தொழில்நுட்பம்
விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் பே
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் பேம்ன்ட் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது மொபைல் பேமண்ட் சேவையை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு 2019 வாக்கில் வெளியானது. தற்போது சீன சந்தையில் ஒன்பிளஸ் பே சேவை பிரத்யேகமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பே சேவை மற்ற பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் பேமண்ட் சேவைக்கான டிரேட்மார்க் பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் பே எப்போது அறிமுகமாகும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிரேட்மார்க் கிடைத்துவிட்டதால், விரைவில் ஒன்பிளஸ் பே சேவை ஒன்பிளஸ் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.