என் மலர்
கிறித்தவம்
இயேசுவின் படுகொலைக்காக ரோம அரசும், யூத சமயமும் கைகோர்த்துக் கொண்டன. சிலுவை என்பது விழுங்கும் நிழலல்ல, வாழ்வளிக்கும் நிஜம்.
இறைமகன் இயேசு நம்மை பாவங்களிலிருந்து மீட்க மனிதனாக வந்து சிலுவையில் பலியானார். அவரை மீட்பராக ஏற்றுக்கொள்ளும் அனைவரும் அவருடைய மீட்பில் இணைந்து கொள்கின்றனர். அவரை நம்பும் யாரையும் அவர் தள்ளி விடுவதில்லை.
இயேசுவின் மண்ணுலக நாட்களின் இறுதியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அன்றைக்கு அரசியலில் முன்னணியில் நின்ற ரோம அரசாங்கமும், அறநெறிச் சமயத்தில் உயர்ந்து நின்ற யூத சமூகமும் இணைந்தே இயேசுவின் மீது பழி சுமத்தின. அதன் மூலம் தங்களுடைய இழிநிலையை அவர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
இயேசுவின் படுகொலைக்காக ரோம அரசும், யூத சமயமும் கைகோர்த்துக் கொண்டன. இந்த மரணதண்டனைக்காக இயேசு செய்த குற்றங்கள் என்ன? முக்கியமாக நான்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
1. ஆலயம் சார்ந்த குற்றச்சாட்டு: புனிதமான ஆலயத்துக்கு எதிராக இயேசு பேசியதாய் கட்டப்பட்ட கதைகள் முதலாவது குற்றச்சாட்டாய் வந்து விழுந்தன. ‘ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் கட்டுவேன் என்று சொன்னார்’ என்பது அந்தக் குற்றச்சாட்டு.
‘மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்’ என்று அவருக்கு எதிராகச் சிலர் பொய்ச் சான்று கூறினர் (மார்க் 14 :57,58 ).
அது பொய் குற்றச்சாட்டு என்பதை பைபிள் நமக்குச் சொல்கிறது.
2. ஆள் தன்மையின் மீதான குற்றச்சாட்டு: இரண்டாவதாய் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது அவருடைய ஆள் தன்மையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ‘இவர் கடவுளின் மகனாகத் தன்னைக் கூறிக்கொண்டார்’ என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.
இயேசு தன்னைக் கடவுளின் மகன் என்று சொன்னதால் அவர் கடவுளைப் பழித்துரைக்கிறார் எனும் கடுமையான குற்றச்சாட்டுக்குள் தள்ளப்பட்டார்.
3. மக்களை சீரழித்தார் எனும் குற்றச்சாட்டு: ‘மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான்’ (லூக்கா 23:14) என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. இயேசுவின் பின்னால் மக்கள் அணி திரள்வதைக் கண்டு அச்சப்பட்ட மதவாதிகள், இயேசு மக்களை கலகத்துக்குத் தூண்டி விடுகிறார் என குற்றம் சாட்டினர்.
உண்மையில் இயேசு மக்களைக் கலகத்துக்குத் தூண்டவில்லை. ஏழை எளிய மக்களின் பக்கமாக நின்றார். அதற்காக பரிசேயர்களையும், மறை நூல் வல்லுநர் களையும் எதிர்த்தார்.
4. அரசுக்கு எதிரானவர் எனும் குற்றச்சாட்டு: இயேசு தன்னை அரசர் என்றும், அரசர்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றும் சொன்னதாய் புனையப்பட்ட பொய் நான்காவது குற்றச்சாட்டு. ‘சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான்’ (லூக்கா 23:2) என்கிறது விவிலியம்.
உண்மையில் இயேசு, ‘கடவுளுக்குரியதை கடவுளுக்கும், அரசருக்குரியதை அரசருக்கும் கொடுங்கள்’ என்று சொன்னவர். அவரே வரி செலுத்தினார் என்பதையும் விவிலியம் நமக்குக் காட்டுகிறது.
இயேசுவின் மீது இப்படி அடுக்கடுக்காய் குற்றம் சாட்டியவர்கள் முக்கியமாக மூன்று குழுவினர். ஒன்று, மக்களின் மூப்பர்கள். இரண்டாவது தலைமைக் குருக்கள். மூன்றாவது மறை நூல் அறிஞர்கள். சுருக்கமாக, மதவாதிகள் என்று சொல்லலாம்.
இயேசுவின் மீது வெறுப்பு கொண்டு தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகிறார்கள் என்பதை அரசு அறிந்திருந்தது.
‘நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை, மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை, இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்’ என்பதே அரசின் நிலைப்பாடாய் இருந்தது.
ஆனாலும் இறுதியில் இயேசு படுகொலை செய்யப்பட்டார். அதை எதிரிகள் வெற்றி என கொண்டாடினர், ஆனால் அதுவே இறைவனின் சித்தம் என்பதை அவர்கள் அறியவில்லை.
இது ஏதோ அன்று மட்டும் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. நமது வாழ்க்கையின் பயணத்தில் இந்த நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது.
‘நான் இன்னும் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன், முத்தத்தால் மனுமகனைக் காட்டிக் கொடுத்த யூதாஸைப் போல’.
“நான் இன்னும் இயேசுவை மறுதலித்துக் கொண்டே இருக்கிறேன். உயிருக்குப் பயந்து ‘இவரை அறியேன்’ என்ற சீடர் சீமோனைப் போல”.
‘நான் இன்றும் அவரை விட்டு விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன். படைக்குப் பயந்து சிதறி ஓடிய இயேசுவின் சீடர்களைப் போல. நிழலை நிஜம் என நம்பி பாவத்தினால் இறந்து கொண்டிருக்கிறேன்’.
ஒரு கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று பாலை நிலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் உக்கிர தாண்டவம் ஆடியது. அந்த வெப்பத்தின் அனலை பாம்பினால் தாங்க முடியவில்லை. மணல் அதன் உடலைப் பொசுக்கியது. எனவே அது தனது வாலை மட்டும் பூமியில் ஊன்றி முழு உடலையும் அந்தரத்திலே நிறுத்தியது. கொஞ்சம் தன்னை அது ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு தவளை வந்தது.
வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாத தவளை நிழல் தேடி அலைந்தது. அதன் கண்களுக்குத் தென்பட்டது பாம்பின் நிழல். நிழல் கிடைத்துவிட்டதே எனும் ஆனந்தத் தில் அது பாம்பின் நிழலிலே இளைப்பாற அமர்ந்தது. தன்னைத் தேடி வந்த விருந்தை பாம்பு சும்மா விடுமா? அலேக்காக விழுங்கி பசியைத் தீர்த்துக் கொண்டது.
பாவம் என்பது நிஜத்தை விழுங்கும் நிழல்.
‘இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்’ (ரோமர் 12 :2) என்கிறது பைபிள்.
சிலுவை என்பது விழுங்கும் நிழலல்ல, வாழ்வளிக்கும் நிஜம்.
இந்த உண்மையை உணர்ந்து வாழ்வோம். இறைஆசீர் உங்களை நிரப்பட்டும்.
