தொழில்நுட்பம்
கேலக்ஸி ஆசம் அன்பேக்டு 2021 தேதி அறிவிப்பு
சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் மார்ச் 17 ஆம் தேதி கேலக்ஸி ஆசம் அன்பேக்டு 2021 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த விழாவில் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இரு ஸ்மார்ட்போன்களும் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.