என் மலர்
கிறித்தவம்
ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார்.
தவக்காலத்தில் இயேசுபிரான் 3 முதன்மையான போதனைகளை முன் நிறுத்துகிறார். 1. அதிக ஜெபம். 2. அதிக தவம். 3. அதிக தர்மம்.
செல்வந்தர் ஒருவர் வழிபாட்டில் பங்கேற்று விட்டு, தனது காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் மூதாட்டி ஒருவர் நாவல்பழம் விற்றுக்கொண்டு இருந்தார். செல்வந்தர் காரில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியிடம், நாவல் பழம் வாங்குவதற்காக பேரம் பேசினார். பின்னர் ஒரு படி பழத்தை வாங்கி கொண்டு காரில் புறப்பட்டார் அவர்.
அப்போது மூதாட்டி, ஒரு பெரிய நாவல்பழத்தை கார் கண்ணாடி மீது வீசினார். அப்போது செல்வந்தர் நாவல் பழம் வாங்கியதற்காக ரூ.20-க்கு பதிலாக ரூ.2 ஆயிரத்தை தவறுதலாக கொடுத்து விட்டதை உணர்ந்தார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கி சென்று ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, ரூ.20-யை மூதாட்டியிடம் கொடுத்தார்.
மூதாட்டியை போல உழைத்து சம்பாதிப்பதில் உற்சாகம் வேண்டும். துன்புற்றாலும் பிறருடைய பொருளுக்கு எவ்வகையிலும் ஆசைபடக்கூடாது. நாம் துன்புற்றாலும், ஏழைகளுக்கு கொடுத்து உதவவேண்டும். இது தான் தர்மம். தர்மம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. கடவுள் பிரதிபலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் துன்புறும் நபர்களுக்கு, நாம் துன்புற்றாலும் எத்தகைய எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யும் போது தான் இறைவன் நம்மை ஆசிர்வதிக்கிறார்.
வறியவருக்கு உதவுவது என்பது நாம் காட்டும் அனுதாபம் அல்ல. அது நம்முடைய கடமை என்பதை இயேசு பிரான் தெளிவுப்படுத்துகிறார். நாமே சம்பாதித்து இருந்தாலும், அதில் ஏழைகளுக்கும் உரிமையுண்டு என்பதையும் உணர்வது தான் ஒரு நல்ல மனிதருக்கு அடையாளம். வறண்ட நேரங்களில் வழங்குவதே வரவேற்கத்தக்கது.
எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்பதல்ல. இருப்பதில் ஒரு சிறு பகுதியையாவது பகிர்ந்து கொள்ளுதலே சிறந்த ஞானம். ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார். செய்வோமா?
- குழந்தை, காணியிருப்பு.
செல்வந்தர் ஒருவர் வழிபாட்டில் பங்கேற்று விட்டு, தனது காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் மூதாட்டி ஒருவர் நாவல்பழம் விற்றுக்கொண்டு இருந்தார். செல்வந்தர் காரில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியிடம், நாவல் பழம் வாங்குவதற்காக பேரம் பேசினார். பின்னர் ஒரு படி பழத்தை வாங்கி கொண்டு காரில் புறப்பட்டார் அவர்.
அப்போது மூதாட்டி, ஒரு பெரிய நாவல்பழத்தை கார் கண்ணாடி மீது வீசினார். அப்போது செல்வந்தர் நாவல் பழம் வாங்கியதற்காக ரூ.20-க்கு பதிலாக ரூ.2 ஆயிரத்தை தவறுதலாக கொடுத்து விட்டதை உணர்ந்தார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கி சென்று ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, ரூ.20-யை மூதாட்டியிடம் கொடுத்தார்.
மூதாட்டியை போல உழைத்து சம்பாதிப்பதில் உற்சாகம் வேண்டும். துன்புற்றாலும் பிறருடைய பொருளுக்கு எவ்வகையிலும் ஆசைபடக்கூடாது. நாம் துன்புற்றாலும், ஏழைகளுக்கு கொடுத்து உதவவேண்டும். இது தான் தர்மம். தர்மம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. கடவுள் பிரதிபலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் துன்புறும் நபர்களுக்கு, நாம் துன்புற்றாலும் எத்தகைய எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யும் போது தான் இறைவன் நம்மை ஆசிர்வதிக்கிறார்.
வறியவருக்கு உதவுவது என்பது நாம் காட்டும் அனுதாபம் அல்ல. அது நம்முடைய கடமை என்பதை இயேசு பிரான் தெளிவுப்படுத்துகிறார். நாமே சம்பாதித்து இருந்தாலும், அதில் ஏழைகளுக்கும் உரிமையுண்டு என்பதையும் உணர்வது தான் ஒரு நல்ல மனிதருக்கு அடையாளம். வறண்ட நேரங்களில் வழங்குவதே வரவேற்கத்தக்கது.
எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்பதல்ல. இருப்பதில் ஒரு சிறு பகுதியையாவது பகிர்ந்து கொள்ளுதலே சிறந்த ஞானம். ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார். செய்வோமா?
- குழந்தை, காணியிருப்பு.
பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன்படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு.
திருப்பாடல்களில் வரும் முதல் பாடல் நற்பேறு பெற்றவரின் குணாதிசயங்களை ‘பளிச்’ என விளக்குகிறது.
நற்பேறு பெற்றவர் யார்?
அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் (சங்கீதம் 1)
முதல் திருப்பாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு.
பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன்படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. திருப்பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று இது எனலாம்.
சாலமோன் மன்னனுடைய நீதிமொழிகளின் சாயல் இந்த பாடலில் தொனிப்பதால், இதையும் சாலமோன் எழுதியிருக்கலாம் என கருதுவோர் உண்டு. எனினும், இதை எழுதியவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த பாடலுக்கு ஆசிரியர் அமைகிறார்.
நல்லவர் எப்படி இருப்பார்?, பொல்லார் எப்படி இருப்பார்? என்பதை இந்த பாடல் விளக்குகிறது.
நல்லவர்களின் குணாதிசயங்களாக மூன்று விஷயங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.
1. அவர்கள் பொல்லாரின் சொற்படி நடக்க மாட்டார்கள். வழி தவறுவதன் முதல் நிலை இது. யாருடைய அறிவுரைப்படி நாம் வாழ்கிறோம் என்பதன் அடிப்படையில் தான் நமது வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது. பொல்லாரின் அறிவுரைகளை சிரமேற்கொள்ளும் போது நாம் பொல்லாதவர்களின் இலக்கையே சென்றடைவோம். அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.
2. இரண்டாவது நிலை, தீயவர்களின் பாவ வழியில் நிற்காமல் இருப்பது. பொல்லாரின் சொல்லைக்கேட்பது முதல் நிலை. பாவிகளுடைய வழியில் நிற்பது இரண்டாம் நிலை. இப்போது நின்று கேட்கக்கூடிய அளவுக்கு மனம் பாவத்தின் மீது விருப்பம் கொண்டு விடுகிறது. நின்று நிதானித்து பாவத்தின் வழியில் பயணிக்கிறது. அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.
3. மூன்றாவது நிலை, இகழ்வாரின் கூட்டத்தில் அமராமல் இருப்பது. முதலில் கேட்பது, பின் நிற்பது, மூன்றாவதாக ஆறஅமர அமர்ந்து இகழ்வாரோடு இணைந்திருப்பது, என பாவம் படிப்படியாய் வளர்கிறது. பிறரை இகழ்வதும், நல்ல செயல்கள் செய்பவர்களை இகழ்வதுமாய் பாவத்தின் ஆழத்தில் விழுந்து விட்ட நிலையை இது காட்டுகிறது.
முதலில் வெறுமனே பொல்லாரின் அறிவுரைகள் கேட்பதில் நமது வாழ்க்கை பலவீனமடையத் தொடங்கு கிறது. அது சிற்றின்பத் தேடல்களாகவும் இருக்கலாம், இயேசுவின் போதனைகளைத் திரிப்பதாகவும் இருக்கலாம்.
அது பழகிவிட்டால் பாவிகள் நடக்கின்ற பாதையில் நாமும் தென்படுவோம். அங்கே நின்று பாவத்தின் செயல்களைச் செய்வோம். நாமும் நாலுபேருக்கு தவறான அறிவுரைகள் சொல்வோம். அதுவும் பழகிவிட்டபின் நல்லவர்களை விமர்சிப்பதும், மனிதநேயமற்ற இகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் செய்வதுமாய் நமது வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.
இப்படிப்பட்ட மூன்று நிலைகளையும் நல்லவர்கள் வெறுப்பார்கள். வெறுமனே வெறுத்தால் மட்டும் போதாது, ஒரு பாத்திரத்தில் இருக்கும் அழுக்குத் தண்ணீரை வெளியேற்றுவதுடன் வேலை முடிவதில்லை. வெறுமையான பாத்திரம் யாருக்கும் உதவாது. அந்த பாத்திரத்தைக் கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றுவது தான் பயனுள்ள நிலை. நல்லவர்கள் தங்களை பொல்லாரின் வழியிலிருந்து விலக்கி, இறைவனின் அருகில் அமர்வார்கள்.
இறைவனுடைய திருச்சட்டத்தில் மகிழ்ந்து, இரவும் பகலும் அவர்கள் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் செய்கின்ற செயல்களெல்லாம் வெற்றியாக முடிந்து விடுகிறது. நீரோடையில் அருகில் வேர்களை இறக்கி, பருவகாலத்தில் இனிய கனியைத் தரும் மரமாய் அவர்கள் மாறுகின்றனர்.
ஒரு மரம் கனியைத்தர நீர், காற்று, சூரிய ஒளி மூன்றும் தேவை. காற்று என்பதை நமக்கு மூச்சுக்காற்றை அளித்த தந்தையாம் இறைவனோடும், ஒளியை ஒளியாம் இறைமகனோடும், நீரை தூய ஆவியானவரோடும் ஒப்பிடலாம். இவர்கள் மூவரும் நம்முள் இருக்கும் போது நாம் நீரோடை மரம் போல செழுமை வடிவும், இனிமைக் கனியுமாய் வாழ்வோம்.
பொல்லாரின் வழியோ, காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல நிலையில்லாமலும், பயனில்லாமலும் அழியும். அவர்களுக்கு வெற்றி என்பது இல்லை. அவர்களுக்கு மீட்பு என்பது இல்லை. அழிவு மட்டுமே அவர்களின் பரிசு.
நமது வாழ்க்கை, தீமையின் வழியை விட்டு விலகி இறைவனைத் தேடும் வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்பதை இந்த திருப்பாடல் வலியுறுத்துகிறது.
இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ செய்ய வேண்டிய இந்த மூன்று விஷயங்களையும் இதயத்தில் இருத்துவோம். பொல்லாரின் வழி செல்வதை இன்றே நிறுத்துவோம்.
-சேவியர், சென்னை.
நற்பேறு பெற்றவர் யார்?
அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் (சங்கீதம் 1)
முதல் திருப்பாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு.
பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன்படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. திருப்பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று இது எனலாம்.
சாலமோன் மன்னனுடைய நீதிமொழிகளின் சாயல் இந்த பாடலில் தொனிப்பதால், இதையும் சாலமோன் எழுதியிருக்கலாம் என கருதுவோர் உண்டு. எனினும், இதை எழுதியவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த பாடலுக்கு ஆசிரியர் அமைகிறார்.
நல்லவர் எப்படி இருப்பார்?, பொல்லார் எப்படி இருப்பார்? என்பதை இந்த பாடல் விளக்குகிறது.
நல்லவர்களின் குணாதிசயங்களாக மூன்று விஷயங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.
1. அவர்கள் பொல்லாரின் சொற்படி நடக்க மாட்டார்கள். வழி தவறுவதன் முதல் நிலை இது. யாருடைய அறிவுரைப்படி நாம் வாழ்கிறோம் என்பதன் அடிப்படையில் தான் நமது வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது. பொல்லாரின் அறிவுரைகளை சிரமேற்கொள்ளும் போது நாம் பொல்லாதவர்களின் இலக்கையே சென்றடைவோம். அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.
2. இரண்டாவது நிலை, தீயவர்களின் பாவ வழியில் நிற்காமல் இருப்பது. பொல்லாரின் சொல்லைக்கேட்பது முதல் நிலை. பாவிகளுடைய வழியில் நிற்பது இரண்டாம் நிலை. இப்போது நின்று கேட்கக்கூடிய அளவுக்கு மனம் பாவத்தின் மீது விருப்பம் கொண்டு விடுகிறது. நின்று நிதானித்து பாவத்தின் வழியில் பயணிக்கிறது. அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.
3. மூன்றாவது நிலை, இகழ்வாரின் கூட்டத்தில் அமராமல் இருப்பது. முதலில் கேட்பது, பின் நிற்பது, மூன்றாவதாக ஆறஅமர அமர்ந்து இகழ்வாரோடு இணைந்திருப்பது, என பாவம் படிப்படியாய் வளர்கிறது. பிறரை இகழ்வதும், நல்ல செயல்கள் செய்பவர்களை இகழ்வதுமாய் பாவத்தின் ஆழத்தில் விழுந்து விட்ட நிலையை இது காட்டுகிறது.
முதலில் வெறுமனே பொல்லாரின் அறிவுரைகள் கேட்பதில் நமது வாழ்க்கை பலவீனமடையத் தொடங்கு கிறது. அது சிற்றின்பத் தேடல்களாகவும் இருக்கலாம், இயேசுவின் போதனைகளைத் திரிப்பதாகவும் இருக்கலாம்.
அது பழகிவிட்டால் பாவிகள் நடக்கின்ற பாதையில் நாமும் தென்படுவோம். அங்கே நின்று பாவத்தின் செயல்களைச் செய்வோம். நாமும் நாலுபேருக்கு தவறான அறிவுரைகள் சொல்வோம். அதுவும் பழகிவிட்டபின் நல்லவர்களை விமர்சிப்பதும், மனிதநேயமற்ற இகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் செய்வதுமாய் நமது வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.
இப்படிப்பட்ட மூன்று நிலைகளையும் நல்லவர்கள் வெறுப்பார்கள். வெறுமனே வெறுத்தால் மட்டும் போதாது, ஒரு பாத்திரத்தில் இருக்கும் அழுக்குத் தண்ணீரை வெளியேற்றுவதுடன் வேலை முடிவதில்லை. வெறுமையான பாத்திரம் யாருக்கும் உதவாது. அந்த பாத்திரத்தைக் கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றுவது தான் பயனுள்ள நிலை. நல்லவர்கள் தங்களை பொல்லாரின் வழியிலிருந்து விலக்கி, இறைவனின் அருகில் அமர்வார்கள்.
இறைவனுடைய திருச்சட்டத்தில் மகிழ்ந்து, இரவும் பகலும் அவர்கள் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் செய்கின்ற செயல்களெல்லாம் வெற்றியாக முடிந்து விடுகிறது. நீரோடையில் அருகில் வேர்களை இறக்கி, பருவகாலத்தில் இனிய கனியைத் தரும் மரமாய் அவர்கள் மாறுகின்றனர்.
ஒரு மரம் கனியைத்தர நீர், காற்று, சூரிய ஒளி மூன்றும் தேவை. காற்று என்பதை நமக்கு மூச்சுக்காற்றை அளித்த தந்தையாம் இறைவனோடும், ஒளியை ஒளியாம் இறைமகனோடும், நீரை தூய ஆவியானவரோடும் ஒப்பிடலாம். இவர்கள் மூவரும் நம்முள் இருக்கும் போது நாம் நீரோடை மரம் போல செழுமை வடிவும், இனிமைக் கனியுமாய் வாழ்வோம்.
பொல்லாரின் வழியோ, காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல நிலையில்லாமலும், பயனில்லாமலும் அழியும். அவர்களுக்கு வெற்றி என்பது இல்லை. அவர்களுக்கு மீட்பு என்பது இல்லை. அழிவு மட்டுமே அவர்களின் பரிசு.
நமது வாழ்க்கை, தீமையின் வழியை விட்டு விலகி இறைவனைத் தேடும் வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்பதை இந்த திருப்பாடல் வலியுறுத்துகிறது.
இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ செய்ய வேண்டிய இந்த மூன்று விஷயங்களையும் இதயத்தில் இருத்துவோம். பொல்லாரின் வழி செல்வதை இன்றே நிறுத்துவோம்.
-சேவியர், சென்னை.
கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.
உலகத்தில் எந்தவொரு வேலையில் சேர வேண்டும் என்றாலும் முதலில் கேட்கப்படுவது, தகுதி.
கல்வித் தகுதி, உடல் தகுதி, அறிவாற்றல் ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்க வேண்டியதுள்ளது. தகுதிக் குறைபாடு ஒருவனை அலைக்கழிப்புக்கு ஆளாக்கிவிடுகிறது.
அதுபோலவே ஆன்மிகத்திலும் இறைவனுடன் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகளை இயேசு போதித்துள்ளார். அது உடல், அறிவு, கல்வி சம்பந்தப்பட்டதல்ல. அந்த அடிப்படைத் தகுதிகளில் முதன்மையான தகுதி, ‘ஒருவன் தன்னை பாவி’ என்று முழுமையாக ஒப்புக்கொள்வதுதான்.
இதுபற்றி இயேசு கூறும்போது, “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், என்று ஜெபித்த பாவிதான் நீதிமானாக்கப்பட்டான்” என்றார்.
நாம் தினமும் செய்யும் குற்றங்கள், பாவங்களை, தனி ஜெபங்களில் இறைவனிடம் சொல்லி மன்னிப்புகேட்கிறோம். அதன் மூலம் நம்மை பாவி என்று நாம் ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம் என்று கேட்கலாம்.
தினமும் பாவம் செய்வதும், மன்னிப்புக்காக ஜெபம் செய்வதும், ஒரு மனிதனை இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் செயலாக அமையாது. அது ஒருவன் தன்னை பாவி என்று முழுமையாக ஒப்புக்கொண்ட நிலை அல்ல. எனவே அதுபோன்ற ஜெபங்களால் நேரம்தான் வீணாகிறது. தினமும் வேலை செய்து அழுக்காவது, பின்னர் அழுக்கைப் போக்குவதற்கு குளிப்பது போன்ற இயல்பு நிலை ஆன்மிகத்தில் இல்லை.
பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வது என்பது எப்படி? செய்த குற்றம்பாவத்தால் மனது அழுத்தப்பட்டோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலையிலோ அல்லது பின்விளைவுகளை உணர்வதாலோ, இனி அந்த பாவங்களில் நீடிக்கமாட்டேன் என்று முடிவு செய்து இறைவனுடன் ஒப்புரவாதல் ஆவதுதான், பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வதாகும். இதுதான் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் முதன்மையான தகுதி.
அதாவது தன் குற்றங்களையும், பாவ செயல்பாடுகளையும் நியாயப் படுத்தாமல், அதை இறைவனிடம் ஒப்புக்கொள்ளுதலாகும். சூழ்நிலையின் நெருக்கடினால் பொய் பேசிவிட்டேன், திருடிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன், பழிதீர்த்துவிட்டேன் என்று தவறுகளை நியாயப்படுத்தும் எவரும், உண்மையான கிறிஸ்தவத்தின் ஆரம்பகட்ட தகுதியைக்கூடப் பெறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்களிடம் அநீதி, பொறாமை, பெருமை, வேறுபாடு பார்த்தல், பகை, பழிதீர்க்கும் மூர்க்கம் போன்ற ஜென்ம மற்றும் சரீர சுபாவத்திலான பாவங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில் இவர்களிடம் ஜெபம், உபவாச ஜெபம், சபைகூடுதல், காணிக்கை செலுத்துதல், மன்னிப்பு கேட்குதல் (தேவைப்படுவோரிடம் மட்டும்), ஊழியங்களை தாங்குதல் என பல கண்ணுக்குத் தெரியும் நற்செயல்பாடுகளும் காணப்படும். ஆனால் இவைஎல்லாம் உண்மையான கிறிஸ்தவ நடத்தைக்கான செயல்பாடு அல்ல.
கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியைப் பெறாமல், இந்த நற்செயல்கள் மூலம் இறைவனுடன் யாராலும் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது. எனவே இவை அனைத்துமே, ஆன்மிக பலன்களை (ஆத்தும ஆசீர்வாதங்களை) அடைவதற்கு உதவாத மற்றும் வீணான நற்செயல்களாகவே உள்ளன.
பாவி என்று உணர்ந்து, தன்னை தாழ்த்தி குற்றங்களை ஒப்புக்கொண்டு, இனி பாவம் செய்யமாட்டேன் என்று இறைவனுடன் ஒப்புரவாகி மனந்திருந்தும் பாவிதான் கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தகுதியைப் பெறுகிறான். அவனுக்குத்தான் ஆன்மிகத்தின் அடுத்த வழி திறக்கப் படுகிறது.
