாளாக திகழும் நோன்பு பெருநாள்.
உலக முஸ்லிம்கள் ஆண்டுக்கு இரு நாட்களை பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஒன்று ஈகை திருநாளாக திகழும் நோன்பு பெருநாள். இரண்டாவது தியாகத் திருநாளாக இருக்கும் பக்ரீத் பெருநாள். இந்த இரு பெரு நாட்களின் பின்னணியாக நோக்கமாக பல்வேறு அம்சங்கள் இருக்கின்றது. அவற்றில் ஒரு சிறந்த நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தார்கள் மீது அன்பும், கருணையும் கொண்டு தன் செல்வத்தை செலவு செய்வது போன்று, பிற முஸ்லிம்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை பெருக்கவும், தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.
இந்த பிரதான நோக்கத்தை தான் ‘பித்ரா’ என்ற பெயரால் ஈகை திருநாள் அன்று ஏழைக்கு வழங்கப் படும் அன்பளிப்பும், குர்பானி என்ற பெயரால் தியாகத் திருநாளிள் அவர்களுக்கு செய்யப்படும் உபகாரமும் உணர்த்துகிறது
நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் கொடையாளி அல்லாஹ்விற்கும், சுவனத்திற்கும்,மக்களுக்கும் நெருக்கமானவனாக இருக்கின்றான். கருமித்தனம் செய்கிற வணக்கசாளியை விடவும் கொடையாளியான ஒரு முட்டாள் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவன் (நூல் : திர்மிதி).
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் மக்களுக்கு விருந்து அளிப்பவர்களாக இருந்தார்கள். ஒருநாள் விருந்து சாப்பிடுவதற்காக ஒரு மனிதர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே வீட்டுக்கு திரும்பினார்கள். அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார் அவரிடம் நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் என் வீட்டில் என் அனுமதி இல்லாமல் உம்மை உள்ளே நுழைய விட்டது யார்? என்று கேட்டார்கள்.
அப்போது அந்த மனிதர் நான் வீட்டு எஜமானின் அனுமதி பெற்றுதான் உள்ளே வந்தேன் என்று கூறினார் உடனே நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் நீங்கள் யார்? என்று கேட்டார்கள் அவர் சொன்னார் நான் வேறு யாருமல்ல மலக்குல் மவுத்து தான் அல்லாஹ் ஒருவரை நண்பராக தேர்வு செய்துள்ளான். அந்த சுபச்செய்தியை அந்த அடியாருக்கு சொல்வதற்காக என்னை அனுப்பி வைத்தான் என்றார். அப்போது நபி இபுறாகீம் (அலை) மலக்கிடம்அந்த அடியாரை எனக்கு காட்டுங்கள் அவர் ஊரின் கடைசியில் வாழ்ந்தாலும் கூட நான் அவரை சந்தித்து மரணம் எங்களை பிரிக்கப்போகும் வரை நான் அவருடைய அண்டை வீட்டாராக வாழப் போகின்றேன் என்றார்.
அப்போது ‘மலக்‘ சொன்னார் நீங்கள் தான் அந்த அடியார். ஆச்சரியத்துடன் நபி இபுறாகீம் (அலை) அவர்கள் மலக்கிடம் அல்லாஹ் எந்த அம்சத்தை கொண்டு என்னை தனது நண்பனாக தேர்வு செய்தான் என்று கேட்ட போது ‘மலக்‘ சொன்னார் நீங்கள் எல்லா மக்களுக்கும் உதவி செய்து வாழ்கின்றீர்கள் நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் கேட்டு பெறுவதில்லை இது தான் காரணம் என்றார்கள் ( நூல் : தப்சீர் இப்னு அபீ ஹாதம்)
ஹாஜி. கே.எம்.எஸ். ஹக்கீம்
இந்த பிரதான நோக்கத்தை தான் ‘பித்ரா’ என்ற பெயரால் ஈகை திருநாள் அன்று ஏழைக்கு வழங்கப் படும் அன்பளிப்பும், குர்பானி என்ற பெயரால் தியாகத் திருநாளிள் அவர்களுக்கு செய்யப்படும் உபகாரமும் உணர்த்துகிறது
நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் கொடையாளி அல்லாஹ்விற்கும், சுவனத்திற்கும்,மக்களுக்கும் நெருக்கமானவனாக இருக்கின்றான். கருமித்தனம் செய்கிற வணக்கசாளியை விடவும் கொடையாளியான ஒரு முட்டாள் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவன் (நூல் : திர்மிதி).
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் மக்களுக்கு விருந்து அளிப்பவர்களாக இருந்தார்கள். ஒருநாள் விருந்து சாப்பிடுவதற்காக ஒரு மனிதர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே வீட்டுக்கு திரும்பினார்கள். அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார் அவரிடம் நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் என் வீட்டில் என் அனுமதி இல்லாமல் உம்மை உள்ளே நுழைய விட்டது யார்? என்று கேட்டார்கள்.
