என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
யாரையும் குறை சொல்லாதீர்கள்...
Byமாலை மலர்30 March 2022 6:17 AM GMT (Updated: 30 March 2022 6:17 AM GMT)
தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்(லூக் 6:31)
பெஞ்சமின் பிராங்கிளினிடம் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது அவர் சொன்னது நான் பிறரை பற்றி பேசும் போது நல்ல பண்புகளை மட்டுமே எடுத்துக் கூறுவேன். குறை கூற மாட்டேன் என்றார்.
சிலர் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிறரிடம் உள்ள குறைகளை பற்றி கூறுபவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஒருபோதும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
எனவே நாமும் நமது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான பண்பு மற்றவர்களை பற்றி குறை கூறக்கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.
அவர்களை விட நான் உயர்ந்தவன் என்று மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தில் இழப்புக்கு ஆளாக இருந்தால் மற்றவரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். படிப்பறிவோ, உலக அனுபவமோ கடின உழைப்போ இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற ஆசைப்படுபவர்கள் இந்த குறை சொல்லுகின்ற பண்புக்கு அளவுக்கு அதிகமாக உள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே முடிந்த அளவுக்கு குறை கண்டு பிடிக்காதீர்கள். குற்றம் செய்யாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். யாரிடமாவது குறை இருந்தால் அதை நேரடியாக அவரிடம் பேசி உங்களை நீங்கள் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..
- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை கோட்டார் மறைமாவட்டம்.
பெஞ்சமின் பிராங்கிளினிடம் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது அவர் சொன்னது நான் பிறரை பற்றி பேசும் போது நல்ல பண்புகளை மட்டுமே எடுத்துக் கூறுவேன். குறை கூற மாட்டேன் என்றார்.
சிலர் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிறரிடம் உள்ள குறைகளை பற்றி கூறுபவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஒருபோதும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
எனவே நாமும் நமது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான பண்பு மற்றவர்களை பற்றி குறை கூறக்கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மை மற்றவருக்கு தெரிந்து விடுமோ என்று அதை மறைக்கும் விதத்தில் குறைகூறுகிறார்கள்.
அவர்களை விட நான் உயர்ந்தவன் என்று மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தில் இழப்புக்கு ஆளாக இருந்தால் மற்றவரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். படிப்பறிவோ, உலக அனுபவமோ கடின உழைப்போ இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற ஆசைப்படுபவர்கள் இந்த குறை சொல்லுகின்ற பண்புக்கு அளவுக்கு அதிகமாக உள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே முடிந்த அளவுக்கு குறை கண்டு பிடிக்காதீர்கள். குற்றம் செய்யாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். யாரிடமாவது குறை இருந்தால் அதை நேரடியாக அவரிடம் பேசி உங்களை நீங்கள் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..
- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை கோட்டார் மறைமாவட்டம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X