என் மலர்
கிறித்தவம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் 29-ந் தேதி தொடங்குகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்துக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா 29-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மாதா உருவம் பொறித்த கொடி, பேராலய முகப்பிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக எடுத்து செல்லப்படும் இந்த கொடியை பேராலயத்தின் முன்பு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
விழாவையொட்டி தினமும் மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றுதலும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்ப்பவனி நடைபெறுகிறது. 8-ந் தேதி (வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா 29-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மாதா உருவம் பொறித்த கொடி, பேராலய முகப்பிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக எடுத்து செல்லப்படும் இந்த கொடியை பேராலயத்தின் முன்பு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
விழாவையொட்டி தினமும் மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றுதலும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்ப்பவனி நடைபெறுகிறது. 8-ந் தேதி (வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கிறார்கள். தஞ்சை-2
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய பெரு விழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.
திருச்சி பெரிய மிளகு பாறையை சேர்ந்த பக்தர்கள் சிறிய சப்பத்தை இழுத்து கொண்டு தஞ்சை வழியாக வேளாங்கண்ணி சென்று கொண்டிருக்கிறார்.
திறக்கப்படாத வேதாகமங்களையல்ல, திசைகாட்டும் வேதா கமங்களை நம்முடைய வாழ்வில் பயன்படுத்துவோம், கர்த்தருடைய வார்த்தைகள் அருளும் ஆசீர்வாதங்களை பெற்று வாழ உங்களுக்கு இறைவன் அருள் புரிவாராக.
ஒரு சிறுவன் பழைய பொருட்கள், உடைந்து போன மர சாமான்கள், தேவையற்ற பொருட்கள் ஆகியவற்றைச் சேமித்து வைத்திருந்த அறையில் இருந்து தன்னுடைய பழைய விளையாட்டுப் பொம்மையைத் தேடி எடுக்கச் சென்றான். அப்போது தூசு படிந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அதைத் தன் தாயிடம் கொண்டு வந்து அதைப் பற்றி கேட்டான். தடுமாற்றமடைந்த அந்தத் தாய் ‘இது வேதாகமம், கடவுளுடைய புத்தகம்’ என்று பதற்றமாகப் பதிலளித்தாள்.
யோசனையில் ஆழ்ந்த சிறுவன், ‘இது கடவுளுடைய புத்தகமென்றால், நாம் ஏன் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடக் கூடாது?, இங்கே யாரும் இதைப் பயன்படுத்துவதில்லையே’ என்று கேட்டான்.
பலருடைய வீடுகளில் பரிசுத்த வேதாகமங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. உண்மையில் அதைக் கவனிப்பதும் இல்லை, அதைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை. குடும்பத்தில் நோயோ, மரணமோ ஏற்படும் வேளையில் மட்டுமே அதை எடுத்துப் படிக்கிறார்கள்.
நாம் வாழும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை வேதாகமம் நமக்கு அறிவிக்கிறது. உலகும் உலகில் உள்ள படைப்புகள் யாவும் கடவுளால், கடவுளுடைய வார்த்தையால் படைக்கப்பட்டன. இதிலிருந்து இறை வார்த்தைகளுக்கு எவ்வளவு மகத்தான ஆற்றல் உள்ளது என்பது விளங்குகிறது.
‘ஒளி தோன்றுக’ (தொடக்க நூல் 1:3) என்றார் கடவுள், வெளிச்சம் உண்டானது.
கர்த்தருடைய வார்த்தைகளுக்கு பல பரிமாணங்கள் உண்டு. படைக்கிற, பாதுகாக்கிற, பராமரிக்கிற, பாவங்களை மன்னிக்கிற, புது வாழ்வளிக்கிற, திட நம்பிக்கை அளிக்கிற, சுகப்படுத்துகிற, மறுவாழ்வளிக்கின்ற இப்படி எத்தனையோ பணிகளை செய்யக் கூடிய ஆற்றல் நிறைந்தது.
இந்த கடவுளுடைய வார்த்தைகளடங்கிய பரிசுத்த வேதாகமத்தை வாழ்க்கைக்குச் சொந்தமாக்காமல் எவ்வளவோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இறை வார்த்தை நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஏராளம்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய போதகரான ‘சார்ல்ஸ் ஸ்பர்ஜன்’ லண்டன் நகரின் தெருமுனை ஒன்றில் சாலையைக் கடக்கத் தயங்கியவராக நின்று கொண்டிருந்தார். குதிரைகளும், வண்டிகளும் சாலை விதிகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஓட்டுநர்களின் விருப்பத்திற்கேற்ப வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க ஸ்பர்ஜன் அவர்களின் உதவியை நாடிய போது தான் அவர் அந்த சாலையைக் கடக்க துணிந்தார்.
பயம் என்பது நம்மை செயலிழக்கச் செய்யக் கூடிய ஒரு வலிமையான உணர்வாகும். அது பெரியவர்களைக் கூட சிறுவர்களைப் போல அஞ்சி நடுங்க வைக்கும். இறை வார்த்தை பயத்தை விரட்டக் கூடியது. விசுவாசத்தை நம்மில் வளர்க்கக் கூடியது.
ஒரு முறை இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்ட சீடர்கள் ‘பேய்’ என அஞ்சி நடுங்கினார்கள். ‘துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்’ (மத்தேயு 14:27) என்று கூறி இயேசு அவர்களின் பயத்தை விரட்டினார். ‘துணிவோடிருங்கள்’ எனும் இயேசுவின் வார்த்தை சீடர்களின் அற்ப விசுவாசத்தை மாற்றி பெரிய விசுவாசத்தைக் கொண்டு வந்தது.
பார்வையற்ற அந்த நபருக்கு உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஸ்பர்ஜன் அவர்கள் கடவுளுடைய வார்த்தையை மனதில் கொண்டதால் தயக்கத்தை விரட்டினார். தயக்கம், பயம் போன்ற சூழல்களில் மட்டுமல்ல சோதனைகள் நம்முடைய வாழ்க்கையை மேற்கொள்ளும் போது கூட கடவுளுடைய வார்த்தை நம்மை அந்த சோதனைகளிலிருந்து மீட்டெடுக்கிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் இறை வார்த்தைகளைக் கொண்டு சோதனைகளை வென்று நமக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்துள்ளார்.
நாற்பது நாட்கள் சாப்பிடாமல் இருந்த இயேசுவுக்குப் பசி எடுத்தது. சாத்தான் அவரை சோதிக்கிறான்.
‘நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்’ என்றான்.
இயேசுவோ இறை வார்த்தையை கையாளுகிறார். ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:2-4)
அலகை, இயேசுவை தேவாலயத்து உச்சியின் மேல் நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாத படி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று எழுதியிருக்கிறதே என்று கடவுளின் வார்த்தைகளைக் கொண்டே சோதித்தான்.
இயேசு அவனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே’ என பதிலளித்தார். (மத்தேயு 4:5-7)
பிசாசு, ஆண்டவரை உயர்ந்த மலையின் மேல் கொன்டு போய் உலகத்தின் ராஜ்யங்களையும், மகிமையையும் காண்பித்து ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என சொன்னான்.
இயேசு அவனுக்கு மறுமொழியாக, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார். (மத் 4:8-10)
மேற்கண்ட மூன்று சோதனைகளையும் இறை வார்த்தைகளைக்கொன்டே இயேசு வெற்றி கொண்டார். ஆண்டவர் இயேசு தன்னுடைய திருப்பணி வாழ்க்கையைத் தொடங்கும்போது ஏற்பட்ட சோதனைகளை மேற்கொள்ள கர்த்தருடைய வார்த்தைகள் அவருக்கு உதவியது.
அன்பார்ந்தவர்களே, இறை வார்த்தை நம்முடைய வார்த்தைகளால் அளவிட முடியாத ஆற்றலுடையது. அவை நம்முடைய தயக்கங்களை, பயங்களை, சோதனைகளை, மேற்கொள்ள உதவி செய்கிறது.
திறக்கப்படாத வேதாகமங்களையல்ல, திசைகாட்டும் வேதா கமங்களை நம்முடைய வாழ்வில் பயன்படுத்துவோம், கர்த்தருடைய வார்த்தைகள் அருளும் ஆசீர்வாதங்களை பெற்று வாழ உங்களுக்கு இறைவன் அருள் புரிவாராக.
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்லாயர் ஆலயம், சென்னை.
யோசனையில் ஆழ்ந்த சிறுவன், ‘இது கடவுளுடைய புத்தகமென்றால், நாம் ஏன் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடக் கூடாது?, இங்கே யாரும் இதைப் பயன்படுத்துவதில்லையே’ என்று கேட்டான்.
பலருடைய வீடுகளில் பரிசுத்த வேதாகமங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. உண்மையில் அதைக் கவனிப்பதும் இல்லை, அதைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை. குடும்பத்தில் நோயோ, மரணமோ ஏற்படும் வேளையில் மட்டுமே அதை எடுத்துப் படிக்கிறார்கள்.
