search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு டோனிதான் முக்கிய காரணம்- புகழாரம் சூட்டிய கம்பீர்
    X

    ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு டோனிதான் முக்கிய காரணம்- புகழாரம் சூட்டிய கம்பீர்

    • இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 172 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு டோனிதான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனியால்தான் இன்று ரோகித் சர்மா ரோகித் சர்மாவாக உள்ளார். ரோகித்தின் கேரியரில் இந்த திருப்புமுனை ஒரே ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியமானது. அவர்தான்எம்எஸ் டோனி. ரோகித் வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகள் கடினமான நேரத்தில் டோனி அவரை ஆதரித்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்குமாறு ரோகித்திடம் டோனி கேட்டு கொண்டார்.

    மிடில் ஆர்டர் பேட்டராக இருந்து தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு ரோகித்தின் கேரியர் முற்றிலும் மாறிவிட்டது. இன்று அவர் எல்லா காலத்திலும் சிறந்த ஒயிட்-பால் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×