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
இயேசுவின் மண்ணுலக நாட்களின் இறுதியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அன்றைக்கு அரசியலில் முன்னணியில் நின்ற ரோம அரசாங்கமும், அறநெறிச் சமயத்தில் உயர்ந்து நின்ற யூத சமூகமும் இணைந்தே இயேசுவின் மீது பழி சுமத்தின. அதன் மூலம் தங்களுடைய இழிநிலையை அவர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
இயேசுவின் படுகொலைக்காக ரோம அரசும், யூத சமயமும் கைகோர்த்துக் கொண்டன. இந்த மரணதண்டனைக்காக இயேசு செய்த குற்றங்கள் என்ன? முக்கியமாக நான்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
1. ஆலயம் சார்ந்த குற்றச்சாட்டு: புனிதமான ஆலயத்துக்கு எதிராக இயேசு பேசியதாய் கட்டப்பட்ட கதைகள் முதலாவது குற்றச்சாட்டாய் வந்து விழுந்தன. ‘ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் கட்டுவேன் என்று சொன்னார்’ என்பது அந்தக் குற்றச்சாட்டு.
‘மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்’ என்று அவருக்கு எதிராகச் சிலர் பொய்ச் சான்று கூறினர் (மார்க் 14 :57,58 ).
அது பொய் குற்றச்சாட்டு என்பதை பைபிள் நமக்குச் சொல்கிறது.
2. ஆள் தன்மையின் மீதான குற்றச்சாட்டு: இரண்டாவதாய் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது அவருடைய ஆள் தன்மையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ‘இவர் கடவுளின் மகனாகத் தன்னைக் கூறிக்கொண்டார்’ என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.
இயேசு தன்னைக் கடவுளின் மகன் என்று சொன்னதால் அவர் கடவுளைப் பழித்துரைக்கிறார் எனும் கடுமையான குற்றச்சாட்டுக்குள் தள்ளப்பட்டார்.
3. மக்களை சீரழித்தார் எனும் குற்றச்சாட்டு: ‘மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான்’ (லூக்கா 23:14) என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. இயேசுவின் பின்னால் மக்கள் அணி திரள்வதைக் கண்டு அச்சப்பட்ட மதவாதிகள், இயேசு மக்களை கலகத்துக்குத் தூண்டி விடுகிறார் என குற்றம் சாட்டினர்.
உண்மையில் இயேசு மக்களைக் கலகத்துக்குத் தூண்டவில்லை. ஏழை எளிய மக்களின் பக்கமாக நின்றார். அதற்காக பரிசேயர்களையும், மறை நூல் வல்லுநர் களையும் எதிர்த்தார்.
4. அரசுக்கு எதிரானவர் எனும் குற்றச்சாட்டு: இயேசு தன்னை அரசர் என்றும், அரசர்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றும் சொன்னதாய் புனையப்பட்ட பொய் நான்காவது குற்றச்சாட்டு. ‘சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான்’ (லூக்கா 23:2) என்கிறது விவிலியம்.
உண்மையில் இயேசு, ‘கடவுளுக்குரியதை கடவுளுக்கும், அரசருக்குரியதை அரசருக்கும் கொடுங்கள்’ என்று சொன்னவர். அவரே வரி செலுத்தினார் என்பதையும் விவிலியம் நமக்குக் காட்டுகிறது.
இயேசுவின் மீது இப்படி அடுக்கடுக்காய் குற்றம் சாட்டியவர்கள் முக்கியமாக மூன்று குழுவினர். ஒன்று, மக்களின் மூப்பர்கள். இரண்டாவது தலைமைக் குருக்கள். மூன்றாவது மறை நூல் அறிஞர்கள். சுருக்கமாக, மதவாதிகள் என்று சொல்லலாம்.
இயேசுவின் மீது வெறுப்பு கொண்டு தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகிறார்கள் என்பதை அரசு அறிந்திருந்தது.
‘நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை, மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை, இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்’ என்பதே அரசின் நிலைப்பாடாய் இருந்தது.
ஆனாலும் இறுதியில் இயேசு படுகொலை செய்யப்பட்டார். அதை எதிரிகள் வெற்றி என கொண்டாடினர், ஆனால் அதுவே இறைவனின் சித்தம் என்பதை அவர்கள் அறியவில்லை.
இது ஏதோ அன்று மட்டும் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. நமது வாழ்க்கையின் பயணத்தில் இந்த நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது.
‘நான் இன்னும் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன், முத்தத்தால் மனுமகனைக் காட்டிக் கொடுத்த யூதாஸைப் போல’.
“நான் இன்னும் இயேசுவை மறுதலித்துக் கொண்டே இருக்கிறேன். உயிருக்குப் பயந்து ‘இவரை அறியேன்’ என்ற சீடர் சீமோனைப் போல”.
‘நான் இன்றும் அவரை விட்டு விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன். படைக்குப் பயந்து சிதறி ஓடிய இயேசுவின் சீடர்களைப் போல. நிழலை நிஜம் என நம்பி பாவத்தினால் இறந்து கொண்டிருக்கிறேன்’.
ஒரு கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று பாலை நிலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் உக்கிர தாண்டவம் ஆடியது. அந்த வெப்பத்தின் அனலை பாம்பினால் தாங்க முடியவில்லை. மணல் அதன் உடலைப் பொசுக்கியது. எனவே அது தனது வாலை மட்டும் பூமியில் ஊன்றி முழு உடலையும் அந்தரத்திலே நிறுத்தியது. கொஞ்சம் தன்னை அது ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு தவளை வந்தது.
வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாத தவளை நிழல் தேடி அலைந்தது. அதன் கண்களுக்குத் தென்பட்டது பாம்பின் நிழல். நிழல் கிடைத்துவிட்டதே எனும் ஆனந்தத் தில் அது பாம்பின் நிழலிலே இளைப்பாற அமர்ந்தது. தன்னைத் தேடி வந்த விருந்தை பாம்பு சும்மா விடுமா? அலேக்காக விழுங்கி பசியைத் தீர்த்துக் கொண்டது.
பாவம் என்பது நிஜத்தை விழுங்கும் நிழல்.
‘இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்’ (ரோமர் 12 :2) என்கிறது பைபிள்.
சிலுவை என்பது விழுங்கும் நிழலல்ல, வாழ்வளிக்கும் நிஜம்.
இந்த உண்மையை உணர்ந்து வாழ்வோம். இறைஆசீர் உங்களை நிரப்பட்டும்.
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
இயேசுவைக் காணவும், அவருடைய போதனைகளைக் கேட்கவும், அவரால் சுகம் பெறவும் எப்போதும் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும்.
இயேசுவைக் காணவும், அவருடைய போதனைகளைக் கேட்கவும், அவரால் சுகம் பெறவும் எப்போதும் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும்.
ஒருமுறை இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், அவர்களுக்குப் போதிப்பதுமாய் இருந்தார். அந்த கூட்டத்தினரிடையே எருசலேம் தேவாலய உளவாளிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் இயேசுவின் மேல் பழிசுமத்த தருணம் பார்த்துக் காத்திருந்தவர்கள்.
வீட்டு வாசல், சுற்றுப்புறம் எங்கும் மக்கள் திரள். ஏராளமான நோயாளிகள் அந்தக் கூட்டத்தில் வந்திருந்தார்கள். எப்படியாவது இயேசுவின் நோய் தீர்க்கும் கரம் தன் மேல் பட்டால் தம்முடைய வாழ்நாள் கவலை மறைந்து விடுமே என்று அவர்கள் காத்திருந்தார்கள்.
அந்த ஊரில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனும் இருந்தார். அவரால் நடக்கவும் முடியாது, அசையவும் முடியாது. ஏன் பேசக் கூட முடியாது. படுக்கையே உலகமாக வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். அவரும் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வரத்தைக் குறித்தும் அறிந்திருந்தார்.
அவருடைய மனைவியும் நான்கு மகன்களுமாக அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு கலிலேயா முழுவதும் அலைந்தார்கள். யாருடைய மருத்துவக் கரமும் அவரைக் குணப்படுத்தவில்லை. இயேசு கப்பர்நாகூமில் இருப்பதை அறிந்த அவர்கள் அவரை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு போக முடிவெடுத்தார்கள்.