மனந்திரும்பும் நிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது, அதற்கான மன்னிப்பை பெறவும் வேதம் வழிகாட்டுகிறது. யாருக்கு எதிராக குற்றம், அநீதி, அநியாயம் செய்தோமோ அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க இறைவனால் உள்ளம் தூண்டப்படுகிறது. இதில் மிகுந்த தயக்கம் ஏற்பட்டாலும், இறைஆவியின் மூலம் தைரியம் அளிக்கப்படு கிறது. ஆனால் இதில் பலர் சோர்ந்து, சில பாவங்களுக்கான மன்னிப்பை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.
எனவே இறைவனுடனான மேலும் நெருக்கம் ஏற்படாமல் போய்விடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனுடனான தொடர்பை இழந்து பழைய பாவ நிலைக்கு திரும்பும் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றனர். இறைவன் காட்டும் வழியை உணர்ந்து நடந்துகொள்ளாமல், மாறாகச் சென்றால் அதில் இறைவனின் பாதுகாப்பு கிடைக்காது.
அடுத்ததாக, மனிதனுக்கு எதிரான குற்ற செய்கைகளுக்காக இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஏனென்றால், மனிதன் என்பவன் இறைவனின் படைப்பு. அந்த வகையில், அவரது படைப்பில் ஒன்றான மனிதனை துன்புறுத்தியதற்காக இறைவனிடமும் மன்னிப்பை பெற வேண்டும். இப்படிப்பட்ட இறைவனின் சித்தத்துக்கு உட்பட்ட வழிகாட்டுதலின் மூலமாகத்தான் படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்தை அடைய முடியும்.
பாவி என்ற நிலையில் இருந்துகொண்டு காணிக்கை கொடுப்பதாலோ அல்லது வேறு யாரிடமாவது சென்று ஜெபிப்பதாலோ ஆன்மிக நிலைப்பாட்டை அடைய முடியாது. ஆன்மிகம் என்பது, குறிப்பிட்ட மதத்தில் இருந்துகொண்டு எல்லாரையும்போல கோவிலுக்குச் சென்று வருவதல்ல. இறைவனை அடையும் தகுதிகளைப் பெற்று, அந்த வழியில் சென்று, அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்வதுதான் ஆன்மிகம். இதற்கு மதம் உதவாது.
இயேசு காட்டியுள்ள இந்த ஆன்மிக வழியில், பகைத்தவருக்காக ஜெபித்தல், அடித்தவரையும் அரவணைத்தல், வேறுபாடு பார்க்காமல் உதவுதல், அனைவரின் முன்பாகவும் தாழ்மையாக நடந்துகொள்ளுதல், அநியாய செல்வங்களை தவிர்த்தல், பாவநெருக்கடிகளுக்குள் சாயாமல் இருத்தல் என்ற இறைத்தன்மைகள் வருகின்றன. இதுதான் தெய்வீக அன்பு.
பக்தனின் வாழ்க்கையில் இவை குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். இந்த வழியில் ஒருவன் நடக்கிறான் என்றால் அவன் இயேசுவுடன் (கிறிஸ்தவ மதத்துடன் அல்ல) பிணைப்பில் இருக்கிறான் என்று அர்த்தம். இந்த வழிகளைக் கடந்துதான், அவனுக்கென்று இறைவன் வைத்துள்ள இலக்கை நோக்கிச் சென்றாக வேண்டும்.
இயேசு கூறியுள்ள அந்த வழிகளில் நடந்து செல்வது, இயல்பு குணத்தில் நீடிக்கும் சாதாரண மனிதனால் முடியாது. கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டாலே ஒருவனை கிறிஸ்தவனாக வேதம் அங்கீகரித்துவிடவில்லை. இயேசு சொன்ன தெய்வீக அன்பின்படி நடந்து, கிறிஸ்தவ மார்க்கத்தில் (மதத்தில் அல்ல) நீடித்து வாழ்வது எளிதானது அல்ல என்பதால்தான் அதை இடுக்கமான வழி என்று வேதம் கூறுகிறது. மதத்தில் உள்ள பெயர்ப்பட்டியல் பெரிதாக இருந்தாலும், உண்மையான கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தவர்கள் குறைவுதான்(மத்.7:13, லூக்.13:24) என்பதே வேதத்தின் முடிவு.
கல்வித் தகுதி, உடல் தகுதி, அறிவாற்றல் ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்க வேண்டியதுள்ளது. தகுதிக் குறைபாடு ஒருவனை அலைக்கழிப்புக்கு ஆளாக்கிவிடுகிறது.
அதுபோலவே ஆன்மிகத்திலும் இறைவனுடன் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகளை இயேசு போதித்துள்ளார். அது உடல், அறிவு, கல்வி சம்பந்தப்பட்டதல்ல. அந்த அடிப்படைத் தகுதிகளில் முதன்மையான தகுதி, ‘ஒருவன் தன்னை பாவி’ என்று முழுமையாக ஒப்புக்கொள்வதுதான்.
இதுபற்றி இயேசு கூறும்போது, “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், என்று ஜெபித்த பாவிதான் நீதிமானாக்கப்பட்டான்” என்றார்.
நாம் தினமும் செய்யும் குற்றங்கள், பாவங்களை, தனி ஜெபங்களில் இறைவனிடம் சொல்லி மன்னிப்புகேட்கிறோம். அதன் மூலம் நம்மை பாவி என்று நாம் ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம் என்று கேட்கலாம்.
தினமும் பாவம் செய்வதும், மன்னிப்புக்காக ஜெபம் செய்வதும், ஒரு மனிதனை இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் செயலாக அமையாது. அது ஒருவன் தன்னை பாவி என்று முழுமையாக ஒப்புக்கொண்ட நிலை அல்ல. எனவே அதுபோன்ற ஜெபங்களால் நேரம்தான் வீணாகிறது. தினமும் வேலை செய்து அழுக்காவது, பின்னர் அழுக்கைப் போக்குவதற்கு குளிப்பது போன்ற இயல்பு நிலை ஆன்மிகத்தில் இல்லை.
பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வது என்பது எப்படி? செய்த குற்றம்பாவத்தால் மனது அழுத்தப்பட்டோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலையிலோ அல்லது பின்விளைவுகளை உணர்வதாலோ, இனி அந்த பாவங்களில் நீடிக்கமாட்டேன் என்று முடிவு செய்து இறைவனுடன் ஒப்புரவாதல் ஆவதுதான், பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வதாகும். இதுதான் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் முதன்மையான தகுதி.
அதாவது தன் குற்றங்களையும், பாவ செயல்பாடுகளையும் நியாயப் படுத்தாமல், அதை இறைவனிடம் ஒப்புக்கொள்ளுதலாகும். சூழ்நிலையின் நெருக்கடினால் பொய் பேசிவிட்டேன், திருடிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன், பழிதீர்த்துவிட்டேன் என்று தவறுகளை நியாயப்படுத்தும் எவரும், உண்மையான கிறிஸ்தவத்தின் ஆரம்பகட்ட தகுதியைக்கூடப் பெறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்களிடம் அநீதி, பொறாமை, பெருமை, வேறுபாடு பார்த்தல், பகை, பழிதீர்க்கும் மூர்க்கம் போன்ற ஜென்ம மற்றும் சரீர சுபாவத்திலான பாவங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில் இவர்களிடம் ஜெபம், உபவாச ஜெபம், சபைகூடுதல், காணிக்கை செலுத்துதல், மன்னிப்பு கேட்குதல் (தேவைப்படுவோரிடம் மட்டும்), ஊழியங்களை தாங்குதல் என பல கண்ணுக்குத் தெரியும் நற்செயல்பாடுகளும் காணப்படும். ஆனால் இவைஎல்லாம் உண்மையான கிறிஸ்தவ நடத்தைக்கான செயல்பாடு அல்ல.
கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியைப் பெறாமல், இந்த நற்செயல்கள் மூலம் இறைவனுடன் யாராலும் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது. எனவே இவை அனைத்துமே, ஆன்மிக பலன்களை (ஆத்தும ஆசீர்வாதங்களை) அடைவதற்கு உதவாத மற்றும் வீணான நற்செயல்களாகவே உள்ளன.
பாவி என்று உணர்ந்து, தன்னை தாழ்த்தி குற்றங்களை ஒப்புக்கொண்டு, இனி பாவம் செய்யமாட்டேன் என்று இறைவனுடன் ஒப்புரவாகி மனந்திருந்தும் பாவிதான் கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தகுதியைப் பெறுகிறான். அவனுக்குத்தான் ஆன்மிகத்தின் அடுத்த வழி திறக்கப் படுகிறது.
மனந்திரும்பும் நிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது, அதற்கான மன்னிப்பை பெறவும் வேதம் வழிகாட்டுகிறது. யாருக்கு எதிராக குற்றம், அநீதி, அநியாயம் செய்தோமோ அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க இறைவனால் உள்ளம் தூண்டப்படுகிறது. இதில் மிகுந்த தயக்கம் ஏற்பட்டாலும், இறைஆவியின் மூலம் தைரியம் அளிக்கப்படு கிறது. ஆனால் இதில் பலர் சோர்ந்து, சில பாவங்களுக்கான மன்னிப்பை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.
எனவே இறைவனுடனான மேலும் நெருக்கம் ஏற்படாமல் போய்விடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனுடனான தொடர்பை இழந்து பழைய பாவ நிலைக்கு திரும்பும் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றனர். இறைவன் காட்டும் வழியை உணர்ந்து நடந்துகொள்ளாமல், மாறாகச் சென்றால் அதில் இறைவனின் பாதுகாப்பு கிடைக்காது.
அடுத்ததாக, மனிதனுக்கு எதிரான குற்ற செய்கைகளுக்காக இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஏனென்றால், மனிதன் என்பவன் இறைவனின் படைப்பு. அந்த வகையில், அவரது படைப்பில் ஒன்றான மனிதனை துன்புறுத்தியதற்காக இறைவனிடமும் மன்னிப்பை பெற வேண்டும். இப்படிப்பட்ட இறைவனின் சித்தத்துக்கு உட்பட்ட வழிகாட்டுதலின் மூலமாகத்தான் படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்தை அடைய முடியும்.
பாவி என்ற நிலையில் இருந்துகொண்டு காணிக்கை கொடுப்பதாலோ அல்லது வேறு யாரிடமாவது சென்று ஜெபிப்பதாலோ ஆன்மிக நிலைப்பாட்டை அடைய முடியாது. ஆன்மிகம் என்பது, குறிப்பிட்ட மதத்தில் இருந்துகொண்டு எல்லாரையும்போல கோவிலுக்குச் சென்று வருவதல்ல. இறைவனை அடையும் தகுதிகளைப் பெற்று, அந்த வழியில் சென்று, அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்வதுதான் ஆன்மிகம். இதற்கு மதம் உதவாது.
