search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன், பணம் மட்டுமே குறிக்கோள் என்று இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகராக வலம் வருபவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம். இதுபோக பல படங்களில் கதை கேட்டு ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். இவர் நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். இப்படி இருக்கும் நிலையில், நடிகர் எப்படி எல்லாம் படத்திலும் கமிட் ஆகிறார் என்று பலரும் கேட்டு வருகிறார்களாம்.

    இதற்கு நடிகருக்கு நெருங்கியவர்கள் பலர், நடிகருக்கு பணம் தான் தற்போது முக்கியமாம். படங்களில் எல்லாத்திலும் அட்வான்ஸ் வாங்கி விட்டு படத்தை தொடங்கி விட்டு நடித்து முடித்துவிடுவாராம். அதன்பிற்கு ரிலீஸ் ஆவதும் ஆகாததும் தயாரிப்பாளர் பொறுப்பு என்று சொல்லுகிறார்களாம்.
    இளம் நடிகை ஒருவர் நடிகருடன் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாராம்.
    தமிழ் சினிமாவில் லவ்வான படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், இளம் கதாநாயகனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்தாராம். இந்த விஷயம் பலருக்கும் தெரிந்து நடிகையை தொடர்பு கொண்டு உண்மையா என்று கேட்க ஆரம்பித்தார்களாம்.

    ஆனால், நடிகை இதற்கு பதிலாக கிசு கிசு பாணியில் பதில் சொன்னாராம். ‘‘அவர் இரண்டு பெயர்களை கொண்ட இளம் கதாநாயகன்’’ என்று கண் சிமிட்டியபடி சிரித்துக் கொண்டே சொன்னாராம் நடிகை.
    முன்னணி நடிகை ஒருவரால் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால் அவரை படத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் நீக்க இருக்கிறார்களாம்.
    இரண்டு பெயர்களை கொண்ட முன்னணி நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம். இது அவருக்கு குட் நியூஸாக இருந்தாலும், அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளதாம்.

    அவர் கைவசம் வைத்துள்ள அரை டஜன் படங்களும் பாதியில் நிற்கிறதாம். இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத சூழலில் சில படங்கள் சிக்கி தவிக்கிறதாம். இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை நீக்கி விட்டு வேறு நடிகைகளை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.
    தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வரும் நடிகை ஒருவர், பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ரூ.1 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
    பல மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை ஒருவர், தற்போது தமிழ் மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். மேலும் தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காண்பித்து வருகிறார்களாம்.

    தற்போது நடிகையிடம் ஒரு படக்குழுவினர் அணுகி தங்களுடைய படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படி கேட்டார்களாம். நடிகை கதை கேட்டு பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொல்லி விட்டாராம். மேலும் சம்பளமாக ஒரு கோடி கேட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறாராம்.
    முன்னணி நடிகை ஒருவர், வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறாராம். இவருடைய சம்பளம் தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறதாம். பாலிவுட் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகை முடிவு செய்து இருக்கிறாராம்.

    இதனால், பல பட வாய்ப்புகளை மறுத்து வருகிறாராம். குறிப்பாக வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம். அவர்கள் போடும் நிபந்தனைகள் நடிகைக்கு ஒத்து வரவில்லையாம். இதனால் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளாராம். 

    தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், மன அழுத்தத்தில் இருந்து வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபமான நடிகை, கடைசியாக தமிழில் சங்க தலைவர் நடிகருடன் சேர்ந்து நடித்து இருந்தாராம். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். அதன்பின் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய நடிகை, கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து உடை எடை கூடியதாம்.

    உடல் நிலை சரியான நிலையில், கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் தோற்றத்தை மெருகேற்றி வருகிறாராம். ஆனால், நடிகை பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறாராம். பலரிடம் பட வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுக்கிறார்களாம். இதனால், நடிகை மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், சக நடிகைகளை பொறாமை பட வைத்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம். தற்போது நடிகை, பாலிவுட் படத்தில் கிங்கான நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம்.

    இந்த படத்துக்கு நடிகை, தான் வாங்கும் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு மேல் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரம். ஏனென்றால் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர், பெரிய படம் என்று சொல்லி அதிக சம்பளம் கேட்டு இருக்கிறாராம். நடிகையின் சம்பளத்தை கேட்ட பாலிவுட் நடிகைகள், அவர் மீது பொறாமைப்பட்டு வருகிறார்களாம்.

    மேலும் சில பாலிவுட் நடிகைகள், நம்பர் நடிகையை பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த விடாதளவிற்கு வேலை பார்த்து வருகிறார்களாம்.
    தயாரிப்பாளர்களிடத்தில் கூடுதல் சம்பளம் வாங்கி தருவதாக, நடிகைகளிடம் வாரிசு நடிகர் ஒருவர் உத்தரவாதம் கொடுத்தாராம்.
    நான்கெழுத்து பெயர் கொண்ட வாரிசு நடிகர் ஒருவரின் மார்க்கெட் அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதால், தன் புதிய படங்களில் முன்னணி நடிகையருடன் நடித்தாவது, தனது மார்க்கெட்டை உயர்த்தி விடலாம் என, சில மேல்தட்டு நடிகையருடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். 

    அப்போது தன்னை விட தயாரிப்பாளர்களிடத்தில் கூடுதல் சம்பளம் வாங்கி தருவதாக, நடிகைகளிடம் அவர் உத்தரவாதம் கொடுத்தாராம். இருந்தாலும் அதற்கு எந்த நடிகையும் உடன்படவில்லையாம். “மார்க்கெட் இல்லாத உங்களுடன் நடித்து, எங்களது மார்க்கெட்டை இழக்க தயாராக இல்லை” என்று சொல்லி நடிகைகள் நழுவிவிட்டார்களாம்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர், தன்னை தேடி வரும் இயக்குனர்களின் போன் அழைப்புகளை எடுக்க மறுக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர், ஒரு சில நல்ல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானாராம். அந்த படங்கள் வெற்றி பெற்றதால், தான் ஒரு பெரிய நடிகராக வளர்ந்து விட்டோம் என்று நினைக்க தொடங்கி விட்டாராம். மேலும் முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டதால், ரொம்ப பந்தா காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

    இந்நிலையில், நடிகரை தொடர்பு கொண்டு இயக்குனர்கள் தங்களுடைய கதைகளில் நடிக்க கேட்டால், அவர்களை உதாசீனம் படுத்துகிறாராம். கதை கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவர்கள் போனில் அழைத்தால், அழைப்புகளை எடுப்பதில்லையாம். நடிகரின் இந்த செயலைக் கண்டு பலரும் புலம்பி வருகிறார்களாம்.
    நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதால் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பிரபல நடிகை கதை கேட்பதில்லையாம்.
    இரண்டு பெயர்களை கொண்ட முன்னணி நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது அந்த நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளாராம். ஏனெனில் அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம்.

    இதன் காரணமாக புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்பதில்லையாம். குழந்தை பிறந்ததற்கு பிறகும் அவர் சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்.
    சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரையில் நடிக்க வந்திருக்கும் இளம் நடிகர் ஓவர் கெத்து காட்டி அடங்கி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் நடித்து வந்தாராம். அதன்பின் ஒரு ஷோவில் நடிகர் கலந்துக் கொள்ள மிகவும் பிரபலமாகி விட்டாராம்.

    தற்போது நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டதாம். மேனேஜர் உதவியாளர் இன்று நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு கெத்து காண்பித்து வந்த நடிகர், தற்போது அடங்கி போய் இருக்கிறாராம். நடிகர் பேசிய பேச்சும், அவரது நடிப்பில் வெளியான படமும்தான் இதற்கு காரணமாம். 

    பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நடிகைக்கு தற்போது சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடிகை நடித்த ஒரு சில படங்கள் ரிலீசாகாமல், பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறதாம். இதனால் நடிகை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.

    திருமணம் தற்போது வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தன் மனதை மாற்றி இருக்கிறாராம். இதற்காக பெற்றோர்கள் நடிகைக்காக வலைவீசி மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்.
    ×