search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரச்சினை கவர்ந்த CSK ரசிகர்கள்.. போட்டிக்கு பிறகு என்ன சொன்னாரு தெரியுமா?
    X

    ரச்சினை கவர்ந்த CSK ரசிகர்கள்.. போட்டிக்கு பிறகு என்ன சொன்னாரு தெரியுமா?

    • ரச்சின் ரவீந்திரா கருத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு.
    • ரச்சின் ரவீந்திரா 37 ரன்களை குவித்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். நேற்று நடைபெற்ற 2024 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார் ரச்சின் ரவீந்திரா.

    நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக போட்டியில் முதலில் ஃபீல்டிங் செய்த நிலையில், சென்னை வீரர் ரச்சின் ரவீந்திரா களத்தில் துடிப்புடன் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து பேட்டிங்கில் 15 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா மூன்று சிக்சர், மூன்று பவுண்டரிகளுடன் 37 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.


    இந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி, இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு பிறகு, சென்னை அணிக்காக விளையாடியது பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திரா பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "இதுவரை என் வாழ்நாளில் விளையாடிய போட்டிகளிலேயே, சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்கள் மட்டும் தான் அதிக ஒலியெழுப்பினர்," என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் உண்மையான கிரிக்கெட்டுக்கு எப்போதும் பாராட்டு தெரிவிப்பர் என பல்வேறு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், சென்னை வீரர் ரச்சின் ரவீந்திரா சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் அனுபவம் பற்றி தெரிவித்த கருத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

    Next Story
    ×