search icon
என் மலர்tooltip icon

    கார்

    கார் மாடல்கள் விலையை மீண்டும் மாற்றிய டாடா மோட்டார்ஸ்
    X

    கார் மாடல்கள் விலையை மீண்டும் மாற்றிய டாடா மோட்டார்ஸ்

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை 0.55 சதவீதம் வரை உயர்த்துவதாக இந்த மாத துவக்கத்தில் அறிவித்து இருந்தது. விலை உயர்வு ஜூலை 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அப்போது கார் மாடல்கள் விலை அதிகபட்சமாக ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    இந்த வரிசையில், தற்போது டாடா நெக்சான் விலை ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதே போன்று டாடா சபாரி மாடலின் விலை ரூ. 15 ஆயிரமும், அல்ட்ரோஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. டாடா பன்ச் மற்றும் டாடா ஹேரியர் மாடலின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.


    டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலே தற்போது நெக்சான் EV பிரைம் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி சலுகைகள் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எளிய மாத தவணையில் கார் வாங்கிக் கொள்ள முடியும்.

    Next Story
    ×