நாம் வாழும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை வேதாகமம் நமக்கு அறிவிக்கிறது. உலகும் உலகில் உள்ள படைப்புகள் யாவும் கடவுளால், கடவுளுடைய வார்த்தையால் படைக்கப்பட்டன. இதிலிருந்து இறை வார்த்தைகளுக்கு எவ்வளவு மகத்தான ஆற்றல் உள்ளது என்பது விளங்குகிறது.
‘ஒளி தோன்றுக’ (தொடக்க நூல் 1:3) என்றார் கடவுள், வெளிச்சம் உண்டானது.
கர்த்தருடைய வார்த்தைகளுக்கு பல பரிமாணங்கள் உண்டு. படைக்கிற, பாதுகாக்கிற, பராமரிக்கிற, பாவங்களை மன்னிக்கிற, புது வாழ்வளிக்கிற, திட நம்பிக்கை அளிக்கிற, சுகப்படுத்துகிற, மறுவாழ்வளிக்கின்ற இப்படி எத்தனையோ பணிகளை செய்யக் கூடிய ஆற்றல் நிறைந்தது.
இந்த கடவுளுடைய வார்த்தைகளடங்கிய பரிசுத்த வேதாகமத்தை வாழ்க்கைக்குச் சொந்தமாக்காமல் எவ்வளவோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இறை வார்த்தை நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஏராளம்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய போதகரான ‘சார்ல்ஸ் ஸ்பர்ஜன்’ லண்டன் நகரின் தெருமுனை ஒன்றில் சாலையைக் கடக்கத் தயங்கியவராக நின்று கொண்டிருந்தார். குதிரைகளும், வண்டிகளும் சாலை விதிகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஓட்டுநர்களின் விருப்பத்திற்கேற்ப வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க ஸ்பர்ஜன் அவர்களின் உதவியை நாடிய போது தான் அவர் அந்த சாலையைக் கடக்க துணிந்தார்.
பயம் என்பது நம்மை செயலிழக்கச் செய்யக் கூடிய ஒரு வலிமையான உணர்வாகும். அது பெரியவர்களைக் கூட சிறுவர்களைப் போல அஞ்சி நடுங்க வைக்கும். இறை வார்த்தை பயத்தை விரட்டக் கூடியது. விசுவாசத்தை நம்மில் வளர்க்கக் கூடியது.
ஒரு முறை இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்ட சீடர்கள் ‘பேய்’ என அஞ்சி நடுங்கினார்கள். ‘துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்’ (மத்தேயு 14:27) என்று கூறி இயேசு அவர்களின் பயத்தை விரட்டினார். ‘துணிவோடிருங்கள்’ எனும் இயேசுவின் வார்த்தை சீடர்களின் அற்ப விசுவாசத்தை மாற்றி பெரிய விசுவாசத்தைக் கொண்டு வந்தது.
பார்வையற்ற அந்த நபருக்கு உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஸ்பர்ஜன் அவர்கள் கடவுளுடைய வார்த்தையை மனதில் கொண்டதால் தயக்கத்தை விரட்டினார். தயக்கம், பயம் போன்ற சூழல்களில் மட்டுமல்ல சோதனைகள் நம்முடைய வாழ்க்கையை மேற்கொள்ளும் போது கூட கடவுளுடைய வார்த்தை நம்மை அந்த சோதனைகளிலிருந்து மீட்டெடுக்கிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் இறை வார்த்தைகளைக் கொண்டு சோதனைகளை வென்று நமக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்துள்ளார்.
நாற்பது நாட்கள் சாப்பிடாமல் இருந்த இயேசுவுக்குப் பசி எடுத்தது. சாத்தான் அவரை சோதிக்கிறான்.
‘நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்’ என்றான்.
இயேசுவோ இறை வார்த்தையை கையாளுகிறார். ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:2-4)
அலகை, இயேசுவை தேவாலயத்து உச்சியின் மேல் நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாத படி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று எழுதியிருக்கிறதே என்று கடவுளின் வார்த்தைகளைக் கொண்டே சோதித்தான்.
இயேசு அவனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே’ என பதிலளித்தார். (மத்தேயு 4:5-7)
பிசாசு, ஆண்டவரை உயர்ந்த மலையின் மேல் கொன்டு போய் உலகத்தின் ராஜ்யங்களையும், மகிமையையும் காண்பித்து ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என சொன்னான்.
இயேசு அவனுக்கு மறுமொழியாக, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார். (மத் 4:8-10)
மேற்கண்ட மூன்று சோதனைகளையும் இறை வார்த்தைகளைக்கொன்டே இயேசு வெற்றி கொண்டார். ஆண்டவர் இயேசு தன்னுடைய திருப்பணி வாழ்க்கையைத் தொடங்கும்போது ஏற்பட்ட சோதனைகளை மேற்கொள்ள கர்த்தருடைய வார்த்தைகள் அவருக்கு உதவியது.
அன்பார்ந்தவர்களே, இறை வார்த்தை நம்முடைய வார்த்தைகளால் அளவிட முடியாத ஆற்றலுடையது. அவை நம்முடைய தயக்கங்களை, பயங்களை, சோதனைகளை, மேற்கொள்ள உதவி செய்கிறது.
திறக்கப்படாத வேதாகமங்களையல்ல, திசைகாட்டும் வேதா கமங்களை நம்முடைய வாழ்வில் பயன்படுத்துவோம், கர்த்தருடைய வார்த்தைகள் அருளும் ஆசீர்வாதங்களை பெற்று வாழ உங்களுக்கு இறைவன் அருள் புரிவாராக.
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்லாயர் ஆலயம், சென்னை.
யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
முதன்மைக் கட்டுரை: இயேசுவின் சாவு
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் (காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19). அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் (காண்க: மத்தேயு 21:12-17).
"பிலாத்து அவர்களிடம், 'இதோ மனிதன்' என்றான்" (யோவான் 19:5).
ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.
நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன (காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13).
நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்:
1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார்.
2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத்தேயு 26:33) என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 26:34) என்றுரைக்கிறார்.
4) இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு "துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்" (மத்தேயு 26:37). தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத்தேயு 26:39). இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்."ரபி வாழ்க" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் (காண்க: மத்தேயு 26:49; லூக்கா 22:52; யோவான் 18:3). இயேசுவைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள்.
5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் (காண்க: யோவான் 18:22). இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, "பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்" (மத்தேயு 26:67-68). பின்னர் "இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்"(மத்தேயு 27:2). இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு.
6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் (காண்க: மத்தேயு 26:69-75). உடனே சேவல் கூவிற்று. "அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்" (மத்தேயு 26:75).
7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, "இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" லூக்கா 23:4) என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு "அவனைச் சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்துகிறார்கள் (காண்க: மாற்கு 15:14). கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு "புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்"(மத்தேயு 27:3-8).
8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, "நீ அரசனா?" என்று கேட்டான். "அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்"(யோவான் 18:37-38). பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, "இதோ! மனிதன்" (யோவான் 19:5) என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி "தன் கைகளைக் கழுவினான்" (மத்தேயு 27:24).
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"(யோவான் 18:14).
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!").
12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).
13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்கா 23:34).
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"(லூக்கா 23:43).
"அம்மா, இவரே உம் மகன்"(யோவான் 19:25-27).
"எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" ((அரமேயம்). ("என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?")
"தாகமாய் இருக்கிறது" (யோவான் 19:28).
"எல்லாம் நிறைவேறிற்று"(யோவான் 19:30).
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"(லூக்கா 23:46).
இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் (காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19). அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் (காண்க: மத்தேயு 21:12-17).
"பிலாத்து அவர்களிடம், 'இதோ மனிதன்' என்றான்" (யோவான் 19:5).
ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.
நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன (காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13).
நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்:
1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார்.
2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத்தேயு 26:33) என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 26:34) என்றுரைக்கிறார்.
4) இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு "துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்" (மத்தேயு 26:37). தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத்தேயு 26:39). இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்."ரபி வாழ்க" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் (காண்க: மத்தேயு 26:49; லூக்கா 22:52; யோவான் 18:3). இயேசுவைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள்.
5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் (காண்க: யோவான் 18:22). இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, "பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்" (மத்தேயு 26:67-68). பின்னர் "இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்"(மத்தேயு 27:2). இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு.
6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் (காண்க: மத்தேயு 26:69-75). உடனே சேவல் கூவிற்று. "அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்" (மத்தேயு 26:75).
7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, "இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" லூக்கா 23:4) என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு "அவனைச் சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்துகிறார்கள் (காண்க: மாற்கு 15:14). கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு "புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்"(மத்தேயு 27:3-8).
8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, "நீ அரசனா?" என்று கேட்டான். "அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்"(யோவான் 18:37-38). பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, "இதோ! மனிதன்" (யோவான் 19:5) என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி "தன் கைகளைக் கழுவினான்" (மத்தேயு 27:24).
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"(யோவான் 18:14).
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!").
12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).
13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்கா 23:34).
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"(லூக்கா 23:43).
"அம்மா, இவரே உம் மகன்"(யோவான் 19:25-27).
"எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" ((அரமேயம்). ("என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?")
"தாகமாய் இருக்கிறது" (யோவான் 19:28).