அப்போது அந்த மனிதர் நான் வீட்டு எஜமானின் அனுமதி பெற்றுதான் உள்ளே வந்தேன் என்று கூறினார் உடனே நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் நீங்கள் யார்? என்று கேட்டார்கள் அவர் சொன்னார் நான் வேறு யாருமல்ல மலக்குல் மவுத்து தான் அல்லாஹ் ஒருவரை நண்பராக தேர்வு செய்துள்ளான். அந்த சுபச்செய்தியை அந்த அடியாருக்கு சொல்வதற்காக என்னை அனுப்பி வைத்தான் என்றார். அப்போது நபி இபுறாகீம் (அலை) மலக்கிடம்அந்த அடியாரை எனக்கு காட்டுங்கள் அவர் ஊரின் கடைசியில் வாழ்ந்தாலும் கூட நான் அவரை சந்தித்து மரணம் எங்களை பிரிக்கப்போகும் வரை நான் அவருடைய அண்டை வீட்டாராக வாழப் போகின்றேன் என்றார்.
அப்போது ‘மலக்‘ சொன்னார் நீங்கள் தான் அந்த அடியார். ஆச்சரியத்துடன் நபி இபுறாகீம் (அலை) அவர்கள் மலக்கிடம் அல்லாஹ் எந்த அம்சத்தை கொண்டு என்னை தனது நண்பனாக தேர்வு செய்தான் என்று கேட்ட போது ‘மலக்‘ சொன்னார் நீங்கள் எல்லா மக்களுக்கும் உதவி செய்து வாழ்கின்றீர்கள் நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் கேட்டு பெறுவதில்லை இது தான் காரணம் என்றார்கள் ( நூல் : தப்சீர் இப்னு அபீ ஹாதம்)
ஹாஜி. கே.எம்.எஸ். ஹக்கீம்
விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183).
விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183).
எந்த ஒரு நோன்பாளி தவறான பேச்சுகளையும் தவறான நட வடிக்கைகளை யும் விட்டு விலக வில்லையோ அவர் உண்ணுவதையும் பருகு வதையும் விட்டு விடுவதில் அல்லாவிற்கு எந்த தேவையு மில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.
தவறான பேச்சு, நடவடிக்கை
புறம் பேசுதல்: புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள். அதற்கு அவர் கள் அல்லாவும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிவார்கள் என்று பதில் அளித்தார் கள். அப்போது நபி அவர்கள் எனது சகோதரன் எதை வெறுப் பானோ அதை அவன் விஷயத்தில் கூறுவதாகும் என்றார். அப்போது தோழர்கள் நாங்கள் கூறுவது எங்களுடைய சகோதரியிடத்தில் இருந்தாலுமா என்று கேட்டனர்.
அதற்கு நபி அவர்கள் நீங்கள் சொல்வது உங்கள் சகோதரர் களிடத்தில் இருந்தால் அதுதான் புறம் பேசுதல் நீங்கள் சொல்வது அவர் களிடத்தில் இல்லை என்றால் அது அவதூறு ஆக கருதப் படும் என்றார். பொய் சாட்சியம் சொல்வது: மூமின்களே நீங்கள் நீதியில் நிலைத்து இருங்கள் பொய்சாட்சி சொல்லாதீர்கள். அது உங்களுக்கோ உங்களுடைய பெற்றோர்களுக்கோ, உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும் பரவாயில்லை (அல் குர் ஆன் 4: 135). ஒரு மனிதன் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் எந்த மொழியை பேசினாலும் எந்த குலம் மற்றும் கோத்திரத்தை சார்ந்தவனாக இருந்தாலும் மனிதர்கள் அனை வரும் ஒரு தாய் மக்கள் என்பதால் மனிதன் மனிதனாக மனித நேயத்தோடு வாழ இறைவன் உதவி செய்வார். இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.
கனிமுகமது
எந்த ஒரு நோன்பாளி தவறான பேச்சுகளையும் தவறான நட வடிக்கைகளை யும் விட்டு விலக வில்லையோ அவர் உண்ணுவதையும் பருகு வதையும் விட்டு விடுவதில் அல்லாவிற்கு எந்த தேவையு மில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.
தவறான பேச்சு, நடவடிக்கை
புறம் பேசுதல்: புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள். அதற்கு அவர் கள் அல்லாவும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிவார்கள் என்று பதில் அளித்தார் கள். அப்போது நபி அவர்கள் எனது சகோதரன் எதை வெறுப் பானோ அதை அவன் விஷயத்தில் கூறுவதாகும் என்றார். அப்போது தோழர்கள் நாங்கள் கூறுவது எங்களுடைய சகோதரியிடத்தில் இருந்தாலுமா என்று கேட்டனர்.
அதற்கு நபி அவர்கள் நீங்கள் சொல்வது உங்கள் சகோதரர் களிடத்தில் இருந்தால் அதுதான் புறம் பேசுதல் நீங்கள் சொல்வது அவர் களிடத்தில் இல்லை என்றால் அது அவதூறு ஆக கருதப் படும் என்றார். பொய் சாட்சியம் சொல்வது: மூமின்களே நீங்கள் நீதியில் நிலைத்து இருங்கள் பொய்சாட்சி சொல்லாதீர்கள். அது உங்களுக்கோ உங்களுடைய பெற்றோர்களுக்கோ, உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும் பரவாயில்லை (அல் குர் ஆன் 4: 135). ஒரு மனிதன் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் எந்த மொழியை பேசினாலும் எந்த குலம் மற்றும் கோத்திரத்தை சார்ந்தவனாக இருந்தாலும் மனிதர்கள் அனை வரும் ஒரு தாய் மக்கள் என்பதால் மனிதன் மனிதனாக மனித நேயத்தோடு வாழ இறைவன் உதவி செய்வார். இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.
கனிமுகமது
புனிதமான ரமலான் மாதம் மக்களுக்கு கிடைத்த ஓர் அருள் நிறைமாதமாகும். இந்த மாதத்தில் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு இறைவன் ஏடுகளையும், வேதங்களையும் அருளினான்.
