search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Davis Cup Tennis"

    • இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி மொராக்கோ ஜோடியை வென்றது
    • 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.

    லக்னோ:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா, மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.

    முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.

    இந்நிலையில், 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட், யுனெஸ் லலாமி லாரோசி ஜோடியை எளிதில் வென்றது.

    பெங்களூருவைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டி ஆகும். இந்தப் போட்டியில் இருந்து அவர் வெற்றியோடு விடைபெற்றார்.

    இதையடுத்து, நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.

    • ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
    • டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது.

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப்-1 பிளே ஆப் போட்டியில் இந்திய அணி டென்மார்க் அணியுடன் விளையாடுகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், டென்மார்க் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் டென்மார்க் 2-1 என முன்னிலை பெற்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்திலும் டென்மார்க் வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் இந்தியாவின் சுமித் நாகலை டென்மார்க்கின் ரூனே, 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதனால் டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி, முதல் முறையாக உலக குரூப்-2 சுற்றுக்கு பின்தள்ளப்பட்டது.

    • ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனை வீழ்த்தினார்.
    • மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

    ஹில்லராட்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா, டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன.

    முதல் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9-ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார். இதில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கியது.

    இந்நிலையில், நேற்று நடந்த மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், டென்மார்க் வீரர் ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் மோதினார்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இந்திய வீரர் கோட்டை விட்டார். இதையடுத்து சுதாரித்து கொண்ட சுமித் நாகல் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இந்தப் போட்டி 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது

    • அனுபவம் வாய்ந்த டென்மார்க் வீரரின் சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார்.
    • மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார்

    ஹில்லராட்:


    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா - டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார்.

    ஆரம்பம் முதலே ரூனேயின் கை ஓங்கியிருந்தது. அனுபவம் வாய்ந்த அவரது சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார். ஆனாலும் இப்போட்டியில் வெறும் 58 நிமிடங்களில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கி உள்ளது.

    மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார். இந்த போட்டியில் இந்திய வீரர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன்பின்னர் மாற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சுற்றில் இந்தியா தோல்வியடைந்தால் உலக குருப்-2 நிலைக்கு பின்தள்ளப்படும்.

    ×