search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை கடை திறப்பு விழாவிற்கு அதிக பணம் கேட்டிருக்கிறாராம்.
    பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு, தற்போது திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லையாம். சின்ன சின்ன வேடங்கள் வருவதால் நடிகை அதில் நடிப்பதை மறுத்து வருகிறாராம். அதனால், சின்னத்திரை மற்றும் விளம்பர படங்களில் நடிகை கவனம் செலுத்தி வருகிறாராம்.

    இந்நிலையில், நடிகையை ஒரு கடை திறப்பு விழாவிற்கு அழைத்தார்களாம். நடிகையோ பல ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். ஒரு மணி நேர விழாவிற்கு இவ்வளவு தொகையா என்று கடைக்காரர்கள் புலம்பிக் கொண்டே சென்றார்களாம்.
    தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர், முன்னணி நடிகருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான வாரிசு நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இவர் தற்போது முன்னணி நடிகருடன் மீண்டும் ஜோடி சேர முயற்சி செய்து வருகிறாராம். இதற்காக புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

    நடிகை ஏற்கனவே நடிகருடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறாராம். நடிகையின் சக நடிகைகள் அந்த நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார்களாம். அவர்களை வெறுப்பேற்றவே நடிகை இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம். இதுதான் நடிகருடன் மீண்டும் நடிக்க நடிகை ஆசைப்பட காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    பட வாய்ப்பின்றி திண்டாடி வரும் நான்கெழுத்து நடிகை ஒருவர், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    டோலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நான்கெழுத்து நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகிறாராம். வரும் ஒன்றிரண்டு வாய்ப்புகளும், கதை தனக்கு ஏற்றபடி இல்லை என சொல்லி திருப்பி அனுப்பி விடும் அந்த நடிகை, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

    பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். தனக்கு ஏற்ற கதையை பார்த்து தேர்ந்தெடுப்பதற்காக தனியாக ஒரு குழுவையும் அமைத்துள்ளாராம் அந்த நடிகை. நடிகையின் இந்த பலே திட்டம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து வந்த நடிகை பட வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த மூன்றெழுத்து நடிகை ஒருவர் கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தாராம். அவர் ஹோம்லி வேடத்தில் நடித்த அந்த படத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்ததாம். இப்படி வெற்றி வாகைசூடிய அந்த நடிகைக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லையாம்.

    பொறுத்து பார்த்த அந்த நடிகை ‘ரூட்’டை மாற்றி, வில்லியாக ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகும் பட வாய்ப்புகள் வராததால், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். தொடர்ந்து படு கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். நடிகையின் இந்த முயற்சி கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    முன்னணி நடிகை ஒருவர், வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறாராம். இவருடைய சம்பளம் தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறதாம். பாலிவுட் படத்திற்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகை முடிவு செய்து இருக்கிறாராம்.

    இதனால், பல பட வாய்ப்புகளை மறுத்து வருகிறாராம். குறிப்பாக வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம். சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், சிபாரிசு செய்ய ஆள் தேடி வருகிறாராம்.
    தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த நடிகை, திடீரென்று தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து நடித்து வந்தாராம். தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்ததால் மிகவும் பிரபலமானாராம். ஆனால், தற்போது நடிகைக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். தெலுங்கில் பிசியாக நடித்தாலும், தமிழில் பட வாய்ப்பை தேடி வருகிறாராம்.

    இதற்காக பல முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு சிபாரிசு செய்ய ஆள் தேடி வருகிறாராம். ஏற்கனவே சிபாரிசு செய்தவர்கள் தற்போது செய்ய மறுக்கிறார்களாம். இதனால், புது ஆட்களை நடிகை தேடி வருகிறாராம். 
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர், முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம்.
    தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறதாம். நடிகை, தற்போது தமிழ் மொழி படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

    இந்நிலையில், முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க ஆசைப்பட்டு, அவரைப் பற்றி புகழ்ந்து பேசி வந்தாராம். ஆனால், நடிகரோ அவரை கண்டுக்கொள்ளவில்லையாம். தற்போது நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும், சம்பளம் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று மேலாளர்களிடம் சொல்லி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தனது சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடியாக உயர்த்தி இருக்கிறாராம்.
    தமிழில் நடிகையாக பிரபலமானவர் பாடுவதிலும் சிறந்தவராம். அந்த நடிகை தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்காக தனது சம்பளத்தை ரூ.70 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறாராம்.

    இந்த படம் வெளியான பிறகு தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லி வருகிறாராம். மேலும் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் நடிகையிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், ஒரு கோடி வேண்டும் என்று கேட்கிறாராம். அதிலிருந்து குறைக்க சொன்னால் டென்ஷன் ஆகி விடுகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர், சம்பள பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர், தற்போது காதல் கதையில் நடித்திருந்தாராம். இந்த படமும் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதாம். ஆனால், திரைப்படம் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லையாம். இதனால், தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

    இந்நிலையில் நடிகர் அந்த இப்படத்திற்காக தான் வாங்கிய சம்பளத் தொகையில் இருந்து ரூ.50 கோடியை திருப்பிக் கொடுத்து இருக்கிறாராம். இது சினிமா உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன், பணம் மட்டுமே குறிக்கோள் என்று இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகராக வலம் வருபவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம். இதுபோக பல படங்களில் கதை கேட்டு ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். இவர் நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். இப்படி இருக்கும் நிலையில், நடிகர் எப்படி எல்லாம் படத்திலும் கமிட் ஆகிறார் என்று பலரும் கேட்டு வருகிறார்களாம்.

    இதற்கு நடிகருக்கு நெருங்கியவர்கள் பலர், நடிகருக்கு பணம் தான் தற்போது முக்கியமாம். படங்களில் எல்லாத்திலும் அட்வான்ஸ் வாங்கி விட்டு படத்தை தொடங்கி விட்டு நடித்து முடித்துவிடுவாராம். அதன்பிற்கு ரிலீஸ் ஆவதும் ஆகாததும் தயாரிப்பாளர் பொறுப்பு என்று சொல்லுகிறார்களாம்.
    இளம் நடிகை ஒருவர் நடிகருடன் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாராம்.
    தமிழ் சினிமாவில் லவ்வான படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், இளம் கதாநாயகனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்தாராம். இந்த விஷயம் பலருக்கும் தெரிந்து நடிகையை தொடர்பு கொண்டு உண்மையா என்று கேட்க ஆரம்பித்தார்களாம்.

    ஆனால், நடிகை இதற்கு பதிலாக கிசு கிசு பாணியில் பதில் சொன்னாராம். ‘‘அவர் இரண்டு பெயர்களை கொண்ட இளம் கதாநாயகன்’’ என்று கண் சிமிட்டியபடி சிரித்துக் கொண்டே சொன்னாராம் நடிகை.
    முன்னணி நடிகை ஒருவரால் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால் அவரை படத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் நீக்க இருக்கிறார்களாம்.
    இரண்டு பெயர்களை கொண்ட முன்னணி நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம். இது அவருக்கு குட் நியூஸாக இருந்தாலும், அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளதாம்.

    அவர் கைவசம் வைத்துள்ள அரை டஜன் படங்களும் பாதியில் நிற்கிறதாம். இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத சூழலில் சில படங்கள் சிக்கி தவிக்கிறதாம். இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை நீக்கி விட்டு வேறு நடிகைகளை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.
    ×