search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் ‘ஓசன்னா...’ என்ற பாடலை பாடி வலம் வந்தனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதையும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் நினைவுகூரும்வகையில், ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

    இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தபோது எருசலேம் நகர வீதியில் கழுதையின்மேல் ஊர்வலமாக வந்த நேரத்தில், மக்கள் அவருக்கு குருத்தோலைகள் உள்ளிட்ட இலைகளைப் பரப்பி, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா...' என்று வரவேற்றனர் என பைபிளில் கூறப்பட்டு இருக்கிறது.

    அந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக குருத்தோலை ஞாயிறு இந்த தவக்காலத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினத்தன்று குருத்தோலைகளை கையில் ஏந்தி, ஊர்வலமாக சென்று, தேவாலயத்தில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள்.

    சென்னை அடையாறில் உள்ள ஏசு அன்பர் ஆலயத்தில் பாதிரியார் எம்.சந்திரசேகர், தலைமையில் ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி, ஓசன்னா பாடலை பாடி ஊர்வலமாக வந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று சிறப்பாக நடந்துமுடிந்தது.

    வருகிற 15-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படும். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில், மும்மணி நேர தியான ஆராதனை நடக்கும். அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ந் தேதி) இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை தேவாலயங்களில் கொண்டாடப்படும்.
    இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும்.
    இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும். இந்த நிகழ்வு இந்த ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்து ஞாயிறாக நினைவுகொள்ளப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன? என்பது குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம்.

    வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுகின்றனர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும் போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள். மேலும் பலர் ஒலிவமலை இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். மேலும் இயேசுவை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் மனம்திருந்தி குருத்தோலைகளை கையில் ஏந்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர்.

    இப்படியாக வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்த மக்கள் இன்னும் சில நாட்களில் இவரை சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லப்போவது இயேசுவுக்கு தெரிந்தும் அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததினால் தான் மக்கள் பிதாவை பார்த்து வேண்டிக்கொள்ளும் வார்த்தையாகவும், பிதாவே இயேசுவை இந்த சிலுவை பாடுகளில் இருந்து விடுவியும் என்றும் சொல்வதைத் தான் ஓசன்னா என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் இயேசுவானவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய வாரம் நடைபெறுகிறது.

    அந்த நாட்களில் எருசலேம் மக்கள் ஒலிவமலை குருத்து இலைகளை கையில் ஏந்தி இயேசுவை வரவேற்றது போல, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பனையில் உள்ள குருத்து ஓலைகளை எடுத்து அதை சிலுவையாக வடிவமைத்து கைகளில் ஏந்தியபடி, அவரை புகழ்ந்து பாடல்களை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி, வீதியாக சென்று இயேசுவை நினைவுகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த குருத்தோலை ஞாயிறு அன்றே அவரை சிலுவையில் அறைய திட்டமிடுகின்றனர். எனவே தான் குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக சொல்லப்படுகிறது. எனவே இந்த நாட்களில் இயேசுவின் பாடுகளில் எவ்வளவு பரிசுத்தம் நிறைந்துள்ளது என்பதை நினைவுகூர்ந்து, மீண்டுமாய் நமக்காக அவர் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூற ஆயத்தமாவோம் ஆமென்.

    சகோதரி. கேத்ரின், திருப்பூர்.
    குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்‌ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.
    சகேரியா தீர்க்க தரிசனம் நிறைவேறும் வகையில் சமாதானத்தின் தேவனாக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மேல் பவனியாக சென்றார்.

    யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

    இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத் தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றி வருவதோடு, ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக செல்வதும் வழக்கம்.

    கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறவில்லை. இந்த வருடம் தொற்று முற்றிலும் குறைந்து கட்டுக்குள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சிறப்பாக அனுசரிக்கிறார்கள்.

    கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகு சிறப்பாக நடைபெறும். காலை 6 மணிக்கே தேவாலயத்தை சுற்றி கிறிஸ்தவர்கள் பாடல் பாடி பவனியாக குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

    இதே போல தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையின் கீழ் அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கதீட்ரல் பேராலயம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், பாரிமுனை, சூளை, பிராட்வே, வேப்பேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.

    குருத்தோலை ஞாயிறையொட்டி ஆலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. குருத்தோலையால் தயாரிக்கப்பட்ட சிலுவைகளை சபை மக்களுக்கு ஆயர்கள் வழங்கி அருள் ஆசியும் கூறுவார்கள்.

    குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்‌ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.

    இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் மிகவும் கஷ்ட தினங்களாக கருதி ஆலய வழிபாடுகளில் பயபக்தியோடு பங்கு பெறுவார்கள். 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறிந்து சிறப்பு வழிபாடுகள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும்.

    14-ந் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு தனது சீடர்களுடன் போஜனம் பண்ணுவார். சீடரின் கால்களை கழுவுவார், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சாதாரண மனிதரின் காலை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து 15-ந் தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமையாகும். அன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்படும் நிகழ்வை சித்தரிக்கும் வகையில் மும்மணி தியான ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.

    இதையும் படிக்கலாம்...புத்திர பாக்கியம் தரும் ‘புத்ரதா ஏகாதசி’
    வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
    வரி வசூலிப்பவர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்து கிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்.

    ‘‘இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.

    அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்’’ என்றார்.

    நாம் ஒவ்வொருவரும் வழிதவறி உலகில் வாழ்வதை அறிந்து, மனம் மாறவேண்டும். நம்மை நல்வழிபடுத்தவும், நம்முடைய மனம் மாற்றத்தை விண்ணுலகில் கொண்டாடவும் இறைமகன் தயாராக இருக்கிறார் என்பதையே, இந்த உவமைச்செய்தி நமக்கு கற்பிக்கிறது.

    இந்த உவமையை இருமுறை இயேசு கூறினார். இயேசு வாழ்ந்த கப்பர்நாகும் நகருக்கு வரும்வழியில், சீடர்கள் தம்மில் யார் பெரியவர் என்று வாதாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, மிகச் சிறிவராகிய தம் சீடர்களை வழிதவறிய ஆட்டுக்கு ஒப்பிட்டுக் கூறினார். இரண்டாம் முறை, யூதேயா, பெரேயா பகுதியில் மனம் மாறிய பாவிகளை வழிதவறிய ஆட்டுக்கு ஒப்பிட்டார்.

    இயேசு ஆட்டை உவமையாகச் சொல்வது ஏன்?

    செம்மறி ஆடுகளில் ஏதோ ஒன்று வழிதவறிவிட்டால் அதனால் அமைதியாக தொடர்ந்து மேய முடியாது. அது தடுமாறும். சத்தமிட்டவாறு அங்கும் இங்கும் ஆயரைத் தேடி அலையும். ஆயரின் சத்தத்திற்காக ஏங்கும். ஆயரைக் காணும்வரை அது நிலைகொள்ளாது.

    ஆனால், ஆற்றிவுடைய மனிதர்களாகிய நாம் வழிதவறி வாழ்வதை அறிவதில்லை. நம் உள்ளம் நம் தவறை மறைப்பதால், நம்மை நேர்மையாளர் என்றே எண்ணுகிறோம். மேலும், நாம் அனைவரும் நம்மை வழிதவறிய ஆடு என்று பாவ அறிக்கை செய்தாலும், நம்மில் பலர் வழிதவறி வாழ்வதையே விரும்புகிறோம்.