நான்கு மகன்களும் அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, கண்ணீருடன் மனைவி அவர்களைப் பின் தொடர்ந்தாள். தன்னை இயேசுவிடம் கூட்டிச் சென்றால் சுகம் கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டை அடைந்தார்கள்.
வீட்டை அடைந்த அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி! வீடு மக்கள் கூட்டத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. தனிமனிதனாக வீட்டை நெருங்குவதே இயலாத நிலை. கட்டிலோடு வீட்டுக்குள் நுழைவதைப் பற்றி கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
அவர்கள் வீட்டின் பின்புறமாகச் சென்றார்கள். அந்த முடக்குவாதக் காரரைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வீட்டின் கூரையில் ஏறினார்கள். கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கினார்கள்.
அவரைக் கட்டிலோடு இயேசுவின் முன்னால் இறக்கினார்கள்.
அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு பிரமித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். பின் தனக்கு முன்னால் கட்டிலோடு கீழே இறக்கப்பட்ட அந்த மனிதனை நோக்கி, ‘மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார்.
இயேசு வழக்கமாக ‘குணம்பெறு என்றோ உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்றோ தான் சொல்வது வழக்கம். அவர் குணமாக்கும் போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இதுவரை சொன்னதில்லை. இப்போது தான் சொல்கிறார்.
மறைநூல் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள்.
‘இவன் ஏன் இப்படிப் பேசுகிறான். பாவங்களை மன்னிக்க இவன் யார்? பாவங்களைக் கடவுள் ஒருவர் தான் மன்னிக்க முடியும்’ அவர்கள் மனதில் எரிச்சலடைந்தார்கள்.
உளவாளிகளுக்கு ஒரு தகவல் கிடைத்து விட்டது. இயேசு தேவ நிந்தனை செய்கிறார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டவர், இவர் பாவங்களை மன்னிப்பதாகக் கூறி தன்னையும் கடவுளைப் போல காட்டிக் கொள்கிறார். இது சாவுக்குரிய பாவம். உளவாளிகள் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்தார்.
‘ஏன் உங்கள் உள்ளங்களில் அப்படி நினைக்கிறீர்கள்? எழுந்து படுக்கையைத் தூக்கிக் கொண்டு போ என்று இவரிடம் நான் சொல்லியிருக்க முடியும். அது எனக்கு மிகவும் எளிது. ஆனாலும் மானிட மகனுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறேன்’ என்றார்.
மானிட மகன்! இயேசுவின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த மறைநூல் அறிஞர்களுக்கு இன்னும் அதிர்ச்சி. ஏனென்றால் அவர்களுடைய பழைய இறைவாக்கினர்களில் ஒருவரான தானியேல் ‘மானிட மகன் வானத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வருவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இயேசுவின் மானிட மகன் பிரயோகம் இயேசு தன்னை தானியேல் தீர்க்க தரிசி சொன்ன கடவுளாகக் காட்டிக் கொள்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். ஏனென்றால் அங்கே இருந்த கூட்டத்தில் ஒருசிலரைத் தவிர அனைவரும் இயேசுவின் ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இயேசு முடக்குவாதக் காரரிடம் திரும்பி ‘நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்றார்.
அதுவரை உடல் அசைவில்லாமல் கிடந்த அவருடைய உடல் மெல்ல அசைந்தது. அவர் மெல்ல எழுந்தார். கூட்டம் ஸ்தம்பித்தது. அவர் கால்களைத் தரையில் ஊன்றினார். வலுவற்றுக் கிடந்த கால்கள் இப்போது சுயமாக நிற்கின்றன.
அவர் அந்த மக்கள் கூட்டத்துக்கு முன்பாகவே தன்னுடைய படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினார்.
இயேசு கடவுளின் மகன் எனும் இயேசுவின் வெளிப்படுத்துதல் மக்களை பரவசப்படுத்தியது.
ஒருமுறை இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், அவர்களுக்குப் போதிப்பதுமாய் இருந்தார். அந்த கூட்டத்தினரிடையே எருசலேம் தேவாலய உளவாளிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் இயேசுவின் மேல் பழிசுமத்த தருணம் பார்த்துக் காத்திருந்தவர்கள்.
வீட்டு வாசல், சுற்றுப்புறம் எங்கும் மக்கள் திரள். ஏராளமான நோயாளிகள் அந்தக் கூட்டத்தில் வந்திருந்தார்கள். எப்படியாவது இயேசுவின் நோய் தீர்க்கும் கரம் தன் மேல் பட்டால் தம்முடைய வாழ்நாள் கவலை மறைந்து விடுமே என்று அவர்கள் காத்திருந்தார்கள்.
அந்த ஊரில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனும் இருந்தார். அவரால் நடக்கவும் முடியாது, அசையவும் முடியாது. ஏன் பேசக் கூட முடியாது. படுக்கையே உலகமாக வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். அவரும் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வரத்தைக் குறித்தும் அறிந்திருந்தார்.
அவருடைய மனைவியும் நான்கு மகன்களுமாக அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு கலிலேயா முழுவதும் அலைந்தார்கள். யாருடைய மருத்துவக் கரமும் அவரைக் குணப்படுத்தவில்லை. இயேசு கப்பர்நாகூமில் இருப்பதை அறிந்த அவர்கள் அவரை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு போக முடிவெடுத்தார்கள்.
நான்கு மகன்களும் அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, கண்ணீருடன் மனைவி அவர்களைப் பின் தொடர்ந்தாள். தன்னை இயேசுவிடம் கூட்டிச் சென்றால் சுகம் கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டை அடைந்தார்கள்.
வீட்டை அடைந்த அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி! வீடு மக்கள் கூட்டத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. தனிமனிதனாக வீட்டை நெருங்குவதே இயலாத நிலை. கட்டிலோடு வீட்டுக்குள் நுழைவதைப் பற்றி கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
அவர்கள் வீட்டின் பின்புறமாகச் சென்றார்கள். அந்த முடக்குவாதக் காரரைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வீட்டின் கூரையில் ஏறினார்கள். கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கினார்கள்.
அவரைக் கட்டிலோடு இயேசுவின் முன்னால் இறக்கினார்கள்.
அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு பிரமித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். பின் தனக்கு முன்னால் கட்டிலோடு கீழே இறக்கப்பட்ட அந்த மனிதனை நோக்கி, ‘மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார்.
இயேசு வழக்கமாக ‘குணம்பெறு என்றோ உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்றோ தான் சொல்வது வழக்கம். அவர் குணமாக்கும் போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இதுவரை சொன்னதில்லை. இப்போது தான் சொல்கிறார்.
மறைநூல் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள்.
‘இவன் ஏன் இப்படிப் பேசுகிறான். பாவங்களை மன்னிக்க இவன் யார்? பாவங்களைக் கடவுள் ஒருவர் தான் மன்னிக்க முடியும்’ அவர்கள் மனதில் எரிச்சலடைந்தார்கள்.
உளவாளிகளுக்கு ஒரு தகவல் கிடைத்து விட்டது. இயேசு தேவ நிந்தனை செய்கிறார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டவர், இவர் பாவங்களை மன்னிப்பதாகக் கூறி தன்னையும் கடவுளைப் போல காட்டிக் கொள்கிறார். இது சாவுக்குரிய பாவம். உளவாளிகள் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்தார்.