இயேசு காட்டியுள்ள இந்த ஆன்மிக வழியில், பகைத்தவருக்காக ஜெபித்தல், அடித்தவரையும் அரவணைத்தல், வேறுபாடு பார்க்காமல் உதவுதல், அனைவரின் முன்பாகவும் தாழ்மையாக நடந்துகொள்ளுதல், அநியாய செல்வங்களை தவிர்த்தல், பாவநெருக்கடிகளுக்குள் சாயாமல் இருத்தல் என்ற இறைத்தன்மைகள் வருகின்றன. இதுதான் தெய்வீக அன்பு.
பக்தனின் வாழ்க்கையில் இவை குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். இந்த வழியில் ஒருவன் நடக்கிறான் என்றால் அவன் இயேசுவுடன் (கிறிஸ்தவ மதத்துடன் அல்ல) பிணைப்பில் இருக்கிறான் என்று அர்த்தம். இந்த வழிகளைக் கடந்துதான், அவனுக்கென்று இறைவன் வைத்துள்ள இலக்கை நோக்கிச் சென்றாக வேண்டும்.
இயேசு கூறியுள்ள அந்த வழிகளில் நடந்து செல்வது, இயல்பு குணத்தில் நீடிக்கும் சாதாரண மனிதனால் முடியாது. கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டாலே ஒருவனை கிறிஸ்தவனாக வேதம் அங்கீகரித்துவிடவில்லை. இயேசு சொன்ன தெய்வீக அன்பின்படி நடந்து, கிறிஸ்தவ மார்க்கத்தில் (மதத்தில் அல்ல) நீடித்து வாழ்வது எளிதானது அல்ல என்பதால்தான் அதை இடுக்கமான வழி என்று வேதம் கூறுகிறது. மதத்தில் உள்ள பெயர்ப்பட்டியல் பெரிதாக இருந்தாலும், உண்மையான கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தவர்கள் குறைவுதான்(மத்.7:13, லூக்.13:24) என்பதே வேதத்தின் முடிவு.
பலிபீடம் பாவ மன்னிப்பைத் தருகிறது. பலிபீடம் ஆண்டவரோடு நாம் இணைக்கப்படும் மீட்பைத் தருகிறது. பலிபீடம் நமக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தருகிறது.
எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரேல் மக்கள், மோசே எனும் தலைவரின் கீழ் விடுதலையாகி கானானை நோக்கி நடக்கின்றனர். பாலை நிலத்தில் அவர்கள் நடந்த போது மேகத்தூணாகவும், நெருப்பாகவும் இறைவன் அவர்களோடு கூட இருக்கிறார்.
அதன்பின் அவர் மக்களோடு மக்களாக கூடாரத்தில் வசிக்க விரும்பினார். அதற்காக தன்னுடைய தூயகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தனக்கான பலிபீடம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுள் மோசேயிடம் விளக்கினார்.
பலிபீடத்துக்கு நான்கு முனைகள், ஐந்து முழம் அளவில் சதுர அமைப்பு போன்றவையெல்லாம் அவர் சொன்ன விதிகளில் சில.
கடவுளுக்கு பலி செலுத்தவும், குருத்துவப் பணி செய்வதற்கும் ஆரோனும் அவனுடைய குடும்பமும் திருநிலைப்படுத்த வேண்டும். அதற்கான வழி முறைகளையும் இறைவன் கொடுக்கிறார்.
“காளையின் ரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி ரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு” (யாத் 29:12) இது முதல் கட்டம்.
“இரண்டாவது, செம்மறிக்கடாவை வெட்ட வேண்டும். அதன் ரத்தத்தை எடுத்து ஆரோன் மற்றும் புதல்வர்களின் வலக்காது நுனியிலும், வலக்கால் பெருவிரலிலும் வைக்க வேண்டும். பலி பீடத்தைச் சுற்றி ரத்தம் தெளிக்க வேண்டும். மிச்ச ரத்தத்தை ஆரோன், அவர் புதல்வர்கள் ஆகியோர் மீதும் அவர்களுடைய உடைகள் மீதும் தெளிக்க வேண்டும்” (விடுதலைப்பயணம் 29: 19-21)
தனக்கான பலி எப்படி இருக்கவேண்டும், தனக்கு பலி கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக பழைய ஏற்பாட்டில் கடவுள் சொல்கிறார். அதே போல, உலகின் மீட்பு எப்படி இருக்க வேண்டும், யாரால் நிகழ வேண்டும், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் மிகத் துல்லியமாக இறைவன் திட்டமிட்டி ருந்தார்.
அப்படி உலக பாவங்களைப் போக்க வந்தவர் தான் இயேசு. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே புதிய ஏற்பாட்டின் நிழல் உருவங்கள் என்கிறது விவிலியம். அப்படி, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பலிபீடம் கிறிஸ்துவின் நிழல் உருவம். “நமக்கு ஒரு பலிபீடம் உண்டு (எபிரேயர் 13:10) எனும் புதிய ஏற்பாட்டு வசனம் அதை எடுத்துக் காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில், பலிபீடத்தைத் தரிசித்த பின்பு தான் ஒருவர் இறைவனின் அருகில் செல்ல முடியும். புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மூலமாக மட்டுமே மீட்பை அடைய முடியும்.
பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஒரு மாற்றத்தின் அடையாளம், அந்த மாற்றத்துக்குப் பின்பே நாம் தூயகத்துக்குச் செல்ல முடியும். இன்று நமது மனமாற்றத்தின் கருவியாக இருப்பவர் இயேசுவே.
இந்த பலிபீடம் ‘நம்பிக்கை மிக்க அழைப்பு’ கொடுக்கப்படும் இடம். இந்த பலிபீடம் பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கிற ஒரு இடம்.
பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஐந்து முழம் அளவு கொண்டது. ஐந்து என்பது இறை அருளின் எண். புதிய ஏற்பாட்டில் இறைவனின் அருள் இயேசுவின் வாழ்க்கை மூலம் வெளிப்படுகிறது.
அந்த பலிபீடத்தின் நான்கு கொம்புகளும் இயேசுவின் வல்லமையின் அடையாளம். நான்கு எனும் எண் படைப்போடு தொடர்புடையது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் கிறிஸ்துவிடம் வரலாம், அவர்களுக்கு மீட்பு உண்டு என்பதை அந்த எண் உணர்த்துகிறது.
இயேசுவின் வாழ்க்கையை விவிலியத்தில் நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். பலிபீடத்தின் நான்கு கொம்புகளும், இயேசுவின் வாழ்க்கையை நான்கு கோணத்தில் அணுகியிருக்கும் அந்த நான்கு நூல்களைக் குறிக்கின்றன.
மத்தேயு இயேசுவை அரசராகவும், மார்க் அடிமையாகவும், லூக்கா மனிதராகவும், யோவான் கடவுளாகவும் அணுகுகின்றார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இயேசு மக்களின் மீட்பர் என்பது மட்டுமே மாறாத ஒன்று.
பாலை நில வாழ்விலே பலிபீடம் மக்களால் சுமந்து செல்லப்பட்டது. எந்த ஒரு கிறிஸ்தவனும் சிலுவையை சுமப்பதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறான் என்பதன் அடையாளம் அது.
மனிதன், கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவன். ஆனால் பாவத்தால் அழிவுக்கு உள்ளானான். பரிசுத்த ஆவியால் மீண்டும் அவன் பிறக்கிறான். கடைசியில் இறைமகன் இயேசுவுக்கு ஒப்பாக மாறுகிறான் எனும் படிப்படியான மாற்றத்தை பலிபீடம் கற்றுத் தருகிறது.
பலிபீடம் பாவ மன்னிப்பைத் தருகிறது. பலிபீடம் ஆண்டவரோடு நாம் இணைக்கப்படும் மீட்பைத் தருகிறது. பலிபீடம் நமக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தருகிறது. பரம தந்தையின் அருகாமையைத் தரிசிக்கும் பாக்கியத்தைத் தருகிறது.
இன்று சிலுவையே பலி பீடம். அதன் அடியில் நாம் நம்மை உணரவேண்டும். மனம் திரும்பவேண்டும். ஏழைகளுக்கு இரங்கும் மனம் கொண்டவர்களாக மாற வேண்டும். நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கும் மனிதர் களாக மாற வேண்டும்.
பலிபீடம் சொல்லும் இந்த பாடங்களைக் கற்றுக் கொள்வோம்.
அதன்பின் அவர் மக்களோடு மக்களாக கூடாரத்தில் வசிக்க விரும்பினார். அதற்காக தன்னுடைய தூயகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தனக்கான பலிபீடம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுள் மோசேயிடம் விளக்கினார்.
பலிபீடத்துக்கு நான்கு முனைகள், ஐந்து முழம் அளவில் சதுர அமைப்பு போன்றவையெல்லாம் அவர் சொன்ன விதிகளில் சில.
கடவுளுக்கு பலி செலுத்தவும், குருத்துவப் பணி செய்வதற்கும் ஆரோனும் அவனுடைய குடும்பமும் திருநிலைப்படுத்த வேண்டும். அதற்கான வழி முறைகளையும் இறைவன் கொடுக்கிறார்.
“காளையின் ரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி ரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு” (யாத் 29:12) இது முதல் கட்டம்.
“இரண்டாவது, செம்மறிக்கடாவை வெட்ட வேண்டும். அதன் ரத்தத்தை எடுத்து ஆரோன் மற்றும் புதல்வர்களின் வலக்காது நுனியிலும், வலக்கால் பெருவிரலிலும் வைக்க வேண்டும். பலி பீடத்தைச் சுற்றி ரத்தம் தெளிக்க வேண்டும். மிச்ச ரத்தத்தை ஆரோன், அவர் புதல்வர்கள் ஆகியோர் மீதும் அவர்களுடைய உடைகள் மீதும் தெளிக்க வேண்டும்” (விடுதலைப்பயணம் 29: 19-21)
தனக்கான பலி எப்படி இருக்கவேண்டும், தனக்கு பலி கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக பழைய ஏற்பாட்டில் கடவுள் சொல்கிறார். அதே போல, உலகின் மீட்பு எப்படி இருக்க வேண்டும், யாரால் நிகழ வேண்டும், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் மிகத் துல்லியமாக இறைவன் திட்டமிட்டி ருந்தார்.