    இயேசுவின் காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும், வரி வசூலிப்பவரும், பாவிகளும் வழிதவறியதை அறிந்த ஓர் ஆடாக இருந்தார்கள். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தாங்கள் வழிதவறியதை அறியாத 99 ஆடுகளாக இருந்தார்கள். இந்த உவமையை இன்றைக்கு, நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம். வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
    உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும்.
    எவரிடமும் நாங்கள் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக உங்களுள் எவருக்கும் சுவையாய் இராதபடி, இராப்பபலாய் பாடுபட்டு உழைத்தோம்(2 தெச3:8)

    மனநிறைவு என்பது ஆசையற்ற மனநிலையை குறிப்பதாகும். இருப்பதை கொண்டு நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கை தான் மனநிறைவு. தேவையற்ற ஆசைகளை ஒரு மனிதன் அறவே விலக்கி விட வேண்டும். கடினப்பட்டு உழைக்க வேண்டும். சிலவற்றை செய்வதற்கு நாம் ஆசைப்பட வேண்டும். அதே நேரத்தில் அளவுக்கு மீறி ஆசைப்படுவது நமது சுயகட்டுப்பாட்டை நாம் இழப்பதற்கு வழிவகுக்கும். புத்தர் சொல்வது போன்று ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. மனநிறைவு என்ற பண்பு நாம் நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்கிறது.

    சீனாவை சேர்ந்த ஞானி ஒருவருக்கு மோட்சத்தையும், நரகத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நரகத்தில் ஆண்களும், பெண்களும் சோகமாக இருந்தார்கள். விண்ணுலகில் வாழ்ந்த மனிதர்களோ மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் அங்கு எதுவுமே இல்லை. இந்த நிகழ்வில் இருந்து அவர் சொல்கின்ற செய்தி என்னவென்றால் ஒரு மனிதன் நிறைவோடு வாழ்கின்ற பொழுது அவன் விண்ணுலகில் வாழ்கின்றான். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்காமல் வாழ்கின்ற வாழ்க்கை தான் மேன்மையான வாழ்க்கை ஆகும்.

    உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். எளிய வாழ்க்கை வாழ்வதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். இன்றைய கால சூழலில் வெளிநாட்டு பொருட்களுக்கு ஆசைப்படுகின்ற சூழல் மிக அதிகமாக காணப்படுகிறது. மேலை நாட்டு பொருட்களை விட இருக்கின்றதில் நிறைவோடு வாழ்கின்ற ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த நாளில் முயற்சி செய்வோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை கற்று கொள்ளுங்கள்
    நான் கள்ளங்கபடின்றி கற்றேன். கற்றதை முறையீடின்றி பிறறோடு பகிர்ந்து கொண்டேன். அதன் செல்வத்தை நான் மறைப்தில்லை. (சா.ஞா.7:13)

    ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில் சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். ஊக்கமுடமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மை உடமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது. உங்களை நீங்கள் மதிக்கும் மன உணர்வை பயன்படுத்துங்கள். அது போன்று நண்பர்களையும், அதிகாரிகளையும் மதியுங்கள். மென்மையான செயல்களின் மூலம் நல்லதை பற்றி சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை கற்று கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாமல் வகுப்புக்கு சென்று வருவது நல்ல பழக்கம்.

    காலம் குறித்த அர்ப்பண உணர்வு, அமைதி, நுண்மதி, சாந்தம், தன்னம்பிக்கை போன்றவை நம்மை வளர உதவி செய்யும். எனவே முடிந்த அளவுக்கு ஆற்றலோடு நல்லுறவை பேணி பள்ளிக்கூடத்தில் இருந்து எந்த அளவுக்கு பல நல்லதைக் கற்றுகொள்ள முடியுமோ எவ்வளவு நெறிமுறைகளை உள் வாங்கி கொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்று கொள்ள முயற்சி எடுங்கள்.

    வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரை அமைதியாக உங்கள் இடத்தில் எழுந்து நின்று காத்திருங்கள். முதலில் வெளியே செல்வதற்கு நெருங்கி பிடித்து போக வேண்டாம். பள்ளி அரங்கில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் போது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் மகிழ்ச்சியுடன் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள். தேர்வு நேரங்களில் முழுமையாக படித்து தேவையானவற்றை மட்டுமே எழுவதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    “வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்” (ஏசாயா 45:11).
    வரும் காலம் எப்படி இருக்குமோ? என் குடும்பம் எப்படி செல்லுமோ? என் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வரும்காலம் ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது.