‘ஏன் உங்கள் உள்ளங்களில் அப்படி நினைக்கிறீர்கள்? எழுந்து படுக்கையைத் தூக்கிக் கொண்டு போ என்று இவரிடம் நான் சொல்லியிருக்க முடியும். அது எனக்கு மிகவும் எளிது. ஆனாலும் மானிட மகனுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறேன்’ என்றார்.
மானிட மகன்! இயேசுவின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த மறைநூல் அறிஞர்களுக்கு இன்னும் அதிர்ச்சி. ஏனென்றால் அவர்களுடைய பழைய இறைவாக்கினர்களில் ஒருவரான தானியேல் ‘மானிட மகன் வானத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வருவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இயேசுவின் மானிட மகன் பிரயோகம் இயேசு தன்னை தானியேல் தீர்க்க தரிசி சொன்ன கடவுளாகக் காட்டிக் கொள்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். ஏனென்றால் அங்கே இருந்த கூட்டத்தில் ஒருசிலரைத் தவிர அனைவரும் இயேசுவின் ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இயேசு முடக்குவாதக் காரரிடம் திரும்பி ‘நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்றார்.
அதுவரை உடல் அசைவில்லாமல் கிடந்த அவருடைய உடல் மெல்ல அசைந்தது. அவர் மெல்ல எழுந்தார். கூட்டம் ஸ்தம்பித்தது. அவர் கால்களைத் தரையில் ஊன்றினார். வலுவற்றுக் கிடந்த கால்கள் இப்போது சுயமாக நிற்கின்றன.
அவர் அந்த மக்கள் கூட்டத்துக்கு முன்பாகவே தன்னுடைய படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினார்.
இயேசு கடவுளின் மகன் எனும் இயேசுவின் வெளிப்படுத்துதல் மக்களை பரவசப்படுத்தியது.
நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கத்தை கீ பார்க்கலாம்.
விவிலியம் தரும் ஆதாரம்
இயேசு கிறித்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவில் பாலசுதீன நாட்டில் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று வழிபட்டார்கள் என்றும் நாம் அறிகின்ற செய்தி விவிலியத்தில் உள்ளது.
இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களின் ஆசிரியர் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பது மரபு.
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.
இன்றும்கூட, கிறித்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி நாம் அறிகின்ற தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:
இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
மரியா என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
முப்பது வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
இயேசு கடைசி இரவு உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
இயேசு கிறித்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவில் பாலசுதீன நாட்டில் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று வழிபட்டார்கள் என்றும் நாம் அறிகின்ற செய்தி விவிலியத்தில் உள்ளது.
இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களின் ஆசிரியர் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பது மரபு.
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.
இன்றும்கூட, கிறித்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி நாம் அறிகின்ற தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:
இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
மரியா என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
முப்பது வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
இயேசு கடைசி இரவு உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
வால்பாறை பத்தாம்பாத்தி புனித ஜெபமாலை மாதா தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வால்பாறை திரு இருதய ஆலயத்தின் கிளை பங்கான சிங்கோனா பகுதியில் அமைந்துள்ள பத்தாம்பாத்தி புனிதஜெபமாலை மாதா தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு வால்பாறை திருஇருதயஆலய பங்கு குருக்கள் வின்செண்ட் பால்ராஜ், லாரன்ஸ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி மற்றும் சிறப்பு ஜெபமாலை வழிபாடுகளும் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா கொடியேற்றி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 22-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஜெபமாலை வழிபாடுகள் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 22-ந் தேதி சிங்கோனா பகுதியிலிருந்து பத்தாம் பாத்தி வரை ஜெபமாலை மாதா தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் கூட்டுபாடல் திருப்பலியும் சிறப்பு அன்பின் விருந்தும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பத்தாம் பாத்தி பங்குமக்கள் செய்து வருகின்றனர்.
இதனை முன்னிட்டு வால்பாறை திருஇருதயஆலய பங்கு குருக்கள் வின்செண்ட் பால்ராஜ், லாரன்ஸ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி மற்றும் சிறப்பு ஜெபமாலை வழிபாடுகளும் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா கொடியேற்றி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 22-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஜெபமாலை வழிபாடுகள் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 22-ந் தேதி சிங்கோனா பகுதியிலிருந்து பத்தாம் பாத்தி வரை ஜெபமாலை மாதா தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் கூட்டுபாடல் திருப்பலியும் சிறப்பு அன்பின் விருந்தும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பத்தாம் பாத்தி பங்குமக்கள் செய்து வருகின்றனர்.
கோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.
ஏசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை அன்னை மரியாள் கைகளில் வைத்திருந்தார். அதை நேரில் கண்டு நற்செய்தியாளர் புனித லூக்கா வரைந்து உள்ளார். இயற்கை மூலிகைகளால் வரையப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த திருஉருவப்படம் வரையப்பட்டு 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. இது இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
150 ஆண்டுகளுக்கு முன்பு, போப் ஆண்டவர் 9-ம் பத்திநாதர், இந்த படத்தை இரட்சகர் சபையினரிடம் கொடுத்து மாதாவை உலகறிய செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இதைத் தொடர்ந்து உலகநாடுகள் முழுவதும் இந்த திருஉருவப்படம் பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த படம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, ஆகிய இடங்களை தொடர்ந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது. சூலூர், ஜோதிபுரம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் நேற்று காலை 9.50 மணிக்கு கோவை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்துக்கு மாதா திரு உருவப்படம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அலங்கார வாகனத்தில் மாதா திருஉருவப்படம் ஆலய வளாகத்தில் திருவீதி உலாவந்தது. தேவதைகள் போன்று வெண்ணிற ஆடை அணிந்து வந்த திரளான சிறுமிகள் உடன் வந்தனர்.
பின்னர் இரட்சகர் சபையினரிடம் இருந்து ஆலய பங்கு தந்தை குழந்தைசாமி, மாதாவின் திரு உருவப்படத்தை பெற்று, சிறப்பு பிரார்த்தனைகளுடன் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைத்தார். அப்போது ஆலயத்துக்கு வந்து இருந்த திரளான பெண்களும், ஆண்களும் மாதாவின் திருஉருவப்படத்தை தரிசித்து பிரார்த்தனை செய்தனர்.
இதையொட்டி காலை 10 மணி முதல் பாடல்கள், சிறப்பு நவநாள், மறையுரை, மாலை 6 மணிக்கு கூட்டு பாடற் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவின் திருஉருவப்படத்தை தரிசனம் செய்தனர்.
150 ஆண்டுகளுக்கு முன்பு, போப் ஆண்டவர் 9-ம் பத்திநாதர், இந்த படத்தை இரட்சகர் சபையினரிடம் கொடுத்து மாதாவை உலகறிய செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இதைத் தொடர்ந்து உலகநாடுகள் முழுவதும் இந்த திருஉருவப்படம் பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த படம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, ஆகிய இடங்களை தொடர்ந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது. சூலூர், ஜோதிபுரம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் நேற்று காலை 9.50 மணிக்கு கோவை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்துக்கு மாதா திரு உருவப்படம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அலங்கார வாகனத்தில் மாதா திருஉருவப்படம் ஆலய வளாகத்தில் திருவீதி உலாவந்தது. தேவதைகள் போன்று வெண்ணிற ஆடை அணிந்து வந்த திரளான சிறுமிகள் உடன் வந்தனர்.
பின்னர் இரட்சகர் சபையினரிடம் இருந்து ஆலய பங்கு தந்தை குழந்தைசாமி, மாதாவின் திரு உருவப்படத்தை பெற்று, சிறப்பு பிரார்த்தனைகளுடன் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைத்தார். அப்போது ஆலயத்துக்கு வந்து இருந்த திரளான பெண்களும், ஆண்களும் மாதாவின் திருஉருவப்படத்தை தரிசித்து பிரார்த்தனை செய்தனர்.
