தொழில்நுட்பம்
ஆப்பிள்

அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதியை சொன்ன சிரி

Published On 2021-04-13 11:26 GMT   |   Update On 2021-04-13 11:26 GMT
ஆப்பிள் நிறுவனம் 2021 ஏப்ரல் மாத நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி பிரத்யேக நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த தகவல் தவறுதலாக வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஏர்டேக்ஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.



ஏப்ரல் 20 நிகழ்வு குறித்து ஆப்பிள் எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சிரியிடம் அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதி கேட்டதற்கு `ஏப்ரல் 20 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்கள் ஆப்பிள் வலைதளத்தில் காணலாம்' என பதில் அளித்துள்ளது. 

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிகழ்வு குறித்து விரைவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இது விர்ச்சுவல் முறையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபேட் ப்ரோ மாடல்கள், ஆப்பிள் ஏர்டேக்ஸ் போன்றவை அறிமுகம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News