    வேதம் சொல்லுகிறது “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்’’ (தானி. 2:22).

    கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.

    பாபிலோன் ராஜாவுக்கு முன்பு தானியேல் சொன்னார்: “தேவன் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்’’ (தானி. 2:21).

    அந்த அருமை ஆண்டவர் உங்களைப் பார்த்து, நீங்கள் எனக்கு கட்டளையிடுங்கள் என்று சொல்லுகிறார். சற்று சிந்தித்துப் பாருங்கள். அண்டசராசரங்களையும் ஜீவராசிகளையும் படைத்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் இயங்க வைத்திருக்கும் ஆண்டவருக்கு நீங்கள் எப்படி கட்டளையிடுவது. அது தான் நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை. அவர் உங்களுக்கு பிதா என்கிற பாசம். உங்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலுள்ள ஐக்கியமே அந்த சிலாக்கியத்தை ஏற்படுத்துகிறது.

    கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அவருடைய குடும்பத்தில் வந்து சேரும்போது கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவராக இருக்கிறார்.

    கர்த்தருக்கு நீங்கள் கட்டளையிடும்படிதான் அவர் உங்களுக்கு அதிகாரங்களையும் ஆளுகையையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். நோய்களுக்கு நீங்கள் கட்டளையிடும் போது அவைகள் நீங்குகிறது. அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிடும் போது அவைகள் ஓடி மறைகிறது. பொல்லாத மனுஷருக்கு கட்டளையிடும் போது அவர்கள் மறைந்து போகிறார்கள். திமிர்வாதக்காரனை நோக்கி நீ உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னால் அவன் நடந்து போவான்.

    பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களுக்குப் பாராட்டின அவருடைய கிருபைகளை எல்லாம் எண்ணிப்பாருங்கள். அவருடைய குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பீர்களாக. நீங்கள் அவரிடத்தில் ஜெபிப்பதும், அவர் உங்களுக்குப் பதிலளிப்பதும், உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை எல்லாம் அவர் உங்களுக்கு நிறைவேற்றித் தருவதும் எத்தனை பாக்கியமான காரியம்!

    “நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்’’ (1 சாமு.12:24).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
    வருகிற 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏசு கிறிஸ்து தாழ்மையின் அடையாளமாக தனது சீடர்களின் கால்களை கழுவியதை கடைபிடிக்கும் வகையில் வருகிற 14-ந் தேதி கால்களை கழுவும் சடங்கும் நடக்கிறது.
    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இந்த நாட்களை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

    இந்த தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கியது. தவக்காலத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தினமும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தவக்காலத்தின் 5-வது ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் பரிகார பவனி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி வால்பாறையில் உள்ள தூய இருதய ஆலயத்தை சேர்ந்தவர்கள் பரிகார பவனி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அவர்கள் பங்குகுரு மரியஜோசப் தலைமையில் கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்துக்கு பவனியாக சென்றனர்.  

    10 கி.மீ. தூர இந்த பவனியின்போது ஏசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதை பாடுகளை 14 இடங்களில் தியானித்து ஜெபித்து கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தை அடைந்தனர்.

    பின்னர் அங்கு கூட்டு பாடல்திருப்பலி நடந்தது. தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

    தொடர்ந்து வருகிற 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏசு கிறிஸ்து தாழ்மையின் அடையாளமாக தனது சீடர்களின் கால்களை கழுவியதை கடைபிடிக்கும் வகையில் வருகிற 14-ந் தேதி கால்களை கழுவும் சடங்கும், 15-ந் தேதி ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளான புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை 17-ந் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.
    வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை நீங்கள் கற்று கொள்ளுங்கள்.
    நான் கள்ளங்கபடின்றி கற்றேன். கற்றதை முறையீடின்றி பிறரோடு பகிர்ந்து கொண்டேன். அதன் செல்வத்தை நான் மறப்பதில்லை(சாஞா 7:13)

    ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில்சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். ஊக்கமுடமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மை உடைமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது. உங்களை நீங்கள் மதிக்கும் மன உணர்வை பயன்படுத்துங்கள். அது போன்று நண்பர்களையும், அதிகாரிகளையும் மதியுங்கள். மென்மையான செயல்களின் மூலம் நல்லதை பற்றி சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை நீங்கள் கற்று கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாமல் வகுப்புக்கு சென்று வருவது நல்ல பழக்கம்.

    காலம் குறித்த அர்ப்பண உணர்வு, அமைதி, நுண்மதி, சாந்தம், தன்னம்பிக்கை போன்றவை நம்மை வளர உதவி செய்யும். எனவே முடிந்த அளவுக்கு ஆற்றலோடு நல்லுறவை பேணி பள்ளிக்கூடத்தில் இருந்து எந்த அளவுக்கு பல நல்லதை கற்றுக்கொள்ள முடியுமோ, எவ்வளவு நெறிமுறைகளை உள்வாங்கி கொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்றுக்கொள்ள முயற்சி எடுங்கள்.

    வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரை அமைதியாக உங்கள் இடத்தில் எழுந்து நின்று காத்திருங்கள். முதலில் வெளியே செல்வதற்கு நெருங்கி பிடித்து போக வேண்டாம். பள்ளி அரங்கில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் போது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் மகிழ்ச்சியுடன் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள். தேர்வு நேரங்களில் முழுமையாக படித்து தேவையானவற்றை மட்டுமே எழுதுவதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    புனித வெள்ளியையொட்டி சிலுவை பயணம் ஏப்ரல் 15-ந் தேதி நடக்கிறது. இந்த பயணத்தின் போது இயேசுவின் சிலுவை பாதையில் உள்ள 14 நிகழ்வுகளையும் கலைஞர்கள் சிலுவை சுமந்தபடி தத்ரூபமாக நடித்து காட்டியபடி செல்வார்கள்.
    இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவை பயணம் திருசடங்குகள் நடைபெறும்.

    கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் புனித வெள்ளியன்று புனித கருணை மாதா மலையில் உள்ள தியான மையத்திற்கு சிலுவை பயணம் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 42-வது சிலுவை பயணம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி புனித வெள்ளியன்று நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு ஆலய வளாகத்தில் பிலாத்து இயேசுவை தீர்ப்பிடும் நிகழ்ச்சியுடன் சிலுவை பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து இந்த பயணம் அருகில் உள்ள புனித சவேரியார் ஆலயம், கருங்கல் பஸ் நிலையம், நிர்மலா மருத்துவமனை ரோடு திருப்பு, நிர்மலா மருத்துவமனை, சிந்தன்விளை கருணை மாதா மலை குருசடி வழியாக சென்று கருணை மாதா மலை உச்சியில் அமைந்துள்ள தியான மையத்தை அடைகிறது. அங்கு சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசுவின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுடன் பயணம் நிறைவுபெறும்.

    இந்த பயணத்தின் போது இயேசுவின் சிலுவை பாதையில் உள்ள 14 நிகழ்வுகளையும் கலைஞர்கள் சிலுவை சுமந்தபடி தத்ரூபமாக நடித்து காட்டியபடி செல்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொள்வார்கள்.

    இந்த சிலுவை பயணம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பங்கு பணியாளர் மரிய அற்புதம் தலைமையில் ஆலய வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் பங்கு உதவி அருட்பணியாளர் ஜஸ்டின் கிறிஸ்துராஜ், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், துணைத் தலைவர் ஜான் ராஜேந்திரன், செயலாளர் பெட்ரோமல், பொருளாளர் பவுல் தாஸ், துணைச் செயலாளர் வெர்ஜின் ஜெனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.
    பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்(லூக் 6:31)

    பெஞ்சமின் பிராங்கிளினிடம் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது அவர் சொன்னது நான் பிறரை பற்றி பேசும் போது நல்ல பண்புகளை மட்டுமே எடுத்துக் கூறுவேன். குறை கூற மாட்டேன் என்றார்.