இதையொட்டி காலை 10 மணி முதல் பாடல்கள், சிறப்பு நவநாள், மறையுரை, மாலை 6 மணிக்கு கூட்டு பாடற் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவின் திருஉருவப்படத்தை தரிசனம் செய்தனர்.
ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
உலகின் மாபெரும் அவதார புருஷன் நம் இறைமகன் இயேசு பிரான். அன்பை, அதன் உண்மையான பரிமாணத்தை உலகுக்கு உணர்த்தவே பிறந்து, கொடிய துன்பங்கள் தாங்கி, உயிர்த்தெழுந்தார் இறைமகன்.
இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு. அது ஒரு புண்ணாற்றும் இயக்கத்தின் தொடர்ச்சி.
ஈஸ்டர் கொண்டாட்டங்கள் சகல மனிதர்களுக்கும் புண்ணாற்றுதல் என்ற மானுடப் பணிக்கான அழைப்பு. மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.
எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் கல்வாரி மலையில் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர். அந்த நிலையிலும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார் இயேசு. இந்த இறைகுணம் மனிதனுக்கும் வரவேண்டும் என்பது கர்த்தரின் சித்தம். மனிதனுக்குள் இருக்கும் இறைவனை வெளிப்படுத்தல் அது.
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. இந்த நாளை அனைவருமே கொண்டாடலாம்.
ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு. அது ஒரு புண்ணாற்றும் இயக்கத்தின் தொடர்ச்சி.
ஈஸ்டர் கொண்டாட்டங்கள் சகல மனிதர்களுக்கும் புண்ணாற்றுதல் என்ற மானுடப் பணிக்கான அழைப்பு. மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.
எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் கல்வாரி மலையில் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர். அந்த நிலையிலும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார் இயேசு. இந்த இறைகுணம் மனிதனுக்கும் வரவேண்டும் என்பது கர்த்தரின் சித்தம். மனிதனுக்குள் இருக்கும் இறைவனை வெளிப்படுத்தல் அது.
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. இந்த நாளை அனைவருமே கொண்டாடலாம்.
ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் ஒரே சிந்தையோடு வாழவேண்டும் என்பதே தேவ சித்தம்.
பிரியமானவர்களே, இவ்வுலக வாழ்வில் தேவன் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம் குடும்பம்தான். கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைக் காணக்கூடிய மிக முக்கியமான இடம் குடும்பம்தான்.
இக்கடைசி நாட்களில் சத்துரு தனக்குக் கொஞ்ச நாட்கள் தான் உண்டு என அறிந்து, தந்திரமாக அநேக குடும்பங்களை உடைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்.
‘அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’. (2.கொரி.2:11)
ஆம் பிரியமானவர்களே! அவனுடைய தந்திரங்களை எதிர்த்துப் போராடுகிற முதல் ஆயுதம் வசனம். இரண்டாவது ஆயுதம் ஜெபம். ஜெபத்தோடு இச்செய்தியை வாசியுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
‘மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்’ (ஆதி.2:18) என்று நம் அருமை ஆண்டவர் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை உருவாக்கினார்.
அன்பான சகோதரிகளே! உங்கள் கணவருக்கு ஏற்ற துணை நீங்கள் தான் என்பதை அறிந்து கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் கணவரை அதிகமாக கனம் பண்ணுங்கள்.
அதைப் போல கணவர்களும், உங்கள் ஏற்ற துணை உங்கள் மனைவியே என்பதை அறிந்து தேவனை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்வில் தேவனின் நோக்கம் நிறைவேறும்.
உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் ஒரே சிந்தையோடு வாழவேண்டும் என்பதே தேவ சித்தம். ஆகவே ஒவ்வொருநாளும் குடும்பமாக ஜெபம் பண்ணுங்கள்.
பிரச்சினைக்கு ஆரம்பமாக சில வாக்குவாதங்கள், சண்டைகள் வரும்போது உடனே அதை விட்டு விட்டு ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து விடுங்கள். அப்பொழுதுதான் ‘எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ (பிலிப்.4:7).
ஜெபத்தின் மூலமாக உங்கள் குடும்ப வாழ்க்கைக் கட்டினால்தான் உங்கள் குடும்பத்தில் ஒரே மனதை காணப்படும். அப் போதுதான் உங்கள் குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்படும்.
சத்துரு பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வந்து நம்மை வேதனைப்படுத்தி, நம் குடும்ப வாழ்வை உடைக்க வேண்டுமென்று தந்திரமாய் நம் குடும்ப வாழ்வில் நுழைய முற்படுவான். அவன் எடுக்கிற முதல் ஆயுதம் நம் குடும்பத்தில் ஒற்றுமையைக் கெடுக்கப் பார்ப்பான்.
ஆனால் அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவனுக்கு ஒருநாளும் இடம் கொடா திருங்கள். ‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ (யாக்.4:7).
பிசாசை எதிர்த்து நிற்பதற்கு வேத வசனங்கள் மிக மிக அவசியம். இயேசு ராஜாவை பிசாசு வனாந்தரத்தில் சோதிக்க வந்தபோது வசனங்களை வைத்து தானே எதிர்த்து நின்றார். எனவே அதிகமாக வேத வசனங்களை வாசியுங்கள். அவற்றை அறிக்கைச் செய்யுங்கள். அப்பொழுது பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான். உங்கள் குடும்பத்திலே ஒருமனம், ஒற்றுமை காணப்படும். நிச்சயம் உங்கள் குடும்பத்தை ஆண்டவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்,
‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
இக்கடைசி நாட்களில் சத்துரு தனக்குக் கொஞ்ச நாட்கள் தான் உண்டு என அறிந்து, தந்திரமாக அநேக குடும்பங்களை உடைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்.
‘அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’. (2.கொரி.2:11)
ஆம் பிரியமானவர்களே! அவனுடைய தந்திரங்களை எதிர்த்துப் போராடுகிற முதல் ஆயுதம் வசனம். இரண்டாவது ஆயுதம் ஜெபம். ஜெபத்தோடு இச்செய்தியை வாசியுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
‘மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்’ (ஆதி.2:18) என்று நம் அருமை ஆண்டவர் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை உருவாக்கினார்.
அன்பான சகோதரிகளே! உங்கள் கணவருக்கு ஏற்ற துணை நீங்கள் தான் என்பதை அறிந்து கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் கணவரை அதிகமாக கனம் பண்ணுங்கள்.
அதைப் போல கணவர்களும், உங்கள் ஏற்ற துணை உங்கள் மனைவியே என்பதை அறிந்து தேவனை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்வில் தேவனின் நோக்கம் நிறைவேறும்.
உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் ஒரே சிந்தையோடு வாழவேண்டும் என்பதே தேவ சித்தம். ஆகவே ஒவ்வொருநாளும் குடும்பமாக ஜெபம் பண்ணுங்கள்.
பிரச்சினைக்கு ஆரம்பமாக சில வாக்குவாதங்கள், சண்டைகள் வரும்போது உடனே அதை விட்டு விட்டு ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து விடுங்கள். அப்பொழுதுதான் ‘எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ (பிலிப்.4:7).
ஜெபத்தின் மூலமாக உங்கள் குடும்ப வாழ்க்கைக் கட்டினால்தான் உங்கள் குடும்பத்தில் ஒரே மனதை காணப்படும். அப் போதுதான் உங்கள் குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்படும்.
