என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ஹர்திக் பாண்ட்யாவை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
- ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியில் இணைந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இந்திய வீரர்களான ரோகித், விராட் ஆகியோர் அவர்களது அணியான மும்பை, பெங்களூர் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் RIP ஹர்திக் பாண்ட்யா என்ற ஹேஸ்டேக் மற்றும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட வீடியோவும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பும் தான் காரணம். மும்பை நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர்.
அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ரோகித் சோகமான முகத்துடன் காணப்பட்டனர். இதற்கு ரசிகர்கள் ரோகித்துடன் பாண்ட்யா உட்கார்ந்து இருப்பதை பார்க்க வேதனையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.
மேலும் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரைக்கையாளர்கள் ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்