    சிலர் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிறரிடம் உள்ள குறைகளை பற்றி கூறுபவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஒருபோதும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.

    எனவே நாமும் நமது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான பண்பு மற்றவர்களை பற்றி குறை கூறக்கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.

    அவர்களை விட நான் உயர்ந்தவன் என்று மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தில் இழப்புக்கு ஆளாக இருந்தால் மற்றவரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். படிப்பறிவோ, உலக அனுபவமோ கடின உழைப்போ இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற ஆசைப்படுபவர்கள் இந்த குறை சொல்லுகின்ற பண்புக்கு அளவுக்கு அதிகமாக உள்ளாகி இருக்கிறார்கள்.

    எனவே முடிந்த அளவுக்கு குறை கண்டு பிடிக்காதீர்கள். குற்றம் செய்யாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். யாரிடமாவது குறை இருந்தால் அதை நேரடியாக அவரிடம் பேசி உங்களை நீங்கள் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை கோட்டார் மறைமாவட்டம்.
    நாம் நமது குழந்தைகளுக்கு தண்ணீரின் அவசியத்தை குழந்தை பருவத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அது பல வாழ்வின் பயிற்சியை அவர்கள் கற்று கொள்ள உதவியாக இருக்கும்.
    நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி(1 பேதுரு 1:25)

    இன்று விரும்புவது போன்று எதையும் செய்யும் நிலை வாழ்கின்ற வாழ்க்கை முறை நிலவி வருகிறது. அளவுக்கு அதிகமாக பொருட்களை உபயோகப்படுத்துவது இன்றைய குழந்தைகளிடம் மிக அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் சேமிப்பு நமக்கு மிக முக்கியம். குறிப்பாக தண்ணீரை சேமிப்பது மிக மிக முக்கியம். இரண்டாவது நாம் அடுத்த தலைமுறைக்கு பரிசாக கொடுக்க வேண்டியது தண்ணீர் தான்.

    சிவராமலிங்கம் என்ற 75 வயதுடைய மனிதர் 39 ஆண்டுகள் இங்கிலாந்து ராயல் விமானப்படையில் விஞ்ஞானி அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது சென்னை பெசன்ட் நகரில் உள்ள கடற்கரை சாலையில் வசித்து வருகிறார். தண்ணீரை சேமிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு மனிதர் இவர். சாலையோரம் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். அதற்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கிறார். எப்படி என்றால் சமையல் மற்றும் குளியல் அறையில் இருந்து வெளியேறுகின்ற நீரை மட்டும் மறுசுழற்சி செய்து அதை சேமித்து மரம் செடி கொடி குழாய் மூலம் ஊற்றி வருகிறார்.

    தண்ணீரை சேமிப்பது குறித்த கருத்தரங்கை பிற நாடுகளுக்கு சென்று செய்து வருகிறார். நாம் தினமும் 750 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறோம். இது கழிவு நீராய் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரில் 80 சதவீதம் தண்ணீர் குளிப்பது, சமையலுக்கு பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 20 சதவீதம் தண்ணீரில் 15 சதவீதம் கழிவறைக்கு சென்று விடுகிறது.

    அன்றாடம் ஒரு நபர் குடிப்பதற்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் நமது குழந்தைகளுக்கு தண்ணீரின் அவசியத்தை குழந்தை பருவத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அது பல வாழ்வின் பயிற்சியை அவர்கள் கற்று கொள்ள உதவியாக இருக்கும். எனவே முடிந்த அளவு தண்ணீரை சேமிப்பதன் மகத்துவத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து குழந்தைகளை நாம் முறையான பாதையில் வளர்ப்பதற்கு முயற்சி செய்வோம்.

    - அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    ×