டென்னிஸ்

ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி 

டேவிஸ் கோப்பை டென்னிஸ்... டென்மார்க்கிடம் தோல்வி: உலக குரூப்-2 சுற்றுக்கு தள்ளப்பட்ட இந்தியா

Published On 2023-02-04 16:09 GMT   |   Update On 2023-02-04 16:09 GMT
  • ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
  • டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப்-1 பிளே ஆப் போட்டியில் இந்திய அணி டென்மார்க் அணியுடன் விளையாடுகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், டென்மார்க் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் டென்மார்க் 2-1 என முன்னிலை பெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்திலும் டென்மார்க் வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் இந்தியாவின் சுமித் நாகலை டென்மார்க்கின் ரூனே, 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதனால் டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி, முதல் முறையாக உலக குரூப்-2 சுற்றுக்கு பின்தள்ளப்பட்டது.

Tags:    

Similar News