search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் கைகள் எப்போதும் என் தோள் மீது இருக்கும்- ஹர்திக் பாண்ட்யா
    X

    ரோகித் கைகள் எப்போதும் என் தோள் மீது இருக்கும்- ஹர்திக் பாண்ட்யா

    • ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது.
    • மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    பாண்ட்யாவிடம் ரோகித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாண்ட்யா பேசியது பின்வறுமாறு:-

    முதலில் ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    நான் அதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவரது தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறேன். களத்தில் அவரது கைகள் என் தோள் மீது இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×