தொழில்நுட்பம்
ஷிபா இனு

இந்தியாவுக்கு ரூ. 7360 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய புடெரின்

Published On 2021-05-13 10:09 GMT   |   Update On 2021-05-13 10:09 GMT
இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியை எத்திரியம் இணை நிறுவனர் க்ரிப்டோகரென்சியாக வழங்கி இருக்கிறார்.


எத்திரியம் க்ரிப்டோகரென்சி இணை நிறுவனர் விடலிக் புடெரின் இந்தியாவுக்கு ரூ. 7360 கோடி மதிப்பிலான ஷிபா இனு க்ரிப்டோகரென்சியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். ஷிபா இனு கரென்சியை உருவாக்கியவர்கள் புடெரினுக்கு 50 சதவீத மீம் டோக்கன்களை பரிசாக வழங்கினர். 



உலகின் இளைய க்ரிப்டோகரென்சி கோடீஸ்வரரான புடெரின் அவற்றை தொண்டு காரியங்களுக்கு செலவிட முடிவு செய்து நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். புடெரின் சுமார் 120 கோடி டாலர்கள் மதிப்பிலான ஷிபு டோக்கன்களை இந்தியா கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறார். 

இத்தகைய தொகை க்ரிப்டோகரென்சி மூலம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இவ்வளவு க்ரிப்டோகரென்சியை இந்திய ரொக்கமாக மாற்றும் போது அதன் மதிப்பு சற்றே குறையும்.
Tags:    

Similar News