புனிதமான ரமலான் மாதம் மக்களுக்கு கிடைத்த ஓர் அருள் நிறைமாதமாகும்.
இந்த மாதத்தில் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு இறைவன் ஏடுகளையும், வேதங்களையும் அருளினான். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவசன ஏடுகளும், நபி மூஸா (அலை) அவர்களுக்கு தெளராத் வேதமும், நபிதாவூத் (அலை) அவர்களுக்கு ஜபூர் வேதமும், நபி ஈஸா (அலை) (ஏசு) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும், இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆனும் அருளப்பட்டன. ரமளான் மாதம் 27ம் நாள் லைலத்துள் கத்ர் என்ற இரவில் திருக்குர்ஆன் முழுமையமாக்கப்பட்டு உலக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இரவு 1,000 மாதங்களைவிடச் சிறந்தது.
இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களிலும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்றாலும், அதை நெறிப்படுத்தியவர் பொருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயாகும். இறைவன் மக்களுக்கு விதித்த ஐந்து கடமைகள் 1. நம்பிக்கை, 2.தொழுகை, 3.நோன்பு, 4.ஜகாத், 5.ஹஜ் என்பதாகும். இந்த ஐந்து கடமைகளில் நான்கு கடமைகளான நம்பிக்கை. தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவை ஒரு சேர நிறைவேற்றப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். இறையச்சத்தோடு கூடிய இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு மனிதனிடம் புலனடக்கத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தை அடக்கி குணநலன்களை மேம்படுத்துகிறது.
மனிதனுடைய வருமானத்தில் அவனுடைய வாழ்வாதாரத்திற்குரிய செலவினங்கள் போக மீதமுள்ள பணத்தில் இரண்டரை விழுக்காடு ஜகாத் என்னும் வரியை கொடுக்க இறைவன் உத்தரவிட்டுள்ளான். 100 ரூபாயில் தொன்னூற்று ஏழரை ரூபாய் போக மீதமுள்ள இரண்டரை ரூபாய் அவனுடைய சொத்துக்கு பாதுகாப்பு தரவும், அந்த சொத்தை தூய்மைப்படுத்தவும் பயன்படுகிறது.
ரமலான் மாதம் நோன்பிருந்தோர் பகலில் பசித்திருந்தனர். இரவில் தனித்திருந்து விழித்திருந்து இறைவனை வணங்கினர். இந்த வணக்க வழிபாடு இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால்தான் நோன்பிலிருந்து தன்னை வணங்கியோருக்கு இறைவனே பரிசு தருகின்றான் என்பதோடல்லாமல்,
நேற்று பிறை பார்த்தோம். இறைவனிடம் கூலிபெற்றோம். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த இன்று ரமலான் பண்டிகை கொண்டாடுகிறோம். நேற்று வரை தன் அடியார்கள் பசித்திருப்பதை விரும்பிய இறைவன், இன்று அனைவரும் வயிராற உண்டு மகிழ வேண்டும் என விரும்புகின்றான். இருப்போர், இல்லார் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் மகிழ்ந்திருக்க ஈதுல் பித்ர் என்ற தானிய அறத்தை நடைமுறைப்படுத்தி இன்று அதிகாலையிலேயே தகுதியுள்ளோருக்கு வழங்கி இனிப்புகளோடு ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி சகோதர, சமயத்தினரோடு நல்லிணக்கம் காட்டி மகிழும் இந்த நாள் இனிய நாள்.
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
எஸ்.பைசல் ஹுசைன், சிட்டி கார்ப்பரேசன்
இந்த மாதத்தில் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு இறைவன் ஏடுகளையும், வேதங்களையும் அருளினான். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவசன ஏடுகளும், நபி மூஸா (அலை) அவர்களுக்கு தெளராத் வேதமும், நபிதாவூத் (அலை) அவர்களுக்கு ஜபூர் வேதமும், நபி ஈஸா (அலை) (ஏசு) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும், இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆனும் அருளப்பட்டன. ரமளான் மாதம் 27ம் நாள் லைலத்துள் கத்ர் என்ற இரவில் திருக்குர்ஆன் முழுமையமாக்கப்பட்டு உலக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இரவு 1,000 மாதங்களைவிடச் சிறந்தது.
இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களிலும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்றாலும், அதை நெறிப்படுத்தியவர் பொருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயாகும். இறைவன் மக்களுக்கு விதித்த ஐந்து கடமைகள் 1. நம்பிக்கை, 2.தொழுகை, 3.நோன்பு, 4.ஜகாத், 5.ஹஜ் என்பதாகும். இந்த ஐந்து கடமைகளில் நான்கு கடமைகளான நம்பிக்கை. தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவை ஒரு சேர நிறைவேற்றப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். இறையச்சத்தோடு கூடிய இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு மனிதனிடம் புலனடக்கத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தை அடக்கி குணநலன்களை மேம்படுத்துகிறது.
மனிதனுடைய வருமானத்தில் அவனுடைய வாழ்வாதாரத்திற்குரிய செலவினங்கள் போக மீதமுள்ள பணத்தில் இரண்டரை விழுக்காடு ஜகாத் என்னும் வரியை கொடுக்க இறைவன் உத்தரவிட்டுள்ளான். 100 ரூபாயில் தொன்னூற்று ஏழரை ரூபாய் போக மீதமுள்ள இரண்டரை ரூபாய் அவனுடைய சொத்துக்கு பாதுகாப்பு தரவும், அந்த சொத்தை தூய்மைப்படுத்தவும் பயன்படுகிறது.