"எல்லாம் நிறைவேறிற்று"(யோவான் 19:30).
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"(லூக்கா 23:46).
இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
உலக இரட்சகர் பெருங்கோவில் (Basilica of the Holy Redeemer, Tiruchirapalli) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து உரோமன் கத்தோலிக்க இணைப் பெருங்கோவில்களுள் ஒன்று ஆகும்.
உலக இரட்சகர் பெருங்கோவில் (Basilica of the Holy Redeemer, Tiruchirapalli) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து உரோமன் கத்தோலிக்க இணைப் பெருங்கோவில்களுள் ஒன்று ஆகும்.
வரலாறு :
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை மையமாகக் கொண்டு கிறித்தவ மறையைப் பரப்பும் பணியை மேலைநாட்டு இயேசு சபையினர் மேற்கொண்டனர். அந்த முயற்சியின் பயனாக உருவான கோவில்களுள் ஒன்று "உலக இரட்சகர் பெருங்கோவில்" ஆகும். திருச்சி பகுதியில் முதல் கிறித்தவ சபை 1616இல் தோன்றியது.
ஐரோப்பிய மறைபரப்புநர் மதுரை நாயக்க மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர். மதுரை மறைபரப்பு மாநிலத்தில் பணிபுரிந்த பல குருக்களுள் "தத்துவ போதகர்" என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி மற்றும் வீரமாமுனிவர் போன்றோர் அடங்குவர்.
திருச்சி நகரத்தைச் சார்ந்த பல பகுதிகளும் மதுரை மறைமாநிலத்தின் கீழ் இருந்த போது பாலக்கரை, தர்மநாதபுரம், வரகனேரி போன்ற இடங்களில் கிறித்தவ சமூகங்கள் எழுந்தன. உலக இரட்சகர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னரே அப்பகுதியில் சுமார் 7500 கிறித்தவர்கள் இருந்தனர். அவர்கள் திருச்சி மறைமாவட்டக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். அருகிலிருந்த வியாகுல மாதா கோவில் அப்பொழுது போர்த்துகீசிய ஆதரவாக்கத்தின் (Portuguese Padroado) கீழ் இருந்ததால் அங்கு வழிபட மக்கள் செல்லவில்லை.
பாலக்கரை பகுதியில் வாழ்ந்த கிறித்தவ மக்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவை என்பதை உணர்ந்த ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச., புதிய கோவில் கட்டடத்திற்கான அடிக்கல்லை 1880, பெப்ருவரி 9ஆம் நாள் நாட்டினார்.
கட்டட வேலை முடிந்து, உலக இரட்சகர் கோவில் 1881, சூன் 29ஆம் நாளில் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது. அந்த நிகழ்வைப் புதுச்சேரி ஆயர் ஃபிரான்சிசு-ஷான்-மரி லூனன் என்பவர் நடத்த, திருச்சி ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச. விழாவில் பங்கேற்றார்.
கோவில் கட்டுவதற்கான நிலத்தை திவான் காஞ்சமலை முதலியார் என்பவர் வழங்கியிருந்தார்.
இடைவிடா சகாயமாதா பக்தி :
1957ஆம் ஆண்டு உலக இரட்சகர் கோவிலில் இடைவிடா சகாய மாதா பக்தி வளரத் தொடங்கியது. அருள்திரு ஏ. தாமசு என்பவர் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அந்தக் காலக்கட்டத்தில் உலக இரட்சகர் சபையைச் சார்ந்த அருள்திரு ஃபிரான்சிசு என்பவர் பங்குத் தளத்தில் இடைவிடா சகாய மாதா நவநாள் பக்திமுயற்சியை அறிமுகப்படுத்தினார்.
அப்பக்தி முயற்சி இன்றுவரை சிறப்பாகத் தொடர்கிறது. நவநாளில் பல நூறு மக்கள், கிறித்தவரும் கிறித்தவரல்லாதவர்களுமாகக் கலந்துகொண்டு அன்னையின் அருளை இறைஞ்சுகின்றனர். வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த நவநாளும் செபங்களும் நிகழ்கின்றன. எனவே சிலவேளைகளில் இக்கோவிலை "இடைவிடா சகாயமாதா கோவில்" என்னும் பெயர்கொண்டே அழைக்கின்றனர்.
இணைப் பெருங்கோவிலாக அறிவிக்கப்படுதல் :
இக்கோவிலின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அக்கோவிலைப் பெருங்கோவில் என்று அறிவிக்க வேண்டும் என்று பங்குத்தந்தை ஏ. கபிரியேல் என்பவரும், திருச்சி ஆயரான மேதகு டோணி டிவோட்டா என்பவரும் உரோமைக்கு விண்ணப்பித்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013, அக்டோபர் 12ஆம் நாள் உலக இரட்சகர் கோவிலை "இணைப் பெருங்கோவில்" (minor basilica) என்னும் நிலைக்கு உயர்த்தினார்.
இக்கோவிலின் உட்சுவர்களில் பல அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கின்றன.
வரலாறு :
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை மையமாகக் கொண்டு கிறித்தவ மறையைப் பரப்பும் பணியை மேலைநாட்டு இயேசு சபையினர் மேற்கொண்டனர். அந்த முயற்சியின் பயனாக உருவான கோவில்களுள் ஒன்று "உலக இரட்சகர் பெருங்கோவில்" ஆகும். திருச்சி பகுதியில் முதல் கிறித்தவ சபை 1616இல் தோன்றியது.
ஐரோப்பிய மறைபரப்புநர் மதுரை நாயக்க மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர். மதுரை மறைபரப்பு மாநிலத்தில் பணிபுரிந்த பல குருக்களுள் "தத்துவ போதகர்" என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி மற்றும் வீரமாமுனிவர் போன்றோர் அடங்குவர்.
திருச்சி நகரத்தைச் சார்ந்த பல பகுதிகளும் மதுரை மறைமாநிலத்தின் கீழ் இருந்த போது பாலக்கரை, தர்மநாதபுரம், வரகனேரி போன்ற இடங்களில் கிறித்தவ சமூகங்கள் எழுந்தன. உலக இரட்சகர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னரே அப்பகுதியில் சுமார் 7500 கிறித்தவர்கள் இருந்தனர். அவர்கள் திருச்சி மறைமாவட்டக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். அருகிலிருந்த வியாகுல மாதா கோவில் அப்பொழுது போர்த்துகீசிய ஆதரவாக்கத்தின் (Portuguese Padroado) கீழ் இருந்ததால் அங்கு வழிபட மக்கள் செல்லவில்லை.
பாலக்கரை பகுதியில் வாழ்ந்த கிறித்தவ மக்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவை என்பதை உணர்ந்த ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச., புதிய கோவில் கட்டடத்திற்கான அடிக்கல்லை 1880, பெப்ருவரி 9ஆம் நாள் நாட்டினார்.
கட்டட வேலை முடிந்து, உலக இரட்சகர் கோவில் 1881, சூன் 29ஆம் நாளில் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது. அந்த நிகழ்வைப் புதுச்சேரி ஆயர் ஃபிரான்சிசு-ஷான்-மரி லூனன் என்பவர் நடத்த, திருச்சி ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச. விழாவில் பங்கேற்றார்.
கோவில் கட்டுவதற்கான நிலத்தை திவான் காஞ்சமலை முதலியார் என்பவர் வழங்கியிருந்தார்.
இடைவிடா சகாயமாதா பக்தி :
1957ஆம் ஆண்டு உலக இரட்சகர் கோவிலில் இடைவிடா சகாய மாதா பக்தி வளரத் தொடங்கியது. அருள்திரு ஏ. தாமசு என்பவர் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அந்தக் காலக்கட்டத்தில் உலக இரட்சகர் சபையைச் சார்ந்த அருள்திரு ஃபிரான்சிசு என்பவர் பங்குத் தளத்தில் இடைவிடா சகாய மாதா நவநாள் பக்திமுயற்சியை அறிமுகப்படுத்தினார்.
அப்பக்தி முயற்சி இன்றுவரை சிறப்பாகத் தொடர்கிறது. நவநாளில் பல நூறு மக்கள், கிறித்தவரும் கிறித்தவரல்லாதவர்களுமாகக் கலந்துகொண்டு அன்னையின் அருளை இறைஞ்சுகின்றனர். வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த நவநாளும் செபங்களும் நிகழ்கின்றன. எனவே சிலவேளைகளில் இக்கோவிலை "இடைவிடா சகாயமாதா கோவில்" என்னும் பெயர்கொண்டே அழைக்கின்றனர்.
இணைப் பெருங்கோவிலாக அறிவிக்கப்படுதல் :
இக்கோவிலின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அக்கோவிலைப் பெருங்கோவில் என்று அறிவிக்க வேண்டும் என்று பங்குத்தந்தை ஏ. கபிரியேல் என்பவரும், திருச்சி ஆயரான மேதகு டோணி டிவோட்டா என்பவரும் உரோமைக்கு விண்ணப்பித்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013, அக்டோபர் 12ஆம் நாள் உலக இரட்சகர் கோவிலை "இணைப் பெருங்கோவில்" (minor basilica) என்னும் நிலைக்கு உயர்த்தினார்.
