என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
எம்.எஸ். டோனிக்கு ஸ்டோரி வைத்த ரோகித் சர்மா - வைரலாகும் பதிவு
- இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட எம்.எஸ். டோனி தனது பதவியை ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கொடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த எம்.எஸ். டோனிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இன்ஸ்டா ஸ்டோரியில் மும்பை ஜெர்சியில் ரோகித் சர்மா எம்.எஸ். டோனிக்கு கை கொடுக்கும் புகைப்படம் மற்றும் கை குலுக்கும் எமோஜி இடம்பெற்று இருக்கிறது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்கு மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மும்பை அணியின் சமூக வலைதள கணக்குகளை பின்பற்றுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.
நாளை 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்