சத்துரு பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வந்து நம்மை வேதனைப்படுத்தி, நம் குடும்ப வாழ்வை உடைக்க வேண்டுமென்று தந்திரமாய் நம் குடும்ப வாழ்வில் நுழைய முற்படுவான். அவன் எடுக்கிற முதல் ஆயுதம் நம் குடும்பத்தில் ஒற்றுமையைக் கெடுக்கப் பார்ப்பான்.
ஆனால் அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவனுக்கு ஒருநாளும் இடம் கொடா திருங்கள். ‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ (யாக்.4:7).
பிசாசை எதிர்த்து நிற்பதற்கு வேத வசனங்கள் மிக மிக அவசியம். இயேசு ராஜாவை பிசாசு வனாந்தரத்தில் சோதிக்க வந்தபோது வசனங்களை வைத்து தானே எதிர்த்து நின்றார். எனவே அதிகமாக வேத வசனங்களை வாசியுங்கள். அவற்றை அறிக்கைச் செய்யுங்கள். அப்பொழுது பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான். உங்கள் குடும்பத்திலே ஒருமனம், ஒற்றுமை காணப்படும். நிச்சயம் உங்கள் குடும்பத்தை ஆண்டவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்,
‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம்.
1. பரிசுத்த மத்தியா : இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தம் சீடர்களுக்கு காட்சித் தந்து விடை பெற்றுச் சென்றார். இந்நிலையில் இச்சீடர்கள் தம்முடன் இல்லாத யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவனை 12-ம் சீடனாகச் சேர்த்துக் கொண்டனர். (அப்போஸ்தலர் 1 : 26)
2. பரிசுத்த பவுல் : பன்னிரெண்டு சீடர்களைத் தவிர மேலும் ஒருவர் இயேசுநாதரின் மனமார்ந்த சீடனாக வாழ்ந்தார். அவர்தான் பரி. பவுல் என்பவர்.
இவர் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் இயற்பெயர் சவுல். தன் இளம்வயதிலிருந்து யூத மதக் கோட்பாடுகளில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சொல்லப் போனால் ஒரு யூதமத வெறியனாகவும் இருந்தார். இயேசு நாதரின் மறைவிற்குப் பின் வந்த தலைச்சிறந்த குழுத் தலைவர்களில் ஒருவரான ஸ்தேவான் என்பவரின் கொலையில் பங்கு உள்ளவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.
தன் 35ஆம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். வரலாற்றின்படி கி.பி. 54-68க்கிடையில் நீரோ மன்னனாட்சியில் தியாக மரணமடைந்தார்.
விவிலியத்தில் (பைபிள்) இயேசுநாதர் பிறப்பும், பிறப்பிற்கு பின் நடந்தவைகளை குறித்து எழுதிய நூல்கள் பகுதிக்கு புதிய ஏற்பாடு என்று பெயர். இதில் 27 நூல்கள் உள்ளன. இவற்றில் 13 நூல்கள் பரி. பவுல் எழுதியனவாகும்.
இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம்.
2. பரிசுத்த பவுல் : பன்னிரெண்டு சீடர்களைத் தவிர மேலும் ஒருவர் இயேசுநாதரின் மனமார்ந்த சீடனாக வாழ்ந்தார். அவர்தான் பரி. பவுல் என்பவர்.
இவர் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் இயற்பெயர் சவுல். தன் இளம்வயதிலிருந்து யூத மதக் கோட்பாடுகளில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சொல்லப் போனால் ஒரு யூதமத வெறியனாகவும் இருந்தார். இயேசு நாதரின் மறைவிற்குப் பின் வந்த தலைச்சிறந்த குழுத் தலைவர்களில் ஒருவரான ஸ்தேவான் என்பவரின் கொலையில் பங்கு உள்ளவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.
தன் 35ஆம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். வரலாற்றின்படி கி.பி. 54-68க்கிடையில் நீரோ மன்னனாட்சியில் தியாக மரணமடைந்தார்.
விவிலியத்தில் (பைபிள்) இயேசுநாதர் பிறப்பும், பிறப்பிற்கு பின் நடந்தவைகளை குறித்து எழுதிய நூல்கள் பகுதிக்கு புதிய ஏற்பாடு என்று பெயர். இதில் 27 நூல்கள் உள்ளன. இவற்றில் 13 நூல்கள் பரி. பவுல் எழுதியனவாகும்.
இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம்.
நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது.
ஆண்டவராகிய கடவுள் எப்போதுமே ‘மன்னிக்கிறவராக’ இருக்கிறார், ஆனால் அவரது படைப்பாக இருக்கும் மனிதர்கள் அவரைப்போல் எப்போதும் மன்னிப்பதில்லை என்று சங்கீதப் புத்தகம்(86:5) குறிப்பிடுகிறது.
நம் உறவுகளோ, நண்பர்களோ, நமக்கு எதிராக செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு உருவாகும். இறுதியில் அவர்கள் செய்த தவறுகள் மன்னிக்கவே முடியாததுபோல் நமக்குத் தோன்றும்.
இதனால்தான் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை, காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மன்னிக்க வேண்டும் என்கிறது விவிலியம். குறிப்பாக ரத்த உறவுகள் செய்யும் தவறுகளை எத்தனை விரைவாக மன்னிக்க முடியுமோ அத்தனை விரைவாக மன்னிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியைக் கொண்டுவரும்.
அதனால்தான் “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என கொலோசெயர்(3:13) எடுத்துச் சொல்லுகிறது.
குடும்ப வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். மாறாக தவறுகளை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் என்றோ, நான் சொல்வதை நீ காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்றோ பரஸ்பரம் குத்திக்காட்ட மாட்டார்கள்.
“குற்றத்தை மன்னிப்பது மகிமை” என்பதைக் கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள் என்கிறது நீதிமொழி(19:11). ஆனால் இந்த மகிமையை பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தபிறகே பலரும் உணரத் தலைப்படுகிறார்கள்.
நம்மைப் புண்படுத்துகிறவர்கள் அல்லது நமக்கு எதிராக பாவம் இழைப்பவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமாதானத்தின் அமைதி உங்களை ஒரு அரணாகக் காக்கும்.
மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதே உயர்ந்தது. மன்னிப்பதே மனித இனத்தின் மகத்தான குணமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கதை மூலம் விளக்கினார் இயேசு.
கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தமுடியாமல் அல்லல் பட்டு வந்த ஒரு அடிமையைப் பற்றிய கதை அது.
ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும் என்பது யதார்த்தம்.
அவன் நிலையை உணர்ந்த ராஜா அவ்வளவு பெரிய கடனை ரத்து செய்தார். அத்தனை பெரிய கடனிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த அடிமையோ, தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான்.
அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்; அவனது கண்ணீருக்கு இரங்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான்.
இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கோபத்துடன் கேட்டார். பிறகு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்”(மத்தேயு-18:21-34).
மேலும் இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபின் “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார்(மத். 18:35).
மன்னிக்கும் மனம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது, உறவுகளில், தோழமையில் விரிசல் உண்டாகிறது. தகவல் தொடர்பு அறுந்துவிடுகிறது.
தாராளமாய் மன்னிக்கும்போதோ அநேக நன்மைகள் விளைகின்றன. மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற மனக் கொந்தளிப்புகள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு மாபெரும் வடிகாலாக மன்னிப்பு அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியின் தொடர்ச்சி
மிக்கதாக மாற்றிவிடுகிறது. நீங்கள் மன்னிக்காதவர் எனில் நீங்கள் வராக்கடன்களின் அதிபதி. வராக்கடன்கள் உங்கள் பேரேட்டில் இருந்தாலும் அவை உங்கள் பொக்கிஷ அறையில் இருப்பதில்லை. அவற்றால் உங்களுக்குப் பயனில்லை.