இக்கோவிலின் உட்சுவர்களில் பல அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கின்றன.
புனித அன்னை மரியா பெருங்கோவில் (St. Mary's Basilica) என்பது உரோமன் கத்தோலிக்க பெங்களூரு உயர் மறைமாவட்டம், பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வழிபாட்டிடம் ஆகும்.
புனித அன்னை மரியா பெருங்கோவில் (St. Mary's Basilica) என்பது உரோமன் கத்தோலிக்க பெங்களூரு உயர் மறைமாவட்டம், பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வழிபாட்டிடம் ஆகும். இக்கோவில் பெங்களூரிலேயே மிகப் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஆகும். மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரே இணைப் பெருங்கோவில் (minor basilica) இதுவே.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் இக்கோவிலில் நிகழ்கின்ற திருவிழா மிகச் சிறப்பானதாகும். அவ்விழாவில் கிறித்தவர்களும் பிற சமயத்தவரும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்கின்றனர்.
கோவில் வரலாறு :
17ஆம் நூற்றாண்டில் மைசூர் இராச்சியத்தின் தலைநகராயிருந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முதன்முறையாக கிறித்தவம் 1648இல் அறிமுகமானது. அப்போது பெங்களூரு ஒரு சிறு ஊராகவே இருந்தது. மைசூர் மறைபரப்புத் தளத்தின் பகுதியாக விளங்கிய பெங்களூரில் கிறித்தவம் படிப்படியாக வேரூன்றியது. முதலில் மலபார் மறைத்தளத்தைச் சார்ந்த இத்தாலிய இயேசு சபையினர் அப்பகுதியில் கிறித்தவத்தைப் பரப்பினர். அதன் பின் பிரஞ்சு இயேசு சபையினர் மதுரை மற்றும் கர்நாடக மறைத்தளத்திலிருந்து வந்து 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவத்தைப் பரப்பினர்.
தொடக்கத்தில் செஞ்சி பகுதியிலிருந்து பெங்களூரில் குடியேறிய கத்தோலிக்க மக்கள் ஒரு சிறு கூரைக் கோவில் கட்டி அங்கு வழிபட்டனர். ஆனால் ஐதர் அலி ஆட்சியிலும் அதன் பிறகு திப்பு சுல்தான் ஆட்சியிலும் (1782-1799) கிறித்தவர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள். பல கிறித்தவக் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கிறித்தவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பியோட வேண்டியதாயிற்று.
1799இல் பிரித்தானியர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி, திப்பு சுல்தானை முறியடித்த பிறகு கிறித்தவ மறைப்பணியாளர்கள் மீண்டும் மைசூர் மறைத்தளத்தில் பணிபுரிய வழிபிறந்தது. பாரிசு வெளிநாட்டு மறைப்பணியாளர்கள் (Missions Etrangères de Paris) அங்கு மீண்டும் பணிபுரிய வந்தனர். அக்குழுவைச் சார்ந்த ஷான்-அந்துவான் துபுவா (Jean-Antoine Dubois) என்பவர் சோமனஹல்லி, கமனஹல்லி, பேகூர், குஞ்சம், பலஹல்லி, தோரனஹல்லி போன்ற பகுதிகளில் கத்தோலிக்க குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் ஆன்ம தேவைகளைக் கவனித்தார்.
தமிழ்க் கத்தோலிக்க குடும்பங்கள் குடியேறி விவசாயம் செய்த பகுதி "பிலி அக்கி பள்ளி" (பிறகு "பிளாக் பள்ளி") என்று அழைக்கப்பட்டது. அங்கு துபுவா அடிகள் கூலையால் வேய்ந்த ஒரு சிறு கோவிலை 1803இல் கட்டினார்.
அக்கோவிலில் அவர் திருப்பலி நிறைவேற்றினர். அக்கோவிலின் பெயர் "காணிக்கை மாதா கோவில்" என்பதாகும். 1813இல் அக்கோவில் சிறிதே விரிவாக்கப்பட்டு, "சுத்திகர மாதா கோவில்" என்று பெயர் பெற்றது. அப்பழைய கோவில் கட்டப்பட்ட ஆண்டு ஒரு கல்லில் பதிக்கப்பட்டது. துபுவா அடிகள் அக்கோவிலின் அருகே குருக்கள் இல்லம் ஒன்றையும் கட்டினார்.
அவருக்குப் பின் பணிப்பொறுப்பை ஏற்றவர் அருள்திரு அந்திரேயாஸ் என்பவர். அவர் புதுச்சேரியைச் சார்ந்த தமிழ்க் குரு. அவர் கோவிலை விரிவுபடுத்தி சிலுவை வடிவில் கட்டினார். ஆனால் பெங்களூரில் 1832இல் நிகழ்ந்த கலவரத்தின்போது கோவில் கட்டடம் அழிந்தது. அங்கு மறைப்பணி செய்த போஷத்தோன் அடிகள் அதிசயமாக உயிர்தப்பினார். அந்த இடத்தில்தான் இன்று புனித அன்னை மரியா பெருங்கோவில் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. மக்கள் அன்னை மரியாவிடம் வேண்டிக் கொண்டவர். மக்களுக்கு நலமளித்த அன்னையை "ஆரோக்கிய அன்னை" என்ற பெயராலும் மக்கள் அழைத்தனர்.
இன்றைய கோவில் :
இன்று கோத்திக் கலைப்பாணியில் எழுந்துயர்ந்து நிற்கின்ற அன்னை மரியா கோவில் 1875-1882 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் அருள்திரு எல்.இ.க்ளைனர் (Rev. L. E. Kleiner) என்பவர் ஆவர். அவர் பின்னர் மைசூரின் ஆயராக நியமனம் பெற்றார்.
புதிய கோவில் 1882, செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் ஆயர் யோவான்னஸ் மரியா கோவாது என்பவரால் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி 35 குருக்கள் மற்றும் 4000 கத்தோலிக்க மக்கள் முன்னிலையில் நடந்தது.
இன்று பெங்களூரில் உள்ள அனைத்து கத்தோலிக்க கோவில்களுக்கும் தாய்க் கோவிலாக அமைந்தது அன்னை மரியா கோவிலே என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் திருவிழா :
இக்கோவிலின் ஆண்டுத் திருவிழா அன்னை மரியாவின் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆகத்து 29ஆம் நாள் ஆடம்பர கொடியேற்றத்தோடு நவநாள் பக்திமுயற்சி தொடங்கி செப்டம்பர் 7ஆம் நாள் வரை நீடிக்கும்.[3] பத்தாம் நாளான செப்டம்பர் 8 பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படும். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் கொடியேற்றம் நிகழ்த்துவது இக்கோவிலுக்கே சிறப்பான ஓர் அம்சம்.
பத்தாம் திருவிழாவன்று நிகழும் தேரோட்டம் சிறப்பானது. அப்போது தேரில் அன்னை மரியாவின் திருவுருவம் சிவாஜி நகரின் தெருக்கள் வழியாகக் கொண்டுசெல்லப்படும். அச்சிலை வழக்கமாக கோவில் நுழைவாயில் அருகே இருக்கும். 1832இல் நடந்த கலவரத்தின் போது சிலர் கோவிலுக்குத் தீவைத்த வேளையில் இச்சுருபம் மட்டும் அதிசயமாகத் தப்பியது.
பின்னர் அச்சிலையை அங்கிருந்து அகற்றி சிறப்பான பீடத்தில் வைக்க முயன்றபோது அச்சிலை நகர மறுத்துவிட்டதாக வரலாறு. எனவே இன்றுவரை அன்னை மரியாவின் அச்சிலை கோவில் நுழைவாயில் அருகேயே உள்ளது. கோவில் திருவிழா நிகழ்ச்சிகளிலும் தேரோட்ட நிகழ்ச்சியிலும் மக்கள் பக்தியோடு பங்கேற்பர். திருவிழா நாட்களில் மக்கள் காவி உடை அணிந்து வருவது வழக்கமாக உள்ளது.
திருப்பலி பல மொழிகளில் நடைபெறும். ஏழை எளியோரின் திருமணங்கள் நடத்திவைக்கப்படும். மேலும் திருமண ஐம்பதாம் ஆண்டு விழா நடப்பதும் உண்டு.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் இக்கோவிலில் நிகழ்கின்ற திருவிழா மிகச் சிறப்பானதாகும். அவ்விழாவில் கிறித்தவர்களும் பிற சமயத்தவரும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்கின்றனர்.
கோவில் வரலாறு :
17ஆம் நூற்றாண்டில் மைசூர் இராச்சியத்தின் தலைநகராயிருந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முதன்முறையாக கிறித்தவம் 1648இல் அறிமுகமானது. அப்போது பெங்களூரு ஒரு சிறு ஊராகவே இருந்தது. மைசூர் மறைபரப்புத் தளத்தின் பகுதியாக விளங்கிய பெங்களூரில் கிறித்தவம் படிப்படியாக வேரூன்றியது. முதலில் மலபார் மறைத்தளத்தைச் சார்ந்த இத்தாலிய இயேசு சபையினர் அப்பகுதியில் கிறித்தவத்தைப் பரப்பினர். அதன் பின் பிரஞ்சு இயேசு சபையினர் மதுரை மற்றும் கர்நாடக மறைத்தளத்திலிருந்து வந்து 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவத்தைப் பரப்பினர்.
