தொழில்நுட்பம்
விரைவில் அறிமுகமாகும் சக்திவாய்ந்த கேலக்ஸி சாதனம்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த கேலக்ஸி சாதனம் அறிமுகமாகும் என தெரிகிறது.
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புதிய கேலக்ஸி புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக கேலக்ஸி புக் ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 போன்ற மாடல்களின் ரென்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது.
தற்போது கேலக்ஸி புக் மாடல் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் கேலக்ஸி புக் கோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் ஏஆர்எம் சார்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.