என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
எங்க டீம் கொஞ்சம் வெய்ட்டு, அதனால பயம் இல்லை - சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
- சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.
- அணியில் என்னை வழிநடத்த பலர் உள்ளனர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். புதிய கேப்டனை எம்.எஸ். டோனியே தேர்வு செய்த நிலையிலும், இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பொறுப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "அருமையாக இருக்கிறது. இது ஒரு பாக்கியம். இது மிகப்பெரிய பொறுப்பு, ஆனாலும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் பக்கம் பலரும் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், நான் அதிகம் எதையும் செய்ய வேண்டியிருக்காது. மேலும் எம்.எஸ். டோனி, ஜடேஜா, ரகானே ஆகியோர் என்னை வழிநடத்த அணியில் உள்ளனர். இதனால் நான் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்