தொடக்கத்தில் செஞ்சி பகுதியிலிருந்து பெங்களூரில் குடியேறிய கத்தோலிக்க மக்கள் ஒரு சிறு கூரைக் கோவில் கட்டி அங்கு வழிபட்டனர். ஆனால் ஐதர் அலி ஆட்சியிலும் அதன் பிறகு திப்பு சுல்தான் ஆட்சியிலும் (1782-1799) கிறித்தவர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள். பல கிறித்தவக் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கிறித்தவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பியோட வேண்டியதாயிற்று.
1799இல் பிரித்தானியர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி, திப்பு சுல்தானை முறியடித்த பிறகு கிறித்தவ மறைப்பணியாளர்கள் மீண்டும் மைசூர் மறைத்தளத்தில் பணிபுரிய வழிபிறந்தது. பாரிசு வெளிநாட்டு மறைப்பணியாளர்கள் (Missions Etrangères de Paris) அங்கு மீண்டும் பணிபுரிய வந்தனர். அக்குழுவைச் சார்ந்த ஷான்-அந்துவான் துபுவா (Jean-Antoine Dubois) என்பவர் சோமனஹல்லி, கமனஹல்லி, பேகூர், குஞ்சம், பலஹல்லி, தோரனஹல்லி போன்ற பகுதிகளில் கத்தோலிக்க குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் ஆன்ம தேவைகளைக் கவனித்தார்.
தமிழ்க் கத்தோலிக்க குடும்பங்கள் குடியேறி விவசாயம் செய்த பகுதி "பிலி அக்கி பள்ளி" (பிறகு "பிளாக் பள்ளி") என்று அழைக்கப்பட்டது. அங்கு துபுவா அடிகள் கூலையால் வேய்ந்த ஒரு சிறு கோவிலை 1803இல் கட்டினார்.
அக்கோவிலில் அவர் திருப்பலி நிறைவேற்றினர். அக்கோவிலின் பெயர் "காணிக்கை மாதா கோவில்" என்பதாகும். 1813இல் அக்கோவில் சிறிதே விரிவாக்கப்பட்டு, "சுத்திகர மாதா கோவில்" என்று பெயர் பெற்றது. அப்பழைய கோவில் கட்டப்பட்ட ஆண்டு ஒரு கல்லில் பதிக்கப்பட்டது. துபுவா அடிகள் அக்கோவிலின் அருகே குருக்கள் இல்லம் ஒன்றையும் கட்டினார்.
அவருக்குப் பின் பணிப்பொறுப்பை ஏற்றவர் அருள்திரு அந்திரேயாஸ் என்பவர். அவர் புதுச்சேரியைச் சார்ந்த தமிழ்க் குரு. அவர் கோவிலை விரிவுபடுத்தி சிலுவை வடிவில் கட்டினார். ஆனால் பெங்களூரில் 1832இல் நிகழ்ந்த கலவரத்தின்போது கோவில் கட்டடம் அழிந்தது. அங்கு மறைப்பணி செய்த போஷத்தோன் அடிகள் அதிசயமாக உயிர்தப்பினார். அந்த இடத்தில்தான் இன்று புனித அன்னை மரியா பெருங்கோவில் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. மக்கள் அன்னை மரியாவிடம் வேண்டிக் கொண்டவர். மக்களுக்கு நலமளித்த அன்னையை "ஆரோக்கிய அன்னை" என்ற பெயராலும் மக்கள் அழைத்தனர்.
இன்றைய கோவில் :
இன்று கோத்திக் கலைப்பாணியில் எழுந்துயர்ந்து நிற்கின்ற அன்னை மரியா கோவில் 1875-1882 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் அருள்திரு எல்.இ.க்ளைனர் (Rev. L. E. Kleiner) என்பவர் ஆவர். அவர் பின்னர் மைசூரின் ஆயராக நியமனம் பெற்றார்.
புதிய கோவில் 1882, செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் ஆயர் யோவான்னஸ் மரியா கோவாது என்பவரால் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி 35 குருக்கள் மற்றும் 4000 கத்தோலிக்க மக்கள் முன்னிலையில் நடந்தது.
இன்று பெங்களூரில் உள்ள அனைத்து கத்தோலிக்க கோவில்களுக்கும் தாய்க் கோவிலாக அமைந்தது அன்னை மரியா கோவிலே என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் திருவிழா :
இக்கோவிலின் ஆண்டுத் திருவிழா அன்னை மரியாவின் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆகத்து 29ஆம் நாள் ஆடம்பர கொடியேற்றத்தோடு நவநாள் பக்திமுயற்சி தொடங்கி செப்டம்பர் 7ஆம் நாள் வரை நீடிக்கும்.[3] பத்தாம் நாளான செப்டம்பர் 8 பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படும். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் கொடியேற்றம் நிகழ்த்துவது இக்கோவிலுக்கே சிறப்பான ஓர் அம்சம்.
பத்தாம் திருவிழாவன்று நிகழும் தேரோட்டம் சிறப்பானது. அப்போது தேரில் அன்னை மரியாவின் திருவுருவம் சிவாஜி நகரின் தெருக்கள் வழியாகக் கொண்டுசெல்லப்படும். அச்சிலை வழக்கமாக கோவில் நுழைவாயில் அருகே இருக்கும். 1832இல் நடந்த கலவரத்தின் போது சிலர் கோவிலுக்குத் தீவைத்த வேளையில் இச்சுருபம் மட்டும் அதிசயமாகத் தப்பியது.
பின்னர் அச்சிலையை அங்கிருந்து அகற்றி சிறப்பான பீடத்தில் வைக்க முயன்றபோது அச்சிலை நகர மறுத்துவிட்டதாக வரலாறு. எனவே இன்றுவரை அன்னை மரியாவின் அச்சிலை கோவில் நுழைவாயில் அருகேயே உள்ளது. கோவில் திருவிழா நிகழ்ச்சிகளிலும் தேரோட்ட நிகழ்ச்சியிலும் மக்கள் பக்தியோடு பங்கேற்பர். திருவிழா நாட்களில் மக்கள் காவி உடை அணிந்து வருவது வழக்கமாக உள்ளது.
திருப்பலி பல மொழிகளில் நடைபெறும். ஏழை எளியோரின் திருமணங்கள் நடத்திவைக்கப்படும். மேலும் திருமண ஐம்பதாம் ஆண்டு விழா நடப்பதும் உண்டு.
சி.சவேரியார்புரம் பங்கு மேலப்பனைக்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சி.சவேரியார்புரம் பங்கு மேலப்பனைக்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழமை வாய்ந்த இந்த ஆலயம் சோமநாதப்பேரி பங்கின் சிற்றலாயமாக முதலில் விளங்கியது. அதன் பின்பு 1963-ல் சிந்தாமணி புதிய பங்கு ஆலயமாக உருவெடுத்தது. 1976-ம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1978-ம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ் ஆலயத்தை திறந்து வைத்தார்.
1999-ம் ஆண்டு சிந்தாமணி பங்கு பிரிக்கப்பட்டு சி. சவேரியார்புரம் பங்கு உதயமானது. அதில் இருந்து சி.சவேரியார்புரம் கிளை பங்காக விளங்கி வருகிறது. மேலப் பனைக்குளத்தில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை 2013-ம் ஆண்டு பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் திறந்து வைத்தார்.
இந்த ஆயலத்தில் ஆண்டு தோறும் திருவிழா பங்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் திருப்பலி, நற்செய்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 26-ந் தேதி வெள்ளிக்கிழமை கத்தோலிக்க இன்னிசை நற்செய்தி பெருவிழா நடக்கிறது.
27-ந் தேதி இரவு புனிதரின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. 28-ந் தேதி மதியம் பொது அசன விருந்து நடக்கிறது. அன்று மாலையில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியான் மற்றும் மேலப்பனைக்குளம் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த ஆலயம் சோமநாதப்பேரி பங்கின் சிற்றலாயமாக முதலில் விளங்கியது. அதன் பின்பு 1963-ல் சிந்தாமணி புதிய பங்கு ஆலயமாக உருவெடுத்தது. 1976-ம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1978-ம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ் ஆலயத்தை திறந்து வைத்தார்.
1999-ம் ஆண்டு சிந்தாமணி பங்கு பிரிக்கப்பட்டு சி. சவேரியார்புரம் பங்கு உதயமானது. அதில் இருந்து சி.சவேரியார்புரம் கிளை பங்காக விளங்கி வருகிறது. மேலப் பனைக்குளத்தில் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை 2013-ம் ஆண்டு பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் திறந்து வைத்தார்.
இந்த ஆயலத்தில் ஆண்டு தோறும் திருவிழா பங்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் திருப்பலி, நற்செய்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 26-ந் தேதி வெள்ளிக்கிழமை கத்தோலிக்க இன்னிசை நற்செய்தி பெருவிழா நடக்கிறது.