ரமலான் மாதம் நோன்பிருந்தோர் பகலில் பசித்திருந்தனர். இரவில் தனித்திருந்து விழித்திருந்து இறைவனை வணங்கினர். இந்த வணக்க வழிபாடு இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால்தான் நோன்பிலிருந்து தன்னை வணங்கியோருக்கு இறைவனே பரிசு தருகின்றான் என்பதோடல்லாமல்,
நேற்று பிறை பார்த்தோம். இறைவனிடம் கூலிபெற்றோம். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த இன்று ரமலான் பண்டிகை கொண்டாடுகிறோம். நேற்று வரை தன் அடியார்கள் பசித்திருப்பதை விரும்பிய இறைவன், இன்று அனைவரும் வயிராற உண்டு மகிழ வேண்டும் என விரும்புகின்றான். இருப்போர், இல்லார் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் மகிழ்ந்திருக்க ஈதுல் பித்ர் என்ற தானிய அறத்தை நடைமுறைப்படுத்தி இன்று அதிகாலையிலேயே தகுதியுள்ளோருக்கு வழங்கி இனிப்புகளோடு ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி சகோதர, சமயத்தினரோடு நல்லிணக்கம் காட்டி மகிழும் இந்த நாள் இனிய நாள்.
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
எஸ்.பைசல் ஹுசைன், சிட்டி கார்ப்பரேசன்
ஜகாத் வளரும் பொருட்கள் மீது மட்டுமே கடமை. சொந்த உபயோகத்தில் உள்ள பண்டப்பாத்திரங்களுக்கும் ஜகாத் இல்லை.
ஜகாத் வளரும் பொருட்கள் மீது மட்டுமே கடமை. வளரும் பொருட்கள் என்பது:- வியாபாரச் சரக்குகள், கால்நடைப் பிராணி, தங்கம் வெள்ளி. சொந்த உபயோகத்தில் உள்ள பண்டப்பாத்திரங்களுக்கும் ஜகாத் இல்லை. சொந்த உபயோகத்தில் உள்ள ஆலைகள், தொழிற்சாலைகளுக்கு ஜகாத் இல்லை. ஆனால் மேற் கூறியவற்றை விற்பனைக்காக வைத்து இருந்தால் ஜகாத் கடமையாகும்.
ஜகாத் கடமையில்லாதவர் ஓர் ஆலையை வாங்கினால் உடனடியாக ஜகாத் கடமை இல்லை. ஒரு வருடம் பூர்த்தியான பின் ஜகாத் கடமை உள்ளது. மோட்டார் சைக்கிள், கார் போன்றவைகளின் மீது ஜகாத் இல்லை. வியாபார சரக்குகளின் தங்கம், வெள்ளியின் கிரயத்தை எட்டினால் ஜகாத் உண்டு. அலமாரிகள், ஷோ-கேஸ் ஆகியவற்றிற்கு ஜகாத் இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஜகாத் இல்லை.
அதற்கான வாடகையை வசூலித்தால் ஜகாத் உண்டு. உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு ஜகாத் உண்டு. பணம் கிடைத்ததிலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும். நிய்யத்தில்லாமல் ஒருவர் சொத்தை யெல்லாம் தர்மஞ் செய்தாலும் அது ஜகாத் ஆகாது. ஏனெனில் ஜகாத்திற்கு நிய்யத்து கட்டாயக் கடமை. அன்னதானம் செய்வது ஜகாத் ஆகாது. கட்டிடங்கள் கட்டுவதற்கு ஜகாத் கொடுக்கக்கூடாது.
பள்ளிவாசல் கட்டிட மதரஸாக்கள் கட்டிட ஜகாத் கொடுக்கக்கூடாது. வீடுகளைக் கட்டிக் கொடுத்தால் ஜகாத் ஆகாது. அவ்வீடுகளில் எளியோரை அமர வைத்து உரிமையாக்கினால் ஜகாத் ஆகும். ஆஸ்பத்திரி கட்டுவதற்கு ஜகாத் கொடுக்கக் கூடாது. மருந்துகள் வாங்கிக் கொள்ள ஜகாத் கொடுக்கலாம். வட்டியில்லாக் கடன் கொடுப்பது ஜகாத் ஆகாது. ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள்-பகீர், மிஸ்கீன், முகாதப், கடனாளி, பீஸபிலில்லாஹ், இப்னுஸ்ஸபீப், ஆமில் ஆகியோர்.
இறந்தவருக்கு மரணச் செலவிற்காக ஜகாத் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. இறந்தவர்களின் கடனை ஜகாத்தைக் கொண்டு அடைக்கக் கூடாது. ஏனெனில், இவற்றில் எதுவும் உரிமையாளரைப் போய்ச் சேராது. மதரஸா மாணவருக்கு ஜகாத் கொடுக்கலாம். ஜகாத் பணத்தைக் கொண்டு ஸ்காலர் ஷிப் (கல்வி உதவித்தொகை) கொடுக்கலாம்.
