என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

உலககோப்பை கிரிக்கெட் இந்தியாவுடன் அக்டோபர் 14-ந் தேதி விளையாட பாகிஸ்தான் ஒப்புதல்

- போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
- விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. அன்றைய தினத்தில் நவராத்ரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி அட்டவணையை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் அக்டோபர் 12-ந்தேதி மோதும் போட்டியை அக்டோபர் 10-ந்தேதி மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணை மாற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானை தொடர்பு கொண்டன. போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல மேலும் சில மாற்றங்களும் இருக்கிறது. இதனால் விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