அப்படி உலக பாவங்களைப் போக்க வந்தவர் தான் இயேசு. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே புதிய ஏற்பாட்டின் நிழல் உருவங்கள் என்கிறது விவிலியம். அப்படி, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பலிபீடம் கிறிஸ்துவின் நிழல் உருவம். “நமக்கு ஒரு பலிபீடம் உண்டு (எபிரேயர் 13:10) எனும் புதிய ஏற்பாட்டு வசனம் அதை எடுத்துக் காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில், பலிபீடத்தைத் தரிசித்த பின்பு தான் ஒருவர் இறைவனின் அருகில் செல்ல முடியும். புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மூலமாக மட்டுமே மீட்பை அடைய முடியும்.
பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஒரு மாற்றத்தின் அடையாளம், அந்த மாற்றத்துக்குப் பின்பே நாம் தூயகத்துக்குச் செல்ல முடியும். இன்று நமது மனமாற்றத்தின் கருவியாக இருப்பவர் இயேசுவே.
இந்த பலிபீடம் ‘நம்பிக்கை மிக்க அழைப்பு’ கொடுக்கப்படும் இடம். இந்த பலிபீடம் பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கிற ஒரு இடம்.
பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஐந்து முழம் அளவு கொண்டது. ஐந்து என்பது இறை அருளின் எண். புதிய ஏற்பாட்டில் இறைவனின் அருள் இயேசுவின் வாழ்க்கை மூலம் வெளிப்படுகிறது.
அந்த பலிபீடத்தின் நான்கு கொம்புகளும் இயேசுவின் வல்லமையின் அடையாளம். நான்கு எனும் எண் படைப்போடு தொடர்புடையது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் கிறிஸ்துவிடம் வரலாம், அவர்களுக்கு மீட்பு உண்டு என்பதை அந்த எண் உணர்த்துகிறது.
இயேசுவின் வாழ்க்கையை விவிலியத்தில் நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். பலிபீடத்தின் நான்கு கொம்புகளும், இயேசுவின் வாழ்க்கையை நான்கு கோணத்தில் அணுகியிருக்கும் அந்த நான்கு நூல்களைக் குறிக்கின்றன.
மத்தேயு இயேசுவை அரசராகவும், மார்க் அடிமையாகவும், லூக்கா மனிதராகவும், யோவான் கடவுளாகவும் அணுகுகின்றார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இயேசு மக்களின் மீட்பர் என்பது மட்டுமே மாறாத ஒன்று.
பாலை நில வாழ்விலே பலிபீடம் மக்களால் சுமந்து செல்லப்பட்டது. எந்த ஒரு கிறிஸ்தவனும் சிலுவையை சுமப்பதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறான் என்பதன் அடையாளம் அது.
மனிதன், கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவன். ஆனால் பாவத்தால் அழிவுக்கு உள்ளானான். பரிசுத்த ஆவியால் மீண்டும் அவன் பிறக்கிறான். கடைசியில் இறைமகன் இயேசுவுக்கு ஒப்பாக மாறுகிறான் எனும் படிப்படியான மாற்றத்தை பலிபீடம் கற்றுத் தருகிறது.
பலிபீடம் பாவ மன்னிப்பைத் தருகிறது. பலிபீடம் ஆண்டவரோடு நாம் இணைக்கப்படும் மீட்பைத் தருகிறது. பலிபீடம் நமக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தருகிறது. பரம தந்தையின் அருகாமையைத் தரிசிக்கும் பாக்கியத்தைத் தருகிறது.
இன்று சிலுவையே பலி பீடம். அதன் அடியில் நாம் நம்மை உணரவேண்டும். மனம் திரும்பவேண்டும். ஏழைகளுக்கு இரங்கும் மனம் கொண்டவர்களாக மாற வேண்டும். நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கும் மனிதர் களாக மாற வேண்டும்.
பலிபீடம் சொல்லும் இந்த பாடங்களைக் கற்றுக் கொள்வோம்.
பூண்டி மாதா பேராலயத்தில் ஒவ்வொரு மாதமும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்துக்கான (ஜூலை) புதுமை இரவு வழிபாடு நடந்தது.
பூண்டி மாதா பேராலயத்தில் ஒவ்வொரு மாதமும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் மன அழுத்தத்தை போக்கவும், உலக அமைதிக்காகவும் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த மாதத்துக்கான (ஜூலை) புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் காங்கேயம் குறைதீர்க்கும் குழந்தை மாதா ஆலய பங்குத்தந்தை கிளாடியஸ் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து பூண்டி மாதாவின் தேர் பவனி நடந்தது.
அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்று மாதாவை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி, உதவி பங்குத்தந்தையர்கள் எடிசன்ராஜ், அமலதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாதத்துக்கான (ஜூலை) புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் காங்கேயம் குறைதீர்க்கும் குழந்தை மாதா ஆலய பங்குத்தந்தை கிளாடியஸ் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து பூண்டி மாதாவின் தேர் பவனி நடந்தது.
அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்று மாதாவை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி, உதவி பங்குத்தந்தையர்கள் எடிசன்ராஜ், அமலதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில் இருதய ஆண்டவர் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சிதம்பரத்தில் இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஆலயத்தில் தினமும் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.
பின்னர் ஆலயம் முன்பு மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நின்றிருந்த தேரில் இருதய ஆண்டவர் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலயத்தில் இருந்து ஆடம்பர தேர்பவனி தொடங்கியது.
தூய இதயமரியன்னை பங்குத்தந்தை சூசை தலைமையில் நடைபெற்ற இந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்த பவனி கனகசபைநகர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, போல்நாராயணன் தெருவழியாக மீண்டும் இருதய ஆண்டவரின் ஆலயத்தை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 8 மணிக்கு ஆலயத்தில் கொடி இறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் அலெக்ஸ்சாண்டர், துணைத்தலைவர் ஜெகநாதன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி, மோகன், ஒஸ்வின்ராஜ், சாமுவேல் மற்றும் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து ஆலயத்தில் தினமும் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.
பின்னர் ஆலயம் முன்பு மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நின்றிருந்த தேரில் இருதய ஆண்டவர் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலயத்தில் இருந்து ஆடம்பர தேர்பவனி தொடங்கியது.
தூய இதயமரியன்னை பங்குத்தந்தை சூசை தலைமையில் நடைபெற்ற இந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்த பவனி கனகசபைநகர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, போல்நாராயணன் தெருவழியாக மீண்டும் இருதய ஆண்டவரின் ஆலயத்தை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 8 மணிக்கு ஆலயத்தில் கொடி இறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் அலெக்ஸ்சாண்டர், துணைத்தலைவர் ஜெகநாதன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி, மோகன், ஒஸ்வின்ராஜ், சாமுவேல் மற்றும் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, நாளை தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடக்கிறது.
தஞ்சை பூக்காரத்தெருவில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயமானது மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகும். 1867-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கடந்த 1969-வது ஆண்டில் ஆயர் ஆரோக்கியசாமி சுந்தரம் தலைமையில் நூற்றாண்டு விழாவும், 1994-வது ஆண்டில் ஆயர் பாக்கியம் ஆரோக்கியசாமி தலைமையில் 125-ம் ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற்றன. இந்தநிலையில் தற்போது ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 150-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் நவநாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தன.
இன்று (சனிக்கிழமை) மாலை சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் தஞ்சை ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சிகளும் பேராலய 150-வது ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் கலை விழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு திரு இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெறுகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திரு இருதய பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா திருப்பலி தஞ்சை ஆயர் எம்.தேவராஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஏ.ஜுடு பால்ராஜ் கலந்து கொள்கிறார். 150-ம் ஆண்டின் நிறைவு விழா நினைவாக பேராலயம் உருவம் பதித்த சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை எஸ்.செபஸ்டின் பெரியண்ணன் தலைமையில் பங்கு பேரவை, பொறுப்பாளர் மற்றும் பக்த சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் தஞ்சை ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சிகளும் பேராலய 150-வது ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் கலை விழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு திரு இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெறுகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திரு இருதய பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா திருப்பலி தஞ்சை ஆயர் எம்.தேவராஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஏ.ஜுடு பால்ராஜ் கலந்து கொள்கிறார். 150-ம் ஆண்டின் நிறைவு விழா நினைவாக பேராலயம் உருவம் பதித்த சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை எஸ்.செபஸ்டின் பெரியண்ணன் தலைமையில் பங்கு பேரவை, பொறுப்பாளர் மற்றும் பக்த சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான். தன் வழிகளில் தாறுமாறானவனே அவரை அலட்சியம் பண்ணுகிறான் (நீதி.14:2).
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான். தன் வழிகளில் தாறுமாறானவனே அவரை அலட்சியம் பண்ணுகிறான் (நீதி.14:2).
மனிதன் வானத்தின் தோற்றத்தை நிதானித்து, செவ்வானம் மந்தாரமுமாயிருக்கிறது, காற்றும் மழையும் உண்டாகும் என்று அறிந்தவர்கள், வாழ்க்கையில் நிதானம் இல்லாமல் செயல்படுகிறார்கள். சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து அறிந்து உன் தேவனுக்கு முன்பாக உத்தமனாக ஜீவிக்க வேண்டும். இறைவன் ஜனங்களை நிதானமாய் நடத்துகிறார். அவர்கள் சந்தோஷத்தோடே மகிழ்ச்சியாய் ஜீவிக்கிறார்கள்.
எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்படுகிறவன் வாழ்க்கை செழிக்கும். அவர்களுக்கு இடறல்கள் வருவது இல்லை. நிதானமாய் பேசினால் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவினிடத்தில் தவறு செய்து நிதானமாய் உத்தரவு சொன்னபோது அவன் பிழைத்தான்.
நீ வழக்காடப் பதற்றமாய் போகாதே. முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்துவான். நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ சிந்தித்து செயல்பட்டுப்போய் நிதானமாய் பேசினால் வெற்றியை காண்பாய்.
நன்மை-தீமை அறிந்து செயல்படு
நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது (நீதி.17:13).
ஒருவரிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தீமை செய்யக்கூடாது. தீமை செய்தால் பாவம் நமது வீட்டின் வாசற்படியில் வந்து படுத்துக்கொள்ளும். உண்மையாய் தேவனிடத்தில் அன்பு வைத்தவர்கள் யாருக்கும் தீமை செய்யமாட்டார்கள்.
