search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சொன்னா கேட்க மாட்டீங்களா? ஐ.பி.எல். ஒளிபரப்பாளரை சாடிய ரோகித் சர்மா
    X

    சொன்னா கேட்க மாட்டீங்களா? ஐ.பி.எல். ஒளிபரப்பாளரை சாடிய ரோகித் சர்மா

    • தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.
    • அவ்வாறு செய்வது நாளடைவில் நம்பிக்கையை கெடுத்துவிடும்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது தனியுரிமையை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    போட்டி நடைபெறும் போதும், பயிற்சியின் போதும் சக வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பதிவு செய்து ஒளிபரப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தனது தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ள போதிலும், அந்நிறுவனம் தொடர்ந்து அவ்வாறு செய்வது நாளடைவில் நம்பிக்கையை கெடுத்துவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஊடுருவல்கள் அதிகரித்துவிட்டன. பயிற்சின் போதோ அல்லது போட்டியின் போதோ நாங்கள் சக வீரர்கள மற்றும் நண்பர்களுடன் மேற்கொள்ளும் தனிப்பட்ட உரையாடல்கள் கூட பதிவு செய்யப்படுகின்றன."

    "எனது உரையாடல்களை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இடம் கேட்டுக் கொண்ட பிறகும், அவை ஒளிபரப்பப்பட்டன. பிரத்யேக தரவுகளை பெறுவது, பார்வையாளர்களை அதிகப்படுத்திக் கொள்வது போன்ற விஷங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் செயல்களால் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை ஒருநாள் உடைத்துவிடும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்," என்று தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×