search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாண்ட்யா- ரோகித்.. வைரலாகும் வீடியோ
    X

    ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாண்ட்யா- ரோகித்.. வைரலாகும் வீடியோ

    • பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
    • பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த முறை மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார். இவர் கேப்டனாக செயல்படுவது ரோகித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாண்ட்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் நேற்றும் ஹர்திக் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியானது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர். அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. இதுவும் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

    மேலும் மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

    இந்நிலையில் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஒரு வீடியோவை மும்பை வெளியிட்டள்ளது. அதில் பயிற்சி குறித்து மும்பை வீரர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார். இருவரும் சிரித்த முகத்துடன் பேசி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×