யாக்கோபின் மாமன் லாபான் யாக்கோபுக்கு தீமை செய்ய நினைத்த போது, கர்த்தர் சொப்பனத்தில் தோன்றி, ‘நீ யாக்கோபுக்கு நன்மையே அன்றித் தீமை ஒன்றும் செய்யாதே’ என்று எச்சாரித்தார்.
நன்மை செய்ய தேடுகிறவன் தேவ கிருபையை பெறுவான். தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். மனிதன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான். தீமை செய்கிறவன் கொடுமையைப் புசிப்பான். பாவம் செய்தால் தீவினை தொடரும். தேவ நீதியின்படி ஜீவிக்கிறவர்களுக்கோ நன்மை இரட்டிப்பாக வரும்.
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையை கண்டடைவதில்லை. புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறு செய்கிறார்கள். நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ தேவ மகிமை சூழ்ந்து கொள்ளும்.
தீமையை விட்டு விலகி நன்மை செய்தால், நீதியின் சூரியனாய் ஜொலிக்கும் இயேசு உன்னோடு இருப்பார். நீ தேவ மகிமையை காண்பாய். உன் வீட்டில் சமாதானத்தின் ஆசீர்வாதம் பெருகும்.
பொறுமையாய் செயல்படு
அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள். உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும் (நீதி.5:10).
மனிதன், ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதத்தை அவசரப்பட்டு இழந்து போகிறான். எப்படி ஆசீர்வாதத்தை பாதுகாக்கவேண்டும் என்று பொறுமையாக சிந்தித்து செயல்படாத காரணத்தால், ஆசீர்வாதத்தின் மேன்மையை பல தீய வழிகளில் சென்று அந்நியருக்கு கொடுக்கிறான். தன் ஆயுசின் காலத்தை கொடூரமான வழிகளில் செலவிடுகிறான். எல்லா தீமைக்கும் அடிமை ஆகிவிடுகிறான். முடிவிலே ஆசீர்வாதமும் சரீரமும் உருவழியும் போது துக்கப்பட்டு வேதனைப்படுகிறான்.
‘ஐயோ, தேவ போதகத்தை நான் கேளாமலும், பலர் உபதேசம் பண்ணியும் சிந்தித்து செயல்படாமல் போனேன். அவசரப்பட்டேன், பொறுமை இல்லையே’ என்று புலம்புகிறான்.
உன் பிரயாசத்தின் ஆசீர்வாதம் திரும்பி வருவதில்லை. தேவ ஜனமே மோசம் போகாதீர்கள். மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறதை அறியாமல் போனார்கள். பொறுமையாய் செயல்படுகிறவர்கள் தேவ பலத்தின் மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் காணப்படுவார்கள் அவர்கள் தேவனோடு இருப்பார்கள்.
சாந்த குணமாய் செயல்படு
‘மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுண முள்ளவனாயிருந்தான்’ (எண்.12:3).
மோசே மிகுந்த கோபக்காரன். நியாய பிரமாணத்தை படித்தும் தேவ சத்தத்தை கேட்டும் பூமியில் சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவன் ஆனான். தேவனே சாட்சி கொடுக்கிறார்.
மோசே கர்த்தரிடத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், இஸ்ரவேல் ஜனத்தோடே பேசும் போதும் சாந்த குணமாய் பேசினான்.
நாநூற்றி முப்பது வருடம் அடிமைத் தனத்திலிருந்து எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தில் வந்தபோது, பார்வோன் படைகள் பின்தொடர இஸ்ரவேல் ஜனங்கள் பிதாவை நோக்கி கூப்பிட்டார்கள். மோசேயினிடத்தில் மிகுந்த கோபம் கொண்டார்கள்.
மோசே, தேவனோடு பேசினான். கர்த்தர் சமுத்திரத்தை பிளந்து சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையை உண்டு பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையிலே நடந்து சமுத்திரத்தை கடந்தார்கள்.
மோசே சாந்த குணத்தினால் சிந்தித்து செயல்பட்டான். தேவனின் கிரியை அற்புதமாக அதிசயமாக செயல்பட்டது. சகல ஜனங்களும் உயிர் தப்பினார்கள்.
மோசேயின் சாந்த குணத்தால் ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல பேசினார். நாமும் சாந்த குணமாய் சிந்தித்து செயல்பட்டால் மோசேயோடு பேசிய தேவன் நம்மோடும் பேசுவார்.
சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
மனிதன் வானத்தின் தோற்றத்தை நிதானித்து, செவ்வானம் மந்தாரமுமாயிருக்கிறது, காற்றும் மழையும் உண்டாகும் என்று அறிந்தவர்கள், வாழ்க்கையில் நிதானம் இல்லாமல் செயல்படுகிறார்கள். சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து அறிந்து உன் தேவனுக்கு முன்பாக உத்தமனாக ஜீவிக்க வேண்டும். இறைவன் ஜனங்களை நிதானமாய் நடத்துகிறார். அவர்கள் சந்தோஷத்தோடே மகிழ்ச்சியாய் ஜீவிக்கிறார்கள்.
எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்படுகிறவன் வாழ்க்கை செழிக்கும். அவர்களுக்கு இடறல்கள் வருவது இல்லை. நிதானமாய் பேசினால் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவினிடத்தில் தவறு செய்து நிதானமாய் உத்தரவு சொன்னபோது அவன் பிழைத்தான்.
நீ வழக்காடப் பதற்றமாய் போகாதே. முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்துவான். நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ சிந்தித்து செயல்பட்டுப்போய் நிதானமாய் பேசினால் வெற்றியை காண்பாய்.
நன்மை-தீமை அறிந்து செயல்படு
நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது (நீதி.17:13).
ஒருவரிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தீமை செய்யக்கூடாது. தீமை செய்தால் பாவம் நமது வீட்டின் வாசற்படியில் வந்து படுத்துக்கொள்ளும். உண்மையாய் தேவனிடத்தில் அன்பு வைத்தவர்கள் யாருக்கும் தீமை செய்யமாட்டார்கள்.
யாக்கோபின் மாமன் லாபான் யாக்கோபுக்கு தீமை செய்ய நினைத்த போது, கர்த்தர் சொப்பனத்தில் தோன்றி, ‘நீ யாக்கோபுக்கு நன்மையே அன்றித் தீமை ஒன்றும் செய்யாதே’ என்று எச்சாரித்தார்.
நன்மை செய்ய தேடுகிறவன் தேவ கிருபையை பெறுவான். தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். மனிதன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான். தீமை செய்கிறவன் கொடுமையைப் புசிப்பான். பாவம் செய்தால் தீவினை தொடரும். தேவ நீதியின்படி ஜீவிக்கிறவர்களுக்கோ நன்மை இரட்டிப்பாக வரும்.
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையை கண்டடைவதில்லை. புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறு செய்கிறார்கள். நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ தேவ மகிமை சூழ்ந்து கொள்ளும்.
தீமையை விட்டு விலகி நன்மை செய்தால், நீதியின் சூரியனாய் ஜொலிக்கும் இயேசு உன்னோடு இருப்பார். நீ தேவ மகிமையை காண்பாய். உன் வீட்டில் சமாதானத்தின் ஆசீர்வாதம் பெருகும்.
பொறுமையாய் செயல்படு
அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள். உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும் (நீதி.5:10).
மனிதன், ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதத்தை அவசரப்பட்டு இழந்து போகிறான். எப்படி ஆசீர்வாதத்தை பாதுகாக்கவேண்டும் என்று பொறுமையாக சிந்தித்து செயல்படாத காரணத்தால், ஆசீர்வாதத்தின் மேன்மையை பல தீய வழிகளில் சென்று அந்நியருக்கு கொடுக்கிறான். தன் ஆயுசின் காலத்தை கொடூரமான வழிகளில் செலவிடுகிறான். எல்லா தீமைக்கும் அடிமை ஆகிவிடுகிறான். முடிவிலே ஆசீர்வாதமும் சரீரமும் உருவழியும் போது துக்கப்பட்டு வேதனைப்படுகிறான்.
‘ஐயோ, தேவ போதகத்தை நான் கேளாமலும், பலர் உபதேசம் பண்ணியும் சிந்தித்து செயல்படாமல் போனேன். அவசரப்பட்டேன், பொறுமை இல்லையே’ என்று புலம்புகிறான்.
உன் பிரயாசத்தின் ஆசீர்வாதம் திரும்பி வருவதில்லை. தேவ ஜனமே மோசம் போகாதீர்கள். மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறதை அறியாமல் போனார்கள். பொறுமையாய் செயல்படுகிறவர்கள் தேவ பலத்தின் மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் காணப்படுவார்கள் அவர்கள் தேவனோடு இருப்பார்கள்.
சாந்த குணமாய் செயல்படு
‘மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுண முள்ளவனாயிருந்தான்’ (எண்.12:3).
மோசே மிகுந்த கோபக்காரன். நியாய பிரமாணத்தை படித்தும் தேவ சத்தத்தை கேட்டும் பூமியில் சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவன் ஆனான். தேவனே சாட்சி கொடுக்கிறார்.
மோசே கர்த்தரிடத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், இஸ்ரவேல் ஜனத்தோடே பேசும் போதும் சாந்த குணமாய் பேசினான்.
நாநூற்றி முப்பது வருடம் அடிமைத் தனத்திலிருந்து எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தில் வந்தபோது, பார்வோன் படைகள் பின்தொடர இஸ்ரவேல் ஜனங்கள் பிதாவை நோக்கி கூப்பிட்டார்கள். மோசேயினிடத்தில் மிகுந்த கோபம் கொண்டார்கள்.
மோசே, தேவனோடு பேசினான். கர்த்தர் சமுத்திரத்தை பிளந்து சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையை உண்டு பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையிலே நடந்து சமுத்திரத்தை கடந்தார்கள்.
மோசே சாந்த குணத்தினால் சிந்தித்து செயல்பட்டான். தேவனின் கிரியை அற்புதமாக அதிசயமாக செயல்பட்டது. சகல ஜனங்களும் உயிர் தப்பினார்கள்.
மோசேயின் சாந்த குணத்தால் ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல பேசினார். நாமும் சாந்த குணமாய் சிந்தித்து செயல்பட்டால் மோசேயோடு பேசிய தேவன் நம்மோடும் பேசுவார்.
சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம்.
இறைவனிடம் 2 பேர் வணங்குகின்றனர். அதில் ஒருவர் நான் மிகவும் நல்லவன். நேர்மையானவன். ஆதலால் எனக்கு அருள்புரிய வேண்டும் என்றார்.