27-ந் தேதி இரவு புனிதரின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. 28-ந் தேதி மதியம் பொது அசன விருந்து நடக்கிறது. அன்று மாலையில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியான் மற்றும் மேலப்பனைக்குளம் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
கர்த்தருடைய அந்த வசனத்திற்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுங்கள். உங்களை ஆசீர்வதிக்க விரும்பும் கர்த்தர் நிச்சயமாய் அற்புதங்களைச் செய்வார்.
அற்புதங்களை அனுபவிப்பதற்கான சில முக்கிய ஆலோசனைகளை ஜெபத்தோடு எழுதுகிறேன். கர்த்தருடைய அந்த வசனத்திற்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுங்கள். உங்களை ஆசீர்வதிக்க விரும்பும் கர்த்தர் நிச்சயமாய் அற்புதங்களைச் செய்வார்.
ஏகசிந்தை
‘ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்் மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்’. (ரோமர் 12:16)
உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏக சிந்தை மிக முக்கியமானது. அற்புதங்களுக்கு ஏகசிந்தை மிகவும் அவசியமான ஒன்று.
ஒரே வீட்டில் உள்ளவர்களின் சிந்தனை வேறுபட்டிருக்கும் என்றால், அங்கு ஆசீர்வாதங்கள் அவ்வளவு பெரிதாக இருக்காது. கணவன்- மனைவி, பிள்ளைகள் என அனைவரும் ஒரு காரியத்தைக் குறித்து இணைந்து சிந்தித்து செயல்பட்டால், நிச்சயம் ஆண்டவரும் அங்கு கிரியை செய்வார்.
நம்முடைய குடும்பத்தின் நிலைமையை சாத்தான் அறிந்து, பலவிதமான எதிர்மறையான எண்ணங்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவருக்குள் ஏவி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்வான். எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருந்து ஆண்டவரை சார்ந்து கொள்வது முக்கியமானதாகும்.
‘ஏகசிந்தை என்ற உன்னதமான குணத்திற்காக ஜெபம் பண்ணுங்கள். நிச்சயம் இக்கிருபையை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அற்புதங்களைக் காண்பீர்கள்’ என்று 2.கொரி.13:11 கூறுகிறது.
ஒருமனப்பாடு
‘யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும், பிரபுக்களும் கட்டளையிட்ட பிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று’. (2.நாளா.30:12)
அற்புதங்களை நாம் தேடுவதற்கு ஒருமனப்பாடு மிகமிக முக்கியம். ஏனெனில் தன்னிச்சையாக செயல்படுகிற அநேக தேவனுடைய பிள்ளைகள் ஒருமனப்பாடு என்ற நல்ல காரியத்தைக் குறித்து யோசிப்பதேஇல்லை.
இயேசு இப்படி சொல்கிறார், ‘அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’. (மத். 18:19)
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் விசுவாசமும் ஜெபமும் இருந்து, மற்றவர்களுக்குள் விசுவாச ஜெபம் குறைவாக இருக்குமென்றால் அவர்களைத் தள்ளிவிடக்கூடாது. அவர்களையும் ஒருமனப்பாட்டிற்குள் கொண்டு வர நாம் செயல்பட வேண்டும். இது நம்முடைய சுயபெலத்தினால் ஒருக்காலும் முடியாது. ஒருமனப்பாட்டிற்காக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்போது தேவனுடைய கரம் ஒருமனப்படுத்தும்.
உங்கள் குடும்பத்தின் ஒருமனப்பாட்டிற்காக நீங்கள் தான் ஜெபிக்க முடியும். ஆண்டவர் ஒருமுகப்படுத்தும் வரைக்கும் ஜெபியுங்கள். நிச்சயம் கர்த்தர் ஒருமனப்பாட்டை கட்டளையிட்டு நீங்கள் எதிர்பார்க்கும் அற்புதங்களைக் காண கிருபை செய்வார்.
‘அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது’. (அப்.4:31)
ஏற்றுக்கொள்ளுங்கள்
‘ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்’. (ரோமர்-15:7)
நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கலாம். இரட்சிப்பின் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். ஜெபிக்கிறவர்களாக இருக்கலாம். ஆனாலும் ஏன் ஆண்டவர் எனக்கு அற்புதம் செய்யவில்லை? என்பது தானே உங்களுடைய இருதயத்தின் பாரம்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டு மனம் திரும்பியது, இயேசுவை விசுவாசிப்பது எல்லாமே உண்மைதான். ஆனால் அற்புதத்திற்கு தடையாயிருக்கிற காரியங்களை நீங்கள் சீர்படுத்த வேண்டும்.
முதலாவது உங்களுக்குரியவர்களை (கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்) பெயரளவில் அல்ல மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை நடத்துகிறவர்களையும் (தலைவர்கள். அதிகாரிகள்) அங்கீகரித்து அவர்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
மேலும், எபே.4:2 சொல்லுகிறபடி, ‘அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான சகல வசதிகளை செய்து கொடுத்தும் அவர்களிடத்தில் நீங்கள் அன்பில்லாதவர்களாய் நடந்தால், அதை ஆண்டவர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள். அது அநேக அற்புதங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்’.
எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்’ என்ற (கலா.6:2) வசனத்தின்படி இயேசு ராஜாவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். தடைப்பட்ட அற்புதங்கள் உங்களைத் தேடிவரும் என்பது நிச்சயமாகும். ஆகவே மேற்கண்ட ஆலோசனைகளுக்கு மனப்பூர்வமாய் அர்ப்பணியுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்.
சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
ஏகசிந்தை
‘ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்் மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்’. (ரோமர் 12:16)
உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏக சிந்தை மிக முக்கியமானது. அற்புதங்களுக்கு ஏகசிந்தை மிகவும் அவசியமான ஒன்று.
ஒரே வீட்டில் உள்ளவர்களின் சிந்தனை வேறுபட்டிருக்கும் என்றால், அங்கு ஆசீர்வாதங்கள் அவ்வளவு பெரிதாக இருக்காது. கணவன்- மனைவி, பிள்ளைகள் என அனைவரும் ஒரு காரியத்தைக் குறித்து இணைந்து சிந்தித்து செயல்பட்டால், நிச்சயம் ஆண்டவரும் அங்கு கிரியை செய்வார்.
நம்முடைய குடும்பத்தின் நிலைமையை சாத்தான் அறிந்து, பலவிதமான எதிர்மறையான எண்ணங்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவருக்குள் ஏவி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்வான். எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருந்து ஆண்டவரை சார்ந்து கொள்வது முக்கியமானதாகும்.
‘ஏகசிந்தை என்ற உன்னதமான குணத்திற்காக ஜெபம் பண்ணுங்கள். நிச்சயம் இக்கிருபையை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அற்புதங்களைக் காண்பீர்கள்’ என்று 2.கொரி.13:11 கூறுகிறது.
ஒருமனப்பாடு
‘யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும், பிரபுக்களும் கட்டளையிட்ட பிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று’. (2.நாளா.30:12)
அற்புதங்களை நாம் தேடுவதற்கு ஒருமனப்பாடு மிகமிக முக்கியம். ஏனெனில் தன்னிச்சையாக செயல்படுகிற அநேக தேவனுடைய பிள்ளைகள் ஒருமனப்பாடு என்ற நல்ல காரியத்தைக் குறித்து யோசிப்பதேஇல்லை.
இயேசு இப்படி சொல்கிறார், ‘அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’. (மத். 18:19)
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் விசுவாசமும் ஜெபமும் இருந்து, மற்றவர்களுக்குள் விசுவாச ஜெபம் குறைவாக இருக்குமென்றால் அவர்களைத் தள்ளிவிடக்கூடாது. அவர்களையும் ஒருமனப்பாட்டிற்குள் கொண்டு வர நாம் செயல்பட வேண்டும். இது நம்முடைய சுயபெலத்தினால் ஒருக்காலும் முடியாது. ஒருமனப்பாட்டிற்காக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்போது தேவனுடைய கரம் ஒருமனப்படுத்தும்.
உங்கள் குடும்பத்தின் ஒருமனப்பாட்டிற்காக நீங்கள் தான் ஜெபிக்க முடியும். ஆண்டவர் ஒருமுகப்படுத்தும் வரைக்கும் ஜெபியுங்கள். நிச்சயம் கர்த்தர் ஒருமனப்பாட்டை கட்டளையிட்டு நீங்கள் எதிர்பார்க்கும் அற்புதங்களைக் காண கிருபை செய்வார்.
‘அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது’. (அப்.4:31)
ஏற்றுக்கொள்ளுங்கள்
‘ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்’. (ரோமர்-15:7)
நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கலாம். இரட்சிப்பின் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். ஜெபிக்கிறவர்களாக இருக்கலாம். ஆனாலும் ஏன் ஆண்டவர் எனக்கு அற்புதம் செய்யவில்லை? என்பது தானே உங்களுடைய இருதயத்தின் பாரம்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டு மனம் திரும்பியது, இயேசுவை விசுவாசிப்பது எல்லாமே உண்மைதான். ஆனால் அற்புதத்திற்கு தடையாயிருக்கிற காரியங்களை நீங்கள் சீர்படுத்த வேண்டும்.
முதலாவது உங்களுக்குரியவர்களை (கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்) பெயரளவில் அல்ல மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை நடத்துகிறவர்களையும் (தலைவர்கள். அதிகாரிகள்) அங்கீகரித்து அவர்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
மேலும், எபே.4:2 சொல்லுகிறபடி, ‘அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான சகல வசதிகளை செய்து கொடுத்தும் அவர்களிடத்தில் நீங்கள் அன்பில்லாதவர்களாய் நடந்தால், அதை ஆண்டவர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள். அது அநேக அற்புதங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்’.
எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்’ என்ற (கலா.6:2) வசனத்தின்படி இயேசு ராஜாவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். தடைப்பட்ட அற்புதங்கள் உங்களைத் தேடிவரும் என்பது நிச்சயமாகும். ஆகவே மேற்கண்ட ஆலோசனைகளுக்கு மனப்பூர்வமாய் அர்ப்பணியுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்.
சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
சட்டங்களுக்கு மேலானது அன்பு என்பதையும், பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதையும், மன்னிப்பு பெற்றபின் பாவம் செய்யாத உறுதி வேண்டும் என்பதையும் இயேசு உணர்த்தியதை பார்க்கலாம்.
இயேசு ஆலய வாசலில் அமர்ந்து மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பெரும் சலசலப்பு. பலர் சேர்ந்து ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் தள்ளினார்கள். ஆடைகள் அலங்கோலமாய், தலைமுடி ஒழுங்கில்லாமல் அலைய அவள் உதடுகளில் வழியும் ரத்தத்தோடு இயேசுவின் முன்னால் வந்து விழுந்தாள்.
‘போதகரே... இந்தப் பெண் விபசாரத்தில் பிடிபட்ட பெண்...’ ஒருவர் ஆரம்பித்து வைத்தார்.
‘இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்...’ இன்னொருவர் அதைத் தொடர்ந்தார்.
‘இதை நாங்களாகச் சொல்லவில்லை. நீங்கள் மதிக்கும் மறைநூல் தான் சொல்கிறது. அதுவும் மோசே தான் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறீர்?’ சிலர் அதை முடித்து வைத்தார்கள்.
இயேசுவை நோக்கி ஒரு முக்கியமான கண்ணியை விரித்து வைத்த திருப்தி அவர்களுக்கு. இயேசு ஓய்வு நாளில் கூட குணமாக்குபவர், எனவே இந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் இருக்க அவரால் முடியாது.
ஆனால் அவர் அப்படிக் காப்பாற்றினால் சட்டத்தை மீறுகிறார் என்பது இந்த ஆலய முற்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விடும். ரோமர்களுக்கு மட்டுமே அப்போது ஒருவரை கல்லால் எறிந்து கொல்லும் உரிமை இருந்தது. இயேசு பெண்ணைக் கொல்ல அனுமதியளித்தால் அவரது கருணை பிம்பமும் உடையும், ரோமருக்கு எதிரான குற்றமும் சேரும். எந்த பக்கம் போனாலும் தோல்வி இயேசுவுக்கே. வந்தவர்கள் ஆவலுடன் இயேசுவின் பதிலுக்காக காத்திருந்தார்கள்.
இயேசு பதில் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு கூடியிருந்த மக்களின் சிந்தனை தெரிந்திருந்தது. ஏன் அந்தப் பெண்ணை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருந்தது.
‘நாங்கள் உம் முன்னிலையிலேயே இவளைக் கல்லால் எறிந்து கொல்லப் போகிறோம். இவள் பாவம் செய்தவள்...’ இயேசு எழுதுவதைத் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் கத்தினார்கள்.
இயேசு நிமிர்ந்து பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கொலைவெறி. கைகளில் கற்கள். விபசாரத் தவறுக்காக ஒரு பெண்ணை கொண்டுவந்திருந்தார்களே தவிர, அந்த பாவத்தைப் பகிர்ந்து கொண்ட அல்லது அதற்கு ஏதுவான ஆளைக் காணோம்.
இயேசு மவுனம் கலைத்தார். ‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்’ சொல்லிய இயேசு மீண்டும் தரையில் எழுதத் துவங்கினார்.
ஒருவர் கல்லை எடுத்துக் கொண்டு முன்னே வந்தார். ‘ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம்...’ இயேசுவின் வார்த்தைகள் அவருடைய காதில் ஒலித்திருக்க வேண்டும் கல்லைப் போட்டு விட்டுப் பின் வாங்கினார்.
இன்னொருவர் கல்லுடன் முன்னேறினார். இயேசு எழுதிக் கொண்டிருந்த எழுத்துக்களில் அவர் செய்த பாவங்களின் பட்டியல் தெரிந்திருக்கவேண்டும். அதிர்ந்து போய் பின் வாங்கி கல்லைப் போட்டு விட்டுப் போனார்.
எல்லோரும் சில வினாடிகள் யோசித்தனர். பாவம் இல்லாதவனாய் அங்கே யாரும் இல்லை. அவர்கள் முதியவர் முதல் இளையவர் வரை ஒருவர் பின் ஒருவராகக் கற்களைப் போட்டு விட்டு சென்று விட்டார்கள். கடைசியில் இயேசுவும், அந்தப் பெண்ணும் மட்டுமே நின்றார்கள்.
‘பெண்ணே அவர்கள் எங்கே? உன் மீது யாரும் கல் எறியவில்லையா?’ இயேசு கேட்டார்.
‘இல்லை ஐயா...’ அவள் கண்ணீருடன் சொல்லிவிட்டு இயேசுவின் பாதங்களில் விழுந்தாள்.
‘நானும் உன்னைத் தீர்ப்பிட மாட்டேன். நீ போகலாம். இனிமேல் பாவம் செய்யாதே!’ இயேசு சொல்ல, அந்தப் பெண் கண்களில் கண்ணீரும் நன்றியும் வழிய அவ்விடம் விட்டு அகன்றாள்.
மிகச் சிக்கலான ஒரு வழக்கை மிகவும் எளிதாகத் தீர்த்த இயேசுவின் ஞானத்தைக் கண்டு போதனை கேட்க வந்திருந்த மக்கள் சிலிர்த்தார்கள்.
நமது பாவங்களின் பயனாக நாம் அழிவைச் சந்திக்க வேண்டும் என சாத்தான் விரும்புகிறான்.தொடர்ந்து நம்மீது அவன் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் இறைவனோ நம் பக்கம் இருந்து, நம்மை மீட்டு அவருடைய பாதையில் கொண்டு வருவதற்காக விரும்புகிறார்.
இயேசு பாவங்களை வெறுத்தார். அவர் பாவத்தின் நிழலைக் கூட மிதிக்கவில்லை. ஆனால் பாவிகளை நேசித்தார். விபசாரப் பாவத்தை விட அதிகமாய், ‘தன்னை உயர்ந்தவராகவும் பிறரை இழிவானவராகவும் பார்க்கும்’ பரிசேய மனநிலையை வெறுத்தார்.
சட்டங்களுக்கு மேலானது அன்பு என்பதையும், பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதையும், மன்னிப்பு பெற்றபின் பாவம் செய்யாத உறுதி வேண்டும் என்பதையும் இயேசு அந்த நிகழ்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
‘போதகரே... இந்தப் பெண் விபசாரத்தில் பிடிபட்ட பெண்...’ ஒருவர் ஆரம்பித்து வைத்தார்.
‘இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்...’ இன்னொருவர் அதைத் தொடர்ந்தார்.
‘இதை நாங்களாகச் சொல்லவில்லை. நீங்கள் மதிக்கும் மறைநூல் தான் சொல்கிறது. அதுவும் மோசே தான் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறீர்?’ சிலர் அதை முடித்து வைத்தார்கள்.
இயேசுவை நோக்கி ஒரு முக்கியமான கண்ணியை விரித்து வைத்த திருப்தி அவர்களுக்கு. இயேசு ஓய்வு நாளில் கூட குணமாக்குபவர், எனவே இந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் இருக்க அவரால் முடியாது.
ஆனால் அவர் அப்படிக் காப்பாற்றினால் சட்டத்தை மீறுகிறார் என்பது இந்த ஆலய முற்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விடும். ரோமர்களுக்கு மட்டுமே அப்போது ஒருவரை கல்லால் எறிந்து கொல்லும் உரிமை இருந்தது. இயேசு பெண்ணைக் கொல்ல அனுமதியளித்தால் அவரது கருணை பிம்பமும் உடையும், ரோமருக்கு எதிரான குற்றமும் சேரும். எந்த பக்கம் போனாலும் தோல்வி இயேசுவுக்கே. வந்தவர்கள் ஆவலுடன் இயேசுவின் பதிலுக்காக காத்திருந்தார்கள்.
இயேசு பதில் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு கூடியிருந்த மக்களின் சிந்தனை தெரிந்திருந்தது. ஏன் அந்தப் பெண்ணை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருந்தது.
‘நாங்கள் உம் முன்னிலையிலேயே இவளைக் கல்லால் எறிந்து கொல்லப் போகிறோம். இவள் பாவம் செய்தவள்...’ இயேசு எழுதுவதைத் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் கத்தினார்கள்.