மன்னிப்பவர் எனில் உறவுகளின், நண்பர்களின் வரவு உங்கள் பொக்கிஷத்தை ரத்தினங்கள்போல் ஜொலிக்கச் செய்கிறது.
நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது.
நம் உறவுகளோ, நண்பர்களோ, நமக்கு எதிராக செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு உருவாகும். இறுதியில் அவர்கள் செய்த தவறுகள் மன்னிக்கவே முடியாததுபோல் நமக்குத் தோன்றும்.
இதனால்தான் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை, காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மன்னிக்க வேண்டும் என்கிறது விவிலியம். குறிப்பாக ரத்த உறவுகள் செய்யும் தவறுகளை எத்தனை விரைவாக மன்னிக்க முடியுமோ அத்தனை விரைவாக மன்னிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியைக் கொண்டுவரும்.
அதனால்தான் “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என கொலோசெயர்(3:13) எடுத்துச் சொல்லுகிறது.
குடும்ப வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். மாறாக தவறுகளை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் என்றோ, நான் சொல்வதை நீ காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்றோ பரஸ்பரம் குத்திக்காட்ட மாட்டார்கள்.
“குற்றத்தை மன்னிப்பது மகிமை” என்பதைக் கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள் என்கிறது நீதிமொழி(19:11). ஆனால் இந்த மகிமையை பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தபிறகே பலரும் உணரத் தலைப்படுகிறார்கள்.
நம்மைப் புண்படுத்துகிறவர்கள் அல்லது நமக்கு எதிராக பாவம் இழைப்பவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமாதானத்தின் அமைதி உங்களை ஒரு அரணாகக் காக்கும்.
மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதே உயர்ந்தது. மன்னிப்பதே மனித இனத்தின் மகத்தான குணமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கதை மூலம் விளக்கினார் இயேசு.
கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தமுடியாமல் அல்லல் பட்டு வந்த ஒரு அடிமையைப் பற்றிய கதை அது.
ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும் என்பது யதார்த்தம்.
அவன் நிலையை உணர்ந்த ராஜா அவ்வளவு பெரிய கடனை ரத்து செய்தார். அத்தனை பெரிய கடனிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த அடிமையோ, தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான்.
அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்; அவனது கண்ணீருக்கு இரங்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான்.
இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கோபத்துடன் கேட்டார். பிறகு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்”(மத்தேயு-18:21-34).
மேலும் இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபின் “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார்(மத். 18:35).
மன்னிக்கும் மனம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது, உறவுகளில், தோழமையில் விரிசல் உண்டாகிறது. தகவல் தொடர்பு அறுந்துவிடுகிறது.
தாராளமாய் மன்னிக்கும்போதோ அநேக நன்மைகள் விளைகின்றன. மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற மனக் கொந்தளிப்புகள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு மாபெரும் வடிகாலாக மன்னிப்பு அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியின் தொடர்ச்சி
மிக்கதாக மாற்றிவிடுகிறது. நீங்கள் மன்னிக்காதவர் எனில் நீங்கள் வராக்கடன்களின் அதிபதி. வராக்கடன்கள் உங்கள் பேரேட்டில் இருந்தாலும் அவை உங்கள் பொக்கிஷ அறையில் இருப்பதில்லை. அவற்றால் உங்களுக்குப் பயனில்லை.
மன்னிப்பவர் எனில் உறவுகளின், நண்பர்களின் வரவு உங்கள் பொக்கிஷத்தை ரத்தினங்கள்போல் ஜொலிக்கச் செய்கிறது.
நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது.
"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது.
இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.
"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர்.
இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.
திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார்.
உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).
"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர்.
இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.
திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார்.
உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும்.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:
1. இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
2. மரியா என்னும் கன்னிப்பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
3. சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
4. வயது வந்தவுடன் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
5. பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
6. ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்வி கண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
7. இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
8. இயேசு கடைசி இரா உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
9. பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
10. யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
11. இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
12. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
13. இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
14. இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
1. இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
2. மரியா என்னும் கன்னிப்பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
3. சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
4. வயது வந்தவுடன் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
5. பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
6. ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்வி கண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
7. இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
8. இயேசு கடைசி இரா உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
9. பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
10. யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
11. இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
12. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
13. இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
14. இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
ஏசுவை விசுவாசிப்போம், நித்திய ஜீவனான மோட்சத்தை பெற்றுக்கொள்வோம்.
பிரான்சு நாட்டு சர்வாதிகாரி நெப்போலியன் போனபாட்டைக் குறித்து அறியாதவர் யாரும் இருக்க முடியாது. முழு உலகத்தையும் வென்று ஆளுகை செய்ய வேண்டும் என்பது அவனது பேராசை. பெரும்படை திரட்டி பல நாடுகளை ஜெயித்தான். ஆனால் எகிப்து மீது படையெடுத்தபோது நைல் நதி யுத்தத்தில் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து கடற்படை தளபதி நெல்சன் பிரபுவிடம் தோற்றுப்போனான்.
நெல்சன் பிரபு மனிதாபிமானம் மிக்கவர். ஒருமுறை சிறிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். இதை எப்படியோ அறிந்துகொண்ட பிரான்சு கடற்படையைச் சேர்ந்த பிரமாண்டமான யுத்த கப்பல்கள் புயல் வேகத்தில் நெல்சனின் சிறிய கப்பலை விரட்டின.
எப்படியாவது தொலைவில் உள்ள இங்கிலாந்து கடற்படை தளத்தை அடைந்துவிட்டால் தப்பிவிடலாம் என்று நினைத்த நெல்சன், கப்பலை மிகவேகமாக ஓட்டச் சொன்னார். ஆனால் பிரான்சு கப்பல்கள் நெருங்கி வந்துவிட்டன.
நெல்சன் கப்பலுக்கு மற்றொரு சோதனை வந்தது. அவரது கடற்படை வீரன் ஒருவன் கடலில் தவறி விழுந்துவிட்டதாக அவனுக்கு அறிவித்தார்கள். அவனது பெயரைக் கேட்ட நெல்சன், ‘அவன் ஒரு சிறந்த வீரன், அவனை நாம் இழந்துவிடக் கூடாது, கப்பலைத் திருப்புங்கள்’ என்றார். கப்பல் திருப்பப்பட்டது. அந்த வீரன் காப்பாற்றப்பட்டான்.
ஆனால் என்ன ஆச்சரியம், பிரான்சு நாட்டு கப்பல்கள் திரும்பி ஓட்டம் பிடித்தன. நெல்சன் தனது கடற்படையை பார்த்துவிட்டதால் தைரியமாக கப்பலைத் திருப்பி நம்மை எதிர்க்கிறார் என்று நினைத்து எதிரிக் கப்பல்கள் ஓட்டம் பிடித்தன. நெல்சனின் மனிதாபிமானம் அவரையும் கப்பலையும் வீரர்களையும் காப்பாற்றியது.
ஒவ்வொரு உயிரும் விலையேறப்பெற்றது. அதுபோல தேவனுக்கு முன்பாக ஒவ்வொருவரின் ஆத் மாவும் அப்படியே உள்ளது. இதை சில உவமைகள் மூலம் ஏசு விளக்கியுள்ளார். ஒரு மனிதனுக்கு 100 ஆடுகள் இருந்து அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. ஒரு ஆடுதானே போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை. மீதி 99 ஆடுகளையும் காட்டில் விட்டுவிட்டு காணாமல் போன ஆட்டை தேடிக் கண்டுபிடித்தான். அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தான். அவனுக்கு ஒவ்வொரு ஆடும் விலையேற பெற்றதாகவே காணப்பட்டது.