இரண்டாவதாக வேண்டியவன், நான் பலவீனமான மனிதன். என் மீது இரக்கம் காட்டும் என்கிறான். இவனுக்கே கடவுள் இரங்குகிறார் (லூக்கா 18:9-14). இறைவேண்டலின் ஒப்பீடு ஒரு போதும் ஏற்புடையதல்ல. பலவீனத்தை கடந்து ஒருவன் தனது சுய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தான் மட்டுமே யோக்கியன் மற்றவர் எல்லாம் அயோக்கியன் என்ற ஏளனப் பார்வை, கடவுளின் பார்வையில் அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு ரோஜாவுக்கும் சுய விருப்பம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பம் உண்டு. தன்னை அன்பு செய்பவரால் மட்டும் தான், அடுத்தவரை அன்பு செய்ய முடியும்.
சமூகத்தை அன்பு செய்ய முடியும். எனவே தான், இரண்டாவதாக கடவுளை வணங்கியவன் அடுத்தவரோடு தன்னை ஒப்பிடவில்லை, ஏளனப்பார்வையை செலுத்தவில்லை. ஆகவே! கடவுள் இவருக்கு அருள்புரிகிறார். தாழ்மையே உயர்வுக்கு வழி வகுத்தது.
உடல் அழகின், திறமையின், குடும்ப பின்னணி அடிப்படையில் என்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்வாக அல்லது தாழ்வாக எண்ணிக்கொள்வது. என்னோடு கூட வாழ்பவர்களை மற்ற நபர்களோடு ஒப்பிடுவது. உதாரணமாக, மனைவி கணவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரனை பார். எப்படி சம்பாதிக்கிறான். நீங்களும் தான்.. என்று பேசுவது.
என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.
- வில்லியம், பங்குத்தந்தை, புனித லூர்து அன்னை ஆலயம், வடகரை.
இரண்டாவதாக வேண்டியவன், நான் பலவீனமான மனிதன். என் மீது இரக்கம் காட்டும் என்கிறான். இவனுக்கே கடவுள் இரங்குகிறார் (லூக்கா 18:9-14). இறைவேண்டலின் ஒப்பீடு ஒரு போதும் ஏற்புடையதல்ல. பலவீனத்தை கடந்து ஒருவன் தனது சுய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தான் மட்டுமே யோக்கியன் மற்றவர் எல்லாம் அயோக்கியன் என்ற ஏளனப் பார்வை, கடவுளின் பார்வையில் அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு ரோஜாவுக்கும் சுய விருப்பம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பம் உண்டு. தன்னை அன்பு செய்பவரால் மட்டும் தான், அடுத்தவரை அன்பு செய்ய முடியும்.
சமூகத்தை அன்பு செய்ய முடியும். எனவே தான், இரண்டாவதாக கடவுளை வணங்கியவன் அடுத்தவரோடு தன்னை ஒப்பிடவில்லை, ஏளனப்பார்வையை செலுத்தவில்லை. ஆகவே! கடவுள் இவருக்கு அருள்புரிகிறார். தாழ்மையே உயர்வுக்கு வழி வகுத்தது.
உடல் அழகின், திறமையின், குடும்ப பின்னணி அடிப்படையில் என்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்வாக அல்லது தாழ்வாக எண்ணிக்கொள்வது. என்னோடு கூட வாழ்பவர்களை மற்ற நபர்களோடு ஒப்பிடுவது. உதாரணமாக, மனைவி கணவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரனை பார். எப்படி சம்பாதிக்கிறான். நீங்களும் தான்.. என்று பேசுவது.
என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.
- வில்லியம், பங்குத்தந்தை, புனித லூர்து அன்னை ஆலயம், வடகரை.
வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம்.
இயேசுவை பற்றிய அறிவே இவ்வுலகச்செல்வங்களை விட மேலானது என்பது தூய பவுலடியாரின் ஆழமான நம்பிக்கை. இயேசுவை அறிதல் என்பது, அறிவு சார்ந்த ஒன்றாக மட்டுமல்லாது, அது அவரோடு இணைந்த அனுபவமாகவும் அமைய வேண்டும். அத்தகைய அனுபவத்தின் மூலமாகத்தான் துச்சமென அனைத்தையும் நாம் தூக்கி எறிய முடியும்.
தூய பவுலடியார், இயேசு குறித்து கொண்டிருந்த அறிவு அனுபவப்பூர்வமானது. “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.ப. 9:5) என்ற ஆண்டவரின் வார்த்தையை கேட்டு தூய பவுலடியார் மனம் மாறினார். கிறிஸ்துவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கைக்காக பல்வேறு துன்பங்களை ஏற்றுக்கொண்டார். சிறையில் அடைத்த போதும், சாட்டையால் அடிக்கப்பட்ட போதும், கல்லெறியப்பட்டபோதும், கப்பல் சிதைவில் சிக்கிய போதும், சொந்த மக்களாலும், பிற மக்களாலும் இடர்களுக்கு ஆளானபோதும் அவர் மனந்தளரவில்லை. மாறாக, தாம் பெற்றிருந்த அழைப்பில் உறுதியாக நின்று, இயேசுவின் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்தார்.
இயேசுவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு, இயேசுவின் தோழமையை, தாழ்ச்சியை, தன்னையே அர்ப்பணித்ததை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. ஆகவேதான், தான் பற்றிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் இழக்க முன் வருகிறார். கிறிஸ்துவை அறிந்து கொள்ள முயலும் போது ஏற்படும் எந்த இழப்பும், குப்பைக்கு சமமானதாக கருதினார் தூய பவுலடியார்.
இந்த தவக்காலத்தில் உண்மையான செல்வமாகிய இயேசுவின் மீது நமது மனங்களை திருப்ப நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நிலையற்றவைகளில் நமது பற்றினை களைந்து, நிலையானவற்றில் பற்று கொள்ள நம்மை தூண்டும் காலம் இது. புகழ், பதவி, பணம் இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்வில் வரும் சிலுவைகளை சுமந்து கொண்டு, அவருக்கு உண்மையான சாட்சிகளாக வாழ முற்படுவோம்.
இயேசுவோடு இணைந்திருந்து அவரின் உடனிருப்பை உணர்வோம். வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம். ஏனெனில் நம் ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்தவக்காலம் நமக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
அருட்பணி. தா.சகாயராஜ், பங்குத்தந்தை, மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல்.
தூய பவுலடியார், இயேசு குறித்து கொண்டிருந்த அறிவு அனுபவப்பூர்வமானது. “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.ப. 9:5) என்ற ஆண்டவரின் வார்த்தையை கேட்டு தூய பவுலடியார் மனம் மாறினார். கிறிஸ்துவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கைக்காக பல்வேறு துன்பங்களை ஏற்றுக்கொண்டார். சிறையில் அடைத்த போதும், சாட்டையால் அடிக்கப்பட்ட போதும், கல்லெறியப்பட்டபோதும், கப்பல் சிதைவில் சிக்கிய போதும், சொந்த மக்களாலும், பிற மக்களாலும் இடர்களுக்கு ஆளானபோதும் அவர் மனந்தளரவில்லை. மாறாக, தாம் பெற்றிருந்த அழைப்பில் உறுதியாக நின்று, இயேசுவின் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்தார்.
இயேசுவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு, இயேசுவின் தோழமையை, தாழ்ச்சியை, தன்னையே அர்ப்பணித்ததை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. ஆகவேதான், தான் பற்றிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் இழக்க முன் வருகிறார். கிறிஸ்துவை அறிந்து கொள்ள முயலும் போது ஏற்படும் எந்த இழப்பும், குப்பைக்கு சமமானதாக கருதினார் தூய பவுலடியார்.
இந்த தவக்காலத்தில் உண்மையான செல்வமாகிய இயேசுவின் மீது நமது மனங்களை திருப்ப நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நிலையற்றவைகளில் நமது பற்றினை களைந்து, நிலையானவற்றில் பற்று கொள்ள நம்மை தூண்டும் காலம் இது. புகழ், பதவி, பணம் இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்வில் வரும் சிலுவைகளை சுமந்து கொண்டு, அவருக்கு உண்மையான சாட்சிகளாக வாழ முற்படுவோம்.
இயேசுவோடு இணைந்திருந்து அவரின் உடனிருப்பை உணர்வோம். வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம். ஏனெனில் நம் ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்தவக்காலம் நமக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
அருட்பணி. தா.சகாயராஜ், பங்குத்தந்தை, மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல்.
நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’.
நீதி எனக்கு வேண்டாம்
நீதியின் ஆண்டவர் வேண்டும்.
நிலம் எனக்கு வேண்டாம்
நிலத்தின் உரிமையாளர் வேண்டும்.
இது தாவீது மன்னனின் வேட்கையாய் இருந்தது.
நீதியின் ஆண்டவரும், நிலத்தின் உரிமையாளரும் கடவுளே என்பதை தாவீது அறிந்திருந்தார். கடவுள் தருவதில் அல்ல, கடவுளிடம் மட்டுமே மகிழ்ச்சியும், அமைதியும் உண்டு என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.
‘பிற தெய்வங்களின் பெயரைக் கூட நான் உச்சரிக்க மாட்டேன்’ என்கிறார் அவர். “அன்னிய தெய்வங்களின் பெயரை நீங்கள் சொல்லவேண்டாம்” எனும் கடவுளின் கட்டளையை அவர் பின்பற்றினார்.
இறை பிரசன்னத்தில் வாழ்வதையும், இறை சித்தத்தை நிறைவேற்றுவதையுமே அவர் தனது வாழ்க்கையில் முதன்மையாய்க் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் விட இறைவனே தனக்கு எல்லாம் என, இறைவனிடம் நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டுமெனில் நமக்கு இரண்டு அனுபவங்கள் தேவை.
ஒன்று: இறை பிரசன்னம், இன்னொன்று: இறை சித்தம்.
இறை பிரசன்னம் நம்மோடு இருக்கையில் நாம் இறை சித்தத்தை மட்டுமே செய்வோம்.
இறை பிரசன்னம்
ஏசாயா 6-ம் அதிகாரம் இறை பிரசன்னத்தின் அற்புதமான உதாரணம். அதை விடச்சிறந்த ஒரு பகுதியை நாம் பார்க்கவே முடியாது.
ஏசாயா ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்கிறார். அப்போது இறை பிரசன்னத்தை உணர்கிறார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததும் தன்னுடைய நிலையை அவர் உணர்கிறார். தன்னுடைய நிலை உணர்ந்த உடனே தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறார்.