கே.அப்துல்லா சேட் சவுத் இந்தியன் பிளைவுட்ஸ்
ஜகாத் கடமையில்லாதவர் ஓர் ஆலையை வாங்கினால் உடனடியாக ஜகாத் கடமை இல்லை. ஒரு வருடம் பூர்த்தியான பின் ஜகாத் கடமை உள்ளது. மோட்டார் சைக்கிள், கார் போன்றவைகளின் மீது ஜகாத் இல்லை. வியாபார சரக்குகளின் தங்கம், வெள்ளியின் கிரயத்தை எட்டினால் ஜகாத் உண்டு. அலமாரிகள், ஷோ-கேஸ் ஆகியவற்றிற்கு ஜகாத் இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஜகாத் இல்லை.
அதற்கான வாடகையை வசூலித்தால் ஜகாத் உண்டு. உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு ஜகாத் உண்டு. பணம் கிடைத்ததிலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும். நிய்யத்தில்லாமல் ஒருவர் சொத்தை யெல்லாம் தர்மஞ் செய்தாலும் அது ஜகாத் ஆகாது. ஏனெனில் ஜகாத்திற்கு நிய்யத்து கட்டாயக் கடமை. அன்னதானம் செய்வது ஜகாத் ஆகாது. கட்டிடங்கள் கட்டுவதற்கு ஜகாத் கொடுக்கக்கூடாது.
பள்ளிவாசல் கட்டிட மதரஸாக்கள் கட்டிட ஜகாத் கொடுக்கக்கூடாது. வீடுகளைக் கட்டிக் கொடுத்தால் ஜகாத் ஆகாது. அவ்வீடுகளில் எளியோரை அமர வைத்து உரிமையாக்கினால் ஜகாத் ஆகும். ஆஸ்பத்திரி கட்டுவதற்கு ஜகாத் கொடுக்கக் கூடாது. மருந்துகள் வாங்கிக் கொள்ள ஜகாத் கொடுக்கலாம். வட்டியில்லாக் கடன் கொடுப்பது ஜகாத் ஆகாது. ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள்-பகீர், மிஸ்கீன், முகாதப், கடனாளி, பீஸபிலில்லாஹ், இப்னுஸ்ஸபீப், ஆமில் ஆகியோர்.
இறந்தவருக்கு மரணச் செலவிற்காக ஜகாத் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. இறந்தவர்களின் கடனை ஜகாத்தைக் கொண்டு அடைக்கக் கூடாது. ஏனெனில், இவற்றில் எதுவும் உரிமையாளரைப் போய்ச் சேராது. மதரஸா மாணவருக்கு ஜகாத் கொடுக்கலாம். ஜகாத் பணத்தைக் கொண்டு ஸ்காலர் ஷிப் (கல்வி உதவித்தொகை) கொடுக்கலாம்.
கே.அப்துல்லா சேட் சவுத் இந்தியன் பிளைவுட்ஸ்
ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம். மனித நேயத்தைக் காப்போம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நபி மூஸா (அலை) அல்லாஹ்விடம், “என்னிறைவா, உன்னுடன் உரையாடுவதன் முலம் என்னைக் கண்ணியப்படுத்தினாய். இது போன்ற அந்தஸ்தினைவேறு யாருக்கேனும் நீ வழங்குவாயா?” என்று கேட்டார்கள்.
உடனே அல்லாஹ் விடமிருந்து வஹீ என்னும் தேவதூதின் மூலம் பதில் கிடைத்தது.
“ஆம். மூஸாவே, இறுதி காலத்தில் உலகத்தில் தோன்றிடும் முஹம்மது நபியின் சமூகத்தாருக்கு இதைவிடச் சிறந்த அந்தஸ்தை வழங்குவேன். அவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, அதன் காரணமாய் அவர்களின் உதடுகளெல்லாம் வெளுத்து, அவர்களது உடல்கள் மஞ்சனித்துப் போய்விடும். அந்நாளில் அவர்கள் நோன்பு திறந்திடும் போது அவர்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள திரையினை அகற்றுவேன். நானும், நீங்களும் உரையாடும் போது நம் இருவருக்கும் இடையே எழுபதினாயிரம் திரைகள் இருக்கின்றன. ஆனால், நோன்பு நோற்ற முஹம்மது நபியின் சமூகத்தாரிடம் திரையின்றி பேசுவேன் என்று அருளினான்.
மேலும் நோன்பாளியின் நித்திரை வணக்கமாகும். நோன்பாளியின் மூச்சு இறைத்துதியாகும். நோன்பாளியின் துஆ (பிரார்த்தனை) இறைவனால் அங்கீகரிக்கப்படும்.
நோன்பாளியின் பாபங்கள் மன்னிக்கப்படும். நோன்பாளியின் நற்கிரியைகளுக்கு நன்மைப் பயன்கள் இரட்டிப்பாக்கப்படும். நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹூத்தஆலாவிடம் கஸ்தூரி வாடையினும் மிகவும் சுகந்த மணமாக இருக்கிறது. அதாவது, மறுமை நாளில் அவர்களது வாய்களிலிருந்து வரும் வாடை, கஸ்தூரி வாடையை போல் இருக்கும்.
ஆயுள் முழுவதும் நோன்பு நோற்பதை விட ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நோன்பும் மிகவும் சிறப்புள்ளதாக உள்ளன.
நோன்பும், குர்ஆனும் அதைப் பேணுவதன் காரணத்தால் நமக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மன்றாடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்.
எனவே ரமலான் மாதம் முழுவதும் நாம் நோன்பு நோற்று மேலான பதவியை ஈருலகிலும் அடைய வேண்டும் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பகல் காலங்களில் உண்ணாமல் பசித்திருந்தோம். நீர் கூட அருந்தாமல் தாகித்திருந் தோம். இவையொல்லாம் எதற்காக? இறையருளைப் பெற வேண்டும் அதற்காக!