மத்.18;1113; லூக்கா 15;310 ஆகிய வசனங்களில் இந்த உவமை எழுதப்பட்டுள்ளது. இந்த உவமையைக் கூறிய ஏசு கடைசியாக, ‘மனந்திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்’ என்றார்.
பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து ஏசு உலகத்தில் வந்தார் (1 தீமோ.1;15). உண்மைதான். பாவிகள் ரட்சிப்படைய வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் மனிதனானார். பாவிகளின் பாவங்களுக்காகத்தான் சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்தார். ஏசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான்1;7).
இந்த கடைசி நாட்களில் வாழும் நாம் ஏசுவின் இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் வருகை தாமதமாகிறது. இதுகுறித்து சிலர், ‘ஏசு வருவார் என்று சொன்ன வாக்குத்தத்தம் எங்கே?’ (2 பேதுரு 3;4) என்று கேள்வி கேட்பதையும் பார்க்கிறோம்.
ஆனால் அதற்கான விடையும் அதே அதிகாரத்தில் உள்ளது. ‘ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே அவர் தாமதிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. ஏசுவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆத்மாவும் அவருக்கு முக்கியம்.
சரீர மரணம் பற்றி பயப்படாமல் ஆத்ம மரணம் அதாவது நரகத்துக்கு பயப்படுங்கள் (மத்.10;28). மனிதனை தேவன் மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை ஊதியதால் மனிதன் ஜீவாத்மா ஆனான் (ஆதி.2;7). அதே சமயம், பாவம் செய்யும் ஆத்மாவே சாகும் (எசே.18;49) என்று வேதம் கூறு கிறது.
சரீர மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் நாம் இரண்டாம் மரணமாகிய அக்னியுள்ள நரகத்தில் விழுந்துவிடக் கூடாது (வெளி.21;8). பாவம் செய்பவனின் ஆத்மா நரகத்தில் தள்ளப்பட்டுவிடும். அது இரண்டாம் மரணம். என்னிடத்தில் விசுவாசமாக இருப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்ற ஏசுவின் வாக்குத்தத்தம் நமக்கு உண்டு. எனவே ஏசுவை விசுவாசிப்போம், நித்திய ஜீவனான மோட்சத்தை பெற்றுக்கொள்வோம்.
டேவிட் மோகன்ராஜ், அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
நெல்சன் பிரபு மனிதாபிமானம் மிக்கவர். ஒருமுறை சிறிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். இதை எப்படியோ அறிந்துகொண்ட பிரான்சு கடற்படையைச் சேர்ந்த பிரமாண்டமான யுத்த கப்பல்கள் புயல் வேகத்தில் நெல்சனின் சிறிய கப்பலை விரட்டின.
எப்படியாவது தொலைவில் உள்ள இங்கிலாந்து கடற்படை தளத்தை அடைந்துவிட்டால் தப்பிவிடலாம் என்று நினைத்த நெல்சன், கப்பலை மிகவேகமாக ஓட்டச் சொன்னார். ஆனால் பிரான்சு கப்பல்கள் நெருங்கி வந்துவிட்டன.
நெல்சன் கப்பலுக்கு மற்றொரு சோதனை வந்தது. அவரது கடற்படை வீரன் ஒருவன் கடலில் தவறி விழுந்துவிட்டதாக அவனுக்கு அறிவித்தார்கள். அவனது பெயரைக் கேட்ட நெல்சன், ‘அவன் ஒரு சிறந்த வீரன், அவனை நாம் இழந்துவிடக் கூடாது, கப்பலைத் திருப்புங்கள்’ என்றார். கப்பல் திருப்பப்பட்டது. அந்த வீரன் காப்பாற்றப்பட்டான்.
ஆனால் என்ன ஆச்சரியம், பிரான்சு நாட்டு கப்பல்கள் திரும்பி ஓட்டம் பிடித்தன. நெல்சன் தனது கடற்படையை பார்த்துவிட்டதால் தைரியமாக கப்பலைத் திருப்பி நம்மை எதிர்க்கிறார் என்று நினைத்து எதிரிக் கப்பல்கள் ஓட்டம் பிடித்தன. நெல்சனின் மனிதாபிமானம் அவரையும் கப்பலையும் வீரர்களையும் காப்பாற்றியது.
ஒவ்வொரு உயிரும் விலையேறப்பெற்றது. அதுபோல தேவனுக்கு முன்பாக ஒவ்வொருவரின் ஆத் மாவும் அப்படியே உள்ளது. இதை சில உவமைகள் மூலம் ஏசு விளக்கியுள்ளார். ஒரு மனிதனுக்கு 100 ஆடுகள் இருந்து அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. ஒரு ஆடுதானே போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை. மீதி 99 ஆடுகளையும் காட்டில் விட்டுவிட்டு காணாமல் போன ஆட்டை தேடிக் கண்டுபிடித்தான். அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தான். அவனுக்கு ஒவ்வொரு ஆடும் விலையேற பெற்றதாகவே காணப்பட்டது.
மத்.18;1113; லூக்கா 15;310 ஆகிய வசனங்களில் இந்த உவமை எழுதப்பட்டுள்ளது. இந்த உவமையைக் கூறிய ஏசு கடைசியாக, ‘மனந்திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்’ என்றார்.
பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து ஏசு உலகத்தில் வந்தார் (1 தீமோ.1;15). உண்மைதான். பாவிகள் ரட்சிப்படைய வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் மனிதனானார். பாவிகளின் பாவங்களுக்காகத்தான் சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்தார். ஏசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான்1;7).
இந்த கடைசி நாட்களில் வாழும் நாம் ஏசுவின் இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் வருகை தாமதமாகிறது. இதுகுறித்து சிலர், ‘ஏசு வருவார் என்று சொன்ன வாக்குத்தத்தம் எங்கே?’ (2 பேதுரு 3;4) என்று கேள்வி கேட்பதையும் பார்க்கிறோம்.
ஆனால் அதற்கான விடையும் அதே அதிகாரத்தில் உள்ளது. ‘ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே அவர் தாமதிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. ஏசுவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆத்மாவும் அவருக்கு முக்கியம்.
சரீர மரணம் பற்றி பயப்படாமல் ஆத்ம மரணம் அதாவது நரகத்துக்கு பயப்படுங்கள் (மத்.10;28). மனிதனை தேவன் மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை ஊதியதால் மனிதன் ஜீவாத்மா ஆனான் (ஆதி.2;7). அதே சமயம், பாவம் செய்யும் ஆத்மாவே சாகும் (எசே.18;49) என்று வேதம் கூறு கிறது.
சரீர மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் நாம் இரண்டாம் மரணமாகிய அக்னியுள்ள நரகத்தில் விழுந்துவிடக் கூடாது (வெளி.21;8). பாவம் செய்பவனின் ஆத்மா நரகத்தில் தள்ளப்பட்டுவிடும். அது இரண்டாம் மரணம். என்னிடத்தில் விசுவாசமாக இருப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்ற ஏசுவின் வாக்குத்தத்தம் நமக்கு உண்டு. எனவே ஏசுவை விசுவாசிப்போம், நித்திய ஜீவனான மோட்சத்தை பெற்றுக்கொள்வோம்.
டேவிட் மோகன்ராஜ், அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.