பாவங்களை அறிக்கை செய்ததால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார். பாவ மன்னிப்பு கிடைத்ததும், கடவுளுடைய அழைப்பு தன்னுடைய செவிகளில் ஒலிப்பதைக் கேட்கிறார். கடவுளுடைய அழைப்பைக் கேட்டதும் தன்னை அதற்கு அர்ப்பணிக்கிறார்... என படிப்படியாக இறை பிரசன்னத்தை இந்த அதிகாரம் விளக்குகிறது.
“(இறைவன்) ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக்கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது” (1 திமோத்தேயு 6:16) என்கிறது பைபிள்.
இறை பிரசன்னத்தை யாரும் காணமுடியாது எனும் நிலையை மாற்றியவர் இறைமகன் இயேசு. அவரது சிலுவை நமக்கு மீட்புக்காய் தரப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நமக்கு தரப்படாவிட்டால் நாம் கடவுளோடு நெருங்கியிருக்க முடியாது. காண முடியாத அவரை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம்.
இறைவனின் பிரசன்னத்தை உணர்கிற உணர்வை நமக்கு சிலுவை பெற்றுத்தருகிறது. அதுவே மிகப்பெரிய பாக்கியம்.
ஒருவராலும் அவரை நெருங்கவும் முடியாது என்கிறது விவிலியம். மோசேயிடம் “நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்கிறார் கடவுள்.
அப்படிப்பட்ட கடவுள் இன்று நமக்குள் வசிக்கிறார். அதெப்படி சாத்தியமானது? இறைமகன் இயேசுவின் சிலுவை மரணமே அதை சாத்தியமாக்கியிருக்கிறது.
இறை சித்தம்
இறை சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைத் தேவை.
“நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ ..” (தீத்து 2 :12 )என விவிலியம் பேசுகிறது.
இறை சித்தம் நமது வாழ்க்கையில் நிகழ வேண்டுமெனில் நாம் தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டும். தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டுமெனில் பாவ இச்சையை வெறுக்க வேண்டும்.
“உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்து போகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்” (1 யோவான் 2:17) என்கிறது விவிலியம்.
இறை சித்தத்தை நிறைவேற்றுவது விருப்பு,
பாவ இச்சையை அகற்றுவது மறுப்பு.
திருத்தூதர் பவுல் இறை பிரசன்னத்தை உணர்ந்தவர், இறை சித்தத்தை நிறைவேற்றியவர். பழைய ஏற்பாட்டில் தாவீதைப் போல, புதிய ஏற்பாட்டில் பவுல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
பவுல் கிறிஸ்தவர்களைக் கொல்லத்தேடியவர். எப்போது அவருக்கு இறைவனின் பிரசன்னம் கிடைத்ததோ, அப்போது இறை சித்தத்துக்கு தன்னை ஒப்படைத்தார். பின்னர், தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து இறைவனோடு பயணித்தார்.
தொடர்ந்து தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் இறைவனின் சித்தம் என எடுத்துக் கொண்டவர் அவர். திருச்சபையினரைச் சந்திக்கச் செல்வதையும், சந்தித்து திரும்பியதையும், நற்செய்தி அறிவித்தலுக்கு எழுந்த தடைகளையும் அதன்பின் நடந்த எல்லாவற்றையும் இறை சித்தம் என்கிறார்.
பழைய ஏற்பாட்டில் தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றினார் என்பதை புதிய ஏற்பாடும் பதிவு செய்கிறது. ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்’ என தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றியதை திருத்தூதர் பணிகள் நூல் பேசுகிறது.
நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’.
நீதியின் ஆண்டவர் வேண்டும்.
நிலம் எனக்கு வேண்டாம்
நிலத்தின் உரிமையாளர் வேண்டும்.
இது தாவீது மன்னனின் வேட்கையாய் இருந்தது.
நீதியின் ஆண்டவரும், நிலத்தின் உரிமையாளரும் கடவுளே என்பதை தாவீது அறிந்திருந்தார். கடவுள் தருவதில் அல்ல, கடவுளிடம் மட்டுமே மகிழ்ச்சியும், அமைதியும் உண்டு என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.
‘பிற தெய்வங்களின் பெயரைக் கூட நான் உச்சரிக்க மாட்டேன்’ என்கிறார் அவர். “அன்னிய தெய்வங்களின் பெயரை நீங்கள் சொல்லவேண்டாம்” எனும் கடவுளின் கட்டளையை அவர் பின்பற்றினார்.
இறை பிரசன்னத்தில் வாழ்வதையும், இறை சித்தத்தை நிறைவேற்றுவதையுமே அவர் தனது வாழ்க்கையில் முதன்மையாய்க் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் விட இறைவனே தனக்கு எல்லாம் என, இறைவனிடம் நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டுமெனில் நமக்கு இரண்டு அனுபவங்கள் தேவை.
ஒன்று: இறை பிரசன்னம், இன்னொன்று: இறை சித்தம்.
இறை பிரசன்னம் நம்மோடு இருக்கையில் நாம் இறை சித்தத்தை மட்டுமே செய்வோம்.
இறை பிரசன்னம்
ஏசாயா 6-ம் அதிகாரம் இறை பிரசன்னத்தின் அற்புதமான உதாரணம். அதை விடச்சிறந்த ஒரு பகுதியை நாம் பார்க்கவே முடியாது.
ஏசாயா ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்கிறார். அப்போது இறை பிரசன்னத்தை உணர்கிறார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததும் தன்னுடைய நிலையை அவர் உணர்கிறார். தன்னுடைய நிலை உணர்ந்த உடனே தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறார்.
பாவங்களை அறிக்கை செய்ததால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார். பாவ மன்னிப்பு கிடைத்ததும், கடவுளுடைய அழைப்பு தன்னுடைய செவிகளில் ஒலிப்பதைக் கேட்கிறார். கடவுளுடைய அழைப்பைக் கேட்டதும் தன்னை அதற்கு அர்ப்பணிக்கிறார்... என படிப்படியாக இறை பிரசன்னத்தை இந்த அதிகாரம் விளக்குகிறது.
“(இறைவன்) ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக்கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது” (1 திமோத்தேயு 6:16) என்கிறது பைபிள்.
இறை பிரசன்னத்தை யாரும் காணமுடியாது எனும் நிலையை மாற்றியவர் இறைமகன் இயேசு. அவரது சிலுவை நமக்கு மீட்புக்காய் தரப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நமக்கு தரப்படாவிட்டால் நாம் கடவுளோடு நெருங்கியிருக்க முடியாது. காண முடியாத அவரை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம்.
இறைவனின் பிரசன்னத்தை உணர்கிற உணர்வை நமக்கு சிலுவை பெற்றுத்தருகிறது. அதுவே மிகப்பெரிய பாக்கியம்.
ஒருவராலும் அவரை நெருங்கவும் முடியாது என்கிறது விவிலியம். மோசேயிடம் “நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்கிறார் கடவுள்.
அப்படிப்பட்ட கடவுள் இன்று நமக்குள் வசிக்கிறார். அதெப்படி சாத்தியமானது? இறைமகன் இயேசுவின் சிலுவை மரணமே அதை சாத்தியமாக்கியிருக்கிறது.
இறை சித்தம்
இறை சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைத் தேவை.
“நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ ..” (தீத்து 2 :12 )என விவிலியம் பேசுகிறது.
இறை சித்தம் நமது வாழ்க்கையில் நிகழ வேண்டுமெனில் நாம் தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டும். தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டுமெனில் பாவ இச்சையை வெறுக்க வேண்டும்.
“உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்து போகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்” (1 யோவான் 2:17) என்கிறது விவிலியம்.
இறை சித்தத்தை நிறைவேற்றுவது விருப்பு,
பாவ இச்சையை அகற்றுவது மறுப்பு.
திருத்தூதர் பவுல் இறை பிரசன்னத்தை உணர்ந்தவர், இறை சித்தத்தை நிறைவேற்றியவர். பழைய ஏற்பாட்டில் தாவீதைப் போல, புதிய ஏற்பாட்டில் பவுல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
பவுல் கிறிஸ்தவர்களைக் கொல்லத்தேடியவர். எப்போது அவருக்கு இறைவனின் பிரசன்னம் கிடைத்ததோ, அப்போது இறை சித்தத்துக்கு தன்னை ஒப்படைத்தார். பின்னர், தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து இறைவனோடு பயணித்தார்.
தொடர்ந்து தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் இறைவனின் சித்தம் என எடுத்துக் கொண்டவர் அவர். திருச்சபையினரைச் சந்திக்கச் செல்வதையும், சந்தித்து திரும்பியதையும், நற்செய்தி அறிவித்தலுக்கு எழுந்த தடைகளையும் அதன்பின் நடந்த எல்லாவற்றையும் இறை சித்தம் என்கிறார்.
பழைய ஏற்பாட்டில் தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றினார் என்பதை புதிய ஏற்பாடும் பதிவு செய்கிறது. ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்’ என தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றியதை திருத்தூதர் பணிகள் நூல் பேசுகிறது.
நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’.
புளியங்குடி கத்தோலிக்க திருச்சபை உலகமீட்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று இரவு சப்பர பவனி நடைபெற்றது.
புளியங்குடி கத்தோலிக்க திருச்சபை உலகமீட்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகள் வரவேற்றார். சிதம்பராபுரம் பங்குத்தந்தை பீற்றர் அடிகள் கொடியேற்றி, திருப்பலி நிறைவேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தினமும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்று வந்தது. 8-ம் திருநாளில் சிவகிரி பங்குத்தந்தை சேவியர் அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து நற்கருணைப்பவனி நடைபெற்றது. 9-ம் திருநாளில் மேலஇலந்தைகுளம் பங்குத்தந்தை ஜீவா அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் அடிகள் திருப்பலி நிறைவேற்றி, சிறப்பு மறையுரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து அசனம் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருள்மரியநாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ராசையா, செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பொருளாளர் அருள்ஜோசப்ராஜ், பங்குப்பேரவை நிர்வாகிகள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
தினமும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்று வந்தது. 8-ம் திருநாளில் சிவகிரி பங்குத்தந்தை சேவியர் அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து நற்கருணைப்பவனி நடைபெற்றது. 9-ம் திருநாளில் மேலஇலந்தைகுளம் பங்குத்தந்தை ஜீவா அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் அடிகள் திருப்பலி நிறைவேற்றி, சிறப்பு மறையுரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து அசனம் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருள்மரியநாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ராசையா, செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பொருளாளர் அருள்ஜோசப்ராஜ், பங்குப்பேரவை நிர்வாகிகள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.