இறையருளால் முப்பது நோன்புகளை நிறைவேற்றி நாம், நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இறைவனைத் திருப்திபடுத்த ஏழைகளுக்கு தானதர்மங்கள் செய்து, நம்மிலும், எழைகளின் சிரிப்பிலும் இறைவனைத் தரிசிப்பதே இன்றைய பெருநாளின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு நம்மை நன்மைகளின்பால் ஈடுபடுத்திய இறைவனுக்கு நன்றி செலுத்திட சிறப்புத் தொழுகையையும் இன்று நிறைவேற்றுகிறோம்.
ஆக ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம். எல்லோரும் கொண்டாடுவோம். மனித நேயத்தைக் காப்போம்.
ஹாஜி. எஸ்.எஸ்.ஜியாவுத்தீன்
உடனே அல்லாஹ் விடமிருந்து வஹீ என்னும் தேவதூதின் மூலம் பதில் கிடைத்தது.
“ஆம். மூஸாவே, இறுதி காலத்தில் உலகத்தில் தோன்றிடும் முஹம்மது நபியின் சமூகத்தாருக்கு இதைவிடச் சிறந்த அந்தஸ்தை வழங்குவேன். அவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, அதன் காரணமாய் அவர்களின் உதடுகளெல்லாம் வெளுத்து, அவர்களது உடல்கள் மஞ்சனித்துப் போய்விடும். அந்நாளில் அவர்கள் நோன்பு திறந்திடும் போது அவர்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள திரையினை அகற்றுவேன். நானும், நீங்களும் உரையாடும் போது நம் இருவருக்கும் இடையே எழுபதினாயிரம் திரைகள் இருக்கின்றன. ஆனால், நோன்பு நோற்ற முஹம்மது நபியின் சமூகத்தாரிடம் திரையின்றி பேசுவேன் என்று அருளினான்.
மேலும் நோன்பாளியின் நித்திரை வணக்கமாகும். நோன்பாளியின் மூச்சு இறைத்துதியாகும். நோன்பாளியின் துஆ (பிரார்த்தனை) இறைவனால் அங்கீகரிக்கப்படும்.
நோன்பாளியின் பாபங்கள் மன்னிக்கப்படும். நோன்பாளியின் நற்கிரியைகளுக்கு நன்மைப் பயன்கள் இரட்டிப்பாக்கப்படும். நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹூத்தஆலாவிடம் கஸ்தூரி வாடையினும் மிகவும் சுகந்த மணமாக இருக்கிறது. அதாவது, மறுமை நாளில் அவர்களது வாய்களிலிருந்து வரும் வாடை, கஸ்தூரி வாடையை போல் இருக்கும்.
ஆயுள் முழுவதும் நோன்பு நோற்பதை விட ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நோன்பும் மிகவும் சிறப்புள்ளதாக உள்ளன.
நோன்பும், குர்ஆனும் அதைப் பேணுவதன் காரணத்தால் நமக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மன்றாடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்.
எனவே ரமலான் மாதம் முழுவதும் நாம் நோன்பு நோற்று மேலான பதவியை ஈருலகிலும் அடைய வேண்டும் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பகல் காலங்களில் உண்ணாமல் பசித்திருந்தோம். நீர் கூட அருந்தாமல் தாகித்திருந் தோம். இவையொல்லாம் எதற்காக? இறையருளைப் பெற வேண்டும் அதற்காக!
இறையருளால் முப்பது நோன்புகளை நிறைவேற்றி நாம், நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இறைவனைத் திருப்திபடுத்த ஏழைகளுக்கு தானதர்மங்கள் செய்து, நம்மிலும், எழைகளின் சிரிப்பிலும் இறைவனைத் தரிசிப்பதே இன்றைய பெருநாளின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு நம்மை நன்மைகளின்பால் ஈடுபடுத்திய இறைவனுக்கு நன்றி செலுத்திட சிறப்புத் தொழுகையையும் இன்று நிறைவேற்றுகிறோம்.
ஆக ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம். எல்லோரும் கொண்டாடுவோம். மனித நேயத்தைக் காப்போம்.
ஹாஜி. எஸ்.எஸ்.ஜியாவுத்தீன்
அகிலத்தை படைத்து, அதில் உள்ள அனைத்தையும் படைத்து கடலையும், காற்றையும் தன் ஆளுகையில் வைத்து எங்களை படைத்து அனைத்து உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ்க்கே புகழனைத்தும் உரியதாகும்.
அகிலத்தை படைத்து, அதில் உள்ள அனைத்தையும் படைத்து கடலையும், காற்றையும் தன் ஆளுகையில் வைத்து எங்களை படைத்து அனைத்து உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ்க்கே புகழனைத்தும் உரியதாகும்.
இந்த புனித ரமலான் மாதத்தில் பசித்து நோன்பிருந்து இரவில் கண் விழித்து இறை வணக்கம் செய்து நாள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது தக்வா எனும் இறையச் சத்துடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பேரன்பு கொண்டும் வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள், உண்மை, நேர்மை, மனித நேயம் காத்து சகோதரத்துவத்தை வளர்த்து கொண்டதுடன் பிறருக்கு உதவி செய்தும், ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தர்மம் கொடுத்தும் இஸ்லாம் விதித்த வருமான வரியாம் “ஜக்காத்தை” மிக சரியாக கணக்கிட்டு கொடுப்பதால் இல்லாமை நீங்கி மகிழ்வுடன் வாழ வழி வகுத்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும்.