இயேசு நிமிர்ந்து பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கொலைவெறி. கைகளில் கற்கள். விபசாரத் தவறுக்காக ஒரு பெண்ணை கொண்டுவந்திருந்தார்களே தவிர, அந்த பாவத்தைப் பகிர்ந்து கொண்ட அல்லது அதற்கு ஏதுவான ஆளைக் காணோம்.
இயேசு மவுனம் கலைத்தார். ‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்’ சொல்லிய இயேசு மீண்டும் தரையில் எழுதத் துவங்கினார்.
ஒருவர் கல்லை எடுத்துக் கொண்டு முன்னே வந்தார். ‘ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம்...’ இயேசுவின் வார்த்தைகள் அவருடைய காதில் ஒலித்திருக்க வேண்டும் கல்லைப் போட்டு விட்டுப் பின் வாங்கினார்.
இன்னொருவர் கல்லுடன் முன்னேறினார். இயேசு எழுதிக் கொண்டிருந்த எழுத்துக்களில் அவர் செய்த பாவங்களின் பட்டியல் தெரிந்திருக்கவேண்டும். அதிர்ந்து போய் பின் வாங்கி கல்லைப் போட்டு விட்டுப் போனார்.
எல்லோரும் சில வினாடிகள் யோசித்தனர். பாவம் இல்லாதவனாய் அங்கே யாரும் இல்லை. அவர்கள் முதியவர் முதல் இளையவர் வரை ஒருவர் பின் ஒருவராகக் கற்களைப் போட்டு விட்டு சென்று விட்டார்கள். கடைசியில் இயேசுவும், அந்தப் பெண்ணும் மட்டுமே நின்றார்கள்.
‘பெண்ணே அவர்கள் எங்கே? உன் மீது யாரும் கல் எறியவில்லையா?’ இயேசு கேட்டார்.
‘இல்லை ஐயா...’ அவள் கண்ணீருடன் சொல்லிவிட்டு இயேசுவின் பாதங்களில் விழுந்தாள்.
‘நானும் உன்னைத் தீர்ப்பிட மாட்டேன். நீ போகலாம். இனிமேல் பாவம் செய்யாதே!’ இயேசு சொல்ல, அந்தப் பெண் கண்களில் கண்ணீரும் நன்றியும் வழிய அவ்விடம் விட்டு அகன்றாள்.
மிகச் சிக்கலான ஒரு வழக்கை மிகவும் எளிதாகத் தீர்த்த இயேசுவின் ஞானத்தைக் கண்டு போதனை கேட்க வந்திருந்த மக்கள் சிலிர்த்தார்கள்.
நமது பாவங்களின் பயனாக நாம் அழிவைச் சந்திக்க வேண்டும் என சாத்தான் விரும்புகிறான்.தொடர்ந்து நம்மீது அவன் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் இறைவனோ நம் பக்கம் இருந்து, நம்மை மீட்டு அவருடைய பாதையில் கொண்டு வருவதற்காக விரும்புகிறார்.
இயேசு பாவங்களை வெறுத்தார். அவர் பாவத்தின் நிழலைக் கூட மிதிக்கவில்லை. ஆனால் பாவிகளை நேசித்தார். விபசாரப் பாவத்தை விட அதிகமாய், ‘தன்னை உயர்ந்தவராகவும் பிறரை இழிவானவராகவும் பார்க்கும்’ பரிசேய மனநிலையை வெறுத்தார்.
சட்டங்களுக்கு மேலானது அன்பு என்பதையும், பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதையும், மன்னிப்பு பெற்றபின் பாவம் செய்யாத உறுதி வேண்டும் என்பதையும் இயேசு அந்த நிகழ்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
காமநாயக்கன்பட்டி பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன் பட்டியில் புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேம்பாவணி என்ற காவியம் எழுதிய வீரமாமுனிவர் 7-வது பங்கு தந்தையாக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபம் போர்ச்சுகல் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது.
சிறப்புமிக்க இந்த ஆலயத்தினை கோவில்பட்டி மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து வணங்கிவருகின்றனர். இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா கடந்த 6- ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விண்ணேற்பு பெருவிழா தேர் பவனி அதிகாலையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ், வாராணாசி மறை மாவட்ட பங்குத்தந்தை யூஜின்ஜோசப் ஆகியோர் தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நற்கருணை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதன் பின்னர் வாண வேடிக்கையுடன் புனித பரலோகமாதா தேர்பவனி நடைபெற்றது.
பின்னர் மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள், உப்பு போன்றவற்றை கொண்டு வந்து வணங்கினர். மேலும் பக்தர்கள் தங்கள் நேர்ச்சையான கும்பிடு சேவையை நிறைவேற்றினர். இந்த விழாவினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான மக்கள் வந்து இருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில்பட்டியில் இருந்து விடிய,விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவில்பட்டி போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து இருந்தனர்.
பூண்டி மாதா பேராலயம் தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
பூண்டி மாதா பேராலயம் (Poondi Madha Basilica) தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
வரலாறு :
(1714-1718) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சமயத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது.
1955-ல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார்.
அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியர் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999-ல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
திருச்சிலுவை :
பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் :
பூண்டி மாதா கோவில் வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அவர்கள் சாட்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தங்கும் வசதிகள் :
கோவில் நிர்வாகத்தின் மூலம் மிக குறைந்த விலையில் தங்குமிடமும் உணவகமும் பக்தர்களின் வசதிக்காக நடத்தப்படுகிறது. 1 வது மற்றும் 3வது சனிக்கிழமைகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேர இலவச குடி தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் உண்டு. மிகப்பெரிய தானுந்து (கார்), விசையுந்து (பைக்கு) களுக்கான நிறுத்துமிட வசதியும் உண்டு. இலவச தங்குமிடமும் உண்டு. மிக குறைந்த வாடகைக்கு திருமண மண்டபமும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆராதனைக்கூடம் :
தனிமையில் பிரார்த்தனை செய்ய விரும்புவோர்க்கென பூண்டி மாதா பேராலயத்தில் அமைதியான ஆராதனைக்கூடம் ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பூண்டி மாதா பேராலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் இருந்து மாடிக்குச் சென்று பிரார்த்திக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் :
அருகில் உள்ள பேருந்து நிலையம் திருக்காட்டுப்பள்ளி. அருகில் உள்ள இரயில் நிலையம் பூதலூர். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும் திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும் தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம்.
வரலாறு :
(1714-1718) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சமயத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது.
1955-ல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார்.
அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியர் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999-ல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
திருச்சிலுவை :
பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் :
பூண்டி மாதா கோவில் வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அவர்கள் சாட்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தங்கும் வசதிகள் :
கோவில் நிர்வாகத்தின் மூலம் மிக குறைந்த விலையில் தங்குமிடமும் உணவகமும் பக்தர்களின் வசதிக்காக நடத்தப்படுகிறது. 1 வது மற்றும் 3வது சனிக்கிழமைகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேர இலவச குடி தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் உண்டு. மிகப்பெரிய தானுந்து (கார்), விசையுந்து (பைக்கு) களுக்கான நிறுத்துமிட வசதியும் உண்டு. இலவச தங்குமிடமும் உண்டு. மிக குறைந்த வாடகைக்கு திருமண மண்டபமும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆராதனைக்கூடம் :
தனிமையில் பிரார்த்தனை செய்ய விரும்புவோர்க்கென பூண்டி மாதா பேராலயத்தில் அமைதியான ஆராதனைக்கூடம் ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பூண்டி மாதா பேராலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் இருந்து மாடிக்குச் சென்று பிரார்த்திக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் :
அருகில் உள்ள பேருந்து நிலையம் திருக்காட்டுப்பள்ளி. அருகில் உள்ள இரயில் நிலையம் பூதலூர். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும் திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும் தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம்.
காரைக்காலில் தூயதேற்றரவு அன்னை ஆலயத்தின் முக்கிய நிகழ்வான பெரியதேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மும்மத வழிபாட்டுத் தலங்களுள் தூயதேற்றரவு அன்னை ஆலயமும் ஒன்று. காரைக்கால், புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தபோது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை ‘ஆண்டுத் திருவிழா’ கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ‘ஆண்டுத் திருவிழா’ கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபவழிபாடு மற்றும் சிறியதேர் பவனியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலையில் மின் அலங்கார பெரியதேர் பவனியும் நடைபெற்றது.
தேர்பவனியை ஆலய பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ், சமாதானக் கமிட்டி உறுப்பினர்கள், துணை பங்கு குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6-30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் இந்த ஆண்டு ‘ஆண்டுத் திருவிழா’ நிறைவடைகிறது.
இந்த ஆண்டு ‘ஆண்டுத் திருவிழா’ கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபவழிபாடு மற்றும் சிறியதேர் பவனியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலையில் மின் அலங்கார பெரியதேர் பவனியும் நடைபெற்றது.
தேர்பவனியை ஆலய பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ், சமாதானக் கமிட்டி உறுப்பினர்கள், துணை பங்கு குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6-30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் இந்த ஆண்டு ‘ஆண்டுத் திருவிழா’ நிறைவடைகிறது.






