search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரே போட்டியில் பென் ஸ்டோக்ஸ்-ஐ பழி தீர்த்த ஷ்ரேயாஸ்
    X

    ஒரே போட்டியில் பென் ஸ்டோக்ஸ்-ஐ பழி தீர்த்த ஷ்ரேயாஸ்

    • 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஇங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் நான்காம் நாளில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கூட்டணி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது.

    ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஜோடி இந்திய அணி வெற்றிக்கு எந்த நிலையிலும் பாதகமாக இருக்கும் என்ற இக்கட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க முயன்ற போது தனது விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார். ரன்களுக்கு இடையில் வேகமாக ஓட வேண்டிய ஸ்டோக்ஸ் சற்றே வேகம் குறைவாக ஓடியது, அவர் பெவிலியன் திரும்ப காரணமாக அமைந்தது.


    இதைத் தொடர்ந்து தனது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் செய்த செய்கையை இன்று ஷ்ரேயாஸ் அய்யர் அப்படியே செய்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எடுக்க முயன்ற போது வேகமாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்ற பந்தை வேகமாக ஸ்டம்ப்களை நோக்கி வீசினார்.

    இவர் வீசிய பந்து ஸ்டம்ப்களை பதம் பார்க்க, பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தான் ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் போன்றே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

    Next Story
    ×