இப்புனித மாதத்தில் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கண்ணியப் படுத்த இஸ்லாத்தின் இருதயமாம் புனித குர்ஆனை அவர்கள் வாயிலாக உலகிற்கு தந்து அல்லாவும் அவனது மலக்குகளும் நபிகளார் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதி, எங்களையும் ஸலவாத்து ஓத கட்டளையிட்ட இறைவன், இறை ரஹ்மத்தையும் பரக்கத் தையும் அள்ளித் தருகிறான்.
இறைவனுக்கு நன்றி (சுக்ரியா)
இந்த வருட புனித ரமலான் மாதத்தை அடைந்திட எங்களுக்கு ஆயுளை கொடுத்தது மட்டுமின்றி நோன்பு இருந்து தொழுகை செய்து ஜக்காத் தையும் கொடுக்கின்ற பாக் கியத் தையும் தந்த இறைவா! உன்னை போற்றுகின்றேன். இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாம் ஹஜ். நிறைவேற்றா தார்களுக்கு ஹஜ் செல்ல வாய்ப்பையும், நிறைவேற்றிய வர்களுக்கு மீண்டும் செல்ல வாய்ப்பையும் தந்தருளுமாறு ஈருலக நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக இறைவா உன்னிடம் இறைஞ்சுகின்றேன்.
முதலாம் பத்து நோன்பில் ரிஜ்க்கில் (உணவில்) பரக்கத்தையும், இரண்டாம் பத்து நோன்பின் பாவ மன்னிப்பையும், மூன்றாம் பத்து நோன்பில் நரகத்திலிருந்து விடுதலையையும் நாம் அனைவரும் பெற்றிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக இறை வனை வேண்டுகின்றேன். எனதருமை இஸ்லாமிய மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்களுக்கும் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் வியாபார பெருமக்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அல்ஹாஜ் எம்.நாசர்கான் (எ) அமான் முன்னாள் முத்தவல்லி, சேலம் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டு மேனேஜிங் பார்ட்னர், மன்னான் பீடி பேக்டரி
இந்த புனித ரமலான் மாதத்தில் பசித்து நோன்பிருந்து இரவில் கண் விழித்து இறை வணக்கம் செய்து நாள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது தக்வா எனும் இறையச் சத்துடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பேரன்பு கொண்டும் வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள், உண்மை, நேர்மை, மனித நேயம் காத்து சகோதரத்துவத்தை வளர்த்து கொண்டதுடன் பிறருக்கு உதவி செய்தும், ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தர்மம் கொடுத்தும் இஸ்லாம் விதித்த வருமான வரியாம் “ஜக்காத்தை” மிக சரியாக கணக்கிட்டு கொடுப்பதால் இல்லாமை நீங்கி மகிழ்வுடன் வாழ வழி வகுத்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும்.
இப்புனித மாதத்தில் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கண்ணியப் படுத்த இஸ்லாத்தின் இருதயமாம் புனித குர்ஆனை அவர்கள் வாயிலாக உலகிற்கு தந்து அல்லாவும் அவனது மலக்குகளும் நபிகளார் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதி, எங்களையும் ஸலவாத்து ஓத கட்டளையிட்ட இறைவன், இறை ரஹ்மத்தையும் பரக்கத் தையும் அள்ளித் தருகிறான்.
இறைவனுக்கு நன்றி (சுக்ரியா)
இந்த வருட புனித ரமலான் மாதத்தை அடைந்திட எங்களுக்கு ஆயுளை கொடுத்தது மட்டுமின்றி நோன்பு இருந்து தொழுகை செய்து ஜக்காத் தையும் கொடுக்கின்ற பாக் கியத் தையும் தந்த இறைவா! உன்னை போற்றுகின்றேன். இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாம் ஹஜ். நிறைவேற்றா தார்களுக்கு ஹஜ் செல்ல வாய்ப்பையும், நிறைவேற்றிய வர்களுக்கு மீண்டும் செல்ல வாய்ப்பையும் தந்தருளுமாறு ஈருலக நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக இறைவா உன்னிடம் இறைஞ்சுகின்றேன்.
முதலாம் பத்து நோன்பில் ரிஜ்க்கில் (உணவில்) பரக்கத்தையும், இரண்டாம் பத்து நோன்பின் பாவ மன்னிப்பையும், மூன்றாம் பத்து நோன்பில் நரகத்திலிருந்து விடுதலையையும் நாம் அனைவரும் பெற்றிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக இறை வனை வேண்டுகின்றேன். எனதருமை இஸ்லாமிய மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்களுக்கும் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் வியாபார பெருமக்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அல்ஹாஜ் எம்.நாசர்கான் (எ) அமான் முன்னாள் முத்தவல்லி, சேலம் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டு மேனேஜிங் பார்ட்னர், மன்னான் பீடி பேக்டரி
ரமலான் மாதத்தின் ஜகாத் எனும் ஏழை வரியை முதலில் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கி நமது சொத்தினை பாதுகாத்து கொள்ளும் கேடயமாக ஆக்கி கொள்வோமாக.
உலகத்தை படைத்து, அனைத்து உயிரினங்களையும் படைத்து அவைகளை பரிபாலிக்கும் அளவற்ற அருளாளனும் அன்புடையோனுமாகிய, இறைவனுக்கே எல்லா புகழுமாகிய அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஈத் (ரம்ஜான்) பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் கொண்ட இஸ்லாம் மதத்தில் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று பசியின் தன்மையை உணர்ந்து பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்க நம்மை ஆக்கி வைப்பார்களாக.
ரமலான் மாதத்தின் ஜகாத் எனும் ஏழை வரியை முதலில் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கி நமது சொத்தினை பாதுகாத்து கொள்ளும் கேடயமாக ஆக்கி கொள்வோமாக.
ரமலான் மாதத்தில் சதக்கா என்னும் தர்மத்தினை உரியவருக்கு வழங்கி நம்மை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி பெருவாழ்வு வாழ இறைவன் அருள் புரிவானாக. இஸ்லாமிய மக்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா என்னும் தர்மத்தினை பணமாகவோ, பொருளாகவோ ஈத் பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி இந்த ஈத் பெருநாளை சிறப்புமிக்க பெருநாளாக கொண்டாட அருள்புரிவானாக.
இந்த புனித ரமலான் அடுத்த வருடம் வரும்போது மேற்கண்ட பாக்கியங்கள் செய்ய நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.
அனைத்து இன மக்களும் சகோதரர்களாகவும் ஒற்றுமையுடன் வாழவும், அனைவரும் தொழில்களில் முன்னேற்றம் அடையவும், நோயின்றி நல் ஆயுளுடன் வாழவும் அருள் புரிவானாக.
மேற்கண்ட துவாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரகத்தால் கபூல் செய்யும்படி இறைவனை வேண்டிக் கொள்வதுடன் எங்களுக்காகவும், எங்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்யுங்கள். ஆமீன், ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
கே.யூசுப் பாஷா சேர்மன் கே.எம்.பி. குரூப்ஸ்
சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் கொண்ட இஸ்லாம் மதத்தில் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று பசியின் தன்மையை உணர்ந்து பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்க நம்மை ஆக்கி வைப்பார்களாக.
ரமலான் மாதத்தின் ஜகாத் எனும் ஏழை வரியை முதலில் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கி நமது சொத்தினை பாதுகாத்து கொள்ளும் கேடயமாக ஆக்கி கொள்வோமாக.
ரமலான் மாதத்தில் சதக்கா என்னும் தர்மத்தினை உரியவருக்கு வழங்கி நம்மை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி பெருவாழ்வு வாழ இறைவன் அருள் புரிவானாக. இஸ்லாமிய மக்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா என்னும் தர்மத்தினை பணமாகவோ, பொருளாகவோ ஈத் பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி இந்த ஈத் பெருநாளை சிறப்புமிக்க பெருநாளாக கொண்டாட அருள்புரிவானாக.
இந்த புனித ரமலான் அடுத்த வருடம் வரும்போது மேற்கண்ட பாக்கியங்கள் செய்ய நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.
அனைத்து இன மக்களும் சகோதரர்களாகவும் ஒற்றுமையுடன் வாழவும், அனைவரும் தொழில்களில் முன்னேற்றம் அடையவும், நோயின்றி நல் ஆயுளுடன் வாழவும் அருள் புரிவானாக.
மேற்கண்ட துவாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரகத்தால் கபூல் செய்யும்படி இறைவனை வேண்டிக் கொள்வதுடன் எங்களுக்காகவும், எங்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்யுங்கள். ஆமீன், ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
கே.யூசுப் பாஷா சேர்மன் கே.எம்.பி. குரூப்ஸ்
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
அல்லாவின் மிகப்பெரும் கிருபையால் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்கு கிடைத்த மிக மிக பெரும் பாக்கியம் புனித ரமலான் மாதம். நமது இம்மை மறுமையின் எல்லா வாழ்வு வகையிலும் சிறப்பு அடையவும் அல்லாவின் திருப்பொறுத்தத்தையும் பொக்கிஷத்தையும் பெறவும் அபரிதமான எல்லா சகல நன்மைகளை பெறுவதற்கும் துன்பத்திலிருந்து நீங்குவதற்கும் சகல காரணங்களுக்கும் விளங்கும் மாதம்.
ஒரு மனிதனின் இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்வது தான் உண்மையான மனிதநேயமும் பொருள் உதவி தேடுபவர்களுக்கு பொருள் உதவியும், உடல் உழைப்பு தேடுபவர்களுக்கு உதவியும், பசித்தவற்கு உணவும், தாகித்தவற்கு நீரும், ஆடை இல்லாதவற்கு ஆடையும், கண் பார்வையற்றவர்களுக்கு உதவியும், நடக்க முடியாத வர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர உதவியும், கல்வி உதவியும், ஏழை - எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் அல்லா உதவி செய்வதை விரும்புகிறான்.
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.
லியாகத் அலி
ஒரு மனிதனின் இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்வது தான் உண்மையான மனிதநேயமும் பொருள் உதவி தேடுபவர்களுக்கு பொருள் உதவியும், உடல் உழைப்பு தேடுபவர்களுக்கு உதவியும், பசித்தவற்கு உணவும், தாகித்தவற்கு நீரும், ஆடை இல்லாதவற்கு ஆடையும், கண் பார்வையற்றவர்களுக்கு உதவியும், நடக்க முடியாத வர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர உதவியும், கல்வி உதவியும், ஏழை - எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் அல்லா உதவி செய்வதை விரும்புகிறான்.
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.
லியாகத் அலி






