search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவருக்கு பிரபல நடிகை ஒருவர் கட்டளை போட்டிருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகப் பிரபலமான நடிகை, திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறாராம். இவர் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து தெறிக்க விட்டிருந்தாராம். தற்போது அந்த முன்னணி நடிகர் புதிய படத்தில் நடித்து வருகிறாராம்.

    அவருக்கு ஜோடியாக இளம் நடிகையை படக்குழுவினர் நடிக்க வைத்திருக்கிறார்களாம். இதை அறிந்த நடிகை நடிகருக்கு போன் செய்து அந்த நடிகையுடன் நடிக்க வேண்டாம் என்று கூறினாராம். ஏனென்றால் இரண்டு நடிகைகளுக்கும் ஏற்கனவே சண்டை இருக்கிறதாம். இதனால்தான் நடிகருக்கு தடை போட்டாராம். ஆனால் நடிகரோ இதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டாராம். 
    சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் அறிமுகமான நடிகை, படக்குழுவினரை நம்பி ஏமாந்து விட்டாராம்.
    தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வந்த நடிகை, தமிழில் சங்க தலைவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். இந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என்றும் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் மிகவும் நம்பி இருந்தாராம். ஆனால், நடிகை எதிர்பார்த்த படி அந்த படம் ஓடவில்லையாம். நல்ல பெயரும் நடிகைக்கு கிடைக்கவில்லையாம்.

    இதனால் ஏமாந்து போன நடிகை, படக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டதாக பலரிடம் புலம்பி வருகிறாராம். இனிமேல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்க இருக்கிறாராம் நடிகை.

    பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், தற்போது சர்ச்சை கதையில் நடிக்க இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தாராம். அதன்பின் உடல் எடை கூடியதால், பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாராம். உடை எடையை குறைக்க பெரிய முயற்சி செய்தும் பெரியதாக பலன் அளிக்கவில்லையாம்.

    திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், தனக்கேற்றவரை ரொம்ப நாட்களாக தேடியும் இன்னும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்பை பிடிக்க சர்ச்சையான ஒரு கதையை தேர்வு செய்து இருக்கிறாராம். நெகட்டிவ்வாக அமைந்தாலும், எல்லோரிடமும் தன்னை பற்றி பேசுவார்கள் என்று இப்படி திட்டம் போட்டு இருக்கிறாராம் நடிகை.
    தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் நடித்து பிரபலமானவர் நெருங்கியவர்களை நம்பி ஏமாந்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் நல்லவனாக கொண்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பெயர் பெற்றாராம். அதன்பின் சில படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், தனக்கு உதவியாக ஒரு சிலரை தேர்வு செய்தாராம். அவர்களிடம் கதை தேர்வு செய்யும் பணி, சம்பளம் உள்ளிட்டவைகளை பார்க்க சொன்னாராம்.

    ஆனால், அவர்கள் நல்ல கதைகளை எல்லாம் நடிகரின் தகவலுக்கு கொண்டு செல்லாமல் தவிர்த்து விட்டார்களாம். இதனால் நடிகர் பல நல்ல படங்களை இழந்து விட்டாராம். இதை தற்போது அறிந்து அவர்களை நீக்கி விட்டு, தான் ஏமாந்ததை நினைத்து வருந்துகிறாராம்.
    பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது தமிழ் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
    தமிழில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தாராம். அந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்ததாம். மேலும் தெலுங்கில் பல பட வாய்ப்புகளும் நடிகையை தேடி வந்ததாம். பல கதைகளை கேட்ட நடிகை, சம்பளத்தை உயர்த்தி குறிப்பிட்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம்.

    தமிழ் படங்களில் நடிக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி கதை சொன்னால், நடிக்க மறுக்கிறாராம். ஏனென்றால் தமிழில் நடிகைக்கு சம்பளம் குறைவாக கொடுக்கிறார்களாம். அதனால்தான் நடிகை, தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க மறுத்து விட்டாராம்.
    வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.

    இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நீங்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் கூறினாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்தே விலகி விட்டாராம். நடிகையின் இந்த அதிரடி முடிவைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் புதிய நிபந்தனை ஒன்று போட்டு இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து தற்போது நடிகராக இருப்பவர் பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம். இவர் நெருங்கியவர்களிடம் படத்தை டைரக்டு செய்பவர் புத்திசாலியாக இருக்கத் தேவையில்லை. கதை எப்படி இருந்தாலும் கவலை இல்லை... தயாரிப்பாளர் வசதியானவராக இருக்க வேண்டும். கேட்டவுடன் பணம் கொடுப்பவராக இருந்தால் போதும்...’’ என்று புது நிபந்தனை விதிக்கிறாராம்.

    நடிகரின் இந்த நிபந்தனையை கேட்டவர்கள், இப்படி நிபந்தனை போட்டால் நடிகருக்கு எப்படி பட வாய்ப்புகள் வரும் என்று புலம்பி வருகிறார்களாம்.

    முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை, தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை தொந்தரவு செய்து வருகிறாராம்.
    தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக அறிமுகமாகி பல ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடிகை, சில காலங்களில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாராம். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தாராம். தற்போது மீண்டும் நடிக்க நடிகைக்கு ஆர்வம் வந்திருக்கிறதாம்.

    இதற்காக உடல் எடையை குறைத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த பலரும் பத்து வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி காட்டாத நடிகை தற்போது கவர்ச்சியில் அசத்தி இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்களாம். நடிகையையோ பட வாய்ப்புக்காக, தன்னுடன் நடித்த நடிகரை தொடர்பு கொண்டு நாம் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்று தொந்தரவு செய்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னுடன் நடிக்கும் நடிகர்களை தானே தேர்வு செய்கிறாராம்.
    தமிழில் காகா படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இதற்காக பல கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிப்பவர்களை அவரே தேர்வு செய்கிறாராம்.

    சமீபத்தில் நடிகை ஒப்பந்தமான படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை நான்தான் தேர்வு செய்வேன் என்று அடம்பிடித்தாராம். சரி என்று ஒப்புக் கொண்ட படக்குழு, நடிக்க தெரியாதவர்களை எல்லாம் தேர்வு செய்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறாராம்.
    தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னை அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
    தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். ஒரு காலத்தில் நடிகை நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குனர்கள் முத்திரை குத்தி ஒதுக்கினார்களாம். ஆனாலும் நம்பிக்கையோடு சில படங்களில் நடித்து தற்போது அதிர்ஷ்ட தேவதையாக மாறி விட்டாராம்.

    முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் நடிகையை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம். அந்த சம்பவம் நடிகைக்கு வேதனையை ஏற்படுத்தியதாம். இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.

    ஆனால் நடிகை ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்திய அவரது படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, மற்ற நடிகைகளை பார்த்து தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளாராம்.
    தமிழில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருப்பவர் படத்தில் அறிமுகமான நடிகை, தொடர்ந்து குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து வந்தாராம். நடிகைக்கும் தொடர்ந்து ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்ததாம். 

    தற்போது சமூக வலைத்தளத்தில் மற்ற நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், நடிகையும், அவர்களைப் போல் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த நெட்டிசன்கள், நடிகைக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி மாறிட்டாங்க... நல்லாதானே இருந்தாங்க... என்று கிண்டல் செய்து வருகிறார்களாம். 
    மூன்றெழுத்து நடிகர் ஒருவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் தற்போது பதறிப்போய் உள்ளார்களாம்.
    கதை பிடித்தால் எந்த இயக்குனரின் படங்களிலும் நடிப்பேன் என்று சொல்லி வந்த மூன்றெழுத்து நடிகர் ஒருவர், இப்போது தன் பாலிசியை மாற்றிவிட்டாராம். அதாவது ஹிட் படங்களை கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். 

    அதன் காரணமாக பல ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்காமல் தன்னிடம் கதை சொல்வதற்காக அணுகிய சில இயக்குனர்களிடம் ‘புதுவரவு இயக்குனர்கள், திறமை இல்லாதவர்கள் படங்களில் நடித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’ எனக்கூறி கைவிரித்துவிட்டாராம் அந்த நடிகர். இதனால் அவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் பதறிப்போய் உள்ளார்களாம்.
    ×