டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் ஜெசிகா பெகுலா வெளியேறினார்
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன.
- இதில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா தோற்றார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் நாட்டு வீராங்கனை மேரி போஸ்கோவாவுடன் மோதினார்.
இதில் போஸ்கோவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.