என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை லைலா பிதாமகனில் தான் நடித்த காமெடி வசனத்திலிருந்து வெளிவந்த மீமை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
    கள்ளழகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை லைலா, அதைத் தொடர்ந்து முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன், கண்ட நாள் முதல், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    லைலா

    கொரோனா விழிப்புணர்வு பற்றி பிரபலங்கள் பலரும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வர நடிகை லைலா சற்று வித்தியாசமாக பிதாமகன் திரைப்படத்தில் தான் நடித்த காமெடி காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கொரோனா விழிப்புணர்வு மீம்ஸை ரசித்து விட்டு அதை பகிர்ந்தும் உள்ளார்.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கும் கவிஞர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார். 

    அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    சினேகன்

    இந்நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தலைமையில்தான் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
    கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா 'கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். சிறப்பான நடிப்பு மற்றும் அழகான சிரிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சமூகவலைதளங்களிலும் எப்போதும் தீவிரமாக இருக்கிறார். கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். தன்னுடயை பதிவுகளிலும் ராயல்சேலஞ்சர்ஸ் அணியையும், வீரர்களின் விளையாட்டையும் புகழ்ந்து தள்ளி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 

    இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கே 'ஐ.பி.எல் கோப்பை' எனக் கூறி ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அவருடைய ஒவ்வொரு பதிவையும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அண்மையில் திடீரென இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.

    ராஷ்மிகா தோனி

    அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஐ.பி.எல் போட்டியில் பெங்களுரு அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாலும், கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர். அப்போது, கிரிக்கெட்டில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, மகேந்திரசிங் தோனி என்றார். கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் அணுகுமுறை, பேட்டிங், கேப்டன்சி என அனைத்தையும் தான் ரசிப்பதாகவும், கிரிக்கெட்டுக்கு தேவையான 100 விழுக்காட்டையும் அவர் கொடுப்பதாக புகழ்ந்து தள்ளினார். மேலும், தோனியில் மிகத் தீவிர ரசிகை என்றும் ராஷ்மிகா தெரிவித்தார்.
    ஊரடங்கில் தொடர்ந்து உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டிற்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். 

    தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

    இந்நிலையில் சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர். அதோடு, பொதுமக்களுக்கு உணவையும் வழங்கி 'நாங்கள் இனிமேல் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவிருக்கிறோம். சோனு சூட்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்' என்றும் தெரிவித்துள்ளனர்.


    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தாவின் வெப் தொடருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். 

    சமீபத்தில் இதன் டிரெயிலர் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பேமிலி மேன் 2
    பேமிலி மேன் 2 போஸ்டர்

    அமேசான் ப்ரைமில் ஜூன் 4-இல் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிசை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    நடிகர் அல்லு அர்ஜுன் 45 வயதிற்கு மேற்பட்ட தனது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.
    தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். அவரது நடிப்பில் 'புஷ்பா' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

    அல்லு அர்ஜுன்

    கொரோனாவின் இரண்டாவது அலையால், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் தன்னிடம் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்துள்ளதாக அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். அவரின், இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை பகிர்ந்துள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் சிக்கி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ரகுல்பிரீத் சிங்குக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று மீண்டார்.

    ரகுல்பிரீத் சிங் கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா தொற்றில் சிக்கினால் வலிமையாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள். ஜீரணிக்க கடினமான உணவுகளை சாப்பிட வேண்டாம். பால், வறுத்த மற்றும் உறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    ரகுல் பிரீத் சிங்

    ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சூடான தேநீர், சூப் வகைகளை பருகுங்கள். கசப்பான காய்கறிகளை சாப்பிடுங்கள். எளிமையான உணவுகளையே எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.
    அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் யோகேஷ், அனிகா விக்ரமன் நடிப்பில் உருவாகும் ‘க்’ படத்தின் முன்னோட்டம்.
    தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் படம் ‘க்’. அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கும் இப்படத்தில் அனிகா விக்ரமன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    யோகேஷ், அனிகா
    யோகேஷ், அனிகா

    உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். 

    அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, ரீமேக் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
    கன்னடத்தில் வெளியான ‘கிரிக்பார்ட்டி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதனிடையே நடிகை ராஷ்மிகா ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அதற்கான பணிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டன. 

    ராஷ்மிகா
    ராஷ்மிகா

    இந்த நிலையில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ரீமேக் படம் என்பதால் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்திலும், இந்தியில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக ‘மிஷன் மஜ்னு’ படத்திலும்,  அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். 
    தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
    நடிகை நயன்தாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

    அதில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக நடிகை நயன்தாராவை கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர்.

    நயன்தாரா தரப்பில் வெளியிடப்பட்ட புதிய புகைப்படம்
    நயன்தாரா தரப்பில் வெளியிடப்பட்ட புதிய புகைப்படம்

    இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் ஊசி இருப்பது தெரிகிறது. இதன்மூலம் நயன்தாராவின் தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
    மாடல் அழகியை தாக்கிய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். நடிகை சஞ்சனா கல்ராணி, சமீபத்தில் போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, பின்னர் பல மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். 

    இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாடல் அழகி வந்தனா ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது, நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகி வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, சஞ்சனா கல்ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    சஞ்சனா கல்ராணி
    சஞ்சனா கல்ராணி

    சஞ்சனா கல்ராணி தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக வந்தனா ஜெயின் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    வந்தனாவின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டது, இதை தொர்ந்து